Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-34

ஷேஷ்வமலையின் அடிவாரத்தில்... தான் தேடி வந்த ஓர் மூலிகையுடன் தன் குடிலுக்கு திரும்பினார் தர்மன் ஐயா... இரவு வெகு நேரம் கடந்து... நிலா உச்சத்தில் இருந்தது... தன் மெல்ல எட்டுக்களுடன் குடிலை அடைந்தார்... குடிலின் வாயிலில்... தன் முட்டை கண்கள் உறக்கத்தில் சொருக.... ஜொய்ன் ஜொய்ன்... என முன்னும் பின்னும் வந்துக் கொண்டே கட்டை ஒன்றில் அமர்ந்திருந்தாள் பரிசி.... அவளை கண்டு புன்னகையுடன் நெருங்கிய ஐயா.... பரிசி என அழைக்க.... உடனே உறக்கம் தெளிந்து எழுந்தவள்... அவரை இழுத்துக் கொண்டு குடிலுக்குள் சென்று அமரவைத்தாள்...

பரிசி : ஐயா ஐயா....

தர்மன்ஐயா : கூறு பரிசி... ஏன் இந்த அவசரம்??

பரிசி : அவசரமெல்லாம் இல்லை ஐயா... தங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்........

தர்மன்ஐயா : என்னிடமா... அப்படி என்ன கேட்கப்போகிறாய்......

பரிசி : நீங்கள் கூறுங்கள்... யாரிந்த கோவன்கள்....

தர்மன்ஐயா : ஏன் இந்த திடீர் சந்தேகம் என் பெயர்த்திக்கு???

பரிசி : வெகுகாலமாய் இருக்கிறது ஐயா.... என் நான்கு வயதிலிருந்தே நானும் காண்கிறேன்... நம் மக்கள் அனைவரும்... கோவன்கள் என்றவர்களுக்கு... மரியாதை செழுத்துகின்றனர்... ஆனால் யாருமே அவர்களை பற்றி அறியவுமில்லை... கண்டதுமில்லையாம்.... அப்படியிருக்க... தாங்கள் அறிய வாய்ப்புள்ளதல்லவா...

தர்மன்ஐயா : ம்ம்ம் அறிவேன்.... சரி கேள்... கோவன்கள் என்பதற்கு... தலைசிறந்த தலைவன்கள் என்பதே அர்த்தம்.... யான் அன்று கூறியதைப் போலவே... இறைவன்... மூன்று ஆடவன்களை எட்டறிவுடன் படைத்தார்... அவர்களே கோவன்கள் என அழைக்கப்பகின்றனர்... உமக்கு இன்னும் எளிதாக கூற வேண்டுமானால்... நம் புவியின் மற்ற இறைவன்கள் என கூறலாம்....

பரிசி : அவர்களுக்கு ஏன் நாம் மரியாதை செழுத்துகிறோம்??? மற்ற மனிதர்கள் அவர்களை நினைவுகூர்ந்ததாய் தெரியவில்லையே....

தர்மன்ஐயா : அதுவா... கோவன்கள் பிறப்பெடுத்தது நம் ஷேஷ்வமலையில் தான்.... நம் மக்கள் இங்கு பலாயிரம் வருடங்களாய் வாழ்ந்து வருகிறோம்... நாம் அதே முறையை தான் பின்பற்றி வருகிறோம்... ஆனால் வெளியில் வாழும் மனிதர்கள் நம்மை போன்றவர்கள் இல்லையம்மா... அவர்களின் அறிவு என்றோ கடந்து... உலகை காத்தவர்களை மறந்து... மாயை மேல் உள்ள நம்பிக்கை விளையாட்டாய் போய் விட்டது...

பரிசி : ம்ம்ம்ம் ஐயா ஐயா... அவர்களின் படமேதேனும் இருக்கிறதா...

தர்மன்ஐயா : படம் எதற்கு மா.... அவர்களே இங்கு தான் இருக்கிறார்கள்...

பரிசி : என்ன கூறுகிறீர்கள் உண்மையாகவா??? என கண்ணத்தில் கை வைத்து அதிர்ச்சியாய் கேட்க...

தர்மன்ஐயா : ஆம் பரிசி.. உண்மையாகத்தான்....

பரிசி : அவர்கள் ஏன் இங்கு வரவில்லை....

தர்மன்ஐயா : வருவார்கள் பரிசி... வருவார்கள்...என வாணத்தை பார்த்துக் கொண்டு கூறினார்....

பரிசி : வந்ததும் என்னை அழையுங்கள்... சரியா...

தர்மன்ஐயா : சரி பரிசி... நீ உறங்க செல்... வெகு நேரமாகிவிட்டது....

பரிசி : சரி ஐயா... என அங்கிருந்து சென்றாள்...

...............................................

மண்டபத்தில் நுழைந்த நாயகன்கள்... நாயகிகளை அழைத்து.. மீண்டும் ஃப்லஷ்பக்கினுள் நுழைந்தனர்....

குழப்பத்தில் இருந்த அர்ஜுன்.. மெல்ல அதை ஒதுக்கி வைத்துவிட்டு... நிரு மற்றும் மதுவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.... வர்ஷியை அழைப்பதற்காக அவளிடம் கூறாமலே அவள் வீட்டிற்கு சென்றனர்... பங்கலாவை போல் இருந்த அவ்வீட்டினுள் நுழைந்த மூவரும்... பணத்தின் ஆளுமையெல்லாம் கவனிக்காமல் உள்ளே சென்றவர்கள்... கார்டனில்... புக் படித்தவாறு அமர்ந்திருந்த வர்ஷியை கண்டு.... அவளை நெருங்கினர்... புக்கில் மூழ்கியிருந்த வர்ஷி... " வர்ஷி " என்ற நிருவின் அலரலை கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர..... ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள் நிரு....

வர்ஷி : அடியேய்... சனா... இங்க என்ன டி பன்ற???

நிரு : உன்ன பீச்க்கு அழச்சிட்டு போகத்தான் வந்தேன் பேபிமா...

வர்ஷி : தனியா வா டி வந்த???

அர்ஜுன் : அவ அப்டியே எங்கள விட்டுட்டு வந்துடுவாளா டி...

மது : அதான....

வர்ஷி : நீங்களுமா டா வந்துர்க்கீங்க... என்றாள் பயத்துடனே....

நிரு : அதுக்கெதுக்கு டி இப்டி பயப்புடுர...

வர்ஷி : உனக்கு தெரியாதா டி... இன்னும் அப்பாம்மா வீட்ல இருந்து போகல டி..

மது : நாங்க என்ன உன் லவ்வரா டி... உன் அப்பாம்மாக்கு தெரியாம வீட்டுக்கு வர்ரதுக்கு???

வர்ஷி : அவன் வந்தாலும் இதே நிலம தான் டி

அர்ஜுன் : அடிப்பாவி... அப்போ உண்மையாவே ஒருத்தன் இருக்கானா.... சொல்லவே இல்ல...

வர்ஷி : அடேய் அடேய்... வாய கழுவு டா.... நான் சிங்கிள் பறவை டா...

நிரு : ஓய்.. அப்ரம் நா எதுக்கு டி இருக்கேன்... வீ ஆர் கமிட்டெட் வித் ஈச் அதர் டி...

வர்ஷி : வெளிய எவனாவது கேட்டா காரி துப்புவான்... அய்யோ நா இத மறந்துட்டேன் பாரு... நீங்க மூணு பேரும் பத்ரமா கெளம்புங்க... நா நாளக்கு வரேன்...

மது : அதல்லா முடியாது இப்பவே வா....

வர்ஷி : மை செல்ல அக்கா ல... ப்லீஸ் டி அக்கா.... நாளைக்கு வரேன் டி...

அர்ஜுன் : முடியாது... இப்போவேவா....

வர்ஷி : அப்பாம்மா க்கு ப்ரெண்ட்ஸ் னாலே புடிக்காது டா... என்ன இப்டிலாம் விட மாட்டாங்க.. உனக்கு தான் தெரியும் ல... ப்லீஸ் அஜ்ஜு...

நிரு : நாங்க பேசுறோம் உன் அப்பாம்மாட்ட வா... அவள் பேசுவதை காதிலே வாங்காமல் அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் நிரு... அவர்களை மது மற்றும் அர்ஜுன் பின் தொடர்ந்தனர்...

உள்ளே நுழைந்ததும் நடு ஹாலில் நாழ்வரும் நிற்க... வர்ஷி பயத்தில் நகத்தை வெடுக்கு வெடுக்கென கடிக்க.... மாடியிலிருந்து ஏதோ பேசிக் கொண்டே இறங்கினர் பரமேஷ்வரன் மற்றும் லலித்தா... அனைவரும் அவர்களையே நோக்க... அவர்களோ இவர்களை கவனிக்காமல் வந்து கொண்டிருக்க..... திடீரென ஏதோ போன் வர... அதை கண்டு தலையிலே அடித்துக் கொண்ட நிரு... மதுவை இழுத்துக் கொண்டு... அர்ஜுன் மற்றும் வர்ஷிக்கு கண்ணை காட்டிவிட்டு வெளியே ஓடினாள்....

வர்ஷி M.v : அச்சோ எங்க ஓடுரா இவ???😲

அர்ஜுன் M.v: ஆஹா... பிசாசு என்ன மட்டும் தனியா விட்டுட்டு ஓடிட்டாளே.... வர்ஷி எப்டியும் வாய தொறக்க மாட்டா... நாம தான் ஆரம்பிக்கனுமா... சரி... ஆரம்பிப்போம்...

இருவரும் இறங்கி வந்ததுமே ஹாலில் நின்ற புதியவனையும்... வர்ஷியையும் கவனித்தனர்... இருவரும் ஒரே நேரத்தில் வர்ஷியை பார்க்க... அவளோ ப ப என முளிக்க தொடங்கினாள்....

லலித்தா : தேவர்ஷினி.... யாரு இது???

வர்ஷி : அது அம்மா... ஹி ஈஸ் மை பெஸ்ட் ஃப்ரெண் அர்ஜுன்.... ( he is my best friend)

லலித்தா : தேவர்ஷினி... உனக்கு எத்தன தடவ அம்மான்னு கூப்டாதன்னு சொல்றது... கால் மி அஸ் மாம்... ஓக்கே.... என்றார் சிரித்துக் கொண்டே.. குரலில் கடுமை ஏற்றி...

வர்ஷி : சாரி... மாம்... இனிமே மாத்திக்கிறேன்... என்றாள் தலை குனிந்தவாறு.... இதை கண்டு கோபம் வந்தாலும்... அதை அடக்கிக் கொண்டு....

அர்ஜுன் : ஹாய் அன்ட்டி... ஹாய் அன்கில்... நைஸ் டு மீட் யு போத்...

பரமேஷ்வரன் : ம்ம் குட்... அப்ரம் என்ன விஷயமாப்பா வீட்டுக்கு வந்துருக்கீங்க.... தனியாவா வந்தீங்க...

வர்ஷி : அது இல்ல டட்.. கூடவே என் ரெண்டு பெஸ்ட்டீஸ் சனாவும் மதுவும் வந்துர்க்காங்க.... பட் தெ ஆர் இன் அ கால்... புக் குடுக்க வந்துர்க்காங்க... என்றாள் அர்ஜுனை முந்திக் கொண்டு....

லலித்தா : ஓஹ் தட்ஸ் குட்... எல்லாரையும் சாப்ட வச்சிட்டு அனுப்பு... சரியா....

வர்ஷி : அன்... ஷ்யுர் மாம்...

அர்ஜுன் : இட்ஸ் ஓக்கே அன்ட்டி.... நாங்க வர்ஷிய அழச்சிட்டு போகத்தான் வந்தோம்....

அடப்பாவி சொல்லிட்டியே டா... என புலம்பியவாறே பாதி முறைத்துக் கொண்டு நின்றாள் வர்ஷி... அர்ஜுன் அவளை பார்த்து இளித்தான்...

பரமேஷ்வரன் : எங்க அழச்சிட்டு போக???

அர்ஜுன் : அது ... என ஆரம்பிக்கும் முன்னே...

வர்ஷி : அது ஒன்னும் இல்ல டட்... நா போகல...

அர்ஜுன் : இட்ஸ் அ ப்ராஜெக்ட் ஒர்க் அன்கில்... இதுக்கு வர்ஷி வரலன்னா.... ஷி வில் ஃபெயில் இன் ஹெர் இன்டெர்னல்ஸ்...

லலித்தா : ஓஹ்.... ப்ரெஜெக்ட் தான... போய்ட்டு வா... நாங்க கெளம்புரோம்.. என அங்கிருந்து இருவரும் கிளம்பினர்....

பெருமூச்சை இழுத்துவிட்ட வர்ஷி... அடுத்த நொடி சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனின் முதுகிலே அடிக்கத் தொடங்கினாள்.....

வர்ஷி : எரும எரும... இப்டி பன்னீட்டியே டா... மூச்சே நின்னு போச்சு...

அர்ஜுன் : அதான் இப்போ வந்துடுச்சே.... போடி போய் கெளம்பு... என அனுப்பி வைத்தான்... சில நிமிடங்கள் களித்து அங்கு நிரு மது வந்தனர்....

அர்ஜுன் : எங்க டி போனீங்க..

மது : அப்பா காள் டா... காலைல போன் பன்னப்ப... இவ எடுக்கல... அவள மட்டும் திட்டாம என்னையும் சேத்து திட்டு வாங்க வைக்கனும் னு... இழுத்துட்டு போய்ட்டா...

நிரு : சரி... வர்ஷி எங்க... அவ பரென்ட்ஸ் எங்க...

அர்ஜுன் : அவ கெளம்ப போய்ர்க்கா... அவங்க கெளம்பீட்டாங்க ....

மது : ம்ம்ம் சரி சரி....

வர்ஷியும் கிளம்பி வர... நாழ்வரும் ஒன்றாக பீச்சிர்க்கு சென்றனர்.... கலைப்பாகும் வரை அலைகளிள் நல்ல ஆட்டம் போட்டுவிட்டு... மணலில் வந்தமர்ந்தனர்....

வர்ஷி : இப்டிலாம் எங்க வீட்ல பொய் சொல்லீட்டு நா வந்ததே இல்ல...

அர்ஜுன் : பொய்ய விடு... இப்டிலாம் நீ வந்ததே இல்லன்னு சொல்லு டி...

வர்ஷி :ம்ம் ஆமா உண்மை தான்...

நிரு : உனக்கு எப்டி அஜ்ஜு தெரியும்...

அர்ஜுன் : இன்னைக்கு தான் அவ வீட்டுக்கு போனோமே... அத வச்சி தாசொல்றேன்...

வர்ஷி : என் அப்பாம்மா என்ன இப்டிலாம் வெளிய அனுப்ச்சதே இல்ல டா... ரொம்ப செக்யுவர் பமிலி... அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள தா வளத்துர்க்காங்க...

அர்ஜுன் : கட்டுபாடுகளுக்கும் ஒரு அளவு இருக்கனும் டி... பசங்க கிட்ட பேச வேணாம் னு சொல்லலாம்... அது ஓக்கே... பொண்ணுங்க கூட கூடவா பேசக்கூடாது... வெளிய போக வேணாம் னு சொல்லலாம்... படிக்க போக வேணாம் னு எப்டி சொல்லலாமா???

உனக்கு எப்டி தெரியும் என்பதை போல் ஆச்சர்யமாய் நோக்க.....

மது : படிக்க வேணாம் னு சொன்னாங்களா... எப்போ டி...

வர்ஷி : அது... ஒரு மாசம் முன்னாடி ல இருந்து சொல்றாங்க டி... என்றாள் தலை குனிந்தவாறு....
அவள் தலையை நிமிரவைத்த அர்ஜுன்...

அர்ஜுன் : பொண்ணுங்க தலை குனியக்கூடாது டி... இதுவே இது ராஜா காலம் தலைவர் காலம் னு இருந்தா... பொண்ணா தலை குனியலாம்... ஆனா இப்போ அப்டி இல்ல... பொண்ணுங்களும் சரிசமமான உரிமைகள உடையவங்க.... பொண்ணு தான் தலை குனியனும் னா... அவங்கள கீழ்த்தரமா வே நெனக்கிற ஆண் இணத்த சேந்த நாங்க தான் தலை குனியனும்.... அப்டி தலைகுனியிரவள இந்த காலத்துல உள்ள பெற்றோர்கள் ல இருந்து எல்லாருமே ஆட்டி தா வச்சிர்க்காங்க... எல்லா பரென்ட்ஸும் அப்டி இல்ல... ஏன் சில பரென்ட்ஸ் " என் பொண்ண நாங்க ப்ரீடமா தா வளக்குறோம் " னு சொல்லுவாங்க... ஆனா அவங்களே தான்... அங்க பாக்காத.. இங்க பாக்காத... அங்க போகாத ... அத படிக்காத... இத எழுதாத... தலைய நிமிந்து ரோட்ல போகாத... ன்னு ஒரு ஒரு விஷத்துலையும் அவங்க பொண்ண கட்டுக்குள்ளையே வச்சிர்ப்பாங்க... இந்த சேப்டி தேவ தான் டி... இந்த காலத்துல யாரையும் நம்ப முடியல தான்... பட்... அவங்க பொண்ண கூடவா நம்ப மாட்டாங்க... எல்லா பொண்ணுங்களும் இப்டி தலை குனிஞ்சே இருந்துட்டா... ஒன்னும் மாறாது... அதே பொண்ணு தலை நிமிந்து நடந்தா... எவனா இருந்தாளும்... அவ பக்கத்துல போக நடுங்குவான்.... அவள அதுக்கேத்த மாரி தான் வளக்கனும்....

வர்ஷி : கரெக்ட் தான் டா... ஆனா எங்களாள அவங்கள மீறி ஒன்னும் செய்ய முடியாதே...

அர்ஜுன் : நா அவங்கள எதிர்த்து பேசுங்க ன்னு சொல்ல வரல... புரியவைங்க ன்னு சொல்ல வரேன்...

மது : அடப்போடா.... நாங்க எதாவது எங்க பக்க நியாயமோ.. இல்ல... எங்கள பத்தியோ சொல்ல வந்தா... அவங்க சொல்ற மொத கேள்வியே இதான்.... " எங்களையே எதிர்த்து பேசுறியா??? " இல்லயா.... " ரொம்ப திமிரு " அப்டின்னு சொல்ல வேண்டியது... இதுல நாங்க எங்க போய் அவங்களுக்கு புரியவைக்கிறது....

அர்ஜுன் : அவங்க நல்லது தான் டி பன்றாங்க... இல்லன்னு நா சொல்லவே மாட்டேன்... பட் அதே நேரம் தப்பு பன்றாங்க... அவங்க பையன சுதந்தரமா சுத்த விட்ர அவங்களே.. அவங்க பொண்ண... கூண்டுல தான் அடச்சு வக்கிறாங்க.... அவன் இப்டி பன்னீட்டான்.. இவன் இப்டி பன்னீட்டான்னு யார் யாரையோ பத்தி பேசுறவங்க... அவங்க பொண்ணுங்களுக்கு தான் அதுக்கு பாதுகாப்புங்குர பெயருல தண்டனை குடுக்குறாங்க... அவளுக்கு தேவையான பாதுகாப்ப அவளாளயே குடுக்க முடியும்... அத முதல்ல இவங்கல்லாம் நம்பனும்.... அவள பத்தி யோசிக்காமயே... " எனக்கு எல்லாம் தெரியும் நீ சும்மா இருன்னு "அடக்கி வச்சிர்ராங்க.... இப்டிலாம் அவள அடக்கி வைக்கிறதுக்கு... எதுக்கு அவள பெத்துக்குறாங்க....

நிரு : என்ன சொன்னாலும்... யாருக்கும் புரியாது... யாரு தப்பு பன்னாலும்... அத பன்னது பொண்ணுங்க தான்.... எங்க விதி அப்டி... ஜெயிக்க பொறந்தவங்களா இருந்தாலும்... வெற்றிக்கு முன்ன நாங்க சந்திக்கிற சில தடங்களோட வகை தான் டா இதல்லாம் Free ஆ விடு....

சூர்ய அஸ்தனமத்தை கண்ட பின்பே வெகு நேரமானத உணர்ந்து... சிறிது நேரம் உறையாடிய மகிழ்ச்சியுடன் அவரவர் வீட்டிற்கு திரும்பினர்...

அடுத்தடுத்து.... தேர்வுகள்... கண்காட்சிகள்... நிகழ்ச்சிகள்... என வந்துக் கொண்டே தான் இருந்தது... ஆதித்தனின் சொல் படி அக்கல்லூரியில் ரகிங் ஒழிந்தது... நட்புடன் பழகும் சீனிரஸ்... விளையாட்டிற்காய் ஏதேனும் செய்து மகிழ்விப்பர்.... அர்ஜுன் விரைவிலே அவன் சேகரித்த சில விஷயங்களை அவன் பயிற்சிக்காய் சேர்ந்திருந்த கம்பெனியில் தந்தான்.. ஆனால் அவர்ளோ அதை பொட்படுத்தாது தூக்கி வீசினர்....

இதற்கிடையில்.... மானிக்கம் ஜகன்நாதனின் செல்வாக்கு ஏற தொடங்கியது.... பரமேஷ்வரன் லலித்தா தொழிலும் இடையூரில்லாமல் தொடர... அன்று வந்தது.... நிரு மதுவின் சித்தி மகள் சஞ்சனா இறந்த துர்செய்தி..... அதை அறிந்த நிரு மது அவர்களின் பாட்டி அம்புஜத்துடன் உடனடியே அங்கு கிளம்பினர்... அந்த இடைவேளையிலே அர்ஜுனிற்கு பெரும் சாட்சி ஒன்று கிடைத்தது.... வேதபுரத்தில் அவன் பயிலும் போது கண்ட ஒரு பெண்ணை... ஊட்டியின் நெடுஞ்சாலையில்... பிணமாய் மீண்டும் கண்டான் செய்தித்தாளிள்.... அதை கண்டு அதிர்ச்சியுற்றவன்... அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு இருந்தான்.... காவல் துறையினரும்.... விரல்தடம் நிபுணர்களும் அவர்களின் பணியை சிறப்பாய் முடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து கிளம்பியிருந்தனர்.... அதே இடத்தை அலச தொடங்கியவனுக்கு.... வெகு நேரத்தின் பின் ஒரு டையர் மார்க் கிடைத்தது.... அதை அவன் அறிந்த முறையில் சேகரித்தவன்.... இதை மட்டும் வைத்து கண்டுபுடிக்க முடியாதென மீண்டும் தேடலில் தீவிரமாய் இறங்கினான்.... இறுதியாக ஒரு செயினை கண்டுபிடித்தான்.... அது இறந்த அப்பெண்ணுடையதாக தான் இருக்கும் என்ற அவனின் நினைப்பை தடுத்தது அதில் பதிக்கப்பட்டிருந்த வைரங்கள்.... அவன் அறிந்த வரை அப்பெண் இவ்வளவு மதிப்புள்ள வைர நகை வாங்கும் அளவு செல்வாக்கு உள்ள குடும்பத்தை சார்ந்தவர் அல்ல... இதுவே பெரிய ஆதாரம் என அதை தனியாய் சேமித்து அவன் வீட்டை நோக்கி புறப்பட்டான்....

அறையில் தனியாய் அமர்ந்திருந்த வர்ஷி... 12 மணி நேரமாய் நிரு மது அர்ஜுன் என எவரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்தாள்.... சோர்ந்திருந்த அவளின் முகம்... திடீரென மலர்ந்தது.. அவளின் போன் திரையில் தெரிந்த சனா என்ற பெயரை கண்டு.... போனை எடுத்தவள்... அழுத கதறிய மது நிரு இருவரக்கும் அறுதல் கூறி.... நிதர்சனத்தை புரிய வைத்தாள்... சற்று அழுது ஓய்ந்திருந்த இருவரில்.. மது... சித்தியை சமாதானம் செய்ய செல்ல... நிருவிடம் உறையாட தொடங்கினாள்.... வர்ஷிக்குமே இந்நிலையை விட்டு வெளிவர மிக கடினமாய் இருந்தது... சஞ்சனாவை வர்ஷிக்கு மிகவும் பிடிக்கும்... வீடியோ காலில் பேசி இருக்கின்றனர்....

வர்ஷி : பாப்பா எப்டி எறந்தான்னு தெரிஞ்சிதா டி...

நிரு : ம்ம்ம் சொன்னாங்க டி... சில பொருக்கி நாய்ங்க... அவள சித்ரவத பன்னி... ரோட்ல தூக்கி வீசீட்டு போய்ட்டாங்களா....

வர்ஷி : இறைவா.. ஏன் டி நம்ம பாப்பாக்கு இப்டிலாம்.. என கூற முடியாமல் தவித்தாள்.....

நிரு : இல்ல வர்ஷி... நடந்தது அது இல்ல....

வர்ஷி :என்ன சனா சொல்ற??? என அதிர்ச்சியில் எழுந்தே விட... அவள் அதிர்ந்து எழுந்ததில் அருகில் இருந்த கன்னாடி ஜாரை கீழே தள்ளிவிட்டிருந்தாள்... அதுவோ கீழே விழுந்நு சுக்கு நூராகி இருந்தது.... அச்சோ.. என புலம்பியவாறு... போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு அதை சுத்தம் செய்ய தொடங்கினாள்.... பெரிய ஜார் என்பதால்... ஒரு ஒரு கன்னாடியும் எங்கெங்கோ விழுந்து.. மிக கூராய் இருந்தது...

நிரு : ஆமா டி... சஞ்சு வ கடத்திக் கொண்டு போய்.... மயக்க மருந்து நெறையா குடுத்துர்க்காங்க.... சின்ன பொண்ணுன்னு பாக்காம தப்பா நடந்துர்க்காங்க.. அப்ரமும் விடாம... அவள... அவ....ள.. என திக்க....

வர்ஷி : தைரியமா சொல்லு சனா.... இதுக்கே ஒடஞ்சிடாத டி... இன்னும் நெறையா இருக்கு .... இதை அவள் எதை நினைத்து கூறினாளோ..... அவளே அறிவாள்....

நிரு : அவள கூர் கூரா வெட்டி ஒவ்வொரு உறுப்பையும் திருடீட்டாங்க டி.... என்றாள் அழுதுக் கொண்டே....

வர்ஷி : என்ன சனா சொல்ற.... இது எதுவுமே எப்டி டாக்டர்ஸ்க்கு தெரியாம போகும்???

நிரு : மறச்சிட்டாங்க டி... போர்ஸ்ட்மார்டம் பன்னிட்டோம் னு சொன்னாங்க... ஆனா அவ செத்தப்பவே அப்டி தான் இருந்துர்க்கா....

வர்ஷி : இதல்லா எப்டி டி கண்டுபுடிச்ச???

நிரு : அந்த ரிப்போர்ட்.... அவ செத்த இடத்துல கெடச்ச சில விஷயங்கள வச்சி தான்... அது மட்டும் இல்லாம எங்க கிராமத்துல பல பொண்ணுங்க இந்த மாரி காணாம போய்ட்டாங்க... சில பேர் இந்த மாரி பொணமா கெடச்சிர்க்காங்க... பல பேர் இது நாள் வர கெடச்சதே இல்ல.... சஞ்சு இறந்த இடத்துக்கு பக்கத்துலையே... ஒரு விசிட்டிங் கார்ட் இருந்துச்சு... அது ஒரு இரும்பு கம்பி குடௌன் ஓட கார்ட்....

வர்ஷி : எந்த ஊர் ல இருக்கு அந்த குடௌன்.....

நிரு : அமைதியாய் இருந்த நிரு பின்பு.... ஊட்டி என்றாள்....

வர்ஷி : என்ன டி சொல்ற??

நிரு : ஆமா டி.... நா இதுக்கு பின்னாடி உள்ளவங்கள கண்டுபிடிக்காம விடமாட்டேன் வர்ஷி....

வர்ஷி : ஐ வில் டெஃபெனிட்லி ஹெல்ப் யூ சனா... யாருன்னு ஒன்னா கண்டுபுடிப்போம்.... இவ்விருவரும் அறியவில்லை.... அத்தொழிலில் பின் இருப்பவரே... வர்ஷியின் அறை வாசலில் நின்று இவ்வனைத்தையும் கேட்டுவிட்டு சென்றதை..... எதையோ வர்ஷியிடம் கொடுக்க வந்த லலித்தா... சரியாக வர்ஷி ஸ்பீக்கரில் போட்ட நொடியிலிருந்து அனைத்தையும் கேட்டுவிட்டு... அதிர்சியுடன்... சனா என்னும் பெயரை தன்னுள் குரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்....

தன் வீட்டில் பலத்த சிந்தனையில் இருந்த அர்ஜுன்... முன் நிழலாடுவதை கண்டு கண்களை திறந்தான்... முன் இருப்பவரை கண்டு அதிர்ந்தவன்....

அர்ஜுன் : நீங்க ஏன் இங்க வந்தீங்க.... நானா கூப்புர்ர வர வர வேணாம் னு சொல்லீர்க்கேல்ல.... போங்க இங்க இருந்து....

அவர் : முடியாது... நா போமாட்டேன்....

அர்ஜுன் :நீங்க இப்டி பேசுறது நல்லாவே இல்ல... இங்க இருந்து போங்க... என் ப்ராஜெக்ட் ஒர்க் முடிஞ்சதும் நானே வந்து உங்கள பாக்குறேன்....

அவர் :ம்ம்ம் சரி... என அங்கிருந்து நகர்ந்தார் அவர்...

தனக்கு கிடைத்த செயினை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு அதை முன்பே எங்கோ கண்ட நினைவு வந்து... அதையே உத்து உத்து பார்க்க... மெல்ல மெல்ல... ஒரு நாள் அதை லலித்தாவின் கழுத்தில் பார்த்தது நினைவு வந்தது அர்ஜுனுக்கு... இதை நினைவு கூர்ந்ததும் அதிர்ந்தவன்.... அந்த டயர் மார்க் அவரின் காருடன் ஒத்துப்போகுமா என்ற சந்தேகத்தில்... அன்று இரவு செவுர் ஏறி குதித்து அதை பரிசோதித்தான்... ஆனால் அது ஒத்துப்போகவில்லை.... ச என சலித்துக் கொண்டவனை ஈர்த்தது அவர்களின் கெஸ்ட் ஔஸிஸ் நிருத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்... அந்த கார் டையருடன் ஒப்பிட்டவன்... ஒன்றிணைவதை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டான்.... அங்கிருந்து உடுனே வீட்டிற்கு வந்தவன்.... பல சிந்தனைகளின் பின்... அவர்களை பின் தொடர முடிவெடுத்தான்.... அடுத்த நாள் முழுவதும் அவர்களை பின் தொடர்ந்ததில்.... ஒரு பழைய பங்கலா காட்டிற்குள் இருப்பதை கண்டுப்பிடித்தான்..... அதில் இரு பெண்கள் மயங்கியிருப்பதை கண்டு.... அங்குள்ள ரௌடிகளுக்கு தெரியாமல் அவ்விருவரையும் எழ வைத்து தப்பிக்க வைத்தான்.... இது அனைத்திற்கும் அவர்கள் தான் காரணம் என்பதற்கான ஆதரங்களை சேத்து அப்பெண்களுடன் அங்கிருந்து அகன்றான்....

அவ்விருபெண்களும் கூட வேதபுரம் தான் என அறிந்து அன்றிரவே அவர்களுடன் வேதபுரித்திற்கு பயணமானான்.... இருவரையும் அவரவர் விட்டில் விட்டப்பிறகே நிம்மதியுடன் ஊட்டிக்கு திரும்பினான்......

ஆனால் அங்கோ.... நம் வர்ஷி இருந்த அனைத்து நிம்மதியும் தொலைத்திருந்தாள்.....

காதல் தொடரும்...

Intha ud la na edhavathu thappa sollirntha mannichirunga... ippo iiruka nilmiya tthaa sollirken... unga kruthugalium marakkama sollunga....


Last ud la vantha ஆதித்தன் en 4th stry ooda hero.... so intha kathaila avan vara vaipugal ini illa... so kolappikkatheenga....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro