Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 80

"ம்ஹூம்... ஒம்பொண்டாட்டி மந்துரம் போட்டா சட்டியில வந்து குதிச்சுச்சு பிரியாணி? வர்த்தினியே அத ரெண்டுதடவ சாப்புட்டுச்சு! நான் நாலஞ்சு தடவ எடுத்து வச்சு சாப்புட்டுருப்பேன்னு நெனக்குறேன். எவ்ள சாப்டேன்னு கணக்கே பாக்கல! அம்புட்டு பேரும் அள்ளி அள்ளி சாப்புடுற மாதிரி செஞ்ச சாப்பாட்டுக்கு எத்தன கிலோ கறி, அரிசி, எண்ண, மளிக சாமானெல்லாம் வாங்குனியோ தெரியல..... அதுக்கு இந்த காச வச்சுக்க!"

"அதுக்கும் மேல இதுக்குள்ள காசு மிச்சமா இருந்துச்சுன்னா நிஷா, ஹசன், பைசல் மூணு பேருக்கும் ஏதாச்சு சாமான் வாங்கிக் குடு..... அவசர அவசரமா எல்லாத்தையும் செஞ்சு கடைசில அதுக மூணுக்கும் தான்டா எங்கல்யாணத்துக்குன்னு ஒண்ணுமே வாங்கிக் குடுக்கல!" என்று சொல்லி நஸாரிடம் லேசாக வருந்தினான் ஜெயன்.

"டேய் மாப்புள.... சாப்பாடு போட்டதுக்கு எல்லாம் போய் இப்டி கணக்கு பாத்துட்டு இருக்க? அது ஒம்மேல இருக்குற அக்கறயால செஞ்சதுடா! எவனோ ஒரு பொரம்போக்கு எதையோ சொன்னாங்குறதுக்காக நீ இப்டியெல்லாம் செய்யாதடா ஜெயனு!" என்று ஆதங்கம் தாண்டி கோபத்திற்கு போனவனிடம்,

"உடுறா நஸாரு! கல்யாணத்துக்குன்னு ஒங்கிட்ட ஒத்த பைசா காசு வாங்கக் கூடாதுன்னு நா ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். நீயா குடுத்தாலும் சரி; நம்ம ட்ராவல்ஸ் பேருல குடுத்தாலும் சரி; அந்த காச என்னால வாங்கிக்க முடியாது. இது நமக்குள்ள இருக்கட்டும். இதையும் போய் அவ கிட்ட போயி ஒளறி வைக்காத!" என்று சொன்ன நண்பனை கட்டியணைத்துக் கொண்டான்.

"இது எதுக்குடா?" என்று திகைத்தவனிடம்,

"பேப்பயலே! கல்யாணம் கட்டுனதுக்கு நா ஒன்னிய வாழ்த்தணும்ல அதுக்குத்தா;
நீயும் வதனிப்புள்ளயும் ஓஹோன்னு வாழணும்டா! நீ சீக்கிரத்துல மொதலாளி ஆகணும்!" என்று தன் மனதார நண்பனுக்கு வாழ்த்து சொன்னான் நஸார்.

"மொதலாளியா தான? நாளைக்கே ஆகிருவம்! நீ கெளம்பு....
அங்க ஒம்பீவி எங்கடா நஸார இன்னுங்காணும்னு தேடிக்கிட்டு இருக்கப் போறா!" என்று சொல்லி விட்டு நஸாருடன் கீழிறங்கி வந்து அவனை வழியனுப்பி வைத்தான் ஜெயன்.

நண்பனைக் கிளப்பி விட்டு ஹாலுக்குள் வந்து மின்விசிறியின் வேகத்தை அதிகப்படுத்தியவன்,

"ச்சை...... இருக்குறது தான் குன்னூருல! இங்கயும் வேர்த்து தொலையுது! நா சின்னப்புள்ளயா இருக்கும் போதெல்லாம் இப்டி நம்மூருல வேர்க்கவே வேர்க்காது..... சரி க்ளோபல் வார்மிங் நம்மூர மட்டுமா விட்டு வைக்கும்?" என்று தனியாகப் பேசிக் கொண்டிருந்தவன் இரண்டு மூன்று சட்டை பட்டன்களை கழற்றி விட்டு கைகளை ஸோஃபாவில் இருபுறமும் விரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனைப் போலவே அவளுக்கும் கசகசப்பாக இருந்திருக்கும் போலும்.... அவனுடைய அறைக்குள் சென்று முகத்தை கழுவிக் கொண்டு டவலால் துடைத்து விட்டு மிதமான பவுடர் நறுமணத்துடன் வெளியே வந்தாள்.

"ஒன்னோட பவுடர் வேற ப்ராண்டுல்ல.... என்னடோத போயி யூஸ் பண்ணியிருக்க? ஒண்ணும் செய்யாதாடீ?" என்று கேட்டவனிடம்,

"ஒரு தடவைக்கு தான? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது!" என்றாள்.

சற்று நேரம் அவர்களை கை கால் நீட்டி ரிலாக்ஸ்டாக அமர வைத்திருந்த முகில் அதற்குப் பிறகு மகனும் மருமகளும் பால் பழம் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்.

"ஏம்மா...... இதெல்லாம் நாம இன்னிக்கு நைட் தான சாப்டணும்; ஓ..... அதுக்குள்ளயே நைட்டுக்கு ரெடியாகுறமா நாம?
ஐயோ எனக்கு வெக்க வெக்கமா வருது போ!" என்று கிசுகிசுத்தவனிடம்,

"கொஞ்ச நேரம் வாய வச்சுட்டு
சும்மாயிரேன் ஜெயன்..... இது சும்மா கல்யாணம் முடிஞ்சவுடனே குடுக்குறதுன்னு நெனக்குறேன்!" என்று சொன்னவளின் நெற்றியில் சுண்டியவன்,

"போடீ மக்கு! சும்மா எதுக்கு குடுக்குறாங்க பாலும் பழமும்...? அமுதாம்மாவுக்கு என்ன பொழுது போகலையா? எல்லாம் அதுக்காத்தான் இருக்கும்... கூடப்பொறந்த பயபுள்ளைக ஏதாவது இருந்துருந்தா இந்த மாதிரியான வெவரமெல்லாம் நமக்கு க்ளியரா தெரிஞ்சுருக்கும்.... இப்ப பாரு... எல்லாத்தையும் அமுதாம்மா ஒரு பெரிய ரகசியமாவே வச்சுக்கிட்டு நம்ம கிட்ட ஒன்னத்தையும் சொல்ல மாட்டேங்குது!" என்று சலித்துக் கொண்டான்.

"இந்தாடா.....!" என்று நீட்டிய அன்னையிடம் பல்லைக் காட்டியவன்,

"தேங்க்யூ என் அன்பு அமுதாம்மா! 
காலைல இருந்து நம்ம கோமதியோட பாலக் குடிக்காம மண்டையெல்லாம் ஒரே கொடச்சலு... ச்சை! இப்பவாச்சு நம்ம குடிக்குறதுக்கு பால கண்ணுல காட்டுனீங்களே..... என்ன டம்ளர்தா கொஞ்சம் சிறுசாப் போச்சு!" என்று சொல்லிக் கொண்டே டம்ளரில் வாய் வைக்கப் போனவனிடம்,

"டேய் ஜெயனு.... இந்த பாலுல பாதியத்தே நீ குடிக்கணும்! மீதிய வதனி கண்ணுக்கு குடு!" என்றார் முகிலமுதம்.

"ஏன்... வீட்ல பாலுக்கு தட்டுப்பாடா என்ன? வதனிக்கண்ணுக்குலா நீ வேற பால குடுத்துக்க... ஆமா.... அவளுக்கு பால் குடிக்கவும் புடிக்காதே அமுதாம்மா; பேசாம ஒரு டம்ளர் டீயே போட்டுக் குடுத்துடு!" என்று சொல்லி விட்டு ஒரே மூச்சில் ஒரு டம்ளர் பாலையும் உறியப் போன மகனின் கையிலிருந்த டம்ளரைப் பிடுங்கிக் கொண்டு,

"சொல்லிக்கிட்டு இருக்கேன்.... அடங்க மாட்டியாடா? அவளுக்கு டீ போட்டு தாரதெல்லாம் எங்களுக்குத் தெரியாது? குடுன்னு கேட்டா குடுத்துரணும்!" என்று சொல்லி விட்டு டம்ளரை வதனியின் கையில் கொடுத்து அவளை குடிக்கச் சொல்லி விட்டு சர்க்கரையை எடுக்க சமையலறைக்குள் போனார் முகிலமுதம்.

"என்ன தலைவரே.... வட போச்சே மொமண்டா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்ட மனைவியிடம்,

"பல்லக் காட்டாதடீ! ஒன்னால தான் இன்னிக்கு நா அமுதாம்மாட்ட நா வருசயா திட்டு வாங்கிட்டே இருக்கேன். காலையில மண்டபத்துல ரூமுக்குள்ள இருந்து கலைஞ்ச தலையோட வெளிய வந்ததப் பாத்துட்டு என்னைய கிழிச்சு உட்ருச்சு!"

"கோயிலுக்குப் போகணும்னு சொல்லி ஒங்கிட்ட கேட்டு ஒன்னைய கூட்டிட்டு வரச்சொல்லித்தா உள்ளயே அனுப்பு உட்டுச்சு..... அதத்தான் ஒங்கிட்ட பேச மறந்து போச்சு!"

"மரியாதயா நாளைக்கு காலையில வெள்ளன எழுந்திரிச்சு குளிச்சு கெளம்பி என்னோட கோயிலுக்கு வார சொல்லிட்டேன்.... இப்ப என்ன.....? வீட்டுக்குள்ள வாரப்ப நமக்கு ஆரத்தி எடுத்தது, நீ வெளக்கு பொருத்துனது
கிச்சனுக்குள்ள போயி என்னென்னத்தயோ உருட்டிட்டு வந்தது மாதிரி இந்த பாலக் குடிக்குறதும் ஒரு சாங்கேயமா?" என்று கேட்டவனிடம் புன்னகைத்த படி ஆமென்று தலையாட்டினாள் வதனி.

அவளை நெருங்கி இடித்துக் கொண்டு அமர்ந்தவன் அவளிடம்
ரகசிய குரலில் "முக்கா டம்ளர் பாலு இருக்கே! இதக் குடிச்சுடுவியா?" என்று கேட்க பரிதாபமாக இல்லையென தலையாட்டினாள் ஜெயனின் இல்லாள்.

"வாயத் தொற!" என்று சொன்னவனை குர்ரென்று முறைத்தவளிடம்,

"அடியே.... பால குடுக்குறதுக்கு தான்டீ தொறக்க சொல்றேன். சீக்கிரமா தொற!" என்று சொன்னவன் அவளுடைய வாயில் ஒரு மிடறு பாலை ஊற்றி விட்டு, டம்ளரில் இருந்த மொத்தப் பாலையும் தான் குடித்து விட்டு டம்ளரை அவள் கையில் கொடுத்து விட்டு எங்கோ பராக்கு பார்த்துக் கொண்டிருந்தான்.

"ம்மோவ்..... தூக்கம் வருது! நா கட்டில்ல போய் உழுவட்டா?
ஆறு மணிக்கு மறுபடியும் ஒருக்கா பால் ஆத்தி வச்சுட்டு என்னைய எழுப்பி விடுறியா?" என்று கேட்டவனிடம்,

"இருடா இன்னும் பழம் சாப்டணும். சக்கர தொட்டு சாப்புடணும்னு லச்சு சொன்னா.... அதத்தான் எடுத்துட்டு இருக்கேன்!" என்றார் முகில்.

"ம்க்கும்..... அப்ப ஒனக்கே எதுவும் முழுசா தெரியாதா? பக்கத்து வீட்டு ப்ரெண்டு கிட்ட இருந்துதா பிட்டு வாங்கிட்டு வர்றியாக்கும்?" என்று நினைத்து சிரித்துக் கொண்டவன் மனைவியிடம் திரும்பி,

"ஆமா.... நீ என்னிக்குடீ இட்லிய தின்ன?" என்று கேட்டான்.

"முகில்ம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாதப்ப...! என்னைய
மலையனூரு அங்காளியேன்னு ஒரு குபீர் சாமியாக்கி பருப்பு டப்பால உடுக்க அடிச்சியே.... மறந்து போச்சா?" என்று கேட்க தான் அன்று செய்த செயலை நினைத்து ஜெயனுக்கு இப்போது சிரிப்பு வந்துவிட்டது.

"அமுதாம்மா சீக்கிரம் வா! ஒரு
சக்கர எடுக்க இவ்ளோ நேரமா ஒனக்கு? என்ன பண்ணிட்டு இருக்க உள்ள?" என்று கேட்ட தன் மகனிடம்,

"வர்றேன்...... இருடா!" என்று சொன்ன முகில் ஒரு தட்டில் சர்க்கரை மற்றும் இரண்டு வாழைப்பழங்களுடன் வந்தார்.

சற்றே சிவந்திருந்த தன்னுடைய அன்னையின் கண்களை குறிப்பாக நோட்டமிட்டவன்,

"அடுப்படிக்குள்ள நின்னுக்கிட்டு அழுதியாக்கும்........? அதுக்குத்தா இவ்ள நேரமா? புள்ளைக்கு கல்யாணம் ஆகல, வர்ற பொண்ணெல்லாம் என்னிய வேண்டாம்  வேண்டாம்னு சொல்றாளுகன்னு நெனச்சு இத்தன வருசமா ஒரு மூச்சு அழுத! அதுலயாவது ஒரு லாஜிக் இருக்கு!"

"இப்பத்தா எனக்குன்னு ஒருத்தி வந்து புடிச்சு வச்ச கொழுக்கட்ட கணக்கா எம்பக்கத்துல ஒக்காந்து இருக்கால்ல.... இன்னும் என்னத்துக்கு அழுத?" என்று கேட்டான்.

"நெஞ்சு கசங்குற அளவுக்கு துக்கம் இருக்கும் போது அழுவ வருமுன்னா நெஞ்சு நெறய சந்தோசம் இருக்கும் போது அழுவ வராதா? நானும் உள்ளார போனதுல இருந்து அடக்கி அடக்கிப் பாக்குறேன். பொத்துக்கிட்டு கண்ணு நெறஞ்சு வழியுது! நா என்ன செய்யட்டும்?" என்று கேட்டவர் தன்னுடைய முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

"கூலா இரு அமுது! சந்தோசமா இருக்குறதுக்கெல்லாமா அழுவாங்க? இங்க எம்பக்கத்துல வந்து ஒக்காரு வா! வர்த்தினி கொஞ்ச தள்ளி ஒக்காருடா!" என்று சொன்னவன் தன்னுடைய அன்னையையும் தாங்கள் இருவரும் அமர்ந்திருந்த ஸோபாவிலேயே அமர வைத்துக் கொண்டான்.

"முகில்ம்மா...... நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்! காலையில நீங்களுந்தான சீக்கிரத்துலயே எழுந்துரிச்சுட்டீங்க? ரெண்டு பேரும் தூங்குங்க. நான் உங்கள எழுப்பி விடுறேன்!" என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்னாள் வதனி.

முகிலமுதத்தைப் பொறுத்தவரை மகனுடைய திருமணம் நல்லபடியாக நடந்திருப்பது ஒரு பெரிய மனபாரம் நீங்கியது போல என்று அவளுக்கு புரிந்தது.

"அப்பாடா....!" என்று பெருமூச்சு விடும் இடத்தில் இந்தப் பெண்மணி சற்று கண்ணீரையும் சிந்தியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே மாமியார் ஊட்டிய பழத்தை சாப்பிட்டு முடித்தாள்.

"வர்த்தினி.... ரெண்டு பேரும் உள்ள கட்டில்ல போய் படுங்க. நான் இங்க ஹால்லயே படுத்துக்குறேன். அசதியா இருக்கு. நல்லா தூங்கி எழுந்திரிச்சா தான் கொஞ்சம் ப்ரெஷ்ஷா இருக்கும்!" என்று சொன்னவன் அவர்கள் இருவரும் ஏதாவது பேசிக் கொண்டிருக்கட்டும் என்று நினைத்து மனைவியையும், தாயையும் ஒரே அறைக்குள் விட்டு விட்டு அவன் ஹாலில் படுத்து உறங்கி விட்டான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro