பதில் தேடி நாடகம்: 23
அத்யாயம் 23: பதில் தேடி நாடகம்
" இல்ல இது மொத்தமும் என் வருங்கால புருஷனோட ப்ராப்பர்ட்டி. "
எப்படியும் பதில் பேச மாட்டாள் என நினைத்த ஆதவன் சற்று அதிர்ந்தாலும் கோவத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவளை முறைக்க நிலா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வையிலும் பேச்சிலும் உள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்திருந்த ஆதவன் வாய் தகராற்றில் அவளோடு சிக்க விருப்பமில்லாமல் தன் தலையை காத்துக் கொள்ள அங்கிருந்து முயன்ற மட்டும் விரைய முயன்றான்.
" எழுந்திரி டி, "
அலட்டாமல் வேறு பக்கம் திரும்பிய நிலா கம்மிய குரலில் " நாங்க என்ன ஆசப்பட்டா உங்க மேல சாஞ்சிருக்கோம்? கால் அடிப்பற்றுச்சு போல அதான் எந்திரிக்க முடியல, "
கண் சிமிட்டிய இடைவேளையில் அவள் பொய்யை அறிந்த ஆதவன் அப்போதும் முறைக்க, நிலா பாவமாக அவள் காலைப் பார்க்க, ஆதவன் அவள் நடிப்பை எல்லாம் நம்புவது போலவே இல்லை. ஆனால் அதை அறியாத இசை குடுகுடுவென ஓடி வந்து நிலாவின் மறுபுறம் அமர்ந்து கொண்டாள்.
" ஐயையோ நிலா என்னாச்சு டி உன் காலுக்கு? எலும்பு முறிஞ்சிடுச்சா? எல்லாரும் இங்க வாங்களேன் நிலாக்கு ஏதோ ஆயிடுச்சு! "
அவள் எங்கிருந்தோ குதித்து வந்தபோதே திடுக்கிட்ட ஆதவன் இசை வாயை மூடுவதற்குள்ளாக அம்பிகா பாட்டியின் மொத்த குடும்பமும் காருக்கு அருகே கூடியிருந்தது.
" நிலா நிலா என்னடாமா ஆச்சு? " அம்பிகா பாட்டி வேகமாக வர அவர் விட்டால் மண் தரையில் அமர்ந்திருப்பார் போல, சட்டென அவரை கை நீட்டி தடுத்த ஆதவன்
" இருங்க பாட்டி, ஒன்னும் இல்ல. கால் தடுக்கீடுச்சு அதான். நீங்க பதறாதீங்க, "
பாட்டியிடம் பேசும் போது அவன் குரல் மொத்தமாக அமைதியாக மாறியதை கவனித்த நிலா
" இல்ல பாட்டி, நான் மயங்கி விழுந்துட்டேன். என்னால எந்திரிக்க முடியல பாட்டி. "
ஆதவன் உடல் விரைத்த போதும் நிலா சலைக்காமல் அவள் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
" என்ன டா நிலா சொல்ற? ஏன் மயக்கம் வருது உனக்கு? இசை வேற ஏதோ சொல்றாளே... "
அவ்வளவு நேரம் நிலாவின் முகத்தை பார்த்துக் கொண்டே ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த இசை தன் பெயரை கேட்டதும் படபடவென அவள் மனதுக்குத் தோன்றியதை பேசிவிட்டாள்.
" பாட்டி நிலாக்கு ரொம்ப நாளாவே உடம்பு சரி இல்ல பாட்டி, எப்போ எங்கேஜ்மென்ட் ஆச்சோ அப்போலேந்து இப்டி தான் பொசுக்கு பொசுக்குன்னு அங்க இங்க மயக்கம் போட்டு விழுந்துடுறா. அவள அனைக்கு ஏதோ ஒரு பேய் புடிச்சிருச்சு பாட்டி. பாருங்க இப்போ கூட இவ்ளோ நல்ல வேலை நீங்க பண்ணீட்டு இருக்கப்போ தடங்கல் மாதிரி அவளுக்கு மயக்கம் வந்துருச்சு. கடவுளே இப்போதிக்கு நிலாவோட ஹெல்த் தான் முக்கியம்னு சொல்றாரு பாட்டி, "
அவருக்கு பேசவே வாய்ப்பு கொடுக்காமல் அம்பிகா பாட்டியின் தெளிவான மனதில் தூக்கி பாறாங்கல்லை எறிந்த இசை நிலாவை வசைப்பாடிக் கொண்டிருந்த அவள் அத்தைமார்களை ஒதுக்கிவிட்டு ஹர்ஷன் வினோத்தைத் தேடினாள். ஆனால் அவர்கள் இருவருமே அங்கு இல்லாமல் போகவும் ஆபத்திற்கு பாவம் இல்லை என ஆதவனிடமே திரும்பி
" அண்ணா கொஞ்சம் கோச்சிக்காம அவள தூக்கீட்டு வந்து உள்ள விற்றுங்கண்ணா அவளால நடக்க முடியாது. நீங்க வாங்க நான் எல்லாரையும் க்லியர் பண்றேன். "
பாவமாக ஆதவனைப் பார்த்து சொன்ன இசை என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்த ஆதவன் நிலைக்கு வரும் முன்னே அனைவரையும் கலைக்கத் தொடங்கினாள்.
அம்பிகா பாட்டியும் அவள் அத்தைகளை கொஞ்சம் அதட்டிவிட்டு " நீயே கொஞ்சம் கூட்டீட்டு வந்துடு ஆதவா... " என கூற அதற்கு ஆதவனால் சரி என தலையாட்ட மட்டும் தான் முடிந்தது.
இசை இன்னமும் அருகே கத்திக் கொண்டே நிலாலை கேள்வி கேட்க வரும் அனைவரையும் தூர அனுப்பிக் கொண்டிருந்தாள். அதில் ஒன்றும் புரியாமல் நிலாவை பார்த்து முளித்துக் கொண்டிருந்த கௌஷிக்கும் அடக்கம்.
" ஹா நகருங்க நகருங்க! காத்த உள்ள வர விடுங்கப்பா! என்ன படமா காற்றாங்க அங்க? நகருங்க, "
திட்டமே தெரியாமல் கொடுக்காத காசிற்கு அதிகமாய் நடிக்கும் தன் தோழியை மனதிலே ஆச்சர்யத்தோடு மெச்சிக் கொண்ட நிலா இப்போது மெல்ல அவளை கண்களாலே எரிக்க முயன்று கொண்டிருந்தவனை பார்த்தாள்.
" ரொம்ப நேரமா வெயில்ல இப்டி என்ன படுக்கப் போட்டு வச்சிருக்கீங்க உள்ள போலாமா? " என அடிக்காத வெயிலுக்கு முகத்தை அவள் மறைக்க
" நிலா... " சுற்றி இருந்தவர்களுக்கு கேட்காதவாறு நிலாவின் காதுகளில் அவன் பல்லைக் கடித்தான். " என் பொருமைய சோதிக்காத, எந்திரிச்சிக்கோ, "
" பாட்டி உங்கள தான தூக்கீட்டுப் போக சொன்னாங்க... எனக்கே முடியல... நான் பாவம். "
" ஏய் ஒழுங்கா நீயே எந்திரிச்சிரு, நான் கொலகாண்டுல இருக்கேன் இப்போ. "
" ஐயோ பாட்டி எனக்கு திரும்ப மயக்கம் வருது பாட்டி! கண்ணெல்லாம் இருட்டீட்டு வருது பாட்டி! பாட்டி பாட்டி! "
பழைய படத்தில் வரும் கதாபாத்திரம் போல் கத்திக் கொண்டிருந்தவளுக்கு இணையாக இசையும் வாயில் கை வைத்துக் கொண்டு " ஐயையோ நிலா என்னாச்சு உனக்கு? " என கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.
இந்த தோழிகளின் அலப்பறைகளில் தன் தலையை உருட்டிவிட சற்றும் எண்ணம் இல்லாத நம் நாயகன் சரியான நேரத்தில் காணாமல் போன அவன் தோழன்களை கருவிக் கொண்டே அவளை கரங்களில் தூக்கினான்.
யாரையும் திரும்பிப் பார்க்காமல் விருவிருவென கடையை நோக்கி நடந்துச் சென்று ஒரு கதிரையில் அவளை அமர வைத்துவிட்டு ஆதவன் விரைந்து நகர முயல, மீண்டும் மயங்குவது போல் அவன் மீதே சாய்ந்தாள் நிலா.
இசை ஓடி வந்து ஒரு டம்ளரில் நிலாவிற்கு நீரை புகட்ட, மிடரு மிடராய் தன் மீதே சாய்ந்து கொண்டு குடித்தவளை அவன் முறைத்துக் கொண்டே நின்றிருந்தான். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்த நிலா அவன் இன்னமும் முறைப்பதை பார்த்து சட்டென பார்வையை மாற்றிக் கொண்டாள்.
அம்பிகா பாட்டி " கடைக்கு வந்ததெல்லாம் போதும், வீட்டுக்கு கிளம்பலாம். " என கூறிவிட்டு முன்னே நடக்க, அவர் மருமகள்களும் நிலாவை முறைத்துவிட்டு பின்னே நடந்தனர்.
மாதூரி " இவளுக்கு இதே வேலை... செத்த நேரம் கூட இவளால நம்ம சந்தோஷமா இருக்க முடியிறதில்ல ச்ச... "
" விடுங்கக்கா எல்லாம் கொஞ்ச நாள் தான... பாருங்க கௌஷிக்கோட முகமே தோஞ்சு போச்சு... " என மேகலை அவர் பங்கிற்கு பேசினார்.
பராக்கு பார்த்துக் கொண்டு வந்த கௌஷிக் இப்போது அவர்களை அலுப்பாக பார்த்து வைக்க, தேவி சும்மா இல்லாமல் அவன் தோளை தட்டி கொடுத்து
" உனக்கு தானா பழகீடும் தம்பி. கல்யாணம் ஆனதும் அவள உன் கைக்குள்ள போட்டு வச்சுக்கோ, எல்லாம் சரி ஆகீடும். "
கௌஷிக் வெளியே இளித்தாலும் மனதுக்குள்ளே புலுங்கிக் கொண்டான்.
" ஆமா கட்டிக்கப் போறவன் நான் இங்க இருக்கேன். எவனோ ஒருத்தன் அவள தொட்டுத் தூக்கீட்டு இருக்கான். அதெல்லாம் இதுங்க கண்ணுக்குத் தெரியாது போல, "
அவன் குள்ளநரி போல் உள்ளே கொதறிவிட்டு திரும்பவும் ஏதோ இவன் மனகுமுறலை கேட்டது போல் சட்டென அவனை பார்த்தான் ஆதவன். ஒரு நிமிடம் அவன் பார்வையின் சூட்டில் கௌஷிக்கிற்கு உடல் தூக்கிப் போட, ஆதவன் படாரென நிலாவை கைகளில் தூக்கினான்.
மிடரு மிடராக இன்னும் நீர் அருந்திக் கொண்டிருந்த நிலா பதறிப் போய் ஆதவனின் கழுத்தை கட்டிக் கொள்ள, எள்ளும் கொள்ளும் வெடிக்க நேராக பார்த்திருந்த ஆதவன் தோழிகளின் குழப்பத்திற்கு பதில் கூறாமல் அவனையே ஆவென பார்த்துக் கொண்டிருந்த கௌஷிக்கை பொருட்டாகவே மதிக்காமள் அவனைத் தாண்டி நடந்தான்.
கௌஷிக்கைத் தாண்டி சென்றதுமே அவன் முகத்தில் இருந்த இறுக்கம் சற்று தளர்வதை கவனித்த நிலா என்ன நினைத்தாளோ... கண்களை மூடி அவன் நெஞ்சின் மீதே சாய்ந்து கொண்டாள்.
தீயால் நிறைந்து கொதித்த ஆதவனின் இதயம் மெல்ல அமைதியடைய, மெதுவாக அவன் நடை தடைப்பட்டது.
" வேணாம் நிலா... வேணாம் டி. "
அவன் குரலில் அத்தனை அழுத்தம் இருந்தாலும் அவன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த வலியில் நிலா கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். அவன் கழுத்தை சுற்றி அணைத்திருந்த கரங்களை இறுக்கியவள்
" என்ன வேணாம் உங்களுக்கு? "
தான் தனக்குள்ளே மருகிக் கொண்டது வெளியே கேட்டதை உணர்ந்து கண்களை அழுந்த மூடித் திறந்தவனின் முகம் நொடிக் கணக்கில் மீண்டும் இறுகியது.
வார்த்தையின்றி அவளை காரில் அமர வைத்துவிட்டு ஆதவன் விலகிக் கொள்ள, அவனையே பார்த்துக் கொண்டிருந்த நிலவின் அருகில் வந்தமர்ந்தாள் இசை.
" என்கிட்ட எதுவும் கேக்காத டி... நான் பேசுற மூட்ல இல்ல, "
அவளை ஏற இறங்க பார்த்த இசை " வேற என்ன மூட்ல இருக்க நீ? ஏன் டி அந்த அண்ணன் மேல மயங்கி விழுந்த? என்ன தான் உன் மண்டைல ஓடுது? "
ஆதவன் மேலிருந்து பார்வையை அகற்றி இசையை நோக்கியவள் சாந்தமான குரலில் " கேக்காதன்னு தான சொன்னேன். கேக்காத... " என கூறிவிட்டு மீண்டும் அவன் சென்று மறைந்த பாதையை கண்டு கண்களை சுருக்கினாள்.
" சரி... இந்த ரோடெல்லாம் உன் வருங்கால புருஷனோட ப்ராப்பர்ட்டின்னியே உண்மையாவே கௌஷிக் எதுவும் இங்க ப்ராப்பர்டி வாங்கி விற்றுக்காரா டி? "
" கௌஷிக்கோடதுன்னு நான் எப்போ சொன்னேன்? "
" நீ அவன கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லன்னு எனக்கும் உனக்கும் தான தெரியும்? அப்போ கௌஷிக் தான வருங்கால புருஷன்? "
" இல்ல, "
" அப்போ வேற யாராம்? அமித்தாப் பச்சனோட ஒன்னுவிட்ட பேரனா? "
" ஓவரா யோசிக்காத டி... இனிமே தான் நான் என் வேலைய ஆரம்பிக்கப் போறேன். கண்ணுல ஒழுங்கா மாட்டுனதும் நானே சொல்றேன். "
திடீரென நீண்ட அமைதி நிலவியதால் நிலா திரும்பிப் பார்க்க, இசை அவளை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
" என்ன டி? "
" ம்ஹும்... இல்ல நீ நிலா இல்ல. உனக்கு இரெண்டு டயலாக்கே கோர்வையா பொய் சொல்லத் தெரியாது. சொல்லித் தந்தா கூட சொதப்புவ... யார் நீ? "
" நான் நிலா இல்லன்னே வச்சுக்கோ. "
" அப்போ யாராம் நீ? "
" அதுக்கான பதில் தான் தேடப் போறேன். பார்க்களாம். "
நிலாவை ஏதோ வேற்றுகிரக ஜந்து போல் பார்த்த இசை " இவளுக்கு பாவம் பாத்து மிச்சமீதி கொஞ்சம் புத்திய குடுத்தாவது இவள கட்டிக்கப் போற மகராசன காப்பாத்துங்க கடவுளே, " என புலம்பிகொண்டே அவள் சீட்டில் படுத்துக் கொண்டாள்.
சரியாக கதவை திறந்து கொண்டு ஓட்டுனர் இருக்கையில் ஹர்ஷன் அமர நிலா வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கஷ்வலாக " எங்க போயிருந்தீங்க அத்தான்? "
" இங்க தான்...இங்க பக்கத்துல பீச்சுக்கு போய்...சுண்டல்...சுண்டல் சாப்ட்டுட்டுப் போனேன் நிலா "
ஒரு வார்த்தையை வாய்க்கு வந்தபடி உருட்டிய ஹர்ஷனை நிலா திரும்பி பார்க்க, பராக்கு கோழி போல் இரண்டு கண்களும் விரிய வேர்த்து விருவிருத்துப் போய் ஸ்டெயிரங்கை விட்டால் அது எங்கோ பறந்துவிடும் என யாரோ சொன்னது போல அதை இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஹர்ஷன்.
இசை அவனை ' யாரு டா இந்த பிச்சைக்காரன்? ' என்ற ரேஞ்சில் பார்க்க நிலாவின் வில் புருவங்கள் மெல்ல வளைந்தது.
" அத்தா
" அவன்...அவன் பக்கத்து வீட்டு பரிமளா ஆன்ட்டிக்கு பட்டுப் புடவை வாங்க...இல்ல குடுக்க குடுக்க ஆமா குடுக்கப் போயிருக்கான். "
" ஆ... யார்
" வேணாம் வேணாம் நாம போலாம். நாம வெயிட் பண்ண வேணாம்னு சொல்லீட்டான். உனக்கு பசிக்கும்ல... அவனே வந்துக்குவான் நிலா ஆமா பஸ் புடிச்சு ஷேர் ஆட்டோல இல்ல இல்ல எப்டியாவது வந்துருவான். "
" ஆனா
" உனக்கு பசிக்கும் நிலா நீ மயங்கி வேற விழுந்துட்டல்ல ஆதவன்... வீட்டுக்கு போலாம் அப்பரமா பேசிக்கலாம் நீங்க சீட் பெல்ட்ட போட்டுட்டு தூங்குங்க! "
படபடவென அவனே பேசிவிட்டு நிலா பேச வரும் போதெல்லாம் ஏதேதோ சொல்லி அவள் வார்த்தைகளை நறுக்கிவிட்டு காரை கிளப்பிய ஹர்ஷன் மறந்தும் பின் புறம் திரும்பிப் பார்க்கவில்லை.
எங்கே இசையோ நிலாவோ அழைப்பதை கேட்டால் வண்டியை நிறுத்திவிட்டு ஓடிவிடுவோம் என்பது போல் அவன் கண்களை சிமிட்டாமல் ரோட்டிலே குறியாய் இருக்க திடீரென பின்னாலில் இருந்து அவன் மண்டையில் விழுந்த அடியில் சடன் ப்ரேக் போட்டான்.
" யோவ் லூசு நிலா அத்தான்! காட்டுக்கத்து கத்துறேன் ஒரு தடவ திரும்பிப் பார்க்குறியாயா நீ?! " என பத்ரகாளி போல் கத்திய இசையை கண்டு ஹஷன் அவன் சீட்டிலே ஜெர்க்கடிக்க, அவன் சட்டை காலரை பிடித்திழுத்து ஹர்ஷனை உலுக்கு உலுக்கென உலுக்கியவள்
" கார ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி யாரு இருக்கா இல்லன்னு பார்க்க மாட்டியா? உன்னலாம் எவன் அவளுக்கு பார்டிகார்டா போட்டான்? வண்டிய திருப்பு! அவ கார விட்டு அப்போவே கீழ இறங்கீட்டா! "
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro