Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல் -49

ஆதன்யா தன் அறை கதவு தட்டப்படவும்... தான் இருந்த நிலை மறந்து... உள் வர அனுமதி கொடுக்க.... தயங்கியவாறே உள்ளே நுழைந்த விஷ்னு... அவளை கண்டு விக்கித்து போனான்.... கருங்கூந்தல் இடை வரை விரிந்திருக்க.... நெற்றி முன் சிறு முடிகள் நடனமாட... வெள்ளை உடையில்.... வெள்ளை ஒளி தன்னை சுற்றி ஒளிர..... இமை மூடி ஆழ்ந்த சிந்தையில் இருந்தாள் ஆதன்யா.... அவளை மெல்ல நெருகியவன்... அவள் நெற்றியில் நடனமாடிய முடியை காதின் பின் ஒதுக்கி விட... புது வித உணர்வை உணர்ந்த ஆதன்யா... பட்டென கண்களை திறக்க.... இருவரின் கண்களும் ஒருமித்த போது... அங்கு மௌனப்போரே ஒன்று நிகழ.... அவனையும் அறியாது தன் கரத்தை அவளின் மென் கண்ணத்தில் வைத்த விஷ்னு... அவள் விலகுவதை உணர்ந்து.... கரத்தை எடுத்து விட.... இருவரும் திரும்பி நின்றிட.... தான் உணர்வதை கூற நினைத்த இருவரும் ஒரே நேரத்தில் திரும்ப.... ஒருவரை ஒருவர் கண்டுக் கொண்ட இருவரும்.... ஏது பேசுவதெனவே தெரியாமல் இருக்க.... தன் தயக்கத்தை தள்ளி வைத்த விஷ்னு....

விஷ்னு : எங்கு வைத்திருக்கிறாய்....

ஆதன்யா : ங.... என முமிக்க....

விஷ்னு : திருடிய என் இதயத்தை எங்கு வைத்திருக்கிறாய்....

ஆதன்யா : நாம் கேக்க நினைத்ததை நம்மிடமே கேட்கிறானே... என மனதிலே கூறிக் கொள்ள....

விஷ்னு : சொல்....

சற்று குரும்பு தலை தூக்க.... வாயாடினாள் நம் ஆதன்யா....

ஆதன்யா : தங்கள் இதயத்தை காண வில்லையெனில்... உங்கள் தளபதியிம் புகார் கொடுத்து தேட கூறுங்கள்... என்னிடம் ஏன் கூறுகிறீர்கள்...

விஷ்னு : திருட்டுப்போன பொருளை... திருடியவரிடம் தான் கேட்க வேண்டுமென எமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றனர்....

ஆதன்யா : அப்படியா.... அப்படியெனில்... என் இதயத்தை நீ எங்கு வைத்திருக்கிறாய்.... உன் கண்களில் காந்தசக்தி உள்ளதா.... ஏன் என் இதயத்தை திருடினாய்... உன் பார்வையின் அர்த்தம் தான் என்ன.... எதை தான் உணர்த்த முயல்கிறாய்..... கோவன் தான் என்றாலும்.... நாகனியை மயக்கும் சக்தி உமக்குள்ளதா..... என்று வினாக்களை அடுக்கிக் கொண்டே நோக....

விஷ்னு : நானறிந்தவரை நாகனியை மயக்க கோவனிடம் சக்தியெல்லாம் இல்லை... ஆனால்.... காதலியை மயக்கும் சக்தி காதலனிடம் இருக்கும் என்பதை யான் அறிவேன்... என்றான் புன்னகையோடு...

ஆதன்யா : உண்மையை கூறு... நீ மாயக்காரன் தானே... என்னை மாயவசியம் செய்து விட்டய் தானே....

விஷ்னு : மாயக்காரன் தான்.... காதல் வசியம்... ஆனால் செய்தது நானல்ல.... மாயக்காரி உன் வேலை தான்...

ஆதன்யா : நானா....

விஷ்னு : பின்ன.... நேற்று வரை.... திருமணமே வேண்டாம் என்றிருந்தவனை.... ஒரு நொடி நேர் பார்வையில் என்ன செய்தாயடி.... காலை அம்மேடையில் உம்மை கண்டபோதிலிருந்து... என் இதயத்தில் உன் வதனம் சிற்பமாய் செதுக்கியுள்ளது.... எத்துனை பெரிய பேரழகியையும் பார்த்திடாத நான்... எப்படி இமைக்காது உன்னை இரசிக்கிறேன்... உன்னை தவிர்த்து கண்கள் வேறெங்கும் செல்ல மறுக்கிறது.... உறக்கத்தை தொலைத்துவிட்டேன்.... பசியை மறந்துவிட்டேன்.... ஒரே நாளில்... வெரும் ஒரே நாளில்... மனிதனுக்குள் எப்படி இத்துனை மாற்றம் ஏற்படும்.... இதற்கெல்லாம் பதில் காதல் என மனம் சிந்திக்க கூட இல்லை.... நிச்சயம் காதல் என அடித்து கூறுகிறது... பூர்வ ஜென்ம பந்தத்தை போல் தோன்றுகிறது... என்று தன் உணர்வெல்லாம் கூறிட... தன் கண்களை அகல விரித்து அவன் கைவளைவில் நின்றிருந்தாள் ஆதன்யா....

ஆதன்யா : என்னிடமே இக்குழப்பங்களுக்கு விடை இல்லை என்ற போது... எப்படி பதில் கூறுவேன்... என தனக்கும் உனக்கும் உள்ளது ஒரே குழப்பம் என உணர்த்த....

விஷ்னு : புது காதல் தானென தோன்றுகிறதா....

ஆதன்யா : மீண்டும் தொடரும் காதலென தோன்றுகிறது.... என சிந்திக்காமல் அவனை அணைத்துக் கொண்டாள்.....

தன் புன்னகையில் சம்மதத்தை உணர்த்தியவன்.... அவளை அங்கேயே விட்டுவிட்டு... தனியாக சிரித்தவாறே அவன் அறைக்கு சென்றான்....

தனதறையில் வீற்றிருந்த இந்து.... இடி போன்ற ஏதோ ஒன்று மாபெரும் சத்தத்துடன் விழுந்த ஓசையை கேட்டு.... உறக்கத்திலிருந்து பதறி எழுந்தாள்.... அவளருகிலே நின்ற மாரனோ பேந்த பேந்த முளித்தவாறிருந்தான்....

இந்து : தாங்கள் இங்கென்ன செய்கிறீர்காள் அத்தான்.... என்று அதிர்ச்சியாய் வினவியவளை....

மாரன் : ஏன டி உமக்கே என்னை கண்டால் பாவமாக இல்லையா.... நேற்றிலிருந்து உன் பின்னே அலைந்துக் கொண்டிருக்கிறேன்.... ஆம்பலையை மதித்து ஓர் வார்த்தையேனும் பேசுகிறாயா....

இந்து : அத்தான்... நாம் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து உறையாடாதீர்கள்.... நம் காதலை சரியான நேரத்தில் தான் பெரியோர்களுக்கு தெரியவைக்க வேண்டும்... என தமையன்கள் கூறியுள்ளனர் அல்லவா.... நான் தங்களிடம் உறையாடுவதை கண்டு முன்பே சந்தேகித்துவிட்டாள்... உண்மை கூறும் பொழுது.... மறைத்து வைத்ததாய் தானே தோன்றும்....

மாரன் : அனைத்தும் சரி தான்... அதற்கென ஒருவனை இப்படி அலையவிடுவது சீரியா....

இந்து : அ... அஅது... நானா தங்களை என் பின் அலைய கூறினேன்....

மாரன் : கூறுவாயடி கூறுவாய்... உன்னை கண்டதற்கு முன்பிலிருந்தே... ஏதோ ஒரு சூனியக்காரி (யோகனா) என் கனவில் வந்து வந்து காதலை கூறினாள்.... உன்னை நினைத்து அவளை நிராகரித்தேன் அல்லவா... உன் பின்இப்படி அலைவதற்கு... நான் அவள் பின்னே அலைந்திருப்பேன்.....

இந்து : எருமை மாடே... என் முன்னே... இன்னொரு ஒருவளை காதலித்திருப்பேன் என கூறுகிறாயா.. எத்துனை தைரியம் இருக்க வேண்டும் உமக்கு... உன்னை.... என அருகிலிருந்து பழங்களை வெட்ட வைத்திருந்த கத்தியுடன் அவன் மீது பாய்ந்தாள்.... இவளின் புது அவதாரத்தில் சிரிப்பதா அதிர்ச்சியாவதா என்று தெரியாமல் முளித்துக் கொண்டிருந்த மாரன்.... அவள் பாயும் போதே... சரியாய் அவளை வளைத்து பிடித்து கத்தியை வளிடமிருந்து பிடிங்கினான்.....

மாரன் : அடி கிராதகி.... உன்னுள் இப்படி ஒரு சண்டைக்காரி இருப்பதை இதுவரை கூறியதே இல்லையே டி.... அத்துனை பொறாமையா....

இந்து : கொன்றுவிடுவேன்.... என் பொருள் எமக்கு கட்டும் தான்.... எமக்கு மட்டும் தான்.... இதற்கு பொறாமை என்பது நாமமல்ல.... உரிமை..... அதை மற்றவர் உரிமை கொண்டாட நினைத்தால் கூட.... அமைதியாய் இருக்க மாட்டேன்.... பொங்கி எழுந்திடுவேன்.... நீ நினைத்தாலும் சரியே... என அவன் முன்னே எச்சரித்தாள்....

மாரன் : சரி தாயே... சற்று கீழறங்கி வா.... உன்னை கடுப்பேற்றவே கூறினேன் என அறிவாய் தானே... பின்பு ஏன் இத்துனை கோவம்....

இந்து : அறியவில்லை மதி.... எதிலும் சினம் இல்லையெனினும்.... உம்மை வேறொருவளுடனோ... அல்லது உம்மை என்னிடமிருந்து பிரிப்பதை போலே எவரேனும் கூறினால்.... சினம் தலைக்கேறுகிறது... என அவன் மேல் சாய்ந்தவாறே கூறினாள்...

மாரன் : சரி சரி.... அதை விடு...

இந்து : நான் எழும் போதே ஏதோ மாபெரும் ஓசை கேட்டதே... அது என்ன.....

மாரன் : உன்னிடம் உறையாடியதில் அதை மறந்துவிட்டேன்... என கதவின் புறம் ஓட.... தன் உடை வாளை எடுத்துக் கொண்டே அவன் பின்னே ஓடினாள் இந்து.... சற்று முன் நடந்ததை காணலாம்....

கோட்டையின் பின் புறம்... கலிங்கதேச சிப்பாய்கள்.... கோட்டையின் சுவரை துளைத்தெடுத்து.... உள்ளே நுழைந்தனர்.... இரவு நேரம் காவல் காத்து நின்ற வீரர்களில்.... கண் முன் வரும் வீரர்களை வெட்டி வீழ்த்தி முன்னேறினர்.... ஆதன்யா அறையிலிருந்து சிரித்துக் கொண்டே அவன் அறையுள் நுழைந்த விஷ்னு... மீண்டும் வந்து கோட்டையை சுற்றி நோக்கினான்.... அடுத்த நொடி....
மாபெரும் சத்தத்தில் இவன் காதுகளை மூடியவாறே நோக்க......

கோட்டையின் மேல்.... தன் சிறகுகளை விரித்தவாறு பறந்துக் கொண்டிருந்தான் யுவன்..... கீழோ.... எரிந்து போன சடலம் ஒன்று கிடந்தது.... அது அவன் வேலை என புரிந்துக் கொண்ட விஷ்னு... தன் வாளுடன் அவனை நோக்கி சென்றான்... அதே நேரம் சத்தத்தில் அனைவரும் அங்கு கூட... விஷ்னுவின் வேலையால்..... கோட்டையின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட.... வேந்தன்யபுரத்து முக்கோக்களும்... தளபதிகளும் கூடிவிட.... திக்கு முக்காடி போன கலிங்க தேசத்து வீரர்கள்... இருளில் மறைந்து நிற்க..... அதே நேரம் மாரன் மற்றும் இந்துவும் அவ்விடத்தை அடைந்தனர்....

விஷ்னு : என்னவானது யுவி....

யுவன் : ஏதோ ஒரு எதிரி நாட்டின் சிப்பாய்கள் நம் கோட்டையுள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.... அவர்களில் ஒருவனே சிக்கினான்.... சற்று சினத்தில்... எறித்துவிட்டேன்.... என்றான்...

வேல் : உள் நுழைந்த எவரும் வெளி செல்ல கூடாது....

விஷ்னு : செல்ல இயலாது... அனைத்து வாயில்களும் என் உத்தரவின் பெயரில் அடைத்தாகிவிட்டது...

யாழ் : பின் என்ன.... கலத்தில் இறங்குவோமா....

குரு : கேட்க வேண்டுமா என்ன.... செல்லலாம்....

சக்தி : முக்கியமான ஒன்று... எத்துனை சிப்பாய்கள் இறந்தாலும்... ஒரு சிப்பாய் நிச்சயம் உயிருடன் வேண்டும்...

அனைவரும் : சரி.... என ஓர் அடி எடுத்து வைக்க.... அவர்களையே அதிசயக்கவைக்கும் நோக்கத்துடன்.... ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலிங்க தேசத்து சிப்பாய்கள் பாய்ந்து உள் வர.. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட... நாயகன்கள்.... ஒரே நேரத்தில்.... கோட்டையின் முதல் தளத்திலிருந்து கீழ் குதிக்க.... பாதி சிப்பாய்கள் அங்கு ஓடினர்....

நாயகிகள் தங்கள் வாளின் உதவியுடன் முன் வந்த சிப்பாய்களை வெட்டி வீழ்த்தினர்.... ஒருவரை ஒருவர் யாசித்துக்கொள்ளமல்.... ஒரு முன்னேர்பாடும் இல்லாமல் யுத்தம் மிக தீவிரமாய் சென்று கொண்டிருந்தது..... திடீரென கோட்டையின் உள் இருந்த மரங்களில் தீ பற்றி எறிந்தது... அதை ஒரு பொருட்டாய் மதிக்காத சிப்பாய்கள்.... முக்கோக்களின் அதிவேகமான வாள் வீச்சில் கழுத்தறுப்பட்டு மரணமடைந்துக் கொண்டிருந்தனர்....

தன்னை நோக்கி வந்த இருவது சிப்பாய்களை தன் வாளால் தள்ளி சதக் சதக் என குத்தி கிளித்த பத்ரன்..... தன் முதுகில் இருந்த கூடையிலிருந்த அம்புகளில்.... இரண்டை எடுத்து அம்பில் வைத்து ஒரே நேரத்தில் இருவரை குறிவைத்து எய்தி... மடிய வைத்தான்... அதே போலே குருவும் அவனின்
அம்பை நாழ்வரின் கழுத்தில் குறிவைத்து எய்து ஒரே நேரத்தில் மடிய வைத்தான்....

நாயகிகள் யுத்தத்தில் இருந்த மொத்த இடமும் தீயில் சூழ்ந்து விட.... அதன் வெளி இருந்த சில சிப்பாய்கள்... தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தனர்.... அந்த தீயுள் இருந்த சிப்பாய்களை வீழ்த்தியதுமே தீயை கவனித்தனர் நாயகிககள்....

செய்வதறியாத அனைவரும் முளிக்க.... அத்தீயை தாண்டி குதித்து உள்ளே வந்த சக்தி...... அவர்கள் மேல் தீபடாத வாறு.... நீரை அதி வேகத்தில் செழுத்தி கொலுந்து விட்டு எரிந்த தீயை அனையவைத்தான்.....

சூர்யாவும் மித்ரனும் ஒரே நேரத்தில் நாழ்வர் சுற்றி வளைத்ததில்..... தங்கள் இரு கரங்களை ஒன்றிணைத்து.... ஒரே சமமம்.... பல்டி அடித்து... அவர்களை தள்ளிவிட்டு... எழுந்தனர்.... அங்கு பல சிப்பாய்களின் சடலங்கள் குமிய தொடங்க.... மெல்ல மெல்ல வாள் வீச்சின் ஓசைகளும் குறைந்து... அங்கு இரு சிப்பாய்களை தவிர்த்து.... பெரும்பாலும் பலர் இறந்திருக்க.... சிலர் உயிரை கையில் பிடித்து ஊசலாடிக் கொண்டிருந்தனர்....

அவ்விருவரை அனைவரும் நெருங்க.... அச்சத்தில் மெல்லமெல்ல பின் வாங்கிய அவ்வீரர்களில் ஒருவன்... இவர்களின் கையில் மாட்டி இறப்பதற்கு... தற்கொலை மேல் என நினைத்து.... தன் கழுத்தை தானே அறுத்துதத் கொண்டான்.... அருகிலிருந்தவன்.... அச்சத்தில் வேர்த்து கொட்ட... அவர்களையே பரிதவிக்க பார்த்தான்....

ஆருத்ரா : உண்மையை கூறு.... யார் நீ....

அச்சிப்பாய் : நான்... நான்...

வெற்றி : தினராதே.... உம்மை ஒன்றும் செய்ய மாட்டோம்...நீ உண்மையை கூறிவிட்டால்.. சிறை தண்டனையுடன் விட்டுவிடுவோம்....

நந்தவேணி : அல்லவே..... எங்கள் கரங்களாலே... சித்ரவதை அனுபவித்து மரணிப்பாய்....

சத்யவேணி : கூறு.... யார் தங்கள் அனைவரையும் அனுப்பியது...

அச்சிப்பாய் : கூறுகிறேன்... கூறுகிறேன்... கலிங்கதேசத்து முப்பெரும் அரசர்கள்.... உக்ரதேவன் கிரகதேவன் ரனதேவன் தான் வேந்தன்யபுரத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்த கூறினர்.... அதை தான் செய்தோம்....

ஸ்ரீ :அவர்களா....

அச்சிப்பாய் : ஆம்.....

யாமினி : வெறென்ன திட்டம் தீட்டியுள்ளனர்....

அச்சிப்பாய் : அது... அ..து...

ஆதன்யா : கூறு... என வாளை அவனை நோக்கி காட்ட....

அச்சிப்பாய் : இன்னும் இரு தினங்களிளே.... வேந்தன்யபுரத்தின் மீது போர் தொடுப்பதாய் கூறியுள்ளனர்... திடீர் தாக்குதலில் தாங்கள் தள்ளாடுவீர்காள் என்றும்... அதில் உங்களை வீழ்த்தபோவதாகவும் கூறியுள்ளனர்....

யாழ் : இவனை சிறையில் அடையுங்கள்... என வேந்தன்யபுர வீரர்களிடம் கூறினான்... அவனையும் அவர்கள் இழுத்துச் சென்றனர்....

தாரிணி : அப்படியெனில்.... அவர்களும் நம் எதிரிகளா....

இதுவரை சிந்தையில் உளன்ற மூவரும் ஒரே நேரத்தில்...

முக்கோக்கள் : இல்லை.... அவர்கள் தான் நம் எதிரிகள்... என்றனர் அடக்கப்பட்ட கோவத்தை குரலில் காட்டி...

யாழினி : என்ன கூறுகிறீர்கள் மூவரும்...

விஷ்னு : ஆம்.... நம் எதிரிகள் இவர்களே.... நாம் காத்திருந்தது இவர்களுக்கே.... இவர்களை தான் அழிக்க பிறந்திருக்கிறோம்...

ஆருத்ரா : எப்படி கூறுகிறீர்கள்....

யுவன் : நிச்சயம் அவர்கள் தான்... ஆதன்யாவின் கனாவின் படி... இன்னும் சில தினங்களிலே நம்மை நோக்கி ஆபத்து வரும்... இப்போது நம்மை நெருங்குவது கலிங்கதேசம்... முப்பெரும் அரசர்களை பற்றி சிலதை அறிவோம்... ஆனால் இதுநாள் வரை அவை உண்மையென அறியவில்லை... இப்போது இச்சிப்பாய் கூறியதிலே விளங்குகிறது... அதிலும் இன்று எருதுகட்டின் போது அவர்கள் செய்தவை தான் இன்னும் உறுதியளிக்கிறது....

ஸ்ரீ : எவை அறிவீர்கள்...

சக்தி : அவர்களின் வாழ்க்கைக்காய் இன்று வரை பல பலிகளை தந்துள்ளனராம்... பலர் கலிங்கதேசத்தில் ஆக்கிரமங்களின் நடுவில் சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.... இன்னும் பல.... அது மட்டுமில்லாமல் நம்மிடம் வளவன் கூறியது வேறல்லவா இருக்கிறது.... அவன் தான் இவர்களின் அட்டூழியங்கள் பற்றி அனைத்தையும் கூறி இருக்கிறானே...

மித்ரன் : அப்படியெனில் நாம் என்ன செய்யலாம்...

தாரிணி : நிச்சயம் விதி படி.... இவர்கள் தான் நம் எதிரிகளாய் இருப்பின்... வெடிக்கப்போகும் போர் மிக கொடூரமாய் தான் முடியும்.... நிச்சயம் அனைவருக்குமே ஆபத்து நேரிடும்....

யுவன் : இப்போரில் உயிரே பிரிந்தாலும்... புவியை தீயசக்தியின் கட்டுப்பாட்டில் செல்ல விடக்கூடாது... என கரத்தை முன் நீட்ட.... அனைவரும் அவன் கரம் மேல் அவர்களின் கரத்தை வைத்து " விட மாட்டோம் " என்றனர்....

விஷ்னு : நாளை அன்னையிடம் தெரிவித்துவிட்டு.... அவர்கள் போரை என்று தொடங்குகின்றனரோ... அன்றே நாமும் தொடங்குவோம்... நாம் யாரென காட்டிவிடலாம்.. என்றான் அர்த்தமான பார்வையுடன்.... அங்கிருந்து அவரவர் அறைக்கு அனைவரும் கலைந்தனர்....

மறுநாள் காலை பரபரப்பாய் விடிய.... அரசவையில் படபடப்பு கூடிக் கொண்டே இருந்தது.... அனைவரும் நடந்து வரும் சில சத்தம் கேக்கு அமைதி காக்க.... நிமிர்ந்த நடையுடன் முக்கோக்கள் நடந்து வர அவர்கள் பின் தளபதிகளும்... இளவரசிகளும் துணைதேவிகளும் நடந்து வர... அனைவரும் மரியாதைக்காய் எழுந்து நிற்க..... அனைவரையும் அமரக்கூறிவிட்டு மூவரும் அவர்களுக்கு எப்பொழுதுமே இருக்கும் இளவரசர்களின் சிம்மாசனத்தில் அமர.... உள்ளே நுழைந்த ராஜமாத்தா தேவசேனை... மூவரையும் கண்டு முறைத்துவிட்டு... மூவரையும் அரசனின் சிம்மாசனத்தில் அமரவைத்தார்... தளபதிகள் அவரவர் சிம்மாசனத்தில் அமர்ந்து விட.... துணைதேவிகளும் இளவரசிகளும் தனி இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்....

தேவசேனை : இரவு என்ன நிகழ்ந்தது... தெளிவாய் விவரியுங்கள்....

அனைத்தும் தளபதிகளே விகவரிக்க.... அதை பற்றிய விவாதம் நடக்க.... மந்திரிகளும் அமைச்சர்களும்.... கலிங்கதேசத்தை எதிர்த்து போரிட அச்சமடைந்தனர்...

அமைச்சர் : ராஜமாத்தா அவர்களே.... அம்முப்பெரும் அரசர்களுடன் மோதுவது சரியல்ல..

மந்திரி: நமக்கு தான் ஆபத்து...

குரு : என்ன கூறுகிறீர்கள்.... மக்களை காக்க வேண்டுமென கூறுகிறோம்... தாங்கள் தங்களை பற்றி கவலை கொள்கிறீர்கள்....

மைச்சர் : எத்துனை பெரிய ஆபத்தாயினும்... முதலில் நம்மை பற்றி தானே சிந்திக்க இயலும்... இப்போரிற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம்...

மாரன் : இது சரியில்லை அமைச்சரே.... நாம் நம் மக்களை பற்றி தான் சிந்திக்க வேண்டும்....

மந்திரி : அப்படியெனில் எங்கள் உயிரை பற்றி யார் சிந்திப்பது.... என அங்கு மாற்றி மாறி கத்திக் கொண்டே இருக்க....

ஆத்திரமடைந்த யுவன்.... அவன் சிம்மாசனத்தின் கை பிடியில்.... அமைதி.... என ஓங்கி அடிக்க.... அடுத்த நொடி அங்கு முழுதும் மௌனம் பறவியது.... கண்களில் கோவம் கொப்பளிக்க அமர்ந்திருந்தவனை அனைவரும் எச்சில் விழுங்க பார்த்துவிட்டு.... அமைதி காக்க.... தன் சினத்தை தன்னுள்ளே அடக்கியவன்....

யுவன் : வேந்தன்யபுரத்தை காக்க வேண்டியது எங்கள் பொருப்பு.... எங்கள் உயிரே மடியினும்.... வேந்தன்யபுரத்திற்கு எந்த சேதமும் வர விட மாட்டோம்... உலகமக்கள் அனைவரின் உயிரை காக்க இப்போர் நிகழ்ந்தே ஆக வேண்டும்... புரிந்ததா... என கர்ஜிக்க.... அனைவரின் தலையும் தானாய் ஆடியது.....

தேவசேனையும் மற்ற நாயகர்களும் விவாதம் செய்த அமைச்சர்களையும் மந்திரிகளையும்...." இப்பொழுது வாயை திறந்திடுங்கள் பார்க்கலாம் " என பாக்க.... அவர்களோ.... எதுக்கு என்பதை போல் குனிந்துக் கொண்டனர்....

அங்கிருந்து அரசவை கலைந்திட... முக்கோக்களின் முதல் நாளிலே.... வரி கட்டணம்.... மிகவும் குறைந்தது... இதை கண்டு மக்கள் ஆனந்த அதிர்ச்சியடைய.... சில மந்திரிகள் பேரதிர்ச்சியடைந்தனர்.... அதற்காகவே மீண்டும் அரசவை கூட்டப்பட....

சக்தி : கூறுங்கள் மந்திரியாரே... என்ன பிரச்சனை....

மந்திரி : கோ அவர்களே.... நேற்று வரை இருந்த வரி கட்டணம் இன்று கண் காணாத குறைவிற்கு சென்றுவிட்டது.... இது எப்படி சாத்தியமாகலாம்... கூறுங்கள்.... அது தவறில்லையா....

விஷ்னு : அப்படியா... இல்லையே... யான் அறிந்து... இன்று தான் வரி சரியாய் மாறியிருக்கிறது....

யுவன் : இதுதாள் வரை கட்டணம் எவ்வளவு இருந்தது... என நேரடியாய் கேட்டிட..... பேந்த பேந்த முளித்த அம்மந்திரி.... நன்கு சிந்தித்துவிட்டு.....

மந்திரி : 90 பொற்காசுகள்.... கோ அவர்களே....

யுவன் : 90 ஆ????

மந்திரி : ஆம்....

சற்று சிந்தித்த மூவரும்.... சிப்பாயை அழைத்து...

சக்தி : பஞ்சலோக வம்சத்தில்.... சேவனை அழைத்ததாய் கூறி அழைத்து வாருங்கள் என கட்டளைளிட....

மந்திரி : கோ அவர்களே... எம்மேல் நம்பிக்கை இல்லையா.... மக்களில் ஒருவனை அழைக்கிறீர்களே....

சக்தி : அப்படியெல்லாம் இல்லை மந்திரி அவர்களே.... மக்களின் எண்ணமும் தெரிய வேண்டுமல்லவா... ஆதலாலே அவனை அழைத்தேன்.... வரட்டும் பேசுவோம்.....

சில மந்திரிகள் திக் திக் என துடித்த இதயத்தை கட்டுப்படுத்தியவாறே இருந்தனர்.... சில நிமிடங்களின் பின்... அங்கு சேவன் காட்சி அளித்தான்....

சேவன் : காலை வணக்கம் கோவன்களே....

யுவன் : வணக்கம் சேவா....

விஷ்னு : சேவல்... உன்னிடம் சில வினாக்கள் வினவவே அழைத்தோம்....

தீரா : அப்பக்கூட அவன இப்டி தான் கூப்டுவியா....

சேன் : வினாவிற்காய் காத்துக் கொண்டிருக்கிறேன் கோவனே....

சக்தி : தளபதி யாழ் அவர்களே.... சற்று வாயிற்கதவுகளை அடைக்க கூறுங்கள்... என

யாழ் : அப்படியே ஆகட்டும் கோ அவர்களே....

சேவன் : நான் எங்கும் ஓடிவிட மாட்டேன் கோவனே... தாங்கள் அய்யப்பட தேவையில்லை....

சக்தி : நீர் எங்கும் ஓடிவிட மாட்டாய் என நாங்கள் அறிவோம் கேவா.... சரி.... வினாவை கேள்...

விஷ்னு : வரி கட்டணம் எப்படி இருக்கிறது....

சேவன் : மிக விமர்சையாய் இருக்கிறது கோவனே... ஒவ்வொரு குடும்பத்திற்கும்.... தலா 190 பொற்காசுகள் வாங்கப் படுகிறது.... உணவு பொருட்கள் மிக மலிவாக கிடைக்கிறது.... நீர் பஞ்சமே வந்தது... இவ்வகையான சரியான வரி கட்டணத்தை அளித்த மந்திரியார்களுக்கும் அமைச்சர்களுக்கும்... தாங்கள் தங்கத்திலே.... காப்பு செய்து போடலாம்.... என பாராட்டுவதை போலவே சரியாய் மாட்டிவிட்டான்....

யுவன் : மந்திரி அவர்களே... என வாளை சரி செய்தவாறே அழைக்க.....

அவரும் எச்சிலை விழுங்கிவாறே எழுந்து நிற்க...

யுவன் : நம் சேவன்... கணக்கில் எலி தான்... ஆதலால் தான்... 90ற்க்கு 190 என கூறுகிறான்.. 100 பொற்காசுகள் அதிகமாக....

மந்திரி : ஆமாம் கோ அவர்களே... சேவனை மீண்டும் குருகுலத்தில் சேர்த்திடவேண்டும் என கூற.... பட்டென அவரை திரும்பி பார்த்தான் சேவன்...

விஷ்னு : ஆமாம் ஆமாம்.... வேந்தன்யபுரத்தின் கட்டண அலுவலர் சேவனையே மீண்டும் கல்வி பயிழ அனுப்பிவைத்துவிட்டு.... மந்திராயாரான தங்களை அப்பதவியில் அமர வைத்துவிடலாமா... என சிரித்துக் கொண்டே கேட்டான்....

முளி பிதுங்கி வெளியே வந்துவிடும் போல அந்த மந்திரிக்கு....

மித்ரன் : என்ன மந்திராயாரே அதிர்ச்சியாக உள்ளதோ....

வேல் : எங்களை நோக்குவது போதும்.... சற்று முக்கோக்களை நோக்குங்கள்.... அங்கோ முக்கோக்கள் ருத்ரமூர்த்திகளாய் அமர்ந்திருக்க.....

சக்தி : தளபதிகளே.... எது எதற்காய் கட்டணம் வாங்கப்பட்டுள்ளது......

குரு : அரசவைக்கு தெரியாமல்.... மக்களிடமிருந்து அநியாயமாய் அதிக வரி வாங்கப்பட்டுள்ளது.....

சூர்யா : இளவசமாய் வழங்க வேண்டிய ஆயுர்வேத மூலிகைகளை கட்டணம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.....

மாரன் : உண்ணும் உணவுக்கு.... பயிறிடவும்... விழைச்சலிடவும்.... தேவையான பொருட்களை அதிகபட்ச கட்டணம் செழுத்தாதலால்.... வழங்க மருத்துள்ளார்கள்....

வெற்றி : வருமையில் வாடும் குடும்பமென்றாலும்... தலா 190 பொற்காசுகள் கட்டணமாய் செழுத்த வற்புருத்தியுள்ளனர்....

யுவன் : இதற்குமேலும் நம்பிக்கையை நம்ப வேண்டுமா மந்திரியாரே.... என அமைதியாய் கேட்க.... அவரோ என்ன செய்வதென்றே தெரியாமல் முளிக்க... ஆத்திரமடைந்த மூவரும் வீரர்களே.... என அழைக்க.... அரசவையின் வாயிலிலே இருவதிற்கும் மேற்பட்ட வீர்கள் அடுத்த நொடியே கூடி விட....

விஷ்னு : இம்மந்திரிகளையும்... அமைச்சர்களையும்.... அரசுக்கு தெரியாமல் தவறு செய்ததற்காகவும்.... மக்களின் வரியை ராஜமாத்தா தேவசேனைக்கு அறிவிக்காமலே அதிகரித்ததற்கும்.... உண்மை அறியும் போதும்.... அதை மறைக்க நினைத்த குற்றங்களுக்காக சிறையில் அடையுங்கள்... என கர்ஜிக்க.... அம்மந்திரிகளும் அமைச்சர்களும் வீரர்களால் இழுத்து செல்ல பட்டனர்....

சக்தி : தளபதிகளே.... வேந்தன்யயுரத்தில் முரசு கொட்டி நிகழப்போகும் போரை பற்றி அறிவித்து.... ஜாக்கிரதையாய் இருக்க கோரி அறிவியுங்கள்... அதனுடனே.... இனி..... வரி கட்டணம் எந்த காரணித்திற்காகவும் செழுத்த வேண்டாம் என்றும் அறிவித்திடுங்கள்..... வரி கட்டணம் செழுத்தக்கூடாது இது இம்முக்கோக்களின் கட்டளை....

தளபதிகள் : அப்டியே ஆகட்டும் கோ அவர்களே....

தேவசேனை : சபாஷ்... சபாஷ்... பாராட்டுகிறேன் முக்கோக்களே.... பதவியேற்ற முதல் நாளிலே... என் முதுகிற்கு பின் நிகழ்ந்திருந்த குற்றத்தை கண்டறிந்துள்ளீர்கள்....

முக்கோக்கள் : நன்றி அன்னையே....

யுவன் : அன்னையே.... நாளை.... நாங்கள் போர்முணைக்கு செல்கின்றோம்.... நாங்கள் வரும் வரை.... ராஜமாத்தாவாக இந்நாட்டை ஆள்வது தங்கள் பொருப்பு....

தேவசேனை : சரி மகனே....

யுவன் : தளபதிகளே... துணைதேவிகளே... யதுகுளத்து இளவரசிகளே.... தயாராகுங்கள்....

அனைவரும் : உத்தரவு.....

காதல் தொடரும்....

போரில் வேந்தன்யபுரம் வெற்றியடையுமா....??

கதையின் போகும் தளம் பிடித்துள்ளதா....???

ஒரு அத்யாயத்திற்கு உள்ள வார்த்தைகளை குறைக்கவா... அல்ல இப்படியே தொடரவா????

தங்களின் கருத்துக்காய் காத்திருக்கிறேன்...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் இதயங்களே....

சுற்றம் சூழ அன்புடன் பானையில் பொங்கல் பொங்கிட... குழந்தைகளின் ஓலத்துடன்... கரும்பின் தித்திப்புடன்.... குடும்பத்தின் அருகாமையுடன் என்றென்றும் மகிழ்ச்சி பெருக வாழ்த்துவோம்....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro