Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

11

அடுத்த நாள் காலையில் அவர்களுக்கான ரயில் இருந்தது .தமது உடமைகளை எடுத்துக்கொண்டவர்கள் ரயிலில் ஏற ஜான்வியின் முகத்தில் அதிகளவு இல்லை என்றாலும் சற்று சோகம் இழையோடியபடி தான் இருந்தது .

உறவின் என்ன என்று ஜீவிதாவிடம் கேட்க அவளும் நேற்று இருவருக்குள்ளும் நடந்த உரையாடலை கூறினாள்.பிரவீன் "ஹே நா சும்மா விளையாட்ட இருப்பான்னு தான்டி நெனச்சேன் இவ்ளோ சீரியசா இருக்காளா ?"என்க

ஜீவிதாவோ ஆம் என்று தலை அசைத்தவள் "எனக்கே இந்த ஜான்வி புதுசா தெரியுறா டா.எந்த ஒரு விஷயத்தையும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல யோசிக்க மாட்டா ஆனா இப்போ என்னனா நாள் முழுக்க ஏதோ ஒரு யோசனைல சுருங்குன முகத்தோடயே வந்துகிட்டு இருக்கா .எங்கே போய் முடியப்போகுதோ தெரியல"என்று கூற

ஜான்வியோ வெளியே நிமிடத்திற்கு ஒரு முறை மாறும் காட்சிகளை வெறித்து பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள் .இருவரும் பெருமூச்சு விட்டுக்கொண்டனர் அவளை பார்த்து .அதன் பின் ஜீவிதா தனது போனிற்கு எடுத்து instagramமை நோண்ட ஆரம்பிக்க அதில் ரேஷ்மியின் திருமண புகைப்படத்தை அவளின் இன்னொரு தோழி பதிவிட்டிருந்த பதிவு அவள் கண்முன் வந்தது .

அருகில் பிரவீன் அமர்ந்திருப்பதை பார்த்தவள் வேகா வேகமாய் அதை swipe செய்ய முயல அந்தோ பரிதாபம் அவளின் கைபேசியும் hang ஆகி அவளை சோதனைக்கு உள்ளாக்கியது .

அவன் பார்ப்பதற்குள் மறைக்க நினைத்தவள் கைபேசியை அணைக்க அவளின் செய்கையை கவனித்த ப்ரவீனா அவளின் புறம் குழப்பமாய் திரும்பியவன் "என்னத்த மறைக்கிற?"என்க

ஜீவிதாவோ "ஒ....ஒன்னும் இல்லையே "என்க

ப்ரவீனோ அவளை பார்த்து ஒற்றை புருவம் தூக்கியவன் "உன்னோட ஒண்ணுமில்லைலயே தெரியுது என்னத்தையோ மறைக்குறனு என்ன அது ?"என்று அவளின் போனினை வாங்கி பார்க்க தெள்ள தெளிவாய் ரேஷ்மியின் திருமணப்புகைப்படம் அவனின் கண் முன்னே இருந்தது .

அதை அவன் பார்த்துவிட்டதை உணர்ந்தவள் அவன் அடுத்து என்ன செய்ய போகிறானோ என்று திகிலுடன் பார்க்க அவனோ ஒரு நொடி ஒரே ஒரு நொடி அதை வலியுடன் பார்த்தவன் அதன் பின் சிரிப்புடன் அவளின் கையில் கொடுத்துவிட்டான் "குட் pair "என்ற சொல்லுடன் .

அவன் சாதாரணமாய் கூறிவிட ஜீவிதாவிற்கோ தன் அருகில் இருப்பது பிரவீன் தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது அவனையே அவள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க அவனும் உணர்ந்துக்கொண்டானோ என்னவோ அவளின் புறம் திரும்பியவன் "என்னடி அப்டி பாக்குற ?"என்க

ஜீவிதா "அது... வந்து உனக்கு எதுவும் வருத்தமா தோனலயா ?"என்க

அவனோ பெருமூச்சுவிட்டவன் "இப்போ வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது ?போனவ திரும்பியா வர போறா ?அண்ட் இங்க ஏமாத்தீட்டு போனது நா இல்ல அவ தான். அவளே சந்தோஷமா இன்னொருத்தனுக்கு மனைவியா ஆயிட்டா எந்த உறுத்தலும் இல்லாம நா மட்டும் ஏன் அவளை நெனச்சே என் வாழ்க்கை பாழாக்கனும்?"என்க

ஜீவிதாவிற்கு உண்மையில் மனதில் அதீத மகிழிச்சியே ஏற்பட்டது தனது நண்பனின் இந்த மன மாற்றத்தில் .

பிரவீன் தொடர்ந்தான் "ஒத்துக்குறேன் முதல் காதல் சாகுற வரைக்கும் மறக்காது தான் .ஆனா இப்போ சந்தோஷம் தான் படுறேன் இப்டி ஒருத்தியோட என் வாழ்க்கை முடியாம போனதுக்கு "என்று கூறியவன் அமைதியாய் அமர்ந்துவிட உடல் இறுகி எங்கேயோ வெறித்துக்கொண்டிருந்தான்.

அவனின் கையை ஜீவிதா பற்றிட லேசாய் இறுக்கம் தளர்ந்தது .அவனுக்கும் அந்த நேரத்தில் தேவைப்பட்டதோ என்னவோ அவளின் கரத்தோடு தன் கரங்களை கோர்த்துக்கொண்டவன் அப்படியே இருக்கையில் பின்னே சாய்ந்து கொண்டான் கண்களை மூடி .

இங்கே ஜான்வி மனதில் ஆக்கிரமித்திருந்தது முழுக்க முழுக்க கௌதமின் நினைவுகள் தான் .அவர்களின் முதல் சந்திப்பிலிருந்து காலையில் அவனை பார்க்க ஓடியது வரை .காதில் அவனின் ஜானு என்ற அழைப்பு இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்க கண்களின் ஓரத்தில் கண்ணீர் .

சலனமின்றி அமைக்கவும் மறந்து வெளியில் வெறித்துக்கொண்டிருந்தவளை கௌதம் என்ற அழைப்பு தன்னிலை அடைய செய்ய கனவில் இருந்து விழிப்பவள் போல் விழித்து சுற்றி பார்த்தாள் .

கண்களில் அவளின் கௌதமாக இருக்குமோ என்ற தவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது .எனில் அங்கு அந்த கௌதம் என்ற அழைப்பிற்கு சொந்தமானதோ ஒரு ஐந்து வயது சிறுவன் அவளின் அருகில் அவனின் தாயுடன் அமர்ந்திருந்தான் .அவனின் தாய் தான் அவனிற்கு ஊட்டிவிட அவனோ உணவை வாங்குவதற்கு முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான் .

அந்த சிறுவனை பார்த்து சிரித்தவள் பின் தனது போனினை எடுத்தாள்.அதில் instagramமிற்கு சென்றவள் திவ்யாவின் following லிஸ்டிற்கு சென்றாள்.

அதை தள்ளிவிட்டுக்கொண்டே வந்தவளின் கண்களில் கௌதமின் அக்கௌன்ட் மாட்டிக்கொண்டது .அதனுள் சென்றவள் அவனிற்கு follow request கொடுத்துவிட்டு அமர்ந்துகொண்டாள் .

அன்றைய நாள் அவ்விதமே கரைய அலுவலகம் முடித்து சோர்வாக வந்திருந்தான் கௌதம் .அவனை கண்டதும் அவனின் அருகில் வந்த அவனின் தந்தை "என்னடா மகனே ரொம்ப tiredoh ?"என்க

அவனோ "ஆமா அப்பா கொஞ்சம் தலை வலிக்குது ஒரு coffee போட சொல்லேன் "என்க

அவனின் தாயோ உள்ளிருந்தே குரல் கொடுத்தார் "யாருக்கும் வேணுனா அவங்களே அவங்க தேவையா செஞ்சுக்கட்டும். நா என்ன இங்க ஹோட்டலா நடத்துறேன் "என்க

கௌதமோ இது நடப்பது தான் என்பதை போல் பார்த்தவன் "அப்பா இந்த கவர்ல ஒரு லட்சம் இருக்கு இப்போ தான் mature ஆச்சு பணம் வளைகாப்புக்கு யூஸ் பண்ணிக்கோ "என்று கூறி முடிக்க அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் முன் காபி இருந்தது .

தன் மனைவியை அவர் வெறுப்புடன் பார்க்க கௌதமோ பொங்கி எழுந்த கோபத்தில் அந்த டம்பளரை அவர் பார்க்குமாறே தட்டி விட்டான் .காபீ சிதறி அந்த இடம் முழுக்க பரவ கௌதமோ "காசு குடுத்தாதான் கேட்டது கெடைக்கும்னா இது ஹோட்டல் தான் .clean பண்ணிருங்க"என்று உறுமி விட்டு உள்ள சென்று விட்டான் .

அவனின் அன்னையோ எதையும் கண்டுகொள்ளவில்லை மேஜையில் இருந்த பணக்கவரை எடுத்தவர் எண்ணி பார்த்து விட்டு தன் கணவரிடம் திரும்பியவர் "என்ன பார்வை சுத்தம் பண்ணிடுங்க "என்று விட்டு உள்ளே சென்று விட அவரோ மனைவியை எதுவும் சொல்லவும் முடியாமல் மகனை சமாதானமும் செய்ய முடியாமல் பின் அந்த இடத்தை சுத்தப்படுத்த துவங்கினார் .

அறைக்குள் வந்தவன் வந்த கோவத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாது தனது தலை முடியை அழுத்தி கோதியவன் அப்பொழுதும் கட்டுப்படுத்த முடியாமல் போக தன் கையிலிருந்த அலைபேசியை தூக்கி சுவற்றில் போட்டான் .அது அந்தோ பரிதாபமாய் சிதறி கீழே விழுந்து தனது உயிரை விட்டிருந்தது .

அன்று இரவு மூவரும் கோயம்பத்தூர் வந்தடைந்தனர் .அன்று ஜான்வியை அழைத்து செல்ல ஆதி சேஷன் வந்திருந்தான் .அவளை கண்டதும் முகம் மலர அவள் அருகில் "மினியன்" என்று சென்றவன் அவளை அணைத்துக்கொள்ள

ஜான்வியோ தம்பியை கண்டதில் சற்று உற்சாகமடைந்து அவனை அணைத்துக்கொண்டாள் "ஓய் பனைமரம் நல்ல ஜாலியா இருந்தியா நா இல்லாம ?"என்று கேட்க

அவனோ "இல்லடி மிஸ் பண்ணேன் உன்னை ரொம்ப"என்க

ஜான்வி "அம்புட்டு பாசமாடா அக்கா மேல ?"என்க

அவனோ "ச்ச ச்ச அந்த ஈர வெங்காயம்லாம் ஒண்ணுமில்ல.நீ இல்லாம ரொம்ப போர். உன்ன கலாய்ச்சு அழவைக்காம பொழுதே போகல "என்க

அவனின் கையை வலிக்கும்படி கிள்ளியவள் அதன் பின் நண்பர்களிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.தாய் தந்தை மற்றும் தம்பியுடன் அவள் அரட்டை அடித்தபடி இரவு உணவை முடித்தவள் தனது அறைக்கு வர அனைவரின் அருகாமையில் தோன்றாத அவனின் எண்ணம் அவளின் அறைக்கு வந்ததும் மனதை அடைத்துக்கொண்டது .

இரவுடையை மாற்றிவிட்டு வந்து கட்டிலில் விழுந்தவள் தனது போனிற்கு எடுத்து instagramமை பார்க்க அவனோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை .

முகம் சுழித்தவள் அதை அப்புறமாய் போட்டுவிட்டு உறங்க முயற்சித்தாள் வெற்றியும் கண்டாள் .அங்கோ கௌதம் ஒரு வேகத்தில் தனது போனிற்கு உடைத்துவிட்டவன் அதன் அருகில் சென்று எடுத்து பார்க்க அதுவோ தன் உயிரை விட்டிருந்தது .

இது வேறயா என்று பெருமூச்சுவிட்டவன் நாளை புதிய போன் வாங்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டான் .அடுத்த நாள் ஒரு புது போன் வாங்கியவன் அதில் instagramமிள் உள்நுழைய ஏதோ தொழில்நுட்ப கோளாறால் அவனின் acccountல் இருந்த மொத்த போஸ்டும் அழிந்து இருந்தது.

அதில் follow requestum அழிந்து இருந்தது .அதில் அவனின் ஜானுவின் follow requestum அழிந்து இருந்தது இருந்தது .அவனோ அவ்வப்பொழுது அவளின் நினைவு மனதில் எழுந்தாலும் மூளை அதன் தலையில் தட்டி அடக்கி வைத்தது .

இரண்டு நாட்கள் அதன் போக்கில் செல்ல அன்று ஜான்வி அலுவலகத்திற்கு செல்லும் நாள் .பிரவீனிற்கும் ஜீவிதாவிற்கும் காலை பதினொன்றிலிருந்து எட்டு வரையிலான ஷிப்ட்.

ஜான்விக்கோ மதியம் இரண்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரைக்குமான ஷிப்ட் .அன்று முதல் நாள் சேர வேண்டும் .வீட்டிற்கே காபி வந்துவிட அதில் தனது அலுவலகத்திற்கு சென்றவள் தனது டீம் matesidam அறிமுகமாகிக்கொண்டாள் .

அதில் ஒருவன்"நா கெளதம் "என்று கூற ஜான்விக்கு மீண்டும் கௌதமின் நினைவுகள் மனதில் வியாபிக்க துவங்கியது.

மூளையோ தனது செயல்களை தானே அலசியது .ஜான்வி எதையுமே யோசித்துக்கொண்டே இருக்கும் ராகம் அல்ல .எதை பற்றியும் முழுதாய் ஒரு மணி நேரத்திற்கு மேல் யோசிக்க மாட்டாள்.இதோடு இரண்டு நாட்களாய் பார்த்துவிட்டாள்.பெற்றோர் முன் வராத அவனின் நினைவுகள் இரவின் தனிமையில் அவன் மட்டுமே நிறைந்திருந்தான்.

கௌதம் என்று எங்கே சத்தம் கேட்டாலும் அவனாக இருக்குமோ என்று ஒரு முறை திரும்பி பார்க்கிறாள் .ஜானு என்று ஹெரோயின் பெயர் வந்தாலும் உடனே அந்த சேனலை மாற்றிவிடுகிறாள் .என் என்று யோசித்தவளிற்கு அப்பொழுது தான் பெங்களூரில் எதையோ மிஸ் பண்ணியதாக அவள் நினைத்தது எதையோ அல்ல கௌதமை தான் என்று அவளின் மூளைக்கு புரிந்தது .

உடனே தனது போனினை எடுத்தவள் instagramமை பார்க்க அவனோ இன்றும் request accept செய்யாமல் விட்டிருந்தான்.சோர்ந்தவள் என்ன செய்யலாம் என்று நினைக்க அவனின் முகநூலில் அவனின் தொலைபேசி என் கிடைக்கிறதா என்று போய் பார்த்தாள்.

அவளின் அதிர்ஷ்டமோ என்னவோ அதில் இருக்க அந்த நம்பரை கௌதம் என்று save செய்து கொண்டவள் அனுப்பலாமா வேண்டாமா என்று ஆயிரம் முறை யோசித்துக்கொண்டிருந்தாள் .

அலுவலகமும் முடிய வீட்டிற்கு வந்தவள் உள்ளே செல்ல அவளின் தம்பி அமர்ந்து ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தான் .

அவன் அருகில் அமர்ந்தவள் "என்னடா தூங்கலை?"என்று கேட்க

அவனோ "இல்ல மினியன் தூக்கம் வரல அதான் "என்றவன் படத்தில் மூழ்க தானும் சிறிது நேரம் அவனுடன் படம் பார்த்தாள் ஜான்வி .

அது விஜய் நடித்த தெறி படம் ..அதில் ஒரு இடத்தில் மனசுல இருக்குறத சொல்ல பயப்படுறவன் வாழவே பயப்படணும்ங்க என்று கூற எனோ ஜான்விக்கு தான் அனுப்ப நினைத்த செய்தியை இப்பொழுதே அனுப்ப வேண்டுமென்று தோன்றியது .

தன் தம்பியிடம் திரும்பியவள் போலியாய் கொட்டாவி விட்டபடி "எனக்கு தூக்கம் வருதுடா ரொம்ப நேரம் முழுச்சுருக்காத போய் தூங்கு "என்று விட்டு நடந்தவள் அவன் தலை மறையவும் குடுகுடு என்று ஓடி சென்று தனது மெத்தையில் விழுந்தாள் .

தனது  கைபேசியை எடுத்தவள் ஹாய் என்று அனுப்ப பதில் பத்து நிமிடமாய் வரவேயில்லை .அவனோ ஆன்லைனில் இல்லை .

என்ன இவன் என்று முகம் சுருங்கியவள் நேரத்தை பார்க்க அதுவோ பன்னிரண்டு பத்து என்று காட்டியது.தன் தலையிலேயே தட்டிக்கொண்டவள் நாளை பார்க்கலாம் என்று விழிமூடி உறங்க அங்கே உறக்கத்தில் இருந்த கௌதமின் அருகில் இருந்த கௌதமின் கைபேசியோ நொடிபிகேஷன் வந்ததன் அடையாளமாய் ஒருமுறை மின்னி மறைந்தது .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro