கற்பனை 32
(நந்தினியின் மொபைலில் இருந்த கீறலை ஞாபகம் வைத்திருந்த aathi1995 க்கு நன்றிகள்.மேலும் என் கதை ஓட்டம்இப்படித்தான் இருக்கும் என்று வாசகர்கள் கூறும் போது அடையும் சந்தோசத்திற்கு ஈடு வேறு எதுவுமில்லை.எனக்கென்று ஒரு தனியான கதை கூறும் வழியை ஏற்படுத்திக்கொண்டுள்ளேன் என்பதை நினைக்கும் மிகவும் சந்தோசமாக உள்ளது)
கதிரை அழைத்துவர சென்ற சுமன் அவனைக்கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து
"மச்சி உனக்கு பெரிய ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்னான்னு சொல்லு பார்க்கலாம்?" என்று கேட்க அவனோ எரிச்சலுடன்
"என்ன நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறியா?" என்றவனை முறைத்தவன்
"ஏன்டா இவகிட்ட என்ன போட்டுக்கொடுக்குறதுலயே இரு, அதில்லடா உன் வாழ்க்கைல நீ ரொம்பவும் எதிர்பார்த்த ஒன்னு. நீ உனக்கு வேணும்னு ரொம்ப ஆசைப்பட்ட ஒன்னு உனக்காக ஐய்யா ரொம்ப கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சிருகேன்" என்றவனை வீணா முறைக்க
"சரி சரி நான் கண்டுபிடிக்கல நாங்கல்லாம் சேர்ந்து கண்டுபிடிச்சிருக்கோம்"என்று கூற உடனே கதிர்
"டேய் கண்டுபிடிச்சிருக்கேன்னா யு மீன் ஆகாஷனா"என்றவனை இறுக்கி அனைத்தவன்
"யெஸ்டா, அவள கண்டுபிடிச்சாச்சு. சாரி அவங்கள கண்டுபிடிச்சாச்சு" என்று கூற கதிர் சந்தேகமாக பார்க்க வீணா
"உனக்கு சந்தேகமே வேணாம் கதிர் நிஜமாவே ஆகாஷனாவ கண்டுபிடிச்சாச்சி.உன்ன ரிசீவ் பண்ண அவளையும் நாங்க ஏர்போர்ட்க்கு கூட்டிட்டு வந்திருக்கோம். அப்புறம் அவளுக்கு கல்யாணாம்லாம் ஆகலை. சோ உன் ரூட்டு இனி க்ளியர்" என்று கூற சுமன் வீணாவுக்கு மட்டும் கேட்கும் விதமாக
"ஏண்டி கல்யாணம் ஆகலன்னு சொன்ன"என்று கூற அவளும்
"இல்லடா கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருக்கட்டும்னுதான் அப்படி சொன்னேன். பிகாஸ் ஆல்ரெடி கல்யாணமாகி டிவோர்ஸ் பண்ணிக்க இருக்கான்னு சொன்னா சப்போஸ் அவன் அது நந்தினின்னு கண்டுபிடிச்சிடலாம்.சோ சாருக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்" என்றவளை சுமனும் சரி என்று கூறி கதிரின் கண்களை துணி கொண்டு கட்ட முயல
"டேய் என்னடா பண்ற"என்று கதிர் கேட்க
"நீ கொஞ்சம் வாய மூடு. இன்னைக்கு ஒரு நாளாச்சும் நான் சொல்றத கேளு"என்று கூறி அவனின் கண்களை கட்டி நந்தினி, மற்றும் சந்தியாவை விட்டு சென்ற இடத்துக்கு அவனை மெதுவாக அழைத்து வந்தனர். கதிரின் முகத்தை பார்த்த சுமனுக்கு அவன் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை அவன் என்றுமே கண்டதில்லை. வீணாவிடம் கண்களால் கதிரின் முகத்தை காட்ட அவளும் அவன் கூற வருவது புரிந்து புன்னகைத்தால்.
------------------------------------
"நீ இந்த கிப்ட்ட நந்தினிக்கு கொடுக்காத சந்தியா. அப்புறம் என்னைக்காச்சும் ஒரு நாளைக்கு அவ உன்ன வெறுக்குற மாதிரி ஆகிடும் "என்று கூற சந்தியா எதனால் ராஜீவ் அப்படி கூறுகின்றான் என்று புரியாமல அவனை கேள்வியாக நோக்க
"நான் என்ன சொல்ல வரேன்னு புரியலயா?"என்று கூறி கிப்ட் பாக்சில் இருந்த மொபைலை எடுத்தவன் சந்தியாவின் கைகளை பிடித்து மொபைலை அன்லாக் செய்தவன் செல்பி கேமராவை ஆன் செய்து அதில் போட்டோ எடுக்க அவள் அதிர்ச்சி ஆனால்.
"நந்தினி மொபைல்ல செல்பி கேமரா இருக்குற இடத்துல ஒரு கீறல் இருக்கும்.அதனால அவ மொபைல்ல செல்பி எடுக்க முடியாது.எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்ச உனக்கு அது மறந்துடிச்சு பார்த்தியா" என்று கேட்டவனை சந்தியா ஏதோ கூற வர அவன்
"இதுக்கு மேலயும் ஏதும் பொய் சொன்னா அப்புறம் என்ன மனிசனாவே பார்க்க மாட்ட சொல்லிட்டேன்"என்று கூறியவனை கண்கள் கலங்க அவள்
"ராஜீவ் உன் கால்ல விழுந்து வேணா கெஞ்சி கேட்டுக்கிறேன் தயவு செஞ்சி இத நந்தினிகிட்ட சொல்லிடாதடா பளீஸ்" என்றவளை அவன்
"ஏண்டி இப்படி பண்ண, நீ பண்ண இருந்த காரியத்தினால நந்தினி, கதிர், அப்புறம் என்னோடாதையும் சேர்த்து மூனு பேரு வாழ்க்கையையும் நாசமாக்க பார்த்தியே" என்று கூற அவள்
"நான் எங்கடா நாசமாக்க பார்த்தேன். அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கத்தான் பார்த்தேன்" என்றவளை அவன்
"ஆமா கிழிச்ச, நாளைக்கே நந்தினிக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்து அவ ஆகாஷனா இல்லைன்னு தெரிய வந்தா அவ மனசு எவ்வளவு வேதனைப்படும்னு நினைச்சிப்பார்க்கலயா?" என்று கேட்டவனை அவளால் எந்த பதிலும் கூற முடியவில்லை. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருந்தது.
அவளது அமைதியை தனக்கு சாதகமாக்க முயன்ற ராஜீவ்
"இங்க பாரு சந்தியா நீ உண்மைய சொன்னா நம்ம எல்லோரோட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும். கதிர் கண்டிப்பா உன்ன ஏத்துக்குவாரு. ஏன்னா முகம் தெரியாம அவரு பெயரை மட்டுமே வெச்சி உன்ன மனசுல நினைச்சிருக்காரு" என்று கூற கோபம் கொண்ட சந்தியா
"சட் அப் ராஜீவ், கதிருக்கு என்மேல வந்ததுக்கு பேரு காதலா? சொல்றதுக்கே காமெடியா இல்லை.அப்படியே அது காதலா இருந்தாலும் என் முகத்த பார்த்தும் அவரு என்ன தங்கச்சின்னுதான் கூப்பிடப்போறாரு. அவரு என்ன உங்க ஆண்வர்க்கமே அப்படித்தானே. நீ மட்டும் இப்ப என் வாழ்க்கை நல்லா இருக்கனும்னா பேசுற. இல்லையே உனக்கு நீ காதலிச்ச நந்தினி கிடைக்கனும் அதுக்குதானே இவ்வளவும் பண்ற" என்று கூற சந்தியா சரியான இடத்தில் அவனை அடித்ததும் அவனால் பதில் எதுவும் கூற முடியவில்லை. இருந்தாலும் இதுதான் தனக்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் என்று அறிந்தவன்
"இங்க பாரு சந்தியா, நீ என்ன பத்தி என்ன வேணாலும் சொல்லிக்க. சரி நான் சுய நலவாதியாவே இருந்துக்கிறேன். ஆனா நீ பண்ண போற காரியத்தினால நாளைக்கு ஒரு வேலை நந்தினிக்கு பழைய ஞாபகங்கள் வந்தா அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் இன்னும் மோசமாத்தான் ஆகும். அத ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற?" என்று கூற இப்பொழுது சந்தியாவால் பதில் எதுவும் கூற முடியவில்லை.இதை தனக்கு சாதகமாக மாற்ற எண்ணிய ராஜீவ்
"உனக்கு ஒரு கால் இல்லை, உன் முகத்துல தழும்பு இருக்கு இது ரெண்டும்தான் உனக்கு இப்போ கதிர ஏத்துக்குறதுக்கு தடையா இருக்குன்னா என்னால ப்ராமிஸ்ஸா சொல்லமுடியும் கண்டிப்பா கதிர் உன்ன நீ இப்போ இருக்குற மாதிரியே ஏத்துக்குவாருன்னு" என்று கூற இவர்கள் இருவரும் பேசிய எதுவும் தெரியாத கதிர் கடைசியில் ராஜீவ் கூறியது மட்டுமே அவனின் காதுகளில் விழ தன் கண் கட்டை அவிழ்த்தவன் சந்தியாவின் அருகில் சென்று அவளின் இடது காலில் பொருத்தியிருந்த பொய்க்காலை தட்டிவிட்டு தடுமாறி விழப்போனவளை தன் கைகளில் தாங்கிக்கொண்டவன்
"நீ எப்படி இருந்தாலும் எனக்கு பரவாயில்லை. என் கூட சேர்ந்து வாழ உனக்கு சம்மதமா?" என்று கேட்டவனை அவள் பதில் கூறும் முன்பே அவன் இறுக்கி அனைத்துக்கொண்டான். கதிரை அழைத்து வந்த சுமனும் வீணாவும் என்ன நடக்கின்றது என்பது புரிவதற்கு சில நிமிடங்கள் ஆனது. சந்தியாவிடன் பேச ஆரம்பிக்கும் முன் நந்தினிக்கு கால் செய்து அதை அவன் கட் செய்யாமல் விட்டிருந்ததால் இங்கு நடந்த அனைத்தையும் கேட்ட நந்தினி அவ்விடத்துக்கு வந்து சேர கதிரின் கைகளில் சந்தியா இருப்பதை கண்டு சந்தோசமடைந்தால். ஏனென்றால் கதிரின் காதலாவது வெற்றி பெற்றதை எண்ணி..
நந்தினியை அங்கு கண்டதும் எல்லோருக்கும் என்ன் செய்வது என்று புரியாமல் முழிக்க ராஜீவ்,
"நந்தினிக்கு எல்லாமே தெரியும்.. சந்தியா கிட்ட பேச முன்னாடி அவளுக்கு நான் கால் பண்ணி நாங்க பேசின எல்லாத்தையும் கேட்க வெச்சிட்டேன்" என்று கூற இங்கு என்ன நடந்தது என்று புரியாமல் கதிர் முழிக்க ராஜீவ் நடந்த அனைத்தையும் கூறினான். ஆனால் சந்தியாவால் நந்தினியின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்திருக்க அவள் அருகில் வந்த நந்தினி
"உன்னைப்போய் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்னு நினைச்சேன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும். நாங்க எதனால பிரிஞ்சி போகிறோம்னு தெரிஞ்சும் நீ மறுபடி அதே தவற செஞ்ச பாரு உன்ன நான் என் ஆயுளுக்கும் மன்னிக்க மாட்டேன்" என்று கூற சந்தியாவுக்கு தான் செய்த தவறின் வீரியம் புரிய தொடங்கியது. அவளிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக சமாதானம் கூற வந்தவளை நந்தினி
"இங்க பாரு சந்தியா என் மேல உன் மனசுல கொஞ்சமாச்சும் பாசம் இருந்தா நீ கதிர எந்த ஒரு மறுப்பும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கணும்" என்று கூற சந்தியாவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்தால்.சரியான இடத்தில் நந்தினி தாக்க சந்தியாவால் எதுவும் பேச முடியவில்லை.
"அப்படி நீ கதிர கல்யாணம் பண்ணா அட்லீஸ்ட் உன் கல்யாணத்துக்காச்சும் நான் வருவேன் இல்லைன்னா என் சாவுக்கு கூட நீ வரக்கூடாது!!" என்று கூற அவளின் வாயை பொத்தியவள்
"சரி நான் கதிர கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா நீ ராஜீவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லனும்" என்று கூற சந்தியாவை எரிப்பது போல பார்த்தவள்
"ஏற்கனவே என்னோட பழச மறந்து நான் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள் போதும். எனக்கு பழசு எல்லாம் எப்போ ஞாபகம் வருதோ அப்போதான் இனிமே என் வாழ்க்கைய பத்தி யோசிப்பேன்!!" என்று கூற அங்கிருந்த யாராலும் எந்த பதிலும் கூற முடியவில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro