Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marukkathe Nee Marakkathe Nee - 1

மறக்காதே நீ மறுக்காதே நீ – 1
பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு......

"வாங்க, வாங்க" என வீட்டினுள் நுழைந்த அகிலனையும், அமிதாவையும் வரவேற்றார் வசந்தன்.

"அங்கிள், எங்கே நம்ம மாப்பிள்ளயைக் காணோம்? காலையிலிருந்து அவனை செல்லில் கால் செய்யறேன். எப்பவும் பிஸியாகவே இருக்கு" என சோபாவில் அமர்ந்தான் அகிலன்.

"அப்படியா, லஞ்ச் சாப்பிட்டு அப்பவே மாடிக்குப் போயிட்டானே" என யோசனையாக சொன்ன வசந்தன், "ஒரு வேளை யாருகிட்டயாவது பேசிட்டிருப்பான். முக்கியமான ஆபிஸ் வேலையா இருக்கும்" என முடித்தார்.

"இல்லையே அங்கிள், அவனை ஒரு வாரத்திற்கு டிஸ்டர்ப் செய்ய கூடாது என்று கமிஷ்னர் சொல்லிட்டாரே, வேற யாரோட பேசிட்டிருக்கான்?" என சொன்னபடி திரும்பியவன், அமிதாவின் அனல் கக்கும் பார்வையில் தலை குனிந்தான்.

"அகில், உங்களையே மாதிரியே மத்தவங்களையும் நினைக்க கூடாது. அவங்கெல்லாம் யூனிபார்ம் கழட்டிட்டா, சாதாரண மனுஷங்களா இருப்பாங்க. இருபத்து நாலு மணி நேரமும் நீங்க மட்டும் தான் யூனிபார்ம் போட்டாலும், போடாம இருந்தாலும் போலிஸாகவே இருக்கீங்க" என எரிச்சலுடன் சொன்னாள் அமிதா.

"அப்படியில்லை அமி.." என ஏதோ சொல்ல தொடங்கியவனை சட்டை செய்யாமல், "அங்கிள், ஆண்ட்டி எங்கே?" என கேட்டாள்.

"மாடியில் சம்யு ரூமில் தான் இருப்பா" என சொல்லும் போதே, படியினில் இறங்கி வந்தனர்

"வா அமிதா, எப்போ வந்தே?" என வரவேற்றார் வினோதினி.

"இப்போ தான் வந்தேன் ஆண்ட்டி" என அவள் சொல்லும் போதே, "அண்ணி, உங்களுக்காகத் தான் காத்திட்டிருந்தேன்" என்றாள் சம்யுக்தா.

"ஹ்ம்ம்" என்று தொண்டையை சரி செய்த அகிலன், "நானும் வந்திருக்கேன்" என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

"வா அகிலன்" என புன்னகையுடன் சொன்ன வினோதினி, "உன்னை கவனிக்கலைப்பா, ஸாரி" என வருந்தும் குரலில் சொன்னார்.

"புதுசா ஒருத்தர் வீட்டிக்கு வர போற சந்தோஷத்தில், ஆண்ட்டிக்கு மத்தவங்க யாரும் கண்ணில் தெரியலை போலிருக்கு" என கிண்டலாக அகிலன் சொன்னவுடன் வினோதியினின் கண்களில் நீர் துளிர்ந்தது.

"அப்படியில்லைப்பா, இந்த கல்யாணமாவது ஒழுங்கா நடக்கணும் என்று தான் கவலையாயிருக்கு, பயமாகவும் இருக்கு" என்று வருத்தமுடன் சொன்னார்.

"உங்களுக்குக் கவலையே வேண்டாம். இந்த கல்யாணம் நல்லா நடக்கும்" என அவரை தோளோடு அணைத்துக் கொண்டாள் அமிதா.

வினோதினி சொன்னதைக் கேட்டதும், சம்யுக்தாவின் முகம் சட்டென்று வாடியது. அதை மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு, சமையலறைக்குள் சென்று விட்டாள்.

"ஹாய் அகிலன், எப்போ வந்தே, உன்னை எத்தனை தடவை செல்லில் கூப்பிடறது?" என அலுத்தபடி வந்தான் மித்ரன்.

"ஒ, அப்படியா? நீ.. என்னை.. கூப்பிட்டியா? அதாவது அகிலனை?" என தன் கண்களை விரித்துக் கேட்டான்.

"ஏண்டா லூசு மாதிரி உளறிட்டிருக்கே? உன் பெயர் தானே அகிலன், உன்னை தான் செல்லில் கூப்பிட்டேன்" என சிரித்தபடி கையிலிருந்த செல்லில் அப்போது வந்த மெசேஜை பார்த்தபடி சொன்னான் மித்ரன்.

மித்ரன் எதிர்ப்பார்க்காத போது, அவனது செல் போனை பிடுங்கியவன், அவனது செல் போனின் கால் ஹிஸ்டரியைப் பார்த்து, "மித்ரன், சொல்லவே இல்லை, உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? என் பெயரை ஸ்வீட்டி என்றா வைச்சிருக்கே?" என கேட்டான்.

அகிலனது கையை முறுக்கி, அவனிடமிருந்து தன் செல்லை பிடுங்கிய மித்ரன், "டிசென்ஸியே உனக்கு இல்லைடா, மத்தவங்க போனை பார்க்க கூடாது என்று தெரியாது?" என ஆழ்ந்த குரலில் கேட்டான் மித்ரன்.

"காலையிலிருந்து உன் ஸ்வீட்டிக்கு இருபது கால் பண்ணியிருக்கே. எங்கிட்டேயிருந்து வந்த அஞ்சு காலும் மிஸ்ட் காலாகவே இருக்கு" என சொன்ன அகிலன், "டேய் நீ எனக்கு கால் செஞ்சே ஒரு மாசத்துக்கு மேல இருக்கும்டா. உன் போன் எப்போ கால் செஞ்சாலும் பிஸியாகவே இருக்கு" என அலுத்தபடி சொன்னான் அகிலன்.

"உன் போனில் ஏதோ பிராபளம் என்று நினைக்கிறேன். நீ சீக்கிரம் உன் போனை மாத்திடு" என சொன்னான் மித்ரன்.

"மாத்த வேண்டியது போனை இல்லைடா, ஃபிரண்டைத் தான்" என கண்கள் மின்ன சொன்னான் அகிலன்.

"உங்களுக்குத் தான் ரொமான்ஸே வரலை, மத்தவங்களும் அப்படியே இருக்கனும் என்று அவசியமில்லை" என

"அமி, நான் உன்னை.." என அகிலன் சொல்லி முடிப்பதற்குள், "அது அதுக்குன்னே டைம் இருக்கு. காலம் கடந்த பிறகு வர எதுவும் நல்லாயிருக்காது. ஆறி போன காபி மாதிரி இருக்கும். ஆமா சம்யு எங்கே போனாள்?" என கேட்டாள்.

"இப்போ தான் சமையலறைக்கு போனாள். தண்ணி குடிக்க போயிருப்பா" என சொன்னார் வினோதினி.

"அமிதா, சம்யு ஏதோ ஸாரி வாங்கணும் என்று சொன்னா. ஸ்மிருதியோட அனுப்ப மனசில்லை. நீங்க கூட போயிட்டு வாங்க. உங்க பின்னாடியே இரண்டு போலிஸ் வருவாங்க" என்றான் மித்ரன்.

சரியென்று தலையசைத்த அமிதா, சம்யுக்தாவை தேடி உள்ளே சென்றாள். அவரது பின்னே வினோதினியும் சென்றார்.

வசந்தன் போனில் பேசி கொண்டிருக்க, "மித்ரன், இன்விடேஷன் கொடுத்து முடிச்சிட்டியா?" என கேட்டான்.

"தெரிஞ்சவங்க எல்லோருக்கும் கொடுத்துட்டேன் என்று நினைக்கிறேன். எப்படியும் இரண்டு மூணு பேராவது மிஸ்ஸாயிடும்" என்றான் மித்ரன்.

"என் மச்சனை கூப்பிட்டியா?" என அவன் கேட்கும் போதே, அவர்களை கடந்து சென்றாள் சம்யுக்தா.

"யாரு சித்தார்த்தையா?" என வேண்டுமென்றே சத்தமாக கேட்டான் மித்ரன். அதை காதில் வாங்காதவளாக வசந்தனது அறைக்குள் வேகமாக சென்றாள்.

"வெற்றிவேல் தாத்தாவை அப்பாவும் அம்மாவும் கூப்பிட்டு வந்தாங்க. சித்தார்த் வீட்டுக்குக் கால் செஞ்சி அவங்க தாத்தா பாட்டியையும் கூப்பிட்டாங்க. அவங்க அத்தை மாமாவையும் கூப்பிட்டாங்க" என சொல்லியபடி வசந்தனது அறையின் வாசலைப் பார்த்தபடி சொன்னான் மித்ரன்.

சம்யுக்தா உள்ளே சென்று விட்டதை உணர்ந்து, தோளை குலுக்கினான் மித்ரன்.

அவனை பேச சொல்லி செய்கை செய்த அகிலன், மெதுவே ஒசையெழுப்பாமல் எழுந்து வசந்தனது அறை நோக்கி சென்றான்.

"சித்தார்த் மூணு மாசம் முன்னாடி தான் தாத்தாவைப் பார்க்க சென்னை வந்திருந்தான். நான் அப்பவே அவங்கிட்ட கல்யாணத்தைப் பத்தி சொன்னேன். அவனுக்கு வேலை அதிகமாக இருக்கு போலிருக்கு. முடிஞ்சா வர்றேன் என்று சொன்னான்" என மித்ரன் சொல்லி கொண்டிருக்கும் போதே அறையினுள் எட்டிப் பார்த்தான் அகிலன்.

உள்ளே கதவோரமாக சுவற்றில் சாய்ந்து கண்களை மூடி, இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் சம்யுக்தா.

கண்களால் செய்கை செய்த அகிலன், "ஓ, அப்போ அவன் உன் கல்யாணத்துக்கு வரலையா?" என கேட்டான்.

"இரண்டு நாள் முன்னாடி கால் செஞ்சி, கல்யாணத்துக்கு வரலை என்று சொல்லிட்டான்" என வருத்தமான குரலில் சொன்னான் மித்ரன்.

"சரி விடு. ஏதாவது முக்கியமான வேலையிருக்கும். நம்ம ஃபிரண்டஸ் வேற யார் வர்றாங்க" என கேட்டான். அகிலன்.

"அண்ணி, போலாமா?" என கேட்டபடி வாசலுக்குச் சென்றாள் சம்யுக்தா.

"போலாம் சம்யு" என சொன்ன அமிதா, சம்யுக்தாவுடன் காரில் ஏறி அமர்ந்தாள்.

சென்னையின் மிக பெரிய புடவைக் கடைக்குள் நுழைந்தவர்கள், "சம்யு, என்ன வாங்க போறே?" என கேட்டாள்.

"பட்டுப்புடவை" என சொன்ன சம்யுக்தா,

"சம்யு, நீ தான் கல்யாணத்துக்குப் புடவை எல்லாம் எடுத்திட்டியே?" என யோசனையாக கேட்டாள் அமிதா.

"ஆமாம் அண்ணி, டிஸைனர் பிளவுஸ் கூட தைச்சி வந்திடிச்சு. ஆனா கல்யாணத்துக்குக் கட்டிக்கிற புடவையில் குங்குமம் பட்டிருச்சு. அது கீரீம் கலர் புடவை என்பதால் குங்கும கறை பளிச்சென்று தெரியுது" என்றாள் சம்யுக்தா.

கடையிலிருந்த பெண்ணிடம், "கீரீம் கலரில் பட்டுப் புடவை காமிங்க" என்றாள்.

சம்யுக்தா புடவையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, "ஹாய் அமிதா" என்ற குரல் கேட்டுத் திரும்பினாள்.

"ஹாய் ஆண்ட்டி" என்ற திரும்பிய அமிதா, "வாட் எ சர்பரைஸ். உங்களை இங்கே புடவைக் கடையில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. என்ன திடீரென்று சென்னைக்கு வந்திருக்கீங்க?" என ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"என் மருமக வீட்டில் கல்யாணம், அதுக்குத் தான் வந்தோம். சென்னை வந்தா கண்டிப்பா ஒரு பட்டுப் புடவையாவது வாங்கிடுவேன்" என புடவைகளைப் பார்த்தபடி சொன்னார்.

"அண்ணி, இந்த புடவை நல்லாயிருக்கா?" என கையில் வைத்திருந்த கிரீம் நிற புடவையை காண்பித்துக் கேட்டாள் ஸம்யுக்தா.

"நல்லாயிருக்கு சம்யு" என அமிதா சொன்னவுடன், அவளது பக்கத்திலிருந்த ஆண்ட்டி, "இந்த புடவையை காலையில் கட்டுப் போறியா? இல்லை நைட் கட்ட போறியாம்மா?" என கேட்டவரை குழப்பமாக பார்த்தாள் சம்யுக்தா.

"சம்யு, இவங்க எனக்குத் தெரிஞ்சவங்க. வெளியூரில் இருக்காங்க" என சொன்ன அமிதா, "இவ சமயுக்தா, ஃபாமிலி ஃபிரண்ட்" என அறிமுகம் செய்தாள்.

சம்பிரதாயமாக கரம் குவித்தவளை, வைத்த கண் எடுக்காமல் தலை முதல் கால வரை மெதுவே பார்த்தார்.

"நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லையே?" என கேட்டார் ஆண்ட்டி.

"காலையில் கட்டற்துக்குத் தான்" என மெதுவான குரலில் அவள் சொன்னவுடன், "உன் சந்தன கலருக்கு, இந்த புடவை சரியாயிருக்காது. இந்த ராயல் ப்ளு கலர் புடவை பாரு. ரொம்ப அழகாயிருக்கு" என தன் அருகேயிருந்த புடவையை எடுத்துக் காட்டினார்.

"இல்லை ஆண்ட்டி, பிளவுஸ் தைக்க நேரம் இருக்காது. இன்னும் நாலு நாளில் கல்யாணம் இருக்கு" என மறுத்தாள் சம்யுக்தா.

"இவ இருக்கும் போது, உனக்கு என்ன கவலை. அமிதா, இரண்டு நாளில் பிளவுஸ் ரெடி பண்ண முடியாதா?" என சிரிப்புடன் கேட்டார்.

"ஷ்யூர் ஆண்ட்டி" என அமிதா தலையசைத்தாள். இரண்டு புடவைகளையும் கடைப் பெண் பிரித்துக் காண்பிக்க, சம்யுக்தா ஏனென்று தெரியாமல் அந்த ப்ளு புடவையை செலக்ட் செய்தாள்.

ஆண்ட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு, அமிதாவுடன் பணம் செலுத்துவதறகாக சென்றாள் சம்யுக்தா.

"யார் அண்ணி அவங்க?" என கேட்டாள் சம்யுக்தா.

"அதான் சொன்னேன் இல்லை. தெரிஞ்சவங்க வெளியூரில் இருக்காங்க. ஏன் கேட்கிறே சம்யு?" என கேட்டாள் அமிதா.

"எனக்கு அவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு அண்ணி. இப்போ சரியாக ஞாபகம் வரலை" என நெற்றியைத் தேய்த்தபடி சொன்னாள்.

சம்யுக்தாவும், அமிதாவும் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவரின் பின்னால் வந்து அவரது இரு தோளிகளிலும் கை வைத்துத் திருப்பியவன், "ஸோ, மருமகளை மீட் பண்ணிட்டியா ஸ்வீட்டி?" என கேட்டான்.

பிரவுன் நிற கண்களுடன், அடர்த்தியான சுருட்டை முடியுடன், எடுப்பான கூர்மையான மூக்குடன் நின்றிருந்த தன் மகனை பார்த்துச் சிரித்தார்.

சந்தோஷமாக தலையசைத்தவரைப் பார்த்தவன், "உன் மகனோட சாய்ஸ் எப்படி?" என கேள்வியுடன் பார்த்தான்.

"மேட் ஃபார் ஈச் அதர்" என அவர் சொன்னவுடன், அமிதாவுடன் பேசியப்படி சென்ற சம்யுக்தாவை ஆர்வத்துடன் பார்த்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro