அவன் 21
"ட்ரைனிங்ன்னு கூட்டிட்டு வந்துட்டு என்னை கொடுமை பண்றாங்க... நான் ஒருத்தியா இருந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்... ஆனா இந்த பிரியா பீடை அண்ணா கூட ஜாலியா இருக்கா. நான் மட்டும் தனியா சிங்கிளா இருக்கேன்.. இந்த எருமை (மகேஷ்) எப்ப போறான்.. எப்ப வரான்னு தெரியல.. அந்த எருமை(மித்திரன்) நைட் எல்லாம் வீட்டில இல்லாமல் காணாம போயிடுது.. காலையில கேட்டா ஹாஸ்பிடல இருக்கேன்னு சொல்லுது..!! இவ்வளவு பெரிய வீட்டில நான் மட்டும் தனியா இருக்கற மாதிரி இருக்கு.. எதாவது தோட்டம் மாதிரி இருந்தா கூட பரவாயில்ல இங்க எல்லாம் வெறும் கட்டிடமா இருக்கு... ஓ மை குப்புசாமி நீ தான் எனக்கு துணை' வாய்விட்டு வேண்டியவள் படுக்கையில் விழ..
"அடியேய் எங்க டி இருக்கவ.. ஏய்யய்ய..தலையினி..என்ன டி வீட்டுல இருக்கியா இல்லையா.." என தன்னவன் கத்தும் சத்தம் கேட்க எழுந்து செல்வதற்குள் பாடலை பாட விட்டான் மகேஷ்..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே...
"இல்லை இல்லை வடிவேலு சார்.. இவ என்னை அன்னைக்கு பக்கத்தில கூட விடலை.." என வடிவேலிற்கு பதில் சொன்ன விதமே கூறியது அவனும் வடிவேலுவை போல் தான் வந்திருக்கிறான் என ...!!
தன்னவன் கத்தலில் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் அறையிலிருந்தே "டேய் நாயே...எருமை...என்னைப் பிடிச்ச பீடை... உனக்கு குடிக்கிற பழக்கம் வேற இருக்கா.. இன்னும் எத்தனை கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கு சொல்லு.. உன்னை காதலிச்ச பாவத்துக்கு இதெல்லாம் சலிச்சுட்டு போவேன்னு மட்டும் நினைக்காத டா ரசத்தில வேஷம் வெச்சு கொடுத்துருவேன்.. என இழை கத்திக்கொண்டே வர
"ஏன் எது வேஷம்.. எது ரசம்னு கண்டு பிடிக்க முடியாதுன்னு ரசத்தில வேஷம் வைக்கறயா..!!! சும்மாவே தண்ணியை சூடு பண்ணி கொடு டி நீ வைச்சா அதுவே எனக்கு வேஷம் தான்" என கூறியவனை மூக்கு முட்ட முறைத்தாள் இழை...
"என்ன டி என்ன மொறப்பு.."
"எதுக்கு இப்போ குடிச்சுட்டு வந்து ஆட்டிட்டு இருக்க..."
"ஏய் நான் இன்னும் ஆடவே இல்ல டி... ஒரு... ஒ..ரு.. நிமிஷம் நில்லு.." என கூறியவன் அவளின் துப்பட்டாவை பிடிங்கி வடிவேல் போல் தலையில் கட்டிக்கொண்டவன்
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
என பாடியவன் அவளின் கையைப் பிடித்து அவன் பக்கம் இழுக்க.. அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் தன் மொபைலை சோபாவில் போட்டவாறே
"ஏன் டா உனக்கு அறிவே இல்லையா இப்படி தான் குடிச்சுட்டு வருவியா... போலீசா டா நீயெல்லாம்.." என இழைக் கேட்க..
"இது என்ன டா வம்பா போச்சு..
ஏன் டி போலீஸ்னா குடிக்க மாட்டாங்களா.. நான் குடிப்பேன் நீ எதுக்கு கேட்கற யார் டி நீ.." என மகேஷ் கூற
அவன் கூற்றில் கடுப்பானவள்
"உன் பொண்டாட்டி டா பொறுக்கி.." என கூறி முறைக்க
மூனு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி... என அதற்கு மேல் பாட வந்தவனின் வாயை அடைத்தவள்
"கிறுக்கா... என்ன டா... என்ன பாடறேன்னு புரிதா.. கழுத.."என இழையினி கத்த...
"அப்படி தான் டி பாடுவேன்... நீ என்னை என்ன சொன்ன..."
'என்ன டா சொன்னாங்க..'
"பொறுக்கி.. அதுவும் பொம்பளைப் பொறுக்கின்னு சொன்னல்ல..'
"எப்போ டா சொன்னேன்..."
"உன் கழுத்துல தாலி கட்டறதுக்கு முன்னாடி டி ஜப்பான் மூக்கி.."
"ஆமா..அதுக்கு என்ன இப்போ.. உண்மையை தானே சொன்னேன்..'
"ஏய்ய...யா...ரை .. யாரைப் பாத்து என்ன வார்த்தை சொல்ற நான் எல்லாம் இராமர் தம்பி டி... உண்மையா நேர்மையா இருப்பேன்.."
"ஆமா... ஆமா.. சொன்னாங்க..."
'அதை தான் நானும் சொல்றேன். எல்லாரும் சொல்லி இருப்பாங்க.. நீ யாரை வேணாலும் கேட்டுப் பாரு டி நான் உத்தமன்னு சொல்லுவாங்க' என மகேஷ் கூற.. தன் தலையில் அடித்துக்கொண்டவள்
"ஒழுங்கா போயி தூங்கு டா இல்லன்னா என் அண்ணனை கூப்பிடுவேன்" என கூற
"ஏய்... ஏய்ய... யாரை வேணா வர சொல்லு டி.. எனக்கு என்ன பயமா' சற்றே பின்னால் நகர்ந்தவாறே கூறவும்
"என்னை போலீஸ் வண்டி பின் வாங்குது.. என் அண்ணான்னா அந்தளவுக்கு பயமா..?? இது தெரியாம போச்சே... இரு டி அவனை கூப்பிடற" என கூறியவள்
'டேய் அண்ணா..னா...... கோபி.... நாயே...' என கத்திய கத்தில் பதட்டத்துடன் கையில் வைத்திருந்த மொபைலை தரையில் போட்டவன் அவசரம் அவசரமாக மாடியிலிருந்து கீழே வர கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்தவாறே நின்றிருந்த இழையை பார்க்க.. "நல்லா தானே இருக்கா.. மகி..மகேஷ்.. மகேஷ்கு ஏதாவது அடி பட்டிருக்குமோ..ச்சே அப்படி பட்டு இருந்தா இவ இந்தளவுக்கு ஜாலியா நிக்க மாட்டாளே.." என நினைத்தாலும் அவசரம் அவசரமாக தான் இறங்கி வந்தான்..
"என்ன பக்கி என்ன ஆச்சு... எதுக்கு இப்படி கத்தன..." என கேட்டவாறே அருகில் வர..
'எனக்குன்னு ஒன்னு வந்துருக்கே அது குடிச்சுட்டு வந்து ஆடிட்டு இருக்கு.. என்னன்னு கேட்க மாட்டயா.. இவ்வளவு சத்தத்தில மேல அப்படி என்ன பண்ணிட்டு இருந்த.. அவன் குடிச்சுட்டு வந்து என்னை அடிக்கிறா... நீ அதை கண்டுக்காம இருக்க. நீயெல்லாம் எதுக்கு டா அண்ணனா பொறந்த.. சனியனே.." என கத்த...
"என்ன மகேஷ் குடிச்சுட்டு வந்தானா
என்ன உளரீட்டு இருக்க..'என கேட்டவனை முறைத்தவள்
" நானா.. அவனா.. ?? அவன் தான் குடிச்சிட்டு வந்து கத்திட்டு இருக்கா..." என இழைக் கத்த
"கத்தாத எருமை .. காது வலிக்குது உன்னோட வாய்ஸ்கு கத்தவே கூடாது.. அமைதியா பேசணும் அப்படி பேசனா கூட காது கொஞ்சம் வலிக்கும்..." என கூறிக்கொண்டே ஏதோ தேட..
"அடேங்கப்பா சொட்டை.. வாயை தெச்சுடுவேன் தெச்சு... ஓவரா பண்ற நீ.. ஆமா நீ எதுக்கு இங்க மும்பை வந்த.. அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம வந்திருக்க...உண்மையை சொல்லு யாரை லவ் பண்ற" என கேட்டவளிடம்..
"என்ன ஒளரீட்டு இருக்க.. நா.. ன் யாரை..யும் எதுவும் பண்ணல.."
"ஏன் வாய் தந்தி அடிக்குது.."என இழை கேட்க
"அதெல்லாம் ஒன்னு இல்லை.. எங்க உன் புருஷனை காணோம்..." என பேச்சை திசை திருப்ப...
"ஆமால்ல எங்க அவன்" என கூற அவனை தேடினாலும் "இங்கிட்ட பேசிட்டு என் புருஷனை விட்டுட்டேன்.. எங்க போனா.. குடிச்சுட்டு வேற இருக்கானே" என நினைத்தவள் தன் அறைக்குள் தேடி போக...
வெளியிலிருந்து வந்தவன் கையில் வைத்திருந்த மொபைலை சோபாவில் வைக்கவும் இழையினி அறையிலிருந்து வரவும் சரியாக இருந்தது...
"போலீஸ் வண்டி எங்க போயிட்டு வருதுன்னு தெரிஞ்சுக்கலாமா..?? என கேட்டவளிடம் "எங்க வேணா போவேன் டி உனக்கு என்ன..."என கேட்டவனின் குரல் நார்மலாக தான் இருந்தது ..
"இப்போ தானே குடிச்சுட்டு வந்த மாதிரி பேசனா.. அதுக்குள்ள போதை இறங்கி போயிருச்சா..!! போதை இறங்க என்ன பண்ணி இருப்பான்" என முனங்கியவளை கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர போக.. " ஏய்ய்ய..ய்ய...டேய் இரு டா... என் போன் அங்க தான் இருக்கு... கண்ணு எங்க வெச்சுட்டு இருக்க எருமை... நீ மட்டும் அப்படியே உட்கார்ந்த என் போன் சில்லுசில்லா ஓடைஞ்சு போயிடும்." என கூறியவள் போனை எடுத்து கைக்குள் வைத்து கொண்டவள் அவனிடம் வம்பிழுக்க அவனும் பதிலுக்கு பேச அவர்களின் சண்டை தொடர அதை பார்த்தவன்
"போன் மேல உட்கார போனதுக்கா இந்த சண்டை போடறா... அப்ப அவன் போன் எடுத்துட்டு போனதை பார்த்து இருந்தா.. என்னவெல்லாம் ஆடி இருப்பாளோ.. எதுக்கு போன் எடுத்துட்டு போயி இருப்பான்.. மச்சா என்னமோ பிளான் பண்ணிட்டான்... இதுங்க இன்னுமா சண்டை போடுதுங்க நம்ம இடத்த காலி பண்ண வேண்டியது தான் " என மனதில் நினைத்த மித்திரன் தன் அறையை நோக்கி நடந்தான்...
"டேய் உண்மையை சொல்லு நீ குடிச்சுட்டு வந்த தானே..."
"என்ன மறுபடியும் மறுபடியும் அதையே சொல்ற. நான் ஏன் குடிக்க போறேன் நான் இப்போ தான் வந்தேன்.." என கூற.
"என்ன இப்போ தான் வரயா.. ஒஹ் அப்போ சார் இப்போ தான் வந்தீங்க.. இப்போ தான் என்னையை பாக்கிறீங்க அப்படி தானே..."
"ஆமா டி... இப்போ தான் வந்தேன் அதுக்கு என்ன" என மகேஷ் எகிற (ஓவரா நடிக்கிறான்)
"அவனின் அருகில் சென்றவள் சோபாவில் ஒரு காலை ஊன்றி அவனின் தலையில் இருந்த துப்பட்டாவை அவிழ்க்க "மண்டையில இருக்கற கொண்டையை மறந்துட்டயே டா மகேஷ்... அவ அடிக்கறதுக்குள்ள எழுந்து ஓடிடு..."என நினைத்தவன் சட்டென எழ..!! அவனின் தோள்பட்டையை பேலன்ஸிற்குகாக பிடித்து இருந்தவள் அவன் எழவும் தடுமாறி கீழே விழுந்தாள்...
கீச்... என்ற சத்தத்துடன் அவளின் அம்மா என்ற கத்தலும் கேட்க பின்னால் திரும்பி பார்த்தவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க.. அதில் கடுப்பானவள் அவனை துரத்த ஆரம்பித்தாள்..
"கீழ விழுந்து இருக்கேன்... கையைப் பிடிச்சு தூக்கி விடாம...வயிறை பிடிச்சுட்டு சிரிக்கற.. பொறுக்கி... போலீஸ் பக்கி .. நில்லு டா.." என துரத்திக்கொண்டே அவள் கத்தும் சத்தம் மித்திரன் அறை வரைக்கும் கேட்டது..
"ஆரம்பிச்சுட்டாங்க டா... இரண்டு நாள் வீடு எந்த சத்தமும் இல்லாம நிம்மதியா இருந்துச்சு. இப்போ பாரு. எலியும்,பூனையும் மாதிரி சண்டை போட்டுட்டு இருக்குங்க.!! இவங்கள மாதிரி நம்மளும் இருந்தா நல்லாத இருக்கும்..! யாருக்கு தெரியும்.. எல்லாம் விதி.."என புலம்பியப்படியே உடைந்தப் போனை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro