Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

05. Party

Andrian ன் அப்பாவும் என்ன என்று தெரியாமல் பதறி போக, அங்கே பெரிய கூட்டம் ஒன்றே கூடியது.

அவர் எழுந்து பார்க்க, அவரோ cheese cake ன் மீது கையை ஊன்றி மொத்த cake உம் சரிந்து விழுந்து கொண்டிருந்தது.

அங்கு இருந்த அனைவரும் அதனை சரி செய்வதில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்க, Andrian ன் அப்பா samuel ஐ hotel முன்வாசலைக்கு சென்று andrian ஐ சற்று தாமதப்படுத்துமாறு சொல்லி வைத்தார்.

Suprise ஐ திறந்து பார்த்த andrian இதுக்காகத்தான் அப்பா நேற்று வேலை உள்ளது என கூறியதை எண்ணிப் பார்த்தான்.

பிறகு அந்த ஆடையை அணிந்தான். அப்பெட்டியில் ஏதோ ஒரு முகவரி குறித்து இருக்க, அதனை குறித்துக் கொண்டு அவ்விடத்திற்கு சென்றான் andria.

அங்கே வாசலில் Samuel  நின்று கொண்டிருந்தான். அவனிடம் என்ன நடக்கிறது என வினவ அவனும் தனக்கு எதுவும் தெரியாது என்று கைகளை காட்டினான்.

சற்று இங்கே அமர்ந்திருங்கள் என்று பணியாளர்கள் இருவரையும் அமர வைக்க, இருவரும் அமர்ந்து தனது போனில் பார்ட்னர்ஷிப் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

Andrian ன் பக்கத்தில் திடீரென ஒருவன் விழுந்த சத்தம் கேட்டது. என்ன என்று andrian திரும்பி பார்க்க ஒருவன் கீழே விழுந்து இருந்தான் அவனை இன்னொருவன் தூக்கிக் கொண்டிருந்தான்.

தூக்கிவிட்ட அவனுக்கு நன்றி கூற, அதை கூட காதில் வாங்காது அவ்விடத்தை விட்டு அவசரமாக விலகிச் சென்றான்.

ஆனால் அவனது முகமோ எதுவுமே தெளிவாக விளங்கவில்லை ஆனால் அவன் அணிந்திருந்த ஆடை andrianக்கு பரீட்சமாக இருந்தது.

இது எங்கேயோ கண்டிருக்கிறோமே என்று நினைவை அசைபோட்டு மீட்டுகையில் andrianனின் அப்பா அவனை தூரத்தில் இருந்து அழைத்தார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தனது மகனை கட்டி அணைத்து விட்டு, மூவரும் இணைந்து அடுத்த மாடிக்கு சென்றனர்.

அங்கே பலவிதமான உணவுகளும் பல வர்ணங்களுடன் பலூன்களும் மலர்களும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

Andrianனும் தனது பிறந்தநாளை சந்தோசமாக அவனது நண்பர்களுடனும் குடும்பத்தார்களுடனும் இணைந்து கொண்டாடி கொண்டிருந்தான்.
.
.
.

Kate விழித்திருக்க, அவள் அவளது நண்பியின் வீட்டில் நண்பியின் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

மயக்க நிலை இயல்பு நிலைக்கு மாறியதும் தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்த அவள் தன் முன்னால் இருந்த நண்பியை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

"Mum dad எங்கே" என அவளிடம் பதற்றமாக வினவ, அவளோ பதிலுக்கு மௌனமாக இருந்தாள்.

எங்கே என்று கேட்க அவளும் பெருமூச்சு விட்டபடி கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

"Kate! நேற்று எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.  அதில் உன் அப்பா என்னை உனது வீட்டிற்கு வரும்படி கூறினார் அதுவும் அவர் ஏதோ பதற்றமாகவும் பயத்துத்துலயும் கூறினார். நான் ஏன் என்று கேட்க முன் போனை கட் பண்ணிடாரு.

நானும் எனது அப்பாவும் சேர்ந்து உனது வீட்டிற்கு வரும்போது நீ உனது கட்டிலில் மயங்கி நிலையில் இருந்தாய் ஆனால் உனது பெற்றோர் யாரும் வீட்டில் இருக்கவில்லை மாறாக இந்த கடிதம் மட்டும் நிலத்தில் கிடந்தது" என அக்கடிதத்தை நீட்டினாள்.

கடிதத்தை பிரித்த கேட்டிற்கு அதிர்ச்சி மட்டுமே மீதி இருந்தது.  அதில் என்னை அவமதித்த அனைவருக்கும் இது தான் பரிசு. என எழுதி அவளின் பெற்றோரின் கை கால் கட்டப்பட்ட படமும் இப்படிக்கு என்று எழுதி கறுப்பு காகத்தின் இலட்சனையும் இருந்தது.

இதனை வாசித்த kate கண்களில் இருந்து நீர் தாரைதாரையாக வடிய, அவளின் நண்பியோ அவளை கட்டியணைத்தாள்.

"உன் அம்மா அப்பா மட்டுமில்ல, இன்னும் 5 பேரை காணவில்லையாம். அவங்கட வீட்டுலையும் இதே மாதிரி ஒரு கடிதம் கிடைச்சிருக்காம்!" என்றாள்.

நண்பி Tania ன் அம்மா kate ன் அக்காவிற்கு எவ்வளவு போன் செய்தாலும் அது வேலை செய்யவில்லை.

ஆகவே kate அவளை சந்திக்க sparkling town கு செல்ல ஆயத்தமானாள். அவளை தனியாக செல்வதை வரும்பாத tania இன் பெற்றோர் tania யும் அவளுடன் செல்ல அனுமதித்தனர்.

'Tania எனக்கு என் வீட்டுக்கு முதல்ல போகனும்...."
.
.
.
அங்கே குதூகலமாக சென்ற பிறந்தநாள் party ஐ இடைநிறுத்தும் வகையில் மாலை எட்டு மணி அளவில் திடீரென முழு ஹோட்டலிலும் உள்ள மின்குமிழ்கள் அணையத் தொடங்கியது.

திடீரென்று இந்த செயலினால் திகைத்த andrian ன் அப்பாவும் samuel ன் அப்பாவும் இணைந்து ஹோட்டலில் உள்ள மேனேஜரை பார்க்க சென்றனர்.

இதற்கு இடையில் மற்றவர்கள் தொலைபேசியில் உள்ள மின்குமிழ்களை ஒளிருடைய செய்து கொண்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் தத்தம் இடத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

ஹோட்டல் மேனேஜரோ அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கோ என்ன நடந்தது என தெரியாது என்று கூறினர்.

உடனடியாக சென்று மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடத்தினை செக் பண்ண சென்றனர்.

அங்கே யாரோ main வயரினைல் வெட்டி விட்டதாக அறியக் கிடைத்தது.

இதனை செய்தவர் யார் எனவும் இதற்கு முக்கிய காரணம் என்ன எனவும் விசாரிக்க, andrian ன் அப்பாவும் samuel ன் அப்பாவும் போலீஸ் நிலையத்திற்கு அறிவித்து சில போலீஸ் காரர்களையும் வரும்படி உத்தவிட்டனர்.

அப்பா வரும் வரை அமைதியாக காத்து கொண்டிருந்தனர் மற்றவர்கள்.

பசித்திருந்த sameul மெதுவாக தொலைபேசியில் வெளிச்சத்துடன் சென்று இரண்டு மூன்று பிஸ்கட்டுகளை வாயில் அமுக்கியவாறு தீன் பண்டங்கள் அடுக்கப்பட்டு இருந்த மேசையில் சாய்ந்து கொண்டிருந்தான்.

திடீரென அவன் கை வைத்த பீங்கானில் இன்னொரு கையை அவன் தொட்டான்.

அக் கையோ மிகவும் குளிர்ச்சியாகவும் ஏதோ இரும்பு கல் போலவும் அவனுக்கு தோன்ற, உடனடியாக தொலைபேசி வெளிச்சத்தை அதன் மேல் அடித்தான்.

அது தனி கை போல அவனுக்குத் தோன்ற மேலும் ஆராய்ந்தான்.

அக்கை ஏதோ அயன் மேன் கை போல தோன்றியது. அவன் அடித்த வெளிச்சத்தில் அக்கை உடனே மறைந்தது.

அந்த திடீர் சம்பவத்தில் பயந்த samuel. சத்தமிட்டான். உடனே மேசைக்கு கீழே இருந்த அந்த கைக்கு சொந்தமான நபர் பதறி அடித்து எழ முற்பட மேசை ஆடத் தொடங்கியது.

இருட்டில் மேசையும் மேசை போர்வையும் ஆடுவதை கண்ட அங்குள்ளவர்கள் ஏதோ பெரிய இராட்சத விலங்கு என எண்ணி கத்த தொடங்கினர்.

உடனடியாக அவ்விடத்திற்கு வந்த andrian னின் அப்பாவும் samuelன் அப்பாவும் தனது துப்பாக்கியை அந்த மேசைக்கு நீட்டினார்கள்.

Samuel லோ தனக்கு தான் துப்பாக்கி நீடுகிறார்கள் என்று நினைத்து கத்தி ஆரவாரம் செய்ய, அவனை தனது பக்கம் இழுத்தான் andrian.

மேசையும் போர்வையும் கீழே விழ அங்கே ஒரு உருவம் தனது முகத்தை மறைக்கும் வண்ணம் ஆடையை அணிந்து இருந்தான்.

இவனைக் கண்ட மற்றவர்களும் திகைத்து நிற்க,  andrian யின் அப்பா " நீ யார்? இங்க என்ன பண்ணுற?" மௌனத்தை பதிலாக கொடுத்தான்.

மீண்டும் "யார் நீ? முகத்தை காட்டு!" என்று கேட்க அவனோ அவ்விடத்தை விட்டு துளியும் அசைக்கவில்லை.

Andrian யின் அப்பா samuel ன் அப்பாவிடம் "நீ துப்பாக்கியை நீட்டிக்கொண்டிரு நான் சென்று அவரின் முகத்தை பார்க்கிறேன்"  என்றான்.

Samuel ன் அப்பாவும் சரி என்று தலை ஆட்ட அவர் முன்னோக்கி சென்று கொண்டிருந்தார்.

இங்கு andrian பதறிப் போயிருந்தான்.

அவனின் முகத்தை திறக்க முற்பட, அந்த உருவத்தில் இருப்பவனோ "என் அருகில் வராதீர்கள். நான் பயங்கரமானவன். உங்களுக்கு தான் ஆபத்து. வேண்டாம்!" என்று கூறவும் andrian ன் அப்பா அவனை பிடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

அந்த நேரத்திலே அனைவரியதும் தொலைபேசி மின்குமிழ்களும் அணைந்தது.

இப்பொழுது முழு இடமும் இருட்டாகவே இருக்க அனைவரும் பதறிப் போனர். ஆரவாரம் இட்டனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்.

Andrian "Dad Dad!" என்று அழைக்க, அங்கிருந்தோ எவ்வித சத்தமும் வரவில்லை. மாறாக அனைவரினதும் கூச்சல் சத்தம் மட்டும் கேட்டது.
.
.
.
அந்தக் கிழவனும் ஏதோ கம்ப்யூட்டரில் அடித்துக் கொண்டிருக்க, " இன்னும் நீ எத்தனை பேரை இப்படி பண்ணுவ!? நீ இப்படி செய்றதால உனது உயிருக்கு தான் ஆபத்து!" என எச்சரித்தாலும் அவனுக்கு தான் அந்த தகவல் போய் சேரவில்லை.



Kate sparking Town கு வருவாளா?

Andrian ன் அப்பாவுக்கு என்ன நடந்தது?

யார் இந்த அறியா நபர்?

Vote and comment!
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro