Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -22

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி உன்ன
பாக்குறேன் உள்ள உணருறேன்
நான் காதல

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இரவு 10 மணி அளவில் உறங்க சென்றார்கள் தேவா மற்றும் சூர்யா இருவரும் .ஆனால் இருவருக்கும் உறக்கம் கொஞ்சம் கூட வரவில்லை .லைட் ஆன் செய்த சூர்யா  தேவாவை பார்த்தான் .அவளும் உறங்காமல் இருந்தாள்.

என்ன ஆச்சு தேவா உனக்கு தூக்கம் வரலையா என்று கேட்டான் சூர்யா .தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள் .

என்ன நீ தூக்கம் வரலன்னு சொல்லலிட்டு இருக்க .மயக்கம் போட்டு வேற விழுந்துருக்க ரொம்ப டையார்டா இருப்ப அதனால ரெஸ்ட் எடுக்க வேண்டாமா. கொஞ்சம் ட்ரை பண்ணி தூங்கு என்றான் சூர்யா .பாவம் தேவாக்கு சுத்தமாக உறக்கமே வரவில்லை அவள் அவனை பார்த்து சரி என்பது போல தலை அசைத்தாள்.அவளுக்கு தூக்கம் வரவில்லை என்று சூர்யாக்கு புரிந்தது .

தூக்கம் வரலன்னா தூங்க வேண்டாம் .என்றான் சூர்யா அவன் அப்படி சொன்னதை கேட்டு தேவா முகம் பிரகாசம் ஆனது .

உனக்கும் தூக்கம் வரல எனக்கு தூக்கம் வரல என்ன பண்ணலாம் .ம்ம்ம் சரி எதாவது பேசலாம் என்று சொன்னான் சூர்யா.அவன் அப்படி சொன்னதும் சூர்யாவை என்ன என்பது போல பார்த்தாள் தேவா .

என்ன எதுக்கு அப்படி பாக்குற உனக்குத்தான் தூக்கம் வரலல்ல .அதனால ஏதாவது பேசலாம் என்று சொன்னனான் சூர்யா .

தேவா சரி என்பது போல தலை அசைத்தாள். முதல்முறை இருவரும் ஒன்றாக அமர்ந்து சாதாரணமாக பேச ஆரம்பித்தார்கள்.

இங்கே அமிர்தா உறங்கி கொண்டிருந்த குழந்தை அகரனை பார்த்து கொண்டிருந்தாள்.

என்ன ஆச்சு அம்மு ஏன் இன்னும் ஒரு மாதிரி இருக்க அவன் நல்லாதான இருக்கான்.அவனுக்கு ஒண்ணுமில்ல. நீ தேவை இல்லாம பயப்படாத .தூங்கு அம்மு என்றான் பிரசாத் .

அமிர்தா அவனை பார்த்தாள் .பிரசாத் குழந்தையை வாங்கி தொட்டிலில் போட்டான் .அமிர்தா எதுவும் பேசவில்லை .குழந்தைக்கு அப்படி ஆனதற்கு பிறகு அவள் இப்படித்தான் இருக்கிறாள் .

சஞ்சனா தூங்கி கொண்டிருந்தாள் .

அம்மு என்ன அச்சு அம்மு ஏன் இப்படியே இருக்க .எனக்கு கஷ்டமா இருக்கு அம்மு உன்ன இப்படி பாக்க .பாப்பா நல்லாத்தான் இருக்கான் வனுக்கு ஒண்ணுமில்லை சிரி அம்மு என்றான் பிரசாத் .

குழந்தை கொஞ்சம் நேரம் பேச்சு மூச்சு இல்லாம ஆகிடான்னு நானே பதட்டத்துல இருக்கேன் நீங்க என்னன்னா ரொம்ப சாதரணமா சரி ஆகிட்டான் சொல்றிங்க என்று கோபமாக கேட்டாள் அமிர்தா .

அம்மு நீ ஏன் அம்மு என்மேல தேவை இல்லாம கோப படுற உனக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது .எனக்கு நம்ம பையன் மேல பாசம் இல்லையா. அவன் சரி ஆகிட்டான் அம்மு அதுக்கப்புறம் இவ்ளோ கவலை பட்டு என்ன ஆக போகுது .என்று கேட்டான் பிரசாத் .

என்ன ஆக போகுதா நீங்க சொல்லுவிங்க என் முன்னாடி என் கையில இருந்து குழந்தை மயங்குனான் .எனக்குதான் தெரியும் நான் எந்த அளவுக்கு பயந்தேன்னு .உங்களுக்கு என்ன தெரியும் .நீங்க  அத்தை குழந்தையை  எழுப்புனப்போதான வந்திங்க.உனக்கு என்ன தெரியும் என்று கேட்டாள் அமிர்தா .

அம்மு புரிஞ்சிக்கோ அம்மு நீ ஒரு அம்மாவா பயப்படுற அது எனக்கு புரியுது ஆனா இந்த இடத்துல பயம் தேவை இல்ல குழந்தை நல்லா இருக்கான் .நீ தேவை இல்லாம கவலைபட்டு உன்னோட உடம்பை கெடுத்துக்காத என்று சொன்னான் பிரசாத் .ஆனால் அமிர்தா பதட்டத்தில் இருந்ததால் அவன் சொல்லும் எதையும் கேட்கும் நிலையில் அவள் இல்லை .

பிரசாத் போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதிங்க எனக்கு கோவம் கோவமா வருது .உங்களுக்கு எல்லாம் என்னோட உணர்வை புரிஞ்சிக்கவே முடியாது .ஏன் தெரியுமா நீங்க அப்பாதான அம்மா இல்லையே .பத்து மாசம் சுமந்து பெத்தது  நான்தான நீங்க இல்லையே உங்களுக்கு எல்லாம் என்னோட பாசம் புரியவே புரியாது .என்றாள் அமிர்தா .அவள் பதட்டத்தில்தான் பேசினாள் இருந்தாலும் அவள் பேசிய வார்த்தைகள் பிரசாத்தை காயப்படுத்தின .(me:இதுக்குத்தான் வார்த்தையை விட கூடாது)

இப்போ என்ன சொல்ல  வர்ற நம்ம குழந்தைங்க மேல  எனக்கு அக்கறை இல்லன்னு சொல்ல வர்றியா என்று கேட்டான் பிரசாத்.

ஆமா என்று கோபத்தில் சொன்னாள் அமிர்தா .அவள் சொன்னதை கேட்டு பிரசாத்க்கு கோபம் கோபமாக வந்தது இருந்தாலும் அவன் சண்டையை பெரிது படுத்த விரும்பவில்லை எனவே எழுந்து  ரூமை விட்டு சென்று விட்டான் பிரசாத் .

அவன் ரூமைவிட்டு சென்றதும்தான் அமிர்தாக்கு கொஞ்சம் அதிகம் கத்தி விட்டோமோ என்று தோன்றியது. அவள் அவனிடம் பேசவேண்டும் என்று செல்ல போக அகரன் தொட்டிலில் அசைய ஆரம்பித்தான் அவன் அசைய ஆரம்பித்ததும் தொட்டிலை ஆட்டி விட ஆரம்பித்தாள் அமிர்தா .

கோபமாக ஹாலுக்கு வந்தவன் எதுவும் பேசாமல் போனை பார்த்துகொண்டு அமர்ந்திருந்தான் .அப்போது  அவன் அருகில் வந்தார் பிரசாத் அம்மா .

என்னடா இப்படியே உக்காந்துருக்க சாப்பிட வா  .சூர்யா வீட்ல இருந்து நேரா கடைக்கு போயிட்டு வந்துருக்க இன்னும் சாப்பிடவே இல்ல .வா சாப்பிடு என்றார் அம்மா .

இல்ல அம்மா எனக்கு பசிக்கல நான் சாப்பிடல என்றான் பிரசாத்

என்னடா நீ ஏன் சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லுற. ஒழுங்கா சாப்பிடு .புருஷனும் பொண்டாடியும் சாப்பிட வேண்டாம்னு முடிவு பண்ணி இருக்கீங்களா என்ன .அவழும் சாப்பாடு வேண்டாம்னு சொல்றா நீயும் சாப்பாடு வேண்டாம்னு சொல்ற .இங்க பாரு ரெண்டு பேருக்கும் அங்க சாப்பாடு இருக்கு  .ஒழுங்கா எடுத்து சாப்பிட்டுட்டு படுங்க இல்ல நாளைக்கு ரெண்டு பேரும் என்கிட்ட அடி வாங்குவீங்க அவ்ளோதான் சொல்லிட்டேன் என்று சொன்னவர் நேராக அமிர்தா அறைக்கு சென்று  சஞ்சனாவை தூக்கி கொண்டு அவருடைய அறைக்கு சென்றார் .அவர் சென்ற கொஞ்சம் நேரத்தில் அமிர்தா வெளியே வந்தாள் .பிரசாத் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான் .அவன் அருகில் வந்து அமர்ந்தாள் . பிரசாத் அவள் முகத்தை கூட பார்க்கவில்லை .

என்னங்க என்ன பாருங்க சாரி நான் வேணும்னு அப்படி சொல்லல  என்ன தயவு செஞ்சு  மன்னிச்சிடுங்க.நான் ஏதோ பதட்டத்துல அப்படி பண்ண என்று சொன்னாள் .அமிர்தா .

பதட்டத்துல என்ன வேணா பேசுவியா நம்ம குழந்தைங்க மேல அக்கறை எனக்கு இல்லன்னு சொல்லுற அது என்னோட மனசை கஷ்ட படுத்தாதுன்னு நினைக்குரியா அம்மு என்று கேட்டான் பிரசாத் .

நான் வேணும்ன்னு அப்படி சொல்லல நீங்க என்கிட்ட அப்போ அக்கறை இல்லன்னு சொல்றியான்னு கேட்டிங்க. உடனே நான் சட்டுனு ஆமான்னு சொல்லிட்டேன் அவ்ளோதான் மனசுல இருந்து எதுவும் சொல்லல என்று சொன்னாள் அமிர்தா.
பிரசாத் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டான் .அமிர்தாக்கு அழுகை  அழுகையாக வந்தது அவள் ஹாலில் இருந்து எதுவும் பேச விரும்பவில்லை அதனால் அவள் ரூமுக்கு சென்று விட்டாள் .

அவள் அப்படியே அமர்ந்திருந்தாள் .அப்போது பிரசாத் ரூமுக்கு வந்தான் .அவனை பார்த்தாள்.கோபத்தில் இருந்தாலும் அமிர்தா சாப்பிடாமல் இருப்பதை அவன் விரும்வில்லை எனவே  பிரசாத் பேச ஆரம்பித்தான் .

சாப்பிடாம பட்டினி கிடக்க போறியா என்ன .வா வந்து சாப்பிடு .நீ  வேணா எனக்கு உன்மேல அக்கறை இல்லன்னு நினைச்சிக்கோ ஆனா எனக்கு உன்மேல நிறைய அக்கறை இருக்கு நீ நம்புனாலும் நம்பலன்னாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்றான் பிரசாத் .அமிர்தாக்கு இன்னும்  கஷ்டம் ஆனது .

ஏங்க ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கிங்க .நான் தெரியாம  பேசிட்டேன் என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க என்றாள் அமிர்தா .பிரசாத் கோபம் கொஞ்சம் கூட குறைந்ததாக தெரியவில்லை .

அமிர்தா எழுந்து அவன் அருகில் வந்தாள் .

என்கிட்ட ஏன் வர்ற தள்ளி போ என்று சொன்னான்  பிரசாத் .

போக முடியாது என்ன பண்ணுவிங்க உங்களுக்கு வேணும்னா நீங்க வெளிய போங்க .எல்லாருக்கும் தெரியட்டும் நம்ம குழந்தை மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கோம்னு என்ன ஆகிட போகுது என்றாள் அமிர்தா

அம்மு நீ தேவை இல்லாம பேசாத .கொஞ்சம்  அமைதியா இரு.நான் ஒண்ணும் சாதாரண கோபத்துல இல்ல உண்மையா ரொம்ப கோபத்துல இருக்கேன் .எனக்கு இருக்க கோபத்துக்கு உன்ன என்ன பண்ணுவேன்னே தெரியாது.அதான் நான் முடிஞ்ச அளவுக்கு அமைதியா இருக்க நினைக்கிறேன் எனக்கு ரொம்ப கோபமா வருது. என்னோட கோபம் என்னன்னு உனக்கு முழுசா தெரியாது அம்மு .அதனால என்ன விட்டு தள்ளியே இரு என்று சொன்னான் பிரசாத் .ஆனால் அவன் அப்படி பேசுவதை கேட்டு அமிர்தா கொஞ்சம் கூட வேதனை படவில்லை .

என்னங்க சாரிங்க நான் வேணும்னு சொல்லல உங்க பொண்டாட்டியை மன்னிக்க கூடாதா  .நான் ஏதோ பதட்டத்துல  அப்படி சொல்லிட்டேன் என்று சொன்னாள் அமிர்தா  .பிரசாத் கொஞ்சம் கூட அவள் மன்னிப்பை ஏற்று கொண்டது போல தெரியவில்லை .

அம்மு உன்னோட மன்னிப்ப தூக்கி குப்பைல போடு  எனக்கு ஒண்ணும் உன்னோட மன்னிப்பு வேண்டாம் என்று சொன்னான் பிரசாத்.

வேற என்ன வேணும் என்று கேட்டாள் அமிர்தா .

ஒண்ணுமே வேண்டாம் என்றான் பிரசாத் .

என்மேல எத்தனை நாள் கோபமா இருக்க போறீங்க என்று கேட்டாள் அமிர்தா .

எனக்கு தெரியாது என்றான் பிரசாத் .

சரி எனக்கு பசிக்குது என்றாள் அமிர்தா .

உனக்கு பசிச்சா போய் சாப்பிடு என்றான் பிரசாத் .

நீங்க  பேசுறவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன் .உங்களுக்கு என்னோட பிடிவாதம் தெரியும் நான் நிச்சயம் சாப்பிட மாட்டேன் என்றாள் அமிர்தா .

என்ன பழக்கம் இது சாப்பிடாம இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா .உடம்புதான் கேட்டு போகும் .ஒருவேளை நான் கோபத்துல சாப்பிடாம இறுதி சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப என்று கேட்டான் பிரசாத் .அவன் பேச்சில் கோபம் துளி கூட இல்லை .

நீங்க என்ன பட்டினி கிடக்க விடமாட்டீங்கன்னு எனக்கு தெரியும் அதான் நான் அப்படி சொன்ன.சாரிங்க  நான் உண்மையா வேணும்னு அப்படி சொல்லல.என்ன மன்னிச்சிடுங்க என்றவள் கண்கள் கலங்கியது .

அம்மு அழுறதை நிறுத்து .நீ எதுக்கு சாரி எல்லாம் கேக்குற சாரி கேக்க வேண்டியது நான்தான் .நீ குழந்தைக்கு அப்படிஆயிடுச்சுன்னு  அதை நினைச்சு கோபபட்டு கத்துன நானும் பதிலுக்கு கோப பட்டிருக்க கூடாது .நான் கொஞ்சம் அதிகமா கோப பட்டுட்டேன் சாரி என்றவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டான் .

என்மேல கோபம் இல்லையே என்று கேட்டாள் அமிர்தா .

உன்கிட்ட கோபப்பட்டு நான் எங்க டி போவ என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டான் பிரசாத் .ஆடி அமாவாசைக்கு ஒருமுறைதான் பிரசாத் டி போட்டு பேசுவான் .அமிர்தாக்கு அவன் டி போட்டு பேசினால் பிடிக்கும் .அவன் சட்டென்று டி போட்டு பேசியதும் மகிழ்ந்தவள் அவனை அணைத்து கொண்டாள்

என்னோட செல்லகுட்டி பட்டுக்குட்டி தங்ககுட்டி என்று பிரசாத்தை கொஞ்சினாள் அமிர்தா பிரசாத் சிரித்தான் .
அம்மு குழந்தையை கொஞ்சுறதா நினைச்சிட்டு என்ன கொஞ்சிட்டு இருக்க .என்றான் பிரசாத் .

நீங்கதான் என்னோட முதல் குழந்தை  உங்களைதான் நான் நல்லா கொஞ்சுவேன் என்று அமிர்தா சொல்ல பிரசாத் அவளை பார்த்து சிரித்தான் .அமிர்தா வயிறு சாப்பாடு சாப்பாடு என்று கூப்பாடு போட்டது .அந்த சத்தம் பிரசாத்துக்கும் கேட்டது.

சரி என்ன கொஞ்சுறது எல்லாம் அப்புறம் பண்ணலாம் முதல்ல சாப்பிட வா என்று அவளை அழைத்து சென்றான் பிரசாத் .அவனுடன் சென்றாள் அமிர்தா .இருவரும் சண்டை போட்டதை மறந்துவிட்டு சந்தோசமாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் .

......

அதே நேரம் இங்கே பூஜா ஜெய் அம்மா உடன் பேசி கொண்டிருந்தாள் .இல்லை அவர் பேசுவதை கேட்டு கொண்டிருந்தாள்.அவளுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.ஜெய் பேசி இருந்தால் அவனை திட்டி விட்டுருக்கலாம் ஆனால் அவன் அம்மா பேசும்போது அவளால் அப்படி எதுவும் திட்ட கூட முடியவில்லை .

சரி ஆன்டி ஓகே ஆன்டி அப்போ நான் போன் வைக்கிறேன்.எனக்கு நாளைக்கு வேலைக்கு போகணும் ஆஹ் ஓகே ஆன்டி என்று சொன்னவள் போனை வைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் .

என்ன டி யார்ட்ட பேசுன என்று கேட்டாள் நித்யா.

அது தெரிஞ்சவங்க ஒருத்தங்க ஊருல இருந்து போன் பண்ணி இருந்தாங்க .அதான் அவங்ககிட்ட பேசிட்டு இருந்தேன் .என்றாள் பூஜா

நீ பேசுன மாதிரி தெரியல .என்று சொன்னாள் நித்யா .

தெய்வமே எனக்கு ஏற்கனவே ரொம்ப டையர்டா இருக்கு .என்ன கொஞ்சம் தூங்க விடறியா என்று சொன்னவள் கண்ணை மூடி பெட்டில் படுத்து கொள்ள போக அவளுடைய போன் அடித்தது .அவளுடைய அம்மாதான் அழைத்து இருந்தார் .போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள் பூஜா .

என்னமா பூஜா எப்படி இருக்க .போன் பண்ணா எடுக்க கூட மாட்டேங்குற என்று பாவமாக பேசினாள் புவனா .

இப்போ என்ன பிரச்சனை காசு ஏதாவது வேணுமா என்று கேட்டாள் பூஜா .

இல்ல மக்கா எனக்கு நீ என் கூட பேசு அது மதி [போதும் ] எனக்கு .நீ என்கிட்ட பேசாம எனக்கு கை உடைஞ்சது போல இருக்கு என்று பாசமாக பேசினார் புவனா .

அம்மா கை உடைஞ்ச மாதிரி இருக்குன்னா ஹாஸ்ப்பிட்டல் போ அதை விட்டுட்டு இந்த நேரத்துல போன் பண்ணி என்னோட உயிரை வாங்காத என்று சொன்னவள் போனை கட் செய்து சைலன்டில் போட்டு படுத்து விட்டாள்.

அதே நேரம் மாடியில் நின்று கொண்டிருந்தார்கள் தேவா மற்றும் சூர்யா இருவரும் .

உனக்கு குழுருதா என்று கேட்டான் சூர்யா தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

நீ என்ன பத்தி என்ன நினைக்குற என்று கேட்டான் சூர்யா .தேவா அவனை பார்த்து புன்னகை செய்தவள் அங்கிருந்த பேப்பர் ஒன்றை எடுத்தாள் .

ரொம்ப நல்லவர்ன்னு நினைக்கிறேன் என்று எழுதி காண்பித்தாள் .

நல்லவனா நானா அது சரி .ஆமா உனக்கு யார் மேலயாவது கோபம் வருமா என்று சூர்யா கேட்க தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள் .

அது எப்படி தேவா ஒருத்தர் மேல கோபமே வராம இருக்கும் என்று சூர்யா கேட்க தேவா தனக்கு தெரியாது என்பது போல உதட்டை பித்துகினாள் .அவள் அப்படி செய்ததும் சூர்யாக்கு தேவா மிகவும் கியூட்டாக தெரிந்தாள் .அவள் உதட்டில் இருந்து தன்னுடைய கவனத்தை திருப்பியவன்   லேசாக முடியை கோதி விட்டபடி  பேச ஆரம்பித்தான் .

சரி உனக்கு எந்த ஹீரோ ரொம்ப பிடிக்கும் என்று கேட்டான் சூர்யா .

தேவா தலையில் கை வைத்தாள் .

ஓ தலை பிடிக்குமா என்று கேட்டான் சூர்யா வேகமாக தலை அசைத்தாள் தேவா அவள் முகம் அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது .[me; தேவா நீயும் தல ரசிகையா நானும் 😊].

ம்ம்ம் ஏன் உனக்கு தல ரொம்ப பிடிக்கும் என்று கேட்டான் சூர்யா.தேவா தனக்கு தெரியாது  என்று உதட்டை பிதுக்கினாள்.அதை பார்த்த சூர்யா தன்னுடைய நெற்றியில் கை வைத்து தேய்த்தபடி தலை குனிந்து கொண்டான் .

என்ன பாடா படுத்துறாளே .நான் என்ன பண்ணுவ என்று மனதில் நினைத்து கொண்டான் சூர்யா .

என்ன ஆச்சு என்று சைகை மூலம் கேட்டாள் தேவா.

ஒன்றும் இல்லை என்று சொன்னான் .அப்போது குல்பி வண்டி  சத்தம் கேட்டது  .

குல்பி  வாங்குவோமா இரு நான் போய் வாங்கிட்டு வர்றேன் என்று சொன்ன சூர்யா எழுந்து சென்றான்.

அவன் குல்பி வாங்கிவிட்டு செல்லும்போது பிரசாத் வெளியே வந்தான் .சூர்யா கையில் குல்பியை பார்த்தவன் அவனை பார்த்து நடத்து நடத்து என்று கண்ணால் சைகை செய்ய சூர்யா அப்படியே அவனை பார்த்து புன்னகை செய்துவிட்டு உள்ளே சென்றான்.

சூர்யா விரைவில் மாறி விடுவான் என்ற நம்பிக்கையில் பிரசாத் குல்பி வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.

❤️அவங்க சந்தோஷமா இருக்கட்டும் நானும் சந்தோஷமா நானும் விடைபெறுகிறேன்.அடுத்த அப்டேட்ல சந்திப்போம் நன்றி❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro