Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

20

அப்படி என்ன டி கேட்டான்...இப்பையும் உன் கை நடுங்குது என ஜரா கேட்கவும்...

அது என தட்டு தடுமாறி இழுத்தவள்...கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குறத பத்தி டி என அபி கூற...புரியலயே என ரம்யா கூறவும்..
அவளை பக்கத்தில் அழைத்து அவள் காதிர்க்குள் தாம்பத்திய உறவு என கூறி முகம் சுளித்து கீழே குனிந்தவளை...

என்ன டி... என்ன தான் கட்டிக்க போற பொண்ணா இருந்தாலும் இப்படியா கேட்பாங்க?? ச்சீ...ரொம்ப மோசம் என ரம்யா பொறிந்து தள்ள..

அதானே!! எல்லா பசங்ஙளும் அர்ஷா மாதிரி வர முடியுமா என ஜரா முறைத்து கொண்டு கேட்க.. அபிக்கு தலை தானாக கீழே குனிந்தது...

ஜரா சொல்றதும் உண்மை தானே... ஒரே ஒரு பொய் சொன்னானு தானே அர்ஷாவை நீ வேணாம்னு சொன்னே...
நீ சொல்றதை கேட்டதுக்கு அப்புறம் பார்த்தா..அக்ஸர் வாய்ல இருந்து ஒரு உண்மை கூட வராது போலயே என கோவமாக கேட்டாள் ரம்யா...

சரி...இத விடு...அதுக்கப்புறம் அவன் கூட பேசுனியா...என்ன சொன்னான் என ஜரா கேட்கவும்...(மறுபடியும் நடந்ததை சொல்ல தொடங்கினாள்)..
.
.
.
.
ச்சே...இவன் இப்படி பேசுறானே...வாட்ஸ் ஆப் க்கு இன்னைக்கு போகவே கூடாது என ஒரு முடிவோடு படுத்து இருந்தவள்...
"கல்கி"யின் "பொன்னியின் செல்வன்"
(ரொம்ப அற்புதமான கதை...படிக்கும் போதே..நாமலும் அந்த காலத்திலே பிறந்திக்கலாம் என ஏங்க வைக்கும்..
ப்ளே ஸ்டோரில் போய் செக் பன்னி படித்து பாருங்கள்) என்ற கதையை படித்து கொண்டிருந்தவளுக்கு அக்ஸரிடம் இருந்து ஃபோன் வருது..

என்ன...இவன்..இந்த நேரத்திலே ஃபோன் பன்றானே என நினைத்தவள் கட் பன்னாமல் சைலென்ட் மோடில் போட்டு விட்டு மறுபடியும் கதை வாசிக்க ஆரம்பிக்க...அக்ஸரிடம் இருந்து அழைப்பு வந்தது...விடாமல் அவனிடம் இருந்து அழைப்பு வர...வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்தாள்...
.
.
வாட்ஸ் ஆப் இல்:

அக்ஸர்: என்ன பிஸியா??

அபி: ஹ்ம்ம் ஆமா....பிஸினு தெரியிதுலே..அப்புறம் ஏன் கால் பன்றீங்க??

அக்ஸர்: சாரி..

அபி: எதுக்கு...உங்களுக்கு தான் சாரி கேட்க்கவே பிடிக்காதே..

அக்ஸர்: அப்படிலாம் இல்லை..

அபி: ஹ்ம்ம்..

அக்ஸர்: சாப்டியா??

அபி: எஸ்...நீங்க??

அக்ஸர்: ஹ்ம்ம்...சாப்டேன்..

அபி: ஹ்ம்ம்..

அக்ஸர்: எதுக்கு ஃபோன கட் பன்னிட்டு போனா??

அபி: அதான்... அப்பா வர்ராங்கனு சொன்னேன்லே..

அக்ஸர்: ஓ...அது தான் ரீசன்னா...
நான் கூட.. நான் கேட்டதுக்கு தான் நீ வெட்க்கப்பட்டுட்டு போனியோனு நினைச்சேன்..

அபி:அத பத்தி பேச தேவையில்லை..

அக்ஸர்: ஏன்...வெட்கம்மா...

அபி: ச்சீ...என்ன பார்த்தா எப்படி தெரியுது... மேரேஜ்க்கு முன்னாடி இதை பத்தி பேசாதீங்க...அவ்வளவு தான்..

அக்ஸர்: ஹ்ம்ம்...ஏன்??

அபி: ஏன்னா...நான் ஒன்னும் கால் கேர்ள் இல்லை...நீங்க இப்படியெல்லாம் பேச்சு குடுத்த உடனே பேசுறதுக்கு...

அக்ஸர்: ஏய்...ச்சீ...என்ன பேச்சி பேசுறே..
நீ என் பொண்டாட்டி டி... நீ எவ்வளவு நல்ல பொண்ணு...இன்னொரு தடவை அந்த வார்த்தைலாம் உன் வாய்ல இருந்து வர கூடாது...
நான் இனிமே இத பத்தி பேச மாட்டேன்...ஓகே வா...

அபி: ஹ்ம்ம்...ஓகே..

அக்ஸர்: சாரி...நீ போய் தூங்கி முழி...

அபி: ஹ்ம்ம்... டாடா...
.
.
ஹப்பா...இப்ப தான் ரிலேக்ஷ இருக்குது... இனி இப்படியெல்லாம் பேசமாட்டான்... ஹேப்பி என நினைத்த படி தூங்கினாள்...

வழக்கம் போல இருவரும் பேசிக்கொண்டே இருக்க கைப்பேசியிலே நேரம் போனது..
.
.
கடை விஷயத்தை பற்றி அக்ஸர் அபியிடம் கூறி... நீ என்ன சொல்லுறே அபி... நாம வேற ஃபோன்ல பேச ஆரம்பிச்சிட்டோம்... நாம்ம சீக்கிரம் மேரஜ் பன்னிக்கிட்டா தான் நல்லது... இதுக்கப்புறம் வருஷம் கணக்குல வெய்ட் பன்ன வேண்டாம் என கூற... ஹ்ம்ம்... நல்லா கடையா இருந்தா எடுத்துறுவோம் என அபி கூறினாள்...
..

அக்ஸர் ஒவ்வொன்றையும் அபியிடம் கேட்டே செய்தான்... தனக்கு ஆர்டர் போடுறதே பிடிக்காது எனக் கூறியவன்..
அபி சொல்வதை கேட்டும்... அபி எதுவும் சொல்லவில்லை என்றாலும் நீ சொல்லு பொண்டாட்டி.. நான் செய்ரேன் என கூறினான்..

இப்படியே இவர்களின் நேரம் சந்தோஷமாக சென்றது..
.
.
ஒரு நாள் அமுதா கால் செய்து...ஏன் அக்ஸர் வீட்டுக்கு வந்ததை எங்களிடம் மறைத்தீர்கள் என கேட்கவும் ராம்க்கு கோவம் வந்தது...

இதில் மறைக்க என்ன இருக்கிறது என நினைத்தவர் சமாதானமாக பேசி ஃபோனை வைத்து விட்டார்..

ச்சே...எப்படி பேசுறாங்கனு பாரு..
இப்படிலாம் பேசுனா எனக்கு பிடிக்காது..
அக்ஸர் தானே வீட்டிலே சொல்லாதீங்கனு சொன்னான்...

அவன் நல்ல பையனுன்னு தான் வாய மூடிட்டு இருக்கேன்...மாப்பிள்ளை வீடுனு ரொம்ப ஓவரா பன்னிட்டு இருக்காங்க என சீதாவிடம் ராம் பொறிந்து தள்ள...இதை அபி கேட்டு விட்டாள்...
.

நம்ம மேரேஜ் நல்ல படியா நடக்கும்லே என அபி கேட்க இதுல என்ன சந்தேகம்... ஏன் திடீர்னு இப்படி கேக்குறே... யாரு என்ன சொன்னாங்க என அக்ஸர் கேட்கவும்... ஒன்னும் இல்லை...நம்ம ஃபேமிலில ப்ராப்ளம் வரக்கூடாது என அபி கூற... ஏதோ நடந்திக்குது.. என்னனு சொல்லு என அக்ஸர் கேட்கவும்... நான் உங்க கிட்ட சொல்றது சரி வராது எனவும்.. நீ ஃபோன வை... நான் எங்க வீட்டுல பேசிட்டு உனக்கு கால் பன்றேன் என கூறியவன் அவளின் பதிலை கூட கேட்காமல் கட் பன்னியவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கால் செய்தான்...

ஏய் லூஸு அவங்க நார்மலா பேசுறாங்க... நீ நினைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்லை..
நீ தான் என் பொண்டாட்டி... அத யார் சொன்னாலும் நான் மாத்திக்க மாட்டேன்.. அவ்வளவு தான்... எனக்கு இப்ப வேலை இருக்கு...நீ உடம்ப பார்த்துக்கோ என கூறி ஃபோனை கட் செய்தான்..

அக்ஸரின் பேச்சு அவளுக்கு சந்தோஷத்தை தர மனம் இலேசாக இருந்தது...
.
.
சீதா.... என் ஃப்ரெண்டு மக ஒரு பையன லவ் பன்னுதாம்... அவன தான் முடிப்பேனு நிக்கிதாம்...

அவன் வந்து பொலம்புறான்..இப்படி சொல்றாலே...வளர்க்க தெரியாமா வளர்த்துட்டேன்...உன் பொண்ணு குனிஞ்ச தலைக் கூட நிமிர மாட்டா...நீ ரொம்ப குடுத்து வைச்சவன்டானு சொல்றான் என ராம் கூறவும் என் வளர்ப்புலே என சீதா மகிழ்ந்தார்..

அபியின் தலையை வருடிய ராம்... என்ன அப்பானு சொல்றதுல உனக்கு பெருமை இல்லை மா...உன்னை என் பிள்ளைனு சொல்ல நான் ரொம்ப பெருமை படுறேன் மா என கூறவும்... அபிக்கு தான் செய்த தவறு கண் முன்னால் வந்து நிற்க... ராமின் மடியில் தலை சாய்ந்து படுத்தாள்...

இதுக்கு மேலே வீட்டில மறைக்க கூடாது...சீக்கிரம் இதை சொல்லனும்...நாளைக்கு அக்ஸர் கிட்ட சொல்லிட்டு அம்மா கிட்ட கண்டிப்பா சொல்லிடனும் என முடிவெடித்து தூங்கினாள்...
.
காலையில் எழுந்ததிலிருந்தே அக்ஸர் க்கு குறுஞ்செய்தி அனுப்பியும் கால் செய்தும் அவனிடம் இருந்து பதில் வரவே இல்லை...

டிவியை பார்த்த படி அக்ஸர்க்காக காத்து கொண்டிருக்க...அக்ஸரிடம் இருந்து கால் வந்தது...

(யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பெயர் என்ன முயல் குட்டி

தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பர பரப்பான போக்குவரத்தில்
பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி..
என பாடல் வர)

அக்ஸர்: சொல்லுங்க பூனை குட்டி...அப்படி என்ன அவசரம்...

அபி: ஹ்ம்ம்...நாம்ம பேசுரத வீட்டில சொல்ல போறேன்...நான் ஃபோனை அம்மா கிட்ட குடுக்குறேன்...பேசுங்க..

அக்ஸர்: அடியேய்...லூஸு பொண்டாட்டி...நான் எப்படி டி பேசுவேன்..
உங்க பொண்ணு கிட்ட பேச பெர்மிஷன் தாங்கனு கேக்க சொல்றியோ...
இதெல்லாம் சொல்ல தேவையில்லை..
அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க..

அபி: ஹான்...அது எப்படி...நான் இதுக்கு மேலே மறைக்க முடியாது...

அக்ஸர்: ஹு...வெய்ட்...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...நான் முடிச்சிட்டு உனக்கு ஃபோன் பன்றேன்..
.
அது வரை அபிக்கு பொறுமை இல்லை...மாம்...நான் உங்க கிட்ட ஒன்னு பேசனும் என தயங்கிய படி சீதாவிடம் கூறவும்...ஹ்ம்ம்..சொல்லு அபி...எதுக்கு இப்படி யோசிக்கிறே என சீதா கேட்க..

அபிக்கு சீதாவிடம் சொல்ல முன்னாடியே அழுகை வந்தது...

என்ன அபி... எதுக்கு இப்ப அழுகுறே... ஏதோ அக்ஸர் கிட்ட பேசிட்டு அதை எங்க கிட்ட மறைச்ச மாதிரி அழுகுறே என கேட்கவும்...  ஆமா மா... நான் பேசிட்டேன் மா.. என்னை மன்னிச்சிடுங்க மா... நீங்க என் மேல வச்சிருந்த நம்பிக்கையெல்லாம் வீணா போச்சி மா என அழுதபடி கூறியவளை சமாதானம் படுத்தினாள் சீதா...

இப்ப என்ன செய்ய போறே அபி என சீதா கேட்கவும்...என்ன மாம் செய்யனும் என அபி கேட்க...இதுக்கு அப்புறம் பேசாதே... கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என சீதா கூற... சிறிது தயங்கியவள் சம்மதமாக தலையசைத்தாள்...

சீதாவிடம் பேசுனதை சுருக்கமாக அக்ஸர்க்கு குறுஞ்செய்தி அனுப்பியவள்...இனி உங்களிடம் பேச மாட்டேன் என கூறினாள்...
.
.
ஏன் அபி...ரொம்ப டல்லா இருக்கிறா என ராம் கேட்கவும்... சீதா நடந்ததை கூறினார்...

மனதில் ஏதோ ஒரு கலக்கம் இருந்தாலும் அபியை சமாதானம் செய்தார் ராம்...
.
.
....
அன்றைய நாளே அபிக்கு ஏனோ என்றிருக்க அக்ஸரிடமிருந்து அபிக்கு கால் வந்தது...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro