26
சிவ் தன் பக்கம் திரும்பவேமாட்டான் என உறுதியாக சொன்ன மனதிடமும் "அவனுக்கு நார் தான் மனைவி என போராடி கொண்டிருந்தாள் நிலா"..
"நீ என்ன வேணாலும் பன்னு டி.. நான் உனக்கு இந்த ஜென்மத்தில இல்லை.. எந்த ஜென்மத்திலயும் கிடைக்க மாட்டேன் டி"என மனதிலே மந்திரம் போல் கூறி கொண்டிருந்தவனின் மனமோ.. "மடையா.. என் கிட்டையே பொய் சொல்றியா"என எகத்தாளமாக சிரித்தது..
"இவ முகத்தில எப்ப சிரிப்பு வரும்.. எப்போ சிவ் அண்ணா இவள மன்னிப்பாங்க.. என்ன பன்னி இவுங்கள சேர்த்து வைக்கலாம்" என யோசித்துக் கொண்டிருந்தாள் ரேனு..
"நிலா.. ஹேய்.. நிலாஆஆஆஆ.. நிலா" என கத்திகொண்டிருந்தவனின் சத்தம் தூரத்தில் இருந்து கேட்பது போல் உணர்ந்தவள்.. பல எண்ணங்களில் இருந்து வெளிவந்து எதிரே நின்ற சிவ்வை பார்த்து விழிக்க.. "என்ன கண்ண திறந்துட்டே தூங்குறியா?? நீ லாம் படிக்க வரலேனு எவன் அழுதா?? வீணா இங்கே வந்து எங்க உயிர வாங்கிகிட்டு" என திட்டியவன்.. "கெட் அவ்ட்" என வாசலை நோக்கி கை நீட்டவும்.. அவன் திட்டியதனைத்தும் இவள் காதில் இன்ப தேன் வந்து பாய்வது போல் இருக்க.. சிரித்தபடியே வகுப்பறையில் இருந்து வெளியேறினாள்..
"ஹேய் ரேனு" என முன்னிருக்கையில் அமர்ந்த அஷோக் திரும்பியவாறு.. "எனக்கு ஒரு டவுட்டு" எனவும்.. கேள்வியாய் பார்த்தவளிடம்.. "இல்லை.. நாங்களும் இந்த காலேஜ்ல சேர்ந்து ஒன் மன்த் ஆகிருச்சி.. இது வரை எங்க யாருகிட்டையுமே சிவ் சார் கோவப்பட்டதே இல்லை.. இன்னும் சொல்ல போனா ஃப்ரெண்ட்ஸ் மாதிரி தான் எங்களை ட்ரீட் பன்னுவாரு.. க்ளாஸ் நடக்கும் போது நாங்க பாட்டுக்கு வெளியே போனா கூட கண்டுக்க மாட்டாரு.. அப்படி இருக்குறவரு எதுக்கு நிலாவ மட்டும் சும்மா சும்மா திட்டிட்டு இருக்குறாரு"என கேட்க.. இந்த கேள்வியை சுற்றி இருந்தவர்களும் எதிர்ப்பார்த்த படி ரேனுவை பார்க்கவும்.. அவள் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..
"வாவ்.. மித்தூ.. இந்த பொண்ண பாரேன் எவ்வளவு அழகா இருக்குலே" என குழந்தைகள் காப்பகத்திர்க்கு சென்று அவர்களுடன் எடுத்து வந்த புகைப்படத்தை கைப்பேசியில் பார்த்தபடி கூறிய தீப்தியின் அருகில் நெருங்கியவன்.. "ஹ்ம்ம்.. அழகா இருக்கு.. பேபீஸ்னாலே அழகு தானே.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. உனக்கும் தான் பேபீஸ்னா ரொம்ப பிடிக்குமே.. அப்புறம்" என இழுத்தவனிடம்.. "நாம்மலும் பெத்துக்கலாமே" என்று தெளிவாக சொன்ன தீப்தியை பார்த்து ஆச்சரியம் அடைந்தான்..
தனது மனது தெளிவடைந்ததை தானே நம்ப முடியாத நிலையில் இருந்தாலும்.. தனக்காக தான் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் தெரிந்தும் தங்கள் காதலுக்காக அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காத மித்ரனுக்காக தங்கள் வாழ்க்கையை இன்பமாக மாற்றலாம் என தனக்குள் ஒட்டு மொத்த தைரியத்தையும் கொண்டு வந்து தன்னையே தன்னவனுக்கு கொடுக்க முன் வந்தாள்..
வழக்கத்துக்கு மாறாக விடியல் வேகமாக வர.. "இன்றைக்குனு பார்த்து இவ்வளவு சீக்கிரம் விடியனுமா தீபு குட்டி" என தன்னவனின் கிசுகிசுப்பிர்கு "நானும் அதே தான் நினைத்தேன் மித்தூ குட்டி" என தன்னவனின் மார்பினுல் முகம் புதைத்தவளிடம்.. "இது என்ன?? புதுசா என் செல்லம் எனக்கு ஏதோ பேர் வச்சிக்குது போலே" என தன்னவளின் கழுத்தில் தன் மீசையால் கோலமிட.. "போங்க மித்தூ.. நான் குளிக்க போறேன்" என ஓடி விட்டாள்..
"நிலா.. நாம்ம இங்க வந்திருக்கவே கூடாதுனு தோனுது.. இப்ப சிவ் அண்ணா கோவம் உன்னை பார்க்க பார்க்க கூடிட்டே தான் இருக்கே தவிர கொஞ்சம் கூட குறையல.. சுத்தி இருக்குறவங்கலாம் என்ன ஏதுனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. நாம பேசாம ஸ்ட்டடீஸ டிஸ்கண்டினியூ பன்னிரலாம்" என்ற ரேனுவின் கூற்றை ஆமோதிப்பதாய் கண் கலங்க தலையசைத்த நிலாவையும் அவளை கட்டியணைத்த ரேனுவையும் தூரத்தில் இருந்து பார்த்த சிவ்விர்க்கு மனதில் பாரம் நிரந்தரமாக குடியேறியது..
"தீப்பு செல்லம்.. நாம்ம ஒரு வாரத்துக்கு எங்கேயாவது வெளியே போறோம்.. எங்கே போகலாம்னு சொல்லு.. உன் ஆசைதான் எனக்கு வேணும்" என கன்னத்தை கிள்ளியபடி சந்தோஷமாக சொன்ன மித்ரனுக்கு தெரியவில்லை.. இனி அவளையே வேண்டாம் என சொல்ல வைக்க விதி காத்திருக்கிறது என்று..
Hi frndz..
Yellorum asingamaa thitta vaai yedukreenga Pola..
Mannichirunga..
Indha story ungaluku niyaabagam irukaadhunu yenaku theriyum..
Bcz naanae marandhutaen.. concept laam total ah marandhuruchu..
Sari.. naan start panna story ah mudichi vaikradhu yen kadamainu than vandhaen.. mudinja alavu best ah kuduka try panraen.. thappu irundhaa sutti kaatunga frndz...
Seekram ud kuduka try panraen
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro