அவன் 30
"பொறுக்கி நாயேக் கூடயே இருந்துட்டு இப்படி ஒரு துரோகம் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை டா... ச்சே... ஏன் டா ஏன் இப்படி பண்ண. உன்னை ஒவ்வொரு நிமிஷமும் என் உயிர் தோழனா நினைச்சேனே பாவி. ஏன் டா இப்படி பண்ண சொல்லு டா...
வெள்ளை கோர்ட் போட்டுட்டு அதுக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கியே நீ நல்லா இருப்பியா டா.. நாயே.. உன்னை உள்ள தூக்கிப் போட்டு மொத்து மொத்துன்னு மொத்தானா கூட என் வெறி தீராது டா மித்தரா.. ச்சே நீ இப்படி இருப்பன்னு நினைக்கவே இல்லை டா.. எப்படி டா இப்படியெல்லா பண்ண தோணுது. அதுவும் என்னைவிட்டுட்டு எப்படி டா பிரியாணி சாப்பிட தோணுது. சொல்லு டா சொல்லு. டாக்டர் யாரும் சிக்கன் சிக்ஸ்டிப்பை எல்லா சாப்பிட மாட்டங்க. நீ ஏன் டா இப்படி டாக்டர் தொழிலுக்கே துரோகம் பண்ற. துரோகி..!! என்னை விட்டுட்டு எப்படி டா சாப்பிட முடிஞ்சது உன்னால சொல்லு டா சொல்லு.. ஏன் டா இப்படி பண்ண சொல்லு சொல்லு.." என சிக்கன் பிரியாணியை தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தான் மகேஷ்.
ஒருக் கையில் முட்டை, ஒருக் கையில் லெக்பீஸ் வைத்துக்கொண்டே மகேஸை முறைத்தவன்
லெக்பீஸை கடித்தவாறே "நீ பேசத டா பச்சை துரோகி.. என்னை வைச்சுட்டே இரண்டும் பேரும் லைவ் சோ காமிச்சுட்டு இருக்கீங்க. ஒரு வயசு பையன் கூடவே இருக்கானே, அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கட்டிக்கொடுக்கலாம், இல்லை லவ்காவது செட் பண்ணிவிடலாம்னு உனக்காவது தோணுதா. நீ பாட்டுக்கு உன் பொண்டாட்டிக் கூட ஜாலியா இருக்க.
அதான் நானும் பிரியாணி ஆர்டர் பண்ணி என்னோட தனிமையை போக்கிட்டு இருக்கேன். என்ன பண்றது சிங்களா சுத்தற எல்லாரும் இப்படி தின்னுத் தின்னு தான் கோபத்தைக் குறைச்சுக்கணும்..." என லெக்பீஸை கடித்துக் கொண்டேக் கூறியவனை முறைத்தவன்
"சமூகத்தைப் பாத்து லவ் பண்ணனும் நினைக்கற உனக்கு. இந்த ஜென்மத்தில பொண்ணு கிடைக்காது டா. அதே மாதிரி ஒரு பொண்ணை கரெட் பண்ண துப்பில்லாத நீ, இந்த பிரியாணியை சாப்பிடக் கூடாது. எங்கிட்ட கொடு.." என அவனிடமிருந்த பக்கெட்டைப் பிடிங்கியவன் சாப்பிடத் தொடங்கினான்" மகேஷ் கூறிய வார்த்தைக்களை கேட்டவனிற்கு பக்கென்றானது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
"என்ன பண்றது டா... என் அம்மா ஆசை பட்டுடாங்க.. சரி அதை விடு என் தங்கச்சி எங்க போயிட்டா..." எனப் பேச்சை மாற்றியவனின் முகத்தில் தீடீரென ஒரு சோகம் வந்து ஒட்டிக் கொண்டது.
'எத்தனை நாளைக்கு நீயும் நடந்த உண்மையை சொல்லாம இருப்பன்னு நானும் பாக்க தான் போறேன் மித்தரா...' என மனதில் நினைத்தவன்
"அதுவா டா ரொம்ப பேசிட்டே இருந்தா அதான் ஒரே ஒரு கிஸ் கொடுத்தேன். அப்படியே கொலு பொம்மை மாதிரி ஒரே இடத்தில நின்னுட்டு இருந்தா.. மறுபடியும் இன்னொரு கன்னத்தில கிஸ் பண்ணிட்டு அவ தெளியறதுக்கு முன்னாடியே ஓடி வந்துட்டேன்..." எனக் கூறியவனை மேலும் முறைத்தான் மித்தரன்.
"டேய் வேண்டாம்.. அழுதுடுவேன்.. ரொம்ப பண்றீங்க டா இரண்டு பேரும்.." என ஆவேசமாக கூறியவனைப் பார்த்து சிரித்த மகேஷ்
"அப்படி தான் டா பண்ணுவேன். மூணு வருஷம் ஆக போகுது.. இன்னும் சிங்களா சுத்துட்டு இருந்தா நல்லவா இருக்கும் சொல்லு. அதான் ஒரு முடிவு பண்ணிட்டேன் சீக்கிரமா உனக்கு மாமா போஸ்ட்டிங் தர வேணும்னு முடிவு பண்ணிட்டேன்..." என மகேஸ் சிரித்தவாறே கூற
"டேய் வேண்டாம் ரொம்ப வெறுப்பேத்தி விட்ட இரண்டு நாளைக்கு டேசன்ட்ரி ஆகற மாதிரி பண்ணி விட்ருவேன்..." என மித்திரன் மிரட்ட பொய்யாக பயந்தது போல் பாவனை செய்தவனை முறைத்தான் மித்தரன்.
முறைத்தவனைக் கண்டுக் கொள்ளாமல் "சரி சொல்லு நான் சொன்ன வேலை என்ன ஆச்சு..." என மகேஸ் முகத்தை தீவிரமாக வைத்துக் கேட்க
"நானும் முயற்சி பண்ணிட்டேன் மச்சா.. எனக்கு தெரிஞ்சு இது மாதிரி நிறையா சைட் இருக்கு டா.. ஒண்ணை கிலோஸ் பண்ணா... வேற ஒண்ணை ஈஸியா உருவாக்க முடியும்... ஒரு நம்பருக்கு ஒ,டி,பி போகாம கூட அந்த போனை ஹேக் பண்ண முடியும். இதை ஜஸ்ட் யூடூப்ல போட்டு பாரு மச்சி தெளிவா சொல்லுவான். ஆனா யூடுப்ல இது மாதிரி சொல்றவங்களுக்கு தெரில மச்சி நல்லது சொல்றமா, கேட்டதுக்கு சொல்றமான்னு தெரிய மாட்டீங்குது. பணத்துக்காக சொல்லிட்டு போறாங்க ஆனா அதுல எத்தனை பேர் பாதிக்கப்படறாங்கன்னு யாருக்கும் தெரிய மாட்டிங்குது மச்சி..." என மித்தரன் கூற
"ஆமாம் டா இது வேணா உண்மை தான் தெரியாதவன் கூட தெரிஞ்சுக்கற மாதிரி சொல்லி தாரங்க. சரி ஒன்னை உருவாக்க முடியும் அப்படினா.. அழிக்கவும் முடியும். அந்த இரண்டுக்கான வழி அதுலயே இருக்கும். பாக்கலாம் மச்சி..என்னை தான் நடக்குதுன்னு பாக்க தானே போறோம். எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கும். சரி மச்சி.. இந்த சைட் விஷயம் கொஞ்சம் அலசிப் பாரு உன்னால முடிஞ்ச எல்லா சைட்க்கும் மிரர் சைட் ஓபன் பண்ணு, அப்போ தான் அவனை கண்டுப் பிடிக்க முடியும்..." என மகேஷ் கூறவும்
"ஆமா டா... நானும் அதுக்கு முயற்சி பன்றேன். என்னால முடிஞ்சா எல்லா சைட்க்கும் மிரர் சைட் ரெடி பண்ற..." என மித்தரன் கூறவும் இழை உள்ளே வரவும் சரியாக இருந்தது.
"டேய் பச்சரிசி துரோகிங்களா. நல்லா இருப்பீங்களா நீங்க இரண்டு பேரும். அநியாயம் டா பாவிங்களா... கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத திண்ணி மூட்டைங்க.. என்ன தைரியம் இருந்த என்னைவிட்டுட்டு பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க..." என கூறியவள் நேரகா சென்று மகேஷின் கையிலிருந்த பக்கெட் பிரியாணியை பிடுங்கி கொண்டவள் அவனின் மடியில் அமர்ந்தவாறே உண்ண தொடங்க கடுப்பான மித்திரன்.
"ஏய் எருமை... அதெப்படி நான் இருக்கற இடத்தில வந்து ரொமான்ஸ் பண்ற கழுத..." எனக் மித்திரன் கத்த
"அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் அவன் கையிலிருந்த முட்டையை பிடிங்கி கொண்டே
"எருமை லெக்பீஸ் எங்க டா காணோம். இரண்டு பேருமே முக்கிடீங்களா. எருமைகளா..." என மித்திரனைத் திட்டியவாறே அவள் வாயில் பாதியை போட்டுவிட்டு மீதியை மகேஷின் வாயில் போட தனக்கும் தருவாள் என எதிர் பார்த்த மித்திரனிற்கு கோபம் வரை முகத்தை பாவமாக வைத்து கொள்ள சட்டென்று சிரித்துவிட்டான் மகேஷ்.
சிரித்தவனை முறைத்தவன் "எல்லாம் என் நேரம் டா நிம்மதியா ஒரு பிரியாணி சாப்பிட முடில இந்த வீட்டுல..." என புலம்பியபடியே எழுந்து சென்றவனை பார்த்த இருவரும் வாய்விட்டு சிரிக்க தன் தலையில் அடித்துக் கொண்டான் மித்தரன்.
"அடியே குந்தாணி. எழுந்து தொலை டி.. கால் வலிக்குது..." என மகேஸ் அவளை எழுப்பி விட முயற்சி செய்ய
அவனின் மடியில் நன்றாக அமர்ந்தவள் "ரொம்ப பண்ணாத டா.. நான் ஒன்னும் குண்டா இல்லை. க்யூட்டா இருக்கேன்..." என இழையினி கூற இம்முறை மகேஸ் தலையில் அடித்து கொண்டவன்
"அடியே குந்தாணி ஒன்னு விட்டனா பாரு . க்யூட்டா இருக்காலம் க்யூட்டா நாங்க சொல்லணும் டி அதை..." என மகேஷ் கூற கடுப்பான இழையினி எச்சில் கையில் அவனின் தலைமுடியை பிடித்து மாவு ஆட்டிட மகேஷ் வலியில் கத்த அதெல்லாம் கண்டுக்காமல் அரிசி மாவிலிருந்து கோதுமை மாவு வரைக்கும் அனைத்தும் அவன் தலையில் ஆட்டிய பின்னரே விட்டாள்.
"இனிமே இப்படி சொன்ன கொன்றுவேன் நாயே...' என கூறியவள் குளியலறையில் இருந்த மித்திரனிடம்
"டேய் அங்க என்ன டா படமா ஓடிட்டு இருக்கு. இவ்வளவு நேரம் அங்கையே இருக்க. வெளிய வந்து தொலை..." என இழை மித்திரனை அழைக்க எச்சில் கை என்றும் பாராமல் மீண்டும் தன் தலையில் அடித்து கொண்டான் மகேஷ்..
இழை போட்ட சத்தத்தில் வெளியில் வந்த மித்தரன் "என்னை அங்க கூட நிம்மதியா இருக்க வீட மாட்டயா நீ.." என முறைத்தவாறே கேட்க
"அது எப்படி இருக்க விடுவேன் சொல்லு. நீ எப்படி நிம்மதியா இருக்கலாம்..." என கூறியவாறே கைகளை கழுவியவள் மக்கில் தண்ணீரை பிடித்துக் கொண்டு தன்னவனிடம் சென்றவள் அவனின் முகத்தை துடைத்துவிட்டு, முடியில் இருந்த பருக்கியை எடுத்துவிட்டு அந்த மக்கிலயே அவனின் கைகளை கழுவி விட்டவள் அங்கிருந்து நகர
"கருமம் டா.. ஏன் டா இதெல்லாம் நீ எழுந்துப் போயி பண்ண மாட்டயா.. நீ என்ன பச்சை குழந்தையா டா.. டேய் ஓவரா பண்றீங்க டா. கொஞ்சமா பண்ணுங்க டா..." என மித்தரன் எரிச்சலுடன் கேட்க
"போ டா. வெட்கமா இருக்கு..." என கூறி தன் நகத்தை கடிக்க
"ஐயோ ஆண்டவா ஏன் இந்த கலிசடை பசங்களோட என்னை சேர விடற..." என கத்திக் கொண்டிருக்க
குளியலறையில் இருந்து வந்த இழையினி டேபிளில் இருந்த சீட்டை எடுத்து பார்த்து.. "என்ன டா பேர் எழுதி வைச்சு விளையாடிட்டு இருந்தியா.." எனக் கேட்க
"ஆமா எனக்கு வேற வேலை இல்லைப் பாரு... ஒழுங்கா ஓடி போ சனியனே.."
என மித்திரன் கூற
ஏதோ யோசித்துக் கொண்டிருந்த மகேஷ் சட்டென்று இழையிடம் திரும்பி
"ஆமா நீ எதை வைச்சு அப்படி கேட்ட.." என கேட்க
"புரில.." என கூறி விழித்தவளிடம்
"என்னமோ விளையாட்டுன்னு சொன்னல்ல அதை கேட்டேன் டி.. என்னன்னு சொல்லு..." எனக் மகேஸ் கேட்க
"இதோ இதை பார்த்து தான்.. உனக்கு மறந்து போச்சா.. நான், நீ, அத்தான் எல்லாரும் இது விளையாடி இருக்கோம்... ஏ, பி, சி, டி...யை ஒன், டு, த்ரி, போட்டு எழுதுவோம். அப்போ நம்ம பேர் எல்லாத்தையும் இப்படி தானே பண்ணுவோம். உனக்கு மறந்து போச்சா என்ன.. எத்தனைத் தடவை என் பேரையும், உன் பேரையும் மாத்தி தப்பு, தப்பா எழுதி இருக்கோம். ஒரு நம்பர் மாறி போனாலும் பேரு மாறி போயிடும். எனக்கு உன் பேரு, அத்தான் பேரு எல்லாம் மனப்பாடமா தெரியும். சரி சொல்லு பார்த்தி அத்தான் பேரு ஏன் எழுதி வைச்சு இருக்க. என் கோபி அண்ணனை ஏமாத்த பாத்து இருக்க..." என இழையினி விளையாட்டுப் போல் கேட்டுக்கொண்டிருக்க மகேஷின் மூளையோ "பார்த்தி அத்தான் பேரு.." என இழைக் கூறிய வார்த்தையில் நின்றது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro