Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

21

வீதி முழுதும் மிதிவண்டியும், ஊர்தியும், மினி பஸ்களும் நிறைந்து போக்குவரத்து நெரிசலாக இருக்க..
ஓட்டுனர்கள் தங்கள் வண்டிகளை எங்கு நிறுத்தலாம் என யோசித்து தங்களுக்கென நிறுத்தி வைக்கும் இடத்தில் வாகணத்தை நிறுத்தவும்..
"இடம் வந்திருச்சி.. பார்த்து இறங்குங்க" என கூட்டத்தில் ஒரு பெரியவர் கத்தவும்..
ஒவ்வொருத்தராக இறங்கினர்..

"ஹேய்.. நான் தான் ஃபர்ஸ்ட் போவேன்" என குழந்தைகள் போட்டி போட்டு ஓட.. பெண்கள் தாங்கள் உடுத்திருக்கும் ஆடைகளை சரி செய்தவாரு தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டே அவர்கள் பின்னால் சென்றனர்..

"ஆமா, ஆமா.. நாங்க வந்துட்டோம்.. இதோ வந்துட்டே இருக்கேன்" என கைப்பேசியில் பேசியவாரு உள்ளே நுழைய,.

மேலே பெரியதாக இரு பக்கம் கம்பு ஊன்றி அழகாக ஒரு கட் அவுட் வைத்திருந்தது..
அதில் ஒரு ஜோடி நடுநாயகமாக இருக்க..
அருகில் ஏதோ எழுதியிருந்தது..
(ஆதர் ஜீ.. கேமரா வ திருப்பிட்டாங்க😝)

அதர்க்குள் நுழைந்ததும் அங்கு சலசலப்பு அதிகமாக இருக்க.. வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து அழகாக தன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவனை ஒரு ஜோடி கண்கள் காதலுடனும் ஏக்கத்துடனும் கண்களில் வலியுடனும் பார்த்தது..

அங்கு இருந்தவர்கள் தங்கள் வேலைகளில் பரப்பரப்பாக பம்பரம் போல் சுற்றி கொண்டிருக்க,. "டேய் மச்சான்.. டைம் ஆச்சி,  ஐயர் மாப்பிள்ளைய  கூப்பிடுறாங்க" என கூறவும்.. "மாப்பிளை நைட்டே ரெடி டா.. அப்பவே மணவறைல போய் உட்கர போனவனை.. டேய்.. மார்னிங் தான் முகூர்த்தம்னு கூட்டிட்டு வந்து ரூம்ல உட்கர வச்சிக்கிரோம்" என கூறி நண்பர்கள் கிண்டல் செய்ய.. அழகாக முடியை கோதிவிட்டு வெட்கப்பட்டவன்.. முன்னால் சென்று பின்னால் எட்டி கண்ணாடியை பார்த்து மீசையை நீவியவன் தன் ஒற்றை புருவத்தை  தூக்கியவாரு அழகாக சிரித்து திரும்ப மாப்பிளைக்குரிய அத்தனை அம்சமும் அவனுக்கு பொருத்தமாய் இருந்தது..

ஐயர் கூரிய மந்திரத்தை செவனே என சொன்னவன் மனதில் தன் புது மனைவியே நிறம்பி இருக்க.. எங்கே மணப்பெண் அறையை பார்த்தாள் நண்பர்கள் கலாய்ப்பார்களோ என்றென்னியவன் தன்னவளுக்காக காத்திருந்தான்..

"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என ஐயரின் குரலில் நிமிர்ந்தவன்.. "ஐயோ.. ஐயரே தேங்க்ஸ் யா.. சந்தோஷத்துல உன்னை கட்டிபிடிச்சி முத்தம் குடுத்துருவேன் போலயே" என ஐயரை பார்த்து இழிக்க.. "டேய் மச்சான்.. ஏன் டா ஐயர்ர பார்த்து இப்படி வலியிரே.. அவர் உன் பார்வை மாற்றத்தை பார்த்து தன் கர்பு பரி போகிடுமோனு பயப்புடுறாரு டா" என நண்பர்கள் சிரித்த படி கூறவும்.. "டேய்.. அடங்குங்க டா" என கூறி தன் நிலைமையை நினைத்து மனதிலே நொந்து கொண்டான்..

நான்கு பெண்களுக்கு நடுவில் வரும் தன்னவளை பார்த்தவனுக்கு.. தன்னவள் மட்டுமே தேவதையாய் தெரிய மெய்மறந்து பார்த்து கொண்டிந்தான்..

"டேய்.. மணப்பென் அறைக்கு கேமராவ திருப்பு.. பொண்ணு உள்ளே இருந்து வந்து உட்கருர வரை நீட்டா எடுக்கனும்" என நிழற்படக் கருவியாளர்(camera man) அருகில் உள்ளவன் கூற.. அதை ஆமோதிப்பதாய் வேகமாய் திருப்பிய கேமராவில் விழுந்தது.. அந்த பேனர்..

(டேய்.. கேமரா மேன்.. நீ ஒரு விஷ்யத்தயாவது சரியா பன்றியா?? இப்படி ரீடர்ஸ் க்கு பேனர காமிச்சிட்டியே😠😠
-ஆதர் ஜி மைண்ட் வாய்ஸ்🙊)

தேவதையாக வந்த தீப்தி.. மித்ரன் அருகில் அமர..

வந்துட்டாளே
என் காதலி
காணும் போதே
சுகம் தாளல
இவள் போல் ஒரு தேவதைய எங்கும் கண்டது இல்லைல
இனி வேறொரு பெண்ணை காணவும் எண்ணி பார்க்கல
அவ ஒருத்தி மட்டுமே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

என பாடலை மித்ரன் முனுமுனுக்க..
("டேய், மித்ரன்.. இப்படி அநியாயமா ஒரு பாட்டையே கேவலமா மாத்திட்டியே" என ஆதர் ஜி கேட்க.. "அடடே வாங்க ஆதர்.. நீங்க எங்க இங்கே வந்தீங்க??" என மித்ரன்  கேட்கவும்..
"நான் நடத்தி வைக்கிற திருமணம் தம்பி.. நான் வராம எப்படி" என ஆதர் ஜி கூற.. "ஹலோ ஆதர் ஜி.. நீங்க நடத்தி வைச்சாப்லே.. இத்தனை கூட்டத்துக்கு மத்தியில இப்படி தான் என் புருஷன் கிட்ட போய் நின்னு மொக்கை போடுவியா??" என தீப்தி கேட்கவும்.. "அடியே.. உன்னை பச்சை மண்ணுனு  சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்னனா இம்புட்டு பேசுறே" என ஆதர் வாய் மேல் கை வைக்க.. "அப்படி தான் பேசுவேன்.. சோறு திங்க தானே வந்தீங்க.. பந்தி அந்த பக்கம்" என தீப்தி கூறவும்.. "இந்த ஆஷியா கண்டத்துல இப்படி ஒரு அசிங்கத்தை எந்த ஆதரும் பட்ருக்க மாட்டாங்க.. உங்களுக்கு போய் பேனர் வைச்சேன் பாரு.. ஹூஹூம்" என முகத்தை திருப்பிக் கொண்டு வந்து விட்டார்😡😏😏)

வெட்கத்தை முகம் தத்தெடுக்க அமைதியாய் தலை குனிந்து அமர்ந்திருந்தவளை சீண்ட எண்ணி கீழ் பக்கமாக கையை கொண்டு சென்று அவளின் கால் கொலுசில் உள்ள சலங்கையை கையால் அசைக்க..
அதை உணர்ந்தவள் காலை மெல்லமாக அசைத்தாள்..

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும் போதும்
உறங்கமாட்டாயா

என அவன் பாடி.. அடுத்த வரியை ஆரம்பிக்க தீப்தி முறைக்கவும் வாயை மூடிக் கொண்டான்..

"ஹாய் சார்" என நிலா வந்து குதிக்க.. அவளை பார்த்ததும் விலகி போக சென்றவனை பிடித்து நிறுத்தியவள்.. "ரொம்ப தான் டா பன்றே" என கூற.. அவளை முறைத்து கொண்டிருந்தான் சிவ்..

"ஐயே.. இப்படியே முறைப்பாங்க.. நான் எவ்வளவு அழகா உனக்கு போட்டிக்கு பட்டு உடுத்தி பூ வைச்சி க்யூட்டா இருக்கேன்.. என்னை பார்த்து முறைக்கிறியே.. உன்னைலாம் கட்டிக்கிட்டு நான் என்ன பாடு பட போறேனோ??" என நிலா கேட்க.. "அப்படி ஒரு எண்ணம் இருந்தா அதை இப்பவே உன் மனசுல இருந்து ரிமூவ் பன்னிடு" என கோவமாக கூறி சென்ற சிவ்வை கண்கள் கலங்க பார்த்து கொண்டு நின்றாள்...

"என்ன நிலா.. விடு.. உன்னை அண்ணா புரிஞ்சிக்குவாங்க" என ரேனு கூற..
"எனக்கு கஷ்டமா இருக்கு ரேனு.. என்னையே சுத்தி சுத்தி வந்தவன்.. இப்ப என்னை கண்டுக்கவே மாட்டிக்கிறான்.. அவனுக்காக தான் நான் இவ்வளவு தூரம் ரெடியாகி வந்தேன்.. பார்த்து சிரிக்க கூட மாட்டிக்கிறான் இல்லை இல்லை பார்க்க கூட மாட்டிக்கிறான்" என நிலா வருந்தி பேசிக்கொண்டிருக்க.. அவளின் கைப்பேசியில் வீடியோ கால் வந்தது..

"ஹேய்.. ஜீவா காலிங்.. கண்ணனா மேரேஜ லைவ்ல பார்க்கனும்னு சொன்னான்லே.. மறந்தே போய்ட்டேன்.. வா.. " என நிலா கூறி ரேனுவை இழுத்து செல்ல.. "எப்படி நிலா.. நீ எதுவுமே நடந்துக்காத மாதிரி இருக்குறே" என ரேனு கூறவும்.. "அது தான் நிலா" என கூறி சிரித்தாள்..

தாலியை மித்ரனிடம் குடுத்த ஐயர்..

மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!’

என மந்திரிம் கூறி..

"கெட்டி மேளம்.. கெட்டி மேளம்" என்க..

மித்ரன் தன் காதலியின் கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டி.. தன் காதலியை தன் காதல் மனைவியாக ஆக்கி கொண்டான்..

ஐயர் மூன்றுமுறை அக்னியை வலம் வர சொல்லவும்..
மித்ரன் மற்றும் தீப்தி எழுந்து அக்னியை சுற்றி வர..

கொள்ளை
அழகில்
பேரழகி
என் அருகில்
அமர்ந்திருக்கையில்
மங்கலவாத்தியம்
ஊர்முழங்க
பறைசாற்றுகிறதடி
நீ எனக்கே
எனக்கு மட்டும்
உரிமையானவள்
என்று...
தவமொன்று
செய்தேனோடி
பெண்ணவளை
என்னவளாய்
மங்கலநாண்
பூட்டி
மணம் முடிக்க
கரம் பிடித்துவிட்டேன்
உன் கண்ணீர்
துடைத்து காலம்
தோறும் காதலோடு
கண்ணசைக்க...
உன் இருள்
போக்க வந்த
ஆதவனாய்
உனை என்
இதய சிம்மாசனத்தில்
மஹாராணியாய்
என் அன்பால்
ஆட்கொண்டு
நம் உயிர்
ஜனனத்திற்கு
பொருளாய்
உன் புன்னகை
மட்டுமே காண
இனி வாழ்வேனாடி...
(arunlovely வரிகள்)

என மித்ரன் மனதில் எண்ணினான்..
(எண்ணியபடியே எல்லாம் நடந்து விட விதி அனுமதிக்குமா என்ன??😞😞)

அடுத்தடுத்து சடங்குகள் நடந்து கொண்டிருந்தது.. கூடவே தீப்தியை செல்லமாக சீண்டி சில்மிஷம் செய்து கொண்டிருந்தான் மித்ரன்..

"ஹேய்.. ஏன் டி.. என்னை இழுத்துட்டு வந்தே" என சிவ் முறைக்க.. "கூப்பிட்டா வரமாட்டியே.. அதான்.. இழுத்துட்டு வந்தேன்" என நிலா கூறி.. "டேய்.. மாமா.. இந்த பட்டு வேஷ்டி சட்டைல ரொம்ப அழகா இருக்கா டா.. உன்னை யாராவது கண்ணு வைச்சிட்டாங்கனா" என கூறி தன் கண்ணில் இட்ட மையை தொட்டு எடுத்து அவன் காதின் அருகில் வைத்தவள்..
"இப்ப யாரு கண்ணும் உன் மேலே படாது" என கூறி கண்ணடிக்க.. "ப்ச்ச்.." என சலித்துக்கொண்டு அவள் திருஷ்டிக்கென வைத்த மையை அழிக்க சென்ற அவன் கையை பிடித்து திருப்பி உள்ளங்கையில் முத்தம் குடுத்தாள்..

"இதோ பாரு மாமா.. எப்பையும் இப்படி இருப்பேனு நினைக்காதே.. ஐ மீன் இப்படி கைல கிஸ் பன்னுவேனு நினைக்காதே.. இனியும் என் கிட்ட முரண்டு பிடிச்சீனா இதை டேமேஜ் பன்னுவேன்.. " என கூறி அவன் உதடை வருடி சென்றவளை சிலையென பார்த்தபடி நின்றான் சிவ்..

சில பல புத்திமதிகளை கூறி முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த தீப்தி ஒரு வித பயத்துடனே உள்ளே நுழைந்தாள்..
அவளை பார்த்து மித்ரன் புன்னகைக்க நெஞ்சம் படப்படக்க  அறைக்கதவை மூடியவளை நெருங்கியவன்.. அவள் கையில் வைத்திருந்த பால் செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் மேல் வைத்தவன்..

தீப்தி எதிர்பாரா நேரம் அவளை தூக்கி சுற்றிட.. இதை முற்றிலும் எதிர்ப்பார்க்காதவல் "விடுங்க.. ப்ளீஸ்.." என முனுமுனுக்க.. அவளை மெத்தையில் போட்டவன்.. "ஐ லவ் யூ அழகி.. லவ் யூ லாட்" என கத்த.. "வாய மூடுங்க.. யாராவது வெளியே நின்னு கேட்டுற போறாங்க" என அவள் வாயில் கை வைத்தவளின் கையில் தன் முதல் முத்திரையை பதித்தான் மித்ரன்..







Hi hi hi..
Oru small help..
Inga கரூர் la irukravanga or கரூர் la clg padikravanga irundhaa yenaku knjm pc pannunga.. rmba important..

திருமண அழைப்பிதழ் edit panna arunlovely luv u bby ma..

And next ud feb 15 ku maela aahum.. bcz yenaku exam iruku.. sry frndz..
Tata..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro