Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

15

யாழினி அழகாய் சிறு குழந்தைபோல டைரிமில்கை வாயில் கையில் எல்லாம்இழுக்கிகொண்டு எந்த கவலையும் இல்லாமல் சப்பி சப்பி சாப்பிட   பக்கத்தில் வரிசை நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒரு பெண் கையில் பத்துமாதம் ஆன ஒரு  பெண்குழந்தை யாழினியை பார்த்து சிரித்தது இவளும் வாயை துடைத்தவளாய் அந்த குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தாள்.

காலை ஒரு பத்து மணி என்பதால்  சென்னை வெயில் சுட்டெரித்தது அங்குள்ள பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் எல்லாம் நிழலை தேடி அமர்ந்திருந்தனர் பொது இடம் என்பதால் பொதுநலன் அற்ற மனிதர்கள் போடும்  காலியான வாட்டர் பாட்டில்கள், நொறுக்கு தீனி காகிதங்கள்  என  ஆங்காங்கு சிதறி கிடந்தன குப்பை போடும் குப்பை தொட்டி  காலியாக தனிமையில் காத்திருந்தது.அனல் பறக்கும் வெயிலும் தோற்றுபோனது அவன் பதபதப்பில்
யாழினி எங்கே என்று எழிலின் கண்கள் தேடிகொண்டு  இருக்க மனமோ இனம் புரியாத அச்சத்தில் தத்தளித்தது.

அய்யோ .....கடவுளே "ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு சோதனை இருக்குற பிரச்சனை போதாது என்று இந்த யாழினியும் பிரச்சனை இழுத்துக்குறா  ",போரில்  எதிரியை கூட சமாளிக்கிறேன் ஆனால் இந்த உறவுகள் தருகின்ற பிரச்சனையை  எப்படி சாமளிக்கிறது "முருகா ....நீ தான் காப்பாத்தனும்" என்று எழில் மனதுக்குள் மௌனமாய் புலம்பிக்கொண்டே
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் தன் நண்பனோடு நுழைந்தான்.

கண்கள் சுற்றும் முற்றும் தேட யாழினி போனில் தான்  இருக்கும் இடத்தை மெசஜ் செய்து இருந்ததால் அந்த இடத்தை தேடி சென்ற எழிலுக்கு ஆங்கே  அதிர்ச்சி காத்திருந்தது.எழிலின்  கோபத்தின் முன் கோடை வெயிலும் சற்று தோற்றுதான் போனது யாழினி என்று அழைத்தவனை வாயில் சாக்லேட் கவரை சுரண்டி சுவைத்து கொண்டே நோக்கினாள் .

கோபத்தில் இருந்த எழில் கையில் இருந்த சாக்லெட் கவரை பிடிங்கி கீழே போட்டு அவள் மென்மையான கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட யாழினி திகைத்து போய்  நின்றாள் .எழில் நண்பனோ "டேய் மச்சான் ,என்னடா லூசா நீ எல்லாரும் இருக்காங்க நீ வயசு பொண்ண அரையிறே அறிவு இருக்கா  முதல உட்காரு பேசிக்கலாம் என்று வற்புறுத்தி அருகில் இருந்த வரிசை நாற்காலியில்  எழிலை அமர வைத்தான்.
யாழினி கண்கள் கலங்கி நிற்பதை பார்த்த எழில் நண்பன் "சிஸ்டர் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் நீங்களும் உட்காருங்க" என்று யாழினியையும் எழில் அருகில்  அமர வைத்தான்.

ஏ லூசா டி நீ நம்ம ஊருல என்ன நடக்குது என்று உனக்கும் தெரியும் நீ யாருக்கும் சொல்லாமே நீ பாட்டுக்கு சென்னைக்கு வந்துருக்க எதாவது நடந்த என்னடி பன்றது
என்று கண்கலங்கினான் எழில்.

மாமா  நான் வாழ்ந்தாலும் சரி இல்ல செத்தாலும் சரி  உன் கூட தான் அதை தவிர வேற எதையும் நான் நினைக்குல இந்த எழில் மாமா இந்த யாழினிக்கு தான் என்று யாழினி  கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தாள்

எழிலோ "என்ன யாழினி நீ யாருக்கும் சொல்லாமே கிளம்பி வந்துருக்க அதுவும் நைட் காலம் கெட்டு இருக்குடி உனக்கு எதாவது நடந்தா நாங்க எப்படி உயிரோட இருப்போம் உன்னோட விளையாட்டுக்கு எல்லையில்லாமா போயிருச்சு "என்று வருத்தமான முகத்தோடு யாழினியை பார்த்தான்.

மாமா யாருமே நம்ம உணர்வுகளை மதிக்க மாட்டிறாங்க "எனக்கு நீ உனக்கு நான்" எல்லாரும் சின்ன வயதுல இருந்து ஆசையை வளர்த்துவிட்டு இப்போது இவங்க சுயநலத்திற்கு நம்மை பிரிச்சா எந்த விதத்துலே நியாயம் நீயே சொல்லு மாமா என்று கதறினாள் யாழினி.

என்ன யாழினி பன்றது நான் யாருக்குனு பாக்குறது  எனக்கு நீயும் வேணும் அம்மா அப்பா, அத்தை மாமாவும் வேணும் புரிஞ்சுக்க
ப்ளீஸ் யாழு என்று யாழினியின் கைபிடித்து
எழில் தன் வருத்தத்தை தெரிவித்தான்.

டேய் மச்சான் உனக்காக ஒரு பெண்ணு உன்ன மட்டுமே  நம்பி ராத்திரினு பார்க்கமா கூட உன்ன  தேடி வந்துருக்கா டா .எழில் நீ உண்மையவே கிரேட் தான் யாழினி உன் மேலே எவ்வளவு அன்பு வைச்சுருக்கானு பாரு டா  என்று எழிலின் நண்பன் எழிலிடம் சொல்ல எழிலோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அண்ணா இந்த மாமாக்கு என்ன பிடிக்கல எப்படி அவைட் பன்றாதுனு தான் இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்துருக்காரு போல இல்லனா நான் ரிஜிஸ்டர் மேரஜ் பண்ணிக்கலானு சொன்னதற்கு  சமதம் சொல்லிருப்பாருல நான் தான் கிறுக்கி மாறி இவரையே நினச்சுட்டு இருக்கே என்று யாழினி கண்ணில்  கண்ணீர் மழைதுளிபோல் வடிந்து கொண்டே இருந்தது.

சரி மாமா  இனி நான் உங்கள  டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ..... பாய் ..... என்ன தேடாதே நான் எங்கயாவது போய் செத்துறேன் என்று எழுந்தாள் யாழினி.

சிஸ்டர் ....சிஸ்டர் .......
இருங்க ஏன் இப்படி சொல்றீங்க  .சிஸ்டர் அப்படி எதுவும் இல்லை நீங்க எவ்வளவு தூரம் எழிலை காதலிக்கிறீங்களோ அதே விட  அதிகமா எழில் உங்களை காதலிக்கிறான். ஜம்முவில் இருந்து எனக்கு போன் பேசும் போது எல்லாம் யாழினி அப்படி பண்ணா இப்படி பண்ணானு உங்களே பத்தியே தான் பேசுவான் ஒரு நாள் பேசமுடியலனாலும் அய்யோ,..... மச்சான் யாழினி என்ன பண்றாளோ பேச முடியலைனு பீல் பண்ணுவான் இப்ப சொல்லுங்க சிஸ்டர் எழிலுக்கு உங்களை பிடிக்கமாதான் இதை என்கிட்ட சொல்லிருப்பானா என்று எழிலின் நண்பன் யாழினியிடம் கவலையில் கூறினான்.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த எழில்.......சரி யாழினி .....நீ போ, போய் சாவு அதுக்கு முன்னாடியே என்னை சாவடிச்சுட்டு போ என்றவனுக்கு  கண்கள் முழுதும் கண்ணீரில் நிறைந்திருந்தன.

மாமா அப்படி சொல்லாத ,சாரி மாமா ....உன்ன நான் புரிஞ்சுக்குவே இல்ல
நம்ம வாழணும் மாமா ஊரே பொறாமைபடற அளவு வாழணும் அதுவும் சந்தோஷமா வாழணும்  நான் உண்மையாவே லூசு தான் உன்னை புரிஞ்சுக்குவே இல்ல  சாரி எழில் மாமா என்று மறுமுறை வேண்டினாள் யாழினி.

சரி விடு என் யாழு லூசுனு தான் எனக்கு முன்னவே தெரியுமே என்று சிரித்தான் எழில்.

அட லூசுகளா உங்க ரெண்டு பேருகிட்ட மாட்டிக்கிட்ட நான் தான் லூசு என்று நக்கலாக சிரித்தான் எழில் நண்பன்.

மாமா பசிக்குது என்று வாயை பிதுக்கிகொண்டு கெஞ்சலாக நின்ற யாழினி நேத்து காலையிலே சாப்டது பசிக்குது மாமா என்றவளுக்கு பேசி முடிப்பதற்குள் மயக்கம் வந்துகீழே விழுந்தாள். பதறிபோன எழில்
அவளை தன் தோளோடு சாய்த்து  நாற்காலியில் அமர்ந்தான்.   எழிலின் நண்பன்  தண்ணீர் புட்டியை வாங்கிவர எழில் அதை அவள் முகத்தில் தெளித்தான் சிறிது சுயநிலைக்கு வந்தவளின் முகத்தை கழுவிவிட்டு  யாழினியை அழைத்து கொண்டு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.

யாழினி சாப்பிடுவதை பார்த்த எழில் பதறிபோக  பசி தாங்காதவ எனக்காக என்னையே நினைத்து சாப்பிடாமா இருந்துருக்கா என்று நினைத்து வருந்தியவனுக்கு அய்யோ வீட்டில் எல்லாரும் உன்ன தேடுவாங்களே அவசரத்தில் அவங்களுக்கு சொல்லாமே விட்டுட்டோம்   என்று தலையில் கைவைத்தான்.

ஏ யாழினி சொல்லிட்டு ஏதும் வந்தியா வீட்ல என்று எழில் கேட்க

இல்ல மாமா  பக்கத்திலே ப்ரண்ட் வீட்டுக்கு போய் நோட் வாங்கிட்டு வரேணு சொல்லிட்டு அப்படியே கிளம்பி நைட் பஸ்'ல சென்னைக்கு  வந்துட்டேன் என்  ஐடியா  எப்படி என்று சிரித்தாள் யாழினி.

ஏ  லூசு உன்னை காணோம்னு எல்லாரும் பதறிபோய்  தேடுவாங்களே அதை மறந்துட்டியா என்றான் எழில்.

அய்யோ ஆமா மாமா எப்படியும் அங்கே இருந்து தப்பிக்கணும்னு நினச்சேன் இதை யோசிக்கலையே "யாழினி ".

சரி யாழு நீ மாமாக்கு   போன் பண்ணி சொல்லு என் கூட தான் இருக்கே வந்துரேன் என்றுஎழில் சொல்லி முடிப்பதற்குள் யாழினிக்கு கார்த்திக்கிடம் அழைப்பு வந்தது.

என்ன கார்த்திக் கால் பண்றான் என்னவா இருக்கும் என்று யோசித்தவளாய் ஹாலோ கார்த்திக் சொல்லுடா என்றாள் யாழினி.

ஏ .....யாழினி நீ எங்க இருக்க  வஸ்ட் அதே சொல்லு. உன்ன காணோம்னு உங்க அம்மா எழில் வீட்டுக்கு போய் யாழினியே உங்க பையன் எழில் தான் கூட்டிட்டு போய்ட்டானு ஒரே சத்தம் போட்டாங்கலாம் .பதிலுக்கு எழில் அம்மா உன்னையும் என்னையும் சேர்த்தி வைத்து அசிங்கமா பேசிட்டாங்கலாமா எனக்கு உங்க வீட்டு பக்கத்தில் இருக்குற சஞ்சய் எனக்கு ப்ரண்ட் தானே  அவன் தான் சொன்னான். சரி பரவால நம்ம எப்படி பழகுறோம் அப்டிங்கறது நமக்கு தெரியும் ஏன் எழிலுக்கு கூட தெரியும்  இதை விடு நீ முதல்ல இங்கே கிளம்பி வா பேசிக்கலாம் என்று போன்காலை கட் செய்தான் கார்த்திக்.

யாழினி முகம் வாடியதை கண்ட எழில் யாழினி  என்னவென்று  விசாரிக்க இருவரும் எழில் நண்பனிடம் விடைபெற்று  ஊருக்கு செல்ல பேருந்தில் அமர்ந்தனர். சன்னல் அருகில்  அமர்ந்த யாழினி எழில் தோளில்  தன் தலைசாய்த்து அவன் விரலோடு தன் விரலையும் யாரும் பிரிக்காத வண்ணமாய் இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro