Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

14

என்ன மா...என்ன ஆச்சி??
ஏன் டென்ஷனா இருக்கீங்க??
என அபி கேட்க...

ஹ்ம்ம்... அபி கேக்குறா..
நீங்களே சொல்லுங்க என கூறி அபியிடம் அமூதா ஃபோனை குடுத்தாள்...
.
.
காலி(call)ல்:

அபி: சொல்லுங்க ப்பா??

அப்பா: ஒன்னும் இல்லை மா....அக்ஸர்க்கு ஃபோன் பன்னிட்டே இருக்கோம்...எடுக்க மாட்டிக்றாங்க..

அபி: இதுக்கா வாப்பா...டென்ஷனா இருக்கீங்க??
ஏதாச்சிம் வேலையா இருப்பாங்க..

அப்பா: என்ன வேலையா இருந்தா என்ன மா...நைட்ல இருந்து அவங்க வீட்லயும் கால் பன்றாங்க...நானும் கால் பன்றேன்...ரிங் போய்ட்டே இருக்கு...
சம்மந்தி கிட்ட கேட்டா அவன் எப்பையுமே இப்படி தான்...
கால் பன்னுனா எடுக்கவே மாட்டான்...ஃபோன் பேசுறதே அவனுக்கு பிடிக்காதுனு சொல்றாங்க..
அப்புறம் எதுக்கு ஃபோன் யூஸ் பன்னனும்..

அபி: ஏன் ப்பா...எதுவும் ப்ராப்ளமா??
நைட்ல இருந்து ஃபோன் பன்றதா சொல்லிட்டு இருக்கீங்க??
எதுக்கு ப்பா??

அப்பா: அது வந்து மா...அக்ஸர் தங்கசிக்கு  தலைவலியா இருக்குலே மா... இன்னைக்கு நைட் அந்த பொண்ணுக்கு  ரொம்ப முடியாமா போச்சாம்... சுயநினைவையே மறந்த மாதிரி இருக்காம்

அபி: அச்சோ... அப்பா... என்ன சொல்றீங்க... ப்ரியாக்கு தான் சரியாச்சே...

அப்பா: இல்லை மா... ப்ரியாக்கு மொத்த பத்து லட்சம்க்கு ஆப்பரேஷன் பன்னனுமாம்... உயிர காப்பாத்துறதுக்காக மூனு லட்சம் கட்டி காப்பாதிட்டாங்க...அதுவே கடன்க்கு வாங்கி குடுத்து...இப்ப தான் அடைச்சிக்கிராங்க...
ஏழு லட்சம்க்கு எங்கே போவாங்க..
பிரைவேட் ஹாஸ்பிடல் கூட சேர்க்க முடியாம கவர்ன்மன்ட் ஹாஸ்பிடல்ல வச்சிக்கிறாங்க..

அபி: ஹ்ம்ம்...இப்ப என்ன செய்வாங்க??

அப்பா: ஹ்ம்ம்... இப்படி ஏற்கனவே வந்திருக்காம்... ட்ரீட்மென்ட் பன்னுவாங்களாம்... அப்புறம் சரி ஆகிடுமாம்...
மொத்தமா பார்க்காமா... செத்து செத்து பிழைக்கிறா மா..

அபி: பாவம் ப்பா... கடவுள் தான் காப்பத்தனும்..

அப்பா: ஹ்ம்ம்...ஆமா மா... ப்ரியா க்கு இப்படி ஆனது கூட அக்ஸர்க்கு தெரியாது...அதுக்கு தான் கால் பன்னிட்டு இருக்கேன்..
அவங்க அம்மாவும்  பயந்து போய் இருக்காங்க..

அபி: ஹ்ம்ம்... சரி ப்பா... நான் மாம் கிட்ட குடுக்குறேன்..
.
.
அபிக்கு ஒரு மாதிரியா இருக்கு...
(நிச்சயம் ஆனதுல இருந்து இதே ப்ரச்சனை தான்..

ஃபோன் போட்டா அக்ஸர் எடுக்கவே மாட்டான்...

ராம்க்கு ஃபோன் போட்டு எடுக்கலேனா ரொம்ப கோவம் வரும்.. எத்தனையோ தடவை ராம், சீதா னு எல்லோரும் சொல்லிருக்காங்க..

ஆனாலும், அக்ஸர் கால் பன்னுனா எடுக்க மாட்டான்...

சரி, மிஸ்டு கால் வந்திக்குதே திரும்ப கால் பன்னி விசாரிப்போமே...எதுவும் இல்லை..

அக்ஸர் கிட்ட இருக்கிற ஒரே கெட்ட பழக்கம் இது தான் சொல்லுவாங்க எல்லோரும்)...
.
.
ராம் கிட்ட இருந்து ஃபோன் வருது... ப்ரியா உடல் நிலை ரொம்ப மோசமா இருக்குனு..

அபி போய் பூஜை அறைல அமர்ந்து கடவுள்கிட்ட வேண்டிக்குறா...ரொம்ப அழுகையா வருது... என்னதான் இருந்தாலும் ப்ரியா அபி கிட்ட தினமும் பேசுவா...
அபிக்கு ஏதாச்சிம் பிடிக்கும்னு தெரிஞ்சா எப்படியாச்சிம் வாங்கிட்டு வந்துருவா..

இப்படிப்பட்ட ஒரு நாத்தனார் கிடைக்க குடுத்து வச்சிருக்கனும்னு எல்லோரும் சொன்னா...ஹான்...நீங்க ஏன் அப்படி சொல்றீங்க...இப்படி ஒரு அண்ணி கிடைக்க நாங்க தான் குடுத்து வைக்கனும்னு ப்ரியா சொல்லுவா..

இதைலாம் நினைச்சி அபி அழுகுறா..

வீட்டில எல்லோரும் அபிஞஞ சமாதானம் படுத்துறாங்க..

அமுதா குடும்பத்தை... சொந்தக்காரங்களே கஷ்ட படுறவனு ஒதுக்கி வச்சிக்கிறாங்கனு... அபி வீட்டில இருந்து தான் சாப்பாடுலாம் செய்ஞ்சி குடுத்து விடுறாங்க...
(அபி அத்தை வீடு அமுதா இருக்குற ஊர்... அதாவது திருநெல்வேலில இருக்கு... அங்க இருந்து தான் ஹாஸ்பிடல்க்கு சாப்பாடு போகுது)..
.
.
.
இப்ப ப்ரியா உடம்புக்கு பரவாயில்லைனு தகவல் வரவும் எல்லோரும் நிம்மதியா இருக்காங்க...

இரவு அபி வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்ய...அக்ஸரிடம் இருந்து மெஸேஜ் வந்தது...
.
.
வாட்ஸ் ஆப் இல்:

அக்ஸர்: ஹாய்..

அபி: ஹாய்..

அக்ஸர்: என்ன பன்றா??

அபி: உங்க மேல கோவமா இருக்கேன்😈😈

அக்ஸர்: ஹாஹா...அப்டியா...செம்ம...
எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா??

அபி: ஹ்ம்ம்... ப்ரியா க்கு உடம்பு முடியலேனு...உங்களுக்கு எல்லோரும் எத்தனை ஃபோன் பன்றாங்க...
நீங்க ஏன் எடுக்கலை..

அக்ஸர்: ஹ்ம்ம்...அதுலாம் பேசிட்டேன் மா..
அவளுக்கு எப்பையும் வர்ரது தான்...
உடம்ப பார்த்துக்காம இழுத்து போட்டு வேலைய செய்வா... அப்புறம் ஹாஸ்பிடல்ல போய் படுத்துப்பா...

அபி: ஹ்ம்ம்...நீங்க ஏன் ஃபோன எடுக்கவே மாட்டிக்றீங்க..

அக்ஸர்: நீ பன்னுனா நான் எடுத்துருப்பேன்...
நீ பன்றியா??

அபி: ஹ்ம்ம்...மாட்டேன்...

அக்ஸர்: ஹ்ம்ம்...நான் பன்றேன்...அட்டென்ட் பன்னு..

அபி: மாட்டேன்...

அக்ஸர்: உன் வாய்ஸ கேக்கனும் போல இருக்கு...

அபி: போங்க மா...எனக்கு ஒரு மாதிரியா இருக்கு??

அக்ஸர்: ஹாஹா...எந்த மாதிரி...

அபி: ஈஈஈ...ஒன்னும் இல்லை...

அக்ஸர்: எத்தனை நாளா கெஞ்சிறேன்...கொஞ்சம் இறக்கம் காட்டேன்..

அபி: ஒரு நாள் கண்டிப்பா பேசுறேன்...

அக்ஸர்: எப்ப கல்யாணத்துக்கு அப்புறமா??

அபி: ஹ்ம்ம்...நல்லா ஐடியா கல்யாணம் அப்ப பேசுறேன்..

அக்ஸர்: ஹாஹா...கல்யாணத்துக்கு அப்புறம் பேச விட மாட்டேன்..

அபி: வொய்??

அக்ஸர்: நான் பிஸியா இருப்பேன்..

அபி: ஏன்??

அக்ஸர்: ஹாஹா...க்ஷட்யூப் லைட்...க்ஷநான் ரொம்ப கெட்ட பையன்... என் வாய கிளறாதே.... தூங்க போறேன்...

அபி: (கொஞ்சம் யோசிக்கிறா... அப்புறம் புரியுது...சிரிச்சிட்டு எதையும் கேட்கலே)
டாடா..

( இரண்டு பேருமே தங்களை மறந்து சிரிச்சிக்றாங்க)...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro