Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

!!16!!

ஒருவழியாக வீட்டில் உள்ளவரிடம் சொல்லிவிட்டு மையூ உடன் கார்த்திக் கிளம்பி செல்ல , நந்தினியும் சொன்னப்படி இணைந்துக்கொண்டாள் அப்போதுதான் அவர்களை பின் தொடர்ந்தது அந்த கருப்பு நிற பென்ஸ் கார்.... இது ஏதும் தெரியாத கார்த்திக் நந்தினியின் சொல் படி நகரத்தில் இருந்த பெரிய மால் முன்னாள் காரை நிறுத்தினான் இவர்களை தொடர்ந்த வந்த அந்த காரும் இவர்களைவிட்டு சற்று தள்ளி நின்றது அந்த காரில் இருந்து வெள்ளைநிற டி -ஷர்ட் அதற்க்கு ஏற்றதுபோல் நீலநிறத்தில் ஜீன்ஸ் அணிந்து இருந்த ஒரு நெடியவன் இறங்கி மேலும். அவர்களுக்கு இடையே இரண்டு அடி இடைவெளி விட்டு பின்னால தொடர்ந்தான் , நந்தினி அங்கே இருந்த டேபிளை காட்டி இங்கையே உட்காரலாம் கார்த்தி நாம என்று சொல்லிவிட்டு அவனோடு அமர்ந்துகொண்டாள்,மையூ அமர போகையில் அவளை தடுத்த நந்தினி ,மையூ ப்ளீஸ் நீ கொஞ்சம் இந்த இடத்தை சுற்றி பார்த்துட்டு வாயேன் அதுக்குள்ள நான் கார்த்திக் கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசிக்கிறேன் .. இதை கேட்ட இங்க இருந்த இருவரும் அதிர்ந்து விழிக்க அதிர வேண்டியவலோ இப்பிடித்தான் நடக்கும் என்று முன்பே தெரிந்ததுபோல் சரி என்று ஏதும் சொல்லாமல் அங்கே இருந்து நகர்ந்து சென்று விட்டாள் கார்த்திக் மற்றும் அந்த நெடியவனும் தான் அதிர்ந்து போனது .



மையூ சென்றுவிட்டதை பார்த்த நந்தினி ஹப்படா போய்ட்டா . என மேலும் கார்த்திக்கை நெருங்கி அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து , கை கோர்த்து படி . எவ்வளோ நாள் ஆச்சு கார்த்தி உன் கூட இப்பிடி அவுட்டிங் வந்து , உன்கூட இப்பிடி பக்கத்துல உட்காந்து பேசி என ஏதோ ஏதோ பேச . ஆனால் கார்த்திக்கின் கவனமோ. நந்தினியின் பேச்சில் இல்லாமல் தன்னை விட்டு தள்ளி சென்ற மையூவிடம் தான் இருந்தது மனதுக்குள் இவள நான் பாதிக்கவே இல்லையா ,இவள நினைச்சு ஒவ்வரு நாளும் எனக்கு பைத்தியமே பிடிக்குது ஆனா இவ ? என நினைத்த படி .. பார்வையால் அவளை தொடர்ந்தான் அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த நெடியவன் உட்காந்து இருந்த இருவரையும் முடிந்த மட்டும் முறைத்து விட்டு மையூவை நோக்கி சென்றான் அவ்வளோ அங்க இருந்த ஒவ்வரு பொருட்களையும் ஆசையாய் வருடிவிட்டு வேடிக்கை பார்க்க அப்போதுதான் அவளுக்கு தான் பணம் எடுத்து வரவில்லை என்று ஞாபகம் வந்தது ..அட கடவுளே கிளம்புற அவசரத்துல காசு எடுத்துட்டு வராம வந்துட்டோமே இப்போ எப்பிடி இந்த பொம்மை எல்லாம் எப்படி வாங்குறது என்கிற யோசனையில் நிற்க . அவளை பார்த்த இரு ஆண்களும்... " உதவின்னு வாய்யே திறந்து கேட்குறாளா பாரு என்கிற எண்ணத்தில் தான் நினைத்துக்கொண்டார் மையூவை நோக்கி செல்லலாம் என்று 

கார்த்திக்

மனது பரபரத்தாலும் கார்த்திக்கை பிடித்து நிறுத்தி கொண்டாள் நந்தினி . ஆனால் அங்கே நின்ற நெடியவனோ. எந்த ஒரு கட்டுப்பாடு இன்றி விஸ்மையா ஆசையாய் வருவடுத்தெல்லாம் ஒரு ட்ரொலியில் அடிக்கி கொண்டே அவளை அவ்வளோ நேரம் மையூவை கவனித்து கொண்டு இருந்த . கார்த்திக் அப்போது தான் அங்க மையூவை தொடர்ந்தவனை கவனித்தான் " யார் அது . என்கிற யோசனையில் இருக்க இப்போது நந்தினி பேசுவது முற்றிலும் அவன் காதுக்கு கூட எட்டாமல் போய்விட்டது மேலும் அவள் பேசுவது எரிச்சல் கிளப்ப.அதுக்குமேல் நந்தினி பேசுவது பிடிக்காமல் கார்த்திக் அவள் இடம் .. நந்து போதும் எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் நேரம் அமைதியா இரேன் . என சொல்லிவிட்டு மையூவை தொடர்வது யார் என்று கவனிக்க ஆரம்பித்தான் . நந்தினிக்கு சந்தேகம் வராமல் இருக்க ... இருவருக்கும் உணவை வரவழைத்த சாப்பிடறது போல் பாவனை செய்த படி அமர்ந்து இருந்தான் .. மையூ புத்தகம் அடிக்கி இருந்த பக்கம் வர. அப்போதுதான் அந்த நெடியவன் மையூவின் கண்களை பின்னால் நின்று மூடினான் மையூ, " ஹே யாரு அது . என பயத்தில் திமிர.. அவனோ, " ஹே பாப்பு யாருன்னு கண்டுபிடி . " குரலை வைத்து அது யார் என்று மையூ கண்டுபிடித்து விட சந்தோஷத்தில் . ," டேய் நட்டு கண்டுபிடிச்சுட்டேன் "


"அவனோ , அறிவு தான் போ நீ என கேலி செய்தான் "

டேய் என்ன கொழுப்பா , அவன் தோளில் செல்லமாக அடித்தாள் மையூ" 


 இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த கார்த்திக்கின் மனதில் , சுனாமி வராத குறையை புயல் அடித்து வீச , யாரு டா இவன் நமக்கு சக்களத்தன் என்கிற எண்ணத்தோடு சந்தோஷை முறைத்த படி அமர்ந்து இருந்தான் அப்போது தான் அவனுக்கு பொட்டில் அடித்தது போல் இன்மை உரைத்தது என்னவென்றால் மையூவை அவன் மனதளவில் மனைவியாய் ஏற்று கொண்டான். நந்தினியை விட்டு கொடுக்க முடிந்தவனால் மையூவை வேறு ஒருவர் உடன் சேர்த்து பார்க்க அவனால் முடியவில்லை என்று அவன் மனதிலும் காதல் காற்று பலமாக வீச ஆரம்பித்தது ஆனால் அது மையூக்காக " சந்தோஷ் எதோ சொல்லி மையூவின் கன்னத்தை பிடித்து ஆட்ட அதற்க்கு மேல் அவனுடன் மையூ பேசுவது பொறுக்க மாட்டாமல் .. கார்த்திக் எழுந்து விட அதை பார்த்து நந்தினி , " என்ன ஆச்சு கார்த்தி.. ஏன் எழுந்துட்ட , சாப்பிடாம... " அவளை கடுப்புடன் பார்த்து மனதுக்குள் " ( அவனவன் வாழ்க்கையே போற நிலைமைல இருக்கு இப்போ இந்த சாப்பாடு தன ரொம்ப முக்கியம் போடிங்... என அவளை திட்டிவிட்டு . ) இதோ வரேன் நந்து . சொல்லிவிட்டு....நாலே எட்டில் மையூவை நெருங்கிய கார்த்திக் அவளிடம் மையூ போலாமா. " என கேட்க அவனை பார்த்து மையூ வாங்க,நந்து கிட்ட பேசியச்சா... "இப்போது மையூவின் கேள்வியில் மேலும் எரிச்சல் தான் வந்தது கார்த்திக்கு மனதுக்குள் ( ஆமா பெரிய உலக பொருளாதாரத்தை பத்தி பேசினா , ) ஹ்ம்ம் பேசியாச்சு. நாம போலாமா இப்போ. ஆமா சார் யாரு . சொல்லவே இல்லை என அப்போது தான் சந்தோஷை. பார்ப்பது போல பார்த்து கேட்க

மையூ பெருமையாய் சந்தோஷின் கையே கட்டிக்கொண்டு அவன் கையே கட்டிக்கொண்டு அவன் கையில் சாய்ந்தபடி ," இவன் தான் சந்தோஷ். என் அத்தை பையன். . அத்தை கூட அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாங்களே .

" கார்த்திக், " ஓ , அவங்க பைய்யனா . ஹலோ மிஸ்டர் சந்தோஷ் " என கை நீட்ட

சந்தோஷ் பதிலுக்கு "ஹாய் ப்ரோ . என கார்த்திக்கின் கை பிடித்து குலுக்கினான்


ஏனோ ப்ரோ எங்கிற வார்த்தை அந்த நிமிடத்தில் இருந்து கார்த்திக்கு பிடிக்காமல் போய்விட்டது ( நான் உனக்கு ப்ரோ வா டா ) என மனதுக்குள் அவனால் எரிச்சல் மட்டுமே பட முடிந்தது அவனது முக மாற்றலை கவனித்த சந்தோஷ். : இனிமேல் தான் டா உங்களுக்கு இருக்கு. என கருவியே படி ...... பிறகு சந்தோஷ் . மையூவை பார்த்து .. ஒய் வாலு கண்ணை மூடு . அவ்வாறு சொன்னவனை நிமிர்ந்து பார்த்து , மையூ , ஏன் டா . மாட்டேன் போ என முகத்தை திருப்பி கொள்ள


நீ இப்பிடி எல்லாம் சொன்ன கேட்க மாட்ட .என சந்தோஷ் .தன் பாக்கெட்டில் வைத்து இருந்த வெல்வெட் துணியை எடுத்து அவள் மறுக்க மறுக்க அவள் கண்களில் கட்டிவிட ..


இதை அனைத்தும் கார்த்திக் வெறுப்புடன் நந்தினி ஆச்சரியதுடனும் பார்த்து கொண்டு இருந்தாள் ...இப்போது நந்தினிக்கு மெல்ல மையூ மெல் பொறாமை என்னம் கிளம்பியது.... மனதுக்குள். அங்கே சந்தோஷ் கொண்டு வந்து அடிக்கியே பொருட்களை பார்த்து... யார் இவன்.. இவளுக்கு இவன் என்ன வேணும். என்று அவள் யோசிக்கஅதற்குள் . ஒன். டூ. த்ரீ... என சொல்லி சந்தோஷ் .....மையூவின் கண்களில் இருந்த கட்டை அவிழ்த்து விடமையூ தன் கண்களை திறந்து. அவள் முன்னால் இருந்த பொருட்களை எல்லாம் பார்த்து... சந்தோஷ்......என மகிழ்ச்சியில் அவனை இடுப்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் அதை பார்த்த கார்த்திக்கோ மனதுக்குள் கொலைவெறியே கிளம்பியது சந்தோஷின் மேல் பிறகு மையூவிடம் பார்வையே திருப்பி மனதுக்குள் எனக்கும் கை இருக்கு இடுப்பு இருக்கு கட்டிபிடிச்சுக்கலாம் அதென்ன அவன் பெரிய அப்பாட்டக்காரா என பொறுமியே படி நின்றான் அதை பார்த்த சந்தோஷ் மெல்ல சிரித்த படி... எல்லாம் உனக்கு தான் ..


மையூ தன் இரு விழிகள் விரித்து ," எல்லாமே எனக்கா.. நான் சும்மா தான் எடுத்து பார்த்தேன் அதையெல்லாமா இப்பிடி வாங்கி குவிப்ப போடா லூசு..


சந்தோஷ், .." உன்ன எனக்கு தெரியாதா. கல்யாணத்துக்கு வந்து நெறைய்ய செய்யணும் ஆசை பட்டேன் அதான் இப்பிடி சோ ஏதும் பேசாம எடுத்துக்கணும் சரியா என அவன் செல்லமாக மிரட்டமையூவும் . ," சரி சரி.. என அவன் கொடுத்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு . போலாமா நந்து .. கேட்கஅவளோ சந்தோஷை. பார்த்த படி ஹ்ம்ம் போலாம் சொல்லமையூவும் , தன் பங்கிற்கு, " நீயும் வா சந்தோஷ் வீட்டுக்கு ""இல்லைமா , நீங்க போங்க நான் இன்னும் ஒரு நாள் வரேன் கொஞ்சம் வேலை இருக்கு.. என சந்தோஷ் மறுத்து விட .மையூ, " கண்டிப்பா வரணும் ... என சொல்லிட்டுவிட்டு கிளம்பினாள்.. போகும் போது நந்தினி இவனை திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள்.......வீட்டுக்கு வந்த கார்த்திக்கோ யாரிடமும் பேசாமல் தனது அறைக்கு சென்றுவிட்டான் ,கௌசல்யாவோ மகள் கையில் ஏதும் இல்லாமல் மையூவின் கையில் இருந்த பைகளை பார்த்து நக்கலாக என்னம்மா புதுப்பொண்ணு கடையே விலைக்கு வாங்கிட்ட போல இருக்கு


இல்லைங்க நான் வாங்கல எல்லாம் சந்தோஷ் என்னோட அத்தை பையன் தான் வாங்கிக்கொடுத்தான் என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு போய் விட்டாள்


கார்த்திக்கின் மனதில் இனம் புரியாத . வலி. உண்டானது.. ஏன் என்று புரிந்தாலும் அதை எப்பிடி சரி செய்வது .. என்று தான் விளங்கவில்லை.. . எந்த வழி தேர்ந்து எடுத்தாலும்..மையூவையும் அது பாதித்து விட கூடாதே என்கிற பயத்தில் ..அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தோன்றாமல் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் .......இங்க ஹோச்பிடலுக்கு வந்த. சந்தோஷ் ..... தனது மெயில் எல்லாம் சரி பார்த்தான் . அதில் ஒரு மெயில் தான் பார்க்காமல் இருப்பது தெரிய அதை திறந்துபார்த்தவனுக்கோ .. தான் இவ்வளோ நாட்கள் பேசி கொண்டு இருந்த க்லைன்ட். கார்த்திக் .. மையூவோட .... என யோசிக்க யோசிக்க . அப்பிடி ஒருக்கா கூடாது கடவுளே.. என வேண்டிக்கொண்டு. கார்த்திக்கு பதில் மெயில் அனுப்பினான்.அதாவுது...மிஸ்டர் கார்த்திக். நான் இந்தியா திரும்பிவிட்டேன் நீங்கள் உங்கள் மனைவியை அழைத்து கொண்டு கீழே கொடுத்து இருக்கும் ஹாஸ்பிடல் விலசத்திற்கு அழைத்து வரவும்...அவன் அனுப்பிய மறு நொடி

கார்த்தி ,

நன்றி சார் நாளைக்கே. உங்களை வந்து நாங்கள் சந்திக்கிறோம் என்றுபதில் அனுப்பிவைத்தான்...இனி நாளைக்கு இந்த் மூவருக்கும் என்ன காத்து இருக்கிறது என்று.. விடிந்தால் தான் தெரியும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro