Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்பனை 10

பதிவிட்ட பத்து செக்கனில் சட சட வென்று ஐந்து வோட்கள் வர சந்தோசமான கதிர் அடுத்த எபிசோடை எழுத தயாரனான்.ஆனால்‌ ஆகாஷனாவின் வோட் மட்டும் வரவில்லை.

----------
"ஹேய் நந்தினி அங்க பாரேன் ராஜீவ் உன்னையே வெச்ச கண் வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கான்.என்னடி எனக்கு தெரியாம ஏதும் ரொமான்ஸா" என்று கேட்க எங்கோ பார்த்துக்கொண்டிருந்த நந்தினி திடீரென்று ராஜீவை பார்க்க தடுமாறியவன் உடனே அவளை பார்க்காதவாறு இருந்தான்.அவனின் தவிப்பையும் தடுமாற்றத்தையும் கண்ட சந்தியா

"என்னடி சார் ரொம்பதான் வழியிறாரு.என்ன மேட்டர்" என்று கேட்க எதுவும் பேசாமல் புன்ன்கைத்த நந்தினி அமைதியாக இருக்க சந்தியா

"மவளே இப்ப சொல்லல சத்தம் போட்டு ராஜீவ கூப்பிட்றுவேன் "என்றவளை நந்தினியோ நக்கலாக

"முடிஞ்சா அத பண்ணுடி பக்கி" என்று கலாய்க்க கோபத்தில் சந்தியா சத்தமிட்டு

"ராஜீவ் ,நந்தினி உங்க கிட்ட ஏதோ பேசனுமாம்.கொஞ்சம் வரீங்களா" என்று கத்த பொறியில் அகப்பட்ட எலி போல முழித்த நந்தினியை பார்க்க சகிக்காமல் மெதுவாக

"என்னடி என்னயா கலாய்ச்ச ,ஹீரோ சார் வருவாரு.நல்லா மாட்டிக்கிட்டு முழி.நான் எஸ்கேப் ஆகப்போறேன் " என்றவளை நந்தினி பயப்பட்டவளை போல்

"ஹேய் சந்தியா ஏன்டி இப்படி பண்ணிட்ட. ஹேய் நீ வேற என்ன கோர்த்துவிட்டுட்டு போக போறேன்னு சொல்ர.தனியா விட்டுட்டு போகாதடி " என்று கெஞ்சியவளை சந்தியா பாவம் என்று நினைத்து அவளுக்கு உதவியாக அங்கேயே நிற்க சம்மதிதித்தாள்.

உடனே அவர்கள் அருகில் வந்த ராஜீவ்

"ஹாய் நந்தினி, முடிஞ்சதா?" என்று கேட்க அவளும்

"ஆஹ் முடிஞ்சது ராஜீவ்.இது லாஸ்ட் இயர் நான் பண்ண அசைன்மன்ட கொஞ்சம் மாத்தி எழுதிருக்கேன்.பயமில்லாம சப்மிட் பண்ணுங்க" என்று கூற இங்கு என்ன நடக்கின்றது புரியாமல் குழம்பிக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்து நந்தினி

"மீட் மை ப்ரெண்ட் சந்தியா" என்று கூற அவனும் சிரித்துக்கொண்டு

"இவங்கள தெரியாதவங்க இருக்க முடியுமா.இவங்கதான் லேடி டான் ஆச்சே.காலேஜ்ல எல்லோரையும் பேசியே கொன்னுடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்" என்று கூற அவனை முறைத்த சந்தியா

"ஹேய் ஸ்டாப் இட் யா. நான் ஏதோ இவள கலாய்க்கலாம்னு உன்ன கூப்பிட்டா உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே பழக்கம் இருக்குறாப்போல பேசிக்கிறீங்க " என்று எகிறியவளை நந்தினி

"நல்லா பழக்கம் இருக்கு மேடம். ராஜீவ்கு சைக்கோலோஜி சம்பந்தமா ஒரு அசைன்மன்ட் இருக்காம்.அதுக்கு என்கிட்ட ஹெல்ப் கேட்டாரு.நான் லாஸ்ட் இயர் பண்ண அசைன்ம்ன்ட கொஞ்சம் மாத்தி அவருக்கு கொடுத்திருக்கேன்"என்றவளை சந்தியா

"ஹேய் இரு இரு, இவரு படிக்கிறது கம்ப்யூட்டர் எஞ்சினியரிங்.இவருக்கு எதுக்கு சைக்கோலோஜி சம்பந்தமான அசைன்மன்ட்.என்ன மறுபடியும் என்னை கலாய்க்குறியா " என்றவளை இப்போது ராஜீவ்

"ஹேய் கூல் சந்தியா. எங்க டிபார்ட்மன்ட்ல ஸ்ட்ரெஸ் மெனேஜ்மன்ட்கு ஒரு சப்ஜக்ட் இருக்கு.அதுக்குதான் இந்த அசைன்மன்ட்.இப்போலாம் அதிகமா ஸ்ட்ரெஸ் ஆகுறது ஐடில இருக்குறவங்கதானே?" என்று கூற சந்தியாவோ

"ஆமாமா படிக்கிறப்போ அரை லூசா சுத்துங்க.வேலைக்கு போனதுக்கு அப்புறம், முழு லூசா ஆகிடுங்க.பேசாம எல்லா ஐடி ஆளுங்களுக்கும் எங்கள மாதிரி சைக்கோலஜி படிச்ச பொண்டாட்டி கிடைச்சா ஈசியா இருக்கும்ல" என்று சாதரானமாக கேட்க இங்கு நந்தினிக்கோ தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.நந்தினி அசடு வழிவதைக்கண்டு சந்தியா

"என்னடி இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்க" என்று கேட்க நிலமை கொஞ்சம் சங்கடமாவதை உணர்ந்த ராஜீவ்

"ஓகே கேர்ல்ஸ் ,எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.இந்த அனசைன்மண்ட வேற க்ராஸ் செக் பண்ணி சப்மிட் பண்ணனும் " என்று கூற அவனை முறைத்த நந்தினி

"ஓஹ் சூப்பர் சார் , நாங்க கஷ்டப்பட்டு உங்களுக்கு அசைன்மண்ட செஞ்சி கொடுத்தா நீங்க அதுல குறை கண்டுபிடிக்க டிரை பண்றீங்களா சார்.இந்த ஐடி பசங்களே இப்படித்தாம்பா" என்று கூற அசடு வழிந்த ராஜீவ் நந்தினியை முகத்தை உற்று நோக்க அவள் முகத்தில் இருந்து  எந்த மனநிலையில் அவள் கூறினால் என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை .இருந்தாலும் தன் முகத்தை பாவமாக அவன் வைத்துக்கொள்ள அதை பார்த்து சிரித்த நந்தினி

"சரி சரி ரொம்பல்லாம் முகத்த பாவமா வெச்சிக்க வேணாம்.போய் அசைன்மண்ட சப்மிட் பண்ற வழிய பாருங்க" என்று கூறினால்.அவனும் அவர்களிடம் இருந்து விடைபெற சந்தியாவோ

"ஆமா நான் சொன்னது கரக்ட்தானேடி ,இந்த ஐடி மங்கூஸ் மண்டையனுங்க என்னமோ உலகத்துலயே இவனுங்கதான் பெரிய அப்பாடாக்கர் என்ற மாதிரி சுத்துவானங்க .ஆனா பார்த்தின்னா அவனுங்களுக்குதான் ரொம்ப ஸ்ட்றெஸ் இருக்கும்.அப்புறம் இவனுங்க ஜாப்தான் ரொம்ப ரொம்ப அன் செகியூர்.எப்போ வேலை போகும்னு சொல்லவே முடியாது.இப்ப சொல்லுடி நான் சொன்னது சரிதானே" என்று அங்கலாய்த்தவளை நந்தினி தலையில் அடித்துக்கொண்டு

"அடியே நீ தெரிஞ்சி பேசுறியா இல்ல தெரியாம பேசுறியா.நீ சொன்னதெல்லாம் கரக்ட்தான் ,ஆனா அத நம்ம சொல்ல கூடாதுடி.இப்போ நீ சைக்கோலோஜி படிச்ச ஒருத்தங்கள ராஜீவ் கல்யானம் பண்ணிக்கிட்டா ஈசியா இருக்கும்னு சொன்னியே. நம்ம ரெண்டு பேரு கூட சைக்கோலோஜிதான் படிக்கிறோம்.அவரு நம்மல பத்தி என்ன நினைச்சிருப்பாரு.ஒரே இயர்தான் படிக்கிறோம்.ஆனா ராஜீவ் இந்த மூனு வருசத்துல நம்ம கிட்ட வந்து எதுவுமே பேசினதில்ல.ஏன் காலேஜ்ல வேற பொண்ணுங்க கிட்ட கூட அதிகமா பேசினது இல்ல.என் கிட்டதான் ஏதோ ஹெல்ப்னு கேட்டாரு.இப்படி இருந்தவருகிட்ட நீ அப்படி கேட்டா நம்மள பத்தி என்னடி நினைப்பாரு" என்று ஆதங்கப்பட்ட தன் தோழி நந்தினியை ஆச்சர்யமாக பார்த்த சந்தியா

"சரி நந்தினி நீ சொல்ரது கரக்ட்தான்.ஆனா இங்க எனக்கு ஒரு மேட்டர் இடிக்குதே.நீ இப்படி மத்த பசங்க நம்மள என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கிற ஆளு இல்லையே.இது என்ன புதுசா இருக்கு.ஏய் என்னடி எனக்க்கு தெரியாம ஏதும் மேட்டரா" என்றவளை முகத்தில் எவ்வித ரியாக்சனும் காட்டாமல்

"ஏய் என்னடி ரொம்ப ஓட்டுற.அவரே பாவம்.நீ இப்படி பேசினதுக்கு வேற பசங்களா இருந்தா இன்னேரத்துக்கும் செம்மயா கடல போட்டு நம்ம கூட flirt பண்ணிருப்பாங்க.அவரு அப்படி எதுவுமே பண்ணாம எப்படிடா எஸ்கேப் ஆகலாம்னு யோசிச்சி எஸ் ஆகிட்டாரு.பாவம்டி அவரு" என்று கூற சந்தியாவோ

"ரொம்பதாண்டி பாவம் பார்க்குற.எனக்கு என்னமோ உன்மேல கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு" என்று கூற அவளை பார்த்து நந்தினி புன்ன்கைக்க அதில் காண்டாகிய சந்தியா

"ஹேய் இதுக்கும் ஒரு சிரிப்பா.உன்ன......"என்று அடிக்க கை ஓங்க சந்தியாவின் மொபைல் அலறியது. தனது மொபைலை எடுத்தவள் யாரென்று பார்க்க அதில் அவளது தாய் அழைத்திருந்தார்.உடனே காலை அட்டண்ட் செய்தவள்

"ஹாய் மாம், எப்படி இருக்கீங்க" என்று கேட்க மறுமினையில்

"ஹேய் சந்து குட்டி, நாங்க சூப்பரா இருக்கோம்டா. நெக்ஸ்ட் வீக் நானும் அப்பாவும் இண்டியா வரோம்.ஒரு மாதம் அங்க தங்கியிருப்போம்.அத சொல்லத்தான் கால் பண்ணேண்டா" என்று கூற சந்தியா

"ஓக்கே மாம், சரி எங்க ஸ்டே பண்ண போறீங்க" என்று கேட்க மறுமுனையில்

"அது இன்னும் டிசைட் பண்ணலடா.ஏதும் நல்ல வீடு இருந்தா பார்த்து வை. ஒரு மாசத்துக்கு வாடகைக்கு எடுத்துக்கலாம்" என்று கூற

"சரி மம்மி டன்.நான் பார்த்துக்கிறேன் .யூ டோண்ட் வோரி"என்று கூறி காலை கட் செய்தாள்.

"ஹேய் என்னடி யாரு வர்ரா,அம்மாவா?" என்று கேட்க சந்தியாவோ எதையோ யோசித்துக்கொண்டு

"ஹ்ம்ம் ஆமாடி வர்ராங்க.ஒரு மாதம் தங்க போறாங்களாம்.இடம் ஒன்னு பார்க்க சொன்னாங்க.அதான் யோசிக்கிறேன் என்ன பண்ணலாம்னு" என்று கூற சிறிது யோசித்த நந்தினி

"சரி இன்னும் ஒரு வாரம் இருக்கே.பார்த்துக்கலாம் ப்ரீயா விடு" என்று சமாதானம் செய்த நந்தினியை

"ஹ்ம்ம் சரி பார்க்கலாம் .ஒரு மூனு நாள் நம்ம தேடி பார்க்கலாம்.இல்லைன்னா யாரச்சும் ப்ரோக்கர்கிட்ட சொல்லிடலாம்" என்றவளை நந்தினியும் "சரி " என்றால்.

நந்தினியிடம் அசைன்மண்டை வாங்கி வந்த ராஜீவ்கு இருப்புக்கொள்ளவில்லை.பல நாட்களாக அவன் நந்தினியிடம்
பேச வேண்டும் பழக வேண்டும் என்றிருந்தவனுக்கு அவளிடம் பேச கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டான்.அவன் கையில் நந்தினி கொடுத்த அசைன்மண்டை வைத்து பார்த்துக்கொண்டிருக்க அங்கு வந்த அவனின் நண்பன் அரசு

"மச்சி ,என்னடா கைல ஏதோ வேர்ல்ட் கப் கிடைச்ச மாதிரி ஏதோ ஒரு பேப்ப்ர வெச்சி பெருமையா பார்த்துக்கிட்டு இருக்க" என்று கேட்க ராஜீவோ

"டேய் இன்னைக்கு நான் நந்தினிகிட்ட பேசி அவகிட்ட இருந்து இந்த அசைன்மண்ட்ட வாங்கிட்டேன்.3 வருச தவம் இன்னைக்குதான் வரமாகி இருக்கு" என்று கூற அரசோ

"தம்பி ரைமிங்க்லாம் நல்லாதான் இருக்கு.ஆனா உன் டைமிங்க்தான் சரியில்லை.இருக்குறதோ இன்னும் 3 மாசம்தான்.அதுக்குள்ள உன் காதல அவகிட்ட சொல்லிடு.அவ வேற அம்மா அப்பா சொல்ர பேச்ச தட்டமாட்டா.சோ டேண்ட் வேஸ்ட் யுவர் ரிமைனிங்க் டைம்.எதுவா இருந்தாலும் சட்டு புட்டுனு பண்ணு " என்று கூற ராஜீவும் சரி என்று தலை அசைத்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro