Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

27

ஜரா...ட்ரெஸ் எடுக்க போகனும் டி என அபி கூறவும்...

ஏன் டி... தீபாவளிக்கா?? நீ இன்னும் ட்ரெஸ் எடுக்கலையா?? என ரம்யா கேட்க..

ஹ்ம்ம்..எனக்கு இல்லை டி...
அக்ஸர் க்கு...
நிச்சயம் ஆனதும் வர தீபாவளிக்கு பொண்ணு வீடு மாப்பிள்ளைக்கும் எடுக்கனுமாமே...

அதான்... அப்பா சொன்னாங்க... நாம்ம போய் எடுத்துட்டு வந்துருவோமா என அபி கேட்க...

சரி டி.... ஈவினிங் போகலாம் என ரம்யா கூற சரி என மற்றவர்களும் ஒத்துக்கொண்டனர்...

நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிக்கிறாங்க டி... என்னை போய் அக்ஸர்க்கு ட்ரிஸ் செலக்ட் பன்ன சொல்லுறாங்க... அவனுக்கு என் செலக்ஷனே பிடிக்காது டி என அபி  முகத்தை சுளிக்க...

இது வேறயா என ரம்யா வாயை பிளக்க...
ஹ்ம்ம்... ஆமா டி... என்கேஜ்மென்ட்க்கு நான் தான் சர்ட் செலக்ட் பன்னேன்... LP சர்ட் டி... அது எவ்வளவு பெஸ்ட்டா இருக்கும் ப்யூர் காட்டன்.... ஸ்டார்டிங்ல அக்ஸர் கூட பேசும் போது சர்ட் நல்லா இருந்துச்சுனு சொன்னான்..

இடையில திடீர்னு சொல்லுறான்... சர்ட் நல்லா இல்லையாம்... துணி ப்ளாட் ஃபார்ம்ல எடுத்த மாதிரி இருக்காம்... அப்ப எதுக்கு ஸ்டார்டிங்ல நல்லா இருக்குனு சொன்னீங்கனு கேட்டா... நீ கஷ்ட பட கூடாதுனு சொன்னேனு சொல்லுறான்...
என்னால முடியல டி என அபி புலம்ப ஆரம்பிக்க...

போதும் டி... புலம்பாதே... எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் என ஜரா மற்றும் ரம்யா சமாதானம் படுத்தினர்..

மாலையில் ஜரா,அபி,ரம்யா மற்றும் அஜூ ஒரு பெரிய துணிக் கடைக்கு சென்று ஆளாளுக்கு துணியை அலசி ஆராய்ந்து கடையை புரட்டிய பிறகே அக்ஸர்க்கு ஒரு அழகான சர்ட்டை எடுத்தனர்...

பின்னர்... ராம்க்கு அழைப்பு விடுத்தவள்...

அபி: ஹலோ... அப்பா...

ராம்: ஹலோ
சொல்லு மா..

அபி: டேட்...சர்ட் எடுத்துட்டேன்...

ராம்: ஹ்ம்ம்...சரி மா...நீ என் அட்ரஸ்க்கு அனுப்பிரு... நான் இங்கேயே வேஷ்டி எடுத்துட்டு அக்ஸர்க்கு கொண்டுட்டு போய் குடுத்துற்றேன்...

அபி: ஹ்ம்ம்.. சரி ப்பா பார்சல் போட்டுடுறேன்...
.
.
பின்னர் ராம்க்கு பார்சலை அனுப்பியதும்...தங்களுக்கு தேவையான பொருள்களையும் வாங்கிய பின் அனைவரும் வீட்டிர்க்கு திரும்பினார்கள்...

அபி அத்தை.. மாமாக்கு சட்டை இப்படி இக்கு என அஜூ கையை சூப்பர் என்பது போல் வைத்து காண்பிக்கவும்...

ஹ்ம்ம்...உங்க மாமாக்கு என் செலக்ஷன் கண்டிப்பா பிடிக்காதே டா...
பரவாயில்லை...
உனக்காச்சிம் பிடிச்சிருக்கே என அபி வருத்தப்பட... ஹேய்... விடு டி... கண்டிப்பா பிடிக்கும் என ரம்யா கூற போலியாக சிறித்தாள் அபி...
.
.
ஐந்து நாட்களுக்கு பிறகு...
அக்ஸரிடமிருந்து அபிக்கு மெசேஜ் வந்தது...

வாட்ஸ் ஆப் இல்:

அக்ஸர்: ஹாய்...

அபி: ஹாய்..

அக்ஸர்: எப்படி இருக்கீங்க??

அபி: ஹ்ம்ம்...இருக்கேன்(😕😕😕)
நீங்க???

அக்ஸர்: நல்லா இருக்கேனே...

அபி:(😕😕😕)

அக்ஸர்: சாப்டீங்களா??

அபி:ஹ்ம்ம்...நீங்க??

அக்ஸர்: ஹ்ம்ம்...எஸ்...

அபி: ஹ்ம்ம்... டேட் சர்ட் தந்தாங்களா??

அக்ஸர்: ஹ்ம்ம்...ஆமா...நல்லா இருந்துச்சி...

அபி: உண்மையாவா??

அக்ஸர்: ஆமா... ஆனா, துணி தலைவானி(pillow) உறை மாதிரி இருந்திச்சு...

அபி: ஓஹ்....

அக்ஸர்: ஹ்ம்ம்...ஆமா...என்னோட சர்ட்ஸ்லாம் எப்படி இருக்கும்னு ஃபோட்டோல பார்த்திக்கிறீலே...அப்புறம் ஏன் இவ்வளவு மொக்கையா எடுத்திக்கிறா??

அபி: ஹ்ம்ம்...ஆமா...என்ன செய்ய...
நாங்களாம் கஷ்ட பட்டவங்க...
அதான்...ப்ளாட் ஃபார்ம்ல எடுத்தோம்...

அக்ஸர்: ஓஹ்ஹ்...குத்தி காட்டுறியோ...

அபி: இல்லையே...நான் ஏன் குத்திக் காட்டுறேன்...உண்மைய தானே சொன்னேன்...

அக்ஸர்: 😠😠😠

அபி: சரி...நீங்க எத்தனை ருபாய் க்கு சர்ட் எடுப்பீங்க??

அக்ஸர்: 850 கிட்ட தான்...

அபி: நான் உங்களுக்கு எடுத்த சர்ட் 3600 தெரியுமா??

அக்ஸர்: ஓஹ்...பணம் இருக்குனு சொல்றியோ...நாங்க பிச்சைக்காரங்க தான்...தெரிஞ்சி தானே கல்யாணத்துக்கு ஒத்துக்குட்டே...

அபி: ஆமா டா...தெரிஞ்சி தான் உன்னை மேரேஜ் பன்னிக்க அக்ஸப்ட் பன்னிக்கிட்டேன்... தெரியும் தான்... நீ படிக்காதவனு தெரியும்... உனக்கும் எனக்கும் செட் ஆகாதுனு தெரியும்... தெரிஞ்சி தான் ஒத்துக்குட்டேன்...
ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசனும்னு கூட உனக்கு தெரியாது...

அக்ஸர்: போதும் அபி...ஓவரா பேசுறா...

அபி: நான் அப்படி தான் பேசுவேன்...
ஆமா... நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிறே... நீயா வந்து சேட் பன்னுவே... நாங்க மாட்டோம்னு சொன்னா, ப்ளாக் பன்னுவே... என்னை அப்படியே நல்லா பேச வைச்சு உனக்கு அடிக்ட் ஆக வைப்பா... ஆம்பளைனா உனக்கு திமிரா டா... இதுல சார்ரோட ஸ்பெஷல் டயலாக் "பொண்ணுங்களையே பிடிக்காது"...
ஆமா... உனக்கு என்ன தகுதி இருக்கு...
பொண்ணுங்கள பிடிக்காதுனு சொல்றதுக்கு...

அக்ஸர்: போதும் அபி...

அபி: ஆமா அக்ஸர்...போதும்...நாம்ம ஒரு இரண்டு மாசமாச்சும் சந்தோஷமா பேசிருப்போமா...அதுலயும் பல நாள் நீ என்னை திட்டிட்டு தான் இருப்பா...

அக்ஸர்: இப்ப என்ன சொல்ல வற்றே...

அபி: உனக்கு ஒன்னு தெரியுமா அக்ஸர்..
நீ அழகா பேசாம இருந்துட்டே...
நான் எவ்வளவு அழுதேனு தெரியுமா..
நீ நம்ப தேவையில்லை அக்ஸர்...
என்னால இதுக்கு மேலே முடியல...
உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்...
நாம்ம மேரேஜ் பன்னிக்க வேண்டாம்...
என்னால எங்க வீட்டுல பேச முடியாது...
நீயே உங்க வீட்டுல சொல்லிறு...
இந்த கல்யாணம் வேணாம்னு...
உனக்காக நான் கடவுள் கிட்ட எவ்வளவு வேண்டிக்கிட்டாலும்...அது வேஸ்ட்... நான் சாமி கிட்ட வேண்டிக்கிற அளவுக்கு உனக்கு தகுதியில்லை...

அக்ஸர்: வேண்டாம் அபி...கோவத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசாதே... நீ பின்னாடி ஃபீல் பன்னுவா...

அபி: இப்ப மட்டும் நான் சந்தோஷமா இருக்குற மாதிரி சொல்லுறே...நீ எப்ப என் லைஃப்ல வந்தியோ...அப்பம்ல இருந்து நான் ஃபீல் தான் பன்றேன்...

அக்ஸர்: நீ இப்ப போய் தூங்கு அபி...

அபி: (எதுவும் சொல்ல தோனலை...எதுவும் பதில் அனுப்பாம கைப்பேசியை வைச்சிட்டு படுக்குறே)...
.
.
.
நாம்ம இன்னைக்கு ரொம்ப பேசிட்டோமோ...ஏன் மனசுலாம் இப்படி பாரமா இருக்கு என தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்த அபி ஒரு கட்டத்தில் தூங்கி போனாள்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro