Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marakkathe Nee Marukkathe Nee - 9

மறக்காதே நீ மறுக்காதே நீ - 9
மூன்றாம் நாள்...

பதினைந்து நாட்களுக்குப் பிறகு அலுவலகத்திற்கு சென்றதால், சம்யுக்தாவிற்கு காலை முதல் வேலை அதிகமாக இருந்தது. இரண்டு வரலாற்று தொடர்புடைய கட்டுரைகள் மறுநாள் பதிப்பிக்க வேண்டுமென்பதால், தரவுகளை சரி பார்க்க வேண்டியிருந்தது மதிய உணவை பத்து நிமிடத்தில் முடித்து விட்டு வேலையை தொடர்ந்தாள்.

மூன்று மணிக்குக் காஃபி அருந்தும் போது, அமிதாவை அழைத்து அவளது உடல்நிலையைப் பற்றி விசாரித்தாள். அரை மயக்கத்தில் அமிதா பேச முடியாமல் பேசுவதை உணர்ந்ததும், மாலை அவளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஆறு மணிக்கு கட்டுரைகளைப் பதிப்பிக்க அனுப்பி விட்டு அமிதாவின் வீட்டிற்குச் சென்றாள். செல்லும் போது யாரோ தன்னை பின் தொடர்வதை உள்ளுணர்வால் அறிந்தாள். அமிதாவின் பொட்டிக்கில் இருந்து இரண்டு நாட்கள் வீட்டிற்குச் செல்லும் போதும், இதே விதமான உள்ளுணர்வு அவளுக்குத் தோன்றியிருந்தது. முதலில் சித்தார்த்தாக இருக்குமோ என நினைத்தாள். ஆனால் ஏதோ ஒன்று அவனில்லை என்று சொல்லியது. யாராக இருக்கும் என யோசித்தும், எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. மித்ரன் ஊரிலிருந்து வந்தவுடன் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்தாள்.

அகிலன் வீட்டின் அழைப்பு மணியை அடித்தவுடன், கதவை திறந்த அமிதா மிகவும் சோர்ந்து போய் தெரிந்தாள்.

"என்ன அண்ணி, இன்னும் உங்களுக்கு உடம்பு சரியில்லையா?" என கேட்டபடி உள்ளே வந்தாள்.

எதையும் சொல்லாமல் மையமாக புன்னகைத்து விட்டு, சோஃபாவில் அமர்ந்தவள், சம்யுக்தாவையும் அருகே அமர சைகை செய்தாள்.

"நாம வேற டாக்டரைப் பார்க்கலாம். அஞ்சு நாளாக போகுது. இன்னும் உங்களுக்கு அப்படியே தான் இருக்கு. இந்த டாக்டர் என்ன சொல்றாங்க? எப்போ உடம்பு சரியாகுமாம்?" என கவலையாக கேட்டாள்.

"கொஞ்ச நாளாகும் போலிருக்கு" என சொன்ன அமிதாவை பரிவுடன் பார்த்தவள், "எத்தனை நாளில் சரியா போகும்னு சொல்றாங்க?" என அமிதாவின் கைகளை எடுத்து தன் கையில் வைத்தபடி பாசத்துடன் கேட்டாள் சம்யுக்தா.

"ஒரு எட்டு மாசத்தில் சரியாயிரும்" என மெல்லிய குரலில் சொன்ன அமிதாவை புரியாமல் பார்த்தவள், "அண்ணி, என்னாச்சு?" என பதைப்புடன் கேட்டாள்.

அமிதாவின் முகம் லேசாக சிவக்க, எதையும் சொல்லாமல் மெளனமாக இருக்க, அவளுக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

"அப்படின்னா.. அதுவா.. நிஜமாவா.." என சொன்ன சம்யுக்தா, "அண்ணி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என அமிதாவை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

"கங்கிராட்ஸ்.. எனக்கு என்ன சொல்றது என்றே தெரியலை. எத்தனை நாள் தள்ளி போயிருக்கு" என சந்தோஷத்துடன் கேட்டாள்.

"இரண்டு மாசம் இருக்கும். எதுவும் சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குது. மயக்கமா இருக்கு" என கண்களைத் தேய்த்துக் கொண்டாள் அமிதா.

"ஏதாவது சாப்பிடுங்க அண்ணி. காஃபி, ஜுஸ் ஏதாவது எடுத்துட்டு வரவா?" என கேட்டாள்.

"ஜூஸ் வேண்டாம் சம்யு. நேத்து நந்தன் பொமோ ஜூஸ் செஞ்சு கொடுத்தான். குடிச்சதுமே வெளியே வந்துடிச்சு. எனக்கு இப்போ காஃபி வாசனையே பிடிக்க மாட்டேங்குது. டீ வேணா போடு. அதையும் குடிக்க முடியுமானு தெரியலை" என ஆயாசத்துடன் சொன்னாள்.

சரியென்று தலையசைத்து விட்டு சமையலறைக்குச் சென்றவள், பாலை கேஸில் சுட வைத்தாள். வாசலில் அழைப்பு மணியடிக்கும் ஒசையும், சில நொடிகளில் அமிதா கதவை திறக்கும் ஒசையும் கேட்டது. அகிலனாக இருக்கும் என நினைத்து எட்டிப் பார்த்தவள், சித்தார்த்தை ஹாலில் கண்டதும் கடுப்பானாள்.

அவனை கண்டதும் தன்னை பின் தொடர்வது இவன் தான் என முடிவு செய்தவள், மித்ரன் ஊரிலிருந்து வந்தவுடன் இவன் விஷயத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என நினைத்தாள். காலையில் திரும்பவும் அவளுக்கு அதே குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.

'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் பதினெட்டு நாட்கள்'

அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எரிச்சல் வந்தாலும், இன்னும் ஜஸ்ட் பதினெட்டு நாட்கள் தான் சம்யு, உன்னால் கண்டிப்பாக மனம் தளராமல் உறுதியாக இருக்க முடியும் என தன்னை சம்னபடுத்தி அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள். தன்னை அவன் பின் தொடர்ந்து இங்கேயும் வருவான் என அவள் நினைக்கவே இல்லை.

"ஸிட், டீ சாப்பிடறீங்களா?" என அமிதா கேட்டதற்கு, சம்யுக்தாவை அமர்த்தலாக பார்த்தவன், "ஷுயூர், வொய் நாட்?" என சொன்னான்.

"சம்யு, சித்தார்த்துக்கும் சேர்த்து டீ போடறியா?" என கேட்ட அமிதா, அவள் முகம் கடுப்பானதைக் கண்டு, "நானே போடறேன்" என எழுந்தாள்.

"அண்ணி, நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் இன்னொரு கப் எடுத்துட்டு வரேன்" என உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

"சம்யு, எனக்கு சர்க்கரை கம்மியா போடு" என அமிதாவின் குரல் கேட்டவுடன், "சரி அண்ணி" என்றாள்.

"யுக்தா, எனக்கு நார்மல் சுகர்" என கூடவே சித்தார்த் அதிகாரமாக சொன்னவுடன், காதில் புகை வருமளவு எரிச்சலாக இருந்தது.

காட்டில் முதல் முறை தப்பிக்க முயன்ற போது சாப்பிட எதுவும் கொடுக்காமல் அவன் பட்டினி போட்டதை நினைத்தவள், இவனுக்கு தேனீர் தயாரிக்க நேர்ந்த கொடுமையை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்.

மூன்று டீ கப்களை எடுத்து வைத்தவள், ஒன்றில் பாதி சர்க்கரையும், அடுத்ததில் நார்மலான சர்க்கரையும், மற்றொன்றில் உப்பை இரண்டு கரண்டி அள்ளி போட்டாள்.

தேனீர் கொதித்ததும், மூன்றிலும் சம அளவில் ஊற்றியவள், அமிதாவின் கப்பில் ஸ்பூனை அடையாளத்துக்கு வைத்தாள். உப்பு போட்ட தேனீரை கவனமாக டிரேவில் ஒரமாக வைத்தவள், மற்றொரு கப்பை அமிதாவின் கப்பிற்கு அருகே வைத்தாள்.

மேஜையின் மேல் டிரேவை வைத்துவிட்டு அமிதாவின் அருகே அமர்ந்தவள், "அண்ணி, உங்களுக்கு சர்க்கரை கம்மியான டீ" என கையில் கொடுத்தாள்.

"ஸிட், டீ எடுத்துக்கங்க" என அமிதா சொன்னவுடன், சம்யுக்தாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவள் தன் உணர்வுகளை கவனமாக முகத்தில் தெரியாமல் கட்டுப்படுத்தியிருந்தாலும், கண்களில் இருந்த மெல்லிய ஒளியும், இதழ்களின் வளைவில் இருந்த லேசான சிரிப்பும், அவனுக்கு எதையோ உணர்த்தியது.

சம்யுக்தா இயல்பாக டிரேவின் ஒரமாக இருந்த டீ கப்பை தன் கையில் எடுக்க நீட்ட, சித்தார்த் வேகமாக அதை கையில் எடுத்தான். சம்யுக்தாவின் முகம் ஏமாற்றமாக மாறியதை சிரிப்புடன் பார்த்தவன், "யுக்தா, டீ சாப்பிடலை?" என கேட்டவனது குரலில் லேசாக திமிர் தெரிந்தது.

"சம்யு, நீயும் டீ சாப்பிடு. ஆபிஸிலிருந்து டயர்டாக வந்திருப்பே" என அமிதா சொன்னவுடன், வேண்டா வெறுப்பாக டீயை கையில் எடுத்தாள்.

டீயை உறிஞ்சிய அமிதா, "சம்யு, டீ சூப்பரா இருக்கு" என சொல்லும் போதே, புன்னகையுடன் தேனீரை உறிஞ்சிய சித்தார்த்தின் முகம் ஒரு நொடிக்குக் குறைவாக சுருங்கி, மறுபடியும் புன்னகையானது. அவன் இயல்பாக தேனீரை உறிஞ்சியதைப் பார்த்து சம்யுக்தாவிற்கு சந்தேகமானது. ஒரு வேளை டிரேவை வைக்கும் போது மாற்றி வைத்து விட்டோமோ என யோசித்தாள். அவள் தன் தேனீரை ஒரு சிப் குடித்த போது, சரியான சர்க்கரையுடன் இருப்பதை உணர்ந்தாள். இவனால் எப்படி அத்தனை உப்பு போட்ட தேனீரை இயல்பாக குடிக்க முடிகிறது என யோசிக்கும் போதே, சம்யுக்தாவின் போன் அடித்தது.

மேஜை மேலிருந்த தன் கைபையிலிருந்து போனை எடுத்தவள், "ஹலோ அம்மா. நான் அகிலன் அண்ணா வீட்டில் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடறேன்" என சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தாள்.

"அண்ணி, நான் கிளம்பறேன். அம்மா வெயிட் பண்ணறாங்க" என சொல்லி விட்டு ஒரே மூச்சில் தேனீரை குடித்தவள், அப்படியே துப்பி விட்டாள்.

"என்னாச்சு சம்யு?" என கவலையுடன் அமிதா கேட்க, என்ன சொல்கிறோம் என உணராமல், "டீயில் ஒரே உப்பு" என கசங்கிய முகத்துடன் சொன்னாள்.

"என்ன சம்யு உளறிட்டிருக்கே? டீயில் உப்பா? எனக்கு நல்லா தானே இருந்தது. ஸிட், டீ எப்படியிருக்கு?" என குழப்பத்துடன் கேட்டாள் அமிதா.

"சூப்பராயிருக்கு. இன்ஃபாக்ட் எனக்கு பிடிச்சா மாதிரி சர்க்கரை, பால், டீ டிகாக்‌ஷன் எல்லாம் சரியான அளவிலிருக்கு. தாங்க்ஸ் யுக்தா" என இயல்பான குரலில் சித்தார்த் சொன்னாலும், அவனது கணகளில் இருந்த மெல்லிய ஏளனம் அவளை கோபம் கொள்ள வைத்தது.

அவள் பையிலிருந்து போன் எடுக்கும் நேரத்தில், சாமார்த்தியமாக அவன் டீ கப்பை மாற்றியிருந்ததை நினைத்து எரிச்சலாக இருந்தது. ஒரு நொடி தனது கவனம் திரும்பிய போது, லாவகமாக அவன் மாற்றியதை எண்ணி கோபம் வந்தது.

"தெரியலை அண்ணி" என முணுமுணுப்பாக சொன்னவள் அவனை முறைத்தபடி எழுந்தாள். கீழே அவள் துப்பிய தேனீரை சுத்தம் செய்ய தண்ணீரையும் துடைக்கும் மாப்பையும் எடுத்து வந்தவள், சித்தார்த் நக்கலாக சிரிப்பதைப் பார்த்ததும், தண்ணீரை அவன் தலையில் கொட்ட வேண்டும் என்று வந்த வேகத்தை, பற்களை கடித்து கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள். அவனை மனதில் கலர்கலராக திட்டியபடி தான் தரையை சுத்தம் செய்தாள்.

வெளியே வரும் போது அகிலனுடன் அமிதா போனில் பேசி கொண்டிருக்க, அவள் பேசி முடித்தவுடன் கிளம்பலாம் என கதவருகே சென்றாள். அமிதா அவளைப் பார்த்து ஒரு நிமிடம் என விரலால் செய்கை காண்பித்து விட்டு அறையின் உள்ளே சென்றாள்.

அமிதா உள்ளே சென்றவுடன், அவளருகே சித்தார்த் வந்த வேகத்தைப் பார்த்து தன்னையறியாமல் பின்னால் சென்றவள் சாத்தியிருந்த கதவில் இடித்துக் கொண்டாள்.

"பார்த்து யுக்தா, தலையில் அடிபட்டிருச்சா" என அவளது தலையை தொட வந்தவனது கைகளை தட்டி விட்டாள்.

"கிட்ட வராதீங்க" என பற்களைக் கடித்தபடி அவள் மெதுவாக சொன்னவுடன், இன்னும் அருகே நெருங்கி வந்தான்.

"கிட்ட.. வந்தீங்கனா.." என அவள் சொல்லும் போதே இன்னும் நெருங்கி வர, அவனை அடிக்க தூக்கிய அவளது இரு கைகளையும் இரு பக்கங்களிகும் இறுக்கி பிடித்தான்.

அவளது முகத்தருகே குனிந்தவனது மூச்சு காற்று அவள் மேல் பட, தன் கண்களை இறுக்க மூடி கொண்டாள். "உனக்கு என்னெல்லாம் தெரியும்னு எனக்குத் தெரியும் ஹனி. நீ கராத்தேவில் பிளாக் பெல்ட் என்பதும் தெரியும். உங்கிட்ட வரும் போது, நீ என்ன செய்வேனும் தெரியும்" என சொல்லியபடி அவனது பிடியை இன்னும் இறுக்கினான். அவள் வலியில் லேசாக முகம் சுளிக்க, சற்றே தன் பிடியைத் தளர்த்தினான். அது தான் சந்தர்ப்பம் என்று அவள் தனது கையை விடுவிக்க முயன்றும் முடியாமல் போனது.

"ஹனி, உனக்கு என் மேலே இன்னும் கோபம் போகவே இல்லையா? டீயில் அவ்வளவு உப்பு போட்டிருந்தே?" என கேட்கும் போதே அவன் குரல் கம்மியது.

தன்னை சமன்படுத்தியவள், அவனது கண்களைப் பார்த்து, "இந்த வீட்டில் விஷமில்லை. இருந்தா அதை தான் போட்டிருப்பேன்" என சலிப்புடன் சொன்னாள்.

"நீ விஷம் கொடுத்தாலும், நான் சாப்பிட ரெடி ஹனி" என சொன்னவன், "ஆனா, உன் கப்பில் இருந்த டீ ரொம்ப ஸ்வீட்டாயிருந்தது. ஏன் தெரியுமா" என நெகிழ்ந்த குரலில் கேட்டவன், அவனது உதடுகளை நோக்கி குனிந்தான். அவனது உடலிலிருந்த மெல்லிய வாசம் அவளை ஏதோ செய்தது. கத்த வேண்டுமென்று நினைத்தும் குரல் எழுப்ப முடியாமல் தவித்தவள், என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை இறுக்க மூடி கொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro