Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤️HBD WRITER PAPPU❤️

»»» DISCLAIMER««« (To Readers)

»»»இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் (adviser_98மற்றும் என்னுடைய) கற்பனையே... யாரையும் குறிப்பிடுவது அல்ல... எங்களின் எழுதி முடிந்த மற்றும் எழுத போகின்ற கதைகளில் வரும் அனைத்து கதாபாத்திரங்களில் சங்கமம் இது.. மேலும், இந்த பதிவிற்கும் உண்மையான கதைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இது எந்த விதத்திலும் ஒரு 'கதை திருட்டு' அல்ல«««

★★★★★★★★★★★

»»» முன்பே பதிப்பிக்க படைப்பு தான்... சிறு மாறுதல்களுடன்.. பல திருப்பங்கள் சாகசங்களை அழைத்து கொண்டு புது பொலிவுடன் மீண்டும் பாப்புவுக்காக.. adviser_98 «««

சாயல் அரசாங்கம்...

நட்ட நடு ஜாமம்..... நள்ளிரவு பண்ணிரண்டு மணியை நெருங்கி கொண்டிருந்தது.... தனது அறையில் இன்னுமும் தூங்காமல் ஒரு காரணமாய் விழித்துக்கொண்டே தன் நெஞ்சில் சாய்ந்து நித்திரையில் மூழ்கிப்போய் இருந்தவளுக்கு தட்டி கொடுத்தது கொண்டிருந்தான் ஷேனா... இந்த இரவு மற்றும் நாளைய விடியலின் நினைவுகள், என்னதான் அவனை வாட்டி வதக்கினாலும் இப்பொழுது அவனின் வலியை நீக்க அவனுக்கு இருக்கும் ஒரே சந்தோஷத்தை கொடுத்ததும் இதே நாள் தான்...

தன் மகிழ்ச்சியை கெடுத்ததும் இந்நாள் தான் கொடுத்ததும் இந்நாள் தான்... அந்த நிகழ்வு நடந்த அன்றைய நாளின் நினைவுகளில் ஊடுருவி உணர்வற்ற அவனின் முகம் உறைந்துபோய் இருந்தாலும் அவன் கரம் மட்டும் அவளுக்கு தட்டி கொடுப்பதை நிறுத்தவில்லை.... அவளின் உறக்கம் கலையாதவாரு மெல்லமாக தட்டி கொடுத்து கொண்டிருந்தான் அவன்....

அதே நேரம் தர்ம ராஜ்யத்தில், ஊரின் மத்தியில், வைரமாளிகை மற்றும் ரத்ன மாளிகைக்ககே டஃப் கொடுக்கும் விதத்தில் அற்புதமாக வடிவமைக்க பட்டிருந்த அந்த மாளிகை போன்ற அழகிய பிரம்மாண்ட மூன்று மாடி வீட்டில், தோரணங்கள் அழகாய் அலங்கரிக்க பட்டிருக்க... நட்ட நடு கூடத்தில் போடப்பட்டிருந்த டேபிளின் முன் வான்மதி நின்றிருக்க..... இது கேக்கா இல்ல கௌத்தி போட்ட பெரிய சைஸ் குச்சி மிட்டாயா என சந்தேகிக்கும் அளவிற்க்கு ஒரு அருமையான லாலிபாப் வடிவ கேக் தயாரித்து முடித்து அடுத்ததாக ஒரு பார்பி டால் போன்ற கேக்கை தயாரித்து கொண்டிருந்தாள் அவள்....

அந்த இரு கேக்கிற்கும் நேரெதிரே ஒரு வெள்ளை நிற கள்ள பூனை...... அந்த பூனையிடம் இருந்து கேக்கை காக்க அதன் இரு புரங்களிலும் இரு காவலர்கள்... சரியாக கூறவேண்டுமானால் மூன்று குட்டி குட்டி வாண்டுகள் அதே டேபிலில் காலை நீட்டி வாகாய் அமர்ந்திருந்தார்கள்...

எப்படியாவது அந்த கேக்கை வெட்டுவதற்கு முன்பாகவே அபேஸ் செய்துவிட வேண்டும் என்பது போலவே கள்ள பார்வையில் அதை சைட் அடித்து கொண்டிருந்தான் அந்த வெள்ளை பூனை, ரக்ஷவ் தாரிகாவின் முதல் பிள்ளை... ஒன்றரை வயது சேட்டை மன்னன் ரிஷிகேஷ்....
நைசாக தன் கையை அந்த கேக்கை நோக்கி செலுத்தியவனின் கரத்தை ஒரே போல் இரு புறமும் இருந்து இரு கரங்கள் சிறை வைக்க... அம்மூவரும் செய்வதை கண்டு சிரித்து கொண்டே பார்பி டாலை (கேக்கை) தயாரிக்க துவங்கினாள் வானு.

தன் கரம், அக்கா மற்றும் அண்ணனிடம் மாட்டிகொண்டதை பார்த்து...., "ம்ம்ம்ம்.... மம் மம் மம்.... மம்மா... ..... ..... .... ஆ.. ஆ... ஆ... அம்.. ஈஈஈ...", என மற்றொரு கரத்தை குச்சிமிட்டாய் கேக்கை நோக்கி காட்டியபடி எதையோ கூற முயற்சிக்க..., அவனின் மழலை மொழியை புரிந்து கொண்டதை போல் மற்ற இரு மழலைகள், "வேனா தம்பி... அப்றமா அம்மா இத வெட்டுவும் நாம சாப்புலாம்... இப்போ தொட கூடா...", என அந்த குட்டி தேவதை கூற..., "ஆமா ஆமா... நா மேஜி (மேஜிக்) வச்சு போய் அம்மாவ கூட்டு வரே... சீக்கொம் வெட்டிலாம்.... ", என்று வேகவேகமாக இன்னொரு பக்கம் இருந்த குட்டி ராஜா எழ..., "ம்ம்... சீக்கொம் போய் அம்மாவ கூட்டு வா...", என அவனின் இரட்டை சகோதரி அவனுக்கு அனுமதி கொடுத்ததும்.. அவன், தன் அம்மாவிடம் இருந்து கற்று வைத்திருந்த அந்த ஒரே ஒரு மந்திரத்தை உபயோகிக்க தயாராகி நின்றான்.

அதை கண்டு பதறிய வான்மதி, "டேய் டேய் இலா.... நில்லுடா... இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு... உங்க அம்மாவ சரியான நேரத்துக்கு கூட்டிடு வர ஆள அனுப்பியாச்சு டா செல்லம்..... என் செல்லகுட்டில.... அமைதியா ஒக்காருங்க....", என அவனை பிடித்து கீழே அமர வைக்க...., "அனுப்பியாச்சா.... ஆரு(யாரு) போய்க்கா(போய்ருக்கா)...", என அழகாக முகத்தை சுருக்கி கேட்டான் அவன்.

"வேர யாரு.... உங்க யாளி மாமாஸ் தா....", என வானு கூறிய அடுத்த நொடியே, "ஐஐஐஐஐயா.... யாளி மாமா .... யாளி மாமா வாதாங்க(வாராங்க...).... யே யே யே....", என அந்த டேபிலிலேயே குதிக்க தொடங்கினார்கள் அந்த இரண்டரை வயது இரட்டை மழலைகள் ... மாறன் மற்றும் தீராவின் இரண்டு குழந்தை பருவ ஜெராக்ஸ் காப்பி போன்ற அவர்களின் இரட்டை பிள்ளைகள் இலாஷ் இனியன் மற்றும் இனிமை இனியாழினி.

இதுதான் சரியான வாய்ப்பு என நம் ரிஷி குட்டி அந்த கேக்கை கைப்பற்ற நினைத்து கேக்கை நோக்கி நகர.... அதே சமயம் மொட்டை மாடியில் இருந்து வேகவேகமாக கீழிறங்கி வந்த அவனின் மூத்த சகோதரர்கள் இருவரும், "எல்லாரும் வந்தாச்சு.... எல்லாரும் வந்தாச்சு..... ", என திடீரென எங்கோ இருந்து வந்து கத்திய கத்தில் கேக்கை மறந்த ரிஷி பயந்து அழ தொடங்கி விட்டான்...

"ஐயையோ.... ரிஷி குட்டி.... ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல... ஒன்னும் இல்ல.... சரி டா.... அண்ணன் தானே.... ஏன்டா ராஜா தம்பிய அழ விடுர...", என ரிஷியை கையில் தூக்கி கொண்டு சமாதானம் செய்த வானு, பின் கத்தி அவனை பயம்புறுத்திய இரண்டு அருந்த வாலையும் முறைக்க..., "நீ தானே சித்தி வராலான்னு பாக்க சொன்ன......", என பதிலுக்கு அவளை முறைத்தார்கள் அவர்கள்.... அபி ராவியின் ஆறு வயது மகன் வித்யூக்ராஜா மற்றும் சாஹித் சங்கவியின் ஐந்து வயது மகன் ஜெகதீஷன்.

அதை பார்த்தவுடன் வானு சற்று அமைதியாகவே " சரி சரி.... மொரைக்காதீங்க டா ..... போங்க... போய் பெரிம்மா சித்தி அத்த மாமா.... முக்கியமா தாத்தா பாட்டிஸ்.. அப்ரம் மத்த எல்லாரையும் கூட்டிட்டு வாங்க.. நேரமாச்சு.... எல்லாமே தூங்கு மூஞ்சி... என்ன மட்டும் தனியா விட்டுட்டு எல்லாம் நல்லா கொராட்ட விட்டு தூங்குது.... ", என வானு வாய்விட்டு புலம்புவது, மேலே அலங்கார வேலையில் இருந்த அனைவருக்குமே தெளிவாக கேட்டுவிட...., "ஏம்மா வானு.... இப்படி பத்து ஏக்கர் அளவுக்கு வீடு கட்டி குடுண்ணு கேட்டதால உனக்கு கட்டி குடுத்தா... அத, பர்த் டே... வெட்டிங் டேன்னு அலங்காரம் பண்ண சொல்லி மாசத்துக்கு ரெண்டு தடவையாவது எங்கள பெண்டெடுத்துற்ற.... அப்போலாம் ஒவ்வொரு தடவையும் நீ இதே டயலாக் தா சொல்லுற... போமா....", என மூன்றாவது மாடியில் நின்ற ரவி அழுத்து கொள்ள... அவனருகில் இருந்த சாஹித் அவனுக்கு ஜால்ரா போட... இரண்டாவது மாடியில் இருந்த மாறன் மற்றும் அபியும் மேலிருப்பவர்கள் கூற்றுக்கு ஒத்து ஓத..., கிச்சனில் ஸ்வீட் செய்து கொண்டிருந்த மற்றவர்களும் கீழ் தள அறையில் பார்ட்டிக்கு தேவையான பொருட்களை சரி பார்த்து கொண்டிருந்த மற்றவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டு வானுவை அரைத்தெடுக்க....., "அவ்வளவு சத்தமாவா பேசுனோம்... இப்டி குடும்பமே கொதிச்சு கெலம்பீருச்சு....", என ஒருநொடி அமைதியானவள், "சரி சரி விடுங்க அண்ணாஸ் அன்ட் அண்ணீஸ்..... நைட் ட்யூட்டில இந்த மாறி புலம்பல்கள் சகஜமப்பா.... ", என வான்மதி நடுஹாலில் இருந்து கத்தியதற்கு குட்டி வாண்டுகள் வாயை மூடி சிரிக்க.., "ஹ்ம்ம்... சிரிக்காதீங்க டா குட்டி பிசாசுகளா...", என ரிஷியை தவிர்த்து மற்ற நால்வரையும் செல்லமாக முறைத்து பார்த்தாள்.

"ஓகே.... ஜெகா!!.. ராஜா!!.. டைம் ஆக போகுது... போய் உங்க புவி குட்டிய தூக்கிட்டு வாங்க... மத்த ரெண்டு பேரும் தானா வருவாங்க.....", என மொட்டை மாடியில் இருந்து தகவல் கொண்டு வந்த இரண்டு குட்டி வானரங்களை மீண்டும் மாடிக்கே துரத்தி விட..., "ஹை.. புவி பாப்பாவ நா தா தூக்குவென்... நா தா தூக்குவேன்...", என போட்டி போட்டு படியில் ஏறி மேலே ஓடினார்கள் இருவரும்.

இரண்டாவது தளத்தில் முதல் அறைக்குள், சோர்வாக இருந்ததால் இப்பொழுதே தன் கணவன் மீது சாய்ந்து மெல்லமாக கண்ணயர்ந்த ரக்ஷா, வானுவின் வார்த்தையால் பட்டென கண்ணை விழித்து கொள்ள.... தாளிடபட்டிருந்த அறையினுள் இருந்து கொண்டே ரக்ஷா, "அடியே வானு... நா உனக்கு என்ன டி பாவம் பன்னுனே... இப்போ தா என் புள்ள தூங்கிருக்கா... இவனுங்க வந்தா தூங்க விட மாட்டாங்க டி....", என அவள் பதரும்போதே குட்டி வாண்டுகளின் காலடியோசை கதவருகில் கேட்க...., "ஹாஹாஹா... நீ பயபுடாத ஹனி... இவனுங்கள நா பத்துக்குறேன்.... நீ பாப்புகுட்டிய தூக்கிட்டு மெல்லமா கீழ வா...", என அவளின் சிகையை கோதிவிட்ட அர்ஜூன் கதவை திறந்து கொண்டு தன் இரு மருமகன்களையும் அலேக்காக இரு தோளிலும் தூக்கிவைத்து கொண்டு விறுவிறுவென கீழிறங்கிவிட்டான்....

"ஹான்ன்ன்... மாமா.... நாங்க புவி பாப்பாவ பாக்கணும்... எங்கள விடுங்க....", என அவன் பிடியில் இருந்து இருவரும் திமிர..., அவர்களை கண்டு அழகாய் சிரித்தவன், "டேய்ய்ய்... வாங்காடா கீழ...... நாம ரிஷி இலா, இனிகுட்டி கூட விளையாடுவோம்...", என திமிரும் தன் மருமகன்களை அலேக்காக தூக்கி கொண்டு கீழிருப்பவர்களுடன் சேர்த்துவிட்டான் kv மாஸ் ஹீரோ அர்ஜுன்.

தன் இரு குட்டி மாமாக்களிடமும் முகத்தை காட்டாமல் தப்பித்து விட்டோம் என்பது போல் கண்ணை மூடி உறக்கத்தில் இருந்த பொழுதும் அழகாக சிரித்தாள் அவள்... இரண்டு வாரம் முன்பே பிறந்திருந்த அர்ஜுன் ரக்ஷாவின் முதல் மகள் பூவிழியாள்.
மகளை கண்டு புன்னகைத்து கொண்டிருந்த ரக்ஷா கீழே கேட்ட தீராவின் அரவத்தில் முகத்தில் புன்னகை அரும்ப... புவியை தூக்கம் கலையாதவாரு கையில் தாங்கி கொண்டு மெல்ல கீழிறங்கும் போதே அவளோடு வந்து இணைந்து கொண்டான் அர்ஜுன்.

அங்கே ஹாலில் நட்ட நடுவே ஒரு கட்டில் புதிதாக முளைத்திருக்க.. அதில் இவ்வளவு நேரமும் தூங்குவது போல பாவ்லா செய்து கொண்டிருந்த தீரா... மணி சரியாக பண்ணிரெண்டை தொட்ட அடுத்த நொடி, "அட சீக்கிரம் எழுப்பி விஷ் பண்ணுங்க பா... நானும் எவ்வளவு நேரம் தா என் பப்பிமா வச்சிருக்குர சர்பிரைஸ பாக்காம இருக்குறதாம்...", என கத்திக்கொண்டே பட்டென எழுந்து அமர்ந்து கொள்ள... பிறந்தநாள் வாழ்த்து கூறி, கோரசாக கத்தியே அவளை எழுப்ப தயாராக இருந்து மொத்த குடும்பமும் அவள் ஒருத்தியின் கத்தலில் என்ன செய்ய என்று புரியாமல் வாயடைத்து போய் நின்றது.

*****பூமியில் சங்கரியின் வீட்டில் உறக்கத்தில் இருந்த தீராவிற்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த வானு யாளிகளை அனுப்பி அவளை கட்டிலோடு மறுமை பூமிக்கு கடத்தி வர கூறியிருந்தாள்...

அதன்படி கோவான்களுடன் சென்றிருந்த சிம்ம யாளிகள், அவளுக்கு தூக்கம் கலைய கூடாதென அவளை கட்டிலோடு தூக்கி வந்திருக்க... அவளோ ஆரம்பத்தில் இருந்தே தூங்காமல் கண்ணை மட்டுமே மூடி கொண்டு இருந்திருக்கிறாள்...****

திடீரென அவளாகவே எழுந்து கொள்ளவும் அனைவருமே செய்வதறியாது திகைத்து போய் நிற்க... எவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து கூட வாயில் இருந்து வெளிவரவில்லை...
அனைவருமே உறைந்து போய் நின்ற நேரத்தில் அவளுக்கு முதல் வாழ்த்து கூறியது அவளின் குட்டி செல்லங்கள் தான்...

"ஆப்பி பத்துடே ம்மாஆஆஆஆஆஆ.....", என அவள் இருந்த கட்டிலில் ஏறிய இலாஷ் மற்றும் இனிமை அம்மாவின் காதருகில் கத்தி ஆளுக்கு ஒரு கன்னத்தை பிடித்து கொண்டு முத்தமிட.... உடன் வேகவேகமாக ஓடிவந்த ராஜா மற்றும் ஜெகன், "சித்திஇஇஇஇஇஇஇ..... ஹாப்பி பொறந்த டேஏஏஏஏஏஏஏஏ...", என அவளை கட்டியணைத்து கத்த... தன் செல்லங்களை வாரியனைத்த தீரா, "தாங்க் யூ மை செல்ல குட்டீஸ்..... நீங்க மட்டும் தா எனக்கு விஷ் பண்ணிருக்கீங்க... உங்க அப்பா கூட இன்னும் விஷ் பண்ணவே இல்ல.....", என முதலில் நால்வரிடமும் கூறியவள் அங்கே இன்னும் ஷாக்கில் நின்றிருந்த மாறனை நோக்கி ஓரக்கண்ணால் முறைக்க... அதன் பின்னர் தான் அனைவரும் ஒரு சமநிலைக்கு வந்தார்கள்...
"அடியே பாப்பு... நாங்க உனக்கு சர்பிரைஸ் குடுக்கலம்னு பாத்தா நீ எங்களுக்கு குடுக்குற....", என கயல் அவளை பார்க்க... அதற்கோ அவள் பல்லை காட்டி வைத்தாள்....

மெல்ல தன்னவளிடம் வந்த மாறன் அவள் நெற்றியின் ஓரத்தில் முத்தமிட்டு, "ஹாப்பி பர்த்டே பூஜ்ஜி..... ம்ச் .... இந்த தடவ ஃபர்ஸ்ட் விஷ்ஷ என புள்ளைங்க குடுத்துட்டாங்க ", என முகத்தை பாவமாக வைத்துகொள்ள....
"டேய் டேய் டேய்.... ஓவரா நடிக்காத டா... நீ என்ன தா ட்ரை பன்னுனாளும் நா இப்போ கோவம் தா... போ", என முறுக்கி கொண்டு எழுந்தவள், அப்போதில் இருந்து ம்மா ம்மா ம்மா... என வானுவிடம் இருந்து கொண்டு ஒரு கையை தன்னை நோக்கியும் மறு கையை கேக்கை நோக்கியும் நீட்டி கொண்டிருந்த ரிஷியை தூக்கிகொண்டு கேக்கிடம் சென்றாள் தீரா... அந்த பஞ்சு மிட்டாய் நிறத்தில் இருந்த லாலிபாப் கேக் ரிஷியின் கண்ணை உருத்திகொண்டே இருந்தது பொலும்.

அவளை வாழ்த்து மலையில் மூழ்கடித்து அந்த இரவு வேலையை கொண்டாட்ட வேலையாக மாற்றியிருந்த அனைவருமே இப்பொழுது அந்த கேக் வெட்டுவதற்காக காத்திருக்க... தீராவோ வாயிலேயே நோக்கி கொண்டிந்தாள்...

அவள் காத்திருப்பு புரிந்தது போல நிரை மாத கர்ப்பிணியாக இருந்த மயூரியும் ஏழு மாத கருவை தன்னுள் சுமந்திருந்த ராகவியும்... அப்படியே காலார நடக்க துவங்கிவிட்டார்கள்.

★★★

சாயல் அரசாங்கம்....

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த நிகழ்வில் தன் எண்ணத்தை தொலைத்திருந்தவனை சட்டென நிஜ உலகிற்கு அழைத்து கொண்டுவந்தது அந்த அலாரம் ஓசை... அவ்வோசையில் அவன் கண்கள் ஆர்வமாய் தன் மீது உறங்கும் அவளை நோக்க... அவள் செவிகளில் அலாரம் ஒலி கேட்ட வேகத்தில் பட்டென இமை பிரித்தவள் பரபரப்பாக எழுந்து ஷேனாவின் வயிற்றின் மீதே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்...

அவளின் குறும்பும் மின்னும் குட்டி கண்கள் ஷேனாவை நோக்கி திரும்பிய அடுத்த நொடி, "ஹாப்பி பர்த்டே ஈஷா குட்டி.....", என அவளை அணைத்து கொண்டவன் அந்த கண்ண குழி தேவதையின் பிஞ்சு கன்னத்தில் மென்மையாக முத்தமிட... "ஹாஹா... அப்ப்பா.... நீங்க ஸ்வீட்.... நா சொன்ன மாறியே ஃபர்ஸ்டா ஹாப்பி பர்த்டே சொல்லிட்டீங்க....", என அழகாய் சிரித்தவள், தன் தந்தையை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
இவர்களின் ஆனந்தத்தில் மண்ணை அள்ளி போடுவது போலவே அந்த அறை கதவு திறந்து கொள்ள... வாயிலை நோக்கி திரும்பி இருவருக்கும் தரிசனம் கொடுத்தாள் சமாரா...

தந்தையுடன் சிரித்து கொண்டிருந்தவள் அவளை கண்டதும் சமாராவை எரிப்பது போல் முறைக்க துவங்கிட... "மஹிஷா.... ", என அசையாய் அவள் எதோ கூற வாய்திறந்த அடுத்த நொடி, "ஹ்ம்ம்... உன்ன எனக்கு புடிக்குல.... நீ போ இங்கேந்து....", என கண்ணை இருக்கமாக மூடி, ஷேனாவை பிடித்துகொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து அந்த குட்டி தேவதை கத்த... அவளை தூக்கி கொண்டு அமைதியாக எழுந்து நின்றான் ஷேனா.....

தான் கத்தியும் சமாரா அசையாமல் இருப்பதை கண்டு, "ப்பா... நா அம்மா வீத்துக்கு போறேன்.... என்ன எறக்கி விடுங்க", என கூறிவிட்டு வேகவேகமாக அவனிடம் இருந்து கீழிறங்கியவள், நேராக கட்டிலுக்கு அடியில் புகுந்து எதையோ தள்ளி கொண்டு வந்தாள்... அவள் உயரத்தில் பாதி அளவிற்கு இருந்த ஒரு கிஃப்ட் பாக்ஸ் தான் அது...
தந்தையிடம் கூறி விட்டு அந்த கிஃப்ட் பாக்ஸை தள்ளி கொண்டு சமாராவை தாண்டி அவளுக்கு பின்னிருந்த ஒருவனிடம் சென்றாள் அவள்....

ஈஷாவை தன் காலோடு அனைத்து கொண்ட அவன் ஷேனாவை நிமிர்ந்து நோக்க..., "பத்திரமா அனுப்பிவை... என்பது போல ஷேனாவும் அவனுக்கு சைகை செய்ய... அவளை ஒரு கையிலும் அந்த கிஃப்ட் பாக்ஸை மறு கையிலும் தூக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்... ஷேனாவிற்கு சகோதரன் ஸ்தானத்தில் இருப்பவன்... இருளரசனின் ஒரே ரத்தவாரிசு... விரோஷன ராணா.

தன்னை நிமிர்ந்துகூட பார்க்காமல் செல்லும் அந்த குழந்தையை உண்மையாகவோ இல்லை போலியாகவோ ஒரு ஏக்கம் கலந்த பார்வையில் பார்த்துக் கொண்டிருந்த சமாராவை காணும்போது ஷேனாவிர்க்கு துளி கூட கோபம் வரவில்லை... சமாரா என்ற பெயரை கேட்டாலே எரித்து சாம்பலாக்கி விடும் அளவிற்க்கு கோபம் கொள்பவன் இன்று எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல், செல்லும் இருவரின் தலையும் அவ்விடத்திலிருந்து மறைந்ததும், "அவ உன்ன அம்மாவா ஏத்துக்கள சமாரா... நானும் உன்ன மனைவியா ஏத்துக்க போறதில்ல... இந்த உண்மைய நீ ஏத்துக்கோ...", என்று அழுத்தமாக கூறிவிட்டு அவள் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவ்விடத்தில் இருந்து நகர்ந்து விட்டான்...

அங்கே ஈஷாவை தனியாக அழைத்து சென்றவன், ஒரு மாய வாயிலை உருவாக்கி வைத்துவிட்டு, "குட்டிமா.... இப்போ போய்ட்டு காலைல சீக்கிரமா வந்துரணும்... சரியா?. தீரா அத்த... இல்லன்னா அபி மாமா கிட்ட சொல்லி டக்குன்னு இங்க வந்துரனும்... ரொம்ப லேட் பன்னுனா அப்ரம் அப்பா தனியா இருப்பாருல... சோ சீக்கிரம் வந்துரணும்....", என மென்மையாக அவளிடம் கூறியவன் அவளை பத்திரமாக தர்ம ராஜ்யம் அனுப்பி வைத்தான்..

அங்கே... கேக்கை இன்னும் வெட்டாமல் வாயிலையே நோக்கி கொண்டிருந்த தீரா சரியாக அவளின் குட்டி தேவதை மாய வாயிலின் வழியே வரவும் தான் முழுமையாக புன்னகைத்தாள்.. ஆனால் ஈஷா குட்டியோ தீராவை முறைத்து கொண்டே அந்த கிஃப்ட் பாக்ஸை தள்ளி கொண்டு உள்ளே வர..., "ஹே பாப்பா... உனக்காக தா வெய்டிங்... வா வா.", என புன்னகையுடன் ரக்ஷவ் கூறிகொண்டே அவளை தூக்க போன நேரம்... , "போ மாமா., நீங்க தீரா அத்தயவும் பாப்பான்னு தா சொல்லுறீங்க... என்னயவும்
பாப்பான்னு தா சொல்லுறீங்க.... ஹ்ம்ம்... இனிமே அத்தய அப்டி சொல்ல கூடாது... அதுக்கு தா நா கிஃப்ட் வாங்கிட்டு வந்தேன்.... ", என கூறி அந்த கிஃப்ட் பாக்ஸை தீராவை பிரிக்க கூறினாள்.

"அடியே ஈஷா பாப்பா...... உள்ள வெடிகுண்டு வச்சுட்டியா என்ன?..", என கண்களை உருட்டிக்கொண்டே தீரா அந்த பாக்ஸை பிரிக்க... நீளமாக இருந்த அந்த அட்டை பெட்டியை தீரா பிரித்த அடுத்த நொடி.. அனைவருமே வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத் தொடங்கி இருந்தார்கள்...

சோஃபாவில் இருந்து மெல்ல எழுந்து வந்த மயூரி அந்த கிப்ட்டை எட்டி பார்க்க...., "ஹே... ஈஷா குட்டி... என்ன டா இது?.... செருப்பு வாங்கிட்டு வந்துருக்க..", என வாயை மூடி சிரித்தது கொண்டிருக்க..., "ஹ்ம்ம்... சித்தி... இது செருப்பு இல்ல ... ஹீல்ஸ்..... இத போட்டா அத்த பெருசா ஆயிருவாங்க... அப்பரம் ரக்ஷ் மாமா என்ன மட்டும் தா பாப்பான்னு கூப்டுவாங்க....", என கூறி அழகாய் சிரித்தாள் அவள்.

"ஏஏஏஏய்.. உண்மைய சொல்லு... இது உன் அப்பா ஐடியா தானே....", என கண்ணை சுருக்கி தீரா கேட்டதற்கு, "ஹான்... அதெப்டி உங்களுக்கு தெரியும் ...", என தெரியாத்தனமாக அப்பாவை போட்டு கொடுத்து விட்டாள் அந்த குட்டி தேவதை.

"அவன் வேள தானா... இரு கவனுச்சுக்குறேன் உன்ன...", என மனதிற்குள்ளேயே ஷேனாவிற்கு ஆப்பு ரெடி செய்தவள், "இங்க பாரு ஈஷா குட்டி.... நா பெருசா வளந்தாலும் உன் ரக்ஷ் மாமாக்கு நா பாப்பா தா...., ஹ்ம்ம்... நீ குட்டி பாப்பா நா பெரிய பாப்பா.... அவ்ளோ தா.... வா இப்போ கேக் வெட்டலாம்", என கூறி அவளை அப்படியே கட்டி பிடித்து தூக்கிக் கொண்டு செல்ல.... அங்கே டேபிள் இருந்த கோலத்தில் மீண்டும் அனைவரும் வயிறுவலிக்க சிரிக்க தொடங்கினார்கள்...

ஈஷாவை கவனிக்கும் ஆர்வத்தில் அனைவரும் கேக்கையும் ரிஷியையும் மறந்து விட்டார்கள்... இப்போது ரிஷி பூனையுடன் மூன்று சிம்ம யாளி பூனைகளும் இணைந்தது கொண்டு தீரா வெட்ட வேண்டிய லாலிபாப் கேக்கை காணாமல் போக செய்து விட்டார்கள்.

"ஹாஹாஹா... தீரா... என் பிறந்தநாளுக்கு இந்த மாறி இலா பன்னுனதுக்கு விழுந்து விழுந்து சிரிச்சல... இப்போ ரிஷி பழி வாங்கிட்டான் பாத்தியா...", என தாரி கைதட்டி சிரிக்க... அங்கே டேபிலில் அமர்ந்ததுகொண்டு, வான்மதி தீராவுக்காக செய்து வைத்த லாலிபாப் கேக்கில் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தான் அந்த சேட்டை மன்னன்.
இதற்கு மேல் அந்த கேக்கை எங்கே வெட்ட.??

இங்கு மறுபுறம் ஈஷா விழுந்து விழுந்து சிரிக்க... அவளுக்கு ஒரு முறைப்பை வழங்கிவிட்டு வா போய் உன் பொம்மை வெட்டலாம் என அவளை தூக்கிக் கொண்டு நடந்தாள் தீரா...

தன் குச்சி மிட்டாய் கேக்கை வெட்டும் முன்பாகவே குதறி வைத்துவிட்டு இப்பொழுது பூனை குட்டியாக இருக்கும் விகியை பிடித்துவைத்து கடித்து கொண்டிருந்த ரிஷியை தீரா கண்களை விரித்து நோக்கி கொண்டிருக்க... அவனோ நினைத்ததை சாதித்த ஆனந்தத்தில் மகிழ்ச்சியாக விகியை போட்டு உருட்டி கொண்டிருந்தான்...

இதை கவனித்த ஈஷா, "ஓய் அத்த... ரிஷிய மொரைகாதீங்க... வந்து என் கூட கேக் வெத்துங்க... ", என அவளையும் சேர்த்து அழைக்க... "என் செல்லம் டி நீனு....", என அவளுடன் சேர்ந்து கேக்கை வெட்டினாள் தீரா... அத்துடன் அங்கே அழகாய் துவங்கியது ஒரு மகிழ்ச்சியான போர்க்களம்... கேக்கிலேயே அனைவரும் முக்கால் பங்கு குளித்திருக்க... இரு வானரங்களிடம் இருந்து புவியை காக்க தான் அனைவரும் படாதபாடு பட்டுவிட்டார்கள்...

மகிழ்ச்சியாகவே கடந்தது அந்த இரவு பொழுது... ஆனால் விடியல் தான் தலைகீழாக துவங்கியது... ஈஷா எப்பொழுதாவது தான் வீட்டிற்க்கு வருகிறாள்... அதனால் இப்பொழுது உடனே அனுப்ப இயலாது என அனைவரும் மறுத்து விட.. ஈஷாவும் நா போமாட்டேன்... ", என மறுத்து விட்டாள்.

ஈஷா மட்டும் இப்பொழுது ஷேனாவிடம் செல்லவில்லை எனில் அவன் நிலை என்னவாக இருக்கும் என்பது அறிந்த ரக்ஷவ் தாரி மற்றும் கோவான்கள் இப்பொழுது என்ன செய்ய என புரியாமல் குழம்பி நிற்க... நன்கு யோசித்து விட்டு, "நா போய் அவன பாக்குறேன் ப்பா ...", என்றுவிட்டு ஐந்து ஆண்டுகள் பின்பாக சாயல் அரசங்கம் செல்வதை கூட பொருட்படுத்தாமல் சட்டென அங்கிருந்து மறைந்து சாயல் அரசாங்கத்தில் தோன்றினான் ரக்ஷவன்.

அங்கே ஒரு அறையின் வாயிலில் ராணா பதட்டத்தில் உச்ச கட்டத்தில் நின்று கொண்டிருக்க... எதையும் யோசிக்காமல் அவனிடம் சென்ற ரக்ஷவ் ஷேனாவின் நிலையை கேட்க... அவனோ தன் அரண்ட பார்வையை மட்டும் அந்த அறைக்குள் செலுத்தினான்.

அங்கே ஷேனா வெறி பிடித்தவன் போல், இருக்கும் அனைத்து பொருட்களையும் தாறுமாறாக உடைத்துவிட்டு தரையில் மடிந்து அமர்ந்திருக்க... ரக்ஷவன் ஓடிசென்று அவனை அனைத்து கொண்டான்.

அவன் வரவை உணர்ந்த ஷேனா, உணர்வற்ற முகத்தை தனக்கு நேராக இருந்த சுவற்றின் மீது பதித்தபடி,
"என்னால அவள காப்பத்த முடியல டா... என்ன நம்பி வந்தவள காப்பத்த தெரியல.... அவ போய்ட்டா... என்ன விட்டு போய்ட்டா... திரும்பி வர மாட்டா... அவ இல்லங்கிறது கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு பண்ணிட்டேன்.... அவ யாருன்னு கூட யாருக்குமே நியாபகம் இல்ல....", என பிரம்மை பிடித்தவன் போல அவன் இருக்க.. அவன் முன் மாயாவின் சுவர் அளவிலான சித்திரம்....
ஐந்து ஆண்டுகள் முன் அந்த்காரனை மீட்டு வருகிறேன் என கூறி மீள இயலா பாதாளத்தினுள் தன்னையே தியாகித்த அவனவளின் ஓவியம்.

"டேய் டேய்.. ஷேனா.. அவ எங்க போன.. எல்லாத்துக்கும் முடிவு கட்ட தானே.. வருவா டா... சீக்கிரமே திரும்பி வரு-"

" யாராள வரமுடியும் சொல்லு?.. அது பாதாளம்... அதுகுள்ள போற ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பலி... பலி குடுத்த எதுவும் திரும்ப வராது... எனக்காக.. என் பொண்ணு என் கூட இருக்கணும்குறதுக்காக அவள அவளே பலி குடுத்துட்டா.. எப்டி டா வருவா?.. ஹான்??, எப்டி வருவான்னு சொல்லு.. அவ போனது பாதாள தேவன் கிட்ட டா.. அங்க போய்ட்டு யார் திரும்ப வந்திருக்கா??..", இயலாமையுடன் ஷேனா புலம்பி கொண்டிருந்த அதே நொடி, "நா வந்துருக்கேன் ஷேனா..", என அழுத்தமாக கூறியபடி இவ்விருவருக்கும் முன்பாக வந்து நின்றாள் வானு.

"என்ன??", ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் தன் முகத்தில் காட்டி, ஷேனா அவளை நிமிர்ந்து நோக்கிய அதே நேரம், பிரித்தறிய இயலா ஒரு உணர்வுடன் அவளை நோக்கினான் ரக்ஷவன்.

ரக்ஷவனை நொடிபொழுதில் கவனித்தவள், அவனுக்கு மட்டுமே புரியும்படி கண்ணால் சைகை செய்துவிட்டு, "ஆமா டா ஷேனா.. நா போய்ட்டு வந்துருக்கேன்... ஒரு தடவ இல்ல... டெய்லியும்...!... டெய்லியும் நா அங்க போய்ட்டு தா வரேன்....", என கூறியபடி ஷேனாவின் முன் அமர்ந்தாள் வானு.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து பட்டென இமை பிரித்த தீரா, 'நடந்தது கனவா இல்லை நிஜமா?', என்பது போல் கண்களை மினுக்கி மினுக்கி இங்கும் அங்குமாக நோக்க.. இறுதியாக அவள் பார்வை பதிந்தது அவள் மொபைல் மீது.

அதை எடுத்து நேரத்தை பார்க்க... மணி நள்ளிரவு, 11.45...

💙WILL MEET YOU ALL💙
💜SOON AGAIN 💜
❤️LOVELY LIL HRTZ ❤️

தொடரும்.❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #interview