Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 53

"டேய்...... எனக்கு ஒரு நாலு நாள் லீவு வேணும்!" என்று கேட்ட தன்னுடைய நண்பனிடம்,

"என்னடா திடீர்னு லீவு? லீவப் போட்டுட்டு எங்க போகப்போற?" என்று கேட்டான் நஸார்.

"ஹா.....ன்; நேபாளத்துக்கு போய்ட்டு அப்டியே ஏதாவது மல அடிவாரத்துல சாமியாரா ஒக்காந்துரலாமான்னு பாக்குறேன். வர்றியா நீயும்?" என்று கடுப்புடன் அழைத்தவனிடம்,

"ச்சே....ச்சே; எனக்கெல்லாம் அன்பான பொண்டாட்டி, அழகான கொழந்தங்க எல்லாம் இருக்காங்க..... பிகர கரெக்ட் பண்ண முடியாம, அது எப்டின்னு தெரியாம சுத்திட்டு இருக்குற ஒன்னைய மாதிரி தத்தி தடிமாடுங்க வேணும்னா சாமியாரா போகலாம்!"

"நீ ஜாலியா போயிட்டு வாடா ஜெயனு; போயிட்டு திரும்பி வந்துடுவியா... இல்ல அங்கயே செட்டில் ஆகிடுவியா? அதையும் இப்பவே சொல்லிட்டன்னா எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்!" என்று சொன்னவனுடைய கேலிப் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் கழுத்தை தன் புஜங்களால் இறுக்கிப் பற்றியிருந்தான் ஜனமேஜயன்.

"அடேய்.... நாசமாப் போறவனே; லீவு வேணுமின்னு கேட்ட..... போயிட்டு வான்னு சொல்லிட்டேன்; இன்னும் எதுக்குடா எங்கழுத்த புடிச்சு தொங்கிட்டு இருக்க.... கைய எடுடா..... சங்கு ஒதுங்குது!" என்று சொல்லி ஜெயனின் பிடியிலிருந்து விடுபட வேண்டுமென நினைத்து திமிறிக் கொண்டிருந்தவனை "பொழச்சு போடா புள்ளப்பூச்சி!" என்று சொல்லி தன் கையை நஸாரின் கழுத்தில் இருந்து விடுவித்திருந்தான் அந்த கோபக்காரன்.

"என்னடா கோவம் ஒனக்கு? காலையில வந்ததுல இருந்து எல்லாரையும் கடிச்சுக்கிட்டே கெடக்க..... ரெண்டுநாள் மைசூர் வரைக்கும் போயிட்டு வரணும்னு ஒரு சவாரி இருந்தது. அதையும் மணிகண்டன் கிட்ட மாத்தி விட்டுட்டு இன்னிக்கு லோக்கல் சவாரில தான் சுத்திட்டு வந்த போல.....? என்ன ஆச்சு? வதனிப்புள்ள கூட ஏதாவது சண்ட போட்டியா?" என்று நஸார் ஜெயனின் முகத்தை பார்த்தபடி கேட்க நண்பனின் பேச்சை காதில் வாங்காதவன் போல் டேபிளின் மேல் தலையை கவிழ்ந்து கொண்டு கிடந்தான்.

"மனசு சரியில்லன்னா ரெண்டுநாளு லவ்டேல்ல இருக்குற க்ருப்பால் பங்களாவுக்கு போயிட்டு வர்றியா? அங்க போனா வேலைக்கு வேலையும் ஆச்சு; ரெஸ்ட்டுக்கு ரெஸ்ட்டும் ஆச்சு! லீவு எடுக்காம காசுக்கு காசும் ஆச்சு..... மரியம்ட்ட கேட்டு பெரிசா ஒரு அமௌண்ட் கரெக்ட் பண்ணித் தாரேன். என்ன சொல்ற?" என்று கேட்ட நஸாரை, 

"ஒரு கத்தி இருந்தா குடுறா; ஒன்னைய குத்திட்டு நா ஜெயிலுக்கு போயிட்டு வாரேன்" என்று சொல்வது போன்ற ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.

"டேய்.... இப்ப எதுக்கு நீ என்னைய இப்டி மொறைக்குற? நம்ம இந்த ட்ராவல்ஸ் பிஸினஸ ஓரங்கட்டிட்டு, க்ளீனிங் பிஸினஸயே புரஃபொஷனலா எடுத்து செய்யலாம் போல...... இந்த ஏரியாவுல தடுக்கி விழுந்தா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் இருக்குறதுனால நமக்கு இதுல எல்லாம் பெரிசா லாபம் வரலடா!"

"என்னையும் சேத்து எட்டு பேருக்கு மாச சம்பளம் எடுக்கணும் இங்க..... மத்த ட்ராவல்ஸோட இருக்குற போட்டியில அது நமக்கு ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.... நீயே சொல்லு முன்ன மாதிரி மக்கள் நம்ம கிட்ட வண்டிக்கு வர்றாங்களா?" என்று கேட்க ஜெயன் நஸாரிடம்,

"டேய் அது..... இந்த ஓன் போர்டு பிரச்சனையால தான்டா; இப்பல்லாம் சென்னையில இருந்து வர்றவங்க கூட அவங்களோட சொந்த வண்டியில தான் மலைக்கு வர்றாங்க! உள்ளூர்க்காரன் எல்லாம் வீட்டுக்கு ரெண்டு கார் வச்சுருக்கானுவ....பெறகு எங்க நம்ம பொழைக்க? வாடகை வண்டியா, சொந்த வண்டியான்னு பாக்கும் போது, செலவு கொஞ்சம் அதிகமானாலும் நம்மளோட வண்டியவே எடுத்துட்டுப் போலாம்னு தமிழ்நாட்டுல காரு வச்சுருக்குற எல்லா மக்களும் நெனச்சா நம்ம நெலம இப்டித்தான்டா இருக்கும்!" என்றான் சற்றே வருத்தத்தோடு.

"ம்ம்ம்.... நான் சொல்ல வர்றது என்னன்னு ஒனக்கு நல்லாவே புரியுதுல்ல.....? அதுனால தான்டா சொல்றேன். நம்ம பாக்குற இன்னோரு வேலைக்கு நம்ம கிட்ட போட்டியே இல்ல..... ஏன்னா அது ஒடம்ப வருத்திப் பாக்குற வேல; நம்ம அளவுக்கு யாரும் தெளிவாவும் வேலைய செஞ்சு குடுக்கறதில்ல.... அதுனால நம்ம செய்யுற இன்னொரு வேலைக்கு இந்த ஊருல நெறய மவுசு இருக்கு!" என்று சொன்ன நஸாருடைய கூற்று ஓரளவுக்கு சரியானதாகத் தான் ஜெயனுக்கு தெரிந்தது.

"இப்ப சொல்லு போறியா லவ்டேலுக்கு?" என்று கேட்டவனிடம்,

"ம்ப்ச்! அந்த வீட்ல நான் மட்டுமா வேல பாக்குறதுன்னா ரெண்டு நாளெல்லாம் பத்தாதுடா நஸாரு..... நாலு நாளாவது வேணும்!" என்றான் ஜெயன்.

"எடுத்துக்கோ. அஞ்சு நாளா கூட எடுத்துக்கோ. அந்த ராஜஸ்தான் காரன் அடுத்த வாரந்தான் இங்க வரானாம். நான் நெதமும் நைட்டு நைட்டு அங்க ஒனக்கு ஒத்தாச பண்றதுக்கு வாரேன்; நாம வழக்கம்போல அங்க காட்டுக்கோழிய புடிச்சு, தீயில வறுத்துச் சாப்டுவோம்!" என்று சொல்லி பல்லைக் காட்டிய நண்பனிடம்,

"எதுக்கு..... ஜெயனுக்கு ஒத்தாச பண்றேன் பேர்வழியின்னு நீ அங்க வந்து சரக்கடிச்சுட்டு மட்டையாவுறதுக்கா? காட்டுக்கோழி, வீட்டுக்கோழியின்னு எந்த கோழியையும் இனிமே தொடுறது கெடையாது. நா வெரதம்! நீ அங்க வரவும் வேணாம்; எனக்கு எந்த ஒத்தாசயும் பண்ணவும் வேணாம். நாளைக்கு காலையில நான் கெளம்புறேன். மரியம்ட்ட சொல்லி அந்த பங்களா வாட்ச்மேன்ட்ட பேசி வச்சுட சொல்லு!" என்று சொன்னவனிடம்,

"என்னடா ஒன்னோட வெரதம் மாசக்கணக்குல போயிக்கிட்டு இருக்குது..... நீ கவுச்சிய கையில தொட்டுப் பாத்தே ரொம்ப நாளாச்சே? இந்த வெரதம் எல்லாம் கூட சரித்தான்...... ஆனா கடைசி வரைக்கும் ஏன் சாமியாரா போவ நெனச்சன்னு சொல்லவே மாட்டேங்குற பாத்தியா? வர வர நீ எங்கிட்ட எதையுமே சொல்லவே மாட்டேங்குறடா ஜெயனு!" என்று குறைப்பட்டுக் கொண்டான் நஸார்.

"லவ்வர்ஸூக்குள்ள கோபம், தாபம், ரொமான்ஸூ, அடிதடின்னு
ஆயிரத்தெட்டு விஷயம் இருக்கும். அதெல்லாம் ஒனக்கு எதுக்கு சொல்லணும்? எங்களோட விஷயம் எங்க பர்சனல்; அத எதுக்கு நோண்டி நோண்டி கேட்டுட்டு இருக்க?" என்று கேட்டவன்,

"வீட்டுக்கு கெளம்புறேன்டா! ரொம்ப நேராச்சு!" என்று சொல்லி விட்டு நஸாரிடம் கையசைத்து விட்டு வேக எட்டுக்களுடன் நடந்து ஷெட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.

"என்னாது.... ரொம்ப நேராச்சா? இவன் என்ன கல்யாணம் ஆகுறதுக்குள்ளயே ஒரு குடும்பஸ்தன் மாதிரி ரொம்ப பொறுப்போட பேச ஆரம்பிச்சுட்டான்.... மணி ஏழர தான்டா ஆகுது; இது ஒனக்கு ரொம்ப நேரமா?" என்று சிரிப்புடன் நினைத்துக் கொண்ட நஸார் தலையைக் குலுக்கிக் கொண்டு  அன்றைய வரவு செலவுகளை கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெயன் அன்று தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த போது ஏதோ திருட வந்தவன் போல சத்தமில்லாமல் மிகவும் பவ்யமாக நுழைந்தான். காலை வேளையில் அவளிடம் செய்திருந்த அழிச்சாட்டியம் மாலையில் அவனை அவ்வளவு பயமுறுத்தி இருந்தது.

அமுதாம்மா இரவு சமையலுக்காக காய் நறுக்கிக் கொண்டிருப்பதை பார்த்தபடியே முகம் கழுவி உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் அவனது அறைக்கும், ஹாலுக்கும் செல்வது போன்ற பாவனையுடன் எட்டு மணி ஆவதற்குள் எட்டு முறை மேலே எட்டிப் பார்த்து விட்டான்.

இரவு உணவிற்காக எட்டரை மணியளவில் தான் கீழே இறங்கி வருவாள். அவன் ஏழரை மணிக்கு மேலே ஏறினான் என்றால் "கீழ போலாம் ஜெயன்....!" என்று அவள் கேட்டாலும் எட்டரை வரையில் அவளை இறங்க விடவே மாட்டான்.

"மகாராணிய ஒக்கார வச்சு நாங்க சேவகம் செய்யணுமோ? கீழ எறங்கி வந்து அமுதாமாவுக்கு கூட மாட ஏதாவது உதவி செய்யுறாளான்னு பாரு?" என்று மனதிற்குள் அவளை வறுத்துக் கொட்டிக் கொண்டிருந்தவன்
இதற்கு மேல் பொறுக்க முடியாதென்று நினைத்து தன் அன்னையிடம், 

"எங்கம்மா அவள? இப்பல்லாம் சமையல் கட்டுப்பக்கமே எட்டிக் கூட பாக்குறதில்லயாக்கும்? நீயும் அவள எதுவும் சொல்லாம எல்லாருக்கும் ஆக்கி தட்டிக்கிட்டு இரு!" என்று எரிச்சலோடு சொன்னான். முகிலமுதம் தன்னுடைய மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு அவனிடம்,

"அவ இனி நம்மளோட சாப்புட போறதில்லயாம்டா ஜெயனு..... என் ஒருத்திக்கு நானே தனியா சாப்பாடு வச்சுக்குறேன்னு சொல்லிட்டா!" என்று பதிலளித்தார்.

"ஏனாம்? என்னாச்சு அவளுக்கு? இவ்ள நா ஒழுங்காத் தான இருந்தா? இப்ப என்ன திடீர்னு தனியா பொங்கித் திங்குறதுக்கு அவசியம் வந்துச்சு?" என்று புருவம் சுருக்கிக் கேட்டவனிடம்,

"எந்த நாயால இப்டி ஒரு முடிவெடுத்தாளோ.... யாருக்குத் தெரியும்?" என்று உச்சுக்கொட்டினார் முகில்.

"இந்தாரு அமுதாம்மா..... என்னைய திட்டுறதுன்னா எம்மூஞ்சிய பாத்து திட்டு; சும்மா பேச்சுவாக்குல நாயி கீயின்னு சொல்ற வேலையெல்லாம்....... வச்சுக்....... ஆ....... என்ன அமுதாம்மா இப்டி அடிச்சுட்ட?" என்று கேட்டு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

பொறி கலங்கிப் போகும் படியாக பளாரென்று ஒரு அறையை தன் மகனுக்குப் பரிசாக கொடுத்திருந்த முகிலமுதத்தின் கோபம் இன்னமும் குறையாமல் அப்படியே தான் இருந்தது.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro