Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 8

"அந்தப் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு இப்ப நீ என்ன செய்யப் போறடா முண்டம்? எங்கிட்ட அவ யாருன்னு இப்ப விசாரிக்குற அலிகேட்டர் வாயன்
அவ கிட்ட நீங்க யாருன்னு ஏன்டா விசாரிக்கல?" என்று தன்னை திட்டியவனிடம் வெறுமனே உச்சுக்கொட்டினான் நஸார்.

அந்த ரிஸாட்டின் வரவேற்புப் பகுதியில் கெஸ்ட்டுகளுக்காக போடப்பட்டிருந்த ஸோஃபாவில் இருவரும் சற்றே தளர்ந்து போய் அமர்ந்திருந்தனர்.

தாங்கள் வாக்யூம் க்ளீன் செய்து சுத்தம் செய்த ஸோஃபாவில் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்திருந்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு! உணவு இடைவேளை தவிர நாள் முழுவதும் ஓடி ஓடி வேலை செய்ததால் அவர்களுடைய உடம்பில் தேவையான அளவிற்கு சக்தியும் இல்லை!

"டேய்.... நான் உன்னைய திட்டிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு உச்சுக் கொட்டுனா.... என்ன அர்த்தம்?" என்று கேட்டான் ஜெயன்.

"இல்லடா; அந்தப் பொண்ணப் பாக்கவே பாவமா இருந்துச்சு! உங்கிட்ட ஏதோ சொல்லியே ஆகணும்ங்குற மாதிரி ரொம்ப தெளிவா கார் கலர், வண்டி நம்பரு எல்லாத்தையும் சொல்லி உன்னைய விசாரிச்சுச்சு! அதான்டா அந்த பார்வதி நாயர்ட்ட நீ ஹாஸ்பிட்டல்ல இருப்பன்னு சொல்லி அனுப்பி விட்டேன்!" என்று சொன்ன நஸாரிடம்,

"இதே வேலையாப் போச்சுடா ஒனக்கு! ஒம்பொண்டாட்டி ஜோதிகா, சவூதியில வேலை பாக்குற மனுஷன் ரவிச்சந்திரன், உங்கம்மா பத்மினி, நான் விஷாலு, நீ ராணா இந்த வரிசையில அந்தப்புள்ளயவும் விட்டு வக்கலியா நீயி? உன் கூட சேந்து நானும் கெட்டுப் போயிட்டேன் போலிருக்கு. எனக்கும் அவள மொததடவ பாக்கும்போதே இந்தப் பொண்ணு பார்வதி நாயர் மாதிரி இருக்காளேன்னு தோணுச்சு! உன்னோட வியாதி தான் எனக்கும் ஒட்டிக்கிடுச்சுன்னு நெனக்குறேன்!"
என்று தன் நண்பனின் விநோத பழக்கத்தைப் பற்றி அவனிடம் குறைசொல்லிக் கொண்டிருந்தான் ஜெயன்.

"சரிடா.... ஒவ்வொருத்தரையும் பாத்தவுடனே அவங்க எந்த சினிமா ஸ்டார் மாதிரி இருக்காங்கன்னு யோசிக்குறது என்னோட பழக்கம்! நீ சீக்கிரத்துல அந்த பொண்ணை பத்தி சொல்லி முடிடா; ஏன்னா
இப்ப கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி இங்க வந்து நிப்பா! அதுக்குள்ள ரொம்ப நீட்டி முழக்காம டக்குன்னு அவளைப் பத்தி சொல்லு!" என்று சொன்ன வாக்கியத்தை நஸார் முழுதாக முடிக்கக்கூட இல்லை. அதற்குள் மரியம் கோபப்பார்வையுடன் அங்கு வந்து நின்றாள்.

"அடேய்...... நீ என்ன மாமியா வீட்டுக்கு வந்த மாப்புள மாதிரி சட்டை பட்டன தெறந்து உட்டுக்கிட்டு பேன் காத்த வாங்கிட்டு இருக்க! உட்டா இங்கயே நீட்டிப் படுக்க ஒரு ட்ரிப்பிள் ரூம் கேப்ப போல; கெஸ்ட்ங்க வார நேரம்..... வீட்டுக்கு கெளம்புடா!" என்று அவனை அதட்டிக் கொண்டிருந்தவளிடம்,

"எனக்கு ஒண்ணும் இங்க தங்கணும்னு அவசியமில்ல மேடம்!
நான் கெளம்பணும்னா நாங்க இங்க வேல செஞ்சதுக்கு எங்களோட நாள் சம்பளக் காசக் குடுறி பட்டனு!" என்று தன்னுடைய மனைவியிடம் கண்சிமிட்டிக் கேட்டான் நஸார்.

"என்ன காசு.... உங்காச நான் எடுத்துக்குட்டேன். ஜெயனு அண்ணா எங்கிட்ட குடுத்த காச உங்க அம்மிட்ட குடுத்துடுவேன்! எழுந்திரிச்சு போ முதல்ல!" என்று விரட்டி விடும் குரலில் சொன்னவளிடம்,

"யேய்... என்னடீ இப்டி இரக்கமே இல்லாம கெளம்புன்னு சொல்ற!
காலையில இருந்து ரெண்டு பேரும் பேய் மாதிரி வேலை பார்த்துருக்கோம்டீ! உடம்பெல்லாம் வலிக்குது; ஒரு கட்டிங்க்குவாவது காசு குடுக்க மாட்டியா?" என்று கேட்டு சடைத்துக் கொண்டான்.

"பாரு.... இப்டி இருந்தன்னா உம்பொண்டாட்டி உன்னைய திட்டாம கொஞ்சவா செய்வா? அதென்னடா ஒடம்பு வலிக்குது; கட்டிங் அடிக்கணும்னு கேக்குறது? வீட்டுக்குப் போயிட்டு சுடுதண்ணியில நல்லா குளியலப் போடு! புள்ளைங்க மூணுல எது முழிச்சுக் கெடக்குதோ அதக் கூப்பிட்டு உன் முதுகு மேல பத்து நிமிஷம் ஏறி நடக்கச் சொல்லு! அதுக்கப்புறம் வயிறு நிறைய சாப்புடு! அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வரும், தூங்கிடு! இந்த சொகத்துக்கு மேலயடா நீ கேக்குற தண்ணி உனக்கு சொகத்த குடுத்துடப் போவுது?" என்று தன் நண்பனிடம் கேட்டான் ஜெயன்.

"லேய்.... வாயமூடுல! இந்த விஷயத்துல நீயெல்லாம் ஒரு பச்சா! உனக்கு தண்ணியடிக்குறத பத்தி ஏபிசிடி கூட தெரியாது;
அதுனால எனக்கு இப்டி கருத்து சொல்றதயெல்லாம் நீ நிறுத்திக்க!" என்று சொல்ல அவனை முறைத்த ஜெயன்,

"முகம் தெரியாதவங்களுக்கு உதவி செய்றது; அடுத்தவங்க கஷ்டத்த தன் கஷ்டம் மாதிரி பாக்குறதுன்னு உன்னோட மார்க்கம் எவ்ளோ நல்ல விஷயத்த எல்லாம் உனக்கு கத்துக் குடுக்குது. அது ஒண்ணையும் மண்டையில ஏத்திக்காம உம்பாட்டுல சுத்து! நான்
வெளிய போயி கார வெளிய எடுத்து ஸ்டார்ட் நிக்குறேன்! அஞ்சு நிமிஷத்துல நீ வரலையின்னா, உன்னைய இங்கயே உட்டுட்டு நான் கெளம்பி போய்ட்டே இருப்பேன்!" என்று சொல்லி விட்டு மரியத்திடம் ஒரு தலையசைவை தந்து விட்டு வெளியேறினான்.

"கார் என்னது.... அதுல இருக்குற பெட்ரோல் என்னது.... மிரட்டுற வேலைய மட்டும் இவேன் செஞ்சுட்டுப் போறான் பாரு! யேய் நீ என்னடீ சொல்ற? காசு தருவியா மாட்டியா?" என்று நண்பனை திட்டிக் கொண்டே மனைவியிடம் கேட்டவனிடம், 

"நான் என்ன சொல்லப் போறேன்?
உனக்கு ஐநூறு ரூவா தாரேன் நஸாரு! அதுல நீ குடிச்சுட்டு நம்ம வீட்டு வெராண்டாவுல வந்து படுப்பியோ.... இல்ல நல்ல புள்ளையா நம்ம பெட்ரூமுக்குள்ள வந்து படுப்பியோ அது உன் இஷ்டம்! ஜெயனு அண்ணா மாதிரி நல்ல ஆளுக்கெல்லாம் பொண்ணு கெடக்க மாட்டேங்குது! ஒன்னைய மாதிரி தறுதலயெல்லாம் பொண்டாட்டிய கட்டிக்கிட்டு அவளுக்கு அடங்கி நல்ல பேச்ச கேக்க மாட்டேங்குது..... என்ன செய்யுறது?" என்று கேட்ட தலையில் கை வைத்துக் கொண்டவளை அங்கும் இங்கும் பார்த்து விட்டு மாடி ஏறும் படிக்கடியில் நகர்த்திக் கொண்டு போனவன்,

"நம்ம சரியா கண்டுக்கலயின்னா பாவா தறுதலையா திரியுதுன்னு தெரியுதுல்லடீ ஒனக்கு? அப்போ என்னைய பத்திரமா பாத்துக்குறது யாரோட வேல?" என்று கேட்டவன் இடுப்பில் அழுந்தக் கிள்ளி விட்டு அவனது முறைப்பான பார்வையை பொருட்படுத்தாமல் அவனிடம்,

"ஆமா! உன்னைய திருத்துறதுக்காக தான் எங்க வீட்ல என்னைய பெத்து வளத்து விட்டாங்க பாரு! நல்லா வக்கனையா பேச மட்டும் செய்யி.... ஆனா நான் சொல்ற பேச்ச கேக்கவே கேக்காத!" என்று கொஞ்சல் குரலில் சலித்துக் கொண்டாள் நஸாரின் அருமை மனைவி.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro