Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

7

இன்டர்வல் முடிந்ததும் ஜான்வி மறுபடியும் ஒன்றரை மணி நேரமா என்று நினைத்துக்கொண்டே உள்ளே செல்ல அவளிற்கு அப்பொழுதும் அந்த கார்னெர் சீட்டை தான் விட்டு வைத்திருந்தனர் .

கடவுளே என்று தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்தவள் திரையில் படம் ஓடத்துவங்கியதும் கண்களை மூட தன் கையை ஏதோ ஒரு கை பற்றும் உணர்வில் கண் திறந்தவள் அருகில் இருந்தவனை பார்க்க அவனோ அவளை பார்த்து இதமாய் சிரித்தவன் "ப்ரவீன்னு நெனச்சுக்கோ படம் முடியுற வரைக்கும் "என்று கூறி அவள் கையை பிடித்துக்கொள்ள அவளும் என்ன நினைத்தாளோ அவனின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டாள் .

ஒவ்வொரு முறை பயம் கொள்ளும் காட்சிகளில் அவள் உடல் நடுங்க தன் பெரிய கையில் பொதிந்திருந்த அவளின் சிறிய கையை இதமாய் அழுத்தி அவளிற்கு தைரியம் கொடுத்துக்கொண்டிருந்தான் கெளதம் .

ஒரு வழியாய் படமும் முடிவிற்கு வர அனைவரும் அரங்கை விட்டு வெளியேறினர்.கௌதமும் எழ சென்றவன் ஏதோ தடுக்க குனிந்து தன் கையை பார்த்தான்.அது அவளின் கரங்களோடு இணைந்து இருந்தது.

இன்னும் இருவர் கைகள் இணைந்திருப்பதை கெளதம் பார்க்க அவளும் உணர்ந்து கொண்டாளோ என்னவோ கையை பட்டென்று விலகிக்கொண்டாள் .அதன் பின் அவன் ஒரு சிறு சிரிப்புடன் எழுந்து சென்று விட அவளும் பின்னோடே எழுந்து சென்றாள்.

வெளியே வந்த பின்னே கௌதம் தான் தனது போனிற்கு மறந்து அந்த சீட்டின் கைப்பிடியில் வைத்து விட்டு வந்ததை நினைவு கூர்ந்தவன் மீண்டும் உள்ளே ஓடி செல்ல அங்கே அவன் சீட்டில் பத்திரமாய் இருந்தது அவனின் கைபேசி .

அதை எடுத்தவனின் கண்களை கீழே கிடந்த ஒரு சிறு துணி கவர கீழே குனிந்தவன் அதை எடுத்து பார்த்தான் .அதுவோ ஜான்வியின் kerchief .

அதில் டோரா புஜ்ஜி படம் வரைய பட்டிருக்க அதை பார்த்து சிரித்துக்கொண்டவன் பட்ட பேர் வச்சதுல தப்பே இல்ல என்று நினைத்தவன் பின் என்ன நினைத்தானோ அந்த கைக்குட்டையை மடித்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டான் .

வெளியில் சென்றதும் ஜான்வி முதலில் தேடியது ப்ரவீனையும் ஜீவிதாவையும் தான் .அவர்கள் இவளை கண்டதும் ஓடப் பார்க்க பின்னோடே ஓடி வந்தவள் அவன் தலையில் ஆக்கி கோட்டப்பார்க்க அவளால் முடியவில்லை. பின் அருகில் இருந்த sofaavil ஏறி நின்று பிரவீனின் தலையிலேயே கொட்டினாள்.

ஜான்வி "எரும எரும சின்ன புள்ள ஏதோ தெரியாம சொல்லிட்டேன்னா அதுக்காக இப்டியாடா ஒரு படம் முழுக்க என்னை பயமுறுத்துவ "என்க

ஜீவிதாவோ "எது நீ படம் முழுக்க பயந்த "என்று கேட்க

ஜான்வி "ஆமா பயப்படாம "என்று கேட்க

அவளோ "பார்த்தோம் பார்த்தோம் "என்று கூற அவள் புரியாமல் பார்க்க

ப்ரவீனா "உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே " என்று பாடி ஜீவிதாவுடன் hifi போட்டவர்களோ  அவள் திட்டுவாள் என்று பார்த்தால்

அவளோ அந்த sofaaவில் நின்றபடியே இருவரின் தலையிலும் கொட்டியவள் "டேய்ய் கலாய்க்காதீங்க டா ஒரு மாறி இருக்குடா "என்று கூறியவள் பின்னே பார்க்க அங்கோ எஸ்கேலேட்டரில் திவ்யா கௌதமின் கைகளை பிடித்தபடி வந்து கொண்டிருக்க கௌதமும் அவளிடம் சிரித்து பேசியபடி வந்து கொண்டிருந்தாள்.

அந்த காட்சியை பார்த்ததும் இவ்வளவு நேரமாய் சிரித்துக் கொண்டிருந்தவளின் இதழ்கள் தானாய் இறுக முகமும் கோபத்தில் இறுக துவங்கியது காரணமே இல்லாமல் திவ்யாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது ஜான்விக்கு.

கௌதமோ திவ்யாவுடன் பேசிக்கொண்டிருந்தவன் ஜான்வி sofaaவில் நின்றபடி பிரவீனின் தலையில் கொட்டுவதை பார்த்து அவளைக்கண்டு சிரிக்க அவனின் சிரிப்பில் தன்னிலை அடைந்தவள் வேகமாய் கீழே குதித்தாள் .

திவ்யாவோ அதை கவனிக்காமல் கௌதமுடன் அவர்கள் அருகில் வந்தவள் "என்னடா இன்னும் கெளம்பலையா நீங்க ?"என்க

ப்ரவீனோ"இல்ல திவ்யா பதினோரு மணிக்கு மேல ஆயிருச்சு இந்நேரம் mansionல கண்டிப்பா சாப்பாடு இருக்காது அப்டியே ஏதாச்சு ரெஸ்டரண்ட்ல சாப்டுட்டு போகணும் "என்க

திவ்யாவோ "அப்போ இருங்கடா நானும் வரேன் "என்க கௌதமும் சேர்ந்து கொண்டான்

.ஐவரும் ஒரு உணவகத்திற்குள் சென்றவர்கள் வழக்கம் போல் பேசியபடி சாப்பிட என்றும் இல்லாமல் இன்று வாழுதானம் செய்யும் ஜான்வி அமைதியின் சொரூபமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் .கௌதமோ சீக்கிரமே சாப்பிட்டு முடித்தவன் "நா கிளம்புறேன் டைம் ஆயிருச்சு"

என்று கூறிவிட்டு கிளம்ப ஜான்வி அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை .அவன் சென்றுவிட ஜீவிதாவோ தன்னுள் தோன்றிய கேள்வியை திவ்யாவின் முன் வைத்தால் "திவ்யா "என்க திவ்யா என்ன என்பதை போல் பார்த்தாள் ஜீவிதா "நீயும் கௌதமும் காதலிக்கிறீங்களா ?"என்க ஜான்வியின் கரங்களோ உண்டுகொண்டிருப்பதை அப்படியே நிறுத்தியது .

மனம் ஏனோ இல்லை என்ற பதிலை எதிர்பார்க்க திவ்யாவோ "நா பண்ணேன் அவன் இல்ல "என்க மூவருக்குமே அதிர்ச்சி ஜான்வியோ விழுக்கென்று நிமிர்ந்து பார்க்க அவர்களின் அதிர்ந்த முகத்தை பார்த்த திவ்யா "ஹே அவ்ளோ சீன்லாம் இல்ல .காலேஜ் முடுச்சுருந்தப்போ அவன் மேல ஒரு க்ரஷ் வந்துச்சு சரி யாரையோ கல்யாணம் தான் பண்ணிக்க போறோம் நம்ம friendaave இருந்தா என்னனு போய் ப்ரொபோஸ் பண்ணிட்டேன் ஒரு வேகத்துல.ஆனா அவன் முடியாதுனு சொல்லிட்டான் ."என்று கூற

ஜீவிதா "ஏன் நீ அவரோட friend தான பாக்கவும் நல்லா தான் இருக்க என்ன பிரச்னை ?"என்க

திவ்யாவோ உண்ணுவதை நிறுத்தியவள்"அவனுக்கு இந்த லவ் அது இதுலாம் interest இல்ல .பொண்ணுங்க கிட்ட நார்மலா பேசவே மாட்டான் .நான் தான் ஒரே friend பொண்ணுங்கள்ல சோ அப்டியே continue பண்ணலாம்னு சொல்லிட்டான் அண்ட் அது போக அவன் கிட்ட ஒரு கெட்ட பழக்கமும் இருக்கு "என்க

அவர்கள் என்ன என்று பார்க்க "caste பார்ப்பான் .நல்லா படுச்சு நல்ல வேலைக்கு போறவன் தான் ஆனா அவங்க வீட்லயே அதிகமா caste பார்பாங்க சோ அவனுக்கும் அதே பழக்கம் வந்துருச்சு."

ஜீவிதா "இந்த காலத்துலயுமா castelaam பாக்குறாங்க ?" என்க

திவ்யாவோ சிரித்தவள் "எல்லாரும் இல்லேன்னாலும் சிலர் இருக்க தான் செய்றாங்க .ஜாதிகள் இல்லையடி பாப்பானு சொல்றவங்கள்ல எத்தனை பேர் அவங்க வீட்டு பொண்ணோ பையனோ வேற ஜாதியில் காதலிச்சா கல்யாணம் பண்ணி வைக்குறாங்க ? இன்னும் இருக்கு நமக்கு தெரியுறதில்ல .இதுல காலக்கொடுமை என்னன்னா அவன் அப்பா அவன் காலேஜ்ல roommates எல்லாரும் ஒரே castela இருக்குற மாறி மாத்தி விட்டுட்டு போனாரு.இவன் அந்தளவுக்கு மோசம் இல்ல ஆனா life பார்ட்னர்ன்னு வரேல கண்டிப்பா பார்ப்பான்  "என்று கூற

ஜான்விக்கு அவன் காதலிக்க வில்லை திவ்யாவை என்றதே மனதில் இளங்காத்து வீசுதே என்பதை போல் உணர்வை கொடுக்க அடுத்தடுத்து அவள் கூறியது மனதின் ஓரத்தில் ஒரு சஞ்சலத்தை விதைக்க தான் செய்தது .(ஏன் வருதுன்னு யோசுச்சுருந்தா உறுப்ட்ருப்பாளே) .

அதன் பின் உண்டு விட்டு திவ்யா அவளின் இல்லத்தை நோக்கி பயணிக்க இந்த மூவரும் அவரவர் தங்கி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர் .

ஜான்வியும் ஜீவிதாவும் அறைக்குள் வர ஜான்வியோ உறங்க போனாள்.அவளை நிறுத்திய ஜீவிதா "ஜான்வி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் "என்க

அவளோ "என்னடி ?"என்று கேட்க

ஜீவிதாவோ "ஜான்வி ஸ்ட்ரெயிட்டா pointuke வரேன் உனக்கு அந்த கௌதம் மேல interest அப்டி இப்டினு ஏதாச்சு இருக்கா ?"என்க

ஜான்வியோ ஒரு நிமிடம் தடுமாறியவள் "அது அப்டிலாம் ஒண்ணுமில்லயே "என்று கூறி விட்டு படுக்க போக

அவளோ அவளின் தோளை பிடித்து உட்கார வைத்தவள் "பொய் சொல்லாதடி நீ யாரா இருந்தாலும் கண்ணை பார்த்து தான் பேசுவ இவ்ளோ தயக்கம் எதுக்கு ?என்ன தான் எல்லாரோடையும் நீ சகஜமா பேசி வாலு தானம் பண்ணாலும் யார் கிட்டயும் கைய கூட குடுக்க மாட்ட ஒரு ரெண்டு அடி தள்ளி தான் நிப்ப இன்னைக்கு என்னனா அவர் கைய அப்டி இறுக்கமா புடுச்சுட்டு உக்காந்துருக்க படம் முடுஞ்சதுக்கு அப்ரோமும் ,திவ்யா அவர் கைய புடுச்சுட்டு வரத பாத்து என்னவோ அவங்கள எரிக்கிற மாறி பாக்குற ?எதுவும் கவனிக்கலைனு நினைக்காத அங்க கேக்க வேணாமேன்னு பாத்தேன் "என்று கூற

ஜான்வியோ ஒரு பெருமூச்சை விட்டவள் "அது.... வந்து டி பாக்க செம்மயா இருக்கானா ஒரு .... sighting இல்ல அதுக்கும் ஒரு படி மேல ஒரு ..க்ரஷ் அப்டினு வச்சுக்கயேன் அவ்ளோ தான் "என்க

ஜீவிதாவோ அவளை நம்பாத பார்வை பார்த்தவள் "தெய்வமே அந்த க்ரஷ் லெவல்லயே வச்சுக்கோ டி .உன் தொம்பிக்கு தெரிஞ்சுது என்னவோ நான் தான் உனக்கு கத்துக்குடுத்து காதலிக்க சொன்ன மாறி என்ன தோலை உருச்சுருவான் "என்க

அவளோ சிரித்தவள் "அதெல்லாம் ஒன்னும் நடக்காது பேபி ஜான்வி இருக்க பயமேன் "என்க

அவளோ "அது தானடி என் பயமே"என்று கூறியவள் படுக்க

ஜான்வியோ பின் ஏதோ தோன்ற "ஏன் ஜீவி நாளைக்கு உனக்கு 11 டு 8 ஷிப்ட் தான?"என்க

அவளோ "உனக்கும் அப்போ தானடி ?"என்று கேட்க

ஜான்வியோ "அது வந்து டி அங்க நம்ம ஆபீஸ் கிட்ட ஒரு லைப்ரரி இருக்காம் நா போய் அங்க புக்ஸ் படுச்சுட்டு ......"என்று கூற

ஜீவிதாவோ "அம்மா தாயே சைட் அடிக்க போறான்னா பச்சயா சொல்லிட்டு போ காலைல 9 :30 கு அந்த ப்ரிட்ஜ் கிட்ட போனா அவரை பாக்கலாம் போதுமா இப்போ தூங்க விடு "என்க

ஜான்வியோ சிரித்தவள் "அப்பறோம்..."என்க

ஜீவிதாவோ "சத்தியமா பிரவீன்க்கிட்ட சொல்ல மாட்டனே என்ன தூங்க விடு டி பாதகத்தி "என்று கூறியவள் முகத்தை மூடிவிட்டு தூங்கிவிட்டாள் .

உறங்க போனவள் மனக்கண்முன் அவனின் சிரித்த தோற்றமும் கண்களும் வர தன்னுள்ளே சிரித்துக்கொண்டவள்" நாளைக்கு சீக்ரம் எந்திரிக்கணும் டா யப்பா"என்று முகத்தை மூடி உறங்கி விட்டாள்.

இங்கு கௌதமோ தனது அறைக்கு வந்தவன் இரவு உடைக்கு மாற அவனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்தது அவளின் டோரா புஜ்ஜி படம் இருந்த கைக்குட்டை .

அதை எடுத்து பார்த்தவனின் மனக்கண்ணில் முன் இன்று அவள் பயத்தில் வெளிறி இருந்த தோற்றம், நடுங்கியபடி sofaaவில் அமர்ந்திருந்தது பிரவீனின் தலையில் கொட்ட அங்கிருந்த sofaaவின் மேல் ஏறி நின்று அவன் சிரித்ததும் திரு திருவென்று விழித்தபடி இறங்கியது அனைத்தும் நினைவில் வர டோரா என்று முணுமுணுத்தவன் அந்த கைக்குட்டையை தனது உடமைகளுக்கும் பத்திரப்படுத்திக்கொண்டான் .

என்னவென்று சரியாக தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவள் தந்த நினைவுகள் அவன் மனதிற்கு இதத்தை தர அவன் உறங்கும்முன் அவன் நினைவில் இருந்ததும் அவள் குழந்தை முகமே .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro