Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மூக்குணாக்க

"ஹாய், ஹல்லோ ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க..
ஐயோ சாரி சாரி நேத்து தானே பேசினோம் சரி விடுங்க. இதெல்லாம் கண்டுக்க கூடாது புரிதா.. தென் நான் நாக்குமுக்க சுந்தரி..என்கூடயே ஒன்னு இருக்குமே எங்க காணோம்.." என பேச பேசவே பட்டு தாவணியை கையில் பிடித்தவாறே ஒற்றை சடையை ஆட்டியவாறே வந்தவள் வழக்கம் போல் அவளை தள்ளிவிட்டு அவளின் இடத்தை பிடித்து நின்று கொண்டாள்.

"என்ன மக்களே நேத்து கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சுதா.. எனக்கு தெரியும் இவ சொல்லி இருக்க மாட்டா. இவ சரியான லூசு நான் சொல்றேன்.." மூக்குணாக்க சிந்தரி ஆரம்பிக்க

"ஹலோ ஒன்னும் வேண்டாம் நாங்களே சொல்லுவோம். அதாவது மக்களே.. என்னன்னா..." என நாக்கு சுந்தரி ஆரம்பிக்க இடையில் புகுந்து "அதான் மக்களே தெய்வ வாக்கு விலங்கு.. இது எப்படி தேவாங்கு மாறி போச்சு இந்த மாற்றம்க்கு என்ன பெயர்ன்னு கோட்டோம் தானே..  அதுக்கு பதில் என்னவென்றால்..." என இவளின் முடிவை

"மருவிய சொற்கள்..." என முடித்தாள் நாக்கு சுந்தரி..

"மருவிய சொற்கள் அப்படினா..."என சுந்தரி அடுத்து சொல்ல வர

"ஒரு சொல் காலங்காலமா ஒரே பெயர்ல இல்லமா மாத்தி மாத்தி வரது அதான் பா தெய்வ வாக்கு விலங்கு.. இது தே வாக்கு விலங்கு, அப்படி இப்படின்னு சொல்லி கடைசியில பெரிய பேரு சின்னதா மாறி தேவாங்குன்னு ஆயிடுச்சு.. இதை நாங்க சொல்லலங்க.. வீரயுக நாயகன் வேள்பாரி புக்கத்தில் இருக்கு கண்டிப்பாக படிங்க அப்போதுதான் உணர்வு பூர்வமா  இருக்கும்.

வார்த்தையால் கூறினால் உணர்வு பூர்வமாக இருக்குமான்னு எங்களுக்கு தெரியாது. ஆனால் எழுத்தின் வரிகள் ஆழமானது.  எழுத்துகளைப் படித்தால்  மட்டுமே உணர்ச்சிகளை வெளி கொண்டு வர முடியும்... அது எந்தவிதமான உணர்வுகளையும் கொண்டு வரும்.  தற்போதைய நிலையில் மனிதர்களின் இச்சையை போக்கிக் கொள்ள எழுத்தை வைத்து அதை இன்பம் காண நினைக்கிறார்கள்   என்பதும் உண்மை. ஒரு எழுத்தாளரின் எழுத்தின் வீரியம் அவரைப் பார்த்து எழுத கற்றுக் கொண்ட மற்றோரு எழுத்தாளரின் எழுத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் அல்லவா. ஒரு வழியில் எங்களுக்கு நன்கூரம் போல் பதிந்தது தேவாங்கின் விரிவாக்கம் தான். சோ மக்களே நாங்கள் படித்த புத்தகங்களில் கற்று கொண்ட ஒன்று தான் வேல்பாரி அதில் இருந்த தகவல் இது தான்...

இப்படிக்கு இவ நாக்கு சுந்தரி.. நான் மூக்கு சிந்திரி.. என்றும் எங்களுடன் இணைந்து இருங்கள்..

ஐயோ.. ஒரே ஒரு நிமிடம் நாளைக்கு என்ன சொல்ல போறோம் அப்படின்னா நம்மளை திட்டற வார்த்தைகள் பத்தி தான் பாக்க போறோம் டியர்ஸ்..

டாட்டா இப்படிக்கு உண்மையுடன் நாங்கள் மதுகைஸ்ரீ..& கிருஷிகா...

*****

வேள்பாரி நூலை படித்த என் தோழி எனக்கு கூறிய சில விஷயங்களில் மருவிய சொற்களும் ஒன்று. அவளின் தமிழ் புலமை எனக்கும் ஒட்டிக் கொண்டது. நண்பர்களை போல் நாம் இருப்போம் என்று கூறுவார்கள் அல்லவா 😝😝😝 அதான் வெளிப்பாடு தான் நானும் தமிழை வளர்க்கிறேன் என கூறிக்கொண்டு உங்களை வறுத்து எடுக்கிறேன்..




 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro