காமம்
[Chapter 2- அவளதிகாரம் விளக்கம்:
கற்பனையை எழுதலாம் ஏன் அரசர்களும் அரசிகளும் வேதாளங்களும் கதையில் இருக்கலாம். ஆனால் அவ்வித கற்பனையில் கூட அரசி கணவனை எண்ணி வாழ்வதும் வாழ்க்கையில் காதலைத் தவிர எதுவும் அறியாதவளாய் இருப்பதும் தான் தவறு என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
நிஜத்தில் நடக்காததை கதையில் அரங்கேற்றுகிறோம் ஆனால் அதில் பெண் காதலில் கவனம் செலுத்தினால் ideal state என்ற தங்களின் எண்ணம்...]
காமம்
கையைப் பிடிப்பதும் பிறகு கட்டி அணைப்பதும் பிறகு முத்தமிடுவதை இதழ் பதித்தான் என்று குறிப்பிடுவதும் அதன் பின் அவன் கைகளில் கறைந்தாள் என்று காமத்தை எழுதுகிறார்கள், இதன் நடுவில் double meaningஇல் ஒரு கிளுகிளுப்பு உரையாடல். நீங்கள் பாதியில் முடித்த காமத்தை அந்த காலத்திலேயே ஆண்டாள் சொல்லிவிட்டாள் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒரு பரையனின் மேல் காதல் கொண்ட ஆண்டாள் அவளின் காதலை வெளியில் சொல்ல முடியாமல் கடவுளுக்குப் பாடியிருப்பாள். நீங்கள் சொல்ல தயங்கிதைலாம் அவள் அக்காலத்தில் கூறியிருப்பாள். தன் காதலனின் உதடுகளின் ருசி என்ன என்று சங்கிடம் கேட்டவள். சரி, காமம் தான் எழுத கூச்சப்படுகிறீர்கள் அல்லது நாகரிகம் கருதி அதை ஆண்டாள் போல் மறைமுகமாய் எழுத நாம் இலக்கியவாதிகள் அல்ல. காதலை யாவது அழகாய் எழுதலாமே?
காமம் காதல் அல்ல. காதல் வெகு மெல்லிதாய், மெல்லினமாய், நமக்கு தெரியாமலே தென்றலாய் தொட்டுவிட்டு ஓடும் ஒரு நொடி interaction. தலைவி பிரச்சனையைப் பற்றி கவலைப்படும்போது அவள் கரத்தைப் பற்றி அதுலாம் பார்த்துக்கலாம், வா என அவளை சாதாரண நிலைக்கு எடுத்துச் செல்வது காதல். திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் தாங்கள் கவனித்திருப்பீர்கள் குறிப்பாக மணிரத்னமின் படங்களில்.
இலகிய காதலில் உள்ள வெகுளித்தனமான குறும்பு அதைக் காமத்திலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ரோஜா படத்தில் ,"நான் ராட்ஜசன் இல்ல. கொஞ்சம் நல்லவன் தான். Sorry, " என்று தயங்காமல் மன்னிப்பு கேட்கும் இளகிய காதல். அதே நேரம் சிகரெட்டை மனைவியிடம் திணித்து விளையாடும் வெகுளித்தனமான காதல்.
"இங்கேயே இரு, Paris போகாத," என கேட்கும் இளகிய காதல். தனக்காக் காத்திருக்கிறான் என்று விரைந்தால் அவம் ஆபீஸ் கீழ் தான் உட்கார்ந்து இருப்பதைப் பார்க்கும் வெகுளித்தனமான காதல் ஓகே கண்மணியில் தென்படும்.
பாம்பே படத்தில் மாதக்கணக்கில் லெட்டர் எழுதி என்கூட வந்துரு என்று ஏங்கும் காதல். பர்தா அணிந்திருப்பதால் ஆள் தெரியாமல் ஹீரோ காதலை சொல்லும்போது அவனைக் கிண்டல் செய்யும் பெண்ணின் வெகுளித்தனமான காதல்.
காமத்துக்கு காதல் எனும் பசையை பூசாதீர்கள். இரண்டும் வெவ்வேறு, ஒன்று இன்னொன்று விட பெரிதல்ல. இரண்டுமே கலந்தது தான் attraction. ஆனால் இரண்டும் கெட்டு இரண்டும் குழம்பி... காதலுக்கென அழகுண்டு, குறும்புத்தனம் உண்டு. காமத்துக்கு வேறொரு ஈர்ப்பு உண்டு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro