24
ஹ்ம்ம்...எத்தனை பசங்களோட சாபமோ உன் வாழ்க்கைல அக்ஸர் மூலமா இந்த ஆட்டம் போடுது என ரம்யா கூற... அபி முறைத்தாள்...
அவளை ஏன் டி முறைக்கிறா...எத்தனை பசங்க உன் பின்னாடி சுத்துனாங்க...நீ லவ் பன்னாட்டியும் பரவாயில்லை...சும்மா விட்டியாடி... போய் அம்மா கிட்ட போய்... போஞட்டு குடுத்தே.... அப்பவே நான் நினைச்சான்... நீ பன்ற கூத்துக்கு எவனாவது ஆசிட்ட ஊத்துவான்... இல்லாட்டி ரயில்வே ஸ்டேஷன்ல கத்திய வைச்சி ஒருத்தன் காதலிச்ச பொண்ணையே கொலை பன்னான்லே... அந்த மாதிரி உன்னை கொலை பன்னுவாங்கனு நினைச்சேன் என ஜரா கூற...
அடிப்பாவி... அவனுவளே விட்டாலும்... நீ போய் என்னை கொலை பன்ன சொல்லி ஐடியா குடுப்பா போலயே என அபி கேட்க...
இங்க பாரு அபி என தன் ஃபோனை ரம்யா கான்பித்தாள்...
அதிலே...
அர்ஷா ஒரு டிபி வைத்திருந்தான்...
இது தான்..இதை பார்த்த ரம்யா..
ரம்யா: ஏன் டா...இப்படி டிபி வச்சிக்கிறே??
அர்ஷா: ஹ்ம்ம்...ஒன்னும் இல்லை..
ரம்யா: இன்னுமா...நீ அபிய நினைச்சிட்டு இருக்கிறே...
அர்ஷா: ஹ்ம்ம்...ஓல்ட் லவ்😢😢
ரம்யா: நீ இன்னும் ஏன் அவளையே நினைச்சிட்டு இருக்கே??
அர்ஷா: எப்படி மறக்க சொல்லுறே...என்னோட ஃபர்ஸ்ட் லவ்..மறக்க முடியாது...
.
.
பாரு...நல்லா பார்த்துக்கோ...இங்கே வர்ரதுக்கு கொஞ்சம் முன்னாடி நாங்க எதார்த்தமா பேசுனது என ரம்யா கூறினாள்...
அதைப் பார்த்து கொண்டிருந்த அபியிடம்... உனக்கு நியாபகம் இருக்கானு தெரியல அபி?? நாம்ம ஸ்கூல் படிக்கும் போது என் ஃப்ரெண்டு என் கிட்ட ஒன்னு சொன்னா...
அவ பீச்ல ஃப்ரெண்ட்ஸோட இருக்கும் போது அர்ஷா அவன் ஃப்ரெண்ட்ஸோட இருந்தானாம்... அப்ப அவன் ஃப்ரெண்டு ஒருத்தன், டேய்...வா டா...போர் அடிக்கிது...பொண்ணுங்களையாச்சும் ஸைட் அடிக்கலாம்னு சொன்னதுக்கு... டேய்... அதுலாம் தப்பு டா.. ஞஇந்த மாதிரி பேசுனா இனி உங்க கூட வர மாட்டேனு அர்ஷா சொன்னானாம்..
அபி ரொம்ப லக்கி டி...ஹான் அப்புறம் தயவுசெய்ஞ்சி இதை நான் சொன்னேனு மட்டும் அபி கிட்ட சொல்லிறாதே...என்னை துவைச்சி காயபோட்டுறுவானு பயந்த படி சிரிச்சிட்டு சொல்லிட்டு போய்ட்டா என ஜரா கூறவும்...
அபி ஹீரோயினா வில்லியானே தெரிய மாட்டிக்கிது என ரம்யா சிறித்தபடி கூறி...தன் முதுகில் ஒரு பரிசை பெற்றுக்கொண்டாள்...
இங்கே பாருங்க டி...இனி அர்ஷாவ பத்தி பேசாதீங்க...இதை இதோட விட்ருங்க...என் லைஃப் அக்ஸரோடனு நிச்சயம் ஆச்சி...எனக்கு அக்ஸர் தான் எல்லாமே என கூறியவளை பார்த்து தலையிலடித்து கொண்டனர் ஜரா மற்றும் ரம்யா...
சரி டி விடு...இப்ப அக்ஸர் இப்படி இருக்கானே...அதுக்கு என்ன செய்ய போரே என ஜரா கேட்க...ஹ்ம்ம் தெரியலே டி என அபி கூறி..
ஆனால், ஒன்னு மட்டும் நிச்சயம்... அக்ஸர் என் லைஃப்ல இல்லைனா யாரும் இல்லை என கூறினாள்...
அப்படினா...நீ அக்ஸர லவ் பன்றியா என ரம்யா கேட்க... அப்படியும் சொல்ல முடியாது என அபி கூறவும் இருவரும் குழம்பி போயினர்...
இருவரின் குழப்பமான முகத்தை பார்த்தவள்... இங்கே பாருங்க டி... என்னை பத்தி உங்களுக்கே நல்லா தெரியும்...
எவனையும் நான் திரும்பி பார்க்கலே... எவன் கூடயும் பேசுனதும் இல்லை... அப்படி இருக்கும் போது நான் அக்ஸர் கூட பேச ஆரம்பிச்சிட்டேன்... இன்னொருத்தன என் லைஃப்ல ஏத்துக்குட்டா அவனுக்கு நான் துரோகம் பன்ற மாதிரி ஆகிடும்... நான் செய்ஞ்ச தப்பு அக்ஸர தான் முடிச்சிக்கனும்... இல்லாட்டி இயற்க்கையான மரணம் வரனும்... சூசைட் பன்னிக்கிற தைரியம்லாம் எனக்கில்லை.. வேற ஒருத்தன் என் லைஃப்ல வந்துர கூடாது என கூறி அழுதவள் மீது இரக்கம் படுவதா கோவம் படுவதா என தெரியாமல் விழித்தனர் ஜரா மற்றும் ரம்யா...
சரி அபி..விடு மா...அக்ஸர எப்படியாச்சிம் உன்னோட சேர்த்து வைக்கிறோம் என ஜரா கூற ரம்யாவும் தலையசைத்தாள்...
மச்சி...நான் சொல்லுறேனு தப்பா நினைக்காதே...நீ சொல்றத வைச்சி பார்த்தா அக்ஸர்க்கு லவ் ஃபைலியர் இந்த மாதிரி எதுவும் இருக்கோனு தோனுது என ஜரா கூற...ஹ்ம்ம் ஆமா டி...எனக்கும் அந்த டவுட் இருக்கு...ஒன்ஸ்...நாங்க பேசும் போது சுஜி னு சொன்னாங்க...ஆனால், அது யாருனு நான் கேட்கலே என அபி கூறினாள்...(refer ud.23)
ஹ்ம்ம்...அப்டினா அக்ஸர் உன் கிட்ட அதுக்கு தான் எதையோ மறைச்சிக்கிறேனு சொல்லனும்...சரி...உன் ஃபோனை தா என அலைபேசியை வாங்கியவள்...நீ இப்ப அமைதியா இரி...நான் அக்ஸர்க்கு மெஸேஜ் பன்றேன்...நான் தான் பன்னேனு அக்ஸர்க்கு என்னைக்குமே தெரிய கூடாது என கூறியவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்...
வாட்ஸ் ஆப் இல்:
அபி எண்ணில் இருந்து ஜரா:
ஹாய் மா...எப்படி இருக்கீங்க...லாஸ்ட்டா என் கிட்ட ஏதோ தப்பு பன்னிட்டேனு சாரி கேட்டீங்க... அப்புறம் ஏனு தெரியலே... என்னை அவாய்டு பன்ன ஆரம்பிச்சடீங்க... நீங்க தான் விடாம என்னை உங்க கிட்ட பேச வச்சீங்க....
இப்ப நீங்களே என் கூட பேசாம இருக்கீங்க.. கஷ்டமா தான் இருக்கு... இட்ஸ் ஓகே... இனி உங்களுக்காகவே நான் பேசாம இருக்கேன்...
நீங்களா பேசுற வரை நான் பேச மாட்டேன் மா...நல்லா சாப்பிடுங்க...உடம்ப பார்த்துக்கோங்க...நான் எப்பையும் உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்குவேன்.. டேக் கேர் மா.. டாடா..
இதை அனுப்பிய ஜரா... இனி நீ அக்ஸர்க்கு மெஸேஜ் பன்னாதே... அவன் கண்டிப்பா ரிப்ளை பன்னுவான் என கூறியவள் சரி டி... நாங்க போயிட்டு வர்ரோம் என கிளம்பியவளை இல்லை டி... இன்னைக்கு இங்கையே சாப்பிடுங்க என அபி கூறவும்... நீயா சமைக்க போறே என ரம்யா கேட்க.... ஈஈஈஈஈ... இல்லை செல்லம்... நாம சமைக்க போறோம் என அபி கூறவும்...
அடிப்பாவி... நாங்க அதுக்கு வீட்டுலயே சாப்பிட்டுக்குவோம் என ஜரா கூற...
ச்சீ வாங்க டி என கூறி மீண் குழம்பு, வெண்டைக்காய் பொரியல், தேங்காய் பால் ரஸம் என செய்து முடித்தவர்கள் வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும் மறுபடியும் அறையில் புகுந்தனர் அபி, ஜரா மற்றும் ரம்யா...
ஹேய்...அக்ஸர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு டி என கூறியவள் அதை ஓபன் செய்து பார்க்க...அதில் தேங்ஸ் என அக்ஸர் அனுப்பியிருந்தான்...
தேங்ஸ்னு அனுப்பிருக்கான்... இப்ப என்ன டி செய்ய என கேட்ட அபியிடம் ஒன்னும் செய்யதே... ஒரு ஹார்ட் ஸ்மைலி மட்டும் போடு என ஜரா கூற... சரி என ஹார்ட் ஸ்மைலி போட்டு அனுப்பினாள்...
இனி எதுவும் நீயா மெஸேஜ் பன்னாதே டி... அதே நேரம் உன் டிபி... உன் ஸ்டேடஸ்லாம் லவ்ஸ்ஸா இருக்குற மாதிரி போடு... நாங்களும் இருக்குற லவ் வீடியோ அனுப்புறோம்...அதை ஸ்டேடஸ்ல வை என ஜரா கூற...ஓகே டி என அபி கூறி...
இந்த பிக்சரை டிபியில் வைத்தாள் அபி...
சிறிது நேரம் கழித்து...
ஜரா அனுப்பிய பாடல் வீடியோவை பார்த்த அபி... அடியேய்.. இதை டிவி ல பார்க்கும் போதே ஏதோ செய்யும்... இதை எப்படி டி ஸ்டேடஸ்ல வைக்க என அபி கேட்கவும்...
என்ன டி செய்யும்...இந்த பாட்டை பார்த்தா என கண்ணடிச்சு கேட்ட ரம்யாவை அபி முறைக்க...
அதுலாம் ஒன்னும் இல்லை...நீ வை டி என ஜரா கூறவும்...எனக்கு ஒரு மாதிரியா இருக்கு டி என கூறிய அபியை ஜரா முறைக்க இந்த பாடலை ஸ்டேடஸில் போட்டாள்...
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படர்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro