பிடிக்கலையா?
அலாரம் 7.30amகு அடித்தபோது அதை அமத்த விரல்கள் தலையணையின் ஓரத்தைத் தடவின. Snooze பட்டனை அமுக்கிவிட்டு திரும்பி படுத்தால் அவளின் கூந்தல் மயில் தோகைப்போல் விரிந்து படர்ந்திருந்தது என் மாரில். அவளின் கதகதப்பு சில்லென்ற குளிர்காலையில் இதமாய் அரவணைத்தது. பெருமூச்சுடன் அவளை நெருக்கி கட்டியணைத்ததும் தான் தோன்றியது, "அவளுக்கு ஆபீஸ்கு லேட் ஆச்சே."
தோளைத் தட்டி எழுப்பியபோது "நான் நாளைக்கு ஆபீஸ் போய்க்கிறேன்" என்று பதிலளித்துவிட்டு நித்திரையில் மூழ்கினாள். நான் எழுந்து ஜன்னலின் திரையை நீக்கியதும் கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் விரல் பட்டதும் நாணும் தொட்டாச்சிவிங்கி செடிபோல போர்வையை இழுத்து போர்த்தினாள். அவளின் செயல்களை ரசிக்கும் பொறுமை இல்லை எனக்கு விடியற்காலை வேளையில் ஆனாலும் வாயைத் திறக்காமல் பாத்ரூமுக்குள் நுழைந்தேன். குளித்துவிட்டு வெளியில் வந்தால் போர்வையை நெஞ்சோடு அணைத்து மெத்தையில் உட்கார்ந்திருந்தாள் யோசனையுடன்.
"நானும் கிளம்பி வர்றேன், வெயிட் பண்ணுங்கன்னு சொன்னா கோச்சுக்குவீங்களா?" கன்னத்தில் கைவைத்து தலையை ஒரு பக்கமாக சாய்த்து கேட்டாள்.
"கொஞ்சம்."
"அப்போ ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு குதித்தோடினாள். பிறகு, லேப்டாப் bagஐ தூக்கும்போது அருகில் ஒரு லஞ்ச் bagஐயும் வைத்தாள். "உங்களுக்கும் உங்க colleagueக்கும்". முன் கோபப்பட்டாலும் வாயைத் திறக்காமல் இருந்தது இப்போது பலனைத் தந்தது. இந்த அவசரத்திலும் அலட்டிக்கொள்ளாமல் நியாபகம் வைத்து நான் கேட்டதால் சமைத்து கொண்டுவந்ததற்கு இன்னும் சிறிது நேரம் காத்திருந்திருக்கலாம் அவளை நச்சரிக்காமல்.
அவளை metro station இல் இறக்கிவிட்டு என் ஆபீஸ் செல்லும் பாதை வரை சிறு புன்னகை இதழின் ஓரம் ஒளிர்த்தது. ஆபீஸ்வேலை முன்பைவிட இப்போது சற்று மெதுவாகவே சென்றது நானும் நித்தினும் புதிய schemeகளை வடிவமைக்கும் வரை. ஆனால் எனக்கும் நித்தினுக்கும் அதற்கு மாறாய் இருந்தது. மதிய நேரம் வந்ததும் வெளியில் சாப்பிட செல்ல எத்தனித்த நித்தினை வழியிலேயே நிறுத்தி கான்டீன்கு அழைத்து வந்தேன். நானும் நித்தினும் அமர்ந்தபோது எங்களை லாவண்யா அணுகினாள். departmentஇல் ஒருத்தராய் எங்களோடு அவள் சாப்பிட அமர்ந்ததை பெரிய விஷயமாக நான் பொருட்படுத்தவில்லை. உணவை மனமார பாராட்டிவிட்டு என்னுடன் கலகலப்பாகப் பேசிய நித்தின் மீண்டும் வேலையைத் தொடங்க எழுந்தபோது, "மித்திரன், இனிமேல் உன் வைப் ஐ எனக்காக சமைக்க சொல்லாதீங்க."
முகத்தில் அறைந்தது போல் இருந்தது ஒரு கணம், "ஏன்? நீ வெளிய சாப்பிடும்போது அங்க உள்ளவங்க வேடிக்கையா பார்க்குறது நல்லாவா இருக்கு?"
"அது எனக்கு பழக்கப்பட்டது தான். ஆனால் இன்னொருத்தவங்க நமக்காக சமைக்கிறது, இல்ல வேண்டாம்."
"என் வைப் இத பெருசா நினைக்கல, கொஞ்ச நாள் தான நீ இங்க இருக்கப்போற."
"இல்ல மித்திரன், பெண்கள் வெளிப்படையா ஒன்னும் சொல்லமாட்டங்க நாம தான் புரிஞ்சிக்கணும். நம்ம friends ஆக இருக்கணும்னா இத விட்டுருங்க."
சின்ன பிரச்சனை நட்பைக் குறிவைக்கும் என்று நான் எண்ணவில்லை இருந்தாலும் அதற்கு ஒப்புக்கொண்டேன். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்குமோ? அவனிடமிருந்து விடைபெற்று என் cabin கதவைத் திறந்தால் அங்கே லாவண்யா நின்றாள் குத்துக்கல்லாக. அவள் எங்களருகில் அமர்ந்ததைக் கூட மறந்துவிட்டு நித்தின் மேல் மட்டுமே என் முழு கவனமும் இருந்திருந்தது.
அவளைக் கண்டதும் அன்று என் மனைவி கேட்ட கேள்வி தான் மனதில் உதித்தது. "லாவண்யா மனோகரன்?" என் மனைவியின் குரல் என் இதயத்தில் எதிரொலித்து அலைகளை எழுப்பியது. ஆனால் அவள் வெகு அப்பாவியாக என் பதிலை ஏற்றுக்கொண்டாள்.
dashboardஇல் இருந்த கார்ட் ஐ எடுத்து கூர்ந்து பார்த்தபோது, "லாவண்யா போனை மட்டும் தானே பர்ஸிலிருந்து எடுத்தாள். கார்ட் தானாகத் தான் விழுந்ததா?" என்ற கேள்வி மூளையைக் குடைந்தது. அனாவசியமாக யோசிக்கிறோம் என என்னையே கடித்துக்கொண்டு ஆபீஸினுள் சென்றேன். லாவண்யாவின் மேசையைத் தாண்டுகையில் யாரும் பார்க்கும் முன் கார்ட் ஐ மேசையின் ஓரத்தில் வைத்துவிட்டு என் cabinகுள் நுழைந்தேன். அவள் மேசையிலிருந்து நான் நழுவுவதைக் கண்ட மனோஜ் குழப்பத்துடன் என்னை நோக்கினான். பிறகு சொல்கிறேன் என தலையசைத்துவிட்டு என் வேலையைக் கவனித்தேன்.
இப்போது என் முன் நடுக்கத்துடன் நின்றாள் லாவண்யா மனோகரன்.
"any issues லாவண்யா?" அதிகார தொனியில் கேட்டேன்.
"இல்ல சார்."
PC இலிருந்து கண்கள் நிமிர்ந்து அவளை நோக்கின.
"It's a personal issue." சொல்லிவிட்டு என் எதிர்வினைக்காகக் காத்திருந்தாள். நான் ஒன்றும் பேசாமல் முகத்தை ஒருமுகப்படுத்தினேன்.
என்னிடமிருந்து எந்த reactionஉம் வரவில்லை என்பதால் அவள் தொடர்ந்தாள், "Sir, are you avoiding me?"
குழப்பத்தை வெளிக்காட்டாமல் அதே நிதானத்துடன், "I have replied all of your emails I believe," என ஆங்கிலத்திலேயே பதிலளித்தேன்.
"நான் பர்சனல் ஆ கேட்குறேன். அன்னைக்கு லஞ்ச் போனதிலிருந்து நீங்க என்கிட்டே ஒரு வார்த்தை பேசல அதுவும் இன்னைக்கு உங்க டேபிளில் தான் உட்கார்ந்து இருந்தேன் லஞ்ச் கு."
பிரச்சனையை உடனடியாக தீர்க்க, "இது ஒரு விஷயமே இல்ல. இன்னைக்கு நித்தின்கிட்ட நிறைய கேட்டுட்டு இருந்தேன், we have the same interests," என முற்றுப்புள்ளி வைத்துவிட்டு PCயைத் தட்டினேன்.
தான் எதிர்பார்த்த பதில் வராததால் லாவண்யாவின் குரல் பிடிவாதமாய் ஒலித்தது, "அப்போ உங்களுக்கு என்னை பிடிக்கலையா சார்?"
பெண்களுக்கே உரிதான, அதிகம் அவர்கள் கேட்கும், பதிலை அதிகம் கேட்க விரும்பும் கேள்வி இது, "உங்களுக்கு என்னை பிடிக்கலையா?" பிடிக்குமா என்பதைவிட பிடிக்காதா என்றே கேட்கும் தொனி பல பொருளைக் கொண்டது பல ஏக்கங்கள் அடங்கியது. தான் விரும்பும் பதிலை வரவழைக்கக் கேட்கப்படும் கேள்வி இது. அவளும் இதை என்னிடம் கேட்டிருக்கிறாள். சிவந்த கண்களோடு தொண்டைக் கட்டிய அந்த கரகரப்பான குரலில் அவள் கேட்டிருக்கிறாள். லாவண்யாவுக்கு சற்று சூதானமாக தான் பதில் அளிக்க வேண்டும்.
[Late update but give me your comments, how was it?
"உங்க free டைம் இல் நீங்க என்ன பண்ணுவீங்க" ஒருத்தவங்க கேட்டதும் தான் தோனுச்சு, எனக்கு இப்போ சுத்தமா டைம் இல்லைன்னு. I feel tired but I want to take some time off my busy schedule for me. So, writing is my way of giving time for myself. 45 days இல் chapter 20 வரையாவது எழுதலாம்னு முடிவெடுத்துட்டேன். எழுத்துப்பிழை, grammar பத்தி ரொம்ப அலட்டிக்காம முதல எழுதி முடிப்போம்னு. Support பண்ணுங்க மக்களே :) இந்த chapterகு பொருத்தமான போட்டோ இருந்தாலும் ஷேர் பண்ணா அதையும் போட்டுறலாம். See you soon;) ]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro