Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அனிச்சம் பூ 37


பெரியவர்கள் இருவரும் ஏமாற்றத்துடன் , முகம் வாட , லீலாவதியோ ஆற்றாமையில் அழுக ஆரம்பித்திருந்தார் ,
நாளைக்கு எம்புள்ள (ஜெயராம்) கல்யாணத்துக்கு வற்ரவங்களுக்கு என்னசொல்லி சமாளிக்கப் போறானோ , அவன் மகன் ஆசப்பட்டுட்டான்னு அவங்க வாசலுக்குப் போனதுக்கு இப்படி நம்ப வச்சு ஏமாத்தீட்டாளே ! இந்த கல்யாணத்த வைச்சுட்டு எம்புள்ள கெடந்து தவிக்குறானே ! ... என்று அழ ஆரம்பித்தார் .

ஜெயராம் , " அம்மா நீங்க அதெல்லாம் எதுவும் நினச்சு ஃபீல் பண்ணாதீங்க அமைதியா இருங்க ... நான் சமாளித்துக்கொள்கிறேன் , என்று அருகில் வந்து சமாதானப்படுத்த லீலாவதியோ ஜெயராம் மீதே மயங்கிச் சரிந்தார் , அவர் மயக்கம் கண்ட ஜெயராமும் ஜீவியும் லீலாவதியை எழுப்ப , தேவி , அம்மா , என்னம்மா ஆச்சு என்று , லீலாவதியின் அருகில் வர , ஜெயந்தி தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தார் ,

ஒட்டு மொத்தக் குடும்பமும் பதட்டதில் இருக்க லிலாவதி கண்கள் மெல்லத்திறந்தார் , ஜெயராம் தாமதிக்காமல் அருகில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு , நீங்க யாரும் வரவேண்டாம் நானும் ஜெயந்தியும் மட்டும் அம்மாவ கூட்டீட்டு போய்டு வர்றோம் , என்றார் , என்றாலும் பாலா , தேவி , ஜீவி , ராஜாங்கம் , என அனைவரும் ஹாஸ்பிடல் சென்றனர் , செந்தூரி மண்டபத்தில் இருந்த கார்த்திகிற்கும் ஃபோன் செய்தாள் ,

ஜெயந்தியும் தேவியும் லீலாவதியைச் டாக்டரிடம் அழைத்துச்செல்ல , ஜெயராம் , பாலா , தாத்தா என மூவரும் ரிஷப்சனில் உள்ள இருகையில் அமர்ந்தனர் .

ஜீவிக்கு , பாட்டி உடல் நிலை சரிஇல்லாமல் இருப்பதும் , தாத்தாக்கள் இருவரும் செய்வதறியாது குழப்பத்தில் இருப்பதும் , ஜெயராமும் ஜெயந்தியும் , செந்துவின் திருமணம் நின்றதில் கலக்கமாக இருப்பதும் , என இந்த நிகழ்வுகளைப் பார்க்க பார்க்க ஜீவியின் மனம் நிலையில்லாமல் தவிக்க , பாட்டி தாத்தா கேட்டு மறுத்தது ஏனோ அவளுக்கு குற்ற உணர்ச்சியால் இதயம் பதட்டபட ஆரம்பித்திருந்தது ..

ஜெயராம் தன் பக்கத்தில் அமர்ந்த ஜீவியின் முகம் வாடி சோர்வடைந்து இருந்ததைப் பார்த்தவர் , கரிசனத்துடன் வினவினார் .

" ஏன்டா நீ ஏன் ஹாஸ்ப்பிட்டல் வந்த ? அதான் மாமா யாரும் வரவேணாம்னு சொன்னேன்ல ... பாரு முகமெல்லாம் டல்லா இருக்கு நீ பாலா கூட வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுடா , வீட்ல இருக்க பிரச்சனையெல்லாம் பார்த்து நீ பயந்து போயிருக்க , பாட்டியும் தாத்தாவும் ஏதோ ஆசையில அப்படிக் கேட்டுட்டாங்க , நீ அதெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணாத , என்றார் ஜீவியின் தலைவருடடி ...

ஜீவி " இல்ல மாமா நான் செந்து மாமாவ மேரேஜ் பண்ணிக்கிறேன் , என்றாள் கண்ணீர் ததும்ப ..

அதைக்கேட்ட ஜெயராம் துணுக்குற்று ,
" என்னடா , பாட்டி உன்னை செந்துவ மேரேஜ் பண்ணிக்க சொல்லிக் கேட்டாங்க , ஆனா நீ மறுப்பு சொன்னதால்தான் பாட்டிக்கு உடம்புசரியில்லாம போயிருச்சுன்னு , பயந்து , செந்துவ மேரேஜ் பண்றேனு சொல்றியா ? அதெல்லாம் பாட்டிக்கு ஒன்னும் இல்லடா ப்ளட் ப்ரஸ்சர் தான் ... நீ பயப்படாத , மேரேஜ்லாம் பெரிய விஷயம் யாரு கம்பல்ஷன்லயும் பண்ணக் கூடாதுடா .... என்றார்...

அதைக் கேட்ட ஜிவிக்கு கண்களில் ததும்பிய கண்ணீர் வடிய , விசும்பலோடு பேசஆரம்பித்தாள் , இல்ல மாமா , என்னால உங்க யாரையும் இப்படிக் கவலை முகமா பார்க்க முடியல , இன்றைக்கு காலைல இருந்தே உங்க யார் முகத்திலும் சிரிப்பே இல்ல , வீடே நிம்மதி இல்லாம இருக்கு , பாட்டிக்குக் கூட உங்க , கவலைலதான் இப்படி ஆகிடுச்சு , நான் முதன் முதல்ல வந்தபோது ஜெயம் இல்லம் , ரொம்ப ஹேப்பியா இருந்தது , ஆனா இன்றைக்கு அந்த சந்தோஷம் எல்லாம் தொலைஞ்சிடுச்சு , இந்த நிமிஷம் , எனக்குன்னு தனியா எந்த விருப்பு வெறுப்பும் இல்ல மாமா, நீங்க எல்லாரும் என்னோடு எப்பவும் ஹேப்பியா பேசிச் சிரிச்சாப் போதும் , என்று ஒரு குழந்தை போல அழுது கொண்டே மொழிந்தவளை தன் தோளோடு சாய்த்து சமாதானப்படுத்தினாலும் , ஏனோ அவருக்கும் , அவளது பேச்சில் கண்கலங்கவே செய்தது ....
ஆனாலும் அவள் கூறியதில் உண்மை இருக்கவே செய்தது அவள் வரும்போது குடும்பம் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது , இதே அவள் இந்த வீட்டின் மருமகளாகி விட்டால் சந்தோஷமும் நிரந்தரமாகி விடும் ,

செந்தூவிற்கும் இவள் மீது அலாதி அன்பு இருக்கிறது .. இவளுக்கும் ஆகாஷ் கூறியது போல செந்து மீதும் அன்பு இருக்கிறது , இந்த ஆழ்ந்த அன்பு ஒன்றே போதும் இனிய இல்லறத்திற்கு , இந்த அன்பின் முன்னால் செந்தூரனில் இருக்கும் ரஷ்மியின் நினைவுகள் நிச்சயமாக செயலிழந்து விடும் , என்று நினைத்தவர் ஜீவியை தன் வீட்டுமருமகளாக்க வேண்டுமெனத் தீர்மானித்தார் ...

ஜீவி செந்துவை மணம்புரிகிறேன் எனக் கூறக் கேட்ட ராஜாங்கத்திற்க்கு , தேவதை வரம் தந்தது போல் இருந்தது , ஆனால் பாலாவுக்கோ தன் மகள் முடிவு அதிர்ச்சியளித்தது , வேறொரு பெண்ணை மனதில் நினைததுக் கொண்டிருப்பவனை எப்படி , என் மகளுக்கு மணம் முடிப்பேன் ... என் குழந்தை ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியை மனதில் வைத்து , இந்த முடிவை எடுத்திருக்கிறாள் , குடும்பத்தின் நிம்மதி கிடைப்பது ஒருவழியில் மனதுக்கு ஆறுதல் அளித்தாலும் , மகளை நினைத்துப் பரிதவித்தான் .

செந்தூரி ஃபோன் செய்ததும் , மண்டபத்திலிருந்து , ஹாஸ்பிட்டலுக்கு வந்த , கார்த்திக்கும் , செந்தூவும் , பாட்டியைப் பற்றி ஜெயராமிடம் கேட்க வந்தவர்கள் கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைய எத்தனித்தப்போது , ஜீவி பேசியதைக் கேட்க நேர்ந்தது , கார்த்திக்கிற்கு மருமகளின் கண்ணீர் கவலைதந்தாலும் , செந்துவை திருமணம் செய்து கொள்கிறேன் என்றது , சந்தோஷத்தைத் தந்தது ...

செந்தூவிற்கோ ஜீவியின் கண்ணீர் மனதை ரணமாக்கியது , மேலும் இவளை , தன்னைத்திருமணம் செய்யச் சொல்லிவேறு கட்டாயப்படுத்தாத குறையாகக் கேட்டிருக்கிறார்கள் , என்று தெரிந்தவுடன் , அவன் கோபம் உச்சம் தொட்டது ,

பாட்டியைப் பரிசோதித்ததில் பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லை , ப்ரஸர் டேப்லட்ட ஸ்கிப் பண்ணாம எடுத்துக்கச் சொல்லூங்க என்றார் .

ஜெயராமும் கார்த்திக்கும் , ராஜாங்கத்திடம் " அப்பா செந்துவிடம் ஜீவிய கல்யாணம் பண்ற விஷயமா , நீங்க எதுவும் பேசவேண்டாம் , நாங்கள் அவனிடம் பேசிக்கொள்கிறோம் " , எனக்கூற , அதற்க்கு ராஜாங்கம்
" இல்லப்பா நீங்க செந்தூவிடம் பேசுவது சரி வராது , நானே பேசிக்கொள்கிறேன் , நீங்க அமைதியா இருங்க ..." என்றார் ,

ஜெயராம் , " இல்லப்பா நீங்க ஏற்கனவே கோபமாக பேசியதற்க்கே செந்து உங்களிடம் கோபத்தில இருப்பான் , என்று இழுக்க ...."

ராஜாங்கமோ " நீ கவலைப்படாதப்பா , நான் கோபத்தில் பேசவில்லை , அவன் கோபத்தை தூண்டத்தான் அப்படிப் பேசினேன் , அப்படீ நான் பேசவில்லை என்றால் இன்நேரம் அவன் கொல்கட்டா போயிருப்பான் , நான் நினைச்ச மாதிரி ஜீவிக்கும் அவனுக்கும் கல்யாணம் பேசமுடியாது ... இப்பவும் வீட்டுக்குச் சென்றவுடன் அவனே ஆரம்பித்துவிடுவான் , நீங்க அமைதியா இருங்க நான் பேசிக்கொள்கிறேன் இப்போதைக்கு அவனோட கோபம்தான் நமக்கு சாதகமா இருக்கும் , அவன் என்னை எப்படி நினைத்தாலும் , பரவாஇல்லை , ஆனா என் பேரன் கல்யாணம் நின்னுபோனதால அவனை யாரும் குறைச்சு பேசிவிடக்கூடாது , ராஜங்கத்தோட பேரன் எப்பவும் தலை நிமிர்ந்து நிற்கனும் , அதுதான் எனக்கு வேண்டும் , என்றார் .

ஹாஸ்பிட்டலில் இருந்து பாட்டியைக் கூட்டிக்கொண்டு அனைவரும் வீடு வந்து சேர ... அதற்காகவே காத்திருந்தது போல செந்து , ராஜாங்கத்திடம் " தாத்தா ஏன் ஜீவியிடம் என்னைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லிக்கேட்டீங்க ? " என்றான் ,

" ஆமா கேட்டேன் , அதற்கென்ன ?

" என்ன தாத்தா இப்படிக் கேட்கறீங்க , ரஷ்மிய நினைச்சுட்டு ஜீவி கழுத்துல தாலி கட்டவா ? " என்றவனிடம் ,

" உன்னை யாரும் ரஷ்மிய நினைச்சுட்டு ஜீவி கழுத்தில தாலி கட்டச் சொல்லல ...ரஷ்மிய உன் நினைப்புல இருந்து தூக்கி எரிஞ்சுட்டு என் பேத்தி கழுத்துல தாலி கட்டுன்னு சொல்றேன் " என்றார் ,

" தாத்தா ஜீவி சின்னப் பொண்ணு , பாவம் அவள் , நீங்க எல்லாரும் கல்யாணம் நின்னு போச்சேன்னு கவலைப் படுறீங்கன்னு உங்க எல்லாரோட சந்தோஷத்திற்காக , அவள் என்னைக் கல்யாணம செய்ய சம்மதிச்சுருக்கா ... "

" அதத்தான் நானும் சொல்றேன் அந்த சின்னப் பொண்ணுக்கு இந்த குடும்பத்து மேல இருக்குற அக்கறைல கொஞ்சம் கூட உனக்கு இல்லைன்னு "

" தாத்தா நான் ஜீவி கழுத்துல தாலி கட்டுனா , அது நான் ஜீவி ரஷ்மி இரண்டுபேருக்கும் செய்ற துரோகம் "

இதைக்கேட்ட கார்த்தி செந்துவைக் கேள்வியாய் பார்க்க , அந்தப் பார்வையின் உள் அர்த்தம் புரிந்தவனுக்கு , ஏதோ ஒன்று உறுத்த ... தன் எதிரே சோபாவில் அமர்ந்திருந்த தன் தங்கைகள் இருவரையும் " அனி , அஸ்வதி இரண்டுபேரும் உங்க ரூமுக்கு போங்க எனறு கூற ... அவர்கள் இருவரும் ஏன் என்று யோசித்துக் கொண்டிருக்க , மீண்டும் கோபத்தின் உச்சத்தில் அழுத்தமாகக் கூறினான் , " உங்க இரண்டு பேரையும் உள்ள போங்கன்னு சொன்னேன் " என்றுகூற , இருவரும் இடத்தைக் காலிசெய்தனர் ...

செந்து கார்த்திக்கிடம் ,
" இப்பக் கேளுங்க சித்தப்பா , மனசுல நினைக்கிறத கேளுங்க " என்றான் ,

அவர் ஏதும் பேசாமல் மெளனிக்கவே ...

" தெரியும் நீங்க என்ன நினைச்சீங்கன்னு , நான் ரஷ்மியிடம் எல்லை மீறீட்டேன்னு சந்தேகப்பட்றீங்க , அதனாலதான் துரோகம்னு நான் சொன்னதும் அப்படிப்பார்தீங்க , சித்தப்பா எனக்கு வயசுக்கு வந்த இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க , இந்த நிலமைல நான் காதலிக்கிற பொண்ணிடம் அப்படி நடந்திருப்பேன்னு எப்படி சித்தப்பா நினைக்கலாம் , நான் துரோகம்னு சொன்னது , ரஷ்மிய நினைச்சுட்டு , ஜீவி கழுத்துல தாலி கட்றதையும் , ரஷ்மி க்கு அவளோட கஷ்டத்தில் கூட நின்னு உதவி செஞ்சு , காத்திருந்து கல்யாணம் செய்யாம , அவளோட சூழ்நிலையக் காரணம் காட்டி ஜீவியக் கல்யணம் பண்றதையும் தான் " , என்றான் .

பொறுமை இழந்த ராஜங்கம் , " இங்கபாரு செந்து , சூழ்நிலையக் காரணம் காட்டி கல்யாணத்தை நிறுத்தினது நாங்க இல்ல , ரஷ்மிதான் , அந்தப் பொண்ணு அவளோட பிரச்சனைக்கு உதவலாம்னு நினைச்சாலும் வேணாம்னு சொல்லுது , பிரச்சனையெல்லாம் முடிச்சுட்டு செந்துவ கல்யணாம் பண்ணிக்கோன்னு சொன்னாலும் கல்யாணமே வேணாம்னு சொல்லுது, அதோட ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ற அளவுக்கு இங்க யாரும் கல்நெஞ்சுக்காரங்க இல்லை ,
நீ ஜீவியக் கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா மட்டும்தான் ... என்று முடிப்பதற்க்குள் வேகமாக இடைமறித்த செந்து ,

" ஹம் ...சொல்லுங்க தாத்தா ஜீவிய கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா மட்டும் தான் இங்க இருக்கனும் , இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியில போகனும் , அதைத்தானே சொல்ல வந்தீங்க ... நான் போகிறேன் , இப்பவே வீட்டை விட்டு வெளிய போகிறேன் " என்று நகர முட்பட்டவனை .. ராஜங்கத்தின் குரல் தடுத்தது ..

" செந்து நான் இன்னும் பேசிமுடிக்கலை ... நீ ஜீவிய கல்யாணம் செய்யவில்லை என்றால் , நானும் உன் பாட்டியும் இங்க இருக்க மாட்டாம் , கோயம்பத்தூருக்கே போயிருவோம் , நான் இறந்தால் கூட கொள்ளி வைக்கிற உரிமை உனக்கு இல்ல , இதுதான் என்னோட முடிவு , இப்ப நீயே சொல்லு நான் இங்க இருக்கவா போகவோ ?

செந்தூரன் " அதெப்படி தாத்தா உங்களால இப்படி ஒரு நிமிஷத்தில தூக்கி எரிஞ்சு பேசமுடியுது என்றான் .

தூக்கி எரிஞ்சது யாரு , நீயா ? நானா ? ஆமா நீ ஆறு மாசமே பழகின ஒருத்திக்காக , அதுவும் உன்னை வேணாம்னு தூக்கி எரிஞ்ச ஒருத்திக்காக , ஒட்டுமொத்த குடும்பத்தையும் உதறிட்டு போறேன்னு சொன்னியே ... அதைக் கேட்ட அப்பவே நான் செத்துட்டேன் ... என்றவரின் குரல் தழுதழுத்தது ....

செந்து .. சற்றே கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ,

" அப்பா .. நான் ஜீவிய கல்யாணம் பண்ணிக்கிறேன் " என்றான்.

ஒட்டு மொத்தக் குடும்பமும் ஒரு நொடி ஆச்சர்யத்தில் மூழகியது ... அந்த நல்லிரைவை தாண்டிய வைகறையிலும் , உறங்காமலிருந்த உறவுகள் கிறங்காமல் உற்ச்சாகமடைந்து நிச்சயதார்தம் மற்றும் திருமணத்திற்க்கான ஏற்ப்பாடுகளைச் செய்ய ஹாலில் இருந்து இடம் பெயர , அங்கே செந்துவும் ஜீவியும் மட்டுமே இருக்க ,

ஜீவி ஹாலின் ஒரு சுவற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தாள் , அவள் மனம் செந்துவை நினைத்துத் தவித்துக்கொண்டிருந்தது , ' செந்து மாமாவின் வாழ்கையில் அவர் அனுமதி இன்றி நுழைந்து விட்டோம் , ரஷ்மி அக்காவின் இடத்தில் எனை எப்படி , ஏற்றுக்கொள்வார் ? ,
இதுவரையில் அன்பால் ஆராதனை செய்தவன் , இனி என் மீது வெறுப்பைக் காட்டினால் நான் என்ன செய்வேன் .. ரஷ்மி அக்காவின் பிரச்சனைகள் ஓய்ந்தபின் ரஷ்மி அக்காவும் மாமாவும் சேரந்து வாழ இருந்த வழியை அடைத்துவிட்டேனே ... அவனது ஒரு துளி கோபமும் , எனைக் கொன்று விடுமே ! நான் என் செய்ய ? ' இவ்வாறு சிந்தனையின் வசம் நின்றவள் ,

" ஜீவிகா .... " என்ற செந்தூவின் கோபம் ஏந்திய அழுத்தமான அழைப்பில் ஒரு நொடி திடுக்கென்று துணுக்குற்றாள் ....

அதிர்ந்து அவனை நோக்கியவளின் கண்கள் மிரண்டு பதட்டமடைய ... அதைப் பார்த்த செந்து ... தன்னைத்தானே நொந்துகொண்டு , சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி .... பின் அமைதியாக அழைத்தான் ..
" ஜீவிமா இங்க வா .. " என்ற அழைப்பில் அருகில் வந்தவள் கலங்கிய கண்களோடும் , சத்தம் வராத வார்தையாலும் " சாரி மாமா .. "
என்றாள் ...

அவளின் பயத்தைக் கண்டவன் , அவளின் கரம் பிடித்துத் தன் கரங்களுக்குள் வைத்தான் , அவளின் முகம் விழுந்து விளையாடிய கேசம் ஒதுக்கி , ஏன்டா இப்படிப்பண்ண ? ஏன் மேரேஜ்கு சம்மதிச்ச ? என அவள் கண்கள் பார்த்துக் கேட்டான் .

கண்கள் கலங்க தயக்கத்தோடு பேச ஆரம்பித்தாள் , " வீட்ல எல்லாரும் உங்க மேரேஜ் நின்னுபோச்சுன்னு கவலையா இருந்தாங்க மாமா , அதோட மேரேஜ் நின்னா உங்க இமேஜ் போயிரும் , அது பிஸ்னஸ்கும் குடும்பத்திற்கும் நல்லதில்லைன்னு தாத்தா சொன்னாங்க .. அதான் சம்மதிச்சேன் என்றவளைப் பாவமாய்ப் பார்த்தான் ...

" ஹம்.. என்னால உனக்குத்தான் கஷ்டம் , என்ன ஜீவிமா? என்றான்..

" அப்படிலாம் இல்ல மாமா , நீங்களும் , வீட்ல எல்லாரும் ஹேப்பியா இருந்தாப் போதும் " என்றவளிடம் ,

" சரி ஜீவிமா உனக்குன்னு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லைன்னு சொன்ன , ஏன் ஜீவிமா ? உனக்குன்னு ஒரு வாழ்கை இருக்கு , எதிர்காலம் இருக்கு அதை ஏன் நீ யோசிக்கல ..." என்றான் .

" எப்படிச் சொல்வது உன்னிடம் , என்னுடைய ஒரே விருப்பம் நீதானென்று .... நீயே இல்லையென்றான பிறகு , உன் இதயத்தில் எனக்கு இடம் இல்லை என்றானபிறகும் ,
வெறுமை நிறைந்த மனதில் வெறுப்பிற்க்கும் விருப்பிற்க்கும் என்ன வேலை ? மனதில் நினைத்தவாறு ...
அவள் மெளனம் சாதித்தாள் ...

வைகறைக் காற்றில் மங்கள இசை கலந்து திருமண மண்டபத்தின் சூழ்நிலையை சுகந்தமாக்கி விடியற்க்காலையை வரவேற்றுக் கொண்டிருந்தது ,நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிச்சயதார்த்தம் மீண்டும் நடைபெற ஆயத்தமானது ,

திருமணத்திற்காக வந்திருந்த செந்திலுக்கும் கணேஷிக்கும் , ஜீவியின் விஷயம் தெரியவர ..

செந்தில் அதிர்ச்சியும் கோபமும் ஆட்கொள்ள பாலாவை வார்த்தைகளைக் கோர்த்து வசைபாடித் தீர்த்தான் ,

" டேய் பாலா தெரியமத்தான் கேட்கிறேன் , உனக்கும் உன் பொண்ணுக்கும் மனசுல பெரிய தியாகின்னு நினைப்பா ? இன்னொரு பொண்ண காதலிச்சு கல்யாணம் வரைக்கும் , வந்திருக்கான் , அதுவும் அந்தப் பொண்ணுக்காக வீட்டைவீட்டுப் போற அளவுக்குப் போய்ருக்கான் , அவனை நம்பி எப்படிடா ஜீவிய அவனக்கு கல்யாணம் பண்ண சம்மதிச்ச , ஆனா ஒன்னு நீ என்றைக்கு திருப்பூருக்கு வந்தியோ அப்பத்தில் இருந்தே உன்னோட சுயபுத்திய இழந்திட்ட , இது ஜீவிமாவோட வாழ்கைப் பிரச்சனை , சாதாரனமாவே ஜீவி , ரோட்ல யாரவது கவலையா போய்டு இருந்தாக்கூட அய்யோ பாவம்னு இரக்கப்படுவா , இதில்வேறு வீட்ல எல்லாரும் அவளக் கண்ணீர் கடல்ல மூழ்கடிச்சுருப்பாங்க ... அப்புறம் அவ என்ன பண்ணுவா , இப்படித்தான் முடிவெடுப்பா ! " என்றான் செந்தில் .

" அப்படியெல்லாம் இல்லடா , யாரும் அவள ஃபோர்ஸ் பண்ணல , ஜஸ்ட் எங்க மாமனார்தான் , கேட்டாங்க , அவளாத்தான் செந்துவ மேரேஜ் பண்றேன்னு சொன்னா " , என்றான் பாலா .

" டேய் அவச்சின்னப் பொண்ணுடா அவளுக்கு , வாழ்கைனா என்னனு தெரியுமா ? .. நீதான் தடுத்துருக்கனும் , நாளைக்கே செந்து விரும்பின அந்த பொண்ணு வந்து நின்னாலோ , இல்ல செந்து அந்த பொண்ண மறக்க முடியலைன்னு சொன்னாலோ என்னடா பண்ணுவ ?.." என்றான் செந்தில் .

செந்தில் கேட்டதற்கு , பாலாவிற்குப் பதில் , கணேஷ் ஆரம்பித்தான் ,
" அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை , செந்து ஜீவிக்கு ஒருபோதும் துரோகம் பண்ண மாட்டான் , அப்படி செந்துவே ரஷ்மியைத் தேடிப்போனாலும் , அந்தப் பொண்ணு ஏத்துக்க மாட்டா , சோ நீ இதல்லாம் நினைச்சு நீயும் குழம்பி , பாலாவையும் குழப்பிவிடாத ..." என்றான் கணேஷ் ...

" அதெப்படிடா நீ பாரத்தமாதிரி அவ்வளவு உறுதியா சொல்ற ? " என்றான் செந்தில் .

" ஆமா பார்த்ததாலதான் சொல்றேன் ,"
என்றான் கணேஷ் .

செந்திலும் பாலாவும் கேள்வியாய் கணைஷைப் பார்க்க ...

கணேஷ் தொடர்ந்தான் , " டேய் பாலா நீ கால் பண்ணி ரிஷப்சன் கேன்சல்னு சொன்னபோது , நான் காரணம் கேட்டதுக்கு , ஆக்சிடன்ட்னு சொன்ன , ஏற்கனவே ரஷ்மி , வர்றதுக்கு ஒரு நாள் டிலேன்னு வேற சொன்ன , அதுதான் எனக்கு எங்கையோ இடிக்கிற மாதிரி இருந்துச்சு , யாரவது இந்த ஆக்சிடன்ட்டுக்குப் பின்னாடி இருக்காங்களோன்னு , டவுட் இருந்தது , அதனால்தான் அந்த ஆக்ஸிடன்ட் கேஸ் பத்தின டீட்டைல்ஸ் கேதர் பண்ணினேன் ,

ரஷ்மிக்கு பிஸ்னஸ்ல எதிரிகள் இருக்காங்கன்னும் , பட் ரஷ்மி பர்ஸ்னல் லைஃப் , பிஸ்னஸ் , சோசியல் ஆக்டிவிட்டின்னு எதிலையும் குறை கண்டுபிடிக்க முடியாதுன்னும் சொல்றாங்க .. அதோட ராகுல் ஆக்சிடன்ட் ஆனதுக்கு முதல் நாள் நைட் மீட்டிங் முடிஞ்சு பார்டி பண்ணிருக்கார் , மறுநாள் காலைல கார் டரைவ் பண்ணும் போது மைல்ட் ஹாாட்அட்டாக் அதுதான் கார் பேலன்ஸ் இல்லாம , கொண்டுபோய் மரத்தில மோதிருக்கார் காரோட டோர் ஓப்பனாகி கிழே விழுந்த இடத்தில் ஏதோ மரத்தடில கல் இருந்து தலைல வேகமா பட்டிருக்கு .. அவரு க்ரிடிக்கல் பொஷிசன்லதான் இருக்காருன்னு சொன்னாங்க ..ரஷ்மிக்கு , கம்பனி மற்றும் அவங்க அக்கா ஃபேமிலின்னு பொறுப்பு இருக்கறதால்தான் தன்னோட மேரேஜையே வேணாம்னு சொல்லீருக்காங்கன்னு சொல்றங்க , நான் விசாரிச்ச வரைக்கும் அந்தப் பொண்ணு சுயநலமா யோசிக்கிற பொண்ணு இல்லடா நீங்க இரண்டு பேரும் , தாராளமா நம்பலாம் , என்றான் கணேஷ் .

சிறிது நேரத்திற்க்கெல்லாம் நிச்சியதார்த்தம் ஆரம்பிக்க , மங்கள ஒலியுடன் , மேடையில் பரப்பப்பட்ட தாம்பூலங்களும் பெண்ணின் வீட்டார் , மாப்பிள்ளை வீட்டார் இன இரண்டு குழுக்களாகப் பிரிந்து அமர்ந்து , நிச்சயதார்ததப் பத்திரிக்கை வாசித்து , தாம்பூலம் மாற்றிக் கொள்ளவதற்க்காக மணப்பெண்ணின் தாய் மாமனையும் , மணமகனின் தாய்மாமனையும் அழைக்க ,

மாப்பிள்ளை யின் தாய்மாமாவான பாலாவும் , பெண்ணின் தாய் மாமனான ஜெயராம் மற்றும் கார்த்திக்கையும் தாம்பூலம் மாற்றிக்கொள்ளச்சொல்ல ,

தேவியோ கார்த்திக் காதில் ஏதோசொல்ல , கார்த்திக்கும் சம்மதமாய் .. தலையசைத்தான் ,

மணப்பெண்ணின் தாய்மாமன் முறைக்கு தாம்பூலம் மாற்றிக்கொள்ள கணேஷையும் , செந்திலையும் , தேவி அழைத்தாள் , அவர்கள் இருவருமே தயக்கம் காட்ட , கார்த்திக்கே மீண்டும் அவர்களை அழைத்து அமரவைத்தான் ,

ஒருபுறம் செந்துவிற்க்காக பாலாவும் மறுபுறம் ஜீவிக்காக செந்திலும் , கணேஷூம் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர் ,

ஜீவி , செந்து வின் நிச்சயதார்தத்திற்காய் , நண்பர்கள் மூவருக்குள்ளுமே நிச்சிய தாம்பூலம் மாற்றிக்கொள்வோம் என்று அவர்கள் நினைத்துப்பார்க்காத ஒன்றாக இருந்தாலும் ,

கார்த்திக் மனதில் தன் தங்கை மகளுக்காக தாய்மாமன் ஸ்தானத்தில் அமர முடியாமல் போனது ஏனோ ஒரு ஏக்கம் கலந்த வருத்தத்தை அளிக்கவே செய்தது ...

நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக் கொள்ளும் பொருட்டு , பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்து வர , ஜீவி பட்டுப்புடவை அணிந்ததாய் வரைந்த அழகிய ஓவியம் உயிர்கொண்டதாய் நடந்துவந்தாள் ,

செந்தூரனோ , இந்த மேடை எனக்கானதில்லையே , ஏனிங்கே நான் வந்தேனென கேட்கும் மனதிற்கு பதில் சொல்லத்தெரியாமல் , ஆறடிஉயரம் கொண்ட யாக்கையும் , அந்த யாக்கை கொண்ட அகமும் அவனுக்கே அந்நியமாய் ஆனதாய் உணர்ந்தான் .

இருவருமே முகம் பார்க்காமல் விரல் பிடித்து மோதிரம் மாற்றிக்கொள்ள , நிச்சயதாரத்தம் முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் , திருமண ஏற்ப்பாடுகள் அறங்கேறி இருந்தது ,

வாழை கட்டப்பட்ட வாசல் ,
தாழை பின்னப்பட்ட தோரணம் ,
சோலையாய் வேயப்பட்ட மணமேடை ,
மனைக்கோலம் அதில் மனைப்பலகை ,
அக்னித் தேவனுக்காய் ஒமகுண்டம் ,
பிடித்துவைத்த மஞ்சள் பிள்ளையார் ,
சிவன் பார்வதிக்காய் குத்துவிளக்கு ,
மங்கள ஒலி எலுப்ப வலம்புரிச்சங்கு ,
பூரணகும்பமதைச் சூற்றித் தாம்பூலம் ,
பாலுற்றி பதித்துவைத்த முளைப்பாரி ,
மலர்கொடி சுற்றிய தூணருகே அரசாணி ,
அழகாய் கோலமிடபட்ட அம்மி ,
மங்சள்நீர் வைத்ததோர் குடத்தில் மோதிரம் ,
உருட்டி விட்டே பதம் பார்க்க தங்க மாங்கனி ,
நாதஸ்வரம் அதோடு மேளச்சத்தம் ,
என மணமேடை நிறைந்த மங்களம்
மணம் வீசிக் கொண்டிருந்தது ,

திருமணத்திற்காக அழைத்த உறவுகள் நட்புகள் என அனைவரும் வந்திருக்க , அவர்களுக்குள் மணப்பெண் மாறிய விஷயமே ஆகச்சிறந்த சுவாரஸ்யமான உரையாடலாக ஆகிவிட , முகூர்த்த நேரத்திர்க்காய் ஆவலாய் காத்திருந்தனர் , வினயின் அம்மாவிற்கோ , வாசல் வரை வந்த சம்பந்தம் கை நழுவிப் போன வருத்தம் இருந்தாலும் , நிற்கும் தருவாயில் இருந்த திருமணம் ஜீவியால் நடப்பதுவும் ஒரு ஆறுதலை அளித்தது ,

மலரில் வேயப்பட்ட மணம் பரப்பும் பிருந்தாவனம்மென இருந்த அந்த மணமேடையில் தலையாட்டிக் கொண்டிருந்த பூங்கொத்துக்கள் போட்டி ,போட்டு எட்டிப் பார்கிறது .. யாரவன் ?

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro