Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அனிச்சம் பூ 13

னியின் ஈரம்பட்டு ஜெயம் இல்லம் எனும் பெயர் பதித்த மார்பல் , பளபளத்துக் கொண்டிருந்தது , செந்தூரன் அதன் பனி துடைத்து மதில் சுவற்றில் படற விட்டிருந்த மலர்க்கொடிகளைச் சரிசெய்து , வாயிலில் நின்று வருகையை எதிர்பார்ததுக் கொண்டிருந்தான்,

அங்கே வந்த அவன் அக்கா செந்தூரி , அந்த மலர் அலங்காரங்களின் அழகில் விழிவிரித்தாலும் , தம்பியை விளையாட்டாய் சீண்டும் பொருட்டு ,
" டேய் செந்து .. என்னடா நைட்டு வீடு நல்லதான இருந்தது , இப்ப என்னடா பூ மார்கெட் மாதிரி இருக்கு ,டேய் உண்மையைச் சொல்லு இது உன் வேலைதான ? எனஆரம்பிக்க ,

செந்து " ஓ ... உனக்கு இதைப்பார்த்தா பூ மார்கட் மாதிரி இருக்கா ? ஏன் சொல்ல மாட்ட ? ஆஸ்ரேலியாலயே கிடன்னு உன்னை விட்ருக்கனும் , போனாப் போகுதுன்னு அம்மா பர்த்டேக்கு வரச்சொன்னேன்ல , என்னைச் சொல்லனும் , ஆமா நீ என்ன இவ்வளவு யர்லியா எந்திருச்சுட்ட எப்பவும் 10 மணிக்குத்தான எந்திருப்ப ?

நான் இப்பவும் லேட்டாதான் எழுந்திருச்சிருக்கேன் இப்போ ஆஸ்ட்ரேலியால 10 மணிதான ? என்ன நான் சொல்றது ? ஹம்..ம்.. ஆனாலு சும்மா சொல்லக்கூடாது உனக்குள்ளேயும் ஒரு ஃப்ளோரிஸ்ட் இருந்துருக்கான் பாறேன் , என்றவளை
அடிக்க கை ஒங்கிய செந்துவிடம் இருந்து , தப்பித்து வீட்டினுள் ஓடினாள் , அங்கே ஓவ்வொருவராக அதிகாலை துயில் எழுந்து வீட்டின் அலங்காரத்தையும் மற்ற ஏற்பாடுகளையும் பார்த்து முகத்தில் வியப்புக்குறியும் , வினாக்குறியும் தாங்கி இருந்தனர் ,

தேவி , " மாமா சொல்லப் போறீங்களா ? இல்லையா ?
இவ்வளவு விடியற்காலையில் யார் வீட்டுக்கு போயிட்டு இருக்கோம் ? திருப்பூர்ல உங்க ஃப்ரன்ட் யார் இருக்கா ? தயவு பண்ணி சொல்லூங்க . இந்த கிறுக்கிய (ஜீவி) கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறா ? "

பாலா , தேவி கேட்கும் கேள்விகளை மெளனமாய் கடந்தவாறு காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் ,

தேனுமா " தம்பி தேவிமாட்ட யாரு வீட்டுக்கு போகிறோம்னு சொல்லிருங்க தம்பி , பாவம் அவங்க நேத்துல இருந்தே கேட்டுட்டு இருக்காங்க " எனக்கூற ..

" இன்னும் கொஞ்ச நேரத்தில நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க போறீங்க , அதற்க்குள் என்ன தேவிமா அவசரம் " என்றான் பாலா .

பாலாவின் கார் பனி வீசும் காலையில் அழகான சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது , அவனை வறவேற்பது போல் சாலையில் மலர்கள் உதிர்கநதிருந்தது ...

ஒரு வழியாக செந்தூரன் கொடுத்த முகவரியில் ஜெயம் இல்லத்தை பாலாவின் கார் நெருங்கிவிட்டிருந்தது , பாலாவின் மனதில் பாசமும் பரவசமும் பரிதவிப்பும் பதட்டமும் போட்டிபோட்டு இதையத்துடிப்பில் இசைமைத்துக் கொண்டிருந்தது ,

செந்தூரன் வாயிலில் நின்று வரவேற்றான் ,

வாங்க மாமா , வாங்க தேவி .. அத்தை , ஹாய் ஜீவிகா .. என்று ஜீவியின் தலை வருடியவன் வாங்க தேனுமா , என்றான் .

ஜீவி வியப்பை விழியில் நிறைத்தாள் , இவனா ? இவன் எப்படி இங்கே ? அன்று அந்த ஹோட்டலின் வரவேற்பரறையில் பார்த்தவன் ,

மாயச் சிரிப்பில்
மனதைப்பறித்தவன் ,
உணர்வுகள் தந்து
உறக்கம் கெடுத்தவன் .

ஜிவிமா , டாடி நேற்று சொன்னேன்ல செந்தூரன் ,

ஜீவியின் இதயம் கண்களை நம்பமாட்டாமல் வேகமாய் துடித்தது ...

ஜீவிகாவின் விழிகளில் அதிர்ச்சியும் ,மகிழ்ச்சியும் அருவியாய் கொட்டியது ,வாய் பேச வழி இல்லாமால் வார்த்தைகள் முட்டியது ..

தேவிமா , செந்தூரன் உனக்கு அடையாளம் தெரியலையா ? என பாலா கேட்க ,

தேவிக்கு எதிர்பாரா இன்பம் கண்ணில் நீரென கரைபுரண்டது , ஆசையாய் அள்ளிக்கொஞ்சிய அண்ணன் மகன் இவன் , நாம் நம் அண்ணன் வீட்டிற்க்கு வந்திருக்கிறோம் ..நிலமை புரிய ஆரம்பித்தது , டேய் செந்தூ ..ஆளே அடயாளம் தெரியலடா...

ஜீவிகா உறைந்தது சில நொடிகள்தான் என்றாலும் , செந்தூரன் அதற்குள் தன் மாமாவிடம் ,

" என்ன மாமா தேவிஅத்தைக்கு சர்ப்ரைஸோ என்னவோ ? ஆனா ஜீவிகாவிற்கு பெரிய சர்ப்ரைஸ் னு நினைக்கிறேன் , ஒரு வார்த்தை கூட இன்னும் பேசல , சரி வாங்க உள்ள போலாம் ..." என்றான்.

வாசலில் இருந்து வீட்டுக்குள் பயணிக்கும் நேரத்திற்குள் படபடக்கும் இதயத்திற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை பாலாவுக்கும் தேவிக்கும்...

வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் பார்த்தது செந்தூரிதான் , பார்த்தவுடன் சில நொடிகள் புரியாமல் விழித்தாலும் அடுத்த நொடிகளில் சுதாரித்து ஹேய் .. மாமா , தேவி என்று ஓடிவந்தவள் , ஷந்தோஷக்
கண்ணீர் தாளாமல்
இருகரங்களையும் விரித்து இருவரையும் அணைத்தாள் , இவளின் சத்தம் கேட்டு ஒவ்வொருவராக வந்து அனைவரும் , ஒன்று சேர அந்த இடத்தில் மகளைப் பிரிந்த தாய் தந்தை , தங்கையைப் பிரிந்த அண்ணன்கள் , என

உணர்ச்சியின்
மழையில்
உறவுகள்
துளிர்த்தது .

பாலாவைக் கண்ட நொடி , பாலாவின் அக்கா ஜெயந்திக்கும் , அப்பா அருணாச்சலத்திற்கும் தவற விட்ட பொக்கிஷம் மீண்டது போல் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது , பேசுவதற்கும் வார்த்தையற்று கண்ணீரே மொழியானது , தன் அக்காவை அணைத்து கண்ணீர் துடைத்து இத்தனை நாள் பிரிவிற்காய் மன்னிப்பு வேண்டினான் ,

ஜீவிகாவின் மீதான அன்பை அருவியாய்க் கொட்டிக் கொண்டிருந்தன அந்த அழகிய உறவுகள்...

செந்தூரனுக்கு கணேஷ் மற்றும் செந்தில் இவர்களையெல்லாம் இன்னும் காணவில்லையே , எங்கே வருகிறார்கள்என்று கேட்கலாம் என் நினைக்கும் போதே வாசலில் அவர்களின் கார் சத்தம் கேட்டது ,

" அம்மா , அப்பா , நீங்க இரண்டு பேரும் வாசலுக்குப் போங்க " , என்றான் செந்தூரன் ,

" யாரது ? " என்பது போல் இருவரும் வாசல் செல்ல செந்தூரனும் சேர்நதே சென்று , மீனாட்சியம்மா ரகுநாதன் அவர்களின் குடும்பம் மற்றும் கணேஷ் குடும்பத்தையும் வரவேற்றனர் .

அவர்களை இங்கே எதிர்பார்த்திடாத பாலா , தேவி , மற்றும் ஜீவிக்கும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது , ஜீவி மீனாட்சியம்மாவையும் ரகுநாதனையும் பார்த்தவுடன் "பாட்டீ..... தாத்தா என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டாள் , தேவியும் பாலாவும் , அவர்களின் தோள் சேர்ந்து உயிர் கொண்ட புன்னகை சிந்த ,

மீனாட்சி அம்மா கணணில் நீர் ததும்பியது , "இனியாவது புள்ளைங்க இரண்டுபேரும் சந்தோஷமா இருக்கனும் , பாலா வெளில தான் சிரிச்சு சந்தோஷமா இருந்தானே தவிர மனசுக்குள்ள எல்லாரையும் பிரிஞ்சு மறுகி தவிச்சுகிட்டு இருந்தான் , தேவியும் , எங்க தான் கவலைப்டடுறது தெரிஞ்சா , பாலா வருத்தப்படுவான்னு மனசுக்குள்ளையே வச்சுக்கிட்டு இருந்தா ... இனி இந்த கவலை இல்ல , இனியாவது இரண்டு பேரும் நிம்மதியா இருக்கனும் " என்றார் கண்ணீரைத் துடைத்தவாறு ...

ஜிவி , " போங்க மா , நான்தான் பாட்டி தாத்தா பக்கத்தில் உட்காருவேன் , நீ இடத்தைக் காலி பண்ணு " என மினாட்சியம்மா ரகுநாதன் நடுவில் உட்காரப் போன தேவியுடன் ஜீவி போட்டியிட ,

தேவி " ரொம்ப பண்ணாதடி நான் கொஞச நேரம் அம்மா அப்ப , பக்கத்துல உட்காந்துட்டு எந்திருச்சு போயிருவேன் , அப்புறம் நீயே உட்காந்துக்க ... எனக்கூற ..

இதைப்பார்த்துக் கொண்டிருந்த , தேவியின் தாய் தந்தை , லீலாவதி ராஜங்கம் தம்பதிக்கு ஏதோ இழந்தது போன்று மனம் வலி கண்டது.

தேவிக்கும் ஜீவிக்கும் இந்தச் செல்லச் சண்டைகள் வழக்கமாக நடப்பது தான், மீனாட்சாயம்மா ரகுநாதன் தம்பதியிடம் , பக்கத்தில் யார் உட்காருவது , சாப்பாடு ஊட்டிக்கொள்வது , மடியில் படுத்துக் கொள்வது என்று அனைத்திற்கும் , அழகாய் நடக்கும் உரிமைப் போராட்டம் .

இதை செந்தூரனும் கவனிக்கத் தவறவில்லை , செல்லச் சண்டையை மனதுக்குள் ரசித்தாலும் , இதைப் பார்த்த ராஜாங்கம் தாத்தா , லீலாவதிப் பாட்டியின் வாடிய முகம் , அவர்களுக்கும் இவர்களுக்கும் இருக்கும் இந்த இடைவெளியை அடைப்பது அவ்வளவு எளிதல்ல என்றே எண்ண வைத்தது ...

பாலா , கணேஷிடமும் செந்திலிடமும் " டேய் அக்யூஸ்டுகளா நான் கூப்பிட்டதற்க்கு , இரண்டு பேரும் வரமுடியாதுன்னு சொன்னது கூட பரவாயில்ல , நான் இன்றைக்கு காலைல கிளம்பும் போது கூட உங்க இருவருக்கும் கால் பண்ணீட்டுத்தான கிளம்பினேன் , அப்பொழுதுகூட ஒரு வார்த்தை சொல்லவில்லை , இப்போ என்னடான்ன நல்லவன் மாதிரி வந்துருக்கீங்க ... " என்று கணேஷின் கையையும் செந்திலின் கையை வழக்கம் போல் அவர்களின் முதுகுக்குப் பின்னே வைத்து திருப்பிக் கொண்டிருந்தான் "

" டேய் போலீஸ் மேலையே கை வைக்கிறியா ? டேய் விடுடா வலிக்குது , என்றான் கணேஷ் .

செந்தில் , " செந்தது தான்டா சர்ப்ரைஸ்னு சொன்னான் " என்றான் .

தொலஞ்சு போங்க என்று இருவரின் கையையும விட்டான் பாலா

ஜீவி , கணேஷ் செந்தில் இருவரிடமும் வநது " ஏன் மாமா எங்களிடம் சொல்லாமல் வந்தீங்க , நம்ம எல்லாரும் சேர்ந்தே வந்திருக்கலாம்ல , எனக்கூற ...

" இப்பத்தாம்மா இந்த " பஞ்சாயத்து முடிஞ்சது மறுபடியுமா " ? என்றான் செந்தில் .

" பாரு அங்கே நிற்கிறானே செந்தூரன் அவன்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி இது ஜீவிமா " என்றான் கணேஷ் ,

ஜீவி அவன் இருக்கும் திசை நோக்கினாள் , அவனோ யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான் , ஜீவி்க்கு இப்பொழுதும் நடப்பது கனவா நிகழ்வா என்றே நம்பமுடியவில்லை , அவன் இருக்கும் இடத்தில் தானும் இருக்கிறோம் என்பதே அவளுக்கு இன்பமாய் இருந்தது .

" என்ன ஜீவி மா இப்போ ஹேப்பியா ? தாத்தா பாட்டி மாமா அத்தை எல்லாரையும் பார்த்தாச்சா ? என கணேஷ் கேட்க ,

" இனி நம்ம ஜீவிய கையிலையே பிடிக்க முடியது ... என்ன ஜீவி , எங்களையெல்லாம் மறந்திடுவ " என்றான் செந்தில் ,

அவன் சொன்ன அடுத்த நொடி ஜீவியின் கண்களில் கண்ணீர்தேங்கியது " செந்திலையையும் கணேசையும் ஒரு கோபப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தாள் ,

" ஏய் .... ஜீவி மா கணேஷ் செந்தில் இருவரும் அழைத்தும் அவள் திரும்பாமல் நடந்து கொண்டிருந்தாள் , அவள் கண்களில் நீர் திவலைகள் உதிர்ந்துகொண்டு இருந்தது ,

" டேய் உனக்கு அறிவிருக்கா புள்ளகிட்ட என்ன பேசறதுன்னு இல்ல , பாரு அவ அழறா... " என்று செந்திலைக் கடிந்தான் , கணேஷ்

" இல்ல கணேஷ் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் " என்றான் செந்தில் .

" உனக்குத் தெரியாதா ? அவ ரொம்ப சென்ஸிட்டிவ்னு ஏன்டா .."
என்று கூறிவிட்டு ஜீவி யின் பின்னே சென்றான் , செந்திலும் அவனை பின்தொடர்ந்தான் , ஜீவி கண்ணில் நீர்ததும்பிய கண்ணீர் , எதிரே நின்ற செந்தூரனின் பிம்பத்தை மங்களாக்கியது , அந்தக் கண்ணீரைக் கட்டுப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டாள் , ஜீவியின் கண்ணில் கண்ணீரை பார்த்த அந்த நொடி செந்தூரனின் இதயம் அதிர்ந்து துடித்தது அவனையும் தாண்டி ஒரடி எடுத்து வைத்தாள் அவளின் பின்னே வந்த கணேசும் , செந்திலும் , ஆளுக்கொரு கரங்களைப் பிடித்து அவளைத் தடுத்து நிறுத்தினர் ,

ஜீவிமா சாரிடா , மாமா விளையாட்டுக்குத்தான் சொன்னேன் , இதுக்குப் போய் இப்படி ஃபீல் பன்னலாமா ? என் செல்லத்தை பத்தி எனக்குத் தெரியாதா ? இதைக் கேட்க கேட்க ஏனோ அவள் கண்களில் கண்ணீர் கட்டுப்பாடின்றி வந்து கொண்டிருந்தது ,

கணேஷ் ஜீவியின் கண்களைத் துடைத்தான் , செந்தில் தோளில் சாய்த்து ஆறுதல் கூறினான் ,

மாமா நீங்க இரண்டு பேரும் விளையாட்டுக்கு கூட நான் மறந்துடுவேன்னு பேசக்கூடாது , அப்படி பேசுனீங்கன்னா இந்த நிமிஷமே இந்த வீட்ல நாம இருக்க வேண்டாம், வாங்க நம்ம வீட்டுக்கு போலாம் , என்றாள் ஜீவி.

நடந்த அனைத்தையும் இரண்டு அடி இடைவெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த செந்தூரனுக்கு ஏனோ சற்றுமுன் இருந்த உற்சாகம் எல்லாம் காணமல் போயிருந்தது ..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro