Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 32

மாலை நான்கு மணிக்கெல்லாம் தன் இல்லம் திரும்பியவள் நேராக தங்களின் அறைக்கு செல்ல அங்கு தன்னவன் செயலில் ஒரு நிமிடம் அதிரிச்சியடைந்தாலும் அடுத்த நிமிடம் கோபம் வர "டேய் பூதி எருமை.. என்ன டா பண்ற.. எதுக்கு இப்போ இப்படி எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டு இருக்க.. நான் உன்னோட தான் தூங்குவேன்னு சொன்னல்ல ஏன் டா இப்படி பண்ற..." எனக் கத்தி கொண்டிருந்தவளை பார்த்தவன் எதுவும் கூறாமல் தன் வேலையில் கருத்தாக இருக்க அதில் கடுப்பானவள்

"டேய் கேட்டுட்டே இருக்கே நீ பாட்டுக்கு பொட்டியில எல்லாத்தையும் தூக்கி வைச்சுட்டு இருக்க எருமை..." என மீண்டும் கத்த இரண்டு லக்கேஜ்ஜையும் எடுத்து கீழே வைக்க லைக்கேஜ்ஜை உற்று பார்த்தவள் சிறு வெட்க சிரிப்புடன்

"டேய் பூதி எருமை.. நம்ம எங்க போறோம்.. ஹனிமூன் போறமா..." என வெட்க சிரிப்புடன் கேட்டவளை முறைத்தவன்.

"கன்றாவி உனக்கு இந்த ஆசை வேற இருக்கா டி குந்தாணி..." என மகேஷ் கேட்கவும் உதட்டைப் பிதுக்கி அழ தாயராக நின்றவளை மேலும் சீண்டினான் மகேஷ்.

"என்ன டி சொல்லு.. எந்த பொண்ணும் புருஷன் கிட்டயே வந்து இப்படி ஒரு கேள்விய கேட்கவே மாட்ட.. ஆனா நீ கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படியா வந்து ஹனிமூன் போகறதுக்கா பேக் பண்றன்னு கேட்கற.. தெரியாம தான் கேட்கற எந்த குடும்ப பெண்ணவது இப்படி கேட்பாளா டி..." எனக் கேட்டவனை முறைத்தவள் தன் அழுகையை உள்ளே இழுத்துக்கொண்டு அவனை முறைத்துவிட்டு அறைக்கதவை நோக்கி செல்ல தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவன் அவளை ஒரே எட்டில் பிடித்து ஒரு கையில் அவளை வளைத்துப் பிடித்துக் கொண்டே மற்றோரு கையில் அறைகதவை மூட அவனிடமிருந்து விலகி முற்பட முடியாமல் போக பட்டென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வர கண்ணீரை அடக்கியவாறே

"விடு மகேஷ்.. என்னை விடு. என்னை விடு..." எனக் கூறியவளின் குரல் கரகரக்க, சிரித்துக்கொண்டே

"வினி மா..." என மென்மையாக அழைக்க சட்டென்று பின்னால் திரும்பி "எதுக்கு டா அப்படி சொன்ன. ஏன் டா அப்படி சொன்ன. முதல்ல கேட்டேன்ல பதில் சொல்ல வேண்டியது தானே டா. விளையாட்டுக்கு தானே அப்படி கேட்டேன். அதுவும் யாருக்கிட்ட அப்படி கேட்டேன் உங்கிட்ட தானே கேட்டேன். ரோட்டில போறவன் , வரவங்கிட்ட கேட்கலயே. என்னமோ அப்படி சொல்ற.  இப்ப இல்லைன்னாலும் எப்பவது இரு நாள் அது ஒன்னு நடக்க தானே போகுது. விடு டா..விடு. இனிமே என் பக்கத்திலயே வராத..." எனக் கூறியது மட்டுமல்லாமல் ஒற்றைக் கையில் அவனின் மார்பில் குத்த அவளின் கையை இறுக பிடித்தவன்.

"போதும் டி.. ரொம்ப பேசதா.. நானும் சும்மா தான் டி சொன்னேன் என் குந்தாணி..." எனக் கூறியவன் தன்னை அடித்த கையில் இதழ் பதித்தவாறே இருக்க சிலிர்த்து நின்றவள் அன்னார்ந்து அவனின் விழிகளை பார்க்க. அவளின் கைகளில் முத்தமிட்டு அவளை தன்னிடம் இறுக்கி அணைத்துக் கொண்டவன் அடுத்த நிமிடமே அவளின் மெல்லிய இதழை தன் இதழால் மெல்ல முத்தமிட்டு பிரிந்து அவளைக் காண என்ன நினைத்தானோ மீண்டும் அவளின் இதழில் அழுத்தி இதழ் பதித்து அவளுள் புதைந்துக் கொண்டவன்
சில நிமிடங்கள் கழித்தே அவளை விட்டான்...

"வினி மா..." என அவளின் காதில் கிசுகிசுக்க

"ம்ம்..."

"நம்ம ஊருக்கு போலாமா..." எனக் கேட்க

அவனை புரியாது பார்த்தவள் பின் சரியென தலையை ஆட்டிட அவளின் தலையில் தன் தாடையை வைத்தவன் "வினி மா..." என மீண்டும் அழைக்க

"ம்ம்ம்ம்..."

"என் செல்லமா... என் குழந்தை.. என் மயிலு.." என விடாமல் கொஞ்ச

அவனிடமிருந்து பிரிந்தவள் அவளை அன்னார்ந்து பார்த்து "எதுக்கு டா கிஸ் பண்ண..." எனப் புருவத்தை உயர்த்திக் கேட்க

அவளின் கேள்வியில் சிரித்தவன் "இதை ஏன் டி இவ்வளவு நேரம் கழிச்சு கேட்கற.." என சிரித்துக்கொண்டே கேட்டவனிடம்

"அப்போ வெட்கமா இருந்துச்சு..." என கூறியவள் தலையைக் குனிந்துக் கொள்ள

"இப்ப இல்லையா...வேணும்னா மறுபடியும் வெட்கத்தை வர வைக்கவா..." என அவளை சீண்டிட

"ச்சி போலீஸ் பொறுக்கி.. விடு டா என்னை..." என அவனிடமிருந்து விலக அவளை பின்னாலிருந்து அணைத்தவன்

"கொஞ்சம் நேரம் இப்படியே இரு டி..." எனக் கூற அமைதியாக நின்றவள் ஞாபகம் வந்தவளாக

"அன்னைக்கு ஒரு நாள் நீ கிஸ் பண்ற மாதிரி இருந்துச்சு டா. அப்படியே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அப்பறம் பாத்தா கனவு.." என இழை சொல்ல சத்தமாக சிரித்த மகேஷ்.. "ஆமா இன்னைக்கு ஏன் மயக்கம் வரல.." எனக் கேட்டவனைப் புரியாது பார்த்தாள்..

அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவன் தன் பேச்சை மாற்றிட
"ஆமா டி உனக்கு நம்ம ஊருக்கு வரதுக்கு பிரச்சினை இல்லையே.. உங்க டீன்கிட்ட பேசணுமா சொல்லு பேசலாம்..." எனப் பேச்சை மாற்றிட அது சரியாக வேலை செய்தது..

"ஆமா டா யாதவ் அண்ணாகிட்ட சொல்லணும்..அப்பறம் நம்ம கூட மித்து வரலையா..." என இழை கேட்க..

இல்லையென தலையை ஆட்டியவன்
"யாதவ் அண்ணாவா..." என கேட்க

"ஆமா.. யாதவ் அண்ணா தான் என் டீன்..உனக்கு தெரியும் தானே. யாருன்னு..." என அவனுக்கு தெரியவில்லையோ என விளக்கம் கொடுக்க தயாராக நின்றவளை

"அவரை உனக்கு முன்னாடியே எனக்கு தெரியும்..." எனக் கூறியவன் இழை அடுத்த கேள்வி கூறும் முன்பே அவளை யாதவ் வீட்டிற்கு சென்றுவிட்டு அப்படியே தங்களின் சொந்த ஊருக்கு கிளம்ப தன்னவளை தயாராக சொன்னவன் தன் மாத்துத் துணியை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்கு சென்றான்.

************

" ஏய்ய்...எனக்கு தான் கொதா தா... கொடு..!! அக்கா.. அவனை கொடுக்க சொல்லு.. டே சதனு கொதா(கொடு) தா(டா) ..." என கூறியவள் சரணை துரத்த அவனோ அவளுக்குப் போக்குக் காட்டிவிட்டு டிவி ரிமோட்டை எடுத்துக் கொண்டு ஓட அவன் பின்னாலே ஓடினாள் யாதவ்-துகியின் இளைய மகள் அகயாழினி.!!

"அண்ணான்னு சொல்லு.. மோட்டு பட்லு போடறேன்.. இல்லன்னா தர மாட்டேன்..." எனக் கூறியவன் மேலும் ஓட சரண்யா அவனை பிடிக்க, தனது குட்டி கையில் சரணைப் பிடித்துக் கொண்டாள் யாழ்.

திரும்பி சரண்யாவை முறைத்தவன்
"நீ ஏன் எங்க இரண்டு பேருக்குள்ள வர.. அவ என்னை அண்ணா சொல்லவே மாட்டேன்னு சொல்றா..." எனக் குற்றம் சாட்டியவனின் தலையில் கொட்டு வைத்த சரண்யா.

"அவ குட்டிப் பாப்பா..அவ எப்படி சொல்லுவா அவளும் நம்மல மாதிரி பெருசா ஆயிட்டா அண்ணா சொல்லுவா..." என சரணிடம் கூறிய சரண்யா யாழியிடம் திரும்பி

"அப்படி தானே குட்டி..." என சரண்யா கேட்க

"ஆமா க்கா.. " எனக் கூறியவள் சமத்துப் புள்ளையாக அமர்ந்து மொட்டு, பட்லுவை பார்த்துக் கொண்டே சமோசவை நொறுக்கிக் கொண்டிருக்க அவளை இடித்தவாறே அவளின் அருகில் வந்தமர்ந்தான் அகன், ராம்- அனிதாவின் முத்த மகன்.

"எனக்கும் சமோசா கொடு டி.."

"முடியாது போதா(டா).."

"நீ என்னை கொடுக்கறது.."எனக் கூறியது மட்டுமல்லாமல் அவள் வைத்திருந்த எச்சி சமோசவை பிடிங்கித் தின்ன வீறிட்டு அழுதாள் துகியின் மகள் யாழ்..

"டேய் பக்கத்துல இருக்கறத எடுக்க மாட்டயா.. எதுக்கு டா இப்படி பண்ற.." எனக் கேட்ட சரணிடம்

"நீ பெரிய பைய ம்ம்ச்சா..உனக்கு இதெல்லாம் புரியாது. நீ எதுக்கு இதெல்லாம் பாக்கற.. அவள் என்னோட பொண்தாடி" (பொண்டாட்டி) என மழலை மாறக் குரலில் கூற அவனை முறைத்தான் சரண்.

"உனக்கு வர வர.. வாயி அதிகமா போச்சு..." என சரண் கோபம் கொள்ளவும் யாதவின் முத்த மகன் தென்றலன் வரவும் சரியாக இருந்தது, வந்தவன் நேரகா யாழின் மற்றொரு புறம் அமர்ந்து யாழ் அழுவதை கண்டுகொள்ளாமல் மற்றோரு சமோசாவை எடுக்க மீண்டும் வீறிட்டு யாழ் அழ... இருவரையும் முறைத்த சரண் யாழைத் தூக்கிக் கொண்டு அவளை சமாதானம் செய்ய சிறிது நேரத்தில் தன் அழுகையை நிறுத்தினாள் அகயாழினி...

காலிங்பெல் சத்தம் கேட்டு யாழினியை இறக்கிவிட்ட சரண் வீட்டின் கதவை திறக்க போகவும் "நானு ஓப பண்ற..." என யாழ் கூற "உனக்கு எட்டாது டி நான் போறேன் அண்ணா..." என யாழிடம் ஆரம்பித்து சரணிடம் முடித்தான் அகன்.

"உங்க மூணு பேருக்கும் எட்டாது நான் போறேன்.." என தென்றலன் கூறிக்கொண்டே ஓட..

"டேய் நீங்க இருங்க டா நானே போறேன்..." என சரண்யா கூற "இல்லை நானு நானு.." என கத்திக் கொண்டே ஐவரும் ஓட ஆளுக்கொரு இடத்தில் கை வைத்தவர்கள் கதவை திறக்க.. கதவு திறந்த சந்தோஷத்தில் "ஏய்ய்.." என அனைவரும் கத்த சட்டென்று பயந்தான் மகேஷ்பூபதி.

"ஆடி ஆத்தி.. குட்டிப் பிசாசுங்க zoo மாதிரி இருக்கே.. வீடு, கீடு மாத்தி வந்துட்டோமா..." என அருகில் நின்ற இழையினியிடம் கிசுகிசுக்க

"கொஞ்சம் நேரம் வாயா மூடு.. பூதி எருமை.."என அவனை அடக்கியவள்

"ஹாய்ய் குட்டிஸ்.. இது யாதவ் சார் வீடு தானே..." என கேட்டவளையே பார்த்துக்கொண்டே நின்றனர் ஐவரும்..

"டேய் மாமா.. தெரியாம யார் வீட்டு கதவையோ தட்டிட்டோம் போல டா.. இதுங்களுக்கு தமிழ் தெரியாது போலயே.. அப்படியே போலாம் வா.." என இழை முனகிக் கொண்டே குழந்தைகளை பார்த்து சிரிக்க

"சரண்யா இழையின் அருகில் வந்து "ஹாய் அக்கா .. நீங்க டால் மாதிரி அழகா இருக்கீங்க..." என சரண்யா கூற அவளின் உயரத்திற்கு குனிந்த இழையினி சரண்யாவின் கன்னத்தில் இதழ் பதித்து "நீங்களும் அழகா இருக்கீங்க.." என இழைக் கூற  இழையினியின் அருகில் யாழ் வந்து "எனக்கு முத்தா.." என யாழ் சிரித்து கொண்டே கேட்க அவளின் இரு கன்னத்திலும் இதழ் பதிக்க அடுத்து இருந்த மூவரும் இழையின் அருகில் செல்ல "டேய் உங்களுக்கு எல்லா நான் தாறேன் டா..." எனக் கூறிக்கொண்டே மூவரையும் மகேஷ் தூக்கிக் கொள்ள

அவன் தூக்கியதில் பயந்த குழந்தைகள்  ஒரே நேரத்தில் "அப்பா..."என கத்த பட்டென்று அவர்களை விட்டவன் நெஞ்சை பிடித்துக் கொள்ள அவனைப் பார்த்து சிரித்தாள் அவனவள்.

இவர்களின் கத்தலில் தன்னவளை அணைத்து இருந்த யாதவ் சட்டென்று பிரிந்து நின்ற "நம்ம புள்ளைங்களுக்கு உன் கூட இருந்தா எப்படி தான் மூக்கு வேட்குமோ தெரில டி..." எனப் புலம்பியவனைப் பார்த்து சிரித்தாள் துகிரா..

"சிரி டி.. சிரி.. அப்பறம் இருக்கு உனக்கு.." என கூறியவன் தன் அறையைவிட்டு வெளிவர..

வாசலில் நின்றிருந்த இழையினி, மகேஸைப் பார்த்தவன் சிரிப்புடனே
"அடடே மகேஷ்.. இழை மா... வாங்க. வாங்க..." என அவர்களை வரவேற்றவன் துகியை அழைக்க

வெளிவந்தவள் இழையை அணைத்து நலம் விசாரித்துக் கொண்டே மகேஸிடம் திரும்பி "எப்படி இருக்க பூபதி. இழையினியை நல்லா பார்த்துக்கறயா..." என துகி கேட்க

"நான் நல்லா இருக்கேன் அண்ணி, அவளையும் நல்லா பாருங்க அண்ணி குண்டா ஆயிட்டா..." என கூறியவன் இழையினியை பார்த்து கண்ணடிக்க
அதை பார்த்த துகி சிரித்துக்கொண்டே

"சரி நீங்க பேசிட்டு இருங்க நான் போயி டீ எடுத்துட்டு வரேன்..." என கூறியவள் சமையலறைக்குள் நுழைய
சிறுவர்களிடம் திரும்பிய யாதவ் "

"என்ன டா இப்படி பார்த்துட்டு இருக்கீங்க.. இவரு பேரு மகேஷ்.. பெரிய போலீஸ் உங்களுக்கு சித்தப்பா முறை வேணும்... எனக் கூறியவன் அகனிடம் திரும்பி

"இவரும் உனக்கு மாமா டா..."எனக் கூற சரியென தலையை ஆட்டிவிட்டு யாழியிடம் அமர்ந்து கொண்டான்.

"சாரி.. சார்.. இத்தனை பேர் இருப்பாங்கன்னு நினைக்கவே இல்லை.. சரனுக்கும், சரண்யாக்கு மட்டும் இரண்டு சாக்குலேட் வாங்கிட்டு வந்தேன். ஆனா இப்போ ஐஞ்சு பேர் இருக்காங்க. நாலு வருஷத்துல இத்தனை டெலிவரி ஆயிருக்கும்னு நினைக்கல சார்..." எனக் மகேஸ் கூற

"உனக்கு ஓவர் குறும்பு டா மகேஷ்.. எனக் கூறியவன் "இவங்க சரண்யா, சரண். இளையவன் தென்றலன், இவ கடைக்குட்டி யாழ். இவன் என் மச்சா மகன் அகன்..." என அனைவரையும் அறிமுகம் செய்ய.. யாழை தவிர மற்ற நால்வரும் "ஹாய் அங்கிள்" என்க

"அதுக்குள்ள அங்கிளா.. டேய்.. மகேஷ்ன்னு பேர் சொல்லி கூப்பிடுங்க... டா..." என மகேஷ் கூற "ஹாய் மகேஷ் நா தென்றலன்..." என மழலை குரலில் தன் பிஞ்சு கையை நீட்டியவனைப் பிடித்து போனது மகேஸிற்கு...

"ஆமா சார்..நவி, ஜெய், அப்பா, அம்மா எல்லாம் காணோம்..." என கேட்க

"நவி ஹாஸ்பிடல் வரைக்கும் செக்கப்க்கு போயி இருக்கா... அம்மா துணைக்கு போயி இருக்காங்க. ஜெய் வெளிநாடு போயி இருக்கான்.. அப்பா ஆஃபீஸ்.." என யாதவ் விளக்கம் தர மெல்லியதாக சிரித்தான் மகேஷ்

சில பல நலன் விசாரிப்புகளுக்கு பிறகு தங்கள் வந்த காரணத்தை இருவரும் கூற சரியென ஒப்புக்கொண்ட யாதவ், சிறிது நேர யோசனைக்கு பின் "பவானியில ராம் ஒரு ஹாஸ்பிடல் கட்டி இருக்கான். அவன் சென்னையில இருந்துட்டு அங்க போக முடிலன்னு ஒரே புலம்பல் நீ வேணா அங்க போறயா இழை மா... நீ தனியா இருக்கணு பீல் பண்ண வேண்டாம் இழை மா. அங்க பாரதியும் இருக்காங்க..." என யாதவ் சொல்ல

மகேஸைப் பார்த்தாள் இழையினி அவனோ சிரித்துக்கொண்டே சரியென தலையை ஆடிட்ட முகம் முழுக்க புன்னகையுடன் ஒப்புக்கொண்டாள் இழையினி.

**********

மும்பையிலிருந்து கோயம்புத்தூர் வந்தவர்கள்  இழையின் பிடிவாதத்தில் பஸ்ஸில் ஏறிக் கொள்ள அவளின் அருகில் வந்த மகேஷ் கண்களில் சோக கீதம் வாசித்தவனை காணமல் வேடிக்கை பார்த்தவாறே வந்தவளை கண்களில் நிரப்பிக் கொண்டான் மாகேஸ்.  இருவரும் ப்லைட்டில் உறங்கியதால் இப்போது இருவரும் விழித்துக் கொண்டே வர வேடிக்கை பார்த்து சலித்தவள் அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டே கதை பேசிக்கொண்டே  உறங்கி போனாள். அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன் இருவரின் குடும்பத்திற்கும் தகவல் கூறி பஸ் சீட்டில் கண்மூடி சாய்ந்து கொண்டான்..

****

"வினி மா. எழு.. ஊர் வந்துருச்சு.." என மகேஸ் எழுப்ப அவனின் மேல் கால் போட்டவள் மேலும் கட்டியணைத்துக் கொள்ள

"அடியே குந்தாணி பெட் ரூம்ல படுத்துட்டு இருக்கற மாதிரியே பண்ணாத எழு டி.." என அவளின் காதில் சொல்ல விழுந்தடித்து எழுந்தவள். தன்னவனைக் காண அவனோ முறைத்தான். "சாரி டா... பூதி.. நல்லா தூங்கிட்டேன்..."எனக் கூற தலையில் அடித்துக்கொண்டவன்

"எல்லாரும் வந்துருப்பாங்க.. வா போலாம்..." என அழைத்தவன் லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு முன்னால் நிற்க இவளும் தன் துப்பட்டாவை சரிசெய்து தலை முடியை ஒதுக்கிவிட்டவள் தன் லக்கேஜ்ஜை கையில் எடுத்துக்கொண்டு நிற்கவும், பஸ் நிற்கவும் சரியாக இருந்தது.

தன் லக்கேஜ்ஜை தூக்க முடியாமல் தூக்கியவள் தன்னவனை பார்க்க அவனோ இறங்கி இருந்தான். அவனை மனதில் வருத்தவள் பஸ்லிருந்து கீழ் இறங்கும் முன்பே குரு வந்து லக்கேஜ்ஜை வாங்கிக் கொண்டார்.

"அப்பா.. எப்படி இருக்கீங்க.. அம்மா எங்க..." என அந்த தூக்கத்திலும் சிரிப்புடன் கேட்க

எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தார் குரு.. அவர்களிடம் வந்த
பழனி "என்ன டி இப்படி இழச்சு போயிட்ட.." என அவளை ஆராய்ந்தபடியேக் கேட்க

"அம்மா.. காமெடி பண்ணாத மா.. எனக்கு குட்டி தொப்பை வந்திருச்சு பாரு.."எனக் கூறியவள் தன் வயிற்றை தொட்டு காமிக்க..

"வத்தி போயிருக்க டி, சரி வா தூங்கனும்.. காலையில பஞ்சாயத்தில உங்க உறவைப் பிரிக்க போறாங்க. இப்ப தூங்கனா மட்டும் தான் நேரத்தில எழ முடியும்.." என பழனி கூற திடுக்கிட்டுப் போனாள் இழையினி.

'என்ன சொல்றாங்க இவங்க..'என நினைத்தவள் தன்னவனைப் பார்க்க அவனோ அவன் குடும்பத்துடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தான்.

"அங்க என்ன டி பாக்கற... நீயும் அவனும் ஒன்னா தான் வந்தீங்களாம். அவன் தான் கால் பண்ணி சொன்னா.. அவன் சொல்லலன்னா என்ன டி ஆகிறது. வயசு புள்ளை தனியா வந்து நின்னுட்டு எங்களுக்கு கூப்பிட்டு இருப்ப.. ஒரு வார்த்தை வரேன்னு சொல்ல மாட்டயா..." எனத் திட்டியவாறே இழையின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்ல தன்னவன் தன்னை பார்க்க மாட்டானா என்பதைப் போல் ஏக்கப் பார்வை பார்த்தாள் ஆனால் கடைசிவரை அவன் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது இவளின் மனதில் மெல்லிய பூகம்பத்தை உண்டாக்கியது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro