Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அனிச்சம் பூ 18

வியாழக் கிழமை ,
கொல்கட்டா ,
ஹோட்டல் ஒபராய் க்ரேன்ட் ,
காலை மணி 9 ,
செந்தூரன் எதிர்பார்பாய் காத்திருந்தான் அவளுக்காக ,
ஆம் , அவளுக்காக ...

காதலால் நெய்த
இதயம் கொண்டு
கருணையால் செய்த
கண்கள் இரண்டால்
இவனைக்காண வருபவள் ,

அவள் வருவதற்குள் , அலைபேசியில் அவளை நிமிடத்திற்கொரு முறை அழைத்துவிட்டான் , அவள் ஃபோன் சுவிட்ச் ஆஃப் , மனம் தவிக்க ஆரம்பித்தது , ஏன் தாமதம்... ?

அவள் வரவேண்டிய திசை பார்த்துக் காத்துக் கொண்டிருந்த செந்தூரனின்
விழிகள் மோட்சம் பெற்றது ...
இதோ , அவள் வந்துவிட்டாள் ,
நொடிகள் ஓடியது ,
பார்வைகளோ ஸ்தம்பித்தது..
அவளே மெளனம் உடைத்தாள்..

" சாரி செந்து .. உன்னைக் காத்திருக்க வச்சுட்டேன் ... சாரி... "

அவன் பதிலேதும் மொழியவில்லை
அவளின் சாரியில் சமாதானம் ஆகாமல் அவளின் கண்களை தீர்க்கமாய் நோக்கினான் ,

" அப்படிப் பார்க்காத .. நான்தான் சாரி சொல்றேன்ல ... ப்ளீஸ் சற்றே கெஞ்சினாள்... "

மீண்டும் பார்வையை நீட்டித்தான்...

" என்ன செந்து நீ ... , புரிஞ்சுக்கோ ... கிளம்பும் போது ஃபேக்ட்ரி மேனேஜர் கால் பண்ணீட்டார் ப்ரொடக்சன் ப்ராப்ளம்னு , அதான் லேட் , திரும்ப கால் பண்ணிடுவாங்கன்னு , ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணீட்டேன் , ப்ளீஸ் சாரி மா.. என்றாள் "

செந்து இப்பொழுதும் ஏதும் பேசவில்லை ,

அவள் கண்கள் அன்பில் கலங்கி மின்னினாலும் , உதடுகள் உரிமைக் கோபம் உதிர்த்தது ,
" என்னடா ரொம்ப பண்ற ஹா , நான் தான் சாரி சொல்றன்ல பின்ன என்னவா ? அப்புறம் இப்டியே திரும்பி போயிருவேன்...

அப்டி.... வா வழிக்கு , ... இதுதான் என்னொட ரஷ்மி ... நீ கெஞ்சவெல்லாம் வேண்டாம் இப்படிப் பேசினால்தான் கெத்தா இருக்கு...
என்றான்.. புன் சிரிப்பில்..

ரியலி , சாரி மா என்றாள் மீன்டும் .

" ஓகே , விடுடா , ஒரு மாதம் காத்திருந்தவன் ஒரு மணி நேரம் காத்திருக்க மாட்டேனா ?
நேத்து நைட் கால் பண்ணும் போதும் நீ , பேச டைம் இல்ல பிசியா இருக்கேன் , மார்னிங் 8.30 க்கு வரேன்னு சொல்லி கால கட் பண்ணீட்ட , மார்னிங் கால் பண்ணும் போது ஸவிட்ச் ஆஃப்னு வரவும் எனக்கு கொஞ்சம் டென்சனாகிடுச்சு , ஈவ்னிங் கிளம்பனும் டா , அதுதான் .
வழக்கம் போல சென்னை போறேன்னு சொல்லீட்டுத்தான் இங்க வந்திருக்கேன் , 2 நாள் பையர்ஸ் மீட்டீங்க 3 நாள்னு பொய் சொல்லிட்டு உன்னைப் பார்க்க வந்தா நீ என்னடான்னா இப்டி லேட் பண்ற " என்றான் .

காலை உணவை முடித்து இருவரும் ஒபராய் ஹோட்டலின் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ள விக்டோரியா ஹாலுக்குச் செல்வது வாடிக்கையான விஷயம் , இருவருக்குமே விக்டோரியா ஹாலின் அந்த அமைதி மிகவும் பிடித்தமானது , அதுவும் ரஷ்மிக்கு , செந்துவோடு கைகோர்த்து நடந்தபடியை கதைகள் பேசிக் கொண்டு தொலைவுகள் கடப்பதை சுகமானதாக உணர்வாள் .

" செந்து நம்ம மேரேஜ் எப்போ ? "

" கண்டிப்பா , கூடிய சீக்கிரம் வீட்ல சொல்லி முடிவு பண்றேன் டா , அப்பாவுக்கு நம்ம விஷயம் எப்படியும் தெரிஞ்சிருக்கும் ஆனா என்னிடம் இன்னும் கேட்கல , என்றான்

" ஏன் பா உன்ன அங்கிள் வாட்ச் பண்றாங்களா ? " என்றாள் ரஷ்மி

" இருக்கலாம் , அவரு கம்பனிக்கு இப்போ அடிக்கடி வருவதில்லை என்றாலும் , ப்ரொடக்சன் விஷயம் , மெர்ச்சன்ஸ் , பையர்ஸ் மீட்டிங்னு எல்லாம் அப்டேட்டா வச்சிருப்பாரு , அவருக்குத் தெரியும் இன்றைக்கு எனக்கு மீட்டிங் இல்லனு .. அதோடு அவருக்கு எல்லாப் பக்கமும் கண் இருக்கும் ... பார்க்கலாம் அவருக்குத் தெரிவதும் நல்லதுதான் , என்றைக்கா இருந்தாலும் தெரிய வேண்டிய விஷயம்தானே என்றவன் ,

" சரி பசுப்பிக் லெதர்சோட எம் டி இப்படிக் கல்யாணம் பண்ணி என்னோடு செட்டில் ஆனா , அவ்ளோ பெரியகம்பனியோட நிலைமை என்னாவது? " என்றான் .

" ஹம்... என்னமோ ஆகட்டும் எனக்கென்னவாம் ? என்றவள் , அதெல்லாம் மாமா ... அதான் எங்க அக்கா ஹஸ்பனட் பார்த்துக்குவார் " என்றாள் .

"ஆறு மாதத்துக்கு முன்னாடி யாரோ சொன்னாங்க இந்த கம்பனிதான் என்னுடைய அடையாளம் , இதோட வளர்ச்சி தான் என்னுடைய வளர்ச்சின்னு , இப்ப என்னடான்னா என்னை மேரேஜ் பண்ணி கூட்டீட்டு போய்டுங்கன்னு சொல்றாங்க ...ம், .. என்று புன்முறுவளுடன் கேள்வியாய் புருவம் தூக்கினான் "

அதற்கு அவள் வடிவேலு ஸ்டெய்லில் " அது போன மாசம் இது இந்த மாசம் " என்று மழலையாய் சிரித்து விட்டு பின் கூறினாள் ,
" நீ சொன்ன மாதிரி கம்பனிதான் என்னோட லட்சியம்னு இருந்தேன் , என்றைக்கு உன்னோடு பழக ஆரம்பிச்சனோ அதோட எல்லாத்தையும் மறக்கடுச்சுட்ட , இப்ப உன்னைக் கல்யாணம் பண்றதே என் லட்சியமாகிடுச்சு , என்றாள் .

இவர்கள் இருவரும் சந்தித்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது , இவர்களின் முதல் சந்திப்பு மும்பை நகரில் ஒரு அவார்ட் ஃபங்சனில் அரங்கேறியது . பெஸ்ட் ப்ரேன்ட் விருது , ஜீனியஸ் எக்ஸ்போர்ட்ஸிற்காகா செந்து விற்கும் , சிறந்த காலணி வடிவமைப்பிறற்கான விருது ரஷ்மி க்கும் , மற்றும் லேபர் வெல் ஃபேர் விருது இருவருக்குமே என்று இருவருமே இரண்டு விருதுகளைப் பெற்றனர் .

இதில் லேபர் வெல் ஃபேர் விருது தொழிற்கூடங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளின் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது , இந்த விருது வழங்கும் விழவில் ரஷ்மி கொடுத்த ஸபீச் தான் " இந்த கம்பனிதான் என் அடையாளம் , இதன் வளர்ச்சிதான் என்னுடைய வளர்ச்சி " என்று...

லேபர் வெல் ஃபேர் விருது வாங்கிய இருவரும் தன்னைப் போலவே மற்றவரும் நிர்வகித்திருக்கிறார் , என்று அவர்களுக்கு தங்கள் இருவரின் எண்ண ஓட்டங்கள் , ஒரே மாதிரியானதோ என்று எண்ண வைத்தது , இருவரும் விருதுக்கான வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர் ,

செந்து சிறுவயதில் தன் தந்தையுடன் டையிங் யூனிட்டிற்கு எப்பொழுதாவது செல்லும் பொழுதெல்லாம் அங்கே வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு அந்த வேலையில் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு கொடுப்பது என்பதிலேயே அவன் கவனம் இருக்கும் .

பின்னாளில் அவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள் , இலவச மருத்துவ உதவி மற்றும் , வேலையில் உடல் உழைப்பிற்கும் , ஆபத்தான வேலைகளுக்கு ஏற்ப அவர்களுக்குச் சம்பளம் உயர்வு என்று தன் தந்தையிடம் கூறி அவர்களின் நல்வாழ்விற்கான முயற்சிகளை எடுத்தான் .

அதே போல் ரஷ்மி , தோல் பதனிடுதலில் உள்ள தொழிலார்களின் பாதுகாப்பு , மருத்துவ உதவி , ஊதிய உயர்வு என்று அவர்களின் நலனில் அக்கறைகொண்ட இருவரின் எண்ணங்களும் மனிதநேயம் என்ற ஒற்றைப்புள்ளியில் சந்தித்து .

அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து ,
அடுத்த ஒருமாதத்தில் தோழியின் திருமணத்திற்காக சென்னை வருவதாகச் சொல்லியிருந்த ரஷ்மியை பார்க்கப் போகலாமா வேண்டாமா என யோசித்தது செந்தூரனின் மனது , நட்பின் நிமித்தம் பார்த்து வரலாம் , என சென்று பார்த்து வந்தப்பின் இவர்களின் நட்பு சற்றே நெருக்கமானது , அதன் பின் ரஷ்மியின் பசுப்பிக் லெதர்ஸின் புது ஷோரூம் திறப்புவிழாவிற்கென இவன் கொல்கட்டா செல்ல , இவ்வாறு ஏதோ ஒரு காரணம் கிடைத்தது இருவரும் சந்திக்க ...பின் சந்திப்பு வழக்கமாக மாறிவிட்டது ,

அவளின் அமைதியான ஆளுமை , அலட்டல் இல்லாத சாதனை , கண்ணில் மின்னும் கண்ணியம் என அவளைப் பார்க்கும் போது செந்தூரனுக்குப் பெண்களின் மீதான மரியாதையை அதிரிக்கச் செய்தது , முதலில் நட்பெனப்பட்டது , பின்பு காதலென கண்டுணர்ந்தான் .

அனைவரிடமும் அளந்து பேசி அழுத்தமாய் இருக்கும் அவள் , இவனிடம் இலகுவாய் பழகும் போதும் , அவள் கட்டளையிட்டால் கேட்க ஆட்கள் இருந்தாலும் , செந்தூரனிடம் உரிமையாய் ஊதவி கேட்கும் போதும் , பாராட்டோ புகழோ எதையும் எதிர்பாராமல் கடமையை மட்டும் செய்பவள் , செந்துவின் சிறிய பாராட்டுக்காய் , எல்கேஜி குழந்தையாய் அவனை பார்க்கும் போதும் , அவள் அவனிடம் எதிர்பார்பது அன்பல்ல பேரன்பு என்பதை உணர்ந்தான் , அவளின் கள்ளமில்லா மனம் , கபடமில்லா குணம் , அவ்ப்போது எட்டிப்பார்க்கும் வெகுளித்தனம் , பேரழகைச் சுமக்கும் அவளின் பூ முகம் என , செந்துவின் மனதில் ஆணிவேரென ஊன்றி ஆலமரமாய் தலைத்தது , அவள் மீதான அவனின் காதல்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro