Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் -74

விதிர்விதிர்த்து போய் நின்றவர்களினை முவ்வீரையனின் கோர அலரல் தன்னிலை அடைய வைத்தது... சிங்கம் போன்ற பெரிய உருவம்.. புஜங்கள் இரண்டும் சிங்கத்தின் கை கால்களை போலவே அதிக பலத்துடன் இருக்க .. கூரான பற்கள் மின்னி தன் இருப்பிடத்தை காட்ட ஊதா நிற பளபளக்கும் கண்கள் பார்வையிலே பார்ப்போரை துளைத்துச் சென்றது... முவ்வீரையனின் உயரம் கிட்டத்தட்ட சர்ப்பலோக கோட்டையை விடுத்தும் மூன்று மடங்கு பெரிதாய் இருந்தது...

மகாப்பிரபுவின் முகங்கள் மூன்றும் வெளிரி போயிருக்க தன் மரணத்தை கண் முன்னே கண்டு உறைந்து போயிருந்தது அது.. முவ்வீரையனோ பொருமை என்ற ஒன்றே இல்லாததை போல் உறுமி கொண்டு ஒரே தாவில் மகாப்பிரபு மீது பாய்ந்தது...

அதன் அதிர்வில் அனைவரும் திண்டாடினர்.. அமைச்சன்கள் ஐவரும் கிட்டத்தட்ட நரம்புகள் வெடித்ததை போல் கண்கள் அகல விரிந்த நிலையிலே நின்றனர்...

பராக்ரம வீரன்கள் வேகமாய் அவரவர் நாயகியிடம் சென்று அவர்களை அங்கிருந்து இழுத்து கொண்டுச் செல்ல திவ்யா விரைந்து சென்று யட்சினிகளை விடுவித்து அவர்களை கீழிறக்கினாள்...

வளரி பாட்டி மகிழ்ச்சியில் கண்கள் மின்ன நிகழும் காட்சியை பார்த்து கொண்டிருக்க தான்யா மற்றும் ப்ரியா அவரையும் லீலாவதியையும் மீட்டு அந்த மேடையை விட்டு கீழறக்க யாவருமே அந்த சவப்பெட்டிகளை காணவில்லை...

யானையாளிகள் சஹாத்திய சூரர்களின் கட்டளையினால் உடனே வெளியேற்றப்பட பஞ்சலோக விந்தைகள் அனைவரும் அவரவர் அன்னையை கண்டு ஓடிச் சென்று அணைத்து கொள்ள தனியே நின்ற ஐலாவை அனு வேகமாய் வந்து அணைத்துக் கொண்டாள்.. இதை தொலைவிலிருந்து பார்த்த பத்யரூனாவின் கண்கள் பனிக்க அதை துடைத்து விட்டு போர்களத்திற்கு விரைந்து ஓடி வந்தார்...

யோக்யா வெகு தொலைவில் சர்ப்பலோக சேனையுடன் கோட்டையை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்க அனைவருக்கும் ஏது செய்வதென்று ஒன்றும் புரியவில்லை...

திடீரென நிலத்தில் அழுத்தம் கொடுத்து மேலெழுந்த அஷ்வன்த் அவனது ஆகாயசக்திகளை உபயோகித்து ஆகாய கரு மேகங்களால் கோட்டையை அனைவரின் கண்களிலிருந்தும் மறைக்க இந்த குறியீட்டை புரிந்து கொண்ட யோக்யா சரியான தலைவனாய் அவனது சேனைக்கு உரக்க கட்டளை பிறப்பித்தான்...

மொத்த சர்ப்பலோக சேனையும் கோட்டையை ஒரு மைல் தூரத்தில் நின்றபடி மொத்தமாய் சுற்றி வளைத்து யாவரையும் உள்ளே வராதபடியும் எந்த நாகமனிதர்களையும் வெளியே விடாதபடியும் சர்ப்பலோக மற்றைய உயிர்களை காக்க அரணாகினர்...

மகாப்பிரபுவின் ஒரு நாகத்தலை முவ்வீரையனின் கழுத்தை கடிக்க தன் ஒரு புஜத்தால் அத்தலையை பிடித்து இறுக்கிய முவ்வீரையன் அந்த தலையை மொத்தமாய் கடித்து தூர எறிந்தது...

யுகி அகி விகி மூன்றும் அத்தலையை அவர்களின் சக்தி கொண்டு அழித்து மண்ணோடு மண்ணாக்கினர்.. முவ்வீரையனை தடுக்க விரைந்த அமைச்சன்களை சீரி கொண்டு வந்து எதிர்த்து நின்றனர் நமது பராக்ரம வீரன்கள்...

முதலணி நாயகர்களும் பருந்து குடும்பமும் இரண்டாம் அணி நாயகிகளையும் இளவரசிகளையும் காத்துக் கொண்டே துஷ்ரந்களை எதிர்த்து போரிட அவர்களின் இடையிலிருந்து ரக்ஷவ் கோட்டையை விட்டு வெளியே ஓடினான்...

ரக்ஷவை கவனித்து ரித்விக் ரக்ஷவ் என கத்த திரும்பி பார்க்காமல் வேகமாய் ஓடிய ரக்ஷவை பின் தொடர்ந்து ஓடிய அகியை கண்டதும் ரித்விக் அவன் மீது ஒரு கண் வைத்து கொண்டே தன் யுத்தத்தில் கவனத்தை செலுத்தினான்...

எங்கோ வேகமாய் ஓடிய ரக்ஷவை தன் பின் அகி ஓடி வருவதை திரும்பி பார்த்தவன் ஒரு நொடி தன் ஓட்டத்தை நிறுத்தி அகி அவனை கடந்து ஓடியதும் காலில் அழுத்தம் கொடுத்து தாவி அகியின் மீது அமர்ந்தான்...

அவனை ஏந்தி கொண்ட அகி அத்தோடே கோட்டையை நோக்கி மீண்டும் திரும்பி ஒரு உறுமு உறும.. அதை சரியாய் புரிந்து கொண்ட ரக்ஷவ் அகியின் கழுத்தில் வாயோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கடிவாளக்கையிறை இறுக்கி பிடித்துக் கொள்ள அகி அதி வேகத்துடன் கோட்டையை நோக்கி இப்போது ஓடத் தொடங்கியது...

கோட்டையை நெருங்க நெருங்க அகியின் வேகம் அதிகமாகிக் கொண்டே இருக்க ரக்ஷவின் " அகி தாவு " என்ற கட்டளையில் தனது இரு கால்களிலும் அழுத்தம் கொடுத்து எம்பி கோட்டையின் மதிலை தாண்டி உள்ளே குதித்தது அகி

அகி மதிலை தாண்டும் பொழுதே கடிவாளக்கயிறை விட்டு விட்டு தன் வில்லையும் அம்பையும் எடுத்த ரக்ஷவ் வலது கண்ணை மூடி இடது கண்ணால் குறி வைத்து அம்பை ஏவினான்.. அகியின் கால்கள் மண்ணில் பலத்த அதிர்வுடன் பதியவும் ரக்ஷவின் அம்பு முவ்வீரையனை தடுக்கவென அந்த யாக குண்டத்தில் ஏதோ ஒன்றை வீசயிருந்த சாம்பராவின் கரத்தில் இறங்கியது...

சாம்பரா " ஜம்பெலி " என சத்தமாய் கத்த காக்காவின் உருவத்தில் குறிகிய உருவமாய் இருந்த ஜம்பெலி என்னும் அவ்வுருவம் கண்ணிமைக்கும் நொடி பொழுதில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் பாதி காக்கா உருவிலும் மீதி மனித உருவிலும் எழும்பி நின்று வேகமாய் ரக்ஷவை நோக்கி கத்தியது...

ரக்ஷவ் அகி மீதிருந்து தாவி குதித்து அவன் வாளை உருவி ஜம்பெலியின் வாளை தடுக்க ஜம்பெலி அதன் வாயால் ரக்ஷவின் தோளை கடித்தது...

வலியில் பல்லை கடித்த ரக்ஷவ் வேகமாய் ஒரு அழுத்தம் கொடுத்து ஜம்பெலியை தள்ளி விட அது கீழே விழும் முன் இடது கரத்தால் தோளில் இருந்த குறுவாளை உருவி ஜம்பெலியின் வயிற்றை கிளித்தான் ரக்ஷவ்...

கோரமாய் கத்தி கொண்டே ஜம்பெலி கீழே விழவும் ரக்ஷவ் சாம்பராவை நோக்கி திரும்ப அவளோ மின்னல் கீற்றுக்களை அந்த யாக குண்டத்தில் போட்டு மகாப்பிரபுவின் வலுவை ஏற்றி கொண்டிருந்தாள்...

ரக்ஷவ் ஓரடி வைக்கும் முன் சாம்பராவின் முதுகை படாரென வந்து அடித்த நீல நிற பந்து அவளை கீழே தள்ளி விட்டது... திவ்யாவை கண்டு புன்னகைத்த ரக்ஷவ் அவனை நோக்கி எழுந்து ஓடி வந்த ஜம்பெலியிடமிருந்து குனிந்து தப்பியவன் அந்த இடைவெளியிலும் தன் வாளால் ஜம்பெலியின் நெஞ்சில் ஆழமான கீறலை பரிசளித்து அது வலியில் நிமிர்ந்து கத்தும் பொழுது அதன் முதுகில் தன் முதுகிலிருந்த உரையிலிருந்து உருவிய அம்பை சொருகினான்...

நொடி வேறுபாடுகளில் இவ்வாறு தாக்குபவனை எதிர்கொள்ள முடியாமல் தினறிய ஜம்பெலி எக்குத்தப்பாய் வாளை பிறட்ட வாளின் நுனி எதர்ச்சையாய் ரக்ஷவின் முதுகை பதம் பார்த்தது...

இதற்கு மேலும் காத்திராமல் ரக்ஷவை தாண்டி குதித்து வந்த அகி ஜம்பெலியின் மீது பாய்ந்தது..

திவ்யா அவளது சக்தியால் விடாது சாம்பராவை தாக்க சாம்பரா சற்றும் விட்டு கொடுக்காமல் அவளது வெள்ளி வாளினால் திவ்யாவின் சக்தியை எதிர்க்க முணைந்து கொண்டிருந்தாள்... திவ்யாவின் பக்கவாட்டிலிருந்து வந்த ஊதா நிற மின்னல் ஒன்று சாம்பராவை தாக்கியது...

ஆச்சர்யமாய் திரும்பி பார்த்த திவ்யா அங்கு நித்யா நிற்பதை கண்டு புன்னகைக்க சாம்பரா அவளது விரல்களை அசைத்து அந்த வெள்ளி துகள்களை நித்யாவை நோக்கி வீசினாள்...

நித்யா திடீரென தன்னை தாக்க வரும் துகள்களை தடுக்க வேண்டி அவள் இரு கைகளையும் கீழிருந்து மேலுயர்த்தி ஒரு ஊதா நிற கண்ணாடி மதிலை அரணாய் உருவாக்க அந்த கண்ணாடி மதிலை உடைப்பதற்காக கத்தி போல் உருவெடுத்து சென்ற சாம்பராவின் வெள்ளி துகள்களை நீல நிற அதிர்வலை ஒன்று இழுத்து சாம்பராவின் புறமே திருப்பி விட்டது...

திவ்யா அந்த வெள்ளி துகள்ளை சாம்பராவிற்கே எதிராக்கியதை கண்டு நித்யா அசந்து போயிருந்தாள்... சாம்பரா கீழே குனிந்து தன் சக்திகளிடமிருந்தே மறைந்து கொள்ள இருந்தும் ஒரு வெள்ளி துகள் அவளது கன்னத்தை கிளித்து விட்டு சென்றது...

சினம் தலைக்கேற கட்டுப்பாட்டை இழந்து வெள்ளி நிறத்தில் ஒளிர்ந்த படி மேல் நோக்கி மிதந்தவளை நோக்கி நித்யா தற்காப்பாய் கரத்தில் இரு ஊதா நிற ஒளி கீற்றுடன் தயாராக சுற்றத்தை கவனித்த திவ்யா தாமதிக்க வேண்டாமென சாதாரணமாய் அவளது ஒரு கரத்தை சாம்பராவை சுற்றி சுழற்றி காற்றில் வீச அவளின் கரத்திலிருந்து பாய்ந்த நீல நிற அதிர்வலை சாம்பராவை சுற்றி வளைத்து படாரென வெடிக்க சாம்பரா இதை எதிர்பார்க்காமல் கீழே விழுந்து மூர்ச்சையானாள்...

நித்யா திவ்யா இவ்வளவு எளிதாய் சாம்பராவை மூர்ச்சையாக்கியதை கண்டு முளிமுளியென முளிக்க முவ்வீரையனின் ஒரு உறுமல் அனைவரையும் மறு புறம் திருப்பியது...

முவ்வீரையன் இப்போது முன்பிருந்ததை விடுத்தும் அதிக வெறியுடன் விண்ணை நோக்கி அலரி விட்டு தன் விரல்களில் முளைத்த கத்தியை விட கூர்மையான நகங்களின் கூர்மை நுனி பகுதியை மகாப்பிரபுவை நோக்கி வீசினான்...

அந்த விரல்களின் நகங்கள் அனைத்தும் வேகமாய் சென்று சதக் சதக் என வரிசையாய் மகாப்பிரபுவின் மூன்று கழுத்திலும் இறங்கியது...

அந்த தாக்குதலில் மகாப்பிரபு சர்ப்பலோகத்தையே உலுக்குவதை போல் அலர அதன் ஒரு கழுத்தை தன் இரு கரத்தால் தாவி சென்று பிடித்த முவ்வீரையன் மடக்கி ஒரு புறம் முறுக்கி அது கதற கதற தன் விரல்களின் நகங்களாலே ஆழமான கீறலை கொடுக்க மகாப்பிரபுவின் மற்றொரு தலை முவ்வீரையனை தடுக்கவென அவனது ஒரு தோளை கடித்தது...

அந்த அதி வீரியமுள்ள நஞ்சு பற்கள் ஆழமாய் இறங்க முவ்வீரையனுள் இருந்த இரட்சகன்கள் வலியிலும் அளவு கடந்த வெறியினால் மிகக் கொடூரமாய் உறுமினர்...

முவ்வீரையனின் கண்கள் முன்பிருந்ததை விட அடர்ந்த ஊதா நிறத்திற்கு மாற சற்றும் தாமதிக்காமல் மகாப்பிரபுவின் மறு தலையையும் கடிக்க முவ்வீரையனின் கூரான பற்கள் அந்த தலையை நொடியிலே தனியாய் பிய்த்திருந்தது...

மகாப்பிரபுவின் கரங்களிடையே சிக்கி மீதமிருந்த அந்த மகாப்பிரபுவின் ஒரே நாகத்தலை கண் முன்பே நரகத்தை கண்டு அனுபவித்ததால் அடித் தொண்டையிலிருந்து அலரியது

அனைவரும் செவிகளை இறுக்கி மூடி அதை கேட்க இயலாமல் தினற அமைச்சன்கள் ஐவரும் தங்களின் மொத்த திட்டமும் இடிந்து விழுவதை கண்ணெதிரே கண்டு வெடவெடத்து நின்றிருந்தனர்.... சர்ப்பலோகமே அதிர்ந்தடங்குவதை போல இறுதியாய் அந்த மூன்றாம் தலையை முவ்வீரையன் தன் கரங்களாலே பிய்த்து தூக்கி எறிந்து அதே நொடியில் அதன் மொத்த உடலையும் கண்களாலே அழிக்க முவ்வீரையனும் மகாப்பிரபுவும் இருந்த இடம் வெடித்து சிதற மகாப்பிரபுவென்னும் அந்த உயிரினம் அழிந்து காற்றோடு காற்றாய் கரைந்தது...

அனைவரும் தட்டுத்தடுமாறி எழுந்து பெருமூச்சறித்தவாறு முவ்வீரையனை ஏறிட முவ்வீரையனோ தன் நெஞ்சை பிளந்து விண்ணை நோக்கி ஒரு ஒளியை செலுத்தி அனைவரையும் நடுங்க வைத்து பயங்கரமாய் உறுமியது...

முதலாம் அணி நாயகர்கள் அனைவரும் பரிதவித்து ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ள முவ்வீரையனின் உறுமல் மெதுமெதுவாய் அதிகரித்து கொண்டே போனது...

இரட்சகன்கள் மூவரின் கோவம் கட்டுப்பாட்டை இழந்து நேரம் கடந்திருந்தது... காற்றின் வேகம் அசுர வேகத்தை தத்தெடுத்திருந்தது

முவ்வீரையன் தன்னோடு அவ்வுலகையே அழிக்கவிருந்த அந்த நேரமும் வந்தது... முவ்வீரையனை சுற்றி ஊதா நிறத்தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த நிலம் மொத்தத்தையும் சூழத் தொடங்கியது...

அமைச்சன்கள் ஐவரும் அதிர்ச்சியில் அவ்வாறே நிற்க சஹாத்திய சூரர்கள் எண்வரும் முவ்வீரையனை நோக்கி வேகமெடுத்து ஓடினர்... பராக்ரம வீரன்களுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் அவர்கள் எதையும் கண்டு கொண்டதை போலவே தெரியவில்லை...

அவர்களின் கண்கள் முழுவதும் அமைச்சன்கள் ஐவரையும் மொத்தமாய் அழிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் தான் தெரிந்தது...

இரண்டாம் அணி நாயகிகள் மிரண்டு போயிருந்தனர்..

நாகனிகள் மூவரும் விண்ணில் தங்களின் பாதையை உருவாக்க யாளி வீராங்கனைகள் யானையாளிகள் மீதேறி அமர்ந்தனர்...

உலகை உலுக்குவதை போல் யானையாளிகள் அவ்விடத்தை நோக்கி ஓடி வந்தது.. அவை ஏதும் கவனத்தில் இன்றி முவ்வீரையன் அந்த உயிரொளியை வெளியேற்றிக் கொண்டிருந்தனர்...

சஹாத்திய சூரர்கள் அனைவரும் முவ்வீரையனை சுற்றி வளைத்து அவரவர்  வாளை ஒரே நேரத்தில் நிலத்தில் இறக்க ஒருவர் மற்றவர் வாளோடு ஒரு வளையம் இணைந்து முவ்வீரையனை சுற்றியும் சஹாத்திய சூரர்களின் மகா சக்தி ஒரு வளையத்தை உருவாக்கியது...

அஷ்வன்த் ஒரு காலை அழுத்தி மறு காலால் எம்பி முவ்வீரையன் மீது தாவி ஏறினான்... அவனை அடுத்து வீர் எம்பி குதித்து அஷ்வன்த் கரத்தை பிடிக்க அஷ்வன்த் தன் முழு பலத்தையும் கொடுத்து வீரை தூக்கி வீசினான்...

வீர் காலால் முவ்வீரையனின் உடலை ஒருமுறை உதைத்து அந்த அழுத்தத்தில் மீண்டும் மேலே எம்பி முவ்வீரையனை பிடித்து நின்றான்...

வீரை போலே ரவி மற்றும் ரனீஷ் அதே போல் எம்பி குதித்து அஷ்வன்த் மற்றும் வீரின் உதவியுடன் மேலேறி முவ்வீரையனின் கழுத்துப் பகுதியை அடைய திமிறிய முவ்வீரையன் தன் புஜத்தால் ரனீஷை பிடித்து இறுக்கியது..

ரனீஷ் அவனது தோளில் இருந்து குறுவாளை சரக்கென குத்த அந்த கத்தியிலிருந்த ஒரு மருந்து முவ்வீரையனுக்குள் இறங்கிய அடுத்த நொடி மீண்டும் முவ்வீரையன் உறுமி கொண்டே ரனீஷை தூக்கி எறிந்தது...

விகி தாவி சென்று ரனீஷை பிடித்து கீழே தரையிறக்கியது.. அஷ்வன்த் ரவி மற்றும் வீரும் ரனீஷை போலவே இப்போது அவரவர் குறுவாளை முவ்வீரையனின் உடலில் குத்தினர்...

முவ்வீரையனை திசை திருப்பவதை போலவே சுற்றி நாழாப்புறத்தில் நின்றிருந்த முகில் அர்ஜுன் ரித்விக் மற்றும் சரணும் மருத்துவ தளபதிகளை போலவே அவரவர் குறுவாளால் முவ்வீரையனின் உடலை கிளித்தனர்...

முவ்வீரையன் அந்த ஒரு குறிப்பிட்ட மருந்தினால் தினறலை தாங்க இயலாமல் அஷ்வன்த்தை கீழே தள்ளி விட்டது.. அஷ்வன்த் இதை எதிர்பார்த்ததால் கீழே விழும் முன் கரணமடித்து காலை மண்ணில் பதித்தான்...

ரவி மற்றும் வீரும் முவ்வீரையனின் மீதிருந்து கீழே குதிக்க வளவன் சீரி கொண்டு முவ்வீரையனை நோக்கி பறந்தான்...

வளவனின் நிறத்தை கண்டு முவ்வீரையனின் மூளையில் ஏதேதோ மாற்றம் நிகழ மருண்ட விழிகளினால் தெளிவாய் காண இயலாமல் தன் பெரிய கரங்களை காற்றில் அங்குமிங்கும் அசைத்து வளவனை பிடிக்க முயன்றான்...

வளவன் முவ்வீரையனது பிடியிலிருந்து தப்பிக் கொண்டு சுழன்று சுழன்று பறக்க முவ்வீரையனின் வெறியும் சினமும் மேலும் மேலும் கூடத் தொடங்கியது...

முவ்வீரையனின் சினம் இயற்கையில் பிரதிபளிக்க காற்றின் வேகம் கூடி அனைவரையும் முவ்வீரையனை விட்டு தூர தள்ளியது... அந்த காற்றிலும் போராடி முவ்வீரையனை நெருங்க வந்த பருந்து சகோதரர்கள் மூவரும் வளவனுடன் நாழா புறத்திலும் நின்று காற்றை முவ்வீரையன் புறமாக திருப்ப முயற்சி எடுத்து அவர்களின் சிறகுகளை அதி வேகமாய் அசைத்து கொண்டிருந்தனர்...

ஆனால் முவ்வீரையனை அது கட்டுப்பத்தியதை போலவே தெரியவில்லை... சூழ்ந்து கொண்டு கொழுந்த விட்ட தீயில் நாகமனிதர்கள் பற்றி எரிந்து கொண்டிருக்க அகியும் யுகியும் குடும்பத்தவர்களும் வேறெவரும் அந்த தீயில் சிக்க விடாமல் பல நீர் வளையங்களை தீ வளையங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தது...

விகி ரனீஷை இறக்கி விட்டதும் அந்த சவப்பெட்டிகள் மூன்றையும் கண்டு சத்தமாய் உறுமியது... விண்ணை சூழ்ந்திருந்த இருள் கவ்விய நிலையே தொடர நேரம் கடக்க கடக்க இருள் அதிகரித்ததே ஒழிய ஒளியின் சாயல் எங்கும் காட்சிப்படவில்லை...

நாகனிகள் அவர்களின் சக்திகளை ஒன்றிணைத்து முவ்வீரையனை சுற்றி மற்றுமோர் வளையத்தை உருவாக்கினர்... ஆனால் அதை தன் வாயால் இடித்து சுக்கு நூறாக்கினான் முவ்வீரையன்...

அந்த அதிர்வு நாகனிகளை தாக்கி கீழே தள்ள திடீரென காற்றிற்கு இடையிலே பரவிய ஒரு கண்ணாடி நாகனிகளை தாங்க அனைவரும் முவ்வீரையனை எதிர்த்து நின்ற யட்சினிகளை நோக்கினர்...

அக்காட்சி நம் முதலாம் அணி நாயகர்கள் அனைவரின் நினைவிலும் இவர்களின் மூன்றாம் பிறவியில் முதல் முறையாக வேந்தன்யபுரத்தில் கோவன்கள் முக்கோக்களாய் பதிவியேற்ற அன்று கோரன் என்ற இராட்சச சிங்கத்தினால் நிகழ்ந்த தாக்குதலில் கீழே விழ இருந்த கோவன்களை தங்களின் சக்திகளால் தாங்கி நின்ற நாகனிகள் தான் வந்து சென்றனர்...

நாகனிகள் மூவரும் முகமிறுக மீண்டும் முவ்வீரையனை நோக்கி வேகமாய் பறந்து சென்றனர்... யட்சினிகள் அவர்களால் முடிந்த வரை அவர்களின் சக்திகளை செலுத்தினாலும் அவர்களை வெகு விரைவிலே சோர்வு தழுவிக் கொண்டது...

நாகனிகளின் அதீத சக்தியினால் முவ்வீரையன் பார்க்க இயலாமல் திண்டாட அந்த நேரம் முவ்வீரையனுக்கு பாதி உயரத்தில் இருந்த எட்டு யானையாளிகளும் யாளி வீராங்கனைகளின் கட்டளையிற்கு இணங்க அதி வேகமாய் ஓடி வந்து மூவ்வீரையனை இடித்து தள்ளியது...

யானையாளிகளின் தந்தம் முவ்வீரையனின் வயிற்றுப் பகுதியை வரிசையாய் கிளிக்க முவ்வீரையன் அலரிய அலரல் அனைவரையும் சில அடிகள் தூர வீசியது...

யானையாளிகளும் பின்னோக்கி தள்ளப்பட அனைவரும் பெருமூச்சறித்தபடி முவ்வீரையனையும் ஒருவரையொருவரையும் நோக்கி கொண்டனர்...

அமைச்சன்கள் ஐவரும் சிலையென சமைந்திருந்ததால் அவர்கள் எதற்கும் அசையவில்லை..

இரண்டாமணி நாயகிகள் அனைவரும் வியப்புடன் அளவு கடந்த ஐயத்துடன் சுற்றி நின்றிருந்தனர்...

மோகினி அவர்களை எந்த ஆபத்தும் நெருங்காமல் குட்டி நாயகர்களுடன் பாதுகாத்து கொண்டிருந்தாள்... மாயா தான் படித்த அனைத்தையும் நினைவு கொணர முயற்சித்து கொண்டிருக்க முவ்வீரையனை கட்டுப்படுத்துவோர் பக்கமே கிளிந்து போயிருந்தது மட்டும் தான் அவளுக்கு நினைவு வந்தது...

இரத்தக்கிளறியாய் நின்றிருந்த பராக்ரம வீரன்களும் இப்போது முவ்வீரையனை எதிர்க்க முவ்வீரையனோ மொத்த கட்டுப்பாட்டும் இன்றி பார்க்கும் அனைவரையும் தாக்கத் தொடங்கியிருந்தான்...

அந்த அதிவேகமான அசுர காற்றுக்கு இடையில் காற்றை கிளித்து கொண்டு மூன்று புள்ளியென சிம்மயாளிகள் முவ்வீரையனை சுற்றி ஓடியது

மெல்ல மெல்ல சிம்மயாளிகள் பார்வையை விட்டு மறைந்து கொள்ள சிசப்பு நீலம் மற்றும் வெண்மை நிறம் மட்டும் தெரிந்தது... ஒரு கட்டத்தில் சிம்மயாளிகளும் முவ்வீரையனால் கண்களுக்கு தெரியாமல் போனது

இரத்தக் கோலத்தில் நாயகர்கள் அனைவரும் முவ்வீரையனை ஏறிட்டனர்... அனைவரின் கண்களிலும் முவ்வீரையன் நிறைந்திருந்தான்..

வீர் அதற்கு மேலும் வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து தன் தோழர்களை நோக்கினான்... சஹாத்திய சூரர்கள் அனைவரின் காதுகளிலும் கோவன்களின் இறுதி வாக்கியங்களே ரிங்காரமிட்டு வந்தது...

என்ன நடந்தாலும் இந்த உலகம் அழியக் கூடாதென்றும் முக்கியமான அது இரட்சகன்களினால் அழிய கூடாதென்றும் தீர்மானமாய் முடிவெடுத்திருந்தனர்...

இந்த உலகை ஒரு முறை காப்பதற்காய் தங்களையே தியாகம் செய்த மூவரின் தியாகம் அவர்களின் தனையன்களாலே வீணாக விடக் கூடாதென்ற வெறி அனைவரில்லும் எழ

அர்ஜுன் : மேலும் இந்நிலையை தொடர விட்டால் யமது தோழன்களின் உயிர் தியாகம் அர்த்தமற்றதாய் மாறிவிடும்.. அவ்வாறு நிகழ உள்ளதேயானால் அதை தடுத்து நிறுத்த யாம் யமது இன்னுயிரை தியாகிக்கவும் வருந்தமாட்டோம் என யாவரையும் பார்க்காமல் உரக்கக் கூறினான்...

நாயகிகளும் இரண்டாமணி நாயகர்களும் அவனை அந்த இரணகளத்தில் கடினப்பட்டு விசித்திரமாய் நோக்கினர்...

அஷ்வன்த் : பூவுலகமும் சரி.. சர்ப்பலோகம் ஆழிலோகம் மற்றும் ஆகாயலோகமும் சரி.. இந்நாழ் வகையான ஞாலங்களையும் உயிர் நீத்தேனும் காப்பதே எமது பிறப்பின் காரியமே ஆகும்.. இத்தினத்தில் எம் எண்வரின் மரணம் குறிக்கப்பட்டாலும் அதை குறிக்கவென இந்நாழ் ஞாலங்களில் உயிர்கள் இருக்க வேண்டும்...

ரனீஷ் : முவ்வீரையனை தடுத்து இரட்சகன்களை மீட்க இப்போழ்திருக்கும் ஒற்றை வாய்ப்பு.. எம் எண்வரது உயிரொலி பிரியும் வேளையதில் உருவாகும் அதீத சக்தி மட்டுமே..

மோகினி : சித்தம் இழந்து உரையாடுகிறாயா இளவா... முவ்வீரையனை யாம் தடுக்க இயலுமே தவிர இரட்சகன்களை தடுத்து அவர்களை மீட்க இயலாது என அந்த புயல் காற்றில் கடினப்பட்டு கத்தினள்...

ரவி : ஏன் இயலாது... எம் எண்வரது உயிரை கொடுத்தேனும் இப்புவியை காத்தருள்வோமென க்ரிஷ் இந்திரன் சத்தீஷிற்கு யாம் அளித்த வாக்கினை மறவாயா தமக்கையே.. இஞ்ஞாலங்களை காக்க ஒரு வழி கிட்டினாலும் அதை செயல் படுத்திடுவோம்...

லீலாவதி : நிறுத்தும் சகோதரரே.. முவ்வீரையனை எதிர்க்கவோ அவனை நிறுத்தி தன் நிலை கொண்டு வருவதற்கோ ஒரு வழியும் மீதமில்லை...

வீர் : இரு வழிகள் உள (உள்ளது).. அதில் ஒற்றை வழி இந்நிலையில் சாத்தியமற்தாயினும் மீதமுள்ள ஓர் வழியை செயல் படுத்தினால் நிச்சயம் இரட்சகர்களை மீட்களாம்...

நந்தினி : இல்ல மாமா... முடியாது... இதுக்கு நாங்க அனுமதிக்க மாட்டோம்.... என திடீரென அழுகையோடு கத்தியவளை அனைவரும் காண வீரும் நந்தினி அந்த வழியை அறிந்திருக்கிறாள் என உணர்ந்து கொண்டான்..

அனு : நந்து அது என்ன வழி... சீக்கிரம் சொல்லு

ஆருண்யா : யாம் ஒற்றை வழியை அறிவோம் தேவி.. புவியுலகின் இரண்டாம் அதி சக்தியெனப்படும் சஹாத்திய சூரர்களின் மரணத்தில் வெளி வரும் அதிசக்தியானது முவ்வீரையனையும் அழிக்கும் என கத்தினாள்...

ப்ரியா : சித்தம் இழந்து விட்டீரா அனைவரும்.. தம் தோழர்கள் மூவரை இழந்ததையே நம் முழு குடும்பமும் இன்றளவும் சரி கட்ட இயலாது தவித்து கொண்டிருக்கையில் அதில் தம்முடைய இழப்பையும் சேர்க்க உள்ளீரா என கண்ணீருடன் கத்தியவளின் கண்ணீர் நிலத்தை அடையவும் மீண்டும் தே அதிர்வலை எழுந்தது

ஆனால் முவ்வீரையன் உருவாக்கிய களோபரத்தால் அந்த அதிர்வு எவருக்கும் தெரியவில்லை...

மது : இவ்வாறு ஓர் வழியுள்ளதை எதற்காய் மறைத்தீர்கள்...

முகில் : முவ்வீரையனை கட்டுப்படுத்த இருந்தே இரு வாய்ப்புகாளில் ஒன்றை எப்போதே நாம் இழந்து விட்டோம்... அதில் மற்றொன்றே எம் எண்வரது மரணமென தாம் அறிந்தால் அதை தடுக்க மாட்டீரென என்ன நிச்சயம் மது..

ஒவீ : இவ்வுலகையும் பிரவஞ்சத்தையும் காப்பது யமக்கும் கடமை என்பதை மறவீரா .. தாம் எவ்வாறு தம் உயிரை மாய்க்க துணிவீர்களோ அதை பின் தொடர்ந்து எம் உயிரையும் மாய்த்துக் கொள்ள யாமும் வருந்த மாட்டோம்... என்றவளின் கூற்றை கேட்டு சஹாத்திய சூரர்கள் இன்னமும் இறுகினர்...

முவ்வீரையன் பராக்ரம வீரன்களை தகர்க்க தன் புஜத்தாலே அஜயை தூக்கியடித்தான்...

திவ்யா : என்(ன) உளறல் மொழிகிறாய் ஒவீ

வீர் : முவ்வீரையனின் வரவு இந்நிலையிலே முடியுமென அறிந்திருந்ததால் அனைத்திற்கும் தயாராகவே வரவளித்தோம் ... கோவன்களின் தியாகத்திற்கு முன் எம் எண்வரது தியாகம் ஒன்றும் பெரிதல்ல...

சித்ரியா : தையை கூர்ந்து நிறுத்துங்கள்.. முழு குடும்பத்தையும் இழந்து முதல் முறையாய் தம் அனைவரையும் கண் முன் காணும் எம்மை மீண்டும் அனாதையாக்கிட முயளாதீர்கள்... என கத்தியவளை அனைவரும் அதிர்ந்து நோக்க அந்த அதிர்ச்சி சஹாத்திய சூரர்களின் முகத்தில் தெரியவில்லை...

ரித்விக் : உம்மை தன்னந்தனியாய் தவிக்க விட்டதற்கும் இது யமக்கான தண்டனை தானம்மா.. நீவிர் மற்றும் உமது இரு தங்கைகளும் நம் குடும்பத்துடன் மேலும் வாழ வேண்டும்.. அதை நிராசையாக்க விரும்பவில்லையடா நாங்கள் என இறைஞ்சும் குரலில் கூறியவனை கண்டு சித்ரியாவால் அழ மட்டும் தான் முடிந்தது...

அனு : முடியாது... முடியாது... தம் எண்வரை இச்செயல் புரிய என்றும் யாமனுமதிக்க மாட்டோம்.. என சினத்துடன் கண்கள் கரு நீலத்தில் ஒளிர எழுந்தவளின் முன் அவளை பேரதிர்ச்சியாக்குவதை போல ஒவீ தன் வாளுடன் எதிர்த்து நின்றாள்...

அனு அப்பட்டமான தன் அதிர்ச்சியுடன் ஒவீயை ஏறிட அவளுடன் மற்ற ஏழ்வரும் அதே போல் தங்களது அற்புத வாள்களுடன் கன்னத்தில் வலிந்த கண்ணீருடன் தங்களின் உயிர் தோழிகளையே எதிர்த்து நின்றனர்...

வீனா : அவர்களை தடுக்க தாம் மூவரும் யம்மை கடக்க வேண்டும் அனு என எதிர்த்து நின்றவளை ஆதே அதிர்ச்சியுடன் பார்த்திருந்த நாகனிகளின் பின் கண்ணீர் கன்னத்தில் தடம் புளர நின்றிருந்த ரக்ஷவை எவரும் கவனிக்கவில்லை...

நாகனிகளின் முகத்திலிருந்த அதிர்ச்சி திடீரென மறைய கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்த திவ்யா அவளது நீல பந்துகளை உருவாக்கினாள்...

திவ்யா : தம்மை கடந்தே அவர்களை காக்க வேண்டுமெனில் அதற்கு யாமும் தயங்க மாட்டோம் வீனா என்றவளை கண்ணீரை துடைத்து விட்டு பார்த்த யாளி வீராங்கனைகளின் பின் யானையாளிகளும் படையெடுத்து வந்து நின்றது...

சஹாத்திய சூரர்கள் உணர்ச்சி துடைத்த வதனத்துடன் முவ்வீரையனை நோக்கி தங்கள் வாளுடன் அடியெடுத்து வைக்க பராக்ரம வீரன்கள் எவரும் இவர்களின் உரையாடல்களை கவனிக்கவில்லை...

தங்களின் முதலடியை எடுத்து வைத்த சஹாத்திய சூரர்கள் முன் இப்போது பருந்து குடும்பத்தினர் ஐவரும் மதிலாய் வந்து நின்றனர்....

இதற்கு மேலும் பேச்சு வார்த்தை நடுத்துமளவு நேரமில்லாததால் முகில் பின் பக்கமாய் திரும்பி ஒரு விசிலடிக்க யாளி வீராங்கனைகள் பின் நின்றிருந்த சரணின் யானையாளியும் ரித்விக்கின் யானையாளியும் இவர்களை நோக்கி வந்து பருந்து குடும்பத்தை தடுத்து கோட்டை புறமாய் தள்ளியது...

எந்த ஒரு தடையாகவும் இனி எவரும் இருக்க மாட்டார்கள் என எண்ணிய சஹாத்திய சூரர்கள் உண்மையில் ஒரே மதிலாய் அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த மதிலாய் ரக்ஷவை அவர்கள் முன் எதிர்பார்த்திருக்கவில்லை...

சில இரத்தக்காயங்களுடன் உணர்ச்சி துடைத்த வதனத்தின் கன்னத்தில் காயமறுத்த கண்ணீர் தடத்துடன் அவர்களின் முன் நின்றிருந்தான் ரக்ஷவ்...

ரக்ஷவ் மனம் கனக்க அவர்கள் முன் அவனது வாளை இறுக்கப் பற்றியபடி நின்றிருக்க அவன் முகம் இதுவரை இல்லாத அளவு இறுகி போயிருந்தது...

இவர்கள் செய்யவிருக்கும் வினையை கற்பனை செய்து பார்க்கக் கூட அவன் மனம் முடியாதென கத்தி கதறியது..

வீர் : பாதையிலிருந்து நகர்ந்து செல் ரக்ஷவா.. என்றதற்கு உலகமே இருண்டதை போல் அவனை ஒரு பார்வை பார்த்தான் ரக்ஷவ்...

ரக்ஷவ் : எச்செயல் புரிய விழைகிறீரிர் அய்யா (அப்பா) என அதே பார்வையில் ஆழ்ந்த குரலுடன் கூறியவனை வாய் திறக்க இயலாமவ் பார்த்தான் வீர்...

சஹாத்திய சூரர்களுக்கு ரக்ஷவிற்கு இரு வாரத்திற்கு முன்பே செந்தமிழை முதல் முறையாய் கற்றுக் கொடுத்த நினைவு வந்து போனது...

அன்று இயல்பான சொற்களை கற்று தருகையில் அன்னையின் வேறு சொற்களை கற்றறிந்தவன் தந்தையின் வேறு சொற்களை காது கொடுத்தும் கேட்காமல் " யார குருவே அப்டி கூப்ட போறேன் வேஸ்ட்டு " என கூறினான்...

ஆனால் இன்று.. அவன் அய்யா என அவர்களை குறித்தது அவர்களுக்கு எந்த ஒரு காயமுமின்றியே ஆழமான காயமொன்றை கொடுத்தது

இம்முறை ரக்ஷவிற்கு பதிலாக சஹாத்திய சூரர்களின் கண்கள் கலங்க ரக்ஷவ் அவனது பார்வையை சற்றும் அகற்றவில்லை...

சரண் : பாதையிலிருந்து நகர்ந்து நில் ரக்ஷவா

ரக்ஷவ் : எம் வினாவிற்கு விடையளித்த பின் நகர்கிறேன் அய்யா(அப்பா).. எவ்வினை புரிய விழைகிறீர்கள் என மீண்டும் கேட்டான்...

சஹாத்திய சூரர்களின் காதுகளில் மீண்டும் கோவன்களின் குரல் எதிரொலிக்க அவர்கள் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி ரக்ஷவை ஏறிட்டனர்...

ஆனால் இவர்களே எதிர்பாராததை போல் திடீரென அந்த பெரும் புயலில் இருந்து யுகி தாவி வந்து ரக்ஷவை சுற்றி ஓட யுகியை பின் தொடர்ந்து அகி மற்றும் விகியும் ஓடி வந்து ரக்ஷவை இப்போது சுழலத் தொடங்கின...

நாயகன்கள் எண்வரும் புரியாத பார்வை பார்க்க யுகி மீதி தாவி அமர்ந்த ரக்ஷவ் உணர்வற்ற பார்வையை அளித்தான்...

சிம்மயாளிகள் மூன்றும் இப்போது சுழன்றடித்து சஹாத்திய சூரர்களையும் தாண்டி ஓட ரக்ஷவின் கரத்தில் கசங்கியிருந்த பழைய காகிதமொன்று அவன் கரத்தை தளர்த்தியதும் அந்த பேய் காற்றில் எங்கோ பறந்தது...

ரக்ஷவிற்கு ஏதும் ஆகாதென அறிந்திருந்த சஹாத்திய சூரர்கள் மீண்டும் முவ்வீரையனை நோக்கி சென்று பராக்ரம வீரன்களே எதிர்பாராத போது முவ்வீரையனை சுற்றி வளைத்தனர்...

நாகனிகள் யாளி வீராங்கனைகளையும் யானையாளிகளை மூன்றே ஆட்களாய் தாக்க இயலாமல் சஹாத்திய சூர்களை கத்தியழைத்து கதறினர்... யாளி வீராங்கனைகளிடமும் மன்றாடினர்... ஆனால் அவர்கள் கேட்பதாய் தான் தெரியவில்லை...

இவர்களனைவரையும் தாண்டி சென்ற சிம்மயாளிகள் ஒரே நேரத்தில் அந்த மையத்திலிருந்த மேடை மீது குதிக்க இவ்வளவு நேரமும் எழுந்த அதிர்வலைகள் முவ்வீரையனின் உறுமல்களை விடவும் பலத்த சத்தத்துடன் ஒரு பேரலை அந்த மொத்த நிலத்திலும் எழுந்தது....

ரக்ஷவின் கரத்திலிருந்து விடுப்பட்ட காகிதம் அந்த பேய் காற்றில் மாயாவின் முகத்தில் சென்று விழ அதை கண்ணீருடன் எடுத்து தூக்கி போட முயன்றவள் அதில் ஏதோ எழுதியிருப்பதை கண்டு கண்களை விழித்து நோக்க எழுத்துக்கள் அனைத்தும் மங்களாய் தெரிந்தது...

கண்களை துடைத்து விட்டு வேகவேகமாய் அந்த காகிதத்தை திருப்பி பார்த்த மாயா அதில் ஏதோ எழுதியிருப்பதையும் கண்டாள்...

யுகியின் மீதிருந்து கீழே குதித்த ரக்ஷவ் அந்த மூன்று சவப்பெட்டிகளின் அருகே சென்று தன் வாளினால் ஒரே வீச்சில் அந்த அழுத்தமான இரும்பு சங்கிலிகளை அறுத்தெறிந்தான்...

அடுத்தடுத்த நொடி அந்த இடம் முழுவதும் அந்த நடுக்கம் அதிகமாய் பரவ கிட்டத்தட்ட ஒருவரோடு ஒருவர் எதிர்த்து நின்றிருந்த நாயகர்கள் அனைவரும் இந்த மேடை புறம் திரும்பி அதில் எதையோ தீர்மானித்ததை போல் நின்றிருந்த ரக்ஷவை கண்டு அதிர்ந்தனர்...

மாயாவின் குரல் அங்கு உரக்க எதிரொலித்தது... " முவ்வீரையனை கட்டுப்படுத்த கூடியவர்கள் மதிநட்சத்திர தினத்தன்றே ஈண்டெடுக்கப்படுவர் " என அதிர்ச்சியாய் வாசித்தாள்...

வளரி பாட்டி : ஆனால் அது நிகழாது மகளே.. கோவன்கள் பிறப்பெடுக்கப் போவதில்லை... மதிநட்சத்திரத்தில் பிறப்பெடுக்கும் வேறு உயிர்களால் முவ்வீரையனை நிச்சயம் அடக்க இயலும்... அவ்வாறே ஆனாலும் அடுத்த மதிநட்சத்திர தினம் நாழாயிரம் வருடம் பின்னே வரவுள்ளது என சோர்ந்து போய் கூறியதும் பத்யரூனாவின் குரல் அங்கு சத்தமாய் எதிரொலித்தது...

பத்யரூனா : எவ்வாறு இன்றைய தினத்தை மறந்தீர் அம்மா.. கோவன்களின் மரணம் பின் வரவுள்ள ஒரே மதிநட்சத்திரம் விடிந்துள்ளது இன்று தான்...

அனைவரும் இதை எவ்வாறு மறந்தோம் என்பதை போல் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர்.. ஆரம்பத்தில் யோகபரிபூஜன தினத்தன்றே மதிநட்சத்திரமும் வரவுள்ளதை நினைவில் வைத்திருந்தோர் எவ்வாறு இப்போழ்து மறந்தனர் என பேரதிர்ச்சியுற்றனர்...

அதை நினைவில் கொண்டிருந்த ரக்ஷவ் அவனது வாளால் அம்மூன்று சவப்பெட்டிகளை அடுத்தடுத்து வேகமாய் குத்தினான்... அவன் பின் நின்றிருந்த சிம்மயாளிகள் மூன்றும் அதிவேகமாய் உறுமி தடதடவென விட்டால் பறந்து விடும் நோக்குடன் அதிபயங்கரமான சத்தத்தை எழுப்பி கொண்டிருந்த மரப்பெட்டிகளில் இருந்த அச்சுக்களை தீண்டி கண்களை மூடிக் கொள்ள அவரவர் ஆத்ம நிறத்தால் சூழ்ந்த மூன்று சிம்மயாளிகளும் அடுத்த நொடி கீழே விழுந்து மூர்ச்சையானது...

கோவன்களின் பாதி சக்தியை சிம்மயாளிகள் தங்கள் மூலமாக அளித்து அவர்களின் உயிர் சக்தியுடன் இணைத்த அடுத்த நொடி அதிபயங்கரமான ஒளி ஒன்று அந்த சவப்பெட்டிகளை துளைத்துக் கொண்டு விண்ணை நோக்கி பாய்ந்தது...

கோவன்களின் உயிர் சக்தியை கண்ட நாகனிகளால் அசைய கூட முடியவில்லை... சஹாத்திய சூரர்களும் அதிர்ந்து போய் அக்காட்சியை காண ... அந்த ஒளி இருள் சூழ்ந்து கவ்வி கிடந்த விண்ணை கிளித்து கொண்டு சென்று மேலும் அவ்விடம் முழுவதையும் இருளாக்கியது...

கோவன்களின் சக்தியுடன் வரவிருக்கும் அவ்வுயிரினம் நிச்சயம் முவ்வீரையனை தடுத்து உலகை காக்க உதவும் என எதிர்பார்த்திருந்தவர்களை அசத்துவதை போல் அந்த ஒளியோடு கலந்திருந்த மூன்று சிம்மயாளிகளும் அந்த கொட்டும் மழையில் எம்பி வந்து வெளியே நின்றது

அனைவரும் அந்த ஒளி மறைந்ததும் மழை முகில்களை நோக்க அது ஒரு பெரும் சுழல் போல் உருவாகத் தொடங்கி யோகபரிபூஜன தினத்தை நினைவூட்டுவதை போல் பதினைந்து நட்சத்திரங்கள் அந்த மழையிலும் மின்னியது

சிம்மயாளிகள் மூன்றும் முன்பிருந்ததை விடுத்தும் அதிக பலத்துடன் ஒரு உறுமலை வெளியிட பராக்ரம வீரன்களும் இப்போது உறைந்து போய் இப்புறம் திரும்பினர்...

அந்த கருமையான மேகச் சுழல்களுக்கு இடையே யாரோ வேகவேகமாய் விலகுவதை போல் ஏதேதோ காட்சிகள் மங்களாய் தெரிய திடீரென அதிலிருந்து வந்த வேகமான ஒளி ஒன்று முவ்வீரையனை நொடி கணக்கில் சூழ்ந்து முவ்வீரையனை முழுதாய் வளைத்தது...

சஹாத்திய சூரர்களும் பராக்ரம வீரன்களும் வேகமாய் தூர தள்ளப்பட சஹாத்திய சூரர்கள் தடுமாறி ஒருவரை ஒருவர் பிடித்து நின்று கொண்டு முவ்வீரையனை முற்றிலும் மறந்து அந்த மேகப் புயலையே நோக்கினர்..

அந்த கருமேகப்புயலுள் அதி வேகமாய் பயணித்த மின்னலொன்று அந்த மேகம் முழுவதையும் ஒரு நொடி ஒளியூட்ட அங்கே அனைவரின் மனதையும் உலுக்குவதை போல் " கண் மூடு முவ்வீரையா ஆஞ்ஞான் கட்டளையை செவி மடுக்கிறாயா " என ஒரு குரல் கர்ஜித்தது...

ஒரு நொடி தான்... அங்கு இவ்வளவு நேரமும் முவ்வீரையன் உயிரே விடுவதை போல் கத்திக் கொண்டிருந்த தன் அரவத்தை நிறுத்தி விட்டு குரல் வந்த திசை நோக்கி வெறியுடன் திரும்பினான்..

" விழி மூடக் கூறினேன் உம்மை " என மீண்டும் அதே குரல் கர்ஜிக்க முவ்வீரையனின் கண்களில் தெரிந்த வெறியும் ஊதா நிறத்தின் அடர்த்தியும் மெதுமெதுவாய் குறைய முவ்வீரையனின் நெஞ்சிலிருந்து வெளியேறிய உயிரொளி மறைந்து முவ்வீரையனின் உயரம் மெதுமெதுவாய் குறைந்து அதே ஊதா நிற புகை அவனை சூழ்ந்து கொண்டது

அனைவரும் கண்ணீர் குளமான கண்களுடன் அக்காட்சியை காண இரண்டே நிமிடத்தில் அந்த புகையை விட்டு இரட்சக சிம்மயாளிகள் மின்னலென தாவி குதித்து வந்தது...

அனைவரின் முகத்திலும் கண்ணீருடன் புன்னகை மலர தாவி குதித்து வந்த இரட்சக சிம்மயாளிகள் மூன்றும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் விரைந்து சென்று கோவன்களின் சிம்மயாளிகளை அடைந்தனர்...

அடர்ந்த காரிருள் மேகங்களின் இடையே பத்து வாள்கள் கீழிறங்கியது...அதன் அனைத்திற்கும் மேலாக மூன்று பளபளக்கும் வாள்கள் மிக கம்பீரமாய் விவேகத்துடன் வீசி எறியப்பட.... அந்த வாள்களை முதலில் கண்ட திவ்யாவின் கண்கள் அதிர்ச்சில் விரிந்தது....

வீசி எறியப்பட்ட அம்மூன்று வாள்கள் பேய் மழையிலும் எவரையோ நோக்கி விரைந்தோட... அபார இடி ஒன்று உலகமக்கள் அனைவரையும் நொடி பொழுதில் நிலைகுழைய செய்தது.. நொடி தாமதிக்காது மூன்று நிழல்களை நோக்கி விரைந்த வாள்கள் திடீரென எதிலோ குத்துப்பட போக.... அதன் கூர் முணை எதையோ கிழிக்க ஆர்வமாய் காத்திருக்க... நொடி பொழுதில் அங்கு ஏதோ நிகழ்ந்திருந்தது... அதி பயங்கர மின்னல் ஒன்று இருள் சூழ்ந்து அம்முழு உலகையும் நொடி பொழுதில் ஒளிமயமாக்கியது...

சுற்றி எங்கிலும் குறுதி வெள்ளம்... பலர் வீழ்ந்திருக்க.... சிலர் உயிரை பிடித்துக் கொண்டு காத்திருக்க..... பல உயிரற்ற நாக மனித உடல்கள்.... சில காயம்பட்ட வீரர்கள்... பலாயிரம் உயிர்களை காவு வாங்க காத்துக் கொண்டிருந்த சில கோர கண்களின் முன்...  அனைத்திற்கும் நடுவில்.. உடல் விரைத்து விழிகள் இறுகி மூடப்பட்டு வதனம் இறுகிட.... கரங்கள் அம்மூன்று வாள்களை இறுக்கி பிடித்தபடி.. உடல் முழுவதும் மழையில் நனைந்து.... பாதி உடலில் குறுதி வலிந்தோடியது... அபார காயங்களுடன் சிம்மயாளிகள் ஆறு அவர்களுக்கு தலைவணங்கி அமர்ந்திருக்க.... அவர்களை கண்ட பல சர்ப்பலோக சேனை வீரர்கள் மரியாதையாய் வாள்களை உள் வைத்து கால்களை மடக்கி முட்டியிட்டு தலை குனிந்திட..... தமக்கென்று உரிதான கம்பீரத்துடன் அந்த மொத்த உலகமே அதிர்ச்சியில் வதனம் வெளிரி போய் அவர்களை காணும் அளவிற்கு நின்றனர் அம்மூவர்...

இருவது வருடங்கள் முன் தம்மை தானே அழித்து கொண்டு உயிரை தியாகம் செய்ததாய் எண்ணப்பட்டு இத்துனை வருடங்களிலும் இஞ்ஞாலத்தில் நூறு பாகங்களாய் பிரிக்கப்பட்டு பிணமாய் அடைக்கப்பட்டிருந்த இவ்வுலகிலே அபார அதி சக்தி கொண்ட மகாவம்சத்து கோவன்கள்...

மாயம் தொடரும்...

ஹப்பாடா...ஒருவழியா இந்த யூடிய முடிச்சிட்டேன்.. எடிட் வேற பன்னனுமே... கண்டிப்பா எல்லாரும் ஹப்பியா இருப்பீங்கன்னு நம்புறேன்... நிறைய பேசனும் எல்லாத்தையும் அப்ரமா சொல்றேன்... எல்லாரும் யூடிய திரும்ப திரும்பக் கூட படிச்சு பாருங்க.... யூடி கூட வேணாம்... லாஸ்ட்டா இருக்க அஞ்சு லைன் மட்டும் படிங்க அதுவே போதும்... சரி ஓக்கே அடுத்த யூடி நாளைக்கே வரும்.. இத முடிக்கவே 9 : 10மணியாய்டுச்சு... ஹ்ம் எப்டியும் நா எடிட் பன்றதுக்குள்ள பத்து மணியாய்டுமோ.. சரி பாப்போம்... என்றாய் இதயங்களே அண் நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... குட் நைட் டாட்டா...

சாரி இதயங்களே.. சாப்ட்டுட்டு வந்து எடிட் பன்ன டைமாய்ச்சு.. ஹ்ம் நெட் பக் வேற முடிஞ்சு போச்சே.. எப்போ போடுவனோ.. சரி வந்து சேருரப்போ படிச்சிட்டு மறக்காம கருத்த சொல்லுங்க...சொல்லலன்னு வச்சிக்கோங்களேன்... இது எல்லாம் கனவுன்னு புது ட்விஸ்ட் வச்சிடுவேன் ஆமா... விடு ஜூட்டு ... டாட்டா இதயங்களே

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro