Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்பனை 21

"ஏண்டி இப்படி பண்ண.பாரு உங்கப்பா எப்படி தவிச்சி போய் இருக்காரு"என்று கூற நந்தினியை முறைத்தவள்

"என்னடி எதுக்கெடுத்தாலும் என்ன அடிக்கிற.இனிமே இந்த கை நீட்ற வேலை எல்லாம் வெச்சிக்காத.அது என் செல்லக்கட்டிக்கு மட்டும்தான்"என்று கூற

"எருமை முதல்ல நான் கேட்டதுக்கு பதில சொல்லு"என்றாள்.

"இங்க பாரு நந்தினி கடைசி மூனு நாளா இவங்கள கவனிச்சு பார்த்ததுல என் அம்மா அப்பாக்கிடையில ஒரு பினைப்பு உருவாகி இருக்கு.அத இன்னும் கொஞ்சம் ஸ்ட்றாங்கா போடலாம்னுதான் இப்படி ஒரு பிட்ட போட்டேன்"என்று கண்ணடிக்க

"சரி நீ பிட்ட போட்ட அது எப்படி அம்மாவும் அதே மாதிரி ரியாக்ட் பண்ணாங்க.அவங்களுக்குதான் சாதாரண முதுகுவலின்னு சொல்ர.அம்மாக்கு தெரியாம எப்படி ..."என்று இழுக்க

"அதெல்லாம் சிம்பிள்பா.டாக்டர்கிட்ட செக் பண்ண போகும் போதே நான் அவங்க கிட்ட எங்கம்மாவும் அப்பாவும் கொஞ்சம் சண்டைல இருக்காங்க.சோ நீங்க இப்படி ஒரு பொய்ய சொன்னா அவங்க ஒன்னு சேர்ந்துடுவாங்கன்னு சொன்னேன்.அதே போல அவங்களும் பண்ணிட்டாங்க.முதல்ல முடியாதுன்னுதான் சொன்னேன்.ஆனா டாக்டர் நம்ம ஆளா அதான் சொன்னதும் உடனே ஓக்கே சொல்லிட்டாங்க"என்றாள்.

"அப்போ நீ எந்த டாக்டர்கிட்டடி போன"என்று கேட்க அவள்

"எல்லாம் வீணா அம்மாகிட்டதான், வேற யார நமக்கு தெரியும்.என்னோட இந்த விளையாட்டுக்கு அவங்கதான் சரி"என்று கூற அவளை முறைத்தவள்

"சரி இப்போ உங்கம்மா அப்பாக்கு நீ சொன்னது பொய்யினு தெரிஞ்சா பெரிய ப்ராப்ளாம் ஆகிடாது "என்று கேள்வியாக கேட்டவளை

"ப்ராப்ளம்லாம் ஆகாது ஆனா" என்று இழுத்த சந்தியாவை சந்தேகமாக

"என்னடி ஆனா"என்று கேட்க

"இல்லப்பா ஒரு வேல அவங்க ராசியாகிட்டாங்கன்னா ஒரு வேல எனக்கு தங்கச்சி இல்லன்னா தம்பி பாப்பா வந்துடுமோன்னு பயமா இருக்கு"என்றவளை நந்தினி

"எருமை எருமை பேசுர பேச்ச பாரு.அம்மா அப்பா பத்தி இப்படித்தான் பேசுவியா"என்று கடிந்து கொள்ள

"அப்போ உங்கம்மா அப்பாவ பத்தி பேசினா ஓக்கேயாடி"என்று கண்ணடித்தவளை நந்தினி

"ஆமா அது என்ன இனிமே உன்ன அடிக்கிற உரிமை எல்லாம் எனக்கில்ல உன் செல்லத்துக்குத்தான்னு முன்னாடி சொன்ன.ஆமா யாருங்க மேடம் உங்களோட செல்லம்"என்று நக்கலாக கேட்டாள்.நந்தினியின் கேள்விக்கு சிறிது தடுமாறினாலும் சுதாகரித்து

"அது என் பாய்ப்ரெண்ட் நான் உனக்கு யாருன்னு சொல்லமாட்டேன் போடி"என்று கூற நந்தினி முகத்தை சோகமா வைத்துக்கொண்டு

"அப்போ என்ன கல்யாணம் பண்ணி யூஎஸ் கூட்டி போறேன்னு சொன்னதெல்லாம் பொய்யாடி.இப்படி ஏமாத்திட்டியே பக்கி.உன் மூலமா யூஎஸ் ஸ ப்ரீயா சுத்தலாம்னு இருந்தேன்.அதுல மண்ண அள்ளிப்போட்டுட்டியே" என்றவளை

"அட என் கன்னுக்குட்டிக்கு அப்போ நான் சொன்ன மேட்டர் ஓக்கேயா.வேணும்னா ஒன்னு பண்ணலாம்.முதல்ல என் பாய்ப்ரெண்ட நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்புறமா நீ பண்ணிக்க.அதுக்கு அப்புறமா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்.எல்லோரும் கூட்டுக்குடும்பமா வாழலாம்"என்றவளை

"என்ன பேசுர சந்தியா ,யாராச்சும் கேட்டுக்கிட்டு இருந்தா என்ன நினைப்பாங்க.இனிமே இப்படி மோசமா பேசின உன்கூட நான் பேசவே மாட்டேன்"என்று கூற சந்தியாவும் சிரித்துக்கொண்டு

"ஹேய் சும்மாதாம்பா சொன்னேன்.சரி சரி இனிமே இப்படிலாம் பேசல ஓக்கேயா"என்று கூற நந்தினி

"இல்லடி என்லைப்ல இருக்குற ஒரே ஒரு ஆசை எனக்கு ஹஸ்பண்டா வர போறவரு என்ன மட்டும்தான் லவ் பண்ணனும்னு நினைப்பேன்.வேற எந்த பொண்ணுக்கும் அவரு மனசுல இடம் இருக்கவும் கூடாது ,இருந்திருக்கவும் கூடாது. சின்ன வயசுல இருந்தே இது என்னோட வாழ்க்கை லட்சியம்னே சொல்லலாம்.ஆனா இந்த காலத்துக அப்படி ஒருத்தர என்னால அடைய முடியுமான்னு தெரியல.அப்படி அடைஞ்சா என்ன விட பெரிய பாக்கியசாலி யாருமே இருக்க மாட்டா"என்று உணர்ச்சி மேலிட கூறிய தன் தோழியை சந்தியா பெருமையாகவும் கவலையாகவும் பார்த்தவள்

"கண்டிப்பா உனக்கே உனக்குனு ஒருத்தன் வருவான்டி.நீ மட்டும்தான் அவன் மனசுல சிம்மாசனம் போட்டு இருக்க போற .இது நடக்கத்தான் போகுது.பொறுத்திருந்து பாரு"என்று கூறினால்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை வெளியில் வந்த சந்தியாவின் தாய் கேட்டதை இருவருமே அறியவில்லை.அறைக்குள் வந்தவர் கடந்த சில நாட்களாக தன் கணவர் தன்னிடம் எவ்வளவு அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கின்றார் என்பதை நினைக்கும் போது அவருக்கு கண்ணீர் வந்தது.ஒரு வேலை தனக்கு உடல் சுகமில்லாத காரணத்தினால்தான் அவர் தன்மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாரோ? தனக்கு உடலில் எந்த கோலாறும் இல்லை என்று தெரிந்தால் பழைய படி பட்டும் படாமலும் தங்கள் வாழ்க்கை ஆரம்பித்துவிடுமோ என்று மனதில் கவலை குடி கொண்டது.

குளித்துவிட்டு வெளியில் வந்த தன் கணவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த சந்தியாவின் தாய்

"ஏங்க உங்க கிட்ட முக்கியமா ஒரு விசயம் பேசனும்"என்றவரை அவரோ நெற்றி சுருங்க

"என்னம்மா உடம்புக்கு ஏதும் வருத்தமா இருக்கா.வேணும்னா தைலம் ஏதும் பூசிவிடட்டா"என்று கேட்டவரை இதுவரை காலமும் இருவரும் ஒருவரைவிட்டு மற்றவர் பிரிந்து தூரமாகிறோம் என்பது கூட தெரியாமல், வேலை வேலை என்று அதற்கு பின்னால் ஓடி தங்கள் வாழ்க்கையை இழக்க பார்த்திருக்கின்றோம் என்ற நினைப்பு அவரை கவலை வாட்டியது.தன் அருகில் வந்த தன் கணவரை

"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.முதல்ல நான் உங்க கிட்ட சாரி சொல்லனும்"என்றவரை சந்தியாவின் தந்தை வித்தியாசமாக பார்க்க அவரின் பார்வையில் இருந்த ஏக்கத்தை உணர்ந்த சந்தியாவின் தாய்

"அய்யோ முதல்ல இப்படி சோகமா இருக்குறத மாத்துங்க,பார்க்கவே சகிக்கல"என்றவர் சந்தியா செய்த அனைத்து தில்லு முல்லுகளையும் கூற முகம் மலர்ந்த அவர் தன் வயதையும் மறந்து தன் மனைவியின் உதடுகளை பேச விடாது செய்தார்.இதை சற்றும் எதிர்பார்க்காத சந்தியாவின் தாய்

"என்னங்க இப்படி பண்றீங்க.வெளிலதான் நம்ம பொண்ணுங்க நிக்குறாங்க"என்று கூற

"இவ்வளவு செஞ்ச நம்ம கேடி மகளுக்கு அம்மா அப்பாவ தனியா விட்டுட்டு போகனும்னு தெரியாமலா இருக்கும்"என்று கூறியவரை கட்டியனைத்துக்கொண்ட சந்தியாவின் தாய்

"ஏங்க நான் இனிமே வேலைக்கு போகல்லைங்க.இனிமே உங்கள மட்டுமே பார்த்துக்க போறேன்.வேலை வேலைன்னு ஓடி உங்க கூட நிம்மதியா மனசு விட்டு பேசினதே இல்ல.கரியர் என்று சொல்லி ஓடி ஓடி உங்கள இழக்க பார்த்துட்டேன்.இனிமே அந்த தப்ப நான் செய்ய மாட்டேன்"என்று கூற சந்தியாவின் தந்தை

"அப்படி இல்லடா இன்னும் 6 மாசத்துல உனக்கு ப்ரமோசன் இருக்குன்னு நீதானே சொன்ன.வேலைய விட்டா அத மிஸ் பண்ற மாதிரி ஆகிடுமே"என்று கூறியவரை

"அப்படி இல்லைங்க,எனக்கு கரியர்தான் முக்கியம்னு ஓடினதுல என் குடும்ப வாழ்க்கையையே இழக்க பார்த்திருக்கேன்.அதுக்காக வேலைக்கு போற எல்லா பொண்ணுங்களும் வீட்டுல உட்கார்ந்து குடும்பத்த பார்த்துக்கனும்னு சொல்லல.ஆனா என்னால ரெண்டையும் ஒரே நேரத்துல மேனேஜ் பண்ண தெரியாம தடுமாறி நம்ம லைப் டிவோர்ஸ் வரைக்கும் வர பார்த்திருக்கு.இனிமே இப்படி ஆக நான் விடமாட்டேன்"என்று கூறி தன் கணவனை இறுக்கி அனைத்தவர்

"கொஞ்சம் முதுகு வருத்தம் அதிகமாத்தான் இருக்கு,அது ஏதோ லாங்க் ஜேர்னியால வந்திருக்கலாம்.ஆனா அத வெச்சி உங்க ப்ராடு மகள் எப்படி ப்ளான் பண்ணிருக்கா பாருங்க.ஆனா அவ யோசிச்ச அளவுக்கு கூட நம்ம யோசிக்கலைங்க"என்று கூற சந்தியாவின் தந்தை

"நீ சொல்ரது நிஜம்தாண்டா ,அவள மகளா கிடைக்க நம்ம கொடுத்து வெச்சிருக்கனும்.அதுவும் அந்த நந்தினி பொண்ணுகூட எவ்வளவு அழகா நமக்கு வாழ்க்கைய பத்தி சொல்லிக்காட்டினா.அவ நமக்கு பிறகாதவளா இருந்தாலும் அவளும் நமக்கு பொண்ணுதாண்டா"என்று தன் கணவனை அனைத்தவாறே

"ஆமா உங்க பொண்ணு ஏதோ கேட்டாளே அத ஏற்பாடு பண்ணலாமா"என்று கண்சிமிட்டி கேட்க

"என்ன கேட்டா" என்று யோசித்தவர் உடனே தன் மனைவி எதைப்பற்றி பேசுகிறார் என்பது புரிந்து தன் மனைவியை நெருங்கி

"உனக்கு முதுகு வருத்தமா இருக்குன்னு சொன்னேல்ல.சோ உனக்கு குனமானதுக்கு பிறகு வெச்சிக்கலாம்"என்று கூற தன் மனைவியின் முகவாட்டத்தை கண்டவர் அவரை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டார்.

தன்னை இறுக்கி அணைத்துக்கொண்ட தன் கணவரை 

"இனி எப்போமே உங்க அனைப்புக்குள்ளேயே இருக்கனும்னு ஆசையா இருக்குங்க"என்று கூற இன்னும் இறுக்கமாக அவரை அனைத்துக்கொண்டார்.யார் கூறியது இள வயதினருக்கே காதல் அதிகம் என்று.இங்கு அவர்களை மிஞ்சும் வகையில் ஒரு ரொமான்ஸ் மூவி ஓடிக்கொண்டிருந்தது.

"என்னங்க நந்தினியோட படிப்பு முடிஞ்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாமா?" என்று கேட்ட தன் மனைவியை அவர்

"இல்லம்மா அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கனும்ல.சோ அவகிட்ட பேசிட்டு அப்புறமா முடிவெடுக்கலாம்"என்று கூற அவளின் தாய்

"அவ நம்ம பொண்ணுங்க அப்படி ஏதும் பண்ண மாட்டா"என்றவரை சிரிதுக்கொண்டவர்

"இதுதான்மா நிறைய பேரண்ட்ஸ் பண்ற தப்பு.தங்களோட பசங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க நினைக்காம நம்ம பசங்க நம்ம சொல்ரத மீறி எதுவும் பண்ணிட மாட்டாங்க என்ற அதீத நம்பிக்கை.அது ரொம்ப தப்புடா.அவகளுக்கும் மனசில ஆசைகள் இருக்கும்.நம்ம அதுக்கு எப்போமே தடையா இருக்க கூடாது.நல்லதா இருந்தா அதை அப்படியே ஏத்துக்கனும்"என்று கூற அவளின் தாய்

"நீங்க சொல்ரது சரிதான் .ஆனா உங்க பொண்ணுக்கு அவ மனசில ஏதும் இல்லைன்னா உங்க தங்கச்சி மகனுக்கே அவள் கட்டி வெச்சிடலாம் சரியா"என்று கேட்க அவரும் சரி என்றார்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro