Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

முள்ளும் மலரும் 8

மீரா காலையில் எழுந்து தயாராகக் குளியலறை சென்ற போதே கிருஷ் வீட்டிற்குள்ளே வந்தான்..
அவன் வந்ததும் ராம் " ஏய் ஒரு தடவை சொன்னா உனக்குப் புரியாதா.. வெளிய போயிடு "  என்று மிரட்ட,

" சின்னப் பசங்கனா சின்னப் பையன்மாறி தான் நடந்துக்கனும் ராமசாமி.. " என்று ராமின் கையை பின்னாடி வளைத்துப் பிடித்தான்.

" என் பேரு ஒன்னும் ராமசாமி இல்ல.. "என்று அவன் அந்த வலியிலும் கூற , " ஓ அப்போ ராம மூர்த்தியா " என்றதும் அப்போது அங்கே வந்த நிலா அதைக் கேட்டு சிரித்துவிட்டாள்

அது ராமுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்த " டேய் கைய விடுடா " என்று கத்தினான் அதற்குள் 2 3 வேலையாட்கள் வந்து வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துச் சென்றனர். 

அதுவரை பொறுமையாக இருந்த நிலாவும் " ஏன் இப்படி அராஜகம் பண்றீங்க.. அவன விடுங்க " என்று ராமின் கைகளைப் பிடித்திருந்த கையை எடுத்துவிட முயற்சித்தாள்.

அதற்குள் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த மீரா அங்கே நடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும் பின்பு சுதாரித்து " கிருஷ் " என உரக்கக் கத்தினாள்.

அவளது வருகையால் ராமை விடுவித்தவன் " வா மீரா.. இன்னைக்கு பர்ஸ்டே நியூ ஆபிஷ் போரல.. அதான் விஷ் பண்லாம்னு வந்தேன் " என்றான்.

அதற்கு அவள் பதில் சொல்லாமல் " ஹலோ யார் நீங்க.. திங்ஸ எதுக்கு டச் பண்றீங்க.. வெளிய போங்க " எனக் கத்தவும் " கத்தாத ராட்சசி.. நான் தான் வரச் சொன்னேன்.. " என்று கிருஷ் கூற,

" என்னை சாகடிச்சது பத்தாதுனு இன்னும் என்னை நடு்த்தெருவுல நிறுத்தனும்னு இதெலாம் பண்றியா.. நான் இப்போ தான்டா வாழக்கைல முன்னேறனும்னு நினைச்சேன்.அதுகூட உனக்கு பொறுக்கலியா " என்று வாரத்தைகளால் அவனைக் காயப்படுத்த முயல,

அதை அனுமதிக்காதவன், " நான் ஒன்னும் உன்ன தெருவுல நிறுத்தல, இன்னும் இந்த வீட்ல நீயிருந்தீனா அடிக்கற மழைல உன் வீடே தெருவுல நிக்கற மாதிரி தான் இருக்கும்.. உன் தம்பி தங்கச்சி மேல உனக்கு பாசமிருக்கா இல்லையா.. அவங்கள இந்தமாறி பாழடைஞ்ச வீட்ல தான் தங்க வைப்பியா.. அதுவும் நான் இங்க வந்து உன்னை தொல்லை பண்றப்போ இந்த ஏரியால இருக்குற ஒருத்தர் கூட உனக்கு ஹெல்ப் பண்ண வரல.. அதுலிருந்தே தெரிஞ்சுக்கோ இந்த ஏரியா ஷேப் கிடையாதுனு.. ஒரு வயசுப்பொண்ண வீட்ல வெச்சிட்டு உன்னால நிம்மதியா வெளிய போயிட்டு வர முடியுமா.. அதும் இந்த அரை டிக்கெட்ட நம்பி " என்று ராமைப் பார்த்து கைநீட்ட,

" டேய் யாரப் பார்த்து அரை டிக்கட்டுங்குற.. எங்கள பார்த்துக்க எங்களுக்கு தெரியும்.. மரியாதையா போயிடு " என்று வழக்கம் போல ராம் எகுற,
"மரியாதையப் பத்தி  நீ சொல்றியா...டேய்னு சொன்ன அவ்ளோதான் " என கிருஷும் எகிற, யாருக்கும் தெரியாதபடி தன் கண்களில் வரும் கண்ணீரைத் துடைத்து விட்டு " உங்க அக்கறைக்கு தேங்க்ஸ்.. பட் என்னோட பர்ஸ்ட் மன்த் சேலரி வந்தவொடனே சேன்ஜ் பண்ணிடரோம்.. இப்போ எந்த தொந்தரவும் பண்ணாம போயிடு.. எங்ககிட்ட இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்காத.. ப்ளீஷ் "என்று கைக்கூப்பி கேட்டாள் மீரா

அவள் கண்ணீரைக் கண்டு கொண்டவன் " மீரா எதை நான் தான் பண்ணிருப்பனு நினைச்சு நீ என்னை வெறுக்கறியோ அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லடி. " என்றவன் அவர்கள் அருகே தலைமுடியைப் பிசைந்து கொண்டு நின்ற வேலையாளைப் பார்த்ததும் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு " ஏன் நின்னுட்டிங்க.. இன்னும் ஒரு மணி நேரத்துல நான் கொடுத்த அட்ரெஷ்ல திங்க்ஸ்லாம் வெச்சிட்டு எனக்கு கால் பண்ணுங்க " என்றான்.

அவனது அடாவடி நடவடிக்கையில் உருக்குலைந்த மீரா என்ன பண்ணுவது என்று தெரியாமல் உதயாவை உதவிக்கு அழைத்தாள்.
உதயாவும் 5 நிமிடத்தில் வந்துவிட, "  அவன் தொல்லை பண்றான் .. என்னனு கேளு " என்று ராம் அவனது கையைப் பிடித்து உள்ளே அழைத்து வர,

உதயாவைப் பார்த்ததும் முறைத்தவன் " என்ன அரை டிக்கட் அடியாளா.. " என்றான்.
உதயா அதை எதுவும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்த வேலையாளிடம் " அண்ணா. இதே உங்க வீட்ல யாரும் இல்லாத போது இப்படி பண்ணா நீங்க சும்மா விட்ருவீங்களா.. கொஞ்சமாச்சும் மனசாட்சியோட நடந்துக்கோங்க " என்றதும் அனைவரும் தலைகுனிந்தனர்

" சரி இதையெலாம் நான் கொடுக்குற அட்ரெஸ்ல வெச்சிடுங்க. " என்று அவர்களிடம் விலாசத்தைக் கூறியவன் கிருஸிடம் " சார் நீங்க வந்த வேலை முடிஞ்சுதுன்னு நினக்கிறேன்.. இப்போ கிளம்புறீங்களா.. " என்றான் நக்கலாக,

அதில் எரிச்சலடைந்தவன் "இவங்க இந்த வீட்ட விட்டு போனாப் போதும் எனக்கு..அவ்ளோதான். இதை பிரண்டுனா நீ முதல செஞ்சிருக்கனும்.. இப்போ வந்து செத்த பாம்ப அடிச்சிட்டி சீன் போடறியா..போடா டேய் " என்றவன் மீராவைப் பார்த்து " எல்லா உண்மையும் தெரிஞ்சபிறகு யார் நல்லவங்கனு உனக்கு தெரியும் மீரா.. நான் வரேன்  " என்று கூறிவிட்டு,

" நிலா அவன் படிக்குறதால தான் சீன் போடறான்.. அவனை விட மார்க் வாங்கி அவன் மூக்க உடை.. பாய் " என்று அவள் கன்னத்தைக் கிள்ளியவன் போகும்போது தன்னை முறைத்துக் கொண்டிருந்த ராமை நங்கென்று கொட்டிச் சென்றான்..

அவன் சென்றதும் " உதய் நீ ஏற்கனவே எனக்கு நிறைய செஞ்சுட்ட இதுல " என அவள் ஆரம்பிக்க " ஹேய் ஏன்டி பெரிய வார்த்தைலாம் பேசற, என்னோட ஸ்டாப்க்கு கொடுத்தனாவது  நினைச்சிக்கோடி.. அவன் சொன்ன மாறி நானே உனக்கு வீடு ஏற்பாடு பண்ணிருக்கனும். லேட் பண்ணிட்டேன். சரி இன்னைக்கு நீ ஆபிஸ் வராத.. வீட்ல திங்க்ஸ அரேன்ஜ் பண்ணு.. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு " என்று கூறிவிட்டு அவளது பதிலுக்கு காத்திராமல்  பறந்து வி்ட்டான்.
மழைபேய்ந்து ஓய்ந்தது போல இருந்தது அவர்கள் இருவரும் சென்றபிறகு.

தலையை தேய்த்தபடி நின்ற ராமைப் பார்த்து " நீ ஸ்கூல் முடிஞ்சு வரப்ப கராத்தே ஸ்கூல் பத்தி விசாரிச்சிட்டு வா.. உன்னையும் நிலாவையும் சேர்த்து விடரேன்.. " என்றாள் மீரா

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro