Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 44

"என்ன தான் ஆச்சு உனக்கு? ஒன்னைய எதுக்கு பாவம்னு நெனைக்கணும்? கைய எடு முதல்ல..... தோச சாப்புடுறியா? வேண்டாமா?" என்று கேட்டு அடுப்பின் புறமாக திரும்பப் போனவளை திரும்ப விடாமல்  நின்றிருந்த படியே அப்படியே நின்று கொண்டிருந்தான் ஜெயன்.

"ஏன்டீ இப்டி எல்லார் கண்ணுக்கும் தனியான ஒரு அழகியா தெரியுற? அச்சுதன் ஸாரோட சித்தப்பன் எங்கிட்ட வந்து உன்னையப் பத்தி விசாரிக்குறான்; அவனோட பையனுக்கு ஒன்னைய ரெண்டாந்தாரமா ஒன்னோட வீட்ல பேசி கட்டித்தருவாங்களான்னு நான் கேட்டுச் சொல்லணுமாம் அவனுக்கு..... நாம ரெண்டு பேருந்தான் ரொம்ப ப்ரெண்ட்ஸா இருக்கோமாம்; நம்மள பாத்தா ப்ரெண்ட்ஸ் மாதிரியில்ல தெரிஞ்சிருக்கு அவனுக்கு......
பொரம்போக்கு நாதாரி!"

"ஊரு சுத்திப் பாக்க வந்தமா, ஊரப் பாத்துப் போனமான்னு இல்லாம..... என்னோட ஏஎம் அம்மாவ, அதுவும் ரெண்டாந்தாரமா எப்டிடீ பொண்ணு கேக்கலாம்? அவனுக்கெல்லாம் என்ன கொழுப்பு இருக்கணும்?" என்று கோபம் அடங்காத குரலில் கத்தியவனிடம்,

"ஷ்ஷ்ஷ்! கத்தாத; அமைதியா இரு ஜெயன்!" என்று சொல்லி அமைதிப்படுத்தினாள் வதனி.

"ம்ஹூம்; நீ சொல்லு.... என்னைய தவிர வேற எவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லு; அப்பத்தான் சாம்பார வச்சு தோச சாப்புடுவேன்; இல்லையின்னா இப்பவும் காரச்சட்னி கேப்பேன் பாத்துக்க!" என்று சொன்னவனுடைய பேச்சைக் கேட்டு சட்டென சிரித்து விட்டாள் வதனி.

"ம்ம்ம்! இப்டி சிரிச்சா எவ்ளோ அழகாயிருக்கு.....? அத விட்டுட்டு எப்பப்பாரு சிரிக்குறேங்குற பேருல
பல்ல மட்டும் தெறந்து காமிச்சுக்கிட்டு?" என்றவன் தலையை உலுக்கிக் கொண்டு,

"ஏய்...... நாங்கேட்டத மறந்துடாம எங்கிட்ட சொல்லு; இப்டி சிரிச்சு என்னைய ஏமாத்தாத ஹெட்லைட்டு!" என்றான்.

"எதுக்கு நீ இப்டி அடிக்கடி என்னைய ஹெட்லைட்டுன்னு கூப்டுற ஜெயன்?" என்று அவனிடம் விசாரித்தவளிடம்,

"அதுவா.... அது வந்து நம்ம நஸாருப்பய இருக்கான்ல அவன் அடிக்கடி மரியத்த பட்டனுன்னு கூப்டுவான்; எதுக்குடா அப்டி கூப்புடுறன்னு கேட்டா, அதெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாதுடான்னு ஸீன் போடுவான்!"

"எதுக்குடா அப்டி கூப்டுவானா இருக்கும்னு மண்டையப் போட்டு ஒடச்சதுல சட்டையில இருக்குற பட்டன் அங்க இருக்குற வரைக்கும் அதோட முக்கியத்துவம் நமக்குத் தெரியவே தெரியாது;  அதோட எடத்துல இருந்து ஒண்ணு பிஞ்சி போச்சுன்னா அப்பத்தான் அந்த பட்டனோட அருமை தெரியும்!"

"அதுனால அவனோட பட்டனு மாதிரி நானும் எனக்கு ரொம்ப முக்கியமான ஹெட்லைட்ட ஒனக்கு செல்லப்பேரு ஆக்கிக்கிட்டேன்! நீ இல்லன்னா என்னோட வாழ்க்கைங்குற வண்டிய என்னால சரியான பாதையில ஓட்டவே முடியாது; அதுனால கடைசி வர எங்கூடவே இருப்பியா ஹெட்லைட்டு?" என்று கேட்டவனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அவனுக்கு தோசை வார்க்கும் சாக்கில் வேறுபுறம் திரும்பி நின்றாள் வதனி.

"ஹெட்லைட்டு.... ஹெட்லைட்டு!" என்று அவன் விளையாட்டாய் அழைக்கும் போதெல்லாம் அவள் கண்ணாடி அணிந்திருப்பதை தான் இப்படி அழைத்து கிண்டல் செய்கிறான் என்று பார்த்தால், இப்போதும் மனதை தொடுவதைப் போல் பேசுகிறானே?

கவிதைத்துவமான பேச்சோ, பாடலோ இப்படி எதுவுமே அவனுக்குப் பிடித்தம் இல்லை.

"ம்க்கும்..... மொதல்ல சொல்றது புரிஞ்சாவுல்ல அத ரசிக்க முடியும்? நமக்கெல்லாம் எங்கம்மா அதுக்கெல்லாம் பொறுமையும்,  நேரமும்?" என்று தோள்குலுக்கி விட்டு செல்பவனிடத்திடல் இருந்து திடீர் திடீரென இந்த மாதிரியான தாக்குதல்கள் நடந்தால் எப்படி அதை எதிர்த்து நிற்பது என்ற எண்ணம் தான் வதனிக்கு!

எவ்வளவு மரியாதயோடு பேசிக் கொண்டிருந்தவரை கடைசியில் பொரம்போக்கு என்று திட்டி விட்டான்? என்னைய விட்டுட்டு வேற யாரையும் கட்டிக்கிடுவியா என்று எப்படி பரபரக்கிறான்? ஒன்னோட வெளையாண்டு ஜெயிச்சா அது எனக்கு ரொம்ப முக்கியந்தான் என்று சொல்லி ஜெயித்த பரிசை எப்படி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்?

"வினு..... நான் இப்டி இவனப்பத்தியே யோசிக்குறது தப்பா வினு? இந்தப்பையன் எப்டி எனக்குள்ள போனான்னே தெரியல.... ஆனா நான் உனக்கு துரோகம் செய்யல வினு!" என்று மனதிற்குள்ளாக வினோத்திடம் பேசியவளிடம் மெலிதான நகைப்புக்குரல் கேட்டது.

"நீ சந்தோஷமா இருக்கன்னா அதப் பாத்து சந்தோஷப்படுற மொதல் ஆள் நான் தான் வது..... அவனா, நானான்னு கொழப்பிக்கிட்டே இருக்காத! நிஜத்துல நான் இல்ல.... அவன் மட்டுந்தான் இருக்கான்; அதப் புரிஞ்சுக்கோ; எது உண்மையோ அத தைரியமா ஃபேஸ் பண்ணு வது.....!" என்று வினோத்துடைய குரல் சொன்ன அறிவுரை தன்னுடைய மனத்தின் சுயநலமான எண்ணமா என்று எப்போதும் போல தவிப்பு வந்து அவளிடம் ஒட்டிக் கொண்டது.

"எம்மா ஏய்..... எங்க போயிட்ட?
மறுபடியும் காணாப் போயிட்டியா?
நீ கேக்குற கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றனா இல்லையா? என் கேள்விக்கு மட்டும் ஏன் நீ பதில் சொல்ல மாட்டேங்குற? உன்னைய கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றது கஷ்டமா இருந்ததுன்னா பரவாயில்ல; வேற எந்தப் பயலையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னாவது சொல்லு போதும்!" என்று சொன்னவனிடம் மெல்லிய குரலில்,

"சொன்னதா வச்சுக்க!" என்று சொன்னவள் அவனுடைய தட்டை எடுத்து தோசையை தட்டில் வைத்தாள்.

"வர்த்தினி..... இப்ப எம்மனசுல இருக்குற பயத்துக்கும், கொழப்பத்துக்கும் சத்தியமா தோச சாப்டுற மனநெலையெல்லாம் இல்லம்மா; வண்டு மாதிரி மாறி பூவைத் தேடிப்போயி ஒட்டிக்கிடணும்னு தான்...... இதுக்கு மேல பேசுனா தோசக்கரண்டிய வச்சு கையில ஒரு இழுப்பு இழுத்து விட்டுடுவியோ என்னவோன்னு..... பயமாயிருக்குதும்மா!" என்று சொன்னவனின் குரலில் இருந்த தடுமாற்றத்தையும் உளறலையும் கவனித்தவள்,

"எதுவும் பேசாம வாய மூடிட்டு சாப்ட்டு போ ஜெயன்..... பயம்ங்குற, குழப்பம்ங்குற, பூவுங்குற, வண்டுங்குற, சூடுங்குற...... நீ பேசுறது ஒண்ணுமே புரியல!" என்று சொல்லி அவன் வழக்கமான சாப்பிடும் எண்ணிக்கை நான்கு தோசைகளை ஊற்றி விட்டு அடுப்பை அணைத்தாள்.

"அப்ப வாய மூடிடலாம்ங்குற.... நீயே சொல்லிட்ட பெறவு எதுக்கு யோசிச்சுட்டு..... என்ன மிஞ்சிப் போனா அன்னிக்கு மாதிரி கன்னத்துல ஒரு அப்பு வைப்ப..... அதையும் சந்தோஷமா வாங்கிக்கிட்டா போச்சு!" என்று சொன்னவனுடைய பேச்சை உள்வாங்கி திடுக்கிட்டு,

"ஏய்..... ஜெயன் என்ன பேசிட்டு இருக்.......?" என்ற வார்த்தை வரை தான் அவளை பேச அனுமதித்திருந்தான் ஜனமேஜயன்.

அவளுடைய வாயில் இருந்து இன்னும் என்னென்ன திட்டுக்கள் புறப்பட்டிருக்குமோ தெரியவில்லை.... அத்தனையும் தன்னுடைய இதழை அவளுடைய இதழில் பொருத்தி மொத்தமாக அடைத்து வைத்திருந்தான்.

அவளது இடையை அணைத்து அடுப்பில் இருந்து சற்று தூரமாக நகர்த்திக் கொண்டு வந்திருந்தவன் அவளது கரங்கள் தன்னுடைய மார்பில் தாக்குதல் நடத்திய போதும் கூட அவள்
இதழ்களுக்கு மட்டும் விடுதலை தரவேயில்லை.

ஊசியைக் கையில் பிடிக்கையில் முதலில் கரம் நடுங்கும் ஹவுஸ் சர்ஜன் அனுபவத்தால் பண்படுவது போல அவள் செவ்விதழின் மேல் இதழை அழுத்துகையில் ஹவுஸ் சர்ஜனைப் போல் இருந்தவன், சில நிமிட நேரத்தில் அனுபவத்தில் பன்மடங்கு பண்பட்டிருந்தான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro