Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

46

கதாபாத்திரம் மாற்றப்பட்டவர்கள்:
ஹனா-அபி
ஹாரூன்-ராம்
ரியாஜ்-விஷ்வா
ஃபர்ஹா-ஸ்வேதா


......................
46

மருத்துவமனை வாசலில் அனைவரும் அமர்ந்திருக்க.. ஒவ்வொருத்தர் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருந்தது..

அங்கு விரைந்து வந்த விஷ்வா,. "உனக்கு சந்தோஷம் தானே.. இதை தானே எதிர்ப்பார்த்தா" என கேட்டவனிடம்.. "என்ன டா.. இப்படி சொல்லுறே.. நான் என்ன பன்னேன்" என கேட்ட ரேகாவை பார்த்து..
"ஏன் மா.. நீ என்ன செய்ஞ்சானு உனக்கு தெரியாதா மா.. கேவலம் ஜாதிக்காக இப்படி நடந்துப்பியா?? இல்லை வெளியே ஜாதினு சமாளிச்சிட்டு பணத்துக்காக இப்படி நடந்திக்கிறியா?? ஆமா, நான் தான் சொன்னேன்லே.. நீ கேட்ட எல்லாத்தையும் செய்ஞ்சி தரேனு.. அதையும் மீறி நீ இப்படி நடந்துக்கிறியே மா.. ச்சீ.. உன்னை போய் அம்மானு சொல்லிட்டு.. உன் வயித்துல போய் நான் பிறந்திக்குறத நினைச்சா அசிங்கமா இருக்கு.. ஆமா, இங்கே உனக்கு என்ன வேலை.. என் ஸ்வேதா இந்த உலகத்தை விட்டு போகனும்னு வேண்டிக்கிட்டு வந்தியா?? இல்லை.. அவ பொலைச்சிட்டானா கண் அசருர நேரத்துல ஹாஸ்பிடல்ல வைச்சே கொண்ணுடலாம்னு நினைச்சியா??"என கத்தினான்..

"டேய்.. நான் உன் அம்மா டா.. இப்படிலாம் பேசாதே டா" என ரேகா கூற.. "ஒன்னு மட்டும் சொல்லுரேன் கேட்டுக்கோ.. என் ஸ்வேக்கு மட்டும் ஏதாவது ஆச்சி.. நான் சத்தியமா உயிரோட இருக்க மாட்டேன்.. அப்புறம் உனக்கு வீடும் இல்லை, பணமும் இல்லை, நகையும் இல்லை" என விஷ்வாகத்தவும்..
"டேய், உன்னை விட எனக்கு நகையும் பணமும் பெரிசா டா என்ன" என கேட்டவரை பார்த்து.. "உன் கால்ல வேணா விழுரேன்.. இங்கே இருந்து போ மா" என கத்தினான்..

"டேய்.. என்ன டா பேசுறா.. உன்னை பெத்தவள பார்த்து பேசுர பேச்சா டா இது" என அங்கே வந்த கதிர் கேட்க.. "அப்பா" என கட்டி அணைத்து அழுத விஷ்வா.. "அம்மா என்ன செய்ஞ்சிக்கிறாங்க தெரியுமா?? அதை கேட்டா நீங்க நொந்துருவீங்க பா.. உங்க பேச்சை நம்பி தான் நான் ஸ்வேதா கிட்ட கூட காண்டேக்ட் வச்சிக்காம சம்பாதிக்க போனேன்" என கூற.. "அப்படி என்ன தான் நடந்திச்சி விஷ்வா.. எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருந்திச்சி.. எங்க யாருக்கும் எதுவும் புரியலே" என கதிர் கேட்கவும்.. மற்றவர்களும் கதிர் சொல்வதை ஆமோதிப்பதாய் பார்க்க.. "கேட்குறாங்களே மா.. சொல்லுங்க" என விஷ்வா கண்கள் சிவக்க கூற.. ரேகா தலைகுனிந்தாள்..

"அவுங்க எப்படி ப்பா சொல்லுவாங்க.. நானே சொல்லுறேன்" என விஷ்வா கூற வர.. "வேண்டாம் பா.. என்னை மன்னிச்சிரு.. நீ ஸ்வேதாவயே கல்யாணம் பன்னிக்கோ.. நான் எந்த ப்ரச்சனையும் பன்ன மாட்டேன்" என கண்ணீர் சிந்தியவளிடம்.. "நீ சும்மா இரி டா.. நீ சொல்லு" என விஷ்வாவிடம் கதிர் கேட்க சொல்ல ஆரம்பித்தான்..

அபி மற்றும் அர்ஷா மைசூர்க்கு போன அன்று வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து விஷ்வா ஸ்வேதா வின் பேச்சை எடுத்தனர்..

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்ராயம் கூறி.. இறுதியில் அனைவரும் விஷ்வா ஸ்வேதா காதல்க்கு பச்சை கொடி காட்டிட.. அதை மறுத்தார் ரேகா..

அவரின் மறுப்புக்கு காரணம் கேட்டவர்களிடம் ஜாதியை காரணமாக காட்டிட.. சந்தேக பார்வையுடன் பார்த்த கதிர்.. "உனக்கு ஜாதி தான் ப்ரச்சனையா?? இதுவரை நாமளும் சரி.. நம்ம குடும்பத்துலையும் சாதிக்கோ இல்ல பணத்துக்கோ பாத்து எதுவுமே பண்ணலயே ....
நீ மட்டும் எதுக்கு ரேக்கா ??...
உனக்கு பிரச்சினை ஜாதியா இல்ல காசு பணமா ....
காசு தான் பிரச்சினைனா இன்னும் நாலு வருஷத்துல உனக்கு தேவையானத எல்லாமே செஞ்சு போட்டுட்டு ஸ்வேதாவ அவன் கல்யாணம் பண்ணிப்பான் ..
இதுக்கு சம்மதம்னா நீ இரி.. இல்லாட்டி எங்கேயாச்சும் போய்று கண்ணு முன்னாடி நிக்காத ...." என கூற

"என்னங்க ....
யாரோ ஒருத்திக்காக என்னயே தூக்கி எறிஞ்சு பேசுறீங்களா ...." என ரேகா கேட்கவும்,.

"இங்க பாரு ரேகா ...
உனக்கு நல்லா தெரியும் நம்ப புள்ள தான் நமக்கு எல்லாமே ...
இந்த விஷயத்துல எதுக்கு வரட்டு கவுரவம் ....
நம்ப பையன் வாழ்க்கை நல்லா இருக்கனும் ரேகா ....
நம்ம காலம் முடிஞ்சு போச்சு...யோசி நம்ம பையனுக்காக யோசி" என்க..

ரேக்கா கண்ணீருடன் ...
"சரிங்க ...
நீங்க இவ்ளோ சொல்றப்போ எனக்கு என்ன சொல்றதுனே தெரில....
அவளுக்காக இல்ல உங்களுக்காகவும் நம்ம பையனுக்காகவும் நா அவள ஏத்துக்குறேன்" என
ரேகா சம்மதித்தால் ஸ்வேத்தாவையும் ஏற்றுக்கொண்டாள்......

"ஸ்வேதாம்மா நா பேசுனதெல்லாம் மனசுல வெச்சுக்காத ...." என ரேகா கூற

"ஐயோ அத்தை அப்டிலாம் இல்ல ...
இனி உங்களையும் மாமாவையும் பத்திரமா பாத்துப்பேன் ....." என ஸ்வேதா அழுகையுடனே சிரிக்க..

"இனி நான் உனக்கு அத்தை இல்ல டா அம்மா ...
உனக்கு என்ன வேனுனாலும் கேலு" என கூறவும்

"எனக்கு ஒன்னும் வேனா அத்தை இல்ல இல்ல அம்மா ...
இத விட எனக்கு வேற என்ன வேனும்மா ....
ரொம்ப ரொம்ப சத்தோஷமா இருக்கேன் ..... " என கூறினாள்..

ஸ்வேத்தாவும் ரேகாவும் மிக ஆனந்தமாக பிறர் பொறாமை படும் அளவிற்கு நடந்து கொண்டனர் ....

விஷ்வாவும் கூட தன் தாயின் மாற்றத்தில் சற்று அதிர்ந்துதான் போனான் ....
ஸ்வேதாவின் மகிழ்சியில் பங்கு கொண்டான் ...
ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவுமே நாட்கள் நகர்ந்தது .....

இது வெகு நாட்களுக்கு நீடிக்க போவதில்லை என்று அந்த பேதை பெண் அறிந்திருந்தால் இவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்க மாட்டாள்......

...

"அப்போ தான் எனக்கு வசந்த் ஃபோன் பன்னான்" என விஷ்வா கூறி ரேகாவை முறைக்க.. "என்ன டா ஆச்சி" என ராஜ் பதற்றத்துடன் கேட்கவும்..
"இங்கே வாங்க மாமா" என கூறிய விஷ்வா அவர்களை அழைத்து கொண்டு ஸ்வேதாவை வைத்திருக்கும் இடத்தை நோக்கி சென்றவன்..

"எழு டா ஸ்வே.. எழுந்துகோ" என விஷ்வா கூற.. கண்கள் கலங்க எழுந்து அமர்ந்தவளை மொத்த குடும்பமும் ஒன்றும் புரியாமல் பார்த்தது..

"நான் ஆஃபிஸ்ல இருக்கும் போது எனக்கு கால் வந்திச்சி" என கூறி.. "என் கிட்ட வசந்த் சொன்னத நம்பவே முடியல" என கூறியவன்..

"இந்த ப்ராப்ளம இவளுக்கு தெரியாம சால்வ் பன்றதுக்கு யோசிக்கிறதுக்குள்ள இந்த மேடம் உச்சி பிள்ளையார் கோவில்ல இருந்து கீழே குதிக்க பார்த்தாங்க" என கூறியதும் அதிர்ச்சியான மொத்த குடும்பமும் "என்ன" என கத்தியது..

"அப்பா.. இப்ப ஸ்வேதா எப்படி இருக்குறா??" என கேட்ட அபியிடம்.. "நாங்க இன்னும் ரீச் ஆகலேமா" என ராம் கூறவும்.. "சரிப்பா.. நாங்களும் வந்துட்டு தான் இருக்குறோம்.. அவ நல்லா இருப்பா" என கூறி அபி கைப்பேசியை வைத்தாள்..

விஷ்வாவை மொத்த குடும்பமும் அதிர்ச்சியாய் பார்க்க.. அவன் சொல்ல ஆரம்பித்தான்...

அன்று ஒரு நாள்..

விஷ்வாவின் பிறந்த நாள் அதனால் ஸ்வேத்தாவை வீட்டிற்க்கு அழைத்து விருந்திற்க்கு ஏற்பாடு செய்தனர் ரேகாவும் கதிரும் ....

அன்று ஸ்வேதாவும் விஷ்வாவிற்க்கு வெள்ளி மோதிரம் பரிசளித்தாள் ....

அன்றைய நாள் நன்றாகவே சென்றது ....
ரேக்கா ஒரு ஜூஸ் டம்ளரை ஸ்வேதாவிற்க்கு எடுத்து சென்றாள் ...

"அம்மாடி ஸ்வேதா இந்தா ஜூஸ்ஸ குடி டா ...." என ரேகா ஒரு ஜூஸ் க்ளாஸை குடுக்க..
"பரவால அம்மா நீங்க போய் எனக்கா.... " என தடுமாறியவளை..

"அட என்ன டா பரவால குடி" என ரேகா கூறியதும்..
அவள் குடிக்கும் நேரம் விஷ்வாக்கு சந்தேகம் வராத படி விஷ்வா கையில் வைத்திருந்த ஜூஸ் முழுவதையும் அவள் மேலே கொட்டிவிடும்படி செய்தாள் ரேகா..

"என்ன விஷ்வா பாரு டிரஸ் ஃபுள்ளா கொட்டிட்ட ...." என ரேகா கூற.
"அயோ சாரி டி ....
தெரியாம ..." என விஷ்வா கூறவும்..

"பரவாயில்லை" என கூறி நின்றிருந்தவளை... "ஸ்வேதா மேல ரூம்ல வேற டிரஸ் இருக்கு எடுத்து தரேன் மாத்திக்கோ" என கூறினார் ரேகா ....

"சரி மா ....." என ஸ்வேதா கூறி செல்ல..

"இந்த டிரஸ் உனக்கு அழகா இருக்கும் ஸ்வேத்தா போய் குளிச்சுட்டு மாத்திக்கோ ..."எனவும்

"சரிங்கமா ..." என கூறி சென்றாள்..

இதுவரை ரேகா நினைத்ததை போலவே எல்லாம் சரியாக முடிந்தது .....

அந்த பாத்ரூமில் ஒரு கேமராவை பொருத்த.. ஸ்வேதா அந்த அறையில் நுழைந்ததிலிருந்து வெளியே வரும் வரை அனைத்தையும் வீடியோ எடுத்தது......

என்ன தான் தன் கணவர் சமாதானம் செய்தாலும் அவளின் புத்தி மாறவில்லை....

ஸ்வேதாவை விஷ்வாவிடமிருந்து பிரிக்க பல திட்டம் போட்டாள் எதுவும் சரிபட்டு வரவில்லை கடைசியாக ஒரு பெண் வாழ்க்கையையே சின்னாபின்ன மாக்க முடிவெடுத்துவிட்டாள் ....

அந்த வீடியோவை ஸ்வேதாவின் அம்மாவிடம் காட்டி மிரட்டினார் ரேகா ...

"இங்க பாரு நீங்க கெட்ட கேடுக்கு என் பையன்தான் கெடச்சானா ....
உங்க ஜாதி என்ன குலம் என்ன அத விடுங்க காசு பணம் ஏதாச்சும் இருந்தாவாச்சு பரவால்ல .....

இந்த ஊற விட்டு ஓடிருங்க இல்லாட்டி இந்த வீடியோவ நீங்க மட்டுந்தான் பாத்துருக்கீங்க இன்னும் ஒரு வாரத்துல உலகமே பாக்கும் புரிஞ்சதா ....." என ரேகா மிரட்ட

"அம்மா அப்டிலாம் பண்ணிறாதீங்க ....
என் பொண்ணோட வாழக்கைய அழுச்சுறாதீங்க ...." என கதிரின் மனைவி கூற..

"இங்க பாரு உன்னோட பொண்ணு கிட்ட என்ன சொல்வியோ ஏது சொல்வியோ எனக்கு தெரியாது அவ இனி என் பைய வாழ்க்கைல இருக்க கூடாது ....." என அவளின் பயத்தை தனக்கு சாதகமாக்கி அதிகாரம் செய்யவும்..

"அம்மா....
நாங்க எங்கயாச்சும் போய்றோம் எங்கள விட்றுங்க ...." என தன் மகளின் வாழ்க்கையை எண்ணி கண் கலங்கினார்...

இவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்ட ஸ்வேதாவால் தாங்கி கொள்ள முடியவில்லை ....

"ஏம்மா ....
என்ன ஏமாத்துநீங்க ....
உங்க பொண்ணு மாதிரி சொன்னீங்க...
எல்லாமே நடிப்பா...
அதுக்கு என்ன கொலை பண்ணிருக்கலாமே மா...
அசிங்கமா என்ன கேவலபடுத்தி இப்டி ஒரு வீடியோ எடுத்து....
இதுக்கு மேல நா உயிரோட இருந்தா என்ன இல்லாட்டி என்ன....." என குமுறிய ஸ்வேதா..

கோபத்தில் உச்சி பிள்ளையார் கோவிளுக்கு சென்று மேலிருந்து கீழே விழுந்து சாக துனிந்துவிட்டாள் ....

"ஸ்வேதா மட்டும் இல்லை.. இதை அங்கே வேலை விஷயமாக வந்த வசந்தும் கேட்டுட்டான்.. அவன் தான் கால் பன்னி எனக்கு சொன்னான்.. ஆனா, இதை ஸ்வேதா கேட்ருப்பானு எங்களுக்கு தெரியாது" என விஷ்வா கூற..

"இவ்வளவு நடந்திருக்கா??" என ராஜ் தன் மனைவியை முறைத்தவர்.. "அப்புறம் என் பொண்ணு எப்படி??" என ராஜ் இழுத்தார்..

மருத்துவமனையில் வந்து இறங்கிய சீதா.. ராமை அழைத்து அங்கு நின்றிருந்வனை காண்பிக்க.. அவனை பார்த்ததும்,. "டேய்.. நீ ஏன் டா இங்கே வந்து நிக்கிறே துரோகி" என அவன் மேல் பாய போன ராமை தடுத்த விஷ்வாவும் வசந்தும்..

"விடுங்க மாமா".. "இவன் மட்டும் இல்லைனா நம்ம வீட்டு பொண்ணு நம்ம கூட இப்ப உயிரோட இருந்துக்க மாட்டா" என கூறியவர்கள்.. நடந்ததை சுருக்கமாக ராம் மற்றும் சீதாவிடம் கூறி..

உச்சி பிள்ளையார் கோவில இருந்து கீழே குதிக்க போன ஸ்வேதாவை தடுத்து.. அவளின் திமிறலில் அவளை ஓங்கி அறைந்ததும் மயங்கியவளை மருத்துவமனையில் சேர்த்தவன்.. இவர்களுக்கு தகவல் கூற.. மொத்த குடும்பத்திர்க்கும் ரேகாவை பற்றி தெரிய வைப்பதர்க்காக நாடகம் ஆடினார்கள்..

அங்கே வந்த அபியும் அர்ஷாவும் மொத்த குடும்பமும் சிறிது நிம்மதியாக இருப்பதை பார்த்தவர்கள்.. "ப்ராப்ளம் ஒன்னும் இல்லை.. ஸ்வேதா நல்லா இருக்கா" என எண்ணியவர்கள் முன்னாள் செல்ல.. அபியின் கால் தன்னால் நின்றது..

அதை கவனித்த அர்ஷா.. "என்ன ஆச்சி அபி.. கால் வலிக்குதா??" என கேட்க,. இல்லை என செய்கை செய்தவள்.. அங்கு இருந்தவர்களை பார்க்க.. அவர்களும் அபி,அர்ஷாவை பார்த்து புன்னகைத்தனர்..

அபியின் கண்கள் போகும் திசையை பார்த்தவர்கள் புரிந்து கொள்ள.. அங்கு இருந்தவன் அபியை நோக்கி வரவும்.. அபியின் தடுமாற்றத்தை பார்த்து புரியாமல் அர்ஷா விழிக்க.. அர்ஷாவை பார்த்த அபி,.. மெல்லியதாக முணுமுணுத்தாள்..
"அக்ஸர்" என்று..









Indha ud ku typing help panna salmasasikumar... nd another help panna Princess_Pavithra ku "luv u" dearz

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro