Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சாரல் - 3

அவன்.. எங்க  அம்மா  குழந்தை.. காணோம்." என தேட..

அவனது கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல்.. சாந்தி அவர் வேலையே பார்த்து படி இருந்தார்..
அம்மா உங்கள தான் குழந்தையே எங்கன்னு கேட்டேன்..
" சாந்தி..  " வேண்டாம்  பா  அந்த குழந்தை  நமக்கு வேண்டாம்.. என் பொண்ண  கொன்ட  அந்த   குழந்தை  நமக்கு   வேண்டாம் அதான்  நான் தான்  வெள்ளைசாமி கிட்ட  கொடுத்து அனுப்பிவிட்டேன் என்று  சாந்தி  சொல்ல...
தேவன்  அதிர்ந்து விட்டான்..."   அம்மா  என்ன  அம்மா  சொல்லுரிங்க...   என அவன்  அலற....
சாந்தி.. , " தேவா  ."நான் சொன்னது தான் இனி அந்த குழந்தை நம்ம வீட்டுக்குள்ள... வர கூடாது .. அப்பிடி வந்தா நான் மனுசியா இருக்க மாட்டேன் ..என சொல்லிவிட...
இப்போது  அவனுக்கு  தான்  அம்மாவின்  மேல்  கோபம்  வர..  ஆனால்  இப்போது  குழந்தை தான்  முக்கியம்  என்று  அவன்  ஏதும் சொல்லாமல்..   வெளியே  சென்றுவிட்டான்....
சங்கர்  மற்றும் அரவிந்தன் இந்த செய்தி  கேட்டு  மேலும் நொந்து விட்டார்கள்..." வாணியின்  மரணத்துக்கும்  அந்த  பிஞ்சி.. குழந்தைக்கும்  என்ன  சம்பதம்  அது  என்ன பாவம்  செய்தது...  பெண்  என்பவள்  இறக்கம்  கொண்டவர்கள்  என்று  நினைத்து  கொண்டு இருந்தர்வர்களுக்கு..   இந்த  ரக  பெண்களை  பார்த்து  கொஞ்சம்  ஆதிர்ச்சி.. தான்..  ஆனால்  சாந்தியும்  இப்பிடி  தான்  என்று  அவர்களால்  தாங்கி கொள்ள  முடியவில்லை..
இங்கே  தேவன்  அந்த  வெள்ளைச்சாமி  வீட்டை  தேடி  போய்  ..." வீட்டுல  யாரு.. என  கேட்க.."
"  அங்கே  நல்ல  வேலையாக  வெள்ளைசாமியே  வந்து..
" வாங்க தம்பி.. " என்ன இவ்வளோ தூரம் வந்து இருக்கீங்க..
" எங்க  குழந்தை  அண்ணே..  "
"  தம்பி  அம்மா  தான் "
"  எனக்கு  விளக்கம் வேண்டாம்  குழந்தை  எங்கே. அத மட்டும் சொல்லுங்க.. ."
"  அவன்  குரல்  கேட்டதாலோ  இல்லை  நான்  இங்க  தான்  இருக்கிறேன்  என்று  அவனுக்கு உணர்த்தவோ.. குழந்தை  அழ  தொடங்கியது ..
தேவன்  அந்த  குரலை  கேட்டு  வேகமாய்  வெள்ளசாமியே தள்ளிவிட்டு   போய் குழந்தையே  தூக்கி  கொண்டு  வீட்டை    நோக்கி   செல்ல 
அவன் போவதை பார்த்து அவர் , தம்பி அம்மா ஏதும் ?

அவர் என்ன கேட்க வருகிறார் என புரிந்து கொண்டு , நான் பார்த்துக்கிறேன்  அண்ணே  என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்
சென்றவன்  தன்  தாய்  இடம்  பேசாமல்..ஏன் முகத்தை கூட பார்க்காமல்..   அரவிந்தை  பார்த்து  கிளம்பாலாம்  டா  அரவிந்தா..  இனி  இந்த வீட்டுல  இருந்தா  எனக்கும் என் புள்ளைக்கும்  விஷம்  வைக்க கூட  தையங்க  மாட்டார்கள். இவங்க.. .என்று  சொல்லிவிட்டு.
அவன்  பேக்கை  எடுத்து கொண்டு  கிளம்பிவிட்டான்.. அவனது  வார்த்தை  கேட்டு  சாந்தி..  அதிர்ந்துவிட்டு  ஏதும் சொல்லாமல் இல்ல சொல்லமுடியாமல்..   அப்பிடியே நின்றுவிட்டார்...

**************

குழந்தையே தன் பொறுப்பு  ஆகிக்கொண்டு தேவன்  அரவிந்தனை  அழைத்து கொண்டு  சென்னை  கிளம்பிவிட்டான்  அங்கே தனக்கு  அகிலா  விடம் இருந்து   அவனுக்கு பெரியே  வரவேற்ப்பு  காத்து இருப்பது தெரியாமல்
அதிகாலை  6 மணி அளவில்   தேவன்  அரவிந்தன்  சென்னை  வந்து இருங்கி நேராக  தனது அறைக்கு  சென்றார்கள்  அங்கே… இரவு எல்லாம்  இருவரையும்  மட்டும் அல்லாமல் அவர்கள்   வந்த  பஸ்சில் இருந்த  அனைவரின்…  தூக்கம்  கலைத்து  ஒரு  வழி  செய்துவிட்டு..  இன்னும்  உறக்கம்  கலையாமல்…. உறங்கி கொண்டு இருந்தது  அந்த பிஞ்சு… குழந்தை…..அதை  பார்த்த  அரவிந்தன்,
பார்த்தியா டா  இந்த கொடுமையே  , ‘ என சொல்ல.

அரவிந்தன் எதை சொல்கிறான் என்று புரியாமல்..
என்ன டா   என்ன  ஆச்சு இப்போ  என  தேவன்…கேட்க…
“ ஹ்ம்ம்  நைட் எல்லாம்  சார்  நம்மள  தூங்க  விடாம…  இப்போ  எப்பிடி  தூங்குராரு  பாரு…அதை  .சொன்னேன்…
அவனும்  அந்த  குழந்தை …  பார்த்து….ஹ்ம்ம்…என்று  மெல்ல  சிரித்து…  குளிக்க  சென்றான்.,….
அரவிந்தன்   தனது  லேப்டாப்  திறந்து..  பிறந்த குழந்தையே        எப்பிடி  பார்த்துக்க  வேண்டும்,  என  இன்டர்நெட்டில்  ஒவ்வொன்றாக தேடி  பார்த்து கொண்டு  ஒரு  நோட்பேடில்  எழுதி கொண்டு  இருந்தான்... ..
அதுக்குள்ள  குளித்து முடித்து வெளியே  வந்த  தேவன்…..அரவிந்தனை  பார்த்து….  ” ஹே  என்ன டா  எழுதுகிட்டு இருக்க….”
” ஹ்ம்ம்  எல்லாம்  இந்த  ராஜகுமாரன  எப்பிடி பார்துகிறதுன்னு    …தான் பார்த்துட்டு  இருந்தேன் டா….  இப்போதைக்கு  இன்ஸ்டண்டா   உனக்கு  தான் பொண்ணு  ரெடியா இருக்கு…  நமக்கு  அப்பிடியா….  “
” டேய்…..  நீ  இப்போ  நல்லா   வாங்கி  கட்ட  போற  . மரியாதையா  போய் கிளம்பு…..ஆபீசிக்கு நேரம்  ஆச்சு….  “
அரவிந்தன்…  தேவனை  ஒரு….மார்கமாக  பார்க்க…
அதை உணர்ந்த தேவன்.. அரவிந்தனை பார்த்து... என்ன  டா பார்வை….வேண்டி கிடக்கு…

இல்லை  நாம  ஆபீசிக்கு கிளம்பி போயிட்டா…  குழந்தையே  யாரு  பார்த்துகிறது…..என  அரவிந்தன்..  கேட்க…
அப்போது தான் தேவனுக்கும் இந்த விஷயம் உறுத்தியது.. அதான்  அரவிந்தா  நானும்  யோசிக்கிறேன்…இப்போ  என்ன  பண்ணுறது என தேவனும் அரவிதனை பார்த்து அதே கேள்வி கேட்க

என்னது இப்போ தான் யோசிக்கிறியா…’  டேய்  நான் அப்போவே  சொன்னேன் நீயும்   நானும்  இதுக்கு  எல்லாம் சரி  பட்டு  வரமாட்டோம்.,  கேட்டியா  நீ  ….. குழந்தையே  வளர்கிறது  என்ன  டூ மினுட்ஸ் மேக்கி..நுடலஸ்  மேக்கிங்  நினைச்சியா…..என்று  அரவிந்தன்  .. கோபத்தில் கத்த...…
நீ  சொல்லுறது புரியுது டா…  ஆனா    இவன்  அக்கா  ஓட  உயிர்  டா,   இவன பற்றி அக்கா  என்னவெல்லாம் கனவு  கண்டு வச்சு இருந்தாங்க தெரியுமா…. நான்  எப்போ  ஊருக்கு  போனாலும்  இந்த  குழந்தை  பற்றி  தான் பேச்சு…    ஆனா..  இப்போ  ..  என  அவன்  கண்  கழங்க   தொடங்க…..
அரவிந்தன்…  சரி   விடுட …  கிழ்  போர்சன்  ல   வேலை   பார்க்க  ஒரு பாட்டி  வந்து போவாங்களாம்… அவங்கள   குழந்தையே  பார்த்துக்க  சொல்லலாம்….  நாம  வர வரவரைக்கும்   என்ன  சொல்லுற   நீ  ..
நான்  என்னத்த  சொல்ல   ஆள்  எப்பிடின்னு  விசாரிச்சு  நீ  செய்   பணம்   நான்  கொடுக்கிறேன்…
அதை   கேட்ட  அரவிந்தன்   ஏன்  விசாரிக்கிரதையும்  நீயே செய்யேன்    கடுப்பாக  கேட்க

அவனின்  கோப  பேச்சை  கேட்டு…இப்போது எதுக்கு   டா  இவ்வளோ  கோபம் படுற நீ.. . தேவன் கேட்க..

பின்ன  வாணி  அக்கா  எனக்கும்  அக்கா  தான்  புரிஞ்சதா   இப்படி உலராம உன் வேலையே மட்டும் பாரு எல்லாம் எங்களுக்கு தெரியும்

தேங்க்ஸ்  அண்ட் சாரி  டா… என  தேவன்  அரவிந்தனை அனைத்து கொள்ள…
அரவிந்தன்,  போதும் போதும் டா.. என்ன விடு….  அப்புறம் இதுக்கு  அகிலா  சண்டைக்கு வர  போறா… சரி என்று  ஏதோ யோசனை  வந்தது போல்  அரவிந்தன்  தேவன் இடம்  அகிலா கிட்ட பேசிட்டியா  டா 

இல்லை  டா  ஆபீஸ்  போன  பிறகு  சொல்லிக்கலாம்  இருக்கேன். என தேவன் சொல்ல

என்னது ஆபீச்லையா..  டேய்  இது  சரி   வராது நீ  இப்போவே  பெசிடுறது  நல்லது…  மொதல  அவளுக்கு போன  போட்டு  வெவரத்த  சொல்லு….  நான் போய்  கில  வீட்டுல  விசாரிச்சுட்டு  அப்பிடியே டிபன்  இவனுக்கு  தேவையானதை வாங்கிட்டு வரேன்…என்று அரவிந்தன்  வெளியே சென்று  விட  தேவன்… அகிலாவிடம் எப்பிடி  எந்த அளவிற்கு  விஷயத்தை  சொல்லலாம்  அவள்  எப்பிடி  எடுத்து கொள்ளுவாள்      என  தன்  கையில் வைத்து இருத்த  போனையும் எந்த  ஒரு  கவலை இல்லாமல்..  உறங்கி கொண்டு இருந்தா  குழந்தையையும். மாறி  மாறி  பார்த்த படி அமர்ந்து இருந்தான்….
நீண்ட   நேரம்  யோசித்த பிறகு..  என்ன தான்  நடக்கும்  என  அவன்  அகிலாவின் செல்  எண்ணை அழுத போகும் நேரத்தில்  அகிலாவே  அவனுக்கு போன் செய்துவிட்டால்.

ஹலோ அகிலா   நானே  உனக்கு   போன் பண்ணனும் நினச்சேன்  அதுக்குள்ள  நீயே  பண்ணிட  எப்பிடி  இருக்க  அகிலா “

பராவா இல்லையே   தேவ்  உனக்கு  என்  ஞாபகம்    எல்லாம்     இருக்கா…என நக்கலாக  அவள் கேட்க

“என்ன  அகிலா  இப்பிடி என்னமோ  என்னமோ  பேசுற…”

“பின்ன   என்ன  பண்ண  சொல்லுற  தேவ்…  அண்ணைக்கி    போன்    பண்ணினவன்  இன்னைக்கி    தான்      பேசுற..  இதுக்கு   எல்லாம்   என்ன அர்த்தம்   தேவ்….”

அவளின் பேச்சு  அவனுக்கு  எரிச்சலையே கிளப்ப…”  அதுக்கு   காரணம்  நீ  மட்டும்  தான் அகிலா நீ அன்னைக்கு எப்பிடி பேசினே.. அதன் அந்த கோபத்துல தான் நான் உனக்கு கால் பண்ணல    என சொல்ல

என்ன  என்ன  நான்  காரணம் என் பிரெண்ட்ஸ் நமக்கு  பார்ட்டி  தரேன்  வாங்க எவ்வளோ  டிசெண்டா  கூப்பிடாங்க….  ஆனா  நீ  அவங்கள  இன்சல்ட்  பண்ணிர்க்க அது மட்டும் இல்லாம  சொல்லாம ஊருக்கு வேற கிளம்பிர்க்க  எனக்கு  எப்பிடி  இருக்கும்…”

இங்க  பாரு  அகிலா  நானே  அக்காவுக்கு   உடம்பு சரி  .   இல்லைன்னு  தான் போனேன்..  ஆனா   அங்க  போன   கொஞ்சம்  நேரத்துல  எங்க  அக்கா  இந்த  உலகத்த விட்டே  போயிட்டாங்க என அவன் வேதனை உடன் சொல்ல
அதை  கேட்ட அகிலா , “
என்ன  உங்க  அக்கா  இறந்துட்டாங்களா..  என  அவள் குரலில்  இருந்தது..  சந்தோசமா  இல்லை..  வருத்தமா என  தேவன்னால் கண்டுபிடிக்க  முடியவில்லை…..இருந்தாலும்…தன்னை நேசிப்பவளை விட்டு கொடுக்க  மனம்  வராமல்…அவளை பற்றி  நல்ல  விதமாக  தான்  அவனால்  சிந்திக்க  முடிந்தது…
பிறகு..  தனது  சோகத்தை  அவள் இடம்  சொல்ல  ஆரம்பிக்கும்  போதே  குழந்தை  [  போதும்  டா  நீ  கடலை  போட்டது எனக்கு பசிக்குது என்ன கவனி  என்று.  எழுந்து  அழ  தொடங்கியது   அந்த  சத்தம்… அகிலா   காதுக்கு  எட்டிவிட…
அவள்..  ”  ஹலோ   ஹலோ  தேவா…. “
தேவா  குழந்தையே  தூக்கி  சமாதனம்  செய்த  படி……  அகிலா   விடம் பேச
”  யாரு  தேவா    அது….  இன்னும்  நீ  ஊருல   தான்  இருக்கியா   என்ன…..
” இல்லை   அகிலா  நான்  சென்னை  வந்துட்டேன்…. “
” அப்போ  குழந்தை  சத்தம்….  கேட்குது   “
” ஆமா  அக்கா   இறந்து போயிட்ட  நால  குழந்தையே   என்  பொறுப்புள  வளர்க்க  நான்  என் கூடவே  …  அழைச்சுட்டு  வந்துட்டேன்…  என  தேவன்  சொல்ல..”
”  அகிலா  எல்லாம்  தன்  கையே  மீறி  போய்விட்டதை…எண்ணி வருந்தினாள் …. “
 

Hai friends  இதோ next late update ku sorry.. New place work. Naala set ஆக time ஆகுது, then laptop vera illai தமிழ் typing சரியா mobile support pannala

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro