Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

SPECIAL UPDATE

ஆகாசத்தில் உதித்திருந்த அந்த அர்புதமான இடத்தின் அழகை, ஒரு நிமிடம் பொறுமையாக நின்று ரசிக்க அனுமதிக்காமல், ஆளை சுழற்றி வீசும் சூரைக்காற்று அங்கே சுழன்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது... இமையை பிரிக்க கூட இயலாத அவ்விடத்தின் நடுவே சத்தீஷ் மற்றும் ஆதியன்த், பறக்க இயலாவிட்டாலும் மிகவும் கடினப்பட்டு தங்கள் ரெக்கைககளை விரித்து முன்னேற முயற்சித்து கொண்டிருக்க... அவர்களை வெகுநேரம் காக்கவிடாது தன் இடையில் இருக்கமாக கட்டியிருந்த கயிற்றுடன் சர்ரென அந்த கற்றால் வீசியெரியபட்டு ஆதியந்த் மீது மோதினான் சேவன்... அதற்கு மேலும் அவனை அவ்விடத்தில் இருந்து சிரமப்பட விடாமல் இருவரும் அவனுடன் விரைந்து தரையிறங்கினார்கள்...

சேவன் மூச்சை இழுத்து இழுத்து விட..., "அப்பா... இவன நீ இங்க பாத்துக்கோ.. நா போய் அவனுங்க என்னத்த பண்ணி தொலசுருக்கங்கன்னு பாக்குறேன்..", என கூறி ஆதியன்த் விண்ணை நோக்கி பாய்ந்தான்.

✨✨✨✨✨

அங்கே தூரத்தில் ருத்ராக்ஷ் அந்த பெரும் கடலை பதைபதைப்புடன் நோக்கி கொண்டிருக்க.... இவ்வளவு நேரம் அதனுள் நீந்தியதன் அடையாளமாய் அவன் உடை முழுவதும் நனைந்திருந்தது....
அவனருகில் தரை இறங்கிய ஆதியன்த், "என்னாச்சு டா...", என அதே படபடப்புடன் கேட்க..., "இன்னும் வரல டா... கால் மணி நேரம் ஆச்சு... அவனால இவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியுமா??.. எனக்கு பயமா இருக்கு டா..", என பதட்டத்துடனே பதிலளித்தான்.

"சரி வா டா... நாமலே போவோம்..", என தன் சக்தியால் ஒரு பெரும் காற்று குமிழியை இருவரையும் சுற்றி உருவாக்கி, அப்பெரும் ஆழியினுள் ருத்ராக்ஷுடன் குதித்தான் ஆதியந்த்... அவர்கள் வெகு ஆழத்திற்கு சென்ற பின்பே அவனை கண்டார்கள்.... அங்கே ஒளி கூட நுழைந்திடாத கடலின் அடியாழத்தில் மூச்சை இருக்கிப்பிடித்து கொண்டு எதையோ மும்முரமாக செய்து கொண்டிருந்தான் லாலா..

அவனை கண்டதும் இவ்விருவரும் அவனை பிடித்து இழுத்து கொண்டு மேலே முன்னேற... பாதி தூரம் சென்ற அவர்களின் பிடியில் இருந்து திமிறி கொண்டு வேகவெகாக மீண்டும் அவ்வாழத்தை அடைந்த லாலா, தான் செய்து கொண்டிருந்த செயலை மீண்டும் தொடர்ந்தான்.... அதற்கு சில நிமிடங்களிலேயே பினிஷிங் டச் கொடுத்து முடித்து, அதை தன்னுடனே எடுத்து கொண்டு, இவ்வளவு நேரமும் தன்னை கடிணபட்டு இழுத்து கொண்டிருந்த அவர்களுடனே மேலே வந்து கரையில் பொத்தென விழுந்து ஆழமாக மூச்சை இழுத்து இழுத்து விட்டான்...

வெளியில் வந்த ருத்ராக்ஷ், "அவனுங்கள புடிச்சாச்சா...??", என சகோதரனை நோக்கி கேள்வி எழுப்ப..., "சேவன் நல்லாருக்கான்... மயூரன புடிக்க சித்து கூட இந்திரனப்பா கிரிஷ்ப்பா போய்ருக்காங்க....", என அவனுக்கு பதிலளித்து விட்டு லாலாவை மூக்கு முட்ட முறைத்தான்.

✨✨✨✨✨

அவ்விடத்தின் வெம்மை தாளாமல் வேர்த்து விருவிருத்து போய் இருந்தவன்.. தகிக்கும் அனலை தாங்கி கொண்டு வெகு சீரியசாக எதையோ செய்து கொண்டிருந்தான்.... அவனின் இருபுறமும் இவ்வளவு நேரமும் அவனை பிடித்து இழுக்க பலவித முயற்சிகள் செய்து தோற்று போனவர்கள் இப்போது வேறு வழியே இன்றி அவனுக்கு அரணாக நின்றார்கள்..

அவ்விடத்தின் வெம்மை அவனை தாக்காதவாரு கிரிஷ் மற்றும் சித்தார்த் மயூரனின் இருபுறமும் நிற்க....அவர்களையும் மீறி கொதிக்கும் எரிமலையின் உஷ்ணம் அவனை தீண்டாதவாரு இருக்க இந்திரன் அவனை சுற்றிலும் நீரால் ஆனா அரணை ஏற்படுத்தியவன்னம் இருக்க.. அது அதன் போக்கில் ஆவியாக மாறி மேலே சென்றவன்னம் இருந்தது....

இறுதியாக எப்படியோ தன் வேலையை முடித்த மயூரன், இதற்கு மேல் முடியாமல் அப்படியே மயங்கி விழ.. பதறி போன மூவரும் அவனை பத்திரமாக வெளியில் அழைத்து கொண்டு வந்தார்கள்....

✨✨✨✨✨

சில நிமிடங்களில் மெல்ல கண் விழித்து பார்த்தான் மயூரன்... அவனருகிலேயே சேவன் மற்றும் லாலா அவனையே பார்த்து கொண்டு நிற்க... மற்ற ஆறுவரும் கோபத்தின் உச்சகட்டத்தில் இருந்தார்கள்....

"டேய்... இதெல்லாம் விளையாட்டா போச்சா டா உங்களுக்கு... உயிருக்கு எதாவது ஆயிருந்தா நாங்க என்ன டா செய்வோம்...", என க்ரிஷ் கோவத்தில் அனலாய் கொதிக்க.... குட்டி நண்பர்கள் மூவரும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் தரையில் எதையோ மும்மரமாய் தேடி கொண்டிருந்தனர்...

"இங்க தான் இது எல்லாம் செய்யனுமா... இங்க நீங்க வந்தீங்கன்னு தெரிஞ்சாலே வீட்ல எல்லாரும் பதறி போய்டுவாங்க... நாங்க சொல்ல சொல்ல கேட்காம ஏன்டா இப்டி விடிஞ்சும் விடியாத நேரத்துல.. அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு வந்து.... " என சத்தீஷ் வேகவேகமாய் வத்து கொண்டிருக்கும் போதே, "உயிருடன் தான் வந்து விட்டோமே கோவனே", என மயூரன் பாவமாக அவனை பார்த்தபடி கூறவும் ஆறுவரும் அவனை முறைத்தனர்...

"ஏன்டா டேய்..... நீ மூச்சு விட முடியாம பட்ட அவதிக்கு நா இன்னோரு புது பர் ஆஃப் லங்ஸ் தான் டா உனக்கு வாங்கி வச்சிருந்துருக்குகனும்.. இப்போ நல்லா பேசு", என சித்தார்த் மீண்டும் அவனே கர்ண கொடூரமாய் முறைக்க.... ருத்ராக்ஷ் அவனின் ஈர முடியை சிலிப்பி விட்டபடி, "ப்பா இவனுங்கள ஏன் திட்டுறீங்க... இந்த இடம்லாம் தடை செய்யாம வச்சிருக்கவங்கள தான் நாம திட்டனும்..", என அடக்கப்பட்ட கோபத்தோடு கூறினான்...

(வானு m.v : இந்த எடத்த நா யாருகிட்ட சொல்லி பான் பண்ண?? 🙄)

"ஆமா.... உங்களுக்கு யாரு இந்த இடமெல்லாம் இருக்குனு சொன்னது... லாலாக்கு கூட இந்த இடமெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லையே... அவனால யாரு உதவியும் இல்லாம அவன் ராஜ்யத்த விட்டு கூட வர முடியாதே... அப்டி இருக்கும்போது இந்த இடங்கள பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல..... சொல்லுங்க சேவா மயூரா.. உங்களுக்கு லாலாக்கும் இந்த இடத்த பத்தி யாரு சொன்னது??....", என இந்திரன் மிகவும் கோவமான குரலில் கேட்டு கொண்டிருக்கவும் அதற்கு மேல் அமைதியாய் இருப்பது நல்லதல்ல என மூவரும் "ஷேனா தான்.... " என பட்டென உண்மையை போட்டு உடைத்துவிட்டு அநியாயமாய் ஒரு அப்பாவியை பலியாக்கிவிட்டு பப்பி ஃபேஸை வைத்து கொண்டார்கள்.....

✨✨✨✨✨✨

மங்கல கதிர் வைபவம் துவங்கி ஆறாம் நாள் இன்று... 
திருமணம்/நிச்சயம்... நிகழ போகும் அந்த பொன்னான தருணத்தை எதிர்நோக்கி நீண்ட நாள் காதல் ஜோடிகள்.... புத்தம்புதிய காதல் ஜோடிகள்.... இப்போதே சுயம்வரத்தில் கண்டெடுத்த காதல் ஜோடிகள் என விதவிதமான காதல் கதைகள் ஒவ்வொன்றும் தாங்களின் வருங்காலம் பற்றிய பலவித கற்பனையில் அழகான கனவில் தவழ்ந்தவாரு ரத்னமாளிகையின் ஒவ்வொரு தனி தனி அறையிலும் தயாராகி கொண்டிருக்க.. இன்னமும் நம் இளவரசிகளின் இல்லத்தில் இருந்து மட்டும் எவரும் வரவில்லை.. அவர்கள் அங்கே குட்டி நாயகர்களின் வருகைக்காய் காத்து கொண்டிருந்தார்கள்....

அங்கே வீட்டிலோ.... தன்னவளின் அறைக்கதவு திறக்குமா திறக்காதா என கல்யாண மாப்பிள்ளைகளான அபி சாஹித்திர்க்கும் மேலாக, மாடி வராண்டாவில் ஷேனா நடை பழகி கொண்டிருக்க.... மணபெண்களே ரெடியாகி விட்டிருந்த நிலையில் மாயா மட்டும் அறையில் இருந்து வெளிவரவில்லை... அவளை எதிர்நோக்கி கதவையே குறுகுறுவென நோக்கிகொண்டிருந்த ஷேனாவின் தலையில் நங்கென ஒரு கொட்டு விழுந்து..

"ஸ்ஸ்.. ஆ...", என தலையை தேய்த்து கொண்டே திரும்பிய ஷேனாவின் முன் ரக்ஷவனுடன் ரட்சகன்களும் கோவான்களும் அவனை கர்ண கொடூரமாக முறைத்து கொண்டிருந்தார்கள்..., அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்தவன், "என்னாச்சு.. ஏன் இந்த மொர மொரைக்குறீங்க....", என எதுவும் புரியாமல் சற்று பீதியுடனே கேட்க..., "டேய் மச்சான்... நீ தானே நேத்து சேவன் மயூரன் லாலாக்கு அந்த விசேஷமான இடங்கள பத்தி சொல்லிட்டு இருந்த...", என ரக்ஷவன் சாதாரணமாகவே அவனை பார்த்து கேட்க, "ஆமா டா... நேத்து சாயங்காலம் அவனுங்க வந்து மறுமை பூமியில இருக்குற இடத்தல்லாம் பத்தி கேட்டாங்க... இருக்குரதுலேயே விசேஷமான மர்மமான எடத்த பத்தியும் கேட்டாங்க... அத தா நா உன்கிட்டயே சொன்னேனே.... அப்போ நீயும் கூட தானே இருந்த...", என இவனும் இப்போது நடந்தது எதுவும் தெரியாமல் நேற்று நடந்ததை கூறிவிட்டு முழிக்க, "அடேய்... நீ சொன்னத கேட்டுட்டு அவனுங்க மூனு பேரும் என்ன பண்ணி வச்சுருக்காங்கன்னு நீயே வந்து பாரு.. என அவனை பிடித்து இழுத்து கொண்டு ஹாலிர்க்கு சென்றார்கள்.

அங்கு நம் பொம்மி லாலாவை முறைத்தவரே நடு கூடத்தில் சற்று உயரே பறந்து கொண்டிருந்தாள்... மொத்த மறுமை பூமியுமே திருமணம் எனில் ரத்ன மாளிகைக்கு தான் வந்தாக வேண்டும் என்பதால் லாலா இங்கு தான் இருக்கிறான் என அறிந்து பொம்மி இங்கு வந்திருந்தாள்....
முதலில் மாயமாக மறைந்து கொண்டே லாலாவை மூலை முடுக்கெல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவள் நம் இளவரசிகளிடம் மாட்டி கொண்டாள்... தங்களை தவிர வேறு ஒருவர் இங்கு மறைந்து இருப்பதை உணர்ந்தவர்கள் அவளை கையும் களவுமாகப் பிடித்து விட... முதலில் அந்த அறையில் இருந்த கூட்டத்தை கண்டு பயந்துபோனவள் பின் அவர்கள் பேச்சில் மெல்ல மெல்ல சகஜமானாள்.

இப்போது....

சுற்றித்திலிருந்தோர் அனைவரும் அவர்களை சிரித்த படி காண பொம்மி தன் கோவத்தை சற்றும் மறைக்காமல் பொம்மி இன்னமும் அன்றைய கோபத்தில் தான் இருந்தாள்.... லாலா பொறுமையாக அன்று நடந்ததை தெளிவாக எடுத்துரைக்க.... கோபமே இல்லை எனினும் அவனிடம் கோபித்து கொண்டாள் அவள்... காரணம் லாலாவின் சமாதான மொழிகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

"எனக்கான திருமண பரிசெங்க லாலா.. கல்யாணம் அன்னைக்குன்னு எனக்கு ஒரு பரிசு கூட குடுக்காம என்ன ஏமாத்த பாக்குறீங்களா.....", என அவன் கழுத்தை பிடிக்காத குறையாய் அவன் முன் மேலும் கீழும் அழகாய் குதித்தாள் பொம்மி...

"பொம்மி... பொம்மி.... என் செல்லம்ல... அழகா ஓரு இடத்துல நின்னு நான் சொல்ல வரத கேளு பாப்போம்..... பிளீஸ் பிளீஸ் மா.. கேளு கேளு....", என அவளை பிடித்து நேராக நிற்க வைத்தவன், "உனக்கு ஒரு பரிசு கொண்டு வராம வைபவத்துல கால் வச்சா... அதுக்கு நா கடலுக்குள்ள மூழ்கிருவேன்னு எனக்கு தெரியாதா என்ன..." என அவளை சமாதானம் செய்வதாய் கூறி வேண்டுமென்றே அவள் சினத்தை ஏற்றிவிட.... " நீ கடலுக்குள்ள முங்கி முங்கி ரொம்ப ட்ரைனிங் எடுத்துறுக்கன்னு இப்போ புரியது டா..", என்ற ரெஞ்சிர்க்கு ருத்ராக்ஷ் அவனை ஒரு லுக்கு விட்டான்.

"ஹ்ம்ம்... எனக்கு பரிசு வாங்காம வந்தது மட்டுமில்லாம... என்ன பத்தி குறை வேற சொல்லுறீங்களோ.... " என பொம்மி இப்போது சோகமாக.... வேகவேகமாக அவளின் முன் முட்டியிட்ட லாலா அவளின் கரத்தை பிடித்தான்...

"என்ன மா இது முட்டாள் தனம்... உனக்காக எந்த எல்லைக்கும் போர நா... நம்ம வாழ்க்கைல அதிமுக்கிய நாள்ல குடுக்க வேண்டிய பரிச... என் செல்லத்துக்கு.... என் ஆச காதலிக்கு தராம இருப்பேனா...", என கண்களில் காதலை கலந்து கூறியவன், அவள் முன் ஒரு காலை மடக்கி அமர்ந்து, அவளின் ஒரு கரத்தை பற்றி, "எம் வாழ்வு முழுவதும் எம் மனைவியாய்... கைபிடித்து செல்லும் துணைவியாய்.. முப்பொழுதும் எம்மை நீங்காத உயிர் தோழியாய் எம்முடன் வளம் வர சம்மதிப்பாயா??....", என மறு கரத்தை நீட்ட... அதிலோ அடர் நீலத்திலும் வெளிர் நீலத்திலும் மின்னலை மிஞ்சிடும் ஒளியில்.... அத்துனை அழகுடன் புத்தம் புதியாய் மின்னியது பொம்மியின் கரங்களுக்காகவே... ஆழிகடலின் அடியாழத்திற்கு சென்ற லாலா, அங்கே கிடைத்த நீல முத்துக்களுடன்.. அவனது உயிர் சக்தியான மின்னலை உருவாக்கும் சக்தியை கொண்டு உருவாக்கிய வெளிர் மின்னலினை முத்துக்களாக்கி அவன் கைபடவே பார்த்துபார்த்து தன் காதலுக்கென உருவாக்கிய அந்த கை வளையல்...

அதை கண்டு பொம்மி அதிசயத்து போயிருக்க லாலாவின் செயலில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கரகோஷம் எழுப்பி பொம்மியை நாணம் கொள்ள வைத்ததோடு நில்லாமல் அவளின் காதலனோடு இணைய வைத்தனர்...
புன்னகையுடன் அந்த அழகிய காதலை கண்டு கொண்டிருந்தவர்களை நீலியின் குரல் கலைத்தது....

"அட... என்னை பார் சேவா.. மூன்று நாட்களாக நீ எம்மை காண மறுக்கிறாய்... திருமணத்தன்று கூடவா எம்மை காணாதிருப்பாய்...", என அழகாய் சிணுங்கி கொண்டே அவனை சுற்றி சுற்றி வர... சேவனோ அவளுக்கு போக்கு காட்டியவாரு இன்னுமும் தன் முகத்தை காட்டாது திரும்பி திரும்பி நின்று கொண்டிருந்தான்...

"நீ எம்முடன் உரையாடாதே... மூன்று தினம் முன் யான் கோபித்து கொண்டதற்கு எம்மை சமாதானம் செய்யாமலே உம் தோழியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள ஓடோடி சென்றாயல்லவா.... ஹ்ம்ம்.. உமக்கு எம் மீது அக்கறையே இல்லை... அதனால் என் வதனத்தை கண்டால் என்ன கானாவிடில் என்ன??...", என அவன் தன்னை கோபமாய் காட்டி முறுக்கிகொண்டு திரும்பி நிற்க... அதை கண்ட அபியிர்க்கோ ராகவியின் மேல்வெர்ஷன் கண் முன்னே நிர்ப்பது போல் தோன்றியது... அதை கண்டு சிரித்து கொண்டே அவனவளை திரும்பி நோக்க.. அவளுக்கும் அதே தான் தோன்றியது போலும்... அவளும் அபியை பார்த்தே சிரித்து கொண்டிருந்தாள்.

செல்ல சண்டை போடும் குட்டி ஜோடியை கண்டு சிரித்தபடியே சேவனை நோக்கிய இந்திரன், "ஏனடா சேவா..., நீலியை இவ்வாறு வருத்தமடையச் செய்யத் தான் இன்று விடிந்தும் விடியாமல் சூறைக்காற்றின் இடையில் சென்று உம் எதிர்கால மனையாட்டிக்கு பரிசு கொண்டு வந்தாயோ?" என நாக்கலாய் கேட்க... 
அதை கேட்டதும் சேவன் திடுக்கிட்டு முளித்தான்.

நீலி அவனை அதிர்ந்து நோக்கியபடி...., "என்ன???..... சூறைக்காற்றா ... என்ன தமையரே கூறுகிறீர்-" என முழுதாய் கூறி முடிக்கும் முன்பாக , தலையில் கை வைத்து சேவன், "இவ்வாறு உளறிவீட்டீரே கோவனே...." என வாய்க்குள்ளேயே முனகிவிட்டு சட்டென திரும்பி நீலியின் கரத்தை பிடித்து தன் நெஞ்சின் மீது வைத்தான்.

முகத்தில் ஒரு இனம் காணாத ஆவலுடன் அவன் செயலில் பிரமித்து போன நீலி, ஒன்றும் புரியாது அவனை காண...., அவள் கரத்தை அழுத்தமாக பிடித்தவன், "என் காதலே.. என் அன்பே.. உம்மை காணத்தான் எமக்கு சாகா வரம் கிடைத்ததென அன்று விளையாட்டாய் கூறினேன் என எண்ணினாயல்லவா.. ஆயின் அதுவும் மெய் தானடி... எமக்கான ஒரு அழகு தேவதை... என் காதல் தேவதை ... எனக்கென பிறந்த ஒருவள் என்னை தேடி வரும் காலம் வரை.... நான் அவளோடு வாழும் காலம் வரை... நான் வாழ்ந்தாக வேண்டுமென்ற நிபந்தனையையும் அன்றே எமக்கு கொடுக்க பட்டிருந்தது .. அது எமது பிறப்பில் முடிவானதோ அல்ல என் விதியில் முடிவானதோ... எனது இருவத்தியாறு வயது முதலே உமக்கான வரவை நாடி காத்திருந்தேன்... இறுதியாய்.... ஐயாயிரம் வருடாந்திரம் பின் உனது பூமுகத்தை கண்ட நொடியே காதலில் விழுந்தேன்... உமக்காய்.. நம் காதலுக்காய்.. சூரை காற்றென்ன... என் மரணத்தையும் தாண்டி வருவேனடி... என்னை உன் மணாளனாய் ஏற்பாயா?...." என பூக்களால் நிறைந்த ஒரு பூங்கொத்தை அவளிடம் நீட்ட.... கண்கள் துளிர்த்த கண்ணீருடன் நடக்கும் எதையும் நம்ப இயலாமல் அவன் கரம் பிடித்து நின்றிருந்த நீலியை நிலைக்கு கொண்டு வர நந்தினி அவளை தன் விரலை கொண்டு மெதுவாய் உலுக்க வேண்டியதாய் இருந்தது.

நந்தினி உலுக்கியதில் தன்நிலை அடைந்தவளின் ஆனந்த கண்ணீர் அவளின் கன்னம் தாண்ட..., "நீயன்றி நானில்லை...... நான் என்றும் உன்னவளே சேவா", என வேறு ஏதும் கூற இயலாதவளாய் அவனை தாவி அணைத்து கொண்டாள் நீலி...

அவர்களின் காதலையும் சேவனின் காத்திருப்பையும் எண்ணி அவனின் அன்பு சகோதரிகளான நம் முதலணி நாயகிகள் அவனின் கதையை கேட்டு ஆனந்த கண்ணீர் சிந்த... நம் முதலணி நாயகன்கள் தங்களின் நண்பனை கர்வமாய் பார்த்து கொண்டிருந்தனர்...

நீலியின் கரத்தை விடுவித்த சேவன், அவளிடம் இருந்து பிரிந்து நின்று... "உமக்கான எனது பரிசு", என அவள் முன்பாக முட்டியிட்டு அவளிடம் ஒரு பூங்கொத்தை நீட்டினான்... அதை புன்னகையுடன் வாங்கச் சென்ற நீலி சட்டென தன் விரலை நோக்க.... சைட் கேப்பில் சேவன் அவளின் விரலில் அணிவித்திருந்த அந்த பளபளக்கும் மோதிரம் வைரமென அவளை கண்டு மின்னியது.

அது சூறைகாற்றுக்களுக்கிடையே ஆகாயலோகத்தில் மட்டுமே கிடைக்கும் விசேஷ வைரமணிகளால் ஜொளித்து வைரத்தையே மிஞ்சிய பொளிவுடன்...கண்ணை பறிக்கும் அழகுடன்... பேரழகென அவளின் கைகளில் மின்னியது... 
சேவனின் கைபட உருவாக்கப்பட்ட அவர்களின் காதலின் அடையாளமான அந்த மோதிரம்...

பூங்கோத்தை அவளிடம் கொடுத்தவன் அவள் கரம் பற்றி மொதிரத்துடன் சேர்த்து அவளின் குட்டி விரல்களிலும் இதழ் பதித்து எழுந்து நின்று அவளை அணைத்து கொண்டான்.... அதை கண்டு அனைவரும் ஹேஏஏஏஏ என கத்தி கரகோஷம் எழுப்பி அவர்களின் நீண்டநாள் காத்திருப்பு காதலை ஆனந்தம் பொங்க வாழ்த்தினார்கள்.

அந்த சூறைக்காற்றிற்கு இடையே மூச்சு விடவே சிரமம் ஏற்படும் என்பதை அறிந்து அதில் சேவனை எக்காரணத்திற்கும் அனுமதிக்க மாட்டேன் என போர் தொடுத்த சத்தீஷையும் மீறி கொண்டு அந்த சூரைகாற்றுக்களுக்கு இடையே சென்று அவ்விஷேஷமணிகளை போராடி பெற்று வந்திருந்தான் சேவன்... அதை எண்ணி சத்தீஷ் இன்னும் பெருமையாய் புன்னகைத்தான்...

தன் தோழி நீலியின் காதல் கைகூடி அவள் மகிழ்ச்சியாய் இருப்பதை கண்டு புன்னகைத்து கொண்டிருந்த பிறையின் மனதில் இன்னமும் தன் துணைவனை காணாது ஒரு ஏக்கம் நெருடலாய் மாறி கொண்டே இருந்தது...

அனைவரும் திருமணத்திற்காய் ரத்ன மாளிகைக்கு செல்வதற்காக அங்கே கூடியிருக்க, இன்னும் மற்ற மணமகன்களை காணாது அனைவரும் அமைதியாய் அங்கு அமர்ந்திருந்தார்கள்... சமரோ தன் ஆருயிர் தம்பியை இங்குவரை இழுத்துகொண்டு வர படாத பாடு பட்டுவிட்டு.... அப்போதே தன் காதலியுடன் இணைந்து நின்றிருந்தான்...

சாய்ராவின் கரத்தை காதலுடன் பற்றிய சமர், இத்துனை நாட்கள் மறைத்து வைத்திரருந்த காதலை கண்ணில் தேக்கி அவளை நோக்கியவன், "சாரா மா... உனக்கு பரிசு வேணும்ன்னு என்கிட்ட கேக்க மாட்டியா டா??...", என அவள் திருமண பரிசு குறித்து இதுவரையில் எதுவும் கெட்காததை எண்ணி அவன் கேள்வி கேட்க, அதற்கு அழகாக ஒரு புன்னகையை சிந்திய சாய்ரா, அவனின் கையை தன் இரு கைகளாலும் வளைத்துபிடித்து, "மூனு நாள் முன்னாடியே என்ன சுயம்வரத்துக்கு போக விடாம தடுத்து உன் காதல எனக்கு குடுத்துட்ட சமர்...", என கூறி அவன் மீதே சாய்ந்து கொள்ள.. அவளின் தலையை தன் தோளோடு அனைத்திருந்தவனது நினைவு, மூன்று நாள் முன் நடந்த நிகழ்வை எண்ணியது...

மூன்று தினம் முன்....

சாய்ராவின் சுயம்வரம் குறித்து செய்தி வந்ததுமே நீலி குதியாய் குதித்துவிட்டு மறுநாள் காலையில் நடக்க போகும் சுயம்வர நிகழ்விற்கு அன்று மாலையே கிளம்ப முடிவெடுத்து விட்டாள்... இங்கு ஒருவன் கோபித்து கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் இப்டி குதிக்கும் காதலியை சேவன் உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் முறைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்... நீலியின் ஆனந்தத்தை கண்டு அனைவருமே மகிழ்திருக்க... சிரிக்கும் வதனத்தின் முகமூடியை அணிந்திருந்த சமர் உள்ளுக்குள் கத்தி கதருவது மயூரனின் செவிகளுக்கு மட்டுமே நன்கு கேட்டது...

சிறிது நேரம் கீழேயே நின்றிருந்தவன் அதற்கு மேல் தாங்காமல் மாடிக்கு சென்று கண்ணீர் விட்டு கதர தொடங்க ... அவன் தோளில் உணர்ந்த ஸ்பரிசத்தில் திடுகிட்டு நிமிர்ந்தான்...

சமர் நிச்சயம் மேலே சென்று அழுவான் என்பதை அறிந்திருந்த அவனது சகோதரன் அவனை பின்தொடர்ந்து வந்திருக்க.. இப்போது சமரும் அவனை கட்டியணைத்து கதர துவங்கினான். ஏனெனில் அவனது அந்த கூறப்படாத காதலை அறிந்தவன் ஹரி மட்டுமே.

தேவதை லோகத்தில் ஹரி உயிர்நீத்த அன்றைய தினத்தின் விடியலில் தான் சமர் சாய்ராவிடம் தன் காதலை கூற போவதாக ஹரியிடம் கூறி பூரித்துபோய் இருக்க... விதி அதை தடை செய்யும் விதமாக அவன் குடும்பத்தையே இழக்கும் அளவிற்கு பெரும் இன்னாலை அவன் வாழ்வில் நிகழ்த்தி விட்டது...

எங்கே அவள் தன் வாழ்வில் வந்தால் அவளையும் சரியாக காக்க தவறி விடுவோமோ என அஞ்சி தன் காதலை உயிருடன் புதைத்தவன், மண்ணுக்குள் புதைத்த விதையாய் மாறி அது விருட்சமாக போவதை அறியாமல் இருந்தான்.

சில ஆண்டுகளுக்கு பின் சாய்ராவின் தந்தையே வந்து அவர் மகளை மணந்து கொள்ள கேட்டபொழுது அதனை மறுத்து விட்டான்... ஆனால் அவன் அறியவில்லை தன் காதலை அவளிடம் கூறாவிடிலும் அவள் காத்திருப்பது இவனுக்காய் தான் என்பதை.

ஹரியை ( மயூரனை) கட்டியணைத்து சமர் கதர... அவனை அனைத்திருந்த ஹரி, "இத்துனை காதலை மனதினிலே மறைத்து வைத்தது ஏன் சமரன்னா??.. சாய்ரா தமக்காய் தானே இத்துனை நாட்கள் வேறொரு மணம் புரிந்துகொள்ளாமல் காத்திருந்தாள்... இப்பொழுது அவளே தன்னை தியாகிக்க செய்ய தான் தாம் அவரை காதலித்தீரோ...", என அவனை ஆறுதலாய் அனைத்திருந்தாலும் எங்கோ வெறித்தபடி சமரிடம் கேட்க..

அழுகையின் ஊடே, "என்ன கூறிகிராய் ஹரி.... அவள் ஏன் எமக்காய் காத்திருக்க வேண்டும்... நான் அவளை காதலிப்பது கூட அவளுக்கு தெரியாது... அவ்வாறு இருக்க அவள் எனக்காய் காத்திருந்தாள் என நம்ப இயலாதல்லவா??.... எம் காதல் எம்முடனே போகட்டும்... அவளை பத்திரமாக பாதுகாத்து ரட்சிக்கும் மணாலனை நாளைய பொழுதில் அவளே என தேர்ந்தெடுத்து கொள்வாள்... அவள் புத்தி கூர்மை உடையவளே....", என பெரிய தியாகி ரெஞ்சிற்கு வசனம் பேச..., "முட்டாள் தனமாக பேசாதீர் சமரன்னா... அவள் தமக்காய் காத்திருந்தாளோ இல்லையோ... ஆனால் தாம் அவளை காதலித்தது மெய் தானே.. அதனை ஏன் ஏற்க மறுக்கென்றீர்... மேலும் தம் காதலை பற்றி அவள் அறியாள் என தாம் என்னுவது தவறு சமரன்னா... தாம் சாய்ராவை காதலிப்பது குறித்து எம்மிடம் கூறும் முன்பே எம் தோழியான அவள் தம்மை காதலிப்பதாக எம்மிடம் கூறியிருந்தாள்... ஆனால் தாமே அதனை உணர்ந்து அவளிடம் கூறும் வரையில் காத்திருப்பதாகவும் அது குறித்து தம்மிடம் கூற கூடாதெனவும் கூறியிருந்தாள்.... அன்று தாம் காதலை கூற போகிறேன் என்றதுமே முதல வேலையாக அதனை அவளிடம் தான் கூறியிருந்தேன் அண்ணா...", என தயங்கி தயங்கி கூறி முடிக்க.... சமருக்கு உலகமே நின்று விட்டது...

அவளும் தன்னை காதலித்து இருக்கிறாள்.. தான் அவளை காதலிப்பது குறித்தும் அறிந்திருக்கிராள்... ஆனால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டாக அதை பற்றி ஒரு வார்த்தையை கூட எவரிடமும் கூறாமல் தன் மீது நம்பிக்கையில் மௌனமாய் காத்திருக்கிறாள்..... என எண்ணியவனுக்கு இன்று அந்த நம்பிக்கையை தான் உடைத்து விட்டதாக அவன் மனம் அவனையே வஞ்சிக்க.... எதையும் யோசிக்காமல் மின்னல் வேகத்தில் பறந்தவன் நேராக சென்று நின்றது சாய்ராவின் முன்பு தான்.... அவனை நேருக்கு நேராக கண்ட நொடியே பேச்சற்ற நிலைக்கு சென்ற முழுமையாக உறைந்து போய் நின்றாள் அவள்..

தன்னை ஒரு கடைகண் பார்வையிலாவது அவன் பார்த்திட மாட்டானா??.. என ஏங்கிகொண்டிருந்த 
பாவையின் முன்... தொளைத்த எதையோ தேடி நின்றவன், "இவ்வளவு நாள் நீ எனக்காக தா காத்துறுந்தியா??...", என இதயத்தை பந்தையத்தில் ஓடவிட்டபடி கேட்டவன் அவள் வற்றிய விழிகளிலேயே விடையை கண்டறிந்து விட ... பதிலை அவள் இதழ்கள் உதிர்க்கும் முன்பாக கண்கள் தன் மடையை திறக்க.... அவளை இறுக்கமாக அனைத்து கொண்டான்..., என இதற்கு தானே ஏங்கினோம் என அவளும் தன் காத்திருப்பின் பரிசை வாரி அணைத்து கொள்ள.. "சொல்லி இருக்கலாம்ல சாரா மா..... ஏன் டா..... ஏன் இப்டி அமைதியாகவே இருந்த... நா தா.... பைத்த்தியம் மாதிரி......", என அவன் வார்த்தைகள் உடைய...., "நீ என்ன அழ விடமாட்ட சமர்.... நீ வருவன்னு நம்பிக்க இருந்துச்சு... நீயாவே வருவன்னு நம்பிக்க இருந்துச்சு... அதா...", என அவளும் அப்போதே தன் காத்திருப்புகாலம் நிறைவடைந்த நிம்மதியில் கண்ணீர் சிந்தினாள்...

எதார்த்தமாக இதனை கண்ட சாய்ராவின் தாய்.. தன் மகள் வேண்டிய எதிர்காலமே அவளுக்கு கிடைத்து விட்டதில் அளப்பரிய ஆனந்தம் கொண்டார்.. 
இன்று அதை எண்ணி பார்த்த சமரின் கண்கள் கலங்க.. தொலைவில் இருந்து இங்கு நடப்பவைகளை கண்டு கொண்டிருந்த மயூரனுக்கும் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது...

மேலும் பிறையின் வாடிய முகம் அவளை மறைந்திருந்து சைட்டடித்து கொண்டிருந்த மயூரனின் மனதையும் வாட்ட... இதற்கு மேலும் தன்னவளை வருந்த வைக்க விரும்பாதவனாய் தன் உருவை ஒரு விட்டில் பூச்சியின் உருவிற்கு மாற்றி பிறையை நோக்கி சீரினான்...

தன்னை கடந்து ஏதோ ஒன்று சர்ரென செல்லவும் பிறை தலையை கீழே குனிந்து கொள்ள... அவள் என்னவென உணரும் முன்னதாக ஏதோ ஒன்று அவளை தூக்கி மேலே எறிந்தது...

பிறை தற்காப்பிற்காய் தன் சிறகை விரித்து மேல் நோக்கி பறக்க முயல... அவள் மேலும் பறப்பதற்குள்ளாக அவளை சுற்றி அணையிட்டு தன்னோடு அணைத்த மயூரன் நொடிக்கணக்கில் அவளது காலை பற்றி அதில் முத்தமிட்டிருந்தான்... இப்பொழுது அனைவரின் கவனமும் அந்த குட்டி காதல் ஜோடியின் மீது பதிந்தது.

தன் காதலனின் செயலில் சிலிர்த்தடங்கிய பெண்ணவள் தன் சிறகை முடக்கி விட்டு அவன் தோளை பிடித்து கொள்ள அவள் கீழ் விழாதவாறு மயூரன் அவளை இடையோடு அணைத்து கொண்டான்..

"எம்மை காண தமக்கு எண்ணமே இல்லையோ.. தமது திருமணத்திற்கே இத்துனை தாமதமாய் வந்தடைந்துள்ளீரே... இவ்வாறு தாமதமாக்கத்தான் அன்று சேவன் தமையனாருடன் இங்ஙனம் எம்மை அழைத்துச் செல்ல கூடாதென குதித்தீரோ", என செல்ல கோபத்தால் முகத்தை சுருக்கி கேட்க அவளின் குட்டி குரலும் கோவமான பாவனையும் சுற்றி உள்ளோரை சிரிக்க வைத்தது.

"அட.... இதென்ன கோபம்??... என் கண்மணியே ..... உமக்காய் நம் திருமண பரிசை எடுத்து வர தாமதமாகி விட்டதடி....", என்கவும் பிறையின் முகத்தில் தனிச்சையாய் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசமாய் எரிந்தது....

"பரிசா??..... என்ன பரிசு ஐயனே.. யான் கேட்ட கொலுசு வாங்கி வந்துள்ளீரா....??.. தீரா கூறினாளோ??.... தற்போது எமக்களிக்க உள்ளீரா??", என சாஹித் சங்கவி நிச்சயதார்த்த தினத்தில் தான் கூறியது நினைவு வந்தவளாய் ஆவலாய் கேட்கவும் மயூரன் இடவலதாய் தலையசைக்க... பிறையின் முகம் நொடியில் வாடியது.

"ஹாஹா.... எம் விடையினையும் கேட்டு விட்டு முகம் வாடடி பெண்ணே.. உமக்கு இனி அளிக்க போவதில்லை... எப்போழ்தோ அளித்து விட்டேன்.... " என கீழே சுட்டி காட்ட... குனிந்து தன் ஒரு காலை தூக்கி பார்த்த பிறை அதிசயித்து போனாள்...

தீயால் சுட்ட தங்கத்தில் அழகிய முத்து மணிகள் அலங்கரித்து பிறையின் காலுக்கே செய்ததை போல் சிக்கென மாட்டி விட்ட.. மஞ்சள் வர்ண சூரியனின் சாயத்தை குத்தகைக்கு வாங்கிய அழகிய பொருளாய்.... ஒருவரை மயக்கக்கூடிய ஆற்றலுடன் ஜெகஜோதியாய் மின்னியது... மயூரனே தன் கைபடி பிறையிற்காய் உருவாக்கிய அந்த தங்க கொலுசு....

அக்கொலுசின் தங்கம் இன்னும் சூடு தணியாமல் மிளிர்ந்து கொண்டிருக்க (அவ கால் சுடுதான்னு கேக்காதீங்க பா... அதெல்லம் எனக்கு தெரியாது)... மயூரனின் காதலையும் அவன் முயற்சிகளையும் எண்ணி வியந்து பெருமை கொண்டான் கிரிஷ்...

இன்று காலையில் க்ரிஷ்ஷின் உதவியினால் ஒரு எரிமலையை அடைந்து யார் பேச்சையும் கேட்காமல் தானே அந்த எரிமலைக்குள் சென்று, அங்கிருக்கும் விசேஷ உலோகங்களை சேர்த்து தங்கத்தை உருக்கி அதில் தன் காதலிக்காய் பார்த்து பார்த்து அந்த கொலுசை உருவாக்கினான்...

அவனின் ஒவ்வொரு செயலிலும் க்ரிஷ்ஷிற்கு பெருமையே கொடுக்க... அவனின் வீர தீச செயலை கூறி மற்றவர்ளுக்கும் மயூரனின் செயலை தெரிவிக்க.... நம் மயூரனுக்கோ அதையெல்லாம் கேட்டு வெட்கம் தலை தூக்கி பிறைக்கு மேலாக வெட்கத்தில் அவள் பின் போய் மறைந்து கொண்டான்...

"அடடே துணைவரே.... இதென்ன விளையாட்டு?...," என பிறையும் ஒரு புறம் அவனால் சினுங்க... மற்றவர்களின் அவர்களின் விளையாட்டில் வெடித்து சிரித்தனர்....

கோவானே... இதெஎல்லாம் என்ன பரிசு... என் சமரன்னா இப்பொழுது கொடுப்பார் பாருங்கள்", என பிறைக்கு பின்னிருந்தே அவன் குரல் கொடுக்க... அனைவரும், "இப்போ இந்த சமர் பய எங்க போய் என்னத்த பண்ணி வச்சிருக்கான்??", என்பது போல் அவனை நோக்க.. சாய்ரா வியந்து போய் தன் காதலனை நோக்கி திரும்பும் முன்பே அவள் கழுத்தில் ஒரு சங்கிலி தொங்கியது...

ஒரு கண்ணாடி பந்து அதன் டாலராய் தொங்க... அதை கையில் எடுத்த சாய்ரா குழப்பம் நிறைந்த புன்னகையுடன் சமரை நோக்கினாள்.. ஆனால் அவனோ எதையுமே கூறாமல் மௌனமாகவே புன்னகைத்து கொண்டு இருக்க... அதற்கு மயூரனே விளக்கம் அளித்தான்..

வனதேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் விஷமலர்கள் நிறைந்து இருக்கும் ஒரு இடத்தின் நடுவே ஒன்றே ஒன்றென பூக்கும் அறிய வகை மலரின் மகரந்தம் அந்த கண்ணாடி பந்தினுள் மஞ்சள் சூரிய ஒளியில் மின்னியது ...

இது ஒருவரின் எத்தகைய காயங்களையும் நொடியில் குணமாக்கிடும்... தன் காதலி இதை அணிந்திருந்தாள் அவளுக்கு சிறு கீறல் கூட வராது என ஐயாயிரம் ஆண்டுகள் முன்பே அவளுக்காய் விக்ஷமலர்களை எல்லாம் தனியொருவனாய் தாண்டி சென்று எடுத்து வந்த விசேஷ மூலிகை சங்கிலி இது...

அனைவருக்கும் இவர்கள் ஒவ்வொருவரின் காதலையும் அதன் ஆழத்தையும் காண ஆழமான பிரமிப்பு தான் வந்தது.... இவர்களை புன்னகையுடன் பார்த்திருந்த ராகவி, "ஜித்தூஊஊஊ.... என் கிஃப்ட் எங்க டாஆஆஆ", என இழுக்க... "இவனுங்க குடுத்தத பாத்துட்டு இப்போ நா குடுத்தா அது டம்மியா இருக்குமே ராவி...", என பாவமாக கூற.. அனைவரும் வெடித்து சிரித்தார்கள்.
"ஹ்ம்ம்.. ஏன் சிரிக்குறீங்க... சிரிக்காதீங்க... ஷ்ஷ்ஷ்....", என முறைத்து கொண்டே அனைவரையும் அமைதியாக்கிய ராகவி, "பரவால்ல ஜித்தூ... நீ குடு டா... இப்போ நீ ஒரு குச்சி முட்டாய் குடுத்தா கூட அது எனக்கு ஸ்பெஷல் தா...", என கூற.. இவ்வளவு நேரமும் காலை ஆட்டிகொண்டு அமர்ந்திருந்த தீரா, குச்சி மிட்டாய் பெயரை கேட்டதுமே..., "ஹான்... எனக்கு தா அது.. எனக்கு தா அது.. மாமா... எனக்கு தானே வாங்கிட்டு வந்துருக்க...", என துள்ளி குதித்து ஓடிவர..., "போ டி லாலிபாப் பைத்தியம்", என அவளை தள்ளி ஒரு நீளமான செயினை அவள் கழுத்தில் அணிவித்து விட்டான்... அது சாதாரனமான செயின் தான் என அனைவரும் நினைத்திருக்க... அதன் ரகசியத்தை இப்பொழுது கூற வேண்டாமென அபி அதனை மறைத்து விட்டான்... சாஹித்தும் தன்னவளுக்கு அதே ரகசியத்தை உள்ளடக்கி, அபியின் உதவியுடன் தானே செய்த ஒரு கை வளையத்தை சங்கவியின் கையில் மாட்டி விட்டான்.

அபி தள்ளி விட்டதில் தடுமாறி கீழே விழபோன தீராவை அவளின் தமிழ் பிடித்து கொள்ள, யாரோ பிடித்தார்கள் என நினைத்தவள் முன் அவளவன் இளித்துகொண்டு நிற்பதை கண்டு அவன் கையை உதறிவிட்டு முறுக்கி கொண்டு சென்றாள்...

மூன்று நாட்களாக , "கஷாயத்த குடி இல்லனா நா உன் கூட பேசவே மாட்டேன்", என கூறி உண்மையிலேயே பேசாது முகத்தை திருப்பி கொண்டு செல்ல... மாலை வரை விதவிதமாக சமாதானம் கூறி பார்த்தவள் இறுதியில் அவன் பிளாக்மெயில் செய்ததால் தன் கரத்தாலேயே அந்த கேவலமான மேசமான கசப்பான கஷாயத்தை குடித்தவள் கசப்பு தாங்காமல் குச்சி மிட்டாய் கேட்க... அதை குடுக்க மாட்டேன் என மறுத்து விட்டான்..... சரியென பாராக்ரம வீரர்களிடம் முட்டாயை நாடி சென்றால், "மறுமை பூமியில் அதெல்லாம் கிடைக்காதே...", என அவர்களும் கை விரித்து விட... சிரித்து கொண்டே மாறன் நீட்டிய தேன் கிண்ணத்தை வாய்க்குள் கவிழ்த்தினாள்... 
இப்போது அவன் குச்சி மிட்டாய் குடுக்காமல் ஏமாற்றியதற்கே இந்த கோபம்.....

அனைவரும் அவ்விடத்தில் கூடிட... அந்த அழகான குடும்பம் தங்களின் பிள்ளைகளின் அடுத்தகட்ட வாழ்வின் துவக்கத்தை தொடங்க ரத்ன மாளிகைக்கு புறப்பட தயாரானார்கள்.... அப்போது, "அத்த... மாயா இன்னும் வரல....", என வேகவேகமாக ஷேனா கேட்க... அவன் கேட்ட விதத்தில் அனைவரும் சிரித்து விட்டார்கள்...

"டேய் அண்ணா... மஹியும் ஹாசினியும் காலைலயே மாளிகைக்கு போய்ட்டாங்க டா.. உனக்கு தெரியாதா???...", என சிரிப்பலையை அடக்கிக்கொண்டு அர்ஜுன் கேட்க..., "அப்போ இவ்வளவு நேரம் ஆளில்லாத ரூம தா சைட் அடிச்சுட்டு இருந்தோமா", என மனதிற்குள் தன்னை தானே காரி துப்பியவன்.. இளித்து விட்டு முன்னே நடந்தான்... மற்றவர்களும் அவனை பார்த்து கிண்டலடித்தவாரே மாளிகையை நோக்கி புறப்பட்டார்கள்...

✨✨✨✨✨✨

பத்து மணியளவில் மறுமை பூமியின் அனைத்து காதல் ஜோடிகளும் தாங்களின் துணைகளின் கரம் பிடிக்க... தர்ம ராஜ்ய வழக்கப்படி அதன் புதுமண தம்பதிகள் தங்களின் கரங்களில் இருந்த நிச்சயதார்த்த கொலுசை மனைவியின் பாதங்களில் அணிவித்து, இந்த கொலுசொலி தேய்ந்தாலும் நம் காதல் தேயாது என ஒருவருக்கொருவர் வாக்களிக்க... குள்ள மாயர்கள் வழக்க படி ஒரே மாலைக்குள் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நின்று நிச்சயதார்ததம் அன்று மாற்றி மாற்றி அணிந்து கொண்ட தங்களின் கழுத்தில் இருக்கும் சங்கிலியை இப்பொழுது மீண்டும் மாற்றி கொண்டு, "காலமெல்லாம் நீ நான் என பிரிந்து இருக்காமல் நாமென சேர்ந்து வாழ்வோம் என வாக்களிக்க... தேவதை இன வழக்க படி கணவனாணவன் மனைவிக்கு, இந்த ஏழு நாட்கள் மட்டுமே மலரும் பொன்னிற அழகிய மலரை சூடி அதே மலரால் ஆனா மாலை அணிவித்து இறுதி வரையில் உம்மை காப்பேன் என வாக்கும் அளிக்க மனைவிகளும் அம்மலரின் மொட்டுகளுக்கு நடுவே இருக்கும் பொன்னிற முத்துகளால் ஆன கைவளையத்தை கணவனுக்கு அணிவித்து காலமெல்லாம் உனக்கு துணையாக இருப்பேன் என வாக்களித்தார்கள்... 
அழகிய அந்த ஜோடிகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் வாக்களித்த பின் இனிதே நிறைவடைந்தது திருமண வைபவம்...

அடுத்த நிகழ்வாக இன்றைய நாளில் திருமணத்திற்காக நிச்சயம் நடத்தி கொள்ளும் நிகழ்ச்சி அரங்கேறியது... தர்ம ராஜ்ய இளவரசிகளின் பிடிவாதத்தால் அதே நாளில் அரங்கேறியது நம் வேதபுரத்து இரண்டாம் அணியினரின் நிச்சயதார்த்தம்...

முதலில் தாத்தாக்கள் இல்லாமல் இவ்வாறு நிச்சயத்தை நடத்த என பெரியவர்கள் அனைவருமே மறுக்க.. "இங்க எங்களுக்காக ஒரு நிச்சயம் நடத்துங்க.. அங்க போய் அவங்களுக்காக ஒரு நிச்சயம் நடத்துங்க..", என ரக்ஷா நிச்சயமாய் நிச்சயதார்த்தம் நடந்தே ஆகவேண்டும் என அடம் பிடிக்க... பராக்ரம வீரர்களும் பருந்து சகோதரர்களும், "இந்த ஐடியா நல்லா இருக்கே... அப்போ கல்யாணமும் ரெண்டு தடவ நடக்குமா??..", என அவர்கள் மைண்ட்செட்டை நிச்சயதார்த்தத்திர்க்கு ஃபிக்ஸ் செய்து விட... முதலில் அவர்களை முறைத்தவர்கள் பின் குழந்தைகளின் மகிழ்ச்சியே முக்கியம் என ஒப்பு கொண்டார்கள்...

இப்பொழுது அவர்களின் நிச்சயம் இனிதே நிறைவேற... கையில் ஆடும் மெல்லிய தங்க கொழுசு, பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்தாலும் அழகாகவே இருந்தது... அவர்களின் அழகான பந்தத்திர்க்கு அடிக்கல் நாட்டுவது போல் நிச்சயம் முடிந்திருக்க.. அடுத்ததாக உற்சாகமாய் தொடங்கியது சில காதல் விளையாட்டுகள்...

மொத்த மறுமை பூமியும் பலவித மகிழ்ச்சியுடன் தத்தம் துணைகளுடன் அவ்விளையாட்டுகளில் பங்கு கொண்டு பரிசினை வென்று தங்கள் துனைகளுக்கு கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்கள்... மாலை வரையில் இனிதே நடந்த நிகழ்வு சட்டென சூழல் இருள் பூசிகொள்ளவும் நிறைவடைய... மனம் நிறைந்து முழுமைபெற்ற உணர்வில் இரவு உணவிற்கு பின் தங்கள் துனைகளின் கரம் பிடித்து அவரவர் இல்லம் நோக்கி புறப்பட்டார்கள்...

குட்டி ராணிகளின் பெற்றோர்களும் அன்றைய தினம் நம் இளவரசிகளின் இல்லத்தில் தான் தங்கி இருந்தார்கள்.. வீட்டிற்க்கு வந்ததும் இளையவர்களுக்கு தனிமை அளித்து பெரியவர்கள் நேற்றைய பொழுதை போல் மாடிக்கு சென்றிருக்க, கீழே ஹாலில் அழகாக கதையளந்து கொண்டிருந்த அந்த கும்பலின் மத்தியில் இப்போது ஒரு குட்டி கலவரம் மூண்டது.

அவரவர் துனைகளின் மடியில் சாய்ந்தும் தோளில் சாய்ந்து அனைவரும் முன்னால் நடப்பதை பார்த்து கொண்டிருக்க.... ரக்ஷவன் அருகில் இருந்த தாரி அவனுக்கு அருகிலேயே சமத்து குட்டிகளாக உறங்கிய சிம்ம யாளிகளை திரும்பி கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள்... 
கலவரம் உருவானதன் காரணமான இளவரசிகள் இருவரும் சுவாரசியமாக அண்ணன் அண்ணியின் போலியான செல்ல சண்டையை ரசித்து கொண்டிருந்தார்கள்.

"ராவி... நீ எத்தன தடவ கேட்டாலும் என் அம்முவும் பாப்பாவும் தா எனக்கு ஃபர்ஸ்ட்....", என காட்டமாக கூறி முகத்தை திருப்பி கொள்ள.., "ஹ்ம்ம்.. உனக்கு என்மேல பாசமே இல்ல..", என இவளும் ஒருபக்கமாக திரும்பி கொள்ள.., "அப்டி இல்ல டா செல்லம்... உன் மேல இல்லாத பாசமா??", என கொஞ்சலாக அவளை பார்த்தான் அபி...

"ஓ அப்புடியா... அப்போ மூனு பேருல யாரு முக்கியம்... இப்போவே சொல்லு...", என நான்காவது முறையாக மீண்டும் முதலில் இருந்து தொடங்க... அனைவருக்கும் போதும் டா சாமி ஆள விடுங்க என்று தான் இருந்தது.. இம்முறையும் அபி விடாமல், "தங்கச்சிங்க தா....", என அசால்ட்டாக கூற.... இதற்கு மேல் போராட முடியாது என கோபத்துடன் எழுந்தவள் விறுவிறுவென மாடியேரி அவளவன் அறைக்கு செல்ல... அபியும் சிரித்துகொண்டே பின்னால் ஓடினான்...

"அப்பறம் என்ன... ஒரு ஜோடி எஸ்கேப்.. மத்தவங்க போற ஐடியா இருக்கா... இல்....", என அஷ்வித் கூறி முடிக்கும் முன்பே சங்கவியை அவள் எதிர்பாரா நேரம் கையில் தூக்கி கொண்டு எழுந்து நின்ற சாஹித், "ஓகே ஓகே.. குரூப் டிஸ்போஸ்... எல்லாருக்கும் குட் நைட்", என கூறி தங்கள் அறைக்கு நடக்க.. பதிலுக்கு குட் நைட் எதிர்ப்பார்த்தவனுக்கு, "ஹாப்பி ஃபர்ஸ்ட் நைட்", என்ற கோரஸ் வாழ்த்து காதில் விழ.... அவன் இதழ்கள் தானாகவே மேல்நோக்கி வளைந்தது.. சங்கவி நாணத்தில் அவனுள்ளேயே புதைய.. குட்டி நாயகர்களை அவரவர் அறைக்கு அனுப்பிவிட்டு மற்ற ஜோடிகளும் மாடிக்கு ஓடினார்கள்...

ஐயாயிறத்தி ஐம்பத்திஆறு வருட காத்திருப்பின் சோர்வில் நீலி சேவனை அனைத்து கொண்டு உறங்க.. அவனும் தன் அழகிய தேவதையை இறுக்கமாக அனைத்துக் கொண்டு அவள் குட்டி நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டு நிம்மதியாக உறங்கினான்..

💞💞💞💞💞💞💞💞

பொம்மி லாலாவின் மடியில் தலைவைத்து கொண்டே, "கடைசியா இந்த வைபவத்துல நம்ம காதல் செந்துருச்சுல லாலா... நீங்க நெனச்ச மாறியே இனி நாம ஏழேழு ஜென்மத்துக்கும் பிரிய மாட்டோம்", என கூறி அவன் விழியை நோக்க.. புன்னகையுடன் அவள் வதானத்தை கையில் ஏந்தியவன் அவளின் கொழு கொழு கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து, "ஆமா டா பொம்மி... இனி நா உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன்...", என அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

💞💞💞💞💞💞💞💞💞💞

பிறையை பார்த்தபடியே அவளுக்கு முன்னால் மயூரன் அமர்ந்திருக்க.. தன்னவனின் பார்வை வீச்சு தாங்காமல் அவள் நாணத்தில் தரையை நோக்கி கொண்டிருக்க... "ஹ்ம்ம்.... எம் காதலிக்கு எம்மை பிடிக்கவில்லை போலும்... அதனால் தான் எம்மை காணாமல் இருக்கிறாள்..", என கூறி வெறுபம்புரமாக திரும்பி படுத்து கொள்ள.... பட்டென நிமிர்ந்தவள், "என்ன கூறிவிட்டீர் ஐயனே... யான் அவ்வாறு உரைப்பபேனா... தம்மை பிடிக்கவில்லை என்பதற்கு யான் எனது இன்னுயிரையே விட்....", என கூறவந்தவளின் வாய்க்கு தன் இதழ்களால் பூட்டிட்டான் அவளின் பிரியமான கள்வன்.

💞💞💞💞💞💞💞💞💞💞

சாய்ராவின் நெற்றியில் அழகாய் இதழ் பதித்து அவளை அனைத்து கொண்டான் சமர்..., "சாரா மா... ஹரி மட்டும் அன்னைக்கு என் கிட்ட பேசலைனா நா வந்திருக்க மாட்டேன்... அப்போ நீ என்ன மா பண்ணிருப்ப...", என அவள் இல்லாத வாழ்வை நினைத்தவனுக்கு இனம் புரியாத பயம் எழ..., "இல்லனாலும் நீ வந்துறுப்ப சமர்... எனக்கு தெரியும்... நீ என்ன ஆழ விட மாட்ட.. உன்னால அது முடியாது..", என சாதாரணமாகவே கூறி தன் கணவனை அனைத்து கொண்டாள்...

தன்னை விட தன்மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பவளை இத்தனை நாட்கள் காக்க வைத்தோமே என அவன் தன்னையே கடிந்து கொள்ள... இனி எக்காரணத்தை கொண்டும் அவள் நம்பிக்கையை அசைத்து பார்க்க கூட எண்ணிவிட கூடாதென தனக்குள்ளேயே சபதம் மேற்கொண்டான்...

💞💞💞💞💞💞💞💞💞

சங்கவியின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தான் சாஹித்...., "தீக்ஷன்..... இப்போ ஏன் அழர... நீ அழுதா அப்போ நானும் அழுவென் பாத்துக்கோ...", என சங்கவி சிணுங்க... அதில் பதறி நிமிர்மதவன் கண்னை துடைத்து கொண்டு, "கவி குட்டி... இது ஆனந்த கண்ணீர் டா... யாருமே இல்லாத எனக்கு...", என்றவன் வாயிலேயே ஒரு போடு போட்டு..., "இனிமே அப்டி சொன்னா அப்பறம் நா காலி ரூபம் எடுக்க வேண்டி வரும்.... உனக்கு இப்பவும் எப்பவும் எல்லாமுமா நா இருக்கேன்... இதுக்கு மேல எதுவும் பேசாத அப்பறம் எனக்கு கோபம் வந்துரும்...", என கூறி அவனை அனைத்து கொள்ள..., "தாங்கள் உத்தரவு படியே ஆழி ராணி....", என சிரித்து கொண்டே தன்னவளை இறுக்கமாக அனைத்து கொண்டான்

💞💞💞💞💞💞💞💞💞💞

வேக வேகமாக அறைக்குள் நுழைந்த ராகவியை ஓடிவந்து பின்னிருந்து அணைத்தபடி அவள் கழுத்தில் முகம் புதைத்து அமைதியாகவே அபி நிற்க, "ஜித்தூ... என மன ஆறுதல்காகவாச்சும் நா தா முக்கியமம்னு சொல்லுவேன் டா...", என விடை அறிந்தே அவள் சினுங்க.. அவள் கழுத்தில் இருந்து முன்னேறி கன்னத்தில் முத்தம் வைக்க போனவன், "நோ வே ராவி செல்லம்", என கூறி சிரிக்க.. "போடா லூசு பயலே.... ", என தள்ளி விட்டு ஓட போனவள் கரத்தை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தான்...

அவள் நெற்றியோடு முட்டி, "ராவி செல்லம்... இப்போ நீ தா முக்கியம்னு சொன்ன நீயே ஒத்துக்க மாட்ட.. அப்பறம் ஏன் நா அத சொல்லணும்.. உனக்கும் என்ன விட அம்முவும் பாப்பாவும் தானே முக்கியம்.. சோ அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு... போ", என கூறி சிணுங்க..., "அதை கேட்டு புன்னகைத்தவள் அழகில் சொக்கி போய் அவள் இதழை தன்வசம் ஆக்கினான் அவன்

💞💞💞💞💞💞💞💞💞💞

மாடியில் அனைவரும் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியால் நிம்மதியுடன் உறங்கினார்கள்.. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro