Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்பனை 4

"மவனே இது மட்டும் உன்னோட விளையாட்டுன்னு தெரிஞ்சது நீ செத்தடா" என்று கதிர் கூற சுமனோ

"டேய் என்ன மச்சி இப்படி மிரட்டுற" என்று கேட்டான்.அதற்கு கதிர்

"பெருசாலாம் ஒன்னுமில்ல மச்சி, வீணா கிட்ட நீ வாட்பெட்ல பொண்ணுங்க கூட கடலை போடுறேன்னு சொல்லிடுவேன்.அப்புறம்தான் உனக்கு தெரியுமே என்ன நடக்கும்னு.அவ உன்ன நம்புறத விட என்ன நம்புறதுதான் அதிகம்.சோ பார்த்து சூதானமா நடந்துக்க" என்றவனை

"யப்பா ராசா, நான் ஒன்னுமே பண்ணலப்பா.நல்லா இருக்குற என் வாழ்க்கைல சும்மா கும்மி அடிச்சிடாத.அப்புறம் இந்த ஆகாஷனா யாருன்னு இன்னும் ஒரு வாரத்துல் கண்டுபிடிச்சிடலாம்" என்று கூற கதிரோ

"அது எப்படி மச்சி, இதுல இருக்குற யாரோட பெயரும் நிஜம் கிடையாதே.IP அட்றஸ் வெச்சி கூட ட்றேஸ் பண்ண முடியாது.ஏன்னா இப்போ எல்லா பக்கிங்களும் VPN வெச்சிதான் மொபைலே யூஸ் பண்ணுதுங்க" என்று கூற

"அது இல்ல மச்சி தமிழ் வாட்பெட்கு என்று ஒரு சில க்ரூப்ஸ் இருக்கு.அதுல உள்ள ஒரு பொண்ண பிடிச்சோம்னா கண்டிப்பா ஆகாஷனா பத்தி முழு டீடைலும் எடுத்துடலாம்.ஆமா இப்போ நீ ஏன் இவ்வளவு ஆர்வமா ஆகாஷனாவ பத்தி பேசுற.பொண்ணுங்கன்னாலே உனக்கு ஆகாதே.இந்த ஐடி மட்டும் ஏன் அவ்வளவு இம்பார்டண்ட்" என்று கூற கதிரோ

"அப்படி இல்லடா, இது கொஞ்சம் இண்ட்றஸ்ட்டிங்கா இருக்கு.அதான் அவகிட்ட நான் அவ யாரு ,அவ உண்மையான பெயர் என்னன்னு சொல்லனும்டா.அதானே தவிர மத்தபடி வேற எதுவும் இல்ல.ஓபனா சொல்லனும்னா ஒரு ஆர்வம் அவ்வளவுதான்" என்று கூறினான்.

"சரி மச்சி பார்த்து இருந்துக்க.சில பேரு இதையே வேலையா வெச்சிக்கிட்டு சுத்துதுங்க.சும்மா இருக்குறவன் கிட்ட அன்பா பேசி கடைசில அவன லூசு மாதிரி அலைய வைக்கிறத ஒரு பொலப்பாவே வெச்சிருக்குங்க.எதுக்கும் கொஞ்சம் கவனமா இருந்துக்க" என்று கூற கதிரோ

"டேய் என்கிட்டயேவா, நம்ம இண்டஸ்ட்றில இல்லாத போலி மனிதர்களாடா. IT ல வேலை செய்ற நமக்கு இது கூட தெரியாம இருக்குமாடா மங்குனி " என்று கூற சுமன்

"டேய் வர வர என்ன ரொம்பதான் புகழ்ற.அப்புறம் இப்படிலாம் பண்ண இந்த ஆகாஷனா பற்றிய டீடைல் எதுவும் நான் கேட்டு சொல்ல மாட்டேன்" என்று கோவமாக‌ இருப்பவனை போல சுமன் கூற கதிரோ

"சரி இப்ப சாருக்கு என்ன பண்ணனும்" என்று கேட்டவனை

"ஆஹ் இப்ப கேட்டியே இது கேள்வி, சரி எங்க சொல்லு..சுமன் சார் சுமன் சார் தயவு செஞ்சி ஆகாஷனா யாருன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க சார்.எங்க சொல்லு பார்க்கலாம்" என்று கூற அவனோ

"அடிங்க எது சார் ஆஹ்.இருடி நான் வீணாகிட்டயே பேசிக்கிறேன்"என்று கூற

"ஐய்யோ மாப்பிளா நான் சும்மா ஜாலியா பேசினேண்டா.இதையெல்லாம் போய் நீ சீரியஸா எடுத்துக்கிட்டு" என்று பம்மியவன்

"என்னதான் இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்டா.ஆ ஊன்னா வீணா கிட்ட சொல்ரேன்,வீணா கிட்ட சொல்ரேன்னு சொல்ர.ஸ்கூல் பசங்க மிஸ் கிட்ட சொல்ல போறேன்னு சொல்ர மாதிரி.என் தலை எழுத்து என் டார்லிங்க் என்ன நம்புறத விட அண்ணா அண்ணானு உன்னதான் அதிகமா நம்புறா ,எல்லாம் என் தலை விதி" என்று கூற சிரித்துவிட்டு கதிர் காலை கட் செய்தான்.

--------

"ஹேய் சந்தியா வாட்பெட்ல புதுசா ஒரு கதை படிச்சியாடி ஆகாஷனான்னு.செம்ம பேருல.ஸ்டோரி கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் புது ரைட்டர்ல நல்லாவே எழுதுறாண்டி" என்று கூற சந்தியா

"ஹேய் நீ எப்படி வாட்பெட் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ண" என்று கேட்க நதினினி

"அதெல்லாம் 2 மாசம் முன்னாடியே பண்ணியாச்சு.சரி உன் யூசர் ஐடி பெயரு என்ன" என்று கேட்டவளை சந்தியா

"அதெல்லாம் சீக்ரட்.உனக்கு எப்படி உன் ஐடி சீக்ரட்டோ அதே போல என் ஐடியும் சீக்ரட்"என்று கூறினால்.அதற்கு உடனே நந்தினி

"சரி சந்தியா, நமக்குள்ள ஒரு கேம் வெச்சிக்கலாம் ,யாரு மத்தவங்க ஐடிய கண்டுபிடிக்கிறாங்களோ அவங்க கண்டுபிடிக்கிற ஆளு சொல்ரத கேட்கனும் ஓக்கேயா" என்று கண்ணடித்தவளை சந்தியா

"ஓக்கே டன்.ஆனா அடுத்த ஆளு எத சொன்னாலும் கேட்கனும், முடியாது கஷ்டம்னுலாம் சொல்ல கூடாது ஓக்கே" என்று கூற இப்போது கொஞ்சம் நந்தினி பயந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்

"சரி நீ சொல்ர மாதிரியே பண்ணிடலாம்.ஏன்னா எப்படியும் ஜெயிக்க போறது நாந்தான்,அப்படி நான் ஜெயிக்கலன்னாலும் எப்படியும் நீ என்னோட ஐடிய கண்டுபிடிக்க போறதில்ல" என்று கூற சந்தியாவோ

"சரிடி .இன்னைல இருந்து சரியா 3 மாசத்துல நம்ம கிராடுவேசன்.அன்னைக்கு நம்ம யாரு ஜெயிச்ச ,யாரு தோத்தோம்னு பார்க்கலாம்.மே பி டிராவா கூட இருக்கலாம் " என்றவளை நந்தினியோ

"எனக்கு என்னமோ நாந்தான் ஜெயிப்பேன்னு தோனுது" என்று கூறினால்.

----------
இன்று தனது அப்டேட்டை எப்படி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில்
"ஹாய் "என்று ஆகாஷனாவிடமிருந்து மெசேஜ் வர முகத்தில் புன்னகையுடன் கதிர் பதில் மெசேஜ் அனுப்ப தயாராகினான்.

"கரு- எப்படி இருக்கீங்க ஷனா"

"ஆகாஷனா- என்ன எழுத்தாளரே பெயரை சுருக்கி சோர்ட் அண்ட் ஸ்வீட்டா கூப்பிடுற மாதிரி இருக்கு"

"கரு-அப்படிலாம் இல்லைங்க.நீங்க யாருன்னே எனக்கு தெரியல.முதல்ல நீங்க ஒரு பையனா இல்ல பொண்ணான்னு கூட தெரியல.என்ன விட எவ்வளவோ நல்ல ரைட்டர்ஸ்லாம் வாட்பெட்ல இருக்கும் போது என்னோட ஸ்டோரிய படிச்சிட்டு எனக்கு மெசேஜ் வேற பண்றிங்க.எனக்கு மொத்தமா இருக்குற ரீடர்ஸே பத்துதான்.அதுல நாலு பேருதான் வோட் போடுவாங்க.ஒன்னு என்னோடது.இன்னொன்னு என் ப்ரெண்டோடது,அடுத்தது நீங்க"

"ஆகாஷனா-அப்போ கடைசி வோட் யாரு போடுறா.ப்ளீஸ் பா சொல்லுங்க"

"கரு-அய்யோ நீங்க வேற.அது ஏதோ UserID அப்படின்னு வந்து லாஸ்ட்ல நம்பர்ஸா வரும்பா.அது யாருன்னு தெரியல"

"ஆகாஷனா-பரவாயில்லை கரு, அந்த ஐடிய எனக்கு செண்ட் பண்ண முடியுமா"

"கரு-ஆமா நீங்க ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க.அப்புறம் அந்த ஐடி யாருன்னு தெரிஞ்சிக்க என்கிட்ட கேட்க தேவையே இல்ல.என்னோட ஸ்டோரி டைம்லைன்ல பார்த்தாலே தெரியுமே"

"ஆகாஷனா-ஆமால்ல.ச்ச்ச எனக்கு இது ஞாபகம் வரவே இல்லை.சரி அத நான் பர்த்துக்கிறேன்.எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ண முடியுமா"

"கரு-சொல்லுங்க ஷனா, என்ன பண்ணனும்"

"ஆகாஷனா- என்னப்பா பொண்ணு பேருல ஒருத்தன் வந்து ஹெல்ப்னு சொன்னதும் உடனே பண்றேன்னு சொல்ரீங்க.நான் யாருன்னே தெரியாது"

"கரு-அய்யோ ரொம்ப பண்ண வேணாம்.நீங்க ஆம்பளயா இருந்தா என்ன,இல்ல பொண்ணா இருந்தா என்ன.எனக்கு எல்லாமே ஒன்னுதான்.என்னோட லோயல் ரீடர்.அவ்வளவுதான்.சரி உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்"

"ஆகாஷனா- இல்லை உங்க கூட வேற யாரும் பொண்ணுங்க பேசினா என்கிட்ட சொல்லனும் .முடியுமா?"

"கரு-என்னங்க இப்படி கேட்குறீங்க.ஆன்லைன்ல இருக்குற ஆளுங்க கிட்ட நீங்க இப்படி கேட்டா உங்கள பத்தி என்ன நினைப்பாங்கன்னு யோசிக்காம இப்படி கேட்குறீங்களே?"

"ஆகாஷனா- ஹேய் சாரி கரு.என்ன தப்பா நினைக்க வேணாம்.எனக்கும் என் ப்ரெண்டுக்கும் ஒரு பெட்.நானும் வாட்பெட்ல இருக்கேன்.அவளும் வாட்பெட்ல இருக்கா.,, ஆனா என் ஐடி அவளுக்கோ இல்ல அவ ஐடி எனக்கோ தெரியாது.எங்கள்ள யாரு முதல்ல அடுத்த ஆள கண்டுபிடிக்கின்றதுன்னு ஒரு கேம்"

"கரு-சரி இதுல நான் எப்படிங்க ஹெல்ப் பண்ண"

"ஆகாஷனா-அது என்னன்னா வாட்பெட்டுக்கு அவ புதுசு.சோ அவ followers கம்மியாத்தான் இருக்கும்.இப்போ என் followers ஜஸ்ட் 10 பேருதான் இருக்கும்.கண்டிப்பா அவளுக்கும் அப்படித்தான் இருக்கும்.இதுல முக்கியமான விசயம் என்னன்னா அவ உங்க ஸ்டோரி படிக்கிறா.சோ கண்டிப்பா உங்க ஸ்டோரிக்கு வோட் இல்லைன்னா காமண்ட்ஸ் பண்ணும் போது கொஞ்சம் பார்த்து அப்படி புதுசா இருக்குற ஐடி பெயர் லிஸ்ட்ட எனக்கு குடுக்க முடியுமா"

"கரு- என்னங்க எனக்கு வேற வேல இல்லைன்னு நினைச்சீங்களா"

"ஆகாஷனா-என்னங்க இப்படி சொல்ரீங்க.உங்களோட முதல் வாசகி நாந்தானே.எனக்கு இந்த ஒரு ஹெல்ப் கூட பண்ண முடியாதா"

"கரு-சரிங்க பண்றேன் .ஆனா உங்களோட நிஜ பேர எனக்கு சொல்லனும்"

"ஆகாஷனா-பார்த்தீங்களா உங்கள ஒரு நல்ல மனிதர்னு நினைச்சு பேசினா எல்லா பசங்கள போலவும் கடலை போட ஸ்டார்ட் பண்றீங்க"

"கரு-அய்யோ அப்படிலாம் இல்லைங்க,உங்க அட்றஸ் ,நம்பர் எதுவுமே வேணாம்.ஜஸ்ட் பேரு மட்டும் சொல்லுங்க"

"ஆகாஷனா-சரி சொல்ரேன்,ஆனா முழுசா சொல்லாம ஒரு க்ளூ வெச்சி சொல்ரேன்.எங்க நீங்க கண்டுபிடிக்கிறீங்களான்னு பார்க்கலாம்"

"கரு-சரி சொல்லுங்க"

5 நிமிடமாக பதில் வராலம் போக

"கரு -ஹலோ இருக்கீங்களா.நான் அப்படி ஒன்னும் தப்பா நினைச்சி கேட்கலைங்க.சாரி அப்படி கேட்டதுக்கு.ப்ளீஸ் பேசுங்க"

மேலும் 10 நிமிடம் கழித்து

"கரு-ஐ அம் வெரி வெரி சாரிங்க.நான் உங்கள ஆகாஷனான்னே சொல்ரேன்.இனிமே பேரு எல்லாம் கேட்கல.ப்ளீஸ் கோச்சுக்காதீங்க"

"கரு-ஹல்லோ இருக்கீங்களா.ப்ளீஸ் பேசுங்க"

இப்படி எத்தனை மெசேஜ் அனுப்பியும் மறுமுனையில் இருந்து பதில் வரவில்லை.
..........................................

குட்டி தங்கை
priyadharshini12  "தாலாட்டும் சங்கீதம்" சூப்பரா இருக்குப்பா.ஒரு கைதேர்ந்த எழுத்தாளினி போல அவரது ஒவ்வொரு எழுத்துக்களும் அவ்வளவு அழகாக உள்ளது.எல்லோரும் படிக்கலாம்.

dharshinichimba  அக்காவின் "கரையும் காதலனே" செம்மயாக உள்ளது.ஒரு வித்தியாசமான கதைக்கரு.அக்காவை பற்றி நான் அறிமுகம் செய்ய தேவை இல்லை .இருந்தாலும் படிக்காத யாரும் இருந்தாள் படியுங்கள்.

zeeraf  இன் "உனக்கே உயிரானேன்" நான் இன்னும் படிக்கவில்லை.இருந்தாலும் அது சூப்பரா இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் .நல்ல கதை வேண்டும் என்பவர்கள் இந்த 3 பேருடைய கதைகளையும் பயமில்லாமல் படிக்கலாம்.
உங்கள் திருப்திக்கு நான் உத்தரவாதம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro