Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 36

வருண் ,நித்யாவின் கையில் கொடுத்தது Rehabilation Centre ஆள் வருண் முழுமையாக குணமடைந்து விட்டான் என்பதற்கான சர்டிபிகேட்.ஆனால் அதில் ஒரு சின்ன விடயம் அவள் மனதை உறுத்தியது.டிப்ரசன் தரக்கூடிய எந்த வேலையையும் அவன் 2 வருடங்களுக்கு செய்ய கூடாது என்பது.அதனால்தான் கல்யாணம் ஆன ஆரம்பத்தில் வருண் தன் ஐடி வேலையை விட்டிருந்தான்.ஏனென்றால் அதிகம் டிப்ரசன் உள்ள வேலை ஐடி என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

நித்யாவின் முத்தங்கள் ஆவேசமாக மாற வருணால் ஒரு கட்டத்துக்கு மேல் அவன் உணர்வுக்ளை கட்டுப்படுத்த முடியாமல் அவன் கைகளால் அவள் உடலெங்கும் கோலம் போட்டான்.ஒரு சில நிமிடங்களின் பின் சுய நினைவுக்கு வர நித்யா வெட்கப்பட்டு அவனை விட்டு விலக எத்தனிக்க இந்த முறை வருண் அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டான்.

இருவரும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லலாமா வேண்டாமா என்று தடுமாறிய தருணம் அவர்களையும் அறியாமல் அவர்கள் இருவரின் காதலும் அவர்களை தானாகவே அவர்களின் காதலை அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்றது.

சில மணி நேரங்கள் கடந்தபின் வருணின் மார்பில் கோலம் போட்ட படி நித்யா கண் மூடி இருக்க வருண்

"நித்யா எனக்கு தெரிஞ்சது ஐடி ஜாப் மட்டும்தான்.ஆனா அதையே இப்போ என்னால 2 வருசம் பண்ண முடியாதுடா.நம்ம வாழ்க்கைய கொண்டு போக என்ன பண்றதுப்பா"என்றவனை

"வருண் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க வேணாம்.நீங்க வீட்ட கொஞ்ச நாளைக்கு கவனிச்சிக்கோங்க.நான் ஜாப் போறேன்"என்றவனை

"இல்ல நித்யா,எனக்கு அதுல உடன்பாடு இல்ல.என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு.வேணும்னா சின்னதா ஒரு Grocery Shop போடலாம்"என்றவனை

"சூப்பர்டா.வருமாணம் கம்மி என்றாலும் மனசுக்கு திருப்தியா சொந்த பிசினஸ் பண்ண ஒரு பீலிங்க் வரும்பா.நம்ம அதையே பண்ணலாம்"என்றவனை அவன் இருக்கி அணைத்துக்கொண்டான்.

ஒரு நாள்.......

வருணும் நித்யாவும் சிறியதொரு வீடு அவர்களுக்கென்று கட்டி இருந்தனர்.ஒரு கிட்சன் ,சிறிய ஹால்,பெட்றூம் வித் அட்டாச்ட் பாத்றூம்.அவர்களின் வீட்டுக்கு வந்து ஒரு மாதத்தின் பின் ,நாட்கள் சந்தோசமாக கழிய ஒரு நாள் வருண் தான் இன்று லஞ்சிற்கு வீட்டுக்கு வரமாட்டான் என்று கூறி சென்றிருந்தான்.அந்த நேரம் வீட்டின் காலிங்க் பெல் அடிக்க யார் என்று சென்று பார்த்தவளுக்கு அங்கு யாரும் இல்லாமல் இருக்க மனதுக்குள்
'என்ன காலிங்க் பெல் அடிச்சது ஆனா யாரையுமே காணல்லயே'
என்று என்னியவள் கதவை சாத்திவிட்டு குளிக்க சென்றாள்.

குளித்து முடித்து வந்தவள் வருணை கடுப்பேத்துவதற்காக அவனுக்கு பிடித்த புல் பச்சையில் அவன் ஆசையாக அவளது பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்த சல்வாரை அணிந்தவள் அதை போட்டோ எடுத்து வருணுக்கு வாட்சப் செய்தால்.அவளுக்கு தெரியும் இந்த சல்வார் போட்டால் அன்று முழுவதும் பெட்டி பாம்பாக அவன் வீட்டிலேயே அடங்கி இருப்பான் என்று.

ஆனால் அவள் மெசேஜ் அனுப்பியும் அது பார்க்காமல் இருப்பதை கண்டவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.ஏனென்றால் அவன் எப்பொழுதும் அவளது மெசேஜ்களை பார்க்காமல் இருக்க மாட்டான்.அப்படி இருந்தால் அது அவனுக்கு மிகவும் வேலைப்பழு உள்ள நேரங்களில் மட்டுமே அப்படி இருப்பான்.அவன் அப்படி இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

மெசேஜ் இன்னும் பார்க்காமல் இருப்பதை கண்டவள்

"மவனே என் மெசேஜ பார்க்காம இருக்கியா .இரு உன்ன நைட்கு வெச்சிக்கிறேன்"
என்று வாய்விட்டு பேசியவள் சாதாரண ஒரு ஆடைக்கு மாற பெட்றூம் சென்று சல்வாரை மாற்றுவதற்காக ஆயத்தமான வேலை அவளை பின்னால் இருந்து ஒரு உருவம் அனைக்க அவள் பயந்து சத்தமிடப்பார்த்தவளுக்கு அது வருண்தான் என்று புரிய கோவமாக அவனை தள்ளிவிட்டால்.

"ஏண்டி பொண்டாட்டி,இந்த டிரெஸ் எதுக்கு போட்ட.இத நான் பார்த்ததும் வீட்டுக்கு உடனே வரனும்னுதானே.ஆனா நான் என்ன பண்ணேன் தெரியுமா?நான் இன்னைக்கு லஞ்ச்கு வரமாட்டேன்னு சொன்னா எப்படியும் கண்டிப்பா இந்த சல்வார போட்டு என்ன வெறுப்பேத்துவேன்னு தெரியும்.அதுதான் உனக்கு முன்னால காலிங்க் பெல்ல அடிச்சிட்டு கிட்சன் கதவு வழியே ஸ்பெயார் சாவிய போட்டு உள்ளே வந்துட்டேன்"என்றவன் அவளை அப்படியே தூக்கி பெட்டில் போட்டான்.

"அம்மாடி என்ன கனம்டி கனக்குற.ரொம்ப வெயிட் போட்டுட்ட நித்யா"என்றவனை

அவள் முறைத்து

"சரிங்க ஆபிசர்.நாளைல இருந்து வீக்லி 5 டேய்ஸ் ஜிம் போறேன் ஓக்கேயா.ஆனா நான் ஜிம் போயிட்டு வந்தா டயர்ட்ல அப்படியே தூங்கிடுவேன் .எப்படி வசதி "என்றவளை

"அம்மாடி தாயே.அதெல்லாம் ஒன்னுமே தேவையில்லப்பா.நீ இப்படியே இரு.புருசன பட்டினி போட்றாத.ஆமா நித்ஸ் இன்னைக்கு என்ன நாள் தெரியுமா"என்றவனை
அவள் தெரியாதே என்று தலை அசைக்க

"என் சையனாவ நான் கண்டு இன்னையோட 9 வருசம் ஆகுது.சோ அதுக்காகத்தான் இந்த சர்ப்ரைஸ் "என்று அவனின் கப்போர்ர்டை திறந்தவன் அவளுக்கு பிடித்தமான் Bounty Chocolates உம் பல பல சைஸ்களில் டெட்டி பெயார்சும் இருந்ததை கண்டவள் அவனை பார்த்து

"எனக்கு இந்த டெட்டி பெயார்ஸ் எல்லாம் வேணாம்பா.எனக்கு தாடி வெச்ச இந்த பெரிய பெயார்தான் வேணும் "என்று கண்சிமிட்டினால்.

அவளின் அழைப்பை ஏற்றவன் அவர்களுக்கு மட்டுமே சொந்தமான உலகிற்கு அவளை அழைத்து செல்ல தயாராகினான்.

இரண்லு வருடம் கழித்து.......

திடீரென்று ஒரு நாள் நித்யாவின் வகுப்பில் படித்த வினோத் நித்யாவுக்கு கால் செய்து ஒரு காபி சாப் வருமாறு கூறினான்.நித்யா படித்த காலேஜின் கரஸ்பாண்டண்ட் முன்னாள் மினிஸ்டர் மயில்வாகனத்தின் மகன் தான் இந்த வினோத்.வாசுகியும் இப்போது தனது படிப்பை முடித்து அதே காலேஜில் டிரைனி ஆக பணி புரிகின்றால்.

வினோத் எதற்காக அழைத்தான் என்று தெரியாமல் நித்யா அவனை பார்க்க சென்றால்.காலேஜில் நித்யாவும் வினோதும் எலியும் பூனையாக எப்போதும் சண்டை இட்டுக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் அதன் பின் கடந்த ஒரு வருடமாக வினோத் நித்யா வீட்டினர் எல்லோருடனும் மிகவும் நெருக்கமாக பழகுகின்றான்.

நித்யா காபி சாப் வந்ததும் வினோத்தும் வாசுகியும் அங்கிருப்பதை கண்டவள் இருவரையும் நோக்கி

"ஹாய் "என்று கூறி அமர்ந்தாள்.

வினோத் எல்லோருக்கும் என்ன தேவை என்று கேட்டு ஆடர் செய்தவன்

"நித்யா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசத்தான் வரசொன்னேன்"என்றவனை

"என்ன வினோத் சொல்லு"என்றால்.

"நான் வாசுகிய மனசார விரும்புறேன்.அவ என்னோட லைப் பூரா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்"என்றவனை

"ஹேய் இத எதுக்கு என்கிட்ட சொல்ர.ஒண்ணு இவகிட்ட சொல்லு.இல்லன்னா எங்க அம்மா கிட்ட பேசு நான் எதுக்கு"என்று கூறியவள் வாசுகியை பார்க்க அவள் என்னவென்று சொல்ல முடியாத உணர்ச்சிக்கு ஆளாகியிருப்பதை அறிந்த நித்யா

"பாரு வெட்கம்னா என்னன்னே தெரியாத என் அருமை தங்கச்சி எப்படி வெட்கப்படுறான்னு.சரி நீ எங்க அம்மாகிட்ட வந்து பேசு சரியா"என்றவனை வினோத்

"அது இல்ல நித்யா ,ஒரு முக்கியமான விசயம் ஒண்ணு பேசனும்"என்றவனை

நித்யாவும் வாசுகியும் என்ன என்பது போல பார்க்க

"உனக்கு ஞாபகம் இருக்கா.நம்ம படிக்கிறப்போ காலேஜ் சேர்மன் எலக்சன்ல உன் கிட்ட நான் தோத்துப்போனேன்.எங்கப்பா காலேஜ்லயே என்னால சேர்மன் ஆக முடியல என்ற கோபம் இருந்துகிட்டே இருந்திச்சி.அப்பாவோட அரசியல் அதிகாரம் இருந்த அகங்காரத்துல நான் என்ன செய்தாலும் என்ன கேட்க யாருமே இல்லைன்னு சுத்திக்கிட்டு திரிஞ்சேன்.அப்படி இருக்கும் போதுதான் நீயும்,அதிதியும் அந்த கௌசிக் கம்பனிக்கு ஜாப் கேட்டு போனீங்க.நாந்தான் அவன்கிட்ட சொல்லி உன்ன அந்த மாதிரி வீடியோ எடுக்க சொன்னேன்.ஆனா அவன் அத வெச்சி உன்ன ப்ளாக்மெயில் பண்ணுவான்னு கொஞ்சம் கூட நினைக்கல"என்றவனை வாசுகி இப்போது எரித்து விடுபவள் போல பார்த்தாள்.அவன் தொடர்ந்து

"நான் சொல்ல வந்தத சொல்லி முடிச்சிர்ரேன்.அதுக்கு அப்புறமா அப்பாவும் அம்மாவும் ப்ளைட் ஆக்சிடன்ல இறந்து போக நான் தனி மரமாகிட்டேன்.எனக்கு எப்படி நல்ல புத்தி வந்ததோ தெரியல.எங்கப்பா சட்டவிரோதமா உழைச்ச எல்லா பணத்தையும் ஒரு சாரிட்டிய அமைச்சி நல்ல விசயங்கள் பண்றேன்.அப்புறம் இந்த காலேஜ் எங்க தாத்தாவோட சொத்து என்பதால அத மட்டும் வெச்சிக்கிட்டேன்"என்று தொடர்ந்து பேச முற்பட்டவனை வாசுகி

"அக்கா கண்ட கண்டா நாய் எல்லாம் பேசுரத எதுக்கு கேட்டுக்கிட்டு இருக்க.வா போகலாம்.சீ மிஸ்டர் வினோத் இனிமே நானும் எங்கம்மாவும் உங்க காலேஜுக்கு வேலைக்கு வரமாட்டோம்.அப்புறம் கல்யாணம் அது இதுன்னு வீட்டு பக்கம் வந்தீங்க செருப்பு பிஞ்சிடும் "என்றவளை நித்யா பார்வையாலேயே அடக்கி

"வாசுகி உட்காரு.அவரு என்னதான் சொல்ராருன்னு கேட்கலாம்"என்றவளை வாசுகி கோபமாக பார்த்தால்.வினோத் தொர்ந்தவன்

"வாசுகி நீ என்ன வேணும்னாலும் திட்டு ,நான் சொல்ல வர்ரத முழுசா சொல்லிர்ரேன்.நான் பண்ணது மன்னிக்க முடியாத குற்றம்தான்.எனக்கு மன்னிப்புப்பு கேட்குற தகுதி கூட இல்ல.அம்மாவும் அப்பாவும் இறந்ததுக்கு அப்புறமாதான் எனக்கு வாழ்க்கையே புரிஞ்சது.அப்பாவோட அரசியல் அதிகாரத்துக்காகதான் பலபேரு என்கூட பழகினாங்க என்பது அவரு இல்லாம போனதுக்கு அப்புறம்தான் புரிஞ்சது.எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரில நித்யா.உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தோனிச்சி.நான் இப்போ ஒரு வருசமாதான் கொஞ்சம் மன நிம்மதியா இருக்கேன்.அதுவும் வாசுகியால.நான் அவள ரொம்ப விரும்புறேன்.நான் அவகிட்ட இந்த உண்மைய மறைச்சி அவள கல்யாணம் பண்ணி இருக்கலாம்.ஆனா அவள ஏமாத்த நான் விரும்பல,அதான் உன்னையும் இங்க வரவைச்சு உண்மை எல்லாத்தையும் சொல்லலாம்னு நினைச்சேன்"என்றவனை வாசுகி

"அக்கா நீ இப்போ வரியா,இல்லையா?நான் போறேன்"என்றவளை நித்யா தடுத்து

"வினோத் நீ பண்ணது மன்னிக்க முடியாத குற்றம் என்றாலும் வாசுகிட்ட உண்மைய மறைக்காம சொல்லனும்னு நினைச்ச பாரு அது ஒன்னுக்காகவே நீ செஞ்சத நான் மன்னிச்சிடுறேன்.ஆனா மறக்க மாட்டேன்.அன்னைக்கு அந்த கௌசிக் என்ன ஏதும் பண்ணியிருந்தா ,இல்லன்னா வாட்சப்ல அந்த வீடியோ லீக் செஞ்சிருந்தா என் லைப் என்னாகிருக்கும்னு யோசிச்சியா.சரி அதை எல்லாம் விடு.இதுவே இப்போ வாசுகிக்கு யாரும் இப்படி பண்ணா உனக்கு எப்படி இருக்கும்.அதிகாரம் இருக்கு என்றதால என்ன வேணாம் பண்ணலாம்னு நீ எப்படி நினைக்கலாம் வினோத்.உங்கம்மாவும் ஒரு பொண்ணுதானே.நீ வேற என்ன பண்ணாலும் நான் ஒன்னும் சொல்லிருக்க மாட்டேன்.ஆனா ஒரு பொண்ணோட மானத்தோட விளையாட பார்த்தேல,அதான் தாங்கிக்க முடியல.சரி நான் உன்ன மன்னிச்சிட்டேன்.ஆனா வாசுகி உன்ன ஏத்துக்கிறதா இல்லையா என்கிறது அவளோட இஷ்டம்"என்றவளை வாசுகி

"உனக்கு என்ன லூசா.கண்டவன்கிட்ட எதுக்கு இப்போ விளக்கம் கொடுத்துகிட்டு இருக்குற.வா போகலாம்"என்றவளை வினோத் பாவமாக பார்த்து

"சுகி ,ப்ளீஸ் நான் பண்ணது தப்புதான்.அதுக்காக என்ன வேணாம்னு சொல்லிடாத "என்றவனை

"இனிமே என் பேரை சொன்ன செருப்ப கலட்டி அடிப்பேன்.என் கண்ணு முன்னாடி நிக்காத போயிடு"என்றாள்.

நேரடியாக வாசுகியும் ,நித்யாவும் அவர்களின் வீட்டிற்கு வர நித்யா

"சுகி,நீ வினோத லவ் பண்ணியா?"என்று கேட்க அவளோ நித்யாவை கட்டிக்கொண்டு

"ஆமாக்கா அவன நல்லவன்னு நினைச்சி லவ் பண்ணேன்.உன்கிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லி பர்மிசன் வாங்கினதுக்கு அப்புறமா அவன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்.ஆனா அவன இப்போ நினைச்சா எனக்கு வெறுப்பு மட்டும்தான் இருக்கு.இப்படியு ஒரு மனிசன் இருப்பானா.அதுவும் காலேஜ் சேர்மன் எலக்சன்ல தோத்ததுக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிக்க பார்த்து இருக்கானே.அவன நினைச்சாலே அருவருப்பா இருக்கு"என்றாள்.
நித்யாவுக்கு ஒரு விடயம் தெளிவாக புரிந்தது.வாசுகி அவனை அளவுக்கு அதிகமாக மனதார நேசித்துவிட்டால் என்று.

'நானாக இருந்தால் கண்டிப்பாக வினோதின் தவறுகளை மன்னித்து அவனை ஏற்றிருப்பேன்.ஆனால் வாசுகி அவளோட காரக்டருக்கு கண்டிப்பா ஏத்துக்க மாட்டா.கடவுள் விட்ட வழி.பார்க்கலாம் இவர்களின் காதலா,இல்லை வாசுகியின் வெறுப்பா எது வெல்ல போகின்றது என்று'மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro