
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு - 46
🦋யாரோ வந்து
சுதந்திரம் கொடுக்க
நீயோ அடிமை இல்லையடி
உன் மனதில்
உன் சுதந்திரம் உண்டு
நீயே உணா்ந்து கண்டுபிடி
மனிதி வெளியே வா🦋
கிருஷ்ணாவை அடிக்க கை புவனா கையை ஓங்க அவள் கையை பிடித்து தடுத்தாள் தேவா .
இதை எதிர்பார்க்காத புவனா முகத்தில் அதிர்ச்சி தென்பட்டது.தன்னை பார்த்து பயந்து பயந்து வளர்ந்த பெண் இன்று இப்படி தன்னுடைய கையையே பிடித்து விட்டாளே என்று .அதனால் சென்னைக்கு வந்ததில் இருந்து போட்டு வைத்திருந்த நல்லவர் என்ற முகமூடியை தூக்கி எறிந்துவிட்டு கோபத்தில் கத்த ஆரம்பித்தார்
"எட்டி தேவா உனக்கு என்னட்டி அவ்ளோ திமிரா .நானும் பாத்துட்டே இருக்கேன் என் கையை பிடிச்சிட்டு நிக்கிற .அவன் தானட்டி முதல்ல என்மேல கொதிக்க கொதிக்க காப்பியை ஊத்துனான் .அதுக்கு தானே நான் அடிக்க கை ஒன்குனேன் . கொதிக்க கொதிக்க உன்மேல காபியை ஊதுன்னா நீ சும்மா இருப்பியா?",என்று கேட்டார் .அதை கேட்டதும் தேவா அவரை இன்னும் முறைத்தாள் .
ஏன் என்றால் புவனா அடுப்பில் எரிந்து கொண்டு இருக்கும் விறகை கொண்டு பலமுறை இவளுக்கு சூடு வைத்து இருக்கிறாள் .இன்று ஒரு சூடான டி கொட்டியதும் அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை .ஆனால் நெருப்பினால் சூடு பட்ட போதும் அழ பயந்து அமைதியாக இருந்திருக்கிறாள்.
உண்மையில் தேவா தன்னை அடிக்க புவனா கை ஓங்கி இருந்தால் பயந்து ஒதுங்கி இருப்பாள்தான்.ஆனால் அவர் கிருஷ்ணாவின் மீது கை வைக்க பார்த்து இருக்கிறார் .அதை எப்படி அவளால் ஏற்று கொள்ள முடியும் .
"ஏய் தேவா நான் உன்கிட்டதான் சொல்றேன் .என் கையை விடு", என்று சொன்னாள் புவனா .
தேவாவும் புவனாவின் கையை உதறி விட்டாள் .அதில் இன்னும் கடுப்பானாள் புவனா .
"பெத்தவளே வேண்டாம்ன்னு சொல்லிட்டு போன ஒரு ராசி இல்லாத பையனுக்காக நீ என் கைய...",என்று புவனா சொல்லி முடிக்கும் முன்பு அவர் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்து இருந்தாள் தேவா .பாவம் புவனாக்கு காது கொய் என்று இருந்தது.( me : சோனமுத்தா போச்சா.. 😂😂)
அதை பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைந்தார் .உண்மையில் புவனாக்கு அடிக்க கூட கை வரவில்லை .
சத்தம் கேட்டு வந்த செல்வமும் இதை பார்த்து அதிர்ந்து போனார் .அவருக்கு புரிந்தது எப்போதும் அமைதியாக தேவா கோபம் கொள்கிறாள் என்றால் தவறு நிச்சயம் புவனா மீதுதான் இருக்கும் என்று ஆனால் இப்படி அடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை .
கிருஷ்ணா கூட தன்னுடைய அண்ணியா இப்படி என்று ஆச்சரியமாக பார்த்தான் .
தான் ஆடா விட்டாலும் தன்னுடைய தசை ஆடும் என்று சொல்வார்கள் இல்லையா அது போலதான் .தேவா கிருஷ்ணாவை குழந்தை போல நினைத்துக்கொண்டு இருக்க அவனை அடிக்க இன்னொருவர் கை நீட்டினால் எப்படி பொறுத்து கொள்வாள் .சூர்யா அவனை தன் முன்பு ஏதாவது சொன்னாலே அவள் தாங்க மாட்டாள் .அப்படி இருக்கும் போது புவனா யார் ஒரு அம்பது பைசா அவரை ஏன் விட்டு வைக்க போகிறாள் தேவா .
கண்ணாலேயே எரித்தாள் .
"எட்டி உனக்கு என்ன தைரியம் இருந்தா நீ என்ன அடிச்சிருப்ப. உனக்கு அவ்ளோ திமிரா", என்று புவனா கொந்தளிக்க .தேவா ஒரு விரலை வாயில் வைத்து அமைதியாக இருக்க சொல்லி சைகை செய்தாள் .
"என்ன நீ என்னட்டி அமைதியா இருக்க சொல்ற .நான் யாருன்னு தெரியுமா", என்று அவர் ஆரம்பிக்க .
தேவா அவரை வீட்டைவிட்டு வெளியே செல்ல சொல்லி சைகை காண்பித்தாள் .அதை பார்த்தவள் இன்னும் கடுப்பானாள் .
"நீ என்ன வீட்டை விட்டு வெளிய போக சொல்லுறியா . உனக்கு ஏற்பாடு பண்ண கல்யாணத்தை நீ கொஞ்சம் கூட மனசுல வச்சிக்காம பாதியில ஓடி வந்துட்ட ஆனா நான் அதை எதையுமே மனசுல வச்சிக்காம உன்ன தேடி வந்தேன் .ஆனா நீ என்ன வீட்டை விட்டு போக சொல்லுறேல .என்ன ஒரு வீட்டுல மூணு வேளை சாப்பாடு கிடைக்கிதுங்குற திமிரா உனக்கு .இதெல்லாம் நிலைக்கவே நிலைக்காது .நீ பாரு நாசமாத்தான் போவ.இவன பிள்ள மாதிரி வழக்குர இல்ல .லாஸ்ட் வரைக்கும் இவன மட்டுமேதான் வளப்ப", என்று சொன்னார் புவனா(me : ஓ சாபம் குடுக்கிறிங்களா சரி சரி ).அதை கேட்ட செல்வத்துக்கு கோபம் வந்தது .
ஏங்க வாழ வேண்டிய பொண்ண பார்த்து நீங்க இப்படி எல்லாம் பேசுறிங்க .கொஞ்சம் பாத்து பேசுங்க ...என்று சொன்னார் செல்வம் .
அதைகேட்ட புவனா .
ஆமா எனக்கு வாழ்க்கைய பாடம் எடுக்க வந்துட்டான் பெரிய ஆள் .உனக்கே கட்டுன பொண்டாட்டி வச்சி வாழ தெரியல அதனாலதானே அவ உன்ன விட்டு போனா என்று கேட்டார் புவனா .அதை கேட்ட தேவாக்கு கோபம் கோபமாக வந்தது செல்வம் கிட்டத்தட்ட உடைந்து போய் விட்டார் .
அவருடைய மனைவி இன்னொருவரை பிடித்திருக்கிறது என்று அவருடன் சென்றால் இவர் என்ன செய்வார் பாவம் .இந்த உலகம் எப்போதும் தப்பு செய்பவர்களை விட பாதிக்க பட்டவர்களைதான் அதிகம் காயபடுத்தி பார்க்கும் .அது செல்வம் விசயத்தில் சரியாகதான் இருந்தது .கிருஷ்ணாக்கு இதை எல்லாம் பார்க்க கஷ்டமாக இருந்தது .
தன்னால்தான் இத்தனை பிரச்னையோ என்று தோன்றியது .எப்போதும் அமைதியாக இருக்கும் அண்ணி தன்னால் கோப பட்டதால் தானே இந்த சண்டை என்று நினைத்தான் .
"அண்ணி சாரி அண்ணி நான் வேணும்ன்னு பண்ணல .நீங்க யாரும் சண்டை போடாதிங்க ",என்று சொன்னான் கிருஷ்ணா அவன் கண்கள் கலங்கியது .செல்வமும் அதிக மனவேதனையில் இருந்தார் .இதை எல்லாம் பார்த்த தேவாக்கு இன்னும் கஷ்டமானது .
புவனாவை தன்னுடைய வீட்டில் சேர்த்தது எவ்வளவு தவறு என்று புரிந்தது .அழுவது போல நின்ற கிருஷ்ணாவை பார்த்து லேசாக புன்னகை செய்தவள் .அவனை அழ வேண்டாம் என்று சைகையால் சொன்னாள் .
பிறகு புவனா பக்கம் திரும்பியவள் .அவரை பார்த்து முறைத்துவிட்டு நேராக அவருடைய பொருட்கள் இருக்கும் இடத்துக்கு சென்று அதை எல்லாம் எடுத்தாள் .
"ஏய் தேவா என்ன பண்ணுற?", என்று கேட்டாள் புவனா .
தூக்கி போட போறேன் என்பது போல சைகை செய்தாள் தேவா .அதை [பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள் .
செல்வம்தான் வந்து முதலில் தடுத்தார் .
"அம்மா தேவா இந்த மாதிரி எல்லாம் பண்ண கூடாதும்மா அவங்கதான் ஏதோ விவரம் பத்தாம பண்ணுறாங்கன்னா நீயும் ஏன்மா இந்த மாதிரி பண்ணுற", என்று கேட்டார் செல்வம் .
" அதான் சொல்லுறாருல்ல உன் அருமை மாமனார் அவர் பேச்சை கொஞ்சம் கேளு தேவா. அப்போதான் நீ கொஞ்சம் உருப்பட முடியும். இந்த ஆளு சும்மா நடிக்கிறாருன்னு எனக்கு நல்லா தெரியும் .பரவால்ல தேவா நான் உன்ன நல்ல படியா வளத்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட. நீ இன்னைக்கு இங்க இவங்களுக்காக கஷ்ட படுத்துறல்ல .நாளைக்கு இவங்களும் உன்ன இதே மாதிரி தூக்கி போடுவாங்க அப்போ உன் நிலைமை என்னன்னு மட்டும் பாருங்க", என்று சொன்னாள் புவனா .அதை கேட்டதும் செல்வத்துக்கு கோபம் தாங்கி கொள்ள முடியாதபடி வந்தது .அவர் தேவாவை தன்னுடைய மகள் போல பார்க்கிறார் அப்படி இருக்கும்போது தேவாவை தன கண் முன்பு தவறாக பேசினால் அவர் ஒப்பு கொள்வாரா
"இங்க பாருங்கம்மா எங்க வீட்ல நின்னு எங்க வீட்டு பொண்ணையே தப்பா பேசுறிங்க .இது சரி இல்ல .உங்களுக்கு இங்க இருக்க கஷ்டமா இருந்தா நீங்க இங்க இருந்து போங்க அதைவிட்டுட்டு தேவை இல்லாம தேவா மனசு கஷ்ட படுற மாதிரி பேசாதிங்க .அந்த பொண்ணு உங்களுக்கு என்னம்மா கஷ்டம் குடுத்தா .அவளே பாவம் வாய் இல்லா ஜீவன் ",என்றார் செல்வம் .
"ஆமா வாய் இல்ல ஆனா கை நல்லா வேலை பாக்கும் இவளுக்கு எவ்ளோ திமிர் இருந்தா இந்த மாதிரி பண்ணி இருப்பா .இவ அமைதியானவதான் ஆனா ராசி கெட்டவ. இவ பிறந்தப்போதான் என் அக்கா செத்தா .இவளாலதான் நான் ரெண்டாதாரமா வாக்க பட்டேன் .இவ ராசிதான் இவங்க அப்பனும் போய் சேர்ந்துட்டா .இவளால் எப்போவுமே எனக்கு பிரச்சனை மட்டும்தான் நானாவது பரவாயில்ல .கொஞ்சம் அமைதியா இவளை வளத்தேன் .வேற யாராவது இருந்தா இவளை கொன்னு இருப்பாங்க ".என்று புவனா சொல்ல .
"நீ என்ன கொலை பண்ணுறது . நீ பண்ண கொடுமைக்கு அக்கா இடத்துல வேற யாராவது இருந்தா அவங்க உன்ன கொன்னுருப்பாங்க", என்று சொன்னா,ள் பூஜா .
திடீரென பூஜா சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தார்கள் எல்லோரும் அங்கே நின்று கொண்டு இருந்தாள் பூஜா அவளுடன் சூர்யாவும் நின்று கொண்டு இருந்தான் .அவர்கள் இருவரையும் பார்த்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள் .
"வாட்டி வா எப்போவும் போல உன் அக்கா காரிக்கு சப்போர்ட் பண்ண வந்துட்ட தானே அவ என்ன பண்ணான்னு கேளு", என்று சொன்னார் புவனா .
வீட்டுக்குள் வந்த பூஜா .
"நான் எதையும் கேக்க ஆசை படலம்மா .எனக்கு என்ன நடந்துச்சுன்னு நல்லா தெரியும் .நீ கிளம்பு என்கூட வா ",என்று சொன்னாள் பூஜா.
அதைகேட்ட புவனா ஏய் என்னட்டி சொல்லுற உனக்கு என்ன பிரச்சனை .இப்போ கூட தேவா என்ன பண்ணானு கேக்க மாட்டியா என்று கேட்டார் புவனா .
"அம்மா நான் மரியாதையா கூப்பிடுறபோவே வந்துடு இல்லனா நீதான் கஷ்ட படுவ", என்று சொன்னாள் பூஜா .
"என்ன நான் கஷ்ட படுவேன்னு சொல்ற.நான் பாத்து வளந்த பொண்ணுங்க நீங்க என்ன நிக்க வச்சி கேள்வி கேக்குறிங்களா", என்று கேட்டாள் புவனா .
"அம்மா இந்த பிரச்னையை நான் இதோட விடலாம்ன்னு பாக்குறேன் .நீ தேவை இல்லாம பண்ண அக்காவை அவங்க ஹஸ்பன்ட் கூட வாழ விட மாட்டேங்குறன்னு சொல்லி கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன் .அப்புறம் நீ சும்மா ஸ்டேசன்க்கு வந்தாலும் உனக்குதான் அசிங்கம் .நம்ம ஊர்காரங்களை பத்தி உனக்கே தெரியும் அதனாலதான் சொல்றேன் ஒழுங்கா கிளம்பி என்கூட வா", என்று சொன்னாள் பூஜா .
போலிஸ் கேஸ் என்றதும் புவனா சற்று பயந்துதான் போனாள் .சூர்யா வேறு போலிஸ் என்பதால் அவனால் தனக்கு ஏதாவது பிரச்சனை நடக்குமோ என்று பயந்தார் .
"ஆள் ஆளுக்கு என்ன வில்லி மாதிரி ஆக்குறிங்கல்ல. உனக்கு சொல்றேன்டி இவளை நம்பி நீ பெத்த அம்மாவை எதிர்த்து நிக்கிறல்ல இனி உனக்குதான் கஷ்டம் வரும் பாத்துக்கா நான் கோபமா பேசுனாலும் உனக்கு நல்லது நடக்கணும்ன்னு நினைப்பேன்",என்றாள் புவனா.
"அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் நீ முதல்ல கிளம்பு ",என்று சொன்னாள் பூஜா.
இவ்வளவு தூரம் என்ன அசிங்க படுத்தின பிறகு நான் ஏன் இங்க நிக்க போறேன் என்று சொன்ன புவனா தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்..
பூஜாவும் அவருடன் கிளம்பினாள். தேவாக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்னதான் அவள் புவனாவிடம் சண்டை போட்டிருந்தாலும் அவள் அவரை இப்படி செய்து விட்டோம் என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.
அவள் முகம் வேதனையில் இருப்பதை பார்த்த கிருஷ்ணா.
"அண்ணி சாரி அண்ணி, என்றான். அவன் கண்கள் கலங்கி இருந்தது. அதை பார்த்தவள் அவனிடம் ஒன்றும் இல்லை என்று சைகை செய்துவிட்டு ஸ்கூல்க்கு கிளம்ப சென்றாள்.
செல்வம் தேவாவை பார்த்தார். புவனா பேசியதை எல்லாம் கேட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அவள் அதற்கு மன்னிப்பு கேட்க வர
"தேவாம்மா நீ நடந்ததை மறந்துடு நான் எதுவும் வருத்தப்படல", என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்றார். சூர்யாவை பார்த்தாள் தேவா.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சூர்யா அவளை பார்த்து எல்லாம் சரி ஆகிடும் டென்ஷன் ஆகாத என்றான் தேவாவும் சோகமாக இருந்து எல்லோரையும் கஷ்டபடுத்த விருப்பம் கொள்ளவில்லை.
அவளும் சாதாரணமாக இருந்தாள். கொஞ்சம் நேரத்தில் எல்லோரும் சென்று விட தேவாவும் சூர்யாவும் மட்டும் வீட்டில் இருந்தார்கள்.
இவ்வளவு காலையில் இத்தனை அக்கப்போர் நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்.
தேவாக்கு என்னவோ மனம் முழுக்க கவலையாக இருந்தது. சூர்யாக்கும் அது புரிந்தது. ஆனால் அவன் எல்லோரும் இருக்கும் நேரத்தில் இதை பேசி எல்லோரையும் கஷ்ட படுத்த விருப்பம் கொள்ளவில்லை. அதனால் தேவா அறைக்கு வந்ததும் அவளை பார்த்து தேவா என்று சொன்னான் அவன் அப்படி அழைத்ததும் தேவாக்கு மனதில் உள்ள வலி எல்லாம் குறைவது போல தோன்ற வேகமாக ஓடி வந்து அவனை அணைத்துகொண்டாள். அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டவன்.
"கஷ்டமா இருந்தாலும் நம்மள வேதனை படுத்துறவங்களவிட்டு நிரந்தரமா பிரியுறதுதான் நல்லது தேவா", என்றான். அவன் சொன்னதை கேட்டவள் தொடர்ந்து அழுதாள். அவள் அழுவதை முதல் முறை அனுமதிதான் சூர்யா.
இத்தனை நாள் அவளுக்குள் இருந்த வேதனையை அழுது தீர்க்க அவளுக்கு இது ஒரு வாய்ப்பு என்று நினைத்தான். தேவா அழுது கொண்டே இருந்தாள்.
..
அதே நேரம் இங்கே பூஜாவின் ரூமில் இருந்தாள் புவனா. பூஜாவின் தோழிகள் வேலைக்கு சென்றாதால் இந்த அறையில் இப்போது அவர்கள் இருவரும்தான் இருந்தார்கள்.
"என்ன எல்லாரும் சேர்ந்து வில்லி ஆக்கியாச்சுல்ல. இனி நிம்மதியா இருங்க எல்லாருக்கும் அவ பாவமா தெரியுறா அப்போ நான் பாவம் இல்லையா",என்று கேட்டாள்.
அவ நிறைய கஷ்ட பட்டா. நீ என்ன கஷ்ட பட்ட என்று கேட்டாள் பூஜா..
"நான் என்ன கஷ்ட பட்டேன்னு உனக்கு தெரியணுமா. இந்த பாரு", என்றவர் அவருடைய ஆடையை விலக்கி காண்பிக்க அவர் உடலில் நிறைய தழும்புகள் இருந்தது அதை பார்த்து அதிர்ந்தாள் பூஜா.
❤️எப்போவும் ரெண்டு பக்கமும் கதை கேக்கணும் இல்லையா. உண்மையா புவனா கெட்டவங்களா? இல்லை கெட்டவங்களா ஆக்கப்பட்டாங்களா? தெரிந்து கொள்வோம் அடுத்த பதிவில். ❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro