Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17. பூப்புனித நீராட்டு விழா

ஊருக்கு வந்த ஒரு மாதத்தை நண்பர்கள், வெயில் அதிகமாய் இருந்தால் பாண்டி வேலைப் பார்க்கும் மெடிக்கல் கடையில் நின்று பாண்டியோடும் கூட வேலை செய்யும் அவனின் நண்பனோடும் அரட்டை அடிப்பது , வீட்டில் அம்மாவின் கைமணம் நிறைந்த சோறு, பின் வெயில் தணிந்ததும் தோட்டத்தில் கிரிக்கெட், அதன் பின் டீ கடையில் நின்று பேசுவது, இரவு உணவு சாப்பிட்ட பின் STD பூத், மீண்டும் ஏதாவது தள்ளு வண்டியில் சுட்ட கோழியோ, சோளமோ என நண்பர்களுடன் கூடுவது என்று ராஜ் நேரத்தை நகர்த்தினான். எந்த வேலையும் இல்லை ஆனாலும் நேரம் போதியமாய் இருந்தது. இந்த வழக்கமான நாட்களில் அவ்வப்போது விசேஷ நாட்களும் தோன்றின. பெரியப்பா , அதாவது அப்பாவின் அண்ணன், அவரின் கடைசி மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்று நீராட்டும் விழா வைத்தார். ஆண் நமக்கு அங்கு என்ன வேலை என வெட்கப்பட்டு ராஜ் ஒதுங்க முற்பட்டாலும் சண்முகம் விடுவதாயில்லை.

"சீக்கிரம் கிளம்பு எல்லாம். குடும்பத்தோட வந்து முன்னாடியே நிக்கலைன்னா ஏதாவது சொல்லுவாங்க. மகா, பொண்ணுக்கு போடுற தோட எடுத்து வச்சியா?"

"வச்சாச்சு. இந்த தோடு வாங்குன கிராம்கு நாலைஞ்சு மோதிரம் போடலாம், பெருசா தெரியும்."

"எத்தன போடுறோம்னு கணக்கில்லா, எத்தன கிராம் தான் கணக்கு ," என சண்முகம் மனைவிக்கு புரியவைத்தார். மகாலட்சுமியின் முகத்தில் இருந்த சிடுசிடுப்பு மறைவதாய் இல்லை.

காலேஜ் முடித்து engineer என்ற பட்டத்துடன் முதன் முறை சொந்த பந்தங்கள் முன் நிற்கப்போகிறோம் என்ற பெருமிதத்திலும் வெளியூரில் படித்தோம் என்ற கெத்தைக் காட்டிக்கொள்ளவும் , வெள்ளை வேட்டிக்கு பதில் pant உம் முழு கை சட்டையும் அணிந்திருந்தான் ராஜ். கொஞ்சம் தண்ணியை தலையில் ஊற்றி முடியை கோதிவிட்டான், எண்ணை தலையாய் போய் நிற்ககூடாது ஆனால் முடி டீசன்ட் ஆகவும் இருக்க வேண்டும். அறையில் காத்தாடி கீழே நின்றும் பிடிவாதமாய் வடிந்த வியர்வையை கட்டிலில் கிடந்த கைலியை வைத்து துடைத்தான். வீட்டைப் பூட்டிவிட்டு சண்முகம் குடும்பத்தார் பஸ் ஸ்டான்ட் கு வந்து பேருந்தை பிடித்து ஒரு மணி நேரத்தில் அதே தஞ்சாவூரில் வசித்த பெரியப்பா வீட்டில் வந்து இறங்கினர்.

வாழை நட்டப்பட்டு சாமந்தி பூ தோரணங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க வாசலில் கிடந்த ஐம்பது ஜோடி செருப்புகளோடு தன் செருப்பையும் கலட்டி போட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்தான் ராஜ். காலேஜ் annual லீவ்வின் போது வீட்டிலும் மிஞ்சி போனால் ஊர் நண்பர்களுடனும் இருந்து பழகிய அவன் நான்கு வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பெரியப்பாவையும் இதர சொந்த பந்தங்களையும் பார்த்தான்.

"engineer வந்துட்டாபுடி !" என பெரியப்பா வெகுளியாய் சிரித்தார். எல்லோரும் ராஜை பற்றி தான் விசாரித்தார்கள்.

"பயலுங்க எங்க படிக்கிறானுங்க, உன் மகனாவது டிகிரி படிச்சு முடிச்சுட்டான். எப்டியோ காச பொரட்டி படிக்க வச்சுட்ட. நல்லது நல்லது," என சித்தி சொல்ல மகாலட்சுமி பூரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

நாசூக்காய் கேட்கும் பழக்கம் நம்மூரில் இல்லையே, நறுக்கென்றே கேட்டுவிட்டார் சித்தப்பா, "என்ன டா, வேலைக்கு போறியா?"

"இல்ல சித்தப்பா, இப்ப தான் படிப்பு முடிஞ்சிருக்கு. application போடணும்."

"நீ படிச்ச படிப்புக்கு என்னடா வேலை கிடைக்கும்?"

"aviation பீல்ட் ல என்ன வேலைன்னாலும் பார்க்கலாம்." ராஜ் பொதுவாய் கூறினான்.

" நல்ல வேலைக்கு போயி நல்லா இருந்தா சந்தோசம் தான். சரி வாங்க சாப்புட " பெரியம்மா எல்லாரையும் மதிய விருந்துக்கு திரட்டினார். எல்லோரும் உள்ளே செல்ல சித்தப்பாவும் அப்பாவும் மட்டும் தீவிரமாய் இன்னும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் திண்ணையை வெத்தளையுடன் பழசுகள் ஆக்கிரமிக்க இளசுகள் கொல்லைக்கு சென்றன. அங்கே தன் தம்பி சுதர்சன் ஏற்கனவே வயிறு முட்ட திணித்துவிட்டு நிஜாம் பாக்குடன் மற்ற பசங்களுடன் சுவற்றில் அமர்ந்திருப்பதைக் கண்டு ராஜ் அவன் அருகில் சென்று

"அந்த பாக்கு பாக்கெட்டை தா," என அவன் கையில் இருந்ததை உருவினான்.

"அண்ணே, இங்கயே உட்காருன்னே, மற எதுக்கு உள்ள போற?"

"அதிசயமா கூட உட்கார சொல்ற," என ராஜ் குதித்து சுவற்றில் ஏறி அமர்ந்தான்.

"ஆமா, நீ தான் இங்க காலேஜ் பையன். நீ கிட்ட நின்னா உன்ன பார்க்குற பொண்ணுங்க என்னையும் பார்க்கும்ல."

"டேய், பத்தாவது தான் டா படிக்கிற! சரி, எல்லாம் ஸ்கூல் படிக்கிற புள்ளைங்களா இருக்கே."

"ஆமா. ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்க இருக்கு. ஸ்கூல் படிச்சு முடிச்ச பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆச்சு. நீயும் சிரிக்கணும்னா ஸ்கூல் பொண்ணுங்கள பார்த்து தான் சிரிக்கணும். வேணும்னா பிளஸ் டூ பொண்ண பார்த்து சிரி," என சுதர்சன் பேசிக்கொண்டே மடித்திருந்த சட்டைக் காலரை உயர்த்தினான்.

அவன் சொல்வதும் உண்மை தான். படிச்சு முடித்ததுமே கல்யாணம் பண்ணி வைத்தால் சைட் அடிக்க ஸ்கூல் பிள்ளைகள் மட்டும் தானே மிச்சம் இருப்பார்கள். கோவைக்கும் தஞ்சாவூருக்கும் வித்தியாசம் இருந்தது. காலேஜ் படித்தவன் என்பதை திமிராய் காட்டிக்க முடிந்தது ஆனால் கோவையில் பெரிதாய் நினைக்க மாட்டார்கள்.

அப்போது கொல்லையின் தூய்மையான காற்றை சிகரெட் புகை ஆக்கிரமித்தது. தனது வலது பக்கம் திரும்பி பார்த்த ராஜ் அங்கே தனது அத்தை மகன் வினோத் புகைப்பிடிப்பதைக் கண்டு சினமடைந்தான். சுதர்சன் வயது தான் ஆனால் மிகவும் கெத்தாக புகையின் நடுவே சிகரெட்டை ஆட்டிக்கொண்டும் மாடியில் நின்ற பெண்களைப் பார்த்தும் பார்க்காததுமாய் ஒரு பக்கமாய் புகையை விட்டுக்கொண்டும் நின்றான் வினோத். ராஜ் கோபத்தில் யோசிக்காமல் அவன் கையில் இருந்த சிகரெட்டை வீசி ஏறிய வினோத் சுவற்றிலிருந்து இறங்கி கோபத்துடன் ராஜை நோக்கினான்.

"சின்ன பய, இந்த வயசுல என்னடா சிகரெட்?"

"உனக்கு தான் சிகரெட் புடிக்கிற வக்கு இல்ல. வந்துட்டான்."

ராஜ் கை உடனே ஒங்க...

(Next chapter is out! வயதுக்கு வர்ற அந்த விழா ரொம்ப விசேஷமானது. இந்த காலத்துல நமக்கு அறிவு, மரியாதை இருக்கு, முன்னாடி முட்டாள்தனமா பண்ணுனாங்க, நம்ம அதுலாம் பண்ண கூடாது அப்டின்னு ஆண்கள் தான் சொல்லுவாங்க. பெண்கள் கிட்ட கேளுங்க, தன் கூட படிச்ச தோழிங்க புடவை, நகை, அன்னைக்கு celebrity மாதிரி treat பண்ண படுறத பார்த்து அவங்களுக்கும் ஒரு ஆசை இருக்கும். நானும் centre of attention இருக்கணும்னு. அட் லீஸ்ட், புடவை கட்டவும் ஒரு ஆசை இருக்கும்.

வயதுக்கு வர்றது இயற்கை, உன்னதமான தாய்மையின் அடையாளம். அதை கொண்டாடனும், அந்த குட்டி பொண்ண ஸ்பெஷல் ஆ பீல் பண்ண வைக்கணும். சொந்த பந்தம் சேர்ந்து ஒன்னா வர்றது நல்ல விஷயம், அதற்கு இது ஒரு காரணமா இருந்தா ரொம்ப சந்தோசம் )




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro