அத்தியாயம் - 33 😠
Hiii.. makale.. kalla thookathinga.. very sorry.. personal work aala.. konjam illa illa.. romba busy aayitean.. adhanala.. unga V2 pullaya nenachu ennaiya mannichuuuu.. Indha kadhaiya apdiye vitralamnu thoniduchu.. but konja peroda response aala.. Naa again continue pandrean.. avangalukku romba nandri..
காலங்கள்.. தான் எவ்வளவு மாயங்கள் செய்கிறது..
ஒருவரின் வாழ்வில் துன்பத்தை நேரச் செய்கிறதும் அந்த காலம் தான்.. அதே.. காலம் தான்.. ஒருவரின் வாழ்வில் இன்பத்தையும் அள்ளி தருகிறது..
காலங்கள்.. தான் விடையில்லா மர்ம முடிச்சுகளுக்கும் விடையாகவே வருகிறது..
அதே காலங்கள் தான்.. அவ்வினாவை எழுப்பிகிறது..
இதென்ன.. விந்தை.. என தோன்றுகிறதல்லவா.. ??
வினாவும் நானே விடையும் நானே.. என காலம் நம்மை கண்டு எக்காளம் செய்கிறது..
காலம் மட்டுமில்லை எனில்.. நம் வாழ்வு எப்படி இருக்கும்.. ?? சுவையற்ற உணவு போல.. சுவரற்ற சித்திரம் போல.. வாழ்வும் சுவரஸ்யமற்று போய்விடும் தானே..
காலம் தான் சிறந்த மருந்து என நம் முன்னோர்களின் வாக்கு தான் பொய்யாகி போகுமா என்ன.. ??
ஷ்ரித்திக் மட்டும் என்ன.. ?? அவனுக்கு தன்னவளின் மனம் என்ன நினைக்கிறது என்று அறியாதவனா.. ??
தன்னவள் தன்னை விரும்புகிறாள்.. என்று அவனுக்கு என்றோ தெரியுமே.. அவள் உணர்ந்ததை நேற்று தானே அறிந்தான்.. 😎😎
அவளுக்கு எப்பொழுது தன் காதலை வெளிப்படுத்த தோன்றுகிறதோ ? அப்பொழுது நடக்கட்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருக்கிறான்..
ஷிவாக்ஷிக்கு தன் இன்பங்களை.. உவகைகளை.. சொற்களை கோர்த்து வார்த்தையாக மாற்ற முடியவில்லை.. 😍😍
ஷ்ரித்திக்கின் மீதான காதல் அவளை இப்படி எல்லாம் மாற்றி இருக்கிறது.. அதை அவள் உணர்ந்தும் விட்டாள்.. தன்னிடம் அவனின் உரிமையை நிலைநாட்டும் பொழுது மௌனத்தின் உருவமாய் நின்றிருக்கிறாள்.. நிற்கிறாள்.. நிற்பாள் தான்..
நிற்க மட்டுமே செய்வாள்.. காதலை வழங்குவோ.. வெளிப்படுத்தவோ.. அவளின் மனம் ஒவ்வவில்லை.. 🙄🙄
ஏனென்று வினவினால்.. ?? அது அவளுக்கே புரியாத தெரியாத ஒன்றாயிற்றே..
தன் மனம் என்ன வேண்டுகிறது.. ?? என்ன நினைக்கிறது.. ?? என்றே தெரியவில்லை..
அவனை விரும்புகிறது.. இந்த மனம்.. அவனுடனே.. அவனருகிலே இருக்க வேண்டுமென மனம் தண்டோரா அடிக்காத குறையாக மொழிகிறது.. ஆனால்..
இந்த ஆனால் என்ற ஒன்று தான் அவளை தடுக்கிறது.. ஷிவாக்ஷியும் என்ன தான் செய்வாள்.. ?? 🤔🤔
ஷ்ரித்திக் மீதான காதலையும் அவனின் தீண்டலையும் எண்ணிக்கொண்டே உள்ளம் உருகிக் கொண்டே இருந்தவள்.. நேரம் கடப்பதை உணர்ந்து சரி உள்ளே நுழையலாம் என்று திரும்பும் வேளை.. 😍😍
"நீ நினைக்கிறது எல்லாமே நடக்குதுல.. ??" என சுவற்றில் சாய்ந்து நின்றபடி அவர்களை கவனித்த மாயா கோபத்தில் நாராசமாக ஒலித்தது.. அவள் குரல்..
ஷிவாக்ஷிக்கு இதுவரையில் இருந்த சந்தோஷம், காதல், என்ற உணர்வு போய் சலிப்பு தட்டியது.. 😏
முன்பெல்லாம்.. ஷ்ரித்திக்கை காணும் ஒவ்வொரு மணித்துளியும்.. மாயா இருந்திருக்க வேண்டிய இடம்.. தான் அவருக்கு தகுதியற்றவள்.. என்ற எண்ணமே உருளும்.. மாயாவை பற்றி யோசிப்பதை காட்டிலும்.. ஷ்ரித்திக்கை பற்றிய எண்ணமே உழன்று இருக்கும்.. தான் அவன் வாழ்வில் நுழையாதிருந்தால்.. ஷ்ரித்திக் நன்றாக மகிழ்வாக இருந்திருப்பான்.. என்ற நினைப்பு தான்.. இப்படி..
உண்மையில் ஷிவாக்ஷிக்கு இப்பொழுதெல்லாம் சங்கடம் தோன்றுவதில்லை.. 😏
தான் வாழ்ந்து கொண்டிருப்பது.. மாயாவின் வாழ்க்கை.. இது மாயா இருக்க வேண்டிய இடம்.. என்றெல்லாம் தோன்றுவதில்லை..
ஏனென்று கூறவும் வேண்டுமா.. ?? 😉
மாயாவின் வார்த்தைகளை அலட்சியம் செய்து.. அவ்விடம் விட்டு நகரப் போனவளை மீண்டும் தடுத்தது.. அவளின் அதே கோபம் நிறைந்த குரல் தான்..
"இன்னும் என்ன.. ?? ஷ்ரித்திக் கிடைச்சுட்டான்.. அவன எப்படியோ மயக்கி வலச்சுட்ட.. அதே மாதிரி.. சொ.." என்று ஆரம்பித்தவளை.. தன் கரம் உயர்த்தி தடுத்தாள்.. 🤨
"இங்க பாருங்கோ.. நான் இப்பவும் சொல்றேன்.. இது நீங்க.. சாரி.. நீ வாழ்ந்து இருக்க வேண்டிய இடம் தான்.. நான் இல்லன்னு சொல்லல.. நீ பண்ண தப்பால தான்.. நான் இப்ப இந்த இடத்தில இருக்கேன்.. நியாயப்படி நான் தான் கோபப்படனும்.. இதுக்கு நீ என்னான்டா ஏன் கோபப்படுறன்னு தான் நேக்கு புரியவே இல்ல.. ?? சூழ்நிலை அப்படி ஆனதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. ??" என்றிட்டாள்.. ஷிவாக்ஷி.. பொறுமையாக.. 🤨
உண்மையில் அவளின் தவறு என்று ஒன்றுமே இல்லையே.. தன்மேல் ஏன் இந்த தேவையற்ற கோபம் ?? என்ற எண்ணம் தான்.. பேசி புரிய வைக்க முயன்றாள்..
ஆனால்.. அதற்கெல்லாம்.. மாயா அசைபவளா.. ??
"ஹோ.. மேடம் அவ்ளோ நல்லவங்க.. அவ்ளோ நல்லவளா.. இருக்கறவ.. எதுக்கு டி ஷ்ரித்திக்கோட மொத்த சொத்தையும்.. உன் பேருக்கு மாத்த ட்ரைப் பண்ற.. ??" என்று குரோதத்தில் மாயா பட்டென்று போட்டு உடைக்கவும்.. 😠😠
ஷிவாக்ஷி அதிர்ந்து விட்டாள்.. என்பதை விட.. உறைந்து விட்டாள்.. என்று தான் கூற வேண்டும்..
இது ஷிவாக்ஷிக்கு புதிது.. இப்படியொரு நிகழ்வா.. வதந்தியா.. ?? இல்லை வேறு ஏதேனுமா.. ?? என்று மனதில் குழப்பிக்கொண்டாள்..
"என்ன சொல்றேள்.. ??!!!!" என்று அதிர்வு மாறாமல் வினவினாள்.. ஷிவாக்ஷி.. 😧
அப்படியொரு அதிர்வலையை மாயா இதுவரை அவள் முகத்தில் கண்டதில்லை.. ஒரு கணம் மாயாவிற்கே தோன்றிற்று.. 'நிஜமாகவே இவளுக்கு ஒன்றுமே தெரியாதோ.. ??!!' மறுகணமே.. 'இவளுக்கு தெரியாமல் நடக்குமா என்ன ..??' என்று எண்ணினாள்.. 😏 ஏளனச் சிரிப்போடு..
"ஆஹா..ஹா..ஹா.. நடிக்காத டி.. இந்த நடிப்ப ஷ்ரித்திக் நம்புவான்.. நான் ம்ஹூம்.. இப்படி நடிச்சு தான.. அவன கவுத்த.." என்று.. கண்களில் ஆத்திரத்தில் மின்ன வினவினாள்.. 😠😠
"நான் என்ன சொன்னாலும்.. நீ அதை நம்பப்போறதில்ல.. என்ன நடந்துச்சுன்னு.. விளக்காம சொல்லு.. ??" என்று மாயாவிடம் வினவும் போது.. சிறு கோபமும் எட்டி தான் பார்த்ததோ.. ?? 😠🤔
கோபம் பெருமூச்சு விட்டபடி.. மாயா கூற.. அதை கேட்டு ஷிவாக்ஷிக்கு ஆத்திரம் பன்மடங்கு எகிறியது.. 😡 மாயா கூறி முடிக்கும் முன்பே அங்கிருந்து கிளம்பினாள்..
அந்த ஆத்திரம் குறையாமல்.. வேக எட்டுக்களுடன்.. முகப்புப் கூடத்தை நெருங்க.. அங்கே இருந்த வக்கீலும்.. பத்திரங்களும்.. சார்பதிவாளர் அலுவலர்களும்.. அவள் கேட்டது உண்மை தான்.. என மொழிய தேவையின்றி புரிந்தது..
மாயா கூறியது இது தான்.. இதுவரையிலும் ஷ்ரித்திக் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் உன் பெயருக்கு.. அதாவது ஷிவாக்ஷி பெயருக்கு மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறான்.. ஷ்ரித்திக்.. என்று மாயா முடிக்கும் முன்பே ஓடினாள்.. ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷிக்கு அளவற்ற கோபம் உண்டானது.. 😡😡
ஏற்கனவே ஷ்ரித்திக்கிடம் பட்ட கடன்களை எப்படி அடைப்பது என்று எண்ணிக் கொண்டு இருக்க.. இதென்ன இப்படியொரு விபரீதம்.. ?? என்று ஷிவாக்ஷி எண்ணிக் கொண்டு இருக்க..
ஊராரின் பேச்சையும்.. அந்த மாயாவின் எண்ணத்தையும் போலே.. ஆம் உண்மை தான்.. ஷிவாக்ஷி என்னை மயக்கி தான்.. சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயருக்கு மாற்றுகிறேன்.. சொல்லாமல் சொல்வது போலும்.. சும்மா இருந்த வாயிற்கு அவல் கொடுத்தது போலும்.. ஆகுமே.. 😕
ஊராரின் வெற்றுக் கூற்றுக்கு.. தான் பலியாக நேரிடுமே.. 😕
இவையனைத்தும் ஷிவாக்ஷியின் கோபத்தை தூண்டிவிட போதுமானதாக இருந்தது..
ஆனால்.. மறுகணம்.. ஷிவாக்ஷி தோன்றிற்று.. 'ஏன் இது பொய்யாக இருக்கக் கூடாது.. ?? மாயா என்னிடம் பொய் கூறியிருக்கலாம்.. அல்லவா.. ??' என்ற எண்ணம் உருவானது.. இந்த எண்ணம் முழுமையாக உரு பெறுவதற்குள்.. ஷிவாக்ஷி கத்திவிட்டாள்.. நடுக்கூடத்தில் அனைவரின் முன்னும்.. "என்ன நடக்கறது.. ?? இங்க.." என்றிட..
ஷ்ரித்திக் உட்பட அனைவரும் அவளின் கோபம் நிறைந்த குரலை முதன் முறையாக கேட்கின்றனர்.. சற்று ஆச்சரியம் தான் அனைவருக்கும்.. இவளுக்கு கோபம் வருமா.. ?? என்று தான்.. இவளின் மென்மையான குணம் தான்.. அனைவரையும் அப்படி சிந்திக்க வைத்தது..
ஷ்ரித்திக் அவளின் கோபத்தை எதிர் பார்த்தான்.. தான்.. ஆனால்.. அது இவ்வளவு விரைவாக எதிர் பார்க்கவில்லை.. 😎🤔 நிச்சயம் யாரேனும் இதை தெரியப்படுத்தி இருக்க வேண்டும்..
ஷ்ரித்திக் அவளின் முக மாறுதல்களை கவனித்தான்..
"மன்னிச்சிடுங்கோ.. ?? சித்த அவசர பட்டுன்டேன்.. என்ன நடக்கறது.. ?? எதுக்கு இவாளெல்லாம் இங்க வந்திருக்கா.. ??" என்றவள்.. பொறுமையை இழுத்து பிடித்து கேட்டாள்.. 🤨
ஷ்ரித்திக்கிற்கு தெரியும்.. இவளின் முழுமையான கோபத்தை.. இனி பார்க்க போகிறோம்.. 'கண்ணா.. மெயின் பிச்சரே இனிமேல் தான்..' என மனசாட்சி வேறு ஒரு பக்கம்.. அவனின் பயத்தை அதிகரிக்க.. அதை அடக்கிவிட்டு.. வேறெங்கோ பார்த்த படி.. "நான் சம்பாதிச்ச சொத்தெல்லாம் உன் பேர்ல மாத்த..." என் சொல்லி முடிக்கவில்லை... 😎
"என்ன நினைச்சுண்டு.. ?? யார கேட்டுண்டு இப்படி எல்லாம் பண்றேள்.. ??" என சீறும் குரலில் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்திக் கேட்டாள்.. 😡
ஏற்கனவே அவர்களின் பணம் சொத்துக்களுக்காக தான்.. தான் திருமணம் செய்து கொண்டதாக ஒரு பக்கம் பேச்சு போய் கொண்டிருக்க.. அதை உறுதி செய்வதை போல்.. இச்செயல் இருக்க.. பொறுமை பறந்து.. வெறுமை.. சினம்.. உருவாயிற்று..
ஷிவாக்ஷியின் தோளை தொட்டு "ஹேய்.. என்னாச்சு ??" என இஷானி கேட்க.. 🙁
"இரு டி.." என்ற படி தன் தோளில் இருந்த அவளின் கையை தட்டி விட்டாள்.. கோபத்தில்..
விக்ரமிற்கு சிறு நடுக்கம் எட்டிப் பார்த்தது.. அனைவரும் அவளின் இம்முகத்தை காணவே சற்று உதறல் எடுத்தது..
ஷ்ரித்திக்கிற்கு பயமில்லை ஆனால்.. அவளின் கோபத்தை இப்பொழுது தான் பார்க்கிறான்.. இருப்பினும் சமாளித்து.. "யார கேட்கணும்.. ??" என்றான்.. தீட்சண்ய பார்வையில்.. 😎
"யார கேட்கணுமா ??.. என்னை கேட்கனும்.. என்ன உரிமையில.. இப்படி பண்றேள்.. ?? இங்க எல்லாமே உங்க இஷ்டப்படி தான்.. நடக்கனுமா.. ?? உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கலாம்னு நினைக்கறேளா.. ?? ஏற்கனவே நான் உங்களையும் அவாளையும் (ஷ்ரித்திக்கின் அன்னை இந்திரகவி நோக்கி கை காட்டி) மயக்கி தான் இந்த ஆத்துல நுழைஞ்சிட்டேன்னும்.. உங்களை கலியாதானம் பண்ணிட்டதாவும்.. உங்க சொத்துக்காக தான்.. இந்த ஆத்துல இருக்கிறதா எல்லா நினைக்கிறா... அதை நீங்க ஊர்ஜிதப் படுத்தறேளே.. ??" என ஷிவாக்ஷி ஆவேசமாக பேசி முடிக்கும் முன்..
"என்ன.. இப்படி எல்லாம் பேசுறாங்களா.. ?? யாரது.. ??" என இந்திரகவி... தன் கணவனிடம் சங்கடத்தை தெரிவிக்க.. 😕
"வேற யாரு.. மாயாவா தான் இருக்கும்.. ? ம்ப்ச்.. விடு பாத்துக்கலாம்.. நம்ம ஸ்டேட்டஸ பெருசா நினைக்கல தான்.. ஊர் வாய் சும்மா இருக்காது.. இதெல்லாம் சகஜம்.. நாம கண்டுக்காம விடறது தான் பெட்டர்.." என ராஜ தேவன் தேற்றினார்... 🙁
அவளின் ஆவேசமான மொழிகள்.. அவனை சிறு அச்சத்தில் தள்ளவே..
ஆதலால் ஷ்ரித்திக் இடையிட.. "ஷிவு.. ??".. என்றிட
"ஏன் இப்படி பண்றேள்.. ?? எதுக்காக இப்படி எல்லாம் பண்றேள்.. ??" என்று இடைவிடாது அவள் பேசிக் கொண்டே போக.. 😡
ஷ்ரித்திக் மீண்டும் இடையிட.. "ஷிவு.. ??" இம்முறை அழுத்தமாக.. 😡
"தண்டை தெம்மையா இருக்கில்ல.. (சண்டை செம்மையா இருக்குல்ல..)" 😄 என ரித்து குட்டி இளித்தப்படியே சொல்ல..
ருத்துக்குட்டி கோபமாக அவன் பக்கம் திரும்பி.. இளித்தப்படியே.. "ஆஆஆஆன்... அப்படியா.. என்ன உன் கண்ணு கிட்ட.. ??" என்கவும்..😑
ரித்துக் குட்டியும்.. "அப்பதியா.. ??" என்றபடி கண்ணருகே கையை கொண்டு வர.. சரியாக ருத்துக்குட்டியும் அவன் கையை தட்டி விடவும்.. ரித்துவின் கை.. அவனின் கண்னை குத்திவிட்டது..
ரித்து சத்தமிடும் வேளையில்.. ஆராவும்.. அவனை கிள்ள.. தியா அவன் வாயை பொத்தினாள்.. 😠
"ஷிவு.. எப்படி அழறா.. ?? உனக்கு குளுகுளுன்னு இருக்கோ.. ?? கொணுடுவேன்.." என ருத்ரா மொழிய.. 😑
ஆரா.. நாக்கை கடித்து.. மிரட்ட.. 😠 தியாவோ.. ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள்.. 😠
"அத.. தூசு (லூசு).. ஷிவு.. கோதம் (கோபம்) நல்லா இருக்குன்னு சொன்னேன்.." ரித்துல்.. என்றிடவும்..
மூவரும் அவனை முறைக்கவே செய்தனர்.. 😠
"நான் உங்களை பார்த்ததை தவிர என்ன பாவம் செஞ்சேன்.. ?? ஏன் என்னை வதைக்கிறேள்.. ??" என ஆவேசத்தின் உச்சத்திற்கு இருந்தவள்.. திடுமென அழும் குரலில்.. ஷிவாக்ஷி மொழிய.. 😡😏
"ஷிவு.." என்று ஷ்ரித்திக் சங்கடமாக கூறி இடையிட முயற்சிக்க..
"ஆத்தி.. என்ன இப்படி சண்டை போடறாங்க.. ??" என பாட்டி தேவசேனா.. கண்ணத்தில் கை வைக்கவும்... 🤔
"நாம போட்டத விடவா.. இவங்க போட்டுட்டாங்க.. ?? சண்டை போட்டாலும்.. உடனே நான் உன்னை சமாதானப்படுத்திடுவேனே.." என்ற தாத்தா.. சிரித்தப்படி காதல் பார்வையோடு மீசையை முறுக்கவும்.. 😁
பாட்டியின்.. கண்ணங்கள் சிவந்து தான் போயின.. இருவரின் நினைவும்.. பல வருடங்கள் முன்னோக்கி சென்றது தான் காரணம்..
"இவங்க சண்டை முடியாது போலயே... ??!!" என நேஹா மொழிய.. 🙄
தீவாவும்.. அவளின் மொழியில்.. அவள் தானாய்.. "ம்க்கும் டி.." என்க..
இவையனைத்தும் குடும்பத்தினர் அவர் அவர்களுக்குள்ளே.. நடந்து போயின..
அவனை பேசவிடாது.. கோபத்திலும் ஆதங்கத்திலும் பேசிக் கொண்டே போக.. ஒரு கட்டத்தில் ஷ்ரித்திக் கோபம் உச்சியை தொட்டு விட்டது..
"நிறுத்துறியா.. ??" என்று ஷ்ரித்திக் அனல் கக்கும் விழிகளோடு.. கர்ஜித்தான்.. 😡
அவனின் கர்ஜனை அம்மாளிகை முழுதும் எதிரொலித்தது..
அவனின் நெடும் கூச்சலில் ஷிவாக்ஷி ஓரடி பின் நகர்ந்து தான் தன்னை சமன் செய்து கொண்டாள்.. 😕
அங்கிருந்த அரசு அலுவலர்கள் அனைவரும்.. "இதுல அவங்களுக்கு விருப்பம் இல்லை போல.. இன்னொரு நாள்.. நாம ரிஜிஸ்டரேசன்.. வைச்சிடலாம்.. இப்ப நாங்க கிளம்பறோம்.." என்று நாகரிகமாக மறுபதிலை கூட எதிர்பாராது கிளம்பிவிட்டார்கள்..
குடும்பத்தினர்.. அனைவரும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விவாதத்தில் நமது இருப்பு சரியன்று.. என நினைத்து விலக.. அவர்களை தடுத்தது.. ஷ்ரித்திக்கின்.. குரல்.. "யாரும் இங்க இருந்து ஓரடி நகர கூடாது.." என்றது..
ஷ்ரித்திக் அவள் முன் சொடுக்கிட்டு..
"என்ன கேட்ட.. ?? என்ன உரிமையில இப்படி பண்றேன்னு யோசிக்காம கேட்கிற.. ?? ஹ்ம்ம்.. நீ என் பொண்டாட்டி.. உன் பேர்ல என்னோட சொத்து எழுதுறதுக்கு எனக்கு உரிமை இல்லன்னு சொல்ற ??.." என்றிட.. 😡
"நீங்க சொன்னது.. 100 சதவீதம் சரி தான்.. அது முறைபடி கன்னியாதானம் நடந்திருந்தா.. நமக்கு தான்.. அப்படி நடக்கலையே.. அது நோக்கு நன்னா தெரியுமோன்னோ.. ?? தெரிஞ்சும் ஏன் இப்படி ?? நீங்க இப்படி செய்றது மூலமா.. எல்லாரும் என்னை தப்பா நினைப்பான்னும் நோக்கு தெரியும்.. தெரிஞ்சும் ஏன்.. ??" என்று ஷிவாக்ஷி.. விரக்தியாக கூற... 😏
"எல்லாரும் நினைக்கிறாங்க அப்படின்னு என்னால.. யோசிக்க முடியாது ஷிவாக்ஷி.. அன்னிக்கு உன் ஃப்ரண்ட் இஷானிக்கிட்ட என்ன சொன்ன.. ?? ஹான்.. நான் இன்னிக்கு ஒரு மாதிரியும்.. நாளைக்கு ஒரு மாதிரியும் இருப்பேன்.. நான் உன்னை பணத்தை வைச்சு எடை போடறதாவும்.. நாளை பின்ன உன்னை ஸ்டேட்டஸ் வைச்சு அவமானப் படுத்திடுவன்னு நீ நினைக்கிறல.. ?? இதே அந்த பணம் உன்கிட்ட இருந்தா.. அதுக்காக தான்.. நான் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாத்தையும் உன் பேர்ல எழுதுனும் நினைச்சேன்.. மோர்ஓவர்.. பிஃபோர் மேரேஜ் என் வைஃப் பேர்ல சொத்து இருக்கணும்னு நான் நினைச்ச ஒன்று தான்.. ஆசைப்பட்டதும் அதான்.. பட்.. நீ ஏன்.. இதுக்கு இவ்வளோ.. ரியாக்ட் ஆகறன்னு தான் எனக்கு புரியல.. ??" என்று ஆயாசமாக முடித்தான்.. ஷ்ரித்திக்.. 😎
இது.. என்றைக்கு நடந்தது.. ?? என யோசிக்கும் போது தான்.. முந்தின நாள்.. இஷானி உடனான கட்டிலுக்கு அடியில் படுத்து பேசியதை வைத்து தான் சொல்கிறான்.. என்று புரிந்தது.. 😕
"அதுக்காக.. அதுக்காக இப்படியா பண்ணுவேள்.. ?? நீங்க யோசிக்காம இருக்கலாம்.. ஆனா என்னால யோசிக்காம இருக்க முடியாது.. அவாளெல்லாம் இருக்க இதே லோகத்துல தான் நாம இருக்கறோமே.. என்ன செய்றது.. ?? முடிவா சொல்றேன்.. இந்த சொத்து ஏதும் என் பேர்ல வரக்கூடாது.. அவ்ளோதான்.." என கண்களில் வரும் நீரினை.. முழங்கையால் துடைத்த படி சொல்ல.. 😭
"அதான்.. ஏன்.. ?? உன்னோட எல்லாமும் எனக்கு சொந்தம்.. அதேமாதிரி தான் உனக்கும்.. என்னோட சொத்துக்கள் உன்கிட்ட இருந்தா தான் என்ன.. ??" என்று.. ஷ்ரித்திக் ஆதங்கத்தில் வினவினான்.. சிறு வேதனையும்.. எட்டி தான் பார்த்ததோ.. ?? 😕
"என்னோட சொத்துன்னு இப்ப சொன்னேளே.. இந்த வார்த்தைகாக தான் வேணான்னு சொல்றேன்.. இப்ப இப்படி பேசுவேள்.. நாளை பிறகு.. இதே மாதிரி சண்டையோ.. மனஸ்தாபமோ.. வரச்ச.. இவ என்னை மயக்கிட்டா... என் சொத்து எல்லாத்தையும் இவா பேருல மாத்திண்டா.. அப்படின்னு கண்டிப்பா சொல்லுவேள்.." என ஷிவாக்ஷி பேசிக்கொண்டு இருக்கும் போதே.. இல்லை என ஷ்ரித்திக் வாதிட முயற்சிக்க.. அதை புரிந்து கொண்டவளோ.. "ஹான்.. அப்படியெல்லாம்.. முடிவா சொல்லாதேள்.. முடிவா சொல்லிடவும் முடியாது.. இன்னைக்கு போல மனுஷா.. எப்பவும் இருக்க மாட்ட.. இதுல நான் நன்னாவே அனுபவப் பட்டுண்டேன்.. உங்க சொத்து.. நீங்க சாம்பாதிச்சது.. உங்களாண்டவே இருக்கட்டும்..." என்றாள் முடிவாக.. 🤨
ஷ்ரித்திக் "ஷிவு.. இந்த ஸ்டேட்டஸ் அப்படிப்பட்ட பேச்சே வரக்கூடாது.. நீ என்கிட்ட கூட அவமானப் படக்கூடாது.. தான் நான்.. நினைக்கிறேன்.." என்றிட.. 😕
'போச்சு... சோலி முடிஞ்சு..' என்று விக்ரம் மனதில் நினைத்து கொண்டான்.. 🙁
இவ்வார்த்தை ஷிவாக்ஷியின் கோபத்தை முழுமையாக சுரண்டியது.. ஷிவாக்ஷிக்கு அது அவளின் தன்மானத்தை உரசுவதாய் தோன்றிற்று.. 😠😠
"என்ன சொன்னேள்.. ?? என்ன சொன்னேள்.. ?? என்னால உங்க தயவு இல்லாம.. உங்க உதவி இல்லாம இருக்க முடியாதுன்னு மீன் பண்றேளா ?? ஹான்.. என் தன்மானத்தை சீண்டி பாக்கறேளா .. ??" என்று கோபத்தோடு வினவினாள்... 😠😠
"இல்ல நான் அப்படி சொல்லல.. ?? நான் என்.." என்று முடிப்பதற்குள் அவள் இடையிட்டாள்.. கையை உயர்த்தி..
"நீங்க சொன்னதோட அர்த்தம் வேற என்ன ??.. இதோ.. இப்ப சொன்னேளே.. ?? அவமானப் படக்கூடாதுன்னு.. அதுக்கு என்ன அர்த்தம் ?? என்ன அவமானப் படுத்துவேள்னு சொல்லாம சொல்றேளே.. ??" என ஷிவாக்ஷி தன்னீரு விழிகளை துடைத்துக் கொண்டவள்.. "நீங்க இப்படி பேசுவேள்னு நான் எதிர்பாக்கல.. ?? ரொம்ப நன்றி.." என் இருக்கரம் கூப்பினாள்.. 🥺😭
ஷ்ரித்திக்... தான் தவித்தான்... தான் சொல்ல வந்ததோ வேறு.. ஆனால்.. அது அவளிடம் சென்றதோ வேறு..
ஷ்ரித்திக்கின் மனதில்.. தன் மனைவியின் மீது தனக்கு மரியாதை, பெருமிதம் அதிகரிக்கவே.. அவளுக்கு தன் சொந்தம் எல்லாம் அவள் சொந்தம் என காண்பிக்கவே.. தன்னில் சரி பாதி என தெரிவிக்கவே.. இவ்வாறு செய்கிறேன் என்று..
முதல் முறை வார்த்தைகளை தவறாக கோர்த்து விட்டான்..
ஷ்ரித்திக் கூற நினைத்தது.. 'ஷிவு.. நான் பணம் பொருட்டாக நினைத்ததில்லை.. அதை வைத்து உன்னை எடையிட மாட்டேன்.. என்னிடம் அவை இருப்பதால் தான்.. நான் அவ்வாறு எடையிடுவேன் என்பது தான் உன் எண்ணம்.. ஆதலால் தான்.. அச்சொத்துக்கள்.. உன்னிடம் இருந்தால்.. உன் எண்ணம் தவறென உன் நெஞ்சில் உறுதிபடும்..' என்பதே..
ஆனால்.. தவறாக சென்றடைந்தது...
"ஷிவு.. நான் சொல்ல வந்தது.. என்.. ??" என்று ஷ்ரித்திக் இடையிடவும்... 😕
ஷிவாக்ஷி கரம் உயர்த்தி தடுத்தாள்...
"இப்ப சொல்றேன் கேளுங்கோ.. இன்னும் எண்ணி 2 வாரத்துல உங்களாண்ட வாங்கின பணத்தை கொடுத்துடுவேன்.. இப்படி பட்ட மனுஷா கிட்ட.. நான் கடன் வச்சுண்டு இருக்கறது.. ரொம்ப தப்பு.. இங்க பாருங்கோ.. கடைசியா சொல்றேன்.. இந்த சொத்துக்கள என் பேருக்கு மாத்துறது இது தான் முதலும் கடைசியுமா இருக்கணும்.. இல்ல.. நான் இந்த ஆத்துல இருக்கறது அன்னிக்கு கடைசியாக இருக்கும்.." என்று விட்டு... அங்கிருந்து அவளின் அறைக்கு வேக எட்டுக்களோடு சென்றாள்.. 🥺
அவள் மொழிந்ததன் அர்த்தம்.. அவ்வில்லத்தை விட்டு சென்றிடுவேன்... என்பது..
மற்ற அனைவரும் புரிந்துக்கொண்டது.. அவள் தன் வாழ் நாளை முடித்துக் கொள்வாள்.. என்பது..
ஷ்ரித்திக்.. செல்லும் அவளை விழியகலாது பார்த்தான்.. 🥺 கலங்கிய கண்களின் நீரினை உள்ளிழுத்துக் கொண்டான்..
தந்தை ராஜ் தேவன் தோளை தட்டி விட்டு சென்றார்.. பெருமூச்சுடன்..
"பங்கு.. ??!!" என்றபடி ஷ்ரித்திக்கின் தோளை தொட்டான்.. விக்ரம்..
ஷ்ரித்திக் அவனை கண்டான்.. கம்பீரத்தில் குறைவில்லை.. சிறு வலி கண்களில் தெரிந்தது.. 😎🥺
விக்ரம் "நீ.. ஃபீல் பண்ணாத.. அவளுக்கு பணம் தான் பிரச்சினை.. அளவுக்கு அதிகமாகவும் இருக்கக்கூடாது.. குறைவாவும் இருந்திடக் கூடாது.. ஷீஸ் ஸ்கேர்டு.. ஸடர்னா இந்த லைஃபுக்கு ஏத்த மாதிரி அவளால அடாப்ட் பண்ணிக்க முடில.." என மொழியவும்.. 🙁
"ஹீஸ் ரைட்.. ஐ மென்ஷன்டு இயர்லி.. அவ இன்னும் உங்க வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி இன்னும் மாறல.. அவ மாறனும்.. இல்ல மாத்தனும்.." என இஷானி மொழியும் போதே..😕
"பண்ணேன்.. அவ ஏத்துக்கல.." என்று ஷ்ரித்திக் பெருமூச்சு விட்டு.. "என்ன சொல்லிட்டு போறா பாத்தியா.. ?? ச்சே.." என்றான்..
"நீ.. ஏன் அப்படியொரு வார்த்தைய சொன்னே.. ??" என கேட்டான்.. விக்ரம்..🙁
"விக்கி.. அவர் சொன்னதோட அர்த்தம் வேற.. அவ தான்.. அப்படி புரிஞ்சுட்டான்னா.. இவர் கூட இத்தனை வருஷம் இருந்திருக்கியே.. நீயுமா இப்படி புரிஞ்சிகிட்ட.. ??" என இஷானி.. விக்ரமை இடிக்க.. 😠
விக்ரம்.. "எனக்கு புரியாம இருக்கும்னு நீ நினைக்கிறீயா.. ?? ஷ்ரித்திக் ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சு தான் பேசுவான்.. இன்னிக்கு இவன் கிட்ட நான் இந்த வார்த்தைய எதிர்பாக்கல.." என்றிட..😕
"எனக்கு அவ விஷயத்தில.. ஏன்னு தெரியல.. என் மைன்ட் வேலை செய்ய மாட்டுது.." என்று வருத்தம் கொள்ளத்தான் செய்தான்.. 😕
இஷானி.. அவர்களை சமாதானம் செய்தாள்.. "ஓகே.. விடுங்க.. நான் ஹெல்ப் பண்றேன்.. கொஞ்ச காலம் போகட்டும்.. அவளுக்கு இந்த சொத்து பணம் பிடிக்காது.. அகெயின் இத டிரைப் பண்ணாதீங்க.. இப்ப ஆறப் போடுங்க.." என்கவும் 🙂
அவ்விருவருக்கும் அதுவே சரியென தோன்றிற்று..
விக்ரம்.. "சரி.. இஷூ வா போலாம்.. கொஞ்சம் தனியா விடுவோம்.." என்று விட்டு.. அவ்விருவரும் கிளம்பினர்.. 😕😕
ஷிவாக்ஷி.. தங்களின் அறைக்கு சென்று.. ஜன்னலோரமாய்.. நின்று அழுது தீர்த்தாள்... 😭😭
இதன் விளைவாய்.. அவளுக்குள்..பெரும் போராட்டமே உருவானது.. இந்த விவகாரம் தான் அவருக்கு பொருத்தமற்றவள்.. மொட்டு விட்டு முளைத்த காதலை தன் மனதுள் புதைக்க முயன்றாள்.. முயல்கிறாள்.. நடந்த நிகழ்வுகளை எண்ணி மருகினாள்.. சிந்தனையில் ஆழ்ந்தாள்... என்றேனும் ஒரு நாள் இந்த தகுதி தராதரம் இவ்வாழ்வில் பெரும் விரிசலை உருவாக்குமோ.. ?? என்ற அச்சத்தை விதைத்து விட்டதால்.. வந்த தீர்க்கம்... 🙁
அவள் எதிர்பார்க்கவில்லை.. ஷ்ரித்திக்கிடம் வந்த வார்த்தைகளை..
'எனக்கு தெரியும்.. அவர் இவ்வார்த்தைகளை.. மனதார கூறவில்லை.. ஆனாலும்.. எங்கோ வலிப்பது போல் ஒரு மாயை.. அவ்வார்த்தைகள்.. என் காதில் ரீங்காரமிடுவதை.. என்னால் தடுக்க முடியவில்லையே.. சிறு வார்த்தைகளையே தாங்க முடியாமல் தவிக்கும் நான்.. இது போன்றொரு பூதாகரமான பிரச்சினை உருவானால்.. ?? அவர் வார்த்தைகளால் வதைத்தால்.. ?? தாங்காது.. என் மனம் தாங்காது.. மனமே.. அவருக்கும் எனக்கும் நிச்சயமாக ஒத்து வராது.. என் காதல் கருவிலேயே அழிய வேண்டும் என்பது தான் விதியோ.. ??' என்றெண்ணி நொந்தவள்.. சுவர் கடிகாரம் நேரமாவதை சுட்டிக் காட்ட.. பள்ளிக்கு நேரமாவதை உணர்ந்து.. ஆவணமானாள்.. 😕
படிக்கட்டுகளை கடந்து.. நுழைவாயிலை கடக்க முனைந்த போது.. ஷ்ரித்திக்.. அவனின் காரில் சாய்ந்து நின்று.. ஷிவாக்ஷிக்காய் காத்திருந்தான்.. 😍😎
ஷிவாக்ஷி.. எதிர்பார்த்தாள் தான்.. சலிப்பாய்.. கண்களை மேலே சுழற்றினாள்.. 😏 ஷ்ரித்திக்கை ஒரு பொருட்டாய் மதியாமல் அவனை கடந்து சென்றாள்.. 😕
ஷ்ரித்திக்கிற்கு சிறு கோபம்.. எட்டி பார்த்தது தான்.. கிட்டத்தட்ட எதிர்பார்த்தான் தான்.. ஆனால்.. அவளின் கோபம்.. ஏனோ.. அவனுக்கு மகிழ்வால்.. சிறு கீற்றாக அவனிதழ் வளைந்தது.. 🥰
ஷ்ரித்திக்கிற்கு இது ஒரு விஷயமாகவே புலப்படவில்லை.. 🙂 இதற்காகவெல்லாம்.. என்னவளின் முகம் பாராமல் இருக்க முடியாது.. தன் மீது தான் தவறு.. நிச்சயமாக தன் பக்க தரப்பை விவரித்து.. மன்னிப்பை யாசிக்க தான் போகிறேன்.. என எண்ணினான்.. 😎
"டேய்.. எப்படி இருந்தவன் டா நீ.. ?? ஆயிரம் பேருக்கு மேல உனக்கு கீழ வேலை பாக்கறாங்க.. ஆனா நீ.. போயும் போயும்.. பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்கறேன்னு சொல்றியே.. ?? கூச்சமே இல்ல.. ??" என குரல் கேட்க.. 🗣️
எங்கிருந்து வருகிறது.. இக்குரல்.. சுற்றும் முற்றும் ஷ்ரித்திக் தேட..
"டேய்.. டேய்.. வெளியே எங்க தேடற.. ?? குனிஞ்சு கீழ பாரு.. ??" அக்குரல்... மொழிந்திட்டது..
அது.. அவனின் மனசாட்சி தான்..
"நீயா.. ?? அடங்கு டா.. இதுல என்ன வெட்கம்.. ?? நான் ஒன்னும் யாரோ ஒருத்தர் கிட்ட போய்.. மன்னிப்பு கேட்கல்ல.. அவ என் பொண்டாட்டி.. இதுல எனக்கு எந்தவொரு ஈகோவும் இல்ல.." என்று தன் மனசாட்சியை அடக்கி தன்னவளை நாடினான்.. 🥰🥰
"ஓய்ய்ய்... ??!!" என ஷ்ரித்திக் உரக்க கத்தி.. தன்னவளை அழைத்தான்...
அவள் செவியில் எட்டியது தான்.. இதயமோ.. திடுமென நின்று விட்டு துடித்தது.. ஆனாலும் எதையும் காண்பிக்காமல் இருக்க முயற்சி செய்தாள்.. முயற்சி தான்..
அம்முயற்சியின் சறுக்கல்.. அவள் நடையின் சறுக்கலிலே தெரிந்தது.. அதை கண்டு கொண்டான்.. அவளவன்.. 😍😎
'தன் குரலை கேட்டாளே.. அவளுள் இவ்வளவு தடுமாற்றமா.. ?? அவ்வளவு காதல் தேக்கி வைத்து இருக்கிறாளா.. ??' என எண்ணி இதழ்களை வளைத்தான்.. 😍
மகிழ்வுடன்.. "ஓய்ய்ய்ய்.... ?? இப்ப நிக்கப் போறியா.. ?? இல்லையா.. ??" என்று துள்ளலுடன் அவள் பின்னே.. நடந்தான்.. 😍 ஷ்ரித்திக்..
ஷிவாக்ஷிக்கோ.. திக் திக் திக் நிமிடங்களானது.. பேசினாலும்.. தன் வாய் ஜாலத்தால் என்னை கட்டுப்படுத்திடுவான்.... பேசா விட்டாலும்.. செயலால் கவிழ்த்திடுவான்.. 😟😟 பற்றாக்குறையாய்... என் மனம் வேறு.. அவன் பால் சாய்கிறது.. என்ன செய்வது.. ?? இரு தலை கொள்ளி எறும்பானது.. அவள் நிலை..
இப்பொழுதிற்கு.. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது உத்தமம்.. என்றெண்ணி நடையில் வேகம் கூட்டினாள்.. ஷிவாக்ஷி.. 😟
இச்செயல் ஷ்ரித்திக்கிற்கு இன்னும் நகையை அதிகமாக்கியது..
அவனின் கூர்பார்வை.. முதுகை துளைப்பது.. ஏதோ குறுகுறுப்பான உணர்வை கொடுத்தது..
'பேசக் கூடாது.. பேசக் கூடாது.. நாம கோவமா இருக்கோம்..' என முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள்.. 😕😕
"ஓய்ய்ய்ய்.. புஜ்ஜீ.. எதுக்கு டி ஓடுற.. ??" குறும்பும் புன்னகையோடு கேட்க.. 😍😘
"எது.. ?? புஜ்ஜா.. ?? இது எப்பத்துல இருந்து.. ??" என்று வாய் தவறி பேசிவிட்டாள்.. தன் கட்டுப்பாட்டை மீறி..
ஒரு வினாடி நடையை நிறுத்தி..
'பேசி விட்டோமே.. ??' என தன்னை தானே குட்டிக் கொண்டாள்.. ஒரு வினாடி தான்..
ஷ்ரித்திக்கிற்கு சிரிப்புக் கொள்ளவில்லை.. 😂😅 "ஏன்.. உனக்கு தெரியாதா.. ??" என்றிட
நடையில் இன்னும் வேகம் கூட்டினாள்.. கிட்டத்தட்ட ஓடினாள்.. 😟😟
"ஹேய்... எதுக்கு இப்படி ஓடுற.. ?? எங்க ஓடுனாலும்.. திரும்ப என்கிட்ட தான் வந்தாகனும்.. தெரியும் தானே.. ??" என்று அவளிடம் பேசியபடியே நடந்தான் ஷ்ரித்திக்..
ஷிவாக்ஷி அசைவேனா.. ?? என்றிருந்தாள்..
ஷ்ரித்திக்கிற்கு.. பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்தது.. "ஷிவு.. போதும் விளையாடுனது.. வா.. நடந்தே.. ஸ்கூலுக்கு போயிடுவியா.. ?? வா.." என்றழைக்க.. 🤨🤨
ஷிவாக்ஷி.. எதையும் கண்டுகொள்ளாமல் செல்வது.. கொஞ்சம் கோபத்தை உண்டு செய்தது.. 🤨🤨
"ஷிவு.. இப்ப நான் சொல்றது தான் கடைசி.. இப்ப என்கூட நீ வரல.. உன்னை தூக்கிட்டு போக வேண்டியதா இருக்கும்.. ??" என ஷ்ரித்திக் எச்சரிக்கை போல மொழிய.. 🤨😎
ஷிவாக்ஷிக்கு.. பக்கென்று ஆனது தான்.. இவன் செய்பவன் தான்.. ஆனாலும்.. காட்டிக்கொள்ளாமல்.. திரும்பி.. ஷ்ரித்திக்கை பார்த்து முறைத்தவள்.. இதழ்களை சுழித்து அலட்சியம் செய்தாள்.. 🤨🤨
ஷ்ரித்திக்கோ.. 'ம்ஹூம்.. இது தேராது..' என்றெண்ணி.. தன்னவளிடம் ஓடி.. அவளின் கைப்பையை.. பிடுங்கியவன்.. "பேக்.. ??".. "பேக்க குடுங்கோ.. ??.." என ஷிவாக்ஷி சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை.. ஒற்றைக் கையால் தூக்கி தன் தோளில் ஏதோ.. துண்டை போல போட்டுக் கொண்டான்.. 🤨😎
ஷிவாக்ஷி.. "விடுங்கோ.. இறக்கி விடுங்கோ.." என்று துள்ளினாள்.. 😕😕
"கூப்பிடும்போதே வந்திருந்தா.. பரவால்ல.." என்றபடியே ஷிவாக்ஷியை தூக்கிக்கொண்டு மகிழுந்தின் அருகே சென்று அவளை அமர வைத்து விட்டு.. மறுப்பக்கம் வந்து.. அமர்ந்து.. வண்டியை இயக்கினான்..
"முரடன்.. முரடன்.. சரியான மிருகம்.." என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி... 😤
ஷ்ரித்திக்கிற்கு சிரிப்பு தான் வந்தது.. 😅 முடிந்தவரை அடக்க முயற்சித்தான்.. கண்களுக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஸ்டையரிங்கை திருப்பினான்..
வெகுநேரமாகியும்..
ஷிவாக்ஷி.. அமைதியாகவே இருக்க.. அவளிடம்.. தான் பேசிய வார்த்தைகளின் தாக்கம் இருக்கிறது.. என புரிந்து கொண்டவன்.. மெல்ல பேச்சை.. ஆரம்பித்தான்..
"ஷிவு.. நான்.. அப்படி நினைச்சு தான் பேசிருப்பேன்னு.. நினைக்கிறீயா.. ??" என சாலையில் ஒரு கண்ணும்.. தன்னவளிடம் ஒரு கண்ணுமாய் கேட்க.. 😕
ஷிவாக்ஷி.. ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டாள்.. ஏதும் காண்பிக்காமல்.. உள்ளுக்குள் வலியாய்..
"நான் என்ன நினைச்சு.. அப்படி பேசுனேன்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்.. தப்பு தான்.. வார்த்தையா தப்பா விட்டுட்டேன்.. என்மேல தான் தப்பு.. நான் மறுக்க மாட்டேன்.. மறுக்கவும் முடியாது.. உன்கிட்ட மட்டும் என் மூளை வேலை செய்யறதில்லை.. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. என்னை மன்னிச்சிடு.. இல்ல.. உனக்கு இன்னும் கோபம் போலன்னா.. என்னை அடிச்சிடு.. பட்.. ப்ளீஸ்.. பேசாம இருக்காத.. ?? ப்ளீஸ்.." என்று ஷ்ரித்திக் கிட்டத்தட்ட கெஞ்சினான்.. இறைஞ்சினான்.. 😕😕
மன்னிப்பு வேண்டி நிற்பவரிடம்.. எப்படி அமைதி காக்க.. ??
"நேக்கு கோபம் இல்லை.. வருத்தம் தான்.. ம்ப்ச்.. விடுங்கோ.. இனி பேசி பயனில்ல.." என்றுவிட்டாள்.. உணர்வுகளை அடக்கியபடி.. ஷ்ரித்திக்கின் முகம் பாராது..
ஷ்ரித்திக்கிற்கு 'ஏதோ சரியில்லை..' என்று தான் தோன்றியது.. 😕🤨
ஷிவாக்ஷி வருத்தத்தில் இருந்தாலும்.. இல்லை நிதானத்தில் இருந்தாலும்.. கோபத்தில் இருந்தாலும் சரி.. பார்த்திருக்கிறானே.. குறுகிய காலத்தில் அவளுக்கு
நிகழ்ந்தவைகளை.. அவள் முகத்தில் தெரியும்.. கனிவு.. அன்பான பார்வை.. மகிழ்வினால் துள்ளும் கண்கள் என தெரிபவள்.. ஏனோ.. உணர்வுகளை அடக்கிக் கொள்கிறாள்..
அவளின் மாற்றம்.. கண்ணாடியை போலே.. அப்படியே பிரதிபலித்து.. இருப்பினும்.. ஏதும் காட்டிக் கொள்ளவில்லை.. அவன்..
வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்... 😕
பள்ளி வந்தவுடன்.. ஷ்ரித்திக் அவள் பக்கம் உள்ள கதவை திறந்துவிட.. திரும்பி கூட பாராது சென்றுவிட்டாள்.. 😕😕 ஷிவாக்ஷி..
'தன்னை தவிர்க்க முயல்கிறாளோ.. ??' என தோன்றிற்று.. முதல் முறையாக.. 🤨🤨
'இப்ப தான்.. என் பக்கம் வந்துட்டு இருந்தா.. ம்ப்ச்.. அகெயன் முதல்ல இருந்து.. அஅ..' என தன் தலையை அழுந்த கோதி விட்டவன்.. தன் மேலுள்ள கோபத்தில் ஸ்டீயரிங்கை ஒரு குத்து விட்டான்..
😤😤
பள்ளிக்குள் சென்று.. வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு அவளுடைய வகுப்பு முதல் பிரியட் என்பதால்.. வகுப்பிற்கு நேரே சென்று விட்டாள்..
தன் மனநிலையை சிரமம் கொண்டு மாற்றி.. மாணவர்களுக்கு ஓவியத்தை பற்றி முன்னுரையை மொழிந்து.. பெரிய ஓவியங்களை வரைய மிக எளிய வழியில் கற்றுக் கொடுக்க.. மாணவர்களும் உற்சாகமாயினர்..
வகுப்பு நேரம் முடிந்ததும்.. நேரே ஸ்டெஃப் ரூமுக்கு சென்றமர்ந்த
ஷிவாக்ஷிக்கோ.. அவன் பால் சாயும் மனதை கட்டுப்படுத்த பெரும்பாடாய் இருந்தது.. கோபம் கூட கொள்ள முடியவில்லை.. பேசாமல் இருப்பது சாத்தியமா.. ?? என்று சந்தேகமே வந்துவிட்டது.. 'பேசாம தான இருக்க முடியாது.. கண்டுக்காம விட்டுடளாம்..' என முடிவு செய்தாள்..
ப்ரக்யா.. ஷிவாக்ஷியின் யோசனை நிறைந்த முகத்தை பார்த்தவள்.. அவளருகே சென்றமர்ந்தாள்.. 🙂
"ஹாய்... ??!!" என்றிட..
அப்போது தான்.. ப்ரக்யா.. அவளருகே அமர்ந்திருப்பதை கண்டாள்.. "ஹாய்.. ??" என்றாள்.. ஷிவாக்ஷி.. 😕
ப்ரக்யா.. "என்ன.. ?? ஒரு மாதிரியா இருக்கற மாதிரி இருக்க.. ?? ஹோ.. ஐ'யம் சார்.. ஃப்ரண்ட்ஸ்.. ??" என்று கையை நீட்ட.. 😕
ஷிவாக்ஷியும் இன்முகமாக அவள் கைகளில் தன் கைகளை வைத்து குலுக்கினாள்.. 🙂 ஏனோ.. ப்ரக்யாவை பார்க்கும் போது.. வேற்றவர் என்று தோன்றவில்லை.. வெகு நாள் பழகிய உணர்வு தான் தோன்றிற்று.. 🙂
"ஓகே.. சொல்லு.. என்ன யோசனை.. ?? வீட்டில ஏதாவது ப்ராப்ளமா.. ??" என ப்ரக்யா வினவினாள்.. சிநேகமாக.. ☺️
ஷிவாக்ஷிக்கும்.. யாரிடமாவது கொட்டினால் தேவலாம்.. என தோன்றவே.. ஷ்ரித்திக்கை கண்டது.. அவனுடன் ஏற்பட்ட நட்பு.. திருமணம் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் மொழிந்தாள்..
ப்ரக்யாவும் அனைத்தும் கூர்ந்து கேட்டவள்.. பெரு மூச்சு விட்டாள்.. "ம்ஹூம்.. ப்பா.. கொஞ்ச நாளுல நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட.. ஷிவா.. பட்.. யூ நோ வாட்.. ?? யூ லவ் ஹிம் சோ டீப்லி.. அதனால தான் உன்னால வெறுக்கவும் முடில ஒதுக்கவும் முடில.. எங்க நீ லவ் பண்ணிடுவியோன்னு பயம் உனக்கு.. அந்த பயத்தை நீ பணம், ஸ்டேட்டஸ், இத நீ ஒரு ஆயுதமா யூஸ் பண்ணிக்கிற.. ?? கரெக்டா.. ??"என சரியாக கூறினாள்.. ப்ரக்யா.. ☺️🙂 மென்னகையுடன்..
ஆச்சரியமாக விழித்தாள்.. இவள்.. 😳😳
"உண்மையாவே.. உனக்கு.. பணம், தகுதி, தராதரம் இதெல்லாம் உனக்கு ஒரு விஷயமே இல்ல.. பட்.. அதை வைச்சு பேசுனா தான் நீ ஹர்ட் ஆவ.. அது வேற டிபார்ட்மெண்ட்.. உனக்கு உன்னோட ஹஸ்பெண்ட பிடிக்கும்.. ஆமாதானே.. ??" என்று அனைத்தும் பிட்டு பிட்டு வைக்க.. ☺️
ஷிழாக்ஷி 'பே...' என விழிப்பதை தவிர ஒன்றும் செய்யவில்லை.. 😳😳
"எப்படி சரியா சொன்னேள்.. ??" என வினவ..😳
"உன் இடத்தில இருந்து யோசிச்சேன்.. தட்ஸ் இட்.." என
தோளை குலுக்கினாள்.. ப்ரக்யா... 😀
மேலும்.. "இப்படி லவ் பண்ற.. உன்னாலே.. கண்டிப்பா.. அவர அவாய்ட் பண்ணவே முடியாது.. அது உனக்கு தான் கஷ்டமாவும் இருக்கும்.. நீ தான் ரொம்ப ஹர்ட் ஆவ.." என்று ப்ரக்யா அதையும் சரியாக கணித்து.. 🤨 ஒற்றை புருவத்தை உயர்த்தி கதைத்தாள்...
"தெரிஞ்சது தான்.. என்னால முடில.. நேக்கு அவாளோடவே இருந்திடலாம்னு தோன்றது.. ரொம்ப பிடிக்கும்.. ஆனா.. இந்த ஆனா தான் இடிக்கறது.. ??" என ஷிவாக்ஷி மனதை திறக்க.. 😕
"இந்த ஆனா என்ன தெரியுமா.. ?? உன் கழுத்தில இருக்குற தாலி தான்.." என்க.. 😕😕
ஷிவாக்ஷிக்கே சற்று புரிவது போல் இருந்தது.. ஏனெனில்.. அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் உலவியவளுக்கு.. புரிவது போலிருந்தது.. ப்ரக்யாவின் வார்த்தைகள்.. 😕😕
"யோசிக்காத.. நான் சொன்னது தான் உண்மை.. இந்த தாலி.. மாயாவுக்காகவே செஞ்சது அப்படின்னும்.. யாருக்கோ.. போக வேண்டியது.. உன்கிட்ட இருக்குன்னும் ஒரு எண்ணம்.. ஆனாலும்.. இது அவர் கட்டுனதுன்னு.. அமைதியா இருக்க.. தாலி உனக்கே உனக்குன்னு செஞ்சிருந்தா.. நீ இப்படி இருக்க மாட்ட.. உனக்கு தாலில கூட பொஸஸ்சிவ்னஸ்.." என்று விட்டு.. ப்ரக்யா சிரிக்க.. ஷிவாக்ஷியும்.. இணைந்து கொண்டாள்.. 😅😅
"அதுவும் இல்லாம.. உனக்கு உன்னோட கல்யாணத்த பத்தி.. சில ட்ரீம்ஸ் வேற.. அது தான்.. இந்த ஆனா.. சரியா.. ??" என அவள் மனதில் இருப்பதை சரியாக கூறினாள்... 😅😅
"எல்லாமே சரியா சொல்றேள்.. ஆனா.. ??" என்று ஷிவாக்ஷி தொடங்க.. 😕
ப்ரக்யா அலுப்பாக..
"என்ன நீ.. ?? மறுபடியும்.. ஆனாலயே.. ஸ்டார்ட் பண்ற.. ?? இங்க பாரு.. உன் மனசுல இருக்கறத.. என்னை மாதிரி யாரும் தேடி தேடி சொல்ல மாட்டாங்க.. போய்.. உன் புருஷன் கிட்ட.. மனச விட்டு.. எனக்கு இப்படி கல்யாணம் பண்ணணும்.. ஒரு புது தாலி வேணும்.. இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேளு.. ?? உன் புருஷன் தான ?? என்ன தப்பு..." என்றிட.. 🤨🤨
ஷிவாக்ஷியின் யோசனை நிறைந்த முகம்.. கண்டு.. "இங்க பாரு.. ஸ்டேட்டஸ பெருசா பாக்காத.. இதனால பெரிய ப்ராப்ளம் வாரது.. அப்படியே வந்தாலும்.. உன் ஆளு பாத்துப்பாரு.. அப்பறம் என்ன.. ?? இன்னிக்கு நடந்தத வைச்சு.. ஃப்யூச்சர கணக்கு போடாத.. எவ்ளோ அழகான ஹஸ்பெண்ட் உனக்கு கிடைச்சிருக்காங்க.. போய் நல்லா.. சந்தோஷமா வாழுவியா.. ?? அது விட்டுட்டு.." என்றுவிட்டு ப்ரக்யா.. அவள் யோசிக்கட்டும்.. என எழுந்து சென்றாள்.. 🤔🤔
ஷிவாக்ஷிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினாள்.. இப்போது... தான்.. பணம் ஸ்டேட்டஸ் இது வாழ்வில் விரிசலை உண்டு பண்ணுமோ.. என விலக நினைத்தவளுக்கு.. இது ஒரு விஷயமாகவே புலப்படவில்லை என்று அவளிடம் சொன்ன ப்ரக்யாவை எண்ணினாள்..
எந்தவொரு முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை.. வெகு நேர யோசனையின் பின்.. பிரிவை தேர்வுசெய்ய.. ஷிவாக்ஷி எண்ணவே.. அது தான் சாலச் சிறந்தது என்று மனமும் ஒரு வழியாய் முடிவு செய்தது..
செய்த முடிவு தள்ளிபோடாது.. இல்லத்திற்கு சென்றதும்.. கிளம்பலாம்.. என தனக்குள் முடிவுக்கு வந்தாள்..
-----------------------
To be continued.. 😉
(aprm.. indha vote, comments um.. mukkiyam bigilu... ❤️)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro