Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

 அடுத்த நாள் பயிற்சி நடைபெற நேற்றைய நிகழ்வை நேற்றே மறந்திருந்த சைந்தவி பாடப்புத்தகத்தில் தன்னை தொலைத்திருந்தாள் சற்று ஓய்வெடுக்க வந்தவன் அவளுக்கு அருகிலேயே அமர்ந்தான் .அமர்ந்தவன் என்ன என்று பார்க்க அவளோ பாட புத்தகத்தில் மூழ்கி இருந்தால் .

சைந்தவிக்கு படிக்க ஆரம்பித்தாள் சுற்றி என்ன நடந்தாலும் தெரியாது அவன் வந்து அருகில் அமர்ந்ததையே உணராமல் இருந்தவளை சீண்ட நினைத்தவன்" ஹே சையு உன் காலுக்கடில எலி "என்று கத்த

அவளோ "அம்மா எலி "என்று புத்தகத்தை கீழே போட்டு இருக்கையின் மேலே ஒரே குதியில் ஏறியவள் அவன் தோளை பிடித்து கொண்டு "எங்க எங்க ??"என்று பயத்துடன் தேட அவனோ அவளை கண்டு பயங்கரமாக சிரித்துவிட்டான் .

அவன் சிரிப்பதை பார்த்தவள் தன் சிறு கண்களை மேலும் சுருக்கி அவனை முறைக்க அவன் அவளின் முகத்தை கண்டு மேலும் சிரித்து விழுந்தான் .கையிலிருந்த புத்தகத்தை வைத்தே அவனை 4 அடி தலையில் போட்டவள் "frauduh ரோபோ ஏன்டா இப்டி பண்ண "என்று கேட்க

அவனோ "அப்பறோம் நா வந்தது கூட தெரியாம சிலை மாறி இருந்தியா அதான் உயிரோட இருக்கியா இல்லையானு பாக்க டெஸ்ட் பண்ணேன் ஆனாலும் என்ன குதிடி குதிக்கிற இரு பெஞ்சுஹ் ஒடஞ்சுருச்சானு பாக்குறேன் ."என்று பெஞ்சை பார்க்க அதற்கும் அவளிடம் வாங்கி கட்டிக்கொண்டான் .பின் அவள் அருகில் அமர்ந்தவன் சற்று நேரம் போனை நோண்ட அவனது coach அழைத்ததால் அவசரமாக சென்றவன் கை தவறுதலாக பட்டு வாய்ஸ் ரெக்கார்டர் on ஆகிவிட்டது .

அன்று மேகம் இருட்டி கொண்டு வர மழையின் பிரியை ஆகிய சைந்தவி மெல்லமாய் ஒரு பாட்டை முணுமுணுக்க துவங்கினால்

"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கிறது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே"

சைந்தவி என்றும் இப்படி சந்தோஷமாக இருக்கும் தருணங்களிலேயே பாடுவாள் .ஆனால் அவள் பாடினால் அத்தனை அருமையாக இருக்கும் அவள் குரல் .அவள் இவ்வளவு நன்றாக பாடுவாள் என்பதை அவள் நண்பர்கள் குழுவே அறியாது .அவள் பாடி முடிக்க அவன் பயிற்சி முடிந்து வந்தான் .பின் பாடல் பாடுவதை நிறுத்தி அவன் phone ,மற்றும் பையை எடுத்து கொடுத்தவள் அவனுடன் நடந்து சென்றால் .

போனை போக்கெட்டினுள் போட்டவனுக்கு திடீரென vibrate ஆக அதை எடுத்து பார்த்தவன் 15 நிமிடமாக வாய்ஸ் ரெக்கார்டர் on ஆகி இருந்ததை பார்த்தான் அட செய் என்று தலையில் அடித்து ஏதோ தோன்ற அந்த வாய்ஸ் பைலை அழிக்காமல் save செய்து வைத்து கொண்டான்.

சைந்தவி "அங்க என்னடா பண்ணிட்டு இருக்க சீக்கரம் வா"என்க

அவன் "இதோ வந்துட்டேன் சது"என்றவன் வீட்டிற்கு புறப்பட்டான் .

அவன் வீடு பெரும் அரண்மனை போல் பெரிதாய் இருந்தது .அவன் வருவதை கண்ட காவலர்கள் கதவை திறந்து விட இவனது ராயல் என்பீல்ட்ஐ shutterirkul வைத்தவன் முகத்தில் சிரிப்பு போய் பழைய கடுமை ஒட்டி கொண்டது.உள்ளே சென்றான் .

அங்கே வேலை பார்க்கும் லட்சுமி அம்மா "தம்பி அம்மாவும் அய்யாவும் கோவிலுக்கு போயிருக்காங்க வர 9 மணி ஆகும்னு சொன்னாங்க தம்பி .உங்களுக்கு என்ன தம்பி வேணும் இப்போ சாப்பிட" என்க

அவனோ "இப்போ ஒன்னும் வேணாம் லக்ஷ்மிம்மா அரைமணி நேரம் கழிச்சு என் ரூம்க்கு ஸ்னாக்ஸ்சும் காபீயும் அனுப்பிச்சுருங்க "என்றவன் ஒரு அறைக்குள் சென்றவன் கதவை தாளிட்டு கொண்டான் .இந்த குடும்பத்திற்கு கிட்ட தட்ட 25 வருடங்களாய் உழைக்கும் லட்சுமி அம்மா அவன் செல்வதை

கவலையுடன் பார்த்தவர் "எப்போ தான் இந்த புள்ளைக்கு நல்ல காலம் விடியுமோ சிரிப்புன்ற உன்னையே 15 வயசோட தொலைச்சுருச்சு.அது ஆறுதல் படுற ஒரு விஷயமும் இப்போ அத விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்கே ஆண்டவா இந்த புள்ளைக்கு இனியாவது சந்தோஷத்தை குடுப்பா"என்று வேண்ட அவருக்கு தெரிந்திருக்கவில்லை அவனுக்கு திகட்ட திகட்ட அன்பை தரும் ஒருத்தியை அவர் ஏற்கனவே அவன் வாழ்வில் அனுப்பிவிட்டார் என்று.

அரை மணி நேரம் கழித்து வெளி வந்தவன் தன் அறைக்கு சென்று குளித்து விட்டு வந்தான் .இன்று மழை நன்றாக பொழிய அவனும் தனது அறையை ஒட்டி இருந்த balconyil இருந்த நாற்காலியில் அமர்ந்து அதை பார்த்து கொண்டே காபீயை குடித்து கொண்டிருந்தான் பின் ஏதோ தோன்றியவனாக அவன் phoneai எடுத்தவன் அதில் இருந்த வாய்ஸ் ரெகார்டரில் save ஆகி இருந்த ரெகார்டை போட அதிலிருந்து மிகவும் இனிமையாய் ஒலித்தது சைந்தவியின் குரல் .

அவள் குரலில் தன்னை மறந்தவன் கண்மூடி அதை ரம்மியமான அந்த மழை விழும் மாலையில் கேட்க அவன் மனதில் பாரம் நீங்கி லேசானதை போன்ற உணர்வு எழுந்தது.பின் அது முடிவுற்றதும் கண் திறந்தவன் கள்ளுண்ட வண்டை போல் மீண்டும் மீண்டும் அதை போட்டு கேட்டுக் கொண்டே இருந்தான் ."beautiful "என்று முணுமுணுத்தவனின் மனக்கண்ணில் சைந்தவியின் பிம்பம் தோன்ற செல்லமாய் ராட்சசி என்றவன் கண் அயர்ந்து உறங்கி விட்டான்.

பின் எழுந்தவனுக்கு மனம் மிகவும் குஷியாய் இருக்க பாடத்தை படித்தவன் ஷ்ரவனிடம் phone செய்து சைந்தவியின் பெயரை பாடல் போட்டியில் சேர்த்துக்கொள்ள கூற அவனோ "வேண்டாம்டா அவளை கேக்காம பண்ண வேணாம் சாமி ஆடிடுவா "என்க

அவனோ "அந்த ராட்சசிய நா பாத்துக்குறேன் நீ பெயரை மட்டும் சேத்துக்கோ" என்றவன் மணியை பார்க்க அது 10 என்றது .மனம் முழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க அவனுக்கு வயிறை நிறைக்க மனம் வரவில்லை .பின் தொலைக்காட்சியை போட்டவன் அதில் பாட்டை ஒலிக்க விட அதிலோ வாகா படத்திலிருந்து ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது.இதற்கு முன் எத்தனையோ முறை இப்பாடலை கேட்டிருக்கிறான் ஆனால் இன்று ஏனோ புதியதாய் கேட்பதை போல் அதன் வார்த்தைகளை ரசித்து கேட்டான் .

"என் மனசுல நேத்து வரைக்கும் எதுவுமே இல்ல

ஆனா அவ வந்ததுக்கு அப்புறம் இப்ப இடம் இல்ல

வெறுமையான நான் முழுமையான மாறி ஒரு நிறைவு

என்னடா இது புதுசா இருக்குன்னு சிரிக்க தோணுது ..........

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஒஹ் ஏதோ மாயம் செய்கிறாய்

யாரோ நீ யாரோ நான்

என்றே நாம் இருந்திடுவோமா

நீயே நான் நானே நீ

ஒன்றாக இணைந்திடுவோமா

இங்கே நான் இருப்பென உயிரே கொடுப்பென

உன்னை காதலிப்பெனா "

என்ற அந்த கடைசி வரியில் முழித்தவன் "என்ன பைத்தியக்கார தனமா யோசிச்சுட்டு இருக்கேன் எனக்கு என்ன ஆச்சு எத்தனையோ பொண்ணுங்க கிட்ட பேசியிருக்கேன் கடந்து போயிருக்கேன் என் சைந்தவிய போய் சி சி இது தப்பு லூசு தனமா யோசிக்காம தூங்கணும் .நானும் அவளும் friends தான் friends மட்டும் தான் "என்று கூறி கொண்டவன் தலையை சிலுப்பி கொண்டு உறங்கினான் ஆனால் உறக்கத்திலும் கனவாய் வந்து கொண்டாலே அந்த ராட்சசி .இவனை இங்கு புலம்ப விட்டவள் அங்கே தன் தம்பியுடன் சண்டை இட்டுவிட்டு நிம்மதியாக துயில் கொண்டிருந்தாள் .இங்கு இவனோ தன்னுள் பூத்த உணர்வை உணராமல் தன்னுள்ளே புதைத்தான் .

காலம் சொல்லட்டும் இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவை 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro