Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 51

இருபது வயதில் முதல்முறையாக கார் ஸ்டீயரிங்கை கையில் பிடித்த போது தோன்றிய அதே நடுக்கத்தை படுபாவி அவளைத் தொட்ட அவன் கையில் இன்றும் வரவழைத்திருந்தாள். அன்றிரவு சமமையல் அறையிலும் இப்படித் தான் கை காலெல்லாம் நடுங்கித் தொலைத்தது.

அவன் கேட்ட ஒரே ஒரு முத்தத்தை வாக்குவாதம் செய்யாமல் நல்லதனமாக கொடுத்திருந்தாள் என்றால் இப்போது இவ்வளவு வலிகளை அவள் தாங்கியிருக்கவே தேவையில்லை.

இப்போது அவர்களிடையே இருக்கும் பெரிய பிரச்சனையே அதுதானே? அவனை அவளுக்குப் பிடிக்கிறது; அவனது நெற்றி முத்தத்தை பிடிக்கிறது....... ஆனால் முத்தங்கள் கழுத்தோரத்தில், காதோரத்தில், இதழில், உடலில் என நீண்டு கொண்டே சென்றால் கண்களில் பிடித்தமின்மையையும், சின்னதாய் ஒரு அருவருப்பையும் அல்லவா காட்டுகிறாள்?

"இவ என்ன யானை, குதிரை மாதிரி நான் செல்லமா வளக்குற பிராணியா? நெதம் நெத்தியில  முத்தம் குடுத்து தடவி நான் உங்கிட்ட அன்பா இருக்குறேன்னு சொல்றதுக்கு? இன்னிக்கு என்ன ஆனாலும் சரித்தான்; பாத்துக்குறேன் இவள!" என்று நினைத்த படி சமையல் அறைக்குச் சென்று அவளை அணைத்துக் கொண்டான்

அவன் ஒரு ஆண் என்பதற்காக வதனி என்றுமே அவனிடம் பயந்ததில்லை..... அப்படி ஒரு நிலைமையும் இதுநாள் வரை உருவாகவில்லை. ஆனால் இன்று அவனுடைய உறுதியான அணைப்பில், உன்னை இதிலிருந்து லேசில் விடுவிக்கவே மாட்டேன் என்று உணர்த்திய
உடல் வலிமையைப் பார்த்து கண்களில் பயத்துடன் பம்மியபடி அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

"ம்ப்ச்! என்னைய பாத்து பயப்படாத வர்த்தினி; இதோ என் நெஞ்சுல விழுந்து ஒட்டிக்கிட்டு நிக்குறியே? இப்பயும் ஒனக்கு எம்மேல ஆச வரலயா.....? ஆனா எனக்கு அடிச்சுப் பொரண்டுக்கிட்டு ஆச வருதே?"

"ஒன்னோட குட்டி மூக்கு என் நெஞ்சோட உரசுறப்ப என் நெஞ்சு முடியெல்லாம் சிலித்துக்கிட்டு நிக்குது பாரேன்...... ஒரு பொண்ணோட நெருக்கம் இவ்ள இன்ப அவஸ்தைய குடுக்குமான்னு நெனக்க வைக்குது பாரேன்!"

"இந்த மாதிரி எங்கண்ணோ, மீசையோ, தாடியோ, கையோ, உடம்போ இப்டி எதுவுமே உன்னைய தொந்தரவு பண்ணலயாடீ? ஒங்கண்ணுல காதல நான் பாத்துருக்கேனே?
எங்கயாவது தூரத்துல இருக்குறப்ப, நீ என்னைய கண்ணாலயே அந்த தேடு தேடுவ. அப்பயெல்லாம் உன் கண்ணுல தெரிஞ்ச காதல், இவ்ள பக்கத்துல நிக்குறப்ப எனக்கு ஏன் தெரிய மாட்டேங்குது?"

"மனசுக்குப் பிடிச்ச ரெண்டு பேரு பக்கத்துல நெருங்கி வந்தா அது கொலக்குத்தம் இல்லம்மா; இங்க பாரு..... என் கண்ணப் பாருடீ; இன்னும் ஒனக்கு பயமாத் தான் இருக்கா?" என்று மிருதுவாக அவள் கன்னத்தில் கை வைத்து கேட்டவனிடம் ஒரு நொடி கூட தாமதிக்காமல்,

"ஆமா..... பயமாத் தான் இருக்கு!
என்னை விட்டுடு ஜெயன்!" என்ற வார்த்தையை சொல்லியிருந்தாள் வதனி.

"ஏய்..... கொழந்தப்புள்ளைக்கு புரிய வைக்கிற மாதிரி எவ்ளோ பொறுமையா உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்..... நான் சொல்ற ஒன்னையும் காதுல வாங்காம விட்டுடுன்னு சொன்னா என்னடீ அர்த்தம்?" என்று குரலை உயர்த்தியவனிடம்,

"விட்டுடுன்னு தான் அர்த்தம் ஜெயன்..... எனக்கு உன்னோட இன்டென்ஷன் பிடிக்கல; ஸோ என்
பக்கத்துல வராத; நீ என்னைய ஃபோர்ஸ் பண்ணி தூக்க ட்ரை பண்ணுனன்னா இன்னிக்கு நான் உன்ன கடிச்சு வச்சுடுவேன்! அன்னிக்கு நைட் மாதிரி பாவம்லாம் பாக்க மாட்டேன்!" என்று மிகவும் தீவிரமான குரலில் அவனிடம் சொன்னாள் வதனி.

"நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சமாவது காதுல வாங்குறாளா? கடவுளே..... இவள கட்டிக்கிட்டு ஒரு வழிக்கு கொண்டு வர்றதுக்குள்ள உனக்கு பேசி பேசி நாக்கு தள்ளிடும் போலயேடா ஜெயனு?" என்று தனக்குள்ளாக பேசி நொந்து கொண்டவன் சமையலறையை மெதுவாக கடந்து குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொள்வோம் என்று நினைத்தவளின் நினைப்பை பொய்யாக்கினான்.

"ஓய் ஏஎம் அம்மா; ஒன்னைய நான் என்ன வேணும்னா செய்யலாங்குற மாதிரி, என்னையும் நீ என்ன வேணும்னாலும் செய்யலாம்டா செல்லமே.... கடிக்குறேன்,  அடிக்குறேன்னு சொல்லிட்டு மெதுவா கம்பிய நீட்டிட்டு பாத்ரூம்ல நுழைஞ்சுடுவோம்னு யோசிச்சுட்டு இருக்கியா? இங்க வாடா வர்த்தினி!" என்று அழைத்து ஒற்றைக் கையால் இழுத்து கோழியை கூடையைப் போட்டு  கவிழ்ப்பது போல் அவளை எளிதாகப் பிடித்து விட்டான் ஜெயன்.

அவளை தொடுவது, தூக்குவதற்கு எல்லாம் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவன் இன்று
அவனது உள்ளங்கையை வைத்து மொத்தமாக அவளுடைய முகத்தையே மூடி விட்டான்.

"என்னடா வர்த்தினி; உன் மொகங்கூட இம்புட்டு குட்டியா இருந்தா என்ன செய்ய? பாரு..... என் உள்ளங்கைக்குள்ள ஒம்மொகமே அடங்கிடுச்சு; இப்டியே போச்சுன்னா நா எங்க கெளம்புனாலும் உன்னைய நாலா மடிச்சு சட்டைப்பைக்குள்ளயே வச்சு கொண்டு போயிடலாம் போலிருக்கே?" என்று அவளிடம் விளையாட்டாக பேசிய படி அவளை
தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குள் சென்றான்.

"ஜெயன்..... ப்ளீஸ்..... இதல்லாம் வேண்டாம்; இந்த மாதிரி விளையாட்டெல்லாம் எனக்குப் பிடிக்கல; என்னை விடுன்னு சொல்றேன்லடா, விடு பொறுக்கி.....!" என்று சொல்லியபடி அவன் கையை உதறி படுக்கையில் இருந்து எழுந்திரிக்க முயற்சி செய்து திமிறியவளின் வாயை அடைத்தவன், வர்த்தினியின் உடம்பின் மேல் முழுமையாக விழுந்து, அவள் கழுத்தோரத்தை வாசம் பிடித்து, உடை விலகிப் போன இடையைப் பிடித்து அழுத்தி, அவளை இருகை கொண்டு அடக்கிய பரபரப்பை அவள் மார்பில் படுத்து அவனது பலமான மூச்சுகளால் சற்றே தணித்து,

"ஐயோ... நீ பண்றது செக்ஸூயல் அசால்ட் ஜெயன்; யூ ஆர் ஹாரஸிங் மீ; இது வேண்டாம்..... எனக்குப் பிடிக்கல; என்னை விட்டுடு ஜெயன்!" என்று அவனது ஒவ்வொரு செயலையும் தடுக்கும் அளவிற்கு பலமில்லாமல், ஆனால் அந்த செயல்களும் பிடிக்காமல் முகம் சுளிக்க கத்திக் கொண்டிருந்த இத்தனை செயல்களுக்கும் முத்தாய்ப்பாக வதனியுடைய இதழ்களில் வந்து குடியேறினான்.

அன்று இரவு நேரத்தில் பெண்ணிடம் இதமான மென்மையை காட்டியிருந்தவன், இன்று அதிகாலையில் அவளது விடு, விடு என்ற ஜெபத்தால் சிலிர்த்தெழுந்து இம்சையான வன்மையை அவளிடம் காட்டியிருந்தான்.

வதனி தன்னுடன் இழையும் போது
அவளுக்கு கோபம் கூட வரலாம்; பயமும் அருவருப்பும் வரவே கூடாது என்று உறுதியாக நினைத்தவன் படுக்கையில் கிடந்த பாவையின் இதழ்களை மென்று, உறிஞ்சி, கடித்து, சுவைத்து தின்று முடித்திருந்தான்.

எங்கே "ச்சீ....ச்சீ" என்ற அவளது வாயில் இருந்து வரும் வார்த்தையை கேட்டு விடுவோமோ என்று பயத்தில் அவன் இதயம் குதித்த குதிப்பு அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நல்லவேளையாக அப்படி ஒரு வார்த்தையை அவள் இன்று அவள் வாயால் உதிர்க்கவில்லை.

பத்து நிமிடங்கள் அவள் உதட்டுடன் ஏன் இப்படி அழகாய் இருந்து என்னை இம்சிக்கிறாய் என்று கேட்டு அவனுடைய பற்களால் அவைகளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவன், பதினோராவது நிமிடத்தில் கண்ணீர் வழிந்த தன்னவளின் கண்களை கவனிக்க தன் இதழ்களுக்கு கட்டளையிட்டான்.

சூடாக வழிந்த வதனியுடைய கண்ணீரும், அவள் கண்களை தாண்டி வழிய விடாமல்
அவள் கண்ணீருக்கு அணையிட்டு, கண்களில் முத்தம் பதித்த இதழ்களும் இவைகள் எவற்றாலுமே வதனியுடைய வருத்தத்தை சமாதானப்படுத்த முடியவில்லை.

அவனது கன்னத்தில், முதுகில் சில பல நகக் கீறல்கள், தன்னுடைய உதட்டில் கடித்தவனது உதட்டிலும் தான் பல் தடம் பதித்த அடையாளங்கள் என வதனியும் அவளுடைய பங்குக்கு அவனுக்கு சில காயங்களை பரிசாகக் கொடுத்தாலும் அவளது இதழ் முத்தத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டவனுக்கு அந்த காயங்கள் எல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

"ஹ..........ப்பாடா! என்ன ஒரு ஆனந்தம்டீ ஹெட்லைட்டு! அர்த்த ராத்திரில தொட்டபெட்டா உச்சிக்குப் போயி மேல இருந்து பள்ளத்த எட்டிப் பாக்குற மாதிரி மனசுக்குள்ள எவ்ளோ ஜில்லோன்னு இருக்கு தெரியுமா?" என்று சொன்னவனுடைய பேச்சில் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை.

"வெறி புடிச்ச மிருகமாடா நீ? ஒரு பொண்ணு கிட்ட போயி இப்டி நடந்துட்டு, அது சந்தோஷமா வேற இருக்குன்ற?" என்று கேட்டபடி அவனை தன் காலால் உதைத்து படுக்கையில் இருந்து கீழே தள்ளி விட்டாள். அவளது திடீர் தாக்குதலை எதிர்பாராதவன் படுக்கையில் இருந்து கீழே விழுந்தான்.

"இங்க நடக்குறது பிடிக்கலன்னா இத நீ முதல்லயே செஞ்சுருக்கலாம்!" என்று அவளிடம் சொன்னவன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து முகத்தை அவனுடைய கட்டிலில் வைத்துக் கொண்டு தலையைச் சாய்த்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

"இவ்ளோ நாள் எங்கிட்ட ஒரு ஜென்டில்மேனா நடந்துக்கிட்டவன் நீதானா ஜெயன்? நடக்குறப்ப வெரலக் கூட பிடிக்க மாட்டியேடா? இன்னிக்கு..... இன்னிக்கு ஏன் இப்டி?" என்று கேட்டவளிடம்

"ஏன் இப்டின்னு கேட்டா? எல்லா நாளும் ஒரேப் போல இருக்குமா என்ன? இவ்ளோ நாள் ஒங்கிட்ட  ஜென்டில்மேனா நடந்துக்குட்ட ஜெயன் தான், இன்னிக்கு இப்டியும் இருந்துருக்கான்..... இவனே தான் அவன்; அவனே தான் இவன்!"

"நான் ஒண்ணும் யாரோ ஒரு பொண்ணு கிட்ட போயிட்டு இப்டி நடந்துக்கல; எனக்குப் பிடிச்ச, நான் கல்யாணம் பண்ணிக்கப் போற என் ஹெட்லைட் கிட்ட தான் இப்டி நடந்துக்கிட்டேன்! அன்னிக்கும் நான் கிச்சன்ல வச்சு ஒங்களுக்கு முத்தம் குடுத்தப்ப இப்டித்தான் ஏதோ ஒலகமே இடிஞ்சு ஒந்தலையில விழுந்த மாதிரி ஒரு பயத்தோட நின்ன; இன்னிக்கும் அப்டித்தான் இருந்த!"

"என்ன அன்னிக்கு பயம்.... இன்னிக்கு தாங்க முடியாத வெறுப்பு..... என்னிக்கு தான் வர்த்தினி எம்மேல உனக்கு காதல், ஆசை, பிரியம் இதெல்லாம் வரும்? இல்ல இதெல்லாம் என்னிக்குமே வரவே வராதா?" என்று ஏக்கமாக கேட்டவனிடம்,

"அது.... இப்டி நீ தப்பு தப்பா வந்து இவ்ளோ அரகென்ட்டா பிஹேவ் பண்ணியிருக்க கூடாதுல்ல?" என்று தன்பக்க நியாத்தை கேட்டாள் வதனி.

"ஏய்..... என்னடீ அரகென்ட்? என்ன அரகென்ட்? யம்மா தாயே........ கல்யாணத்துக்குள்ள என்னைய கொஞ்சம் அன்பா, ஆசயா, காதலா பாக்குறதுக்கு முயற்சியாச்சு பண்ணும்மான்னு கெஞ்சிக்கிட்டே ஒன்னைய தடவிக் குடுத்துட்டே இருக்க முடியாது; சில விஷயங்கள வாயால சொல்றத விட நடத்திக் காட்டுறது தான் கரெக்டா இருக்கும்;
நான் இப்டித்தான்....."

"இந்த ஜெயன எனக்குப் பிடிக்கல; ஒருநா பூரா எனக்குப் பின்னாலயே ரெண்டு அடி கேப்பு உட்டு நடந்துவார ஜெயனத் தான் எனக்குப் பிடிச்சிருக்குன்னு நீ சொன்னியின்னா அது உன் முட்டாத்தனம்....!"

"ஒன்னோட பாடிகாட்டா இருக்குறதுக்கு ஒண்ணும் நான் ஒன்னைய கல்யாணம் பண்ணிக்க நெனக்கல; காலையில நடந்துச்சே இப்டியெல்லாம் இருக்கும்; இதுக்கு மேலயும் நெறய நடக்கும்! ஒனக்கு இஷ்டம்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்க; இல்லன்னா வழக்கம்போல ஒரு டயலாக் வச்சுருப்பியே நீ ஹவுஸ் ஓனர்; நான் டெனன்ட்டுன்னு அந்த எல்லைக்குள்ளயே நின்னுக்க......! ச்சை.... இவளுக்காக நா இன்னும் எத்தனயத் தான் யோசிக்கணுமோ?" என்று சலித்த படியே அவன் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்ட திருப்தியில் வேக நடைகளுடன் கீழிறங்கி சென்றான் ஜெயன்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro