Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8


எகிரி குதித்தேன் -வானம் இடித்தது.  

பாதங்கள் இரண்டும் -பறவையானது.  

விரல்களின் காம்பில் -பூக்கள் முளைத்தது 

புருவங்கள் இறங்கி -மீசையானது .... 

கவிதா பாட, ஜோடியாய் ஆடிக் கொண்டிருந்தார்கள் தீப்தியும் ரம்யாவும்.  நேரம் இரவு பதினொரு மணி.  எரிச்சலாய் இருந்தது சஞ்சனாவுக்கு.  நீண்ட நேரமாய் உறங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.  இவர்களின் இறைச்சலில் தூக்கம் லேசாக எட்டிப் பார்க்கக் கூட இல்லை.  

இன்று வந்தனா Lawyer ஐ சந்திக்கப் போயிருக்கிறாள்.  எல்லாம் அவள் விவாகரத்து விடயமாகத் தான்.  அம்மா போனில் பேசிய போது அழுது விட்டாள்.  சஞ்சனாவுக்கும் வருத்தமாய் இருந்தது. வந்தனாவுக்கு போன் செய்து சண்டை போட்டாள்.  அம்மா, அப்பா, யாழினி இவர்களுக்காகவாவது பொறுமையாக இருக்கும் படி கெஞ்சியும் பார்த்தாள்.  எந்த பலனும் இல்லை.  

அப்போதிலிருந்தே மனம் அமைதி காணாமல் இருந்தது.  இரவு சாப்பிடக் கூட பிடிக்கவில்லை.  வேண்டாம் என்றவளை கவிதா வற்புறுத்த வேறு வழியின்றி இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு கட்டிலில் சாய்ந்தாள்.  ஏற்கனவே வீட்டு நிலமையை நினைத்து மனம் குழம்பிப் போயிருக்க அடுத்த மூவரும் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்ததால் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். 

அதற்கு மேல் முடியாமல் காதில் earphone மாட்டிக் கொண்டு அவள் Play list இலிருந்து ஒரு பாடலை Play செய்தவள் அப்படியே Data on செய்து அக்ஷராவுக்கு Message அனுப்பினாள்.

தூங்கிட்டியா அச்சு?

ஆமா Darling இப்ப ஒனக்கு கனவுலதான் Reply பண்றேன்.  

மொக்க போடாத டி நானே Mood out ஆஹ் இருக்கேன் 

Why? என் சஞ்சு Darling க்கு என்னாச்சு?

எல்லாம் வந்தனா Problem தான் ...

அவளுடன் Chat. நீண்ட நேரம் Chat செய்து கொண்டிருந்தவள் தன்னையறியாமல் உறங்கிப் போனாள்.  

அடுத்த நாளும் மனம் என்னவோ போலிருக்க College முடிந்ததும் பக்கத்தில் இருந்த கோயிலுக்கு கிளம்பினாள்.  சிறிது நேரம் தனியே இருக்கத் தோன்றியதால் கவிதாவை ஹாஸ்டல் போக சொல்லிவிட்டு இவள் தனியே புறப்பட்டாள்.  

அஜய் வழக்கமாய்  பைக் பார்க் பண்ணும் இடத்தில் நின்றபடி போன் பேசிக் கொண்டிருந்தவன் சஞ்சுவை கண்டதும் கையசைத்தான்.  கடந்த இரண்டு மூன்று தினங்களாகவே அவனை சந்திக்க வில்லை என்பதால் அவனை கண்டதும் அவன் பக்கம் போனாள் சஞ்சு. 

என்ன சஞ்சு இப்பெல்லாம் பாக்கவே முடியல,  ரொம்ப Busy போல?

ஹ்ம் இந்த Week வேல அதிகம் தான் Lab, library னு அலஞ்சிட்டு இருக்கேன்.  

Very good படிக்கிற பொண்ணு அப்டி தான் இருக்கனும்,  நமக்கு இந்த library லாம் Allergy மழைக்கி கூட ஒதுங்க மாட்டோம் "

அவன் Expression உடன் சொல்ல   இந்த வாரம் முழுக்கவே  அவன் அவளுக்காக Library இல் காத்துக் கொண்டிருப்பது தெரியாமல் அவளும் புன்னகை செய்தாள்.  

தனியா போற?  கவி எங்க? 

அவ ஹாஸ்டல் போய்ட்டா.  நா கோயிலுக்கு போலாமேன்னு.

கோயிலுக்கா,  ஏன் இந்த Timeல?

"மனசு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு, அதான் கொஞ்ச நேரம் கோயில்ல இருந்துட்டு ஹாஸ்டல் போலாம்னு பாத்தேன்.  Okay அஜய்.  ரொம்ப Late பண்ணாம போகணும் நா வரேன் "

இரண்டு அடி எடுத்து வைத்தவள் சஞ்சு என்ற அவன் அழைப்பில் திரும்பிப் பார்த்தாள்.

ம்ம்?

கோயிலுக்கு நானும் வரட்டுமா ... உன் கூட?

அவன் கேட்டதும் மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு . சரி என்று தலை ஆட்டினாள் .

அஜய் பைக்கை Start செய்து தயக்கமாய் அவள் முகம் பார்க்க சிறிது தயங்கியவள் மறுப்பேதும் சொல்லாமல் ஏறி அமர்ந்தாள்.   கோயிலை அடைந்ததும் இருவரும் அர்ச்சனை தட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனார்கள். 

இருவரும் ஒன்றாக கோயிலுக்கு வந்ததும் அவள் அவனுக்கு முழுமையாய் மனைவி ஆகிவிட்டது போல் இருந்தது அஜய்க்கு.  கண் மூடி பிரார்த்தனையில் இருந்தவளை பார்த்தவன் வாழ்க்கை முழுக்க அவளுக்கு துணையாக தான் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். 

அவள் பிரார்த்தனை முடித்து கண் திறக்க அவன் கண்களை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான்.  கவிதாவை கூட வர வேண்டாம் என்று சொன்னவள் அஜய் கேட்டதும் அவன் கூட வர சம்மதம் சொன்னது அதுவும் அவனுடனே பைக்கில் வந்தது எல்லாம் அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.  உள்ளத்தில் எழுந்த பெயர் சொல்லத் தெரியாத உணர்வு அவளுக்கு பிடித்திருந்தது. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro