Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

7

மித்ரன் மற்றும் ஜீவா சந்தோஷமாக பேசிக்கொண்டே பைக்கில் வர...என்னயாடா ரௌடினு சொன்னே இன்னைக்கு இருக்கு டா உனக்கு...உன்னை என்ன செய்தால் தகும் என யோசித்தபடி நிலா வந்து கொண்டிருந்தாள்..

யோசித்தவளின் எண்ணத்தை கலைத்த வண்ணம் எதிரே கார் வருவதை கண்டவள்...செத்தான் டா சேகரு என மனதில் நினைத்து கொண்டு...ஸ்கூட்டியை ஸ்லோவ் செய்து தடுமாறி விழப்போனவள் போல் ஆஆஆ என நிலா கத்த...பின்னால் திரும்பி திரும்பி பேசிய ஜீவா..முன்னால் வந்த காரை கவனிக்காமல்..கீழே விழப்போனவளை பார்த்து பதறி முன்னாள் வந்த காரை இடித்தான்...

போச்சி என தலையில் கை வைத்த ஜீவா...நிலாவை பார்க்க...ஈஈஈஈஈ என இழித்தவள்...மித்ரன் பார்த்ததும் கண்ணனா வலிக்குதுனா என முகத்தை சுளித்து அழுபவளை பார்த்து...
ஹேய்...பார்த்து டா என பதறி அவளை தூக்கியவன்...அடிப்பட்டுறுச்சா நிலா மா என கேட்கவும்.. இல்லனா..லைட்டா கால் வலிக்குது என கூறி கொண்டிருக்க...

அடடா...என்ன ஒரு பாசமலர்...
எருமைகளா?? இவ்வளவு நேரம் சண்டை பிடிச்சீங்களே...இப்ப என்ன நடு ரோட்ல கொஞ்சிக்கிறீங்க என ஜீவா கேட்க...
அது அப்படி தான் டா...அடிச்சாலும் புடிச்சாலும் நான் அண்ணன், இவ தங்கைன்றது மாறாதுலே என மித்ரன் கூற..

ஹேய்...பைக்குக்கு என்ன ஆச்சி என ஜீவாவை மித்ரனிடம் கோர்த்து விட...அப்பொழுது தான் நினைவு வந்தவனாய் மித்ரன் ஜீவாவை முறைக்க மித்ரனின் பின்னாலிருந்து நிலா பழிப்பு காட்டி கொண்டிருந்தாள்...

ஜீவா சைகையால் மித்ரனிடம் பின்னால் பாரு என காமிக்க...மித்ரன் திரும்பும் நேரம் ஹூ என வலியில் முகத்தை சுறுக்கினாள் நிலா..

உலக மகா கேடி இவ என வாயில் முனுமுனுத்தவனை மித்ரன் முறைத்து பார்க்க...ஹேய்...அந்த கார்க்கு என்ன ஆச்சி...ஏன் அப்படியே நின்றுச்சி என பேச்சை மாற்றியவன் பதறிய படி ஜீவா காரை நோக்கி ஓட...அப்பொழுது தான் கவணித்தவர்கள் அவனிர்க்கு பின்னால் ஓடினார்கள்...

கார் கதவை பதற்றத்துடன் தட்டியவர்கள் உங்களுக்கு என்னாச்சி...எதுவும் ப்ராப்ளம் இல்லையே என மித்ரன் கேட்க...

இல்லை...இவ தான் பயந்து மயங்கிட்டா என அருகில் மயங்கி கிடந்தவளை காண்பிக்க...இதுக்கேவா என ஜீவா முழிக்க...எவ்வளவு அழகு..எவ்வளவு சாந்தம் என கண்களாலே அவளை வருடியவன்...ச்சீ..தப்பு டா...அவ மயங்கி கிடக்குற...இந்த நேரம் பார்த்து என தன்னையே திட்டிக்கொண்ட மித்ரன்.. ஹேய்..தண்ணி தொளிச்சி எழுப்பி விட வேண்டியது தானே என மித்ரன் கேட்க..

கார்ல வாட்டர் பாட்டில் இல்லை...காலேஜ்க்கு பக்கத்துல வந்துட்டோம்லேனு...அக்கா உள்ளே தண்ணி எடுக்க போய்க்குது என கூறிக் கொண்டிருக்க...

அங்கே வந்தவளை பார்த்தவன்...ஹாய் டி என மித்ரன் கூற...இந்த நன்டு சுன்டுகளுக்குளாம் நீ தான் அக்காவா என ஜீவா கேட்கவும்...ஆமா..ஆமா...ஃபர்ஸ்ட் யேர்...இவ கொஞ்சம் பயப்பிடுவா...அதான் என கூறிக்கொண்டே தண்ணீரை தெளித்தவளிடம்...பார்த்தா அப்படி தெரியலயே என ஜீவா கேட்க...
மற்றவள் முழிக்க...ரொம்ப பயப்புடுவானு சொல்லு என்றான் ஜீவா..

டேய்...இதுங்க கிட்ட வாய் குடுத்துறாதே...இவ அப்படியே நிலா மாதிரி..
(மித்ரன் கூட அடிக்கடி கல்லூரிக்கு வந்து எல்லோரிடமும் வம்பு இழுப்பாள்)

இவ கிட்ட வாய் குடுத்தா..நீ தான் மாட்டிகிட்டு முழிக்கனும்...அப்புறம் இவ இருக்காளே(மற்றொருவளை காட்டி) அழுதே ஊரை கூட்டிடுவா என கூற...

சரி...உள்ளே போய் பேசிக்களாம் என மித்ரன் பைக் அருகில் சென்று ஜீவாவின் கண்ணத்தில் ஒரு அறையை விட்டவன்...என் பைக்க இடிச்சதுக்கு உன்னை அடிக்க மறந்துட்டேன் என்றான்..
(அது நம்ம ஹீரோக்கு பைக் தான் எல்லாம்...அதுக்கு ஏதாச்சும்னா சும்மா விட மாட்டான்)..

நடத்து டா நீ என மித்ரனை பாவமாக பார்த்தவன்...நிலாவை திரும்பி பார்க்க...ஈஈஈஈஈ என இழித்தாள்...

கல்லூரிக்குள் சென்றவர்கள் அவர்களின் நண்பனின் பட்டாளத்திர்க்குள் செல்ல...
ஹாய் நிலா என கை காண்பித்தவர்களிடம் ஹாய் ப்ரதர்ஸ் என கை காண்பித்து அருகில் சென்றவளிடம் எந்த டிப்பார்ட்மென்ட் என சியாம் கேட்க...கழுதை கெட்ட குட்டி செவரு...இவ என்ன கலெக்ட்டருக்கா படிக்க போறா என கூறிய ஜீவாவை முறைத்து பார்க்க...ஓய்..நான் உனக்கு சீனியர்...இங்கே உன் கேப்மாரிதனத்தைலாம் சுருட்டி வச்சிக்க என ஜீவா சொல்லிக்கொன்டிருக்கவும் பாவமாக முகத்தை வைத்து மித்ரனை பார்க்க...

அவனோ...அங்கே நடப்பவை எதையும் காதில் வாங்காமல்...சுவர்க்கதில் இருப்பது போல் இருந்தான்...அவனின் பார்வையோ சுவர்க்கத்தின் வாசலை பார்ப்பது போலே குளிர்ச்சியாக இருந்தது...

இவன் அப்படி என்னத்தை பார்க்கிறான் என திரும்பி பார்த்தவள்...இவங்களையா பார்க்குறேன்...ஏன் இப்படி ஒரு ரியாகஷன் என மனதில் நினைத்தவள்...ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..நானும் உங்க செட் தான் என நிலா அவர்களிடம் கை குடுக்க செல்ல...

ஆமா,.ஆமா..."பெரிய சேவிங் செட்டு" என ஜீவா கூறவும்...நிலா முறைக்க..மற்ற அனைவரும் சிரித்தனர்...

டேய்...உனக்கு இன்னைக்கு சோத்துல எலி மருந்த வச்சி தரலே...என் பேரு நிலா இல்லை டா என கூறிக் கொண்டே.. அது அப்படி தான் கொலைக்கும்...நீங்க கண்டுக்காதீங்க,.. "ஐ ஆம் நிலா" என கை குடுத்தவள் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க...

என்ன ஷிவானி,.. உன் சிஸ்டர்ஸ்ஸ எங்களுக்கு இன்ட்ரோ பன்ன மாட்டியா??
உன் தங்கைகள் எங்களுக்கும் தங்கைகள் தான் மா என சத்யா கூறி...மித்ரனிடம் முறைப்பை பெற்று கொண்டான்..

நாம்ம என்ன சொல்லிட்டோம்னு பக்கி இப்படி முறைக்குது என்று பாவமாக சத்யா முகத்தை வைத்துக் கொண்டிருக்க..

இவ பேரு ரேனு,..என் ஓன் சிஸ்..இவ என ஷிவானி வாயை திறக்க,.. அவுங்க அவுங்க நேம அவுங்க தான் சொல்லனும்...நீ ஏன் சொல்லுறா ஷிவானி...நீங்க சொல்லுங்க என மித்ரன் கேட்க...

ஏற்கனவே பயந்து இருந்தவள்...மித்ரனின் பேச்சை கேட்டு பயம் அதிகரிக்க...
இரு உதடுகளையும் பிரிக்க முடியாமலும்...தொன்டையில் ஈரம் இல்லாமலும்,.. கண்களில் நான் இப்ப வந்துருவேன் என கண்ணீர் மிரட்ட..
கால்கள் இரண்டும் நடுங்க..
உள்ளங்கைகள் இரண்டும் பயத்தில் ஈரமானதால் துப்பட்டாவில் கையை வைத்து தேய்த்து கொண்டிருக்க...ஹேய்...ரிலாக்ஸ் டி..சொல்லு..நேம் கேக்குறாங்களே...ஏதாவது நினைச்சிக்குவாங்க என அவள் காதில் ரேனு குசுக்குசுக்க..
இவளோ பாவமாக முகத்தை வைத்து இரு உதடுகளை கூட பிரிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்தாள்..

இவளின் இந்த தடுமாற்றத்தை பார்த்து...இப்படியும் பொண்ணுங்க இருக்காங்களா...சோ க்யூட் என அசந்து போனவன்..வண்ணத்துப் பூச்சியை போல் சிமிட்டிய கண்களை பார்த்துக்கொண்டே இருந்தவன்...ஒற்றை புருவத்தை தூக்கி...
ஹ்ம்ம்,..சொல்லுங்க என்க...பதற்றத்தில்..
"தீ...தீ.." என இழுக்க...ரேனு அவள் கையை அழுத்தி பிடிக்கவும் "தீப்தி" என கூறி கண்கள் கலங்க ஓடியவளின் பின்னால் ரேனு வும் ஓட...என்னாச்சி என நிலாவும் அவர்கள் சென்ற திசையின் பக்கம் சென்றாள்...

ஏன் இப்படி பயப்பிடுறாங்க என சத்யா கேட்க,.. அவ பசங்களுக்கு கொஞ்சம் பயப்பிடுவா...தப்பா நினைச்சிக்காதே..நான் போய் பார்க்கிறேன் என ஷிவானி செல்ல..
ஓஹோ என வாய்விட்டு நினைத்த படி அவர்கள் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தான் மித்ரன்...
.
.
.
.
.
.
.
.
.
.
....

நம் கதாநாயகியின் பெயரை சரியாக யூ.டி..பப்லிஸ் பன்ன போகின்ற சில நிமிடங்களுக்கு முன்னால் சரியாக கண்டுபிடித்தார்...

நம் வாட்பேடில் உலா வரும் நம் அன்பு தங்கை...
"டாக்டர் Sneha_RV அவர்கள்"..

சரியாக கண்டுபிடித்ததர்க்கு பாராட்டை தெறிவித்துக்கொள்வோம்...

நீங்களும் பாராட்டுங்க நட்பூஸ்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro