
❤ சிறுநகை 16
"ஹலோ; குட்மார்னிங் மிஸ்டர் ரேஷ்....! எழுந்திரிங்க ஸார்!
இப்டி டெரஸ்க்கு வந்து கொட்டுற பனியில வெறும் தரையில உடம்ப சுருட்டிக்கிட்டு படுத்துருக்கீங்க? வினோதினி பெரியம்மா, சஞ்சீவ் அண்ணால்லாம் நீங்க இங்க படுத்துருக்குறத பாத்தாங்கன்னா நெஞ்சுல கைய வச்சுருவாங்க!" என்று சொன்ன படி அவனுடைய முதுகில் லேசாக தட்டி உறங்கிக் கொண்டிருந்த கதிரை எழுப்பிக் கொண்டிருந்தாள் சஞ்சீவின் சித்தப்பா பெண் மினு.
ஒரு இளம்பெண் முதுகில் தட்டும் உணர்வு கூட இல்லாமல் தன்னுடைய காதுப்பகுதியை மட்டும் அவனுடைய கைக்குட்டையால் இறுக்கிக் கட்டிக் கொண்டு, அவன் கண்களை பெரிய கைகளால் மறைத்தபடி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் அந்த நெடுமாறன்.
அதிகாலையில் அவளது அஸெஸ்மெண்ட் டெஸ்ட் ரிவிஷனுக்காக மாடிக்கு வந்த மினு கதிர் தரையில் சுருண்டு கிடப்பதைப் பார்த்து விட்டு, அவனை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அவனை எவ்வளவு அசைத்தும் எழுப்ப முடியாமல் சடைத்துக் கொண்டவள், "யப்பா.... இவர் காலு ரெண்டும் நம்ம ஊர்ல இருந்து கோயம்புத்தூர் வரைக்கும் போகும் போலிருக்கே..... எவ்ளோ டயர்டா இருந்தாலும், கெஸ்டா வந்த வீட்ல ஒருத்தர் இப்டியா பேன்னு தூங்குறது? மைகாட்..... ஒருவேள இந்த ஆளு செத்து கித்துப் போய்ட்டாரா?" என்று யோசித்து திடீரென பயந்தவள் அவனது உடல் மூச்சு விடுவதால் மேலும் கீழுமாக ஏறி இறங்குகிறதா என்று கவனித்தாள்.
"அப்பாடா! உயிரோட தான் இருக்காரு; ஆனா எழுந்திருக்க தான் மாட்டேங்குறாரு. எனக்கென்ன..... நான் என்னால முடிஞ்ச வரைக்கும் இவர எழுப்ப ட்ரை பண்ணிட்டேன்பா! இனிமே இவரோட மல்லுக்கட்ட எனக்கு டைம் இல்ல; நான் படிக்கணும்!" என்று தோளைக் குலுக்கிக் கொண்டு அந்த மொட்டை மாடியில் அவளது ஃபேவரைட் ஸ்பாட்டுக்கு வந்தாள் மினு.
அந்த பெரிய வீட்டின் மொட்டை மாடியில் நடுநாயகமாக கீழே இருக்கும் பெரிய தொன்னந்தோப்பையும், ஒரு பக்கம் நீச்சல்குளம் மற்றும் மற்றொரு பக்கம் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி, பேஸ்கெட் பால் கோர்ட் அடங்கிய பெரிய கார்டனையும், கார்டனுக்கு பக்கத்தில் சின்னதாக அமைந்திருந்த ஒரு கோவிலையும் பார்க்கும்படியாக நான்கு படிகள் ஏறி கொஞ்சம் கூடுதலான உயரத்தில் மண்டபம் போன்று ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
நான்கு பக்கமும் எழுப்பப்பட்ட சுவர்களில் ரங்கூன் க்ரீப்பர் என்ற தாவரத்தை வளர்த்து, மேல்பக்கத்தில் அதை ஒரு பந்தல் போல் மொத்தமாக மூடியிருந்தனர். அந்த பில்லருக்கு அடியில் ஒரு ஸோஃபா செட்டும், ஒரு ராக்கிங் சேரும் போடப்பட்டிருந்தது.
எப்போதும் தான் படிக்கும் இடத்தில் சென்று அமர்ந்த மினு இப்போது பார்த்த அதிசயம் என்னவென்றால் கீழே உள்ள தோட்டத்தின் மொத்த ஸ்ட்ரெக்சரும் கதிரேசனால் லேண்ட்ஸ்கேப் ஓவியமாக வரையப்பட்டிருந்தது.
அவன் அந்த ஓவியத்திற்காக பயன்படுத்திய பேஸ்டல் பென்சில், சார்க்கோல் ஸ்டிக்ஸ், ப்ரெஷ்ஷஸ் அண்ட் டிப் பென்ஸ், ஷார்ப்னர்ஸ், எரேசர், ட்ராயிங்க் போர்டு, ரஃப், ஹாட் ப்ரெஸ்டு, கோல்டு ப்ரெஸ்டு என்ற மூன்று விதமான பேப்பர்கள் இவை அனைத்தும் ஒரு ஓரத்தில் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மினு அந்த ஓவியத்தைப் பார்த்து வியந்து ஒரு விசில் அடித்து விட்டு அந்த ஓவியத்தின் டீடெயிலிங்கை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
"ஆர்ட்டிஸ்ட் ஸார் இங்க வந்தவுடனே அவர் வேலைய ஆரம்பிச்சுட்டாரு போலிருக்கே...... இவர் வரைஞ்சுருக்குறது என்னவோ நம்ம தினமும் பார்க்குற க்ரௌண்டு தான், தென்னமரந்தான், ஊஞ்சல், சீசா அப்புறம் தொப்ப புள்ளையார் தான்.....!"
"ஆனா நேர்ல பார்க்குறத விட பெயிண்டிங்க்ல இந்த வீட்டோட கேட் வரைக்கும் போற இடம் எவ்ளோ அழகா இருக்கு. ஒரு முனையில இருந்து இன்னொரு முனை வரைக்கும் கண்ணுல பாத்ததயெல்லாம் அப்டியே இந்த ப்ரேமுக்குள்ள கொண்டு வந்துட்டாரேய்யா மனுஷன்..... எக்ஸ்ட்ராடினரி டேலண்ட்ப்பா!"
"இத அப்டியே காலேஜ்க்கு எடுத்துட்டுப் போய் நம்ம ப்ரெண்ட்ஸூக்கு காட்டுனா என்ன?" என்று சப்தமாக பேசி யோசித்தபடி அந்த பெயிண்டிங்கை அப்படியும் இப்படியுமாக கையில் தூக்கிப் பார்த்து அதை நுண்ணியமாக ரசித்துக் கொண்டிருந்தாள் மினு.
காலை ஜாகிங்கை முடித்து கதிரை தேடிய சஞ்சீவ் அவனுடைய அறையில் கதிர் இல்லாததால், சரியாக அந்த நேரத்தில் அவனைத் தேடிக் கொண்டு மாடிக்கு வந்திருந்தான். படுக்கையறையில் தூக்கம் வரவில்லை என்றால் சில்லென்ற இடத்தில் கன்னம் வைத்து தூங்குவது கதிரின் வழக்கம்! இப்போதும் அங்கு சென்று தான் உறங்கிக் கொண்டிருப்பான் என்று நினைத்த சஞ்சீவின் எண்ணத்தைப் பொய்யாக்காமல் வெறும் தரையில் தான் கிடந்தான் கதிர்.
சஞ்சீவை ஆச்சரியப்படுத்தியது அவனது தங்கை அவளுடைய கையில் வைத்திருந்த ஓவியம் தான்! கதிர் ஒரு ஓவியத்தை
இரவில் ஆரம்பித்து, விடியலுக்குள் அதை நிறைவும் செய்திருப்பதை சஞ்சீவால் நம்பவே முடியவில்லை.
ஒரு ஓவியத்தைத் தொடங்கினால், எப்போதும் சஞ்சீவ் தான் அந்த ஓவியத்தை முடிப்பதற்காக கதிரிடம் சென்று கெஞ்ச வேண்டும். இப்போது கதிரின் இந்த அனாயாசமான வேகம் சஞ்சீவை பரவசப்படுத்தியது. தன்னுடைய வீட்டின் அழகை கதிர் மிகவும் ரசித்திருக்கிறான்; அதனால் தான் பெயிண்டிங்கை இவ்வளவு சீக்கிரமாக முடித்திருக்கிறான் என்று உணர்ந்து அவனுக்குள் சிரித்துக் கொண்டான்.
தன்னுடைய கையில் இருக்க வேண்டிய ஓவியம், இப்போது தன் தங்கையுடைய கையில் இருப்பதைப் பார்த்து சற்றே எரிச்சலடைந்தான்.
"ஏய் மினு! யாரக் கேட்டு இதக் கையில எடுத்த? இந்த ஆர்ட் வொர்க்க நீ மொதல்ல பெர்மிஷன் இல்லாம கையிலயே தொட்டுருக்க கூடாது. அதுவுமில்லாம இத காலேஜ் வரைக்கும் கொண்டு போறதப் பத்தி யோசிச்சுட்டு இருக்கியா? அந்த வொர்க்க எங்கையில குடுத்துட்டு கீழ போ மினு!" என்று தனது தங்கையிடம் சொன்னான்.
"இங்க பாரு சஞ்சு! ஒரு நல்ல ஹேண்ட்பேகும், ப்ராண்டட் ஹீலும் வாங்கிட்டு வந்துட்டங்குறதால நீ என்ன சொன்னாலும் நான் கேப்பேன்னு நினைச்சுக்காத! இந்த பெயிண்டிங்க முதல்ல நான் தான் பாத்தேன்! அதுனால இது எனக்கு தான் சொந்தம்.....!"
"இந்த பெயிண்டிங்காக என்னோட சண்டைக்கு வர்றதுன்னா மிஸ்டர் ரேஷ் வரட்டும்; அவர் கேட்டா நான் இத அவர்ட்டயே குடுத்துடப் போறேன். நீ எதுக்கு தேவையில்லாம இப்ப எங்கிட்ட சண்டைக்கு வர்ற?" என்று கேட்ட தன் தங்கையிடம் உறுதியான குரலில்,
"டோண்ட் ஆர்க்யூ.....! குடுன்னா குடுத்துடணும்! சும்மா நீ கண்ணுல பாக்குறதெல்லாம் உனக்கு சொந்தமாகிடுமா? ஒருத்தரோட பெர்மிஷன் இல்லாம, அவங்க பொருள தொடுறது தப்பு! அது நல்லாயிருக்குதுன்னவுடனே அத அப்டியே அபேஸ் பண்ண நினைக்குறது அத விட தப்பு! அந்தோ பெப்பரப்பேன்னு தரையில படுத்து தூங்குறாரு பாரு.....!"
"அவர் ஒரே ராத்திரில இந்த ஒரு ஃபுல் ஸ்கெட்சையும் முடிச்சிருக்காரு..... இந்த ஒரு பீஸ இப்டி முடிக்க குறைஞ்சது ஆறுல இருந்து ஏழு மணி நேரம் ஆகியிருக்கும். மிட்நைட் 12 மணிக்கு ஆரம்பிச்சிருந்தா, நைட் டைம்ல ஷேட்ஸ், லைட்டிங்க் எந்த டைரக்ஷன்ல இருந்து விழுதோ அத அவர் அப்டியே நியாபகம் வச்சுருக்கணும்.....!"
"ஒரு ட்ராயிங்ல ஒவ்வொரு டீடெயிலிங்கையும் முடிக்குறதுக்குள்ள சில நேரத்துல
க்ளைமேட் கூட மாறிடலாம்! வெயில் விழுற நேரத்துல படத்த ஆரம்பிச்சு, அந்நேரத்துல மழை பெய்ய ஆரம்பிடுச்சுன்னா அந்த மொத்த படத்தையும் அந்த ஆர்ட்டிஸ்ட் அவனோட இமாஜினேஷன்ல தான் வரைஞ்சு முடிக்கணும்!"
"ஸோ இது நீ நினைக்கிற மாதிரி சைல்ட்ஸ் ப்ளே இல்ல..... பல மணி நேரத்து ஹார்டுவொர்க், க்ரியேட்டிவிட்டி, இமாஜினேஷன் எல்லாம் கலந்துருக்குற ஒரு ப்ராடெக்ட்! மரியாதயா இத இப்ப எங்கையில குடுத்துடு, இல்லன்னா நீ இந்த பெயிண்டிங்க எடுத்துக்கப் போறேன்னு கேட்டியே அத நான் சித்தப்பா கிட்ட சொல்லுவேன்.....!" என்று சொன்னான் சஞ்சீவ்.
"ஸாரிடா அண்ணா! இத வரையுறது இவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தெரியாது. ரொம்ப எக்ஸாஸ்ட் ஆகி தான் இவர் இப்டி தரையிலயே படுத்துட்டாரா? நீ வேணும்னா இவர எழுப்பி விடேன். நான் போயி இவருக்கு குடிக்க சூடா பால் கொண்டு வர்றேன்!" என்று சிநேகக் குரலில் சொன்னாள் மினு.
"நோ தேங்க்ஸ்..... உன் வேலைய நீ பாரு; எங்க வேலைய நாங்க பார்த்துக்குறோம்!" என்று அவளை வெட்டி விடும் குரலில் பேசியவனிடம்,
"ச்சீ! ஏன்டா இப்டி எல்லார் கிட்டயும் வள்வள்ளுன்னு விழுற? ஆசையா கிப்ட்டெல்லாம் குடுத்தன்னு அன்பா உங்கிட்ட பேச வந்தேன் பாரு! என்னை அடிச்சுக்கணும்; இந்தா..... உன் ப்ரெண்டு வரைஞ்ச ட்ராயிங்க எடுத்த எடத்துலயே திருப்பி வச்சுட்டேன். போதுமா? இப்ப சந்தோஷமா உனக்கு?"
"ச்சை.... காலங்காத்தால இப்டி சண்ட போட்டு என் மூடையே அப்செட் பண்ணிட்டியே; இனிமே எக்ஸாம் கிளுகிளுன்னு எழுதிடலாம்! இத்தன வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்தும், கொஞ்சங்கூட அறிவே வளராம வந்துருக்கான் பாரு! லூசுப்பய.....!" என்று தன் அண்ணனை திட்டிக் கொண்டே டங்கு டங்கென்று சப்தமான காலடிகளுடன் அங்கிருந்து சென்றாள் மினு.
தனது கலையால் அண்ணன், தங்கைக்குள் ஒரு கலவரத்தையே உண்டாக்கி விட்டோம் என்று தெரியாத கதிர் அப்போதும் சரியான உறக்கத்தில் தான் இருந்தான்.
அவனுடைய பக்கத்தில் வந்து அவனை வாஞ்சையாக தடவிக் கொடுத்த சஞ்சீவிற்கு திடீரென கதிரை அரண்டடித்துக் கொண்டு எழச் செய்யும் எண்ணம் எட்டிப் பார்த்தது.
அவன் காதருகில் நகர்ந்து மெதுவான குரலில் கதிரிடம் "பாஸ்.... பாஸ்! உங்கள பாக்க மிஸ். சந்தனா வந்துருக்காங்க. நீங்க தூங்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லி, அவங்கள இங்கருந்து நான் கிளம்பச் சொல்லிடவா?" என்று கேட்டான்.
பத்து நிமிடங்களாக அண்ணன் தங்கையின் உரையாடலும், வாக்குவாதமுமாக கதிரின் ஆழ்ந்த உறக்கம், அரைகுறை உறக்கத்திற்கு வந்திருந்தது. இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்தரை மணி வரையில் கண்முழித்து ஒரே மூச்சாக வரைந்தவனுக்கு கண்களை திறப்பது தான் பெரிய விஷயமாக இருந்தது.
"நான்..... முழிச்சு தான்..... இருக்....கேன்! ஆனா கண்ண தான்.... தொறக்கவே முடியல! அவள வெயிட் பண்ண.... சொல்லுடா!" என்று அவ்வளவு தூக்கக் கலக்கத்திலும் சஞ்சீவிற்கு ஒரு தெளிவான பதிலை தந்த கதிர் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கிடந்த நிலையில் இருந்து அமர்ந்த நிலைக்கு வந்து சப்பணமிட்டு தலையை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தான்.
"தூக்கம் கலையலன்னா உங்க ரூமுக்குப் போயி பெட்ல படுத்துத் தூங்குங்க பாஸ்! இன்னுங்கொஞ்ச நேரத்துல இங்க வெயில் வந்துடும்; இவ்ளோ குளிர்ல வெறுந்தரையில படுத்தும், உங்களுக்கு எப்டிதான் தூக்கம் வருதோ?" என்று அலுத்துக் கொண்ட சஞ்சீவிடம்,
"ம்ப்ச்! அதெல்லாம் நல்லாத் தான் வருதுடா; இப்ப நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவ இங்க வந்துருக்கான்னு தான சொன்ன? அவ எப்டிடா இங்க வருவா? அவளுக்கும் உங்க வீட்டுக்கும் என்ன சம்பந்தம்?" என்று ஓரளவு தூக்கம் தெளிந்து விட்ட குரலில் கேட்டான் கதிர்.
"ஆமால்ல.... அவங்க எப்டி இங்க வருவாங்க? ஆனா பாருங்க.... உங்க கான்ஷியஸ் மைண்டுக்கு இருக்குற தெளிவு உங்க சப் கான்ஷியஸ் மைண்டுக்கு இல்ல! அவள வெயிட் பண்ண சொல்லுடான்னு தூக்கத்துலயே எங்கிட்ட சொன்னீங்க! நீங்க இப்டி தூக்கத்துல பெனாத்துறதெல்லாம் தெரியாம, உங்க இம்சையில்லாம மிஸ் சந்தனா நாகர்கோவில்ல ஜாலியா இருப்பாங்கல்ல பாஸ்?" என்று கேட்ட சஞ்சீவை உறுத்து விழித்தவன்,
"ஒரு நிமிஷம் இங்க என் பக்கத்துல வாயேன்!" என்று அழைத்தான்.
"அஸ்க்கு புஸ்க்கு! நான் இப்ப உங்க கிட்ட வந்தா எனக்கு செம மொத்து விழும். ஸோ ஐ'ம் நாட் கம்மிங்....
எனிவேஸ் கங்க்ராஜுலேஷன்ஸ் ஃபார் த ஒன்மோர் ந்யூ பார்ன் பேபி! இது உங்களோட 235 ஆவது பெயிண்டிங். இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் கீழ போறேன். நீங்களும் மறுபடியும் படுத்துடாம கீழ இறங்கி வாங்க.....!"
"மார்னிங் சாப்ட்டுட்டு நாம அம்மாட்ட கொஞ்சம் ஃப்ரீயா நம்ம ப்ளான் பத்தி பேசலாம்.... சரியா? சீக்கிரமா வாங்க!" என்று சொன்னவன் அந்த இடத்திலிருந்த கதிரின் பொருட்களை ஒரு லெதர் பேகிலும், அவன் ட்ராயிங் ஸ்டாண்டை இடது கையிலுமாக தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து கீழிறங்கி சென்றான் சஞ்சீவ்.
"யாரோ ஏதோ சண்ட போட்டுக்குற மாதிரியே அரையும் குறையுமா நம்ம காதுல பேச்சு விழுந்ததே.... அது கனவா இல்ல நிஜமா?" என்ற குழப்பத்தில் இருந்த கதிர் அந்த இடத்தில் இருந்து எழுந்து உடம்பை சற்று முறித்து விட்டு கீழே சென்றான்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro