Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

5

டேய்...டேய்...சீக்கிரம் டா...எந்திரி...டைம் ஆகுது என கத்திய படி எழுப்பியவளை தலையை தூக்கி பார்த்தவன்... ப்ச்ச்..வந்து தூங்கு என அவளையும் அருகில் இழுத்து தூங்க வைக்க முயற்சித்தவனின் முதுகில் அடித்தவள்...எந்திரி டா....நைட் ஃபுல்லா தூங்க விடாம...இப்ப இழுத்து போத்திட்டு தூங்குறத பாரு என கத்தியவளை...

அடியேய்...குட்டு ச்சாதானே...நிம்மதியா தூங்க விடு டி என்றவனை முடியாது...முடியாது...நான் ரெடியாகி ஒரு மணி நேரம் ஆச்சு...இன்னும் தான் நீ எந்திக்கிறே...பேட் பாய் என்றவளை...

அடி எருமை...உனக்கு இன்னைக்கு காலேஜ்  ஃபர்ஸ்ட் டே தான்...அதுக்காக இப்படி எல்லாம் அநியாயம் செய்ய கூடாது டி என புலம்பியவனை....கோவமாக பார்த்தவள்...
ஹும்ம்...உனக்கு கொஞ்சம் ஆச்சும் அக்கறை இருக்கா?? நான் ஃபர்ஸ்ட் டே வே எவ்வளவு அழகா ரெடியாகி இருக்கிறேன்...நீ இன்னும் எந்திரிக்கலை தடி மாடு என கத்தியவளிடம்....

ஹாஹா...நிலா செல்லம்...ஃபர்ஸ்ட் டே தான் இப்படி சீக்கிரமே முளிச்சிட்டு எப்ப டா...டைம் ஆகாது...காலேஜ் போகலாம்னு...ஓடாத வாட்ச்ச பார்த்து வெய்ட் பன்னிட்டு இருப்பா...அப்புறம் ஏன் டா மணி எட்டு ஆச்சு...தூங்க முடியலயேனு தோனும் என கூறியவனை சரி டா...இப்ப நல்லா முளிச்சிட்டீலே...சமத்தா போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா என்க முடியாது முடியாது என இழுத்து போத்திக் கொண்டு மறுபடியும் தூங்கியவனிடம்...

அவன் அருகில் சென்று...

டேய் அண்ணா....இன்னைக்கு இம்பார்ட்டன்ட்டா நீயும் சீக்கிரம் எந்திருக்கனும் டா என்றவளை ஏன் என்பது போல் தலையை உயர்த்தி பார்த்தவனிடம்...

லூஸு அண்ணா...இன்னைக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டே தானே...கலர் கலர் ஃபிங்கர்ஸ்ஸ பார்க்கலம்...நீ சீக்கிரம் எந்திருச்சா...நீட்டா ரெடி ஆகி ஃபர்ஸ்ட் சைட்லயே அண்ணிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்...

அப்படி லேட்டா எந்திரிச்சினா ஏதாவது மிஸ் ஆகி...ஐ மீன்...
" ஃபேர் ஆன்ட் ஹேன்ட் ஸம்" மாதிரி எதுவும் போட முடியாம...உன் ஆதார் கார்ட் ஒரிஜினல் முகத்தை கேர்ள்ஸ் பார்த்துட்டாங்கனா உனக்கு பொண்ணு கிடைக்காம போயிடுமே என பொய்யான வருத்தத்துடன் கூறியவளை...எழுந்த வேகத்தில் வீடு ஃபுல்லா அவளை அடிக்க துரத்தி செல்ல...அவளோ பளிப்பு காண்பித்து ஓட...

"ரன்னிங்கில் முதலிடத்தில் வருபவனிடமிருந்து தப்பிக்க முடியுமா??" என....அவளை இழுத்து மண்டையில் "நங்கு, நங்கு" என கொட்டியவன்...அண்ணன் கிட்ட பேசுர பேச்சா டி இது என விடாமல் கொட்டி கொண்டிருக்க....

டேய்...விடு டா...அவளை...காலையிலேயே சண்டை பிடிக்காம...என் பிள்ளை பாவம் என கூறியபடி பாக்கியா வர...ஹ்ம்ம்...நல்லா சொல்லு மா...என்னை எப்படி அடிக்கிறானு தெரியுமா என்று நிலா வாயை திறக்க...அடியேய்...வாய மூடு டி...உன்னை தான் சொல்லுறேன் என்ற தாயை பார்த்தவள்...

அதானே...நீ என்னைக்கு எனக்கு சப்போர்ட்க்கு வந்தே...புதுசா இருக்கேனு யோசிச்சேன் என உதட்டை சுளித்தவள்...அது சரி...அப்புறம் எதுக்கு டேய்னு சொன்னா என்றவளிடம்....அட ஆமாலே... நீ பொம்பள பிள்ளைளே...ப்ச்ச்...மறந்தே போயிட்டேன்...
சாரி டா தங்கம் என பாக்கியா கூறி முடிக்க...

ஹாஹா...கரேக்ட்டு...இது பொம்பள பிள்ளை இல்லை....ஏன் பொம்பள பஜாரி கூட இல்லை...அங்மார்க் ஆம்பளை காளை...ரௌடி...என அங்கே சரியான நேரத்திர்க்கு வந்த ஜீவா கூற...

ஹாஹா...டேய் மச்சான்...கரேக்ட் என்ட்ரி டா என கூறியவனிடம்...ஈஈஈஈஈ...தேங்ஸ் டா...மச்சான்...சீக்கிரம் ரெடியாகி வா டா...டைம் ஆகுது என கூறி அமர்ந்தவன்...அப்பொழுது தான் அங்கே பத்திரகாளியாக இருந்த நிலாவை பார்க்க..
ஐயையோ....இந்த பெண் சிங்கத்துக்கிட்ட நம்மளை தனியா விட்டுட்டு போயிட்டாங்களே....இவ வேற இப்படி பார்க்குறேலே...என்ன நடக்க போதோ என முழித்து கொண்டிருந்தவனை...பார்த்தவள்...
கண்டு கொள்ளாமல் சென்றாள்...

சரி...மேடம் இன்னைக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டே னு எனக்கு எஸ்க்யூஸ் தந்துட்டாங்க போல என நினைத்தவன் தன் மொபைலை எடுத்து நோன்ட ஆரம்பித்தான்...

டேய் கண்ணா...சீக்கிரம் சாப்பிட வா டா...அப்புறம் டைம் ஆச்சினு காலேஜ்ல கண்ட கருமாத்தயும் சாப்பிடுவா என்ற தாயிடம்...உன் சாப்பாடுக்கு அந்த கண்ட கருமாத்தமே மேல் என்ற நிலாவை முறைத்தவர்...இன்னைக்கு உனக்கு சாப்பாடு கட் டி...நீ வந்து சாப்பிடு ஜீவா என கூறி பாக்கியா  சமையல் அறைக்கு சென்ற அடுத்த நிமிடத்தில்... ரவா தோசையை ருசித்து ருசித்து திண்டு கொண்டிருந்த நிலாவிடம்...
உனக்கு தான் சாப்பாடு கட்னு சொன்னாங்களே...ஏன் டி...இப்படி வந்து சாப்பிடுறே என ஜீவா கேட்க...எனக்கு சாப்பாடு கட்னாலும் அதை நான் தான் முடிவு பன்னனும் என இழித்தவளை...சரியான ராங்கி என முனுமுனுத்தான் ஜீவா...

டேய் மித்ரன் வா...வா என அவசரமாக வந்தவனுக்கு தோசையை தட்டில் வைத்து ஜிவா குடுக்க...தேங்ஸ் டா என கூறியபடி சாப்பிட ஆரம்பித்தான்...

( சாப்பிடும் போது நாம்ம இடைஞ்சல் பன்ன கூடாது...அதனால, அவங்க சாப்பிடட்டும்...நாம்ம கொஞ்ச நேரம் இவங்களை பத்தி பார்த்துட்டு வருவோம்)

நம்ம கதையின் நாயகன் மித்ரன்...
ச்செல்ல பெயர் கண்ணன்..வீட்டில் அப்படி தான் அழைப்பார்கள்...எல்லோரு மேலயும் அன்பா இருப்பான்...பட படனு பேசுவான்...நட்புகளுக்கு டான்...தங்கச்சினா உயிர்...
எல்லாருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்லே...அதே மாதிரி இவனுக்கும் இருக்கு...எதுலயுமே தான் தான் ஃபர்ஸ்ட்டா இருக்கனும்னு நினைப்பான்...முக்கியமா அடுத்தவங்க உபயோகம் செய்த பொருள தான் உபயோகம் செய்ய மாட்டான்...

அடுத்து நிலா:
வீட்டுல அருந்த வாலு...வீட்டுல மட்டும் இல்லை...எங்கு போனாலுமே...அண்ணனா உயிர்...எல்லோரு மேலயும் பாசமா இருப்பா...தன் அண்ணனோட ஒரே கெட்ட பழக்கத்தையும் மாத்த முயற்சி பன்னிட்டு இருக்கிறா..

ஜீவா:
பக்கத்து வீட்டில் வசிப்பவன்...மித்ரனோடு ஒன்றாக படித்தவன்...படிக்கிறவன்...ரொம்ப நல்லவன் இல்லை...நல்லவன் தான்...

பாக்கியா:
தன் கணவர் இறந்ததும் பிள்ளைங்களுக்காக என வாழுபவர்...மித்ரன், நிலா...இருவர் மீதும் சரிசமமாக பாசத்தை வைத்திருப்பவர்.
.
.
.
.

ஒரு வழியாக எப்படியோ சாப்பிட்டு விட்டு மித்ரன் மற்றும் ஜீவா ஒரு பைக்கிலும்...நிலா ஸ்கூட்டியிலுமாக...மூவரும் கல்லூரியை நோக்கி செல்கிறார்கள்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro